Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

    • 34 replies
    • 5.4k views
  1. தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து ஜேர்மனியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு! [Tuesday 2015-05-12 19:00] தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது நேரடி அரசவை ஜேர்மனியில் கூடுகின்றது. நாடுகடந்தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் மூன்றாவது நேரடி அரசவை இது அமையவிருக்கின்றது. மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினைத் தொடர்ந்து மே 22,23,24ம் ஆகிய மூன்று நாட்கள் அமர்வாக ஜேர்மனியின் டோட்மூண்ட் பெருநகரில் இடம்பெறுகின்ற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

    • 2 replies
    • 526 views
  2. கனடா- ஒன்ராறியோ தொழிலாளர் உறவுகள் வாரியம் மூன்று கல்வி சபைகளை சேர்ந்த உயர்தர பாடசாலை ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது. மீண்டும் வேலைக்கு திரும்பும் சட்டம் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்து. வியாழக்கிழமை நிறைவேற்றப்படும். பீல், டர்ஹாம் மற்றும் சட்பெறி-பிரதேச றெயின்போ மாவட்ட பாடசாலை சபை ஆகிய மூன்றிற்கும் இரண்டு வார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ உயர்நிலை பள்ளி ஆசிரியர்களிற்கு மத்திய பிரச்சனையாக உள்ள வேலைநிறுத்தத்தை சுத்தப்படுத்த இரண்டு வாரங்கள் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுடனான இந்த பேச்சுவார்த்தைகளின் கடின சுற்று முடிந்ததும் செயல் முறையில் மாற்றங்களை செய்ய …

    • 0 replies
    • 503 views
  3. தமிழர் தேசத்தின் அரசியல் இராஜதந்திர வழிமுறையிலான போராட்டத்தை வலுப்படுத்தத் துணை செய்யும் அமர்வு: பிரதமர் வி.உருத்திரகுமாரன் May 24, 2015 தமிழர் தேசத்தின் அரசியல் இராஜதந்திர வழிமுறையிலான போராட்டத்தை வலுப்படுத்தத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு துணை செய்யும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை மேலும் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செயற்பட வேண்டியவர்களாக தமிழர் தேசம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று…

    • 1 reply
    • 305 views
  4. அன்பான பெற்றோர்களே ஏற்கனவே அறிந்துள்ளீர்களா? நிறைய ஓடியாடி விளையாடும் பிள்ளைகளுக்கு கிரகிப்பது மட்டுமல்ல கற்பதும் இலகுவாக இருக்கும். நாளொன்றிற்கு பிள்ளைகள் குறைந்தது 2 மணித்தியாலங்கள் ஓடியாடி விளையாட வேண்டும். நீங்கள் அதற்கு முன்மாதிரியாக நடவுங்கள்! சூறிச் மாநிலத்தில் உடலசைவிற்கான வாய்ப்புக்கள் பற்றி அறிய பபனுள்ள இணையத்தளங்கள்: www.fisp-zh.ch/gesundheit/Z-Bew.pdf facebook http://www.fisp-zh.ch/gesundheit/Z-Bew.pdf

  5. தகவல் பரிமாற்றம் - அகதிகள் விண்ணப்பங்கள் தொடர்பான புதிய பரிசீலனை அறிமுகம் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசு சென்ற டிசெம்பர் மாதத்தில் கொண்டுவந்திருந்தது. இதன் மூலம் தற்காலிக விசாக்களை அரசு மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் துரிதமாக விசாரிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களால் தமிழ்ப் பின்னணி கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் பலர் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை உள்ளது. அவர்களுக்காக அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையானது தமிழ் தகவல் மையத்துடன் இணை ந்து தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த மாற்றங்கள் குறித்து வி…

