Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாக போகத்தொடங்கியுள்ளது. பல வருடங்களிற்கு முன் நெதர்லாந்தில் இருந்து வந்த எனது உறவினர் ஒருவர் சொன்னார் தங்களுடைய வீட்டில் திருட்டு போனது என்று. நெதர்லாந்தில் இப்படி நிறையவே தமிழ் வீடுகளில் திருட்டு போவதாக சொன்னார். சுவிசில் அப்படி நடைபெறாது என்று நானும் பெருமையா சொன்னேன். ஆனால் கடந்த சில மாதங்களாக சுவிசிலும் தமிழர்களின் வீடுகளில் திருட்டுக்கள் அதிகமாகிவிட்டன. சுரிச் மாநிலத்தில் 60ற்கு மேற்பட்ட தமிழர்களின் வீடுகள் களவாடப்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது. ஆனால் இன்னும் இந்த திருடர்கள் பிடிபடவில்லை. ஒரு வீட்டில் திருடிக்கொண்டிருக்கும் போது பக்கத்துவீட்டுக்காறர் இவர்களை கண்டுள்ளார். என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு இது தனது அண…

  2. ஜேர்மனியில் உள்ள ஒரு பிரபல்யமான தமிழ் வர்த்தக நிறுவனத்தினர் " 4 கார்ட் போடக்கூடிய டிஜிட்டல் சற்றலைட் ரிஸீவர் விற்பனைக்கு உண்டு. அதன் விலை 139 யூரோ " என்று ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போலியானவற்றை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்விளம்பரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களால் விற்பனை செய்யப்பட்டுவரும் ரிஸீவர் ஜேர்மன் நாட்டு கொம்பனியான மீடியோன் (Medion) நிறுவனத்தினருடையது. அந்த ரிஸீவர் மொடலின் பெயர் Medion MD 24014 அதனுடைய உண்மையான விலை 69 யூரோ மட்டுமே. அந்த ரிஸீவரில் 2 Smartcard போடக்கூடிய ஓட்டைகளும் 2 CI modul (Commen Interf…

  3. சம்பந்தப்பட்டவர்கள் பின் வாங்கியதால் இத்தலையங்கம் நீக்கப்பட்டுள்ளது

  4. [b]தினமினவின் மனிதநேயம் இப்படி ஒப்பாரி வைக்கிறது. மனித உரிமை அமைப்புகளின் செயற்பாடு வியாபாரம் போன்று ஆகிவிட்டது [16 - June - 2007] [Font Size - A - A - A] 1980 தசாப்த முற்பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போனது போன்ற ஒரு சூழ்நிலை தற்போது ஸ்ரீலங்காவில் இருப்பதாகவும் ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் நிலைமை அருகி வருவதாகவும் சர்வதேச ரீதியில் மனித உரிமைகள் பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள கொன்சோட்டியம் ஹியூமன் ரைட்ஸ் ஏஜன்ஸி (Consortium Human Right Agency -C.H.A) எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அந்த அமைப்பின் தலைவராகிய ஜீவன் தியாகராஜனே இவ்வாறு ஸ்ரீலங்காவில் மனித உரிமை மீறல் நிலையை 1980 தசாப்த முற…

  5. தமிழ் வானொலியில் வந்த கரு பொருளை விவாதித்த படியால் சிட்னி கோசிப் 20 நீக்கபட்டுள்ளது,நான் நினைத்தேன் காற்று,தண்ணி எப்படி பொது உடைமையோ அதை போல் காற்றலைகளிலும் வரும் தமிழ் கருத்துகளும் பொது உடைமையாக இருக்கும் என்று தான் அதை எழுதினேன்.சரி போனது போகட்டும் நான் 1வருடதிற்கு முதல் ஆங்கில வானொலி(ரேடியோ) வோட்டர் என்ற சொல்லில விவாதம் போய் கொண்டிருந்தது அதிலும் ரிசைக்கல் தண்ணி தான் நல்லமா?கடல் நீர் தண்ணியை சுத்திகரித்து அருந்துவது நல்லமா என்றும். என்னொரு ஆங்கில வரிசையில் ஜோன் கவார்ட்டின் அரசியல் பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது. இரண்டு வானொலிகளை பற்றி எழுது உள்ளேன் தூக்கமாட்டீங்க என்று நினைகிறேன் ஏனெனில் இது ஆங்கில வானொலி. காற்று பாரபட்சம் பார்காது தண்ணி பாரபட்சம் பார்…

    • 0 replies
    • 979 views
  6. "தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", ";இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி ச…

