வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
-
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க அழுத்தம் அதிகரித்து வருகிறது. அந்த தம்பதியின் பிள்ளைகளில் ஒருவரான மூன்று வயது தாருணிகா உடல் சுகவீனம் அடைந்ததால் பிரதான நிலப்பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். காய்ச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அந்த சிறுமி பெர்த் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை அளவீடுகள் தற்போது நிலையாக உள்ளன என்று அகதி குடும்பத்துக்காக நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 10 நாட்களாக நோய்வாய்பட்ட சிறுமிக்கு உரிய நேரத்தில் போதிய சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்காக அவர்கள் அரசின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்…
-
- 5 replies
- 874 views
-
-
அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள். ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட…
-
- 2 replies
- 489 views
-
-
கடந்த மார்ச் இரண்டாம் திகதி, லொக்டவுன் காலத்தில், ஒரு நண்பி வீட்டுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்பில், ஒரு ராஜதந்திரிகள் பாதுகாப்புடன் தொடர்பான 48 வயது போலீஸ்காரர் கைதாகி இருந்தார். பிரித்தானிய சட்டப்படி, இந்த பெண் எவ்வாறு இறந்தார் என்பதை சொல்லமாட்டார்கள். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் போதே தெரிய வரும் என்றும் இதுகுறித்த எனது பதிவில் சொல்லி இருந்தேன். இன்று, லண்டன் ஓல்ட் பெயிலி எனும் பழம் பெரும் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்தவாறே, அந்த பெண்ணை, கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, கொலை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார் அந்த கிராதகர். எனவே, வழக்கு இழுபடாமல், நேரடியாக தண்டனையினை முடிவு செய்யும…
-
- 1 reply
- 952 views
- 1 follower
-
-
டென்மார்க் அரசியல் வரலாற்றில் வடுவாகப் பதிந்த “தமிழ் வழக்கு” AdminJune 4, 2021 டென்மார்க்கின் மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் பிரதமருமான பவுல் ஸ்லூட்டர் (Poul Schluter) கடந்த மாத இறுதியில் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் டென்மார்க்கின் அரசமைப்பு தினமாகிய (Constitution Day) நாளை (ஜூன் 5ஆம் திகதி) கொப்பனேஹனில் (Copenhagen) நடைபெறவுள்ளன. சில தசாப்தங்களுக்கு முன்பு ஈழத் தமிழ் அகதிகள் தொடர்புபட்ட ஒரு முக்கிய வழக்கு விவகாரம் பவுல் ஸ்லூட்டரின் பிரதமர் பதவியையும் அரசியல் எதிர்காலத்தையும் பறித்தது. மறைந்த தங்கள் தலைவரை நினைவு கூருகின்ற டெனிஷ் மக்கள் அந்தத் “தமிழ் வழக்கு” வரலாற்றையும் மீட்டுப் பார்க்கின்றனர். 1980 களில் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிய ஈழத்தம…
-
- 0 replies
- 842 views
-
-
இலங்கை பாதுகாப்பானது அல்ல – பிரித்தானிய நீதிமன்றம் 54 Views இலங்கையில் கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்வதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரிய இரு தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் 178 பேர் இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உண்மைக்கும், நீதிக்குமான அனைத்துலக செயல் திட்ட அமைப்பு ஆவணங்களை பதிவு செ…
-
- 0 replies
- 583 views
-
-
யாழ். நூலக எரிப்பு ஞாபகார்த்தமாக மெய்நிகர் நூலகம் ஆரம்பம் 71 Views யாழ். நூலகம் எரிக்கப்பட்ட நாற்பதாவது ஆண்டு நினைவாக மெய்நிகர் நூலகம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகள், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்து தொழில்சார் வல்லுநர்களாக இருக்கும் பிள்ளைகள் , புலம்பெயர் நாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த மெய்நிகர் நூலகத்தை உருவாக்கியுள்ளார்கள். மே 30, 2021இல் திறக்கப்படவுள்ள இந்த மெய்நிகர் நூலகத்தை இணையவழியாக உலகத் தமிழர்கள் பார்ப்பதுடன், இளையோரின் இந்த முயற்சியை மேம்படுத்த, அடுத்த சந்ததிக்கு இதை எடுத்துச் செல்வதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர். …