    • 0 replies
    • 448 views
  6. Started by BLUE BIRD,

    அனைவருக்கும் வணக்கம்! வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கத்தின் fபெட்னா நிகழ்வானது இம் முறை சன் ஜோசே, கலிபோர்னியாவில் எதிர்வரும் ஜூலை 2- 5.2015ல் வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்துடன் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றமும் இணைந்து வழங்குகின்றனர். நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவர்கள்,முன்பதிவு மற்றும் நிகழ்ச்சி அனுசரணை போன்ற தொடர்புகளுக்கு அவர்களின் தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இது ஒரு மூன்று நாள் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்வு ஆகையால் அனைவரையும் வருக வருக வென அழைகின்றனர். வட அமெரிக்கத்தமிழ் சங்கத்தினர் http://www.fetna2015.org/#tamilvizha ( விபரங்களுக்கு) http://fetna.org/inde…

    • 2 replies
    • 1.1k views
  7. கனடாவில் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வு கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியம் (CTYA), பீல் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து பிரம்டன் நகரின் ஆதரவுடன் 'தழும்பகம்' தமிழ் இன அழிப்பு காட்சியகத்தின் காட்சிப்படுத்தல் நிகழ்வினை நடத்தவுள்ளது இந்நிகழ்வு, எதிர்வரும் 25ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு பிரம்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெறும்.பிரம்டன், மிசிசாகா மற்றும் பீல் பகுதிகளில் வசிக்கும் தமிழ் மக்கள் அனைவரும் இக்கண்காட்சியில் பங்குபற்றுவதுடன், உங்கள் பிள்ளைகளையும் அழைத்து வந்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு பற்றிய தகவல்களை அவர்களும் அறிந்துகொள்ள உதவுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

    • 0 replies
    • 382 views
  8. சிலருக்கு இலகுவாக கிடைக்கும் அகதிஅந்தஸ்தில்.. அவர்கள் சுயமிழந்து வாழ்வதோடு.. ஊருக்குப் போய் பந்தா வேற. ஆனால் அதுவே சிலருக்கு எட்ட முடியாத இலக்காய். இந்த அம்மாவும் அவர்களில் ஒருவர்.

  9. கயானா நாட்டின் பிரதமராக ஒரு வம்சாவளித் தமிழர் ! தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார். சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து. இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் பிரதமராகிறார். தமிழராக நாம் பெருமைப்படலாம். இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.. Hindus in the Caribbean island nation of Trinidad and Tobago led by Indian-or…

    • 15 replies
    • 4.5k views
  10. மே-18 தமிழீழத் தேசிய நாளினை மையப்படுத்தி அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிபர் Ramsey Clark பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா தமிழகம் ஆகிய இடங்களில் தமிழீழத் தேசிய துக்க நாளின் பிரதான நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமெரிக்காவில் இவ்நினைவுப் பேருரை நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுகளிலும் உலகின் முக்கிய பிரமுகர்கள் பங்கெடுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே18ம் நாள் திங்கட்கிழமை நியூ யோர்க்கில் அமைந்துள்ள இடத்தில் மாலை 6:30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது. இதேவ…

  11. கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக்கூட ஒரு நாளை உறுதிப்படுத்த முடியாத தமிழ் அமைப்புகள், இணையங்கள். மே 17 தமிழ் மக்களை யுத்த்தில் தோற்கடித்த நாளாக தமது வெற்றித்திரு நாளாக கொண்டாடுவதற்குரிய நாளாக அரசு பிரகடனப்படுத்தியிருக்கிறது. அதேவேளை அரசால் அறிவிக்கப்பட்ட நாளை தேசிய துக்க நாளாக பிரகடனப்படுத்தியிருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. 2009ம் ஆண்டு மே 18 வன்னிப் பெருநிலப்பரப்பில் போர் முடிந்த நாள். பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்த பேரினவாதப் பேய், மனித உடலங்களை உண்டு ஏப்பம் விட்ட நாள். இந்த நாள் தமிழ் மக்களால் என்றுமே மறக்க முடியாதது.மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்திய முள்ளிவாய்க்கால் ஆறாமாண்டு நினைவேந்தல் வாரம், புலம்பெயர் தேச…