    • 217 replies
    • 23.4k views
  7. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் சிங்கள அரசின் பயங்கரவாத நடவடிக்கையினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் பற்றிய கண்ணோட்டம் நேற்று காண்பிக்கப்பட்டது. பார்க்காதவர்கள் இதன் மறு ஓளிபரப்பினை வரும் சனிக்கிழமை மாலை 1 மணிக்கு காணத்தவறாதீர்கள். Australian ABC Reporter Peter Lloyd expose Sri Lanka State Terror unleashed against tamils .. Australian ABC Reporter today elaborately exposed Sri Lankan State terror unleashed against minority tamils in his 9.20pm documentary. Despite the above independently verified facts Australian Department of Foreign Affairs and Australian Foreign Policy Makers are keeping a blind eye on these Sri Lankan State sponsored human rights viol…

  8. Posted on : Wed Jun 13 7:04:01 EEST 2007 ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய ஒருவரின் தலைக்குள் குண்டுச் சிதறல்கள்! ஆஸ்திரேலியாவுக்கு அகதி அந்தஸ்துக் கோரிச் சென்ற இலங்கையர்களில் ஒருவர், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியதில் அவரது தலைக் குள் குண்டுச் சிதறல்கள் ஊடுருவி இருந்தன. அதனால் அவர் மனநிலை பாதிப்புற்றிருப்பது கண்டறியப்பட்டுள் ளது. ஆஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரிச் சென்ற 83 இலங்கைத் தமிழர்கள் சென்ற படகை அந்நாட்டு கடற் படை அதிகாரிகள் வழிமறித்துக் கைப்பற்றியதும் பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் தொலைவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டதும் அதன் பிறகு நவ்று தீவில் விசாரணைக்காக தங்க வைக் கப்பட்டிருப்பதும் தெரிந்தவையே. …

  9. இலங்கை அரசியலில் பல அரசியல் வாதிகள் பலர் தமிழர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளார்கள்.. இவ் அரசியல் வாதிகளில் பலர் பிரித்தானிய, அமெரிக்க, ஆவுஸ்திரேலிய குடியுரிமையும் கடவுச்சீட்டுக்களையும் கொண்டுள்ளார்கள்... யாராவது குறிப்பிட்ட அரசியல் வாதிகளால் அல்லது அவர்கள் அங்கம் வகிக்கும் அரசால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தந்த நாடுகளில் வசிப்பவர்கள் அவர்கள் வசிக்கும் நாட்டில் அந்த அரசியல் வாதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், குறிப்பிட்ட அரசியல் வாதியை அழைத்து விசாரணை நடத்துவார்கள்.. இதன் மூலம் இலங்கை அரசியலில் சிங்களவனின் விளையாட்டுக்களை உலகிற்கு அம்பலப்படுத்தலாம்.... உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்...

    • 0 replies
    • 1k views
  10. தடை செய்த நாடுகளில் எல்லாம் தமிழீழக்கொடியை தேவையான நேரம் பயன்படுத்துகிறார்கள். ஏன் இந்த இலண்டன் நகரத்தில் மாத்திரம் பயன்படுத்த முடிய வில்லை. ஒருதமிழ் அமைப்பு முன்வந்து அதனை பயன் படுத்தி வரும் சட்ட சிக்கலை நீதிமன்றம் சென்று எதிர்த்து வெற்றி பெற்று இலண்டன் தமிழரும் தமிழீழக்கொடியை பயன் படுத்த ஆவண செய்ய மாட்டீர்களா? அல்லது பயன்படுத்த தடை இல்லை என்றால் அது பற்றிய விளக்கத்தை இலண்டன் தமிழீழ மக்களுக்கு அறிய தரலாம் .

  11. சென்ற மாதம் நடைபெற்ற இலங்கையர் கந்தையா தங்கராஜாவின் விபத்து பற்றி இன்டர்நெட்டில் அது கொலை என வெளியான தகவலை பொலிசார் மறுத்துள்ளனர் ................ http://www.harrowtimes.co.uk/news/localnew...rder_rumour.php

    • 0 replies
    • 814 views
  12. (சில) லண்டன் தமிழருக்கு சூடு சொரணை கிடையாதா? அண்மைக்காலமாக சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிப்பு செய்யுங்கள், இதன் மூலம் சிறிலங்காவுக்கு யுத்தம் செய்ய நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பது மாதிரியெல்லாம் கட்டுரைகளை பிரசுரித்தீர்கள். சில தமிழ் இணையத்தளங்களும் இது பற்றிய சுலோகங்கள் தாங்கிய அறிவுறுத்தல்களை பிரசுரித்தன. இப்பிரச்சாரங்களால் உந்தப்பட்டோ என்னவோ லண்டனில் ஒரு தமிழ் வர்த்தக நிறுவனம் தாங்கள் இனி சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களை விற்பனை செய்யப்போவதில்லை என ஒரு பேப்பரில் விளம்பரம் செய்தது. எல்லாம் நல்லபடி நடக்கிறது என மகிழ்ச்சியடைந்தால், கடந்த வெள்ளியன்று நடந்த சம்பவம் வேறுவிதமாக இருந்தது. அன்றய தினம் ஹரோ பகுதியில் தமி…