-
- 2 replies
- 1k views
-
-
கனடா நாட்டில் “The Unbreakable Woman” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட இலங்கை பெண் – குவியும் பாராட்டுக்கள் கனடா நாட்டின் Canadian Occupational Safety சஞ்சிகையினால் நடாத்தப்பட்ட “நாடுதழுவிய ஆழுமை மிக்கவர்களுக்கான” போட்டித் தேர்வில் “The Unbreakable Woman” பட்டத்தினை இலங்கையின் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகக் கொண்ட புஷ்பலதா மதனலிங்கம் என்பவர் பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கையிலிருந்து யுத்த அகதியாக கனடா நாட்டில் புலம்பெயர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான புஷ்பலதா ஒரு விதவை பெண்ணாக பல தடைகளை கடந்து ரேயொர்சன் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டதோடு, தனது அயராத முயற்சியினால் ஒன்டாரியோ தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனத்தினையும் ஆரம்பித்து பல்வேறு …
-
- 3 replies
- 947 views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தல் 17 Views இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைத் தடைகளை விதிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் நடைபெற்ற தமிழினப்படுகொலை குறித்து பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, முள்ளிவாய்க்கல் நினைவு நாளில், இலங்கை மோதலின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாங்கள் நினைவில் கூருகிறோம். தொழிலாளர் கட்சி தமிழ் சமூகத்துடன் நி…
-
- 0 replies
- 689 views
-
-
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு! இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையேயான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘இனி பொதுமக்கள் உயிர்கள் இழக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்வதற்காக, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான போர்நிறுத்தத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. மத்திய கிழக்கில் பதற்றத்தைத் தணிக்கக் கனடா பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து செயற்படும். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்களைச் சுற்றியுள்ள வன்முறைகளுக்காக எங்கள் இதயங்கள் இப்போது செல்கின்றன. பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அப்பாவிகள் மற்றும் குழந்தைகளின் சோகமான படங்களை நாங்கள் அனைவர…
-
- 0 replies
- 381 views
-
-
லண்டன் பெரு நகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - QR குறியீட்டுடன் கோப்பைகளில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளான மே.18-ஆம் திகதி தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் லண்டன் பெருநகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. மோதலின் இறுதிக் காலத்தில் மோதல் வலயத்துக்குள் சிக்கியிருந்த மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. பட்டினியை யுத்த ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. இந்தக் காலப்பகுதயில் மோதல் வலயத்துக்கு சிக்கியிருந்த மக்களுக்கு கஞ்சியே உணவாக வழங்கப்பட்டது. இந்தக் கஞ்சியைப் பெற வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டனர் என இந்தக் கஞ்சியை விநியோகித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளி…
-
- 0 replies
- 616 views
-
-