    • 7 replies
    • 2.7k views
  13. அண்மையில் புலிக்காச்சல் என்கிற தலைப்பில் எனது பதிவினை படித்த ரயாகரனிற்கு இயற்கையாய் இருந்த காச்சல் இரண்டு பாகை கூடியதாலோ என்னவே அவரது தமிழ் அரங்கம் என்கிற தளத்தில் பதில் பதிவில் என்னை ஆட்கொல்லி வைரஸ் என்று திட்டி தீர்த்திருக்கிறார். http://www.tamilcircle.net பல வருடங்களாகவே இவரிற்கு புலிக்காச்சல் இருந்து வருவது எல்லாரிற்கும் தெரிந்ததுதான் இதில் நானொன்றும் புதிதாய் சொல்லவேண்டியதில்லை ஆனால் இவர் தனது பதிவுகளில் தன்னை புலிகள் கைது செய்து சித்தரவதை செய்ததாகவும் பின்னர் தான் சிறையுடைத்து தப்பி வந்ததாகவும் பல காலமாகவே கதை சொல்லி திரிந்தார் ஆனால் இவரது பதிவுகளிற்கு நான் பதில் பதிவோ பின்னுட்டமோ இதுவரை இட்டதில்லை காரணம் இவர் ஏறோபிளேன் ஓட்டின கதையை இவரை மாதிரியே ப…

    • 1 reply
    • 1.4k views
  14. கல்யாண அழைப்பிதழ் அண்மையில் கிடைத்தது பார்த்தா வழமையா சிட்னி டமிழ்சை மாதிரி திரு.திருமதி பெயர் மட்டும் போட்டு வந்திருந்தது.வழமையாக ஊரில் போடுவது போல் திரு.திருமதி மற்றும் குடும்பத்தினர் என்று புலத்தில் இப்ப ஒருத்தரும் போடுவதில்லை அதற்கு காரணம் பிள்ளைகள் வந்தா எல்லாத்தையும் மெஸ்யாக்கி போடுவீனமாம்,மற்றது புலத்தில் சாப்பாடுக்கும் மண்டபத்துக்கும் ஒரு ஆளுக்கு இவ்வளவு என்று பணம் கொடுக்க வேண்டும்.ஒரு குடும்பத்தில் 4 பேருக்கு அதாவது பெற்றோர் இரு குழந்தைகள் கொடுப்பதிலும் பார்க்க இரு குடும்பத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தா செலவு மிச்சம் என்று நினைக்கிறார்கள். முக்கியமாக புலத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் எங்களுடைய கல்யாண முறைகளை பா…

    • 19 replies
    • 2.7k views
  15. மகளை காணவில்லையென்ற கொதியில் ஆத்திரமடைந்த தந்தையார் தனது மகள் படிக்கும் பாடசாலைக்கு சென்று மகளின் காதலன் மற்றும் நண்பர்களைத் தாக்கினார். தற்பொழுது விளக்கமறியலில். தமிழர் என்று கேட்டவுடன் வேதனையாக உள்ளது. எப்ப தான் இப்படியான தந்தைமார்கள் திரிந்துவார்களோ தெரியாது. மகளைக் கண்டிப்பதை தவறவிட்டிட்டு மற்றவர்களைத் தண்டிப்பதால் என்ன பலன். தகவல்: அப்பாடசாலையில் படிக்கும் 4 மாணவர்கள் Attempt-murder charges after teens struck Colin McConnell/Toronto Star Police investigate after a car jumped a curb, plowed through a fence and injured three teens outside a Scarborough high school, June 1, 2007. Email story Print Choose text size Report typo or correct…

    • 2 replies
    • 1.6k views
  16. சமீபத்தில் பரிசில் இசையப்பாளர் பரத்வாஜ் உட்பட 20க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்களின் விழா இடம்பெற்றுள்ளது. மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழா தோல்வியை தழுவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அத்தோடு நடிகை நமீதாவுக்கு பொன்னாடை போர் லாசப்பல் வர்தக பெருந்தகைகளுடன் பேரம் பேசப்பட்டதாகவும் தெரியவருகின்றது. ஒவ்வொரு பொன்னாகை போத்தலுக்கும் 800 இருந்து 2500 யூறோ வரை வசூல் ஆகியுள்ளதாக தகவல்...