நினைவுகளை மறுத்து நீதி இல்லை – முள்ளிவாய்க்கால் நினைவுரையில் முன்னாள் ஐ. நா. ஆலோசகர் அடமா 214 Views நினைவுகளை மறுத்துவிட்டு நீதியைப் பரிசோதிக்க முடியாது. கடந்த காலத்தை எதிர்த்தோ மறுத்தோ நிகழ்காலத்தில் நிலையான அமைதியையும் முன்னேற்றத்தையும் எட்டிவிட முடியாது. முள்ளிவாய்க்கால் ஆவணப்படுத்தல்களும் அதுசார்ந்த நினைவுமயப்படுத்தல்களும் உலகில் இது போன்ற மாபெரும் கொடுமைகளுக்கு எதிரான மனித உரிமை முன்னெடுப்புகளின் ஒரு முக்கியமான பகுதியாக மாறியுள்ளன. இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான ஐ. நாவின் முன்னாள் விசேட ஆலோசகர் (Special Adviser on the Prevention of Genocide) அடமா டியங்க் (Adama Dieng) மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். அமெர…
-
- 0 replies
- 489 views
-
-
இனப்படுகொலைக்கான ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியின் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 29 Views “பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தமிழீழத் தேசிய துக்க நாள் சிறப்புரையுடன் இடம்பெற இருக்கின்ற நிகழ்வினை www.tgte.tv நேரஞ்சலாக காணலாம்” NEW YORK, UNITED STATES OF AMERICA, May 17, 2021 /EINPresswire.com/ — மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளில் இனப்படுகொலை விவகாரங்களுக்கான ஐ.நாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதி ( Former UN Special Adviser on the Prevention of Genocide ) Adama Dieng அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை ( Mullivaikal Memorial lecture ) ஒன்றினை வழங்க இருக்கின்றார். ஏழாவது ஆண்ட…
-
- 0 replies
- 478 views
-
-
உலகத்தமிழ் உள்ளங்களே! இதோ தமிழினப் படுகொலையின் பன்னிரண்டாம் ஆண்டு நினைவேந்தல்! இத்தனை ஆண்டுகள் போலில்லை. இந்த நினைவேந்தல் கொஞ்சம் சிறப்பானது. இந்தாண்டு நாம் ஏற்றும் மெழுகுத்திரிகள் நம் நெஞ்சில் எரியும் வேதனைக் கனலாக மட்டுமில்லை எதிர்காலத்துக்கான நம்பிக்கைச் சுடராகவும் ஒளிர்கின்றன. அதற்குக் காரணமாகத் திகழ்பவர் அன்னை அம்பிகை செல்வகுமார்! ஐ.நா-வில் மனித உரிமை ஆணையம் கூடும்பொழுதெல்லாம் இனப்படுகொலை தொடர்பாக இலங்கை மீது தீர்மானம் கொண்டு வரத் தமிழர்கள் நாம் வலியுறுத்துவோம். ஐ.நா-வும் வல்லரசு நாடுகளின் செல்லப்பிள்ளையான இலங்கையைப் பகைத்துக் கொள்ளாதிருக்கும் பொருட்டு பெயருக்கு ஒரு தீர்மானத்தை முன்மொழியும். இலங்கையே வரவேற்கும் அளவுக்கு அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்: ஒன்ராறியோ மாகாணத்தில் சட்டமாக ஏற்பு 15 Views கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்…
-
- 4 replies
- 770 views
-
-
கனடா | பிறம்டனின் ‘தமிழ் மேயர்’ பற்றிக் பிரவுண் மீண்டும் சர்ச்சைக்குள்? -ஒரு புலன் விசாரணை மாயமான் ஒன்ராறியோவின் நான்காவது அதி பெரிய நகரமான பிரம்டனில் பதவியில் இருக்கும் ‘எங்கட பற்றிக்’ தமிழ் மேயர், பற்றிக் பிரவுண் மீண்டும் ஒரு தடவை – in hot water. பாவம் இத்தனை மேதாவி ஆலோசகர்கள் புடை சூழவிருந்தும் மனுசனுக்கும் சுடு தண்ணிக்கும் அத்தனை ஈர்ப்பு. இது முள்ளிவாய்க்கால் வாரமென்ற படியால் இப்பிரச்சினைக்கு இன்ன…
-
- 0 replies
- 771 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தல் 59 Views இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன் போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேவியா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியி…
-
- 1 reply
- 622 views
-
-
பிரான்ஸில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு 81 Views முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்ஸில் பல்வேறு இடங்களில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பாரிஸ் புறநகர் பகுதியான கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. https://www.ilakku.org/?p=49536
-
- 0 replies
- 680 views
-
-
மோசடி கோஸ்ட்டியின் திருவிளையாடல் : £1billion பிரித்தானியாவின் ஒரு பல்கலைக்கழக மாணவி. பல்கலைக்கழகத்தில் இருந்து, வெளியேறி கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பின்னர், அண்மையில் வேலை ஒன்றினை எடுத்து இருக்கிறார். வேலை இடத்துக்கு, இவரின் சம்பளத்தில் மாதாமாதம் பிடிக்க வேண்டிய தொகை குறித்து, அரச திணைக்கள அறிவித்தல் வந்து இருக்கிறது. இவ்வளவுக்கும் அவர் கடன் எதுவுமே வாங்கவில்லை. ஆகவே, அவர் குறித்த திணைக்களத்துடன் தொடர்ப்பு கொண்டார். security கேள்விகள் கேட்கப்பட்டபோது இவரால், சரியாக பதில் அளிக்க வில்லை என்று, மோசடியாளார் என்பது போல தொடர்பினை துண்டித்து விட்டார்கள். மீண்டும், மீண்டும் தொடர்ப்பு கொண்டு, அதே நிலைமை தொடர்ந்ததால், வெறுத்துப் போய் விட்டார், …
-
- 0 replies
- 833 views
-
-
சிங்களவர்கள், ஒண்டாரியா உயர் நீதிமன்றில், பிராம்டன் நகர தமிழர் இனவழிப்பு தீர்மானத்துக்கு, எதிராக மனு தாக்கல் செய்துள்ளனர். Bill 104, Tamil Genocide Education Week Act, 2021 கனடிய அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அதனை தடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்கள். சொல்லப்பட்ட இனவழிப்பானது, உலகின், சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற எந்த ஒரு நீதிமன்றிலும் நிரூபிக்கப்படவில்லை என்றும், ஐநா கூட தனது விசாரணைகளை ஆரம்பிக்காத நிலையில் அது புலிகளின் அல்லது அதன் சார்பான ஆட்களின், பொய்யான செய்தியின் அடிப்படையில் உருவாக்கிய கட்டுக்கதை என்றும் அடித்து விட்டுள்ளார்கள். https://www.srilankancanadian.ca/index.php/2021/05/10/notice-of-constitutional-questio…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஈழத் தமிழ் அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை 9 Views ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கு…
-
- 0 replies
- 369 views
-
-
லண்டனின் வடமேற்குத் திசையில் இருக்கும் ஹரோ (Harrow) பெரிய நகரத்தின் முதல் தமிழ் பெண் துணை மேயராக நகர சபை உறுப்பினரான இலங்கை வசம்சாவளியைச் சேர்ந்த சசிகலா சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இலங்கையின் வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தின் இணுவில் பிரதேசத்தை சேர்ந்தவராவார். சசிகலா சுரேஷின் தந்தையார் இலங்கையின் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலைச் சேர்ந்தவர். அவர் பிரதி கணக்காய்வாளர் நாயகமாக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. லண்டன் ஹரோ நகரின் துணை மேயராக தமிழ் பெண் தெரிவு | Virakesari.lk
-
- 10 replies
- 1.5k views
-
-
கனடா ஒன்ராறியோ மாநிலத்தில் தமிழின அழிப்பு சட்டமூலம் நிறைவேற்றம்! AdminMay 7, 2021 கனடா – ஸ்காபாரோ – றூஜ் பார்க் தொகுதிக்கான ஒன்ராறியோ மாநில சட்டமன்றத்தின் உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று வியாழக்கிழமை, ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்புத் தொடர்பான சட்டமூலத்தை மூன்றாவது வாசிப்புக்கு விஜய் தணிகாசலம் கொண்டு வந்திருந்தார். இந்நிலையில், தமிழ் மக்கள் மீது இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் தீர்மானங்கள் இதற்கு முன்னர் இலங்கையின் வட மாகாண சபையிலும், தமிழ்நாடு சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களாலும் நிறைவேற்றப்பட்…
-
- 3 replies
- 943 views
-
-
https://www.aversan.com/
-
- 2 replies
- 998 views
-
-
கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் காணாமல் போயுள்ள 16 வயதான இளம் பெண்ணின் தகவல் தர கோரிக்கை கனடா - ஒன்ராறியோ மாகாணம், ரொரண்டோவில் வசித்துவரும் 16 வயதான தரணிதா ஹரிதரன் என்ற இளம் பெண் காணாமல் போயுள்ள நிலையில் அவர் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு ரொரண்டோ பொலிஸார் கோரியுள்ளனர். தரணிதா ஹரிதரன் கடைசியாக நேற்று 29 வியாழக்கிழமை கனேடிய நேரப்படி மதியம் 1 மணிக்கு, டப்ஸ்கொட் வீதி மற்றும் மெக்லெவின் அவென்யூ ( Tapscott Road and McLevin Avenue area) பகுதியில் காணப்பட்டார். 5’ 5”” உயரமுடைய அவா், மெல்லிய உடல்வாகும் நீண்ட கருப்பு முடியும் கொண்டவர். இடது கையில் பச்சை குத்தியுள்ளார். காதில் இரண்டு தோடுகள் குத்தியுள்ளார். காணாமல் போன அன்று தரணிதா ஹரிதரன் ந…
-
- 0 replies
- 1k views
-