    • 8 replies
    • 2.7k views
  17. மயூரன் நடைபயணம்

  18. Posted on : Sat May 26 8:31:47 EEST 2007 நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி சுவிஸ், சூரிச்சில் நீச்சல் தடாகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டி ருந்த தமிழ்ச் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். சிறுப்பிட்டியைச் சேர்ந்த சிவநேசன் தம் பதிகளின் புதல்வியான வாசுகி சிவநேசன் (வயது 7) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். (அ1) உதயன்

    • 8 replies
    • 2.2k views
  19. இலங்கை அகதியெனக்கூறி பிரான்சில் வசித்த இந்தியர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் கைது வீரகேசரி நாளேடு இலங்கை அகதியெனக்கூறி 16 ஆண்டுகளாக பிரான்ஸில் வசித்துவந்த கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்போது குட்டு வெளிப்பட்டதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்திய குடியுரிமை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் உண்மை வெளிவந்ததையடுத்து. சென்னை விமான நிலைய பொலிஸார் அந்த வாலிபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம்குறித்து மேலும் தெரியவருவதாவது; கேரள மாநிலத்தைச் சேர்ந்த ராகவன் நாயர் என்பவர் சென்னையை அடுத்த ஆலந்தூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். இவரது மகன் சபரிநாதன் (வயது 37). பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை இரவு லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் ச…

    • 9 replies
    • 2.3k views
  20. அண்மையில் என்னுடைய நண்பன் தொலைபேசியில் என்னிடம் கேட்டார் சைவசிந்தாந்த வகுப்பு நடக்கிறது வாறீங்களோ போவோமோ என்று,சும்மா இருக்க போர் அடிக்குது என்று நானும் வாரேன் என்று போகும் போது என்னையும் அழைத்து செல்லும்படி கூறினேன்,அங்கு போய் கேட்டு போட்டு வந்து யாழில் ஏதாவது கிறுக்குவோம் என்ற ஜடியாவில் நானும் போக யோசித்தேன். நண்பன் சொன்னார் மறக்காமலே $150 டொலர் காசு கொண்டு வாரும் என்று கேட்டவுடன் நான் திடுகிட்டு போனேன்,ஏன்டப்பா $150 டொலர் என்று கேட்ட பிறகு தான் நண்பர் விளக்காமாக சொன்னார்.பெரியவை இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார் அவர் சைவசிந்தாந்தம் பற்றி சொல்லி கொடுத்து சைவசிந்தாந்த இரத்தினம் என்ற பட்டமும் வழங்குகிறாராம் அதற்கு த…

    • 2 replies
    • 1.3k views
  21. பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 20-22 யூலை 2007 மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவின் கோலாலம்பூரில் யூலை 20,21,22 - 2007இல் நடைபெற உள்ளது. உலகளாவிய தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டினாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் அரசியல் சார்பற்று இனமத பேதங்களை கடந்து தாய்த்தமிழகத்திலம் சேய்த்தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று குறிக்கோளுடனும், தமிழினம் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும், இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு தமிழீழத்தின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த உலகத் தமி…

  22. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கந்தவேல் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தி லேயே ரங்கநாதன் கோவில், மகாகாளி கோவில், சுப்பிர மணியசாமி சன்னிதானங்கள் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்து பக்தர்கள் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் நிர்வாகம் சார்பில் 53 பசு மாடுகள், கோவில் காளைகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் `சம்போ; என்ற கோவில் காளையும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த காளை மீது அலாதி பிரியம். அந்த கோவிலின் நந்தியாக இந்த காளையைத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள காளைகள். பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந் தது. உணவு மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த மருத்துவ சோதனைய…

    • 7 replies
    • 1.9k views
  23. சாம் (உண்மையான பெயர் அல்ல) என்ற தமிழர் கனடாவின் ரொறன்ரோ பிரதேச பீற்சா உணவகம் ஒன்றின் விநியோகத் தொழிலாளி. ஏதேச்சையாக, தனக்கு நடந்த சம்பவத்தை சாம் எனக்குக் கூறக் கேட்டபோது, இந்தப் பதிவினை இங்கே இடவேண்டும் என்று தோன்றியது. இதோ சாமின் கதை. ஓரு இரவு, வழமைபோல் சாம் தனது உணவகத்தில் இருந்து தான் விநியோகம் செய்யவேண்டிய பீற்சாவுடன் வெளியேறியபோது ஒரு பி.எம்.டபிள்யூ எக்ஸ்-5 ரக வாகனம் இவரது வாகனத்தை வழிமறித்து அவசரமாக வந்து நின்றதாம். அதிலிருந்து ஒரு இளம் தமிழ் பெண் பதைபதைப்புடன் இறங்கி இவரிடம் நீங்கள் தமிழரா என ஆங்கிலத்தில் வினவினாராம். இவரும் ஆம் என்று கூறவே அந்தப் பெண் தான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தனக்கு உதவமுடியுமா எனவும் மிகுந்த பதைபதைப்புடனும் வெளிப்படையான ம…

    • 20 replies
    • 3.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.