    • 0 replies
    • 805 views
  12. BTF இன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு எதிராக புலிகளின் பெயரால் மிரட்டல் பிரசுரம் பிரித்தானிய தமிழர் பேரவை என்ற (BTF) அமைப்பு வழமையாக முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) என்ற அமைப்பும் நடத்துவது வழமை. இந்த இரண்டு அமைப்புக்களும் ஈழத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் தொடர்பாகக் குரல்கொடுப்பதில்லை. பிரித்தானியத் தமிழர் பேரவை ஐ.நாவில் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்வதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருவதும், அரசுகளோடு தொடர்புடையவர்களைச் சந்திப்பதும் தமது வேலைத்திட்டம் எனப் பிரகடனப்படுத்தியது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிடம் மாவீரர் தினம் நடத்துவதைத் தவிர வேறு குறிப்பான வேலைத்திட்டங்களும் இல்லை. மக்களை உணர்ச்சிவசப்படுத்தி நடைமுறைப…

  13. லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து அறியவருவதாவது: கிழக்கு லண்டனில் வசித்து வந்த புல்லர்கட்டில் ரித்திஸ்குமார், இவரின் மனைவி ஷகி, மற்றும் பிள்ளைகளான நியா, நேகா ஆகியோரே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஷகி, நியா, நேகா ஆகியோர் வீட்டில் இறந்து கிடந்தனர். நியா, நேகா பாடசாலைக்கு செல்லவில்லை. இது குறித்து பாடசாலை நிர்வாகம் பொலிஸுக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து பொலிஸார் அங்கு சென்ற போது வீட்டில் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தமையைக் கண்டனர். உடனடியாக விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார் வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் ரித்திஸ்குமாரின் சடலத்தையு…

  14. இங்கிலாந்தின் பரா-பாட்மிண்டன் வீரர் கோபி ரங்கநாதன் அவர்களுக்கு இருதய சத்திர சிகிச்சை என்று அறிந்தேன். அவர் குணமாகி மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளவேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். 39 வயதான கோபி பல உள்ளூர்/ சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி பதக்கங்கள் பெற்றவர். Gobi Ranganathan, who represents Stevenage, Herts and England in the disability sport discipline, first noticed something was wrong during the 2013 world championships, where he was competing in doubles. http://www.thecomet.net/news/stevenage_disabled_sports_star_gobi_ranganathan_is_on_the_road_to_recovery_after_crucial_surgery_1_4073264

    • 0 replies
    • 559 views
  15. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு 05/04/2015 நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந…

    • 3 replies
    • 828 views
  16. சுவிஸில் 22 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவரும் தமிழ்க் கல்விச்சேவையின் 21வது பொதுப்பரீட்சை இன்று நடைபெற்றது. சுவிஸில் நாடுதழுவிய அளவில் நடந்த இந்த பொதுப்பரீட்சை இன்று 58 தேர்வு மையங்களில் நடைபெற்றுள்ளது. இந்த தமிழ்மொழிப் பரீட்சையில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் 5,297 பேர் தோன்றியுள்ளனர். இந்த தேர்வு நிலையங்களில் மேற்பார்வையாளர்களாக தமிழ் பள்ளிகளின் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன், தமிழ் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை நிறைவு செய்து உதவி ஆசிரியர்களாகக் கடமையாற்றிவரும் 83 இளம்தலைமுறையினரும் இணைந்துள்ளனர். இந்த தேர்வில் அதிகளவில் தமிழ் பிள்ளைகள் பரீட்சைக்குத் தோன்றியிருப்பதும், இளம் தலைமுறையினர் தேர்வு பணிகளில் பங்க…

    • 0 replies
    • 458 views
  17. அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி தமிழ்நாட்டில் கையெழுத்து பரப்புரை MAY 08, 2015by நித்தியபாரதிin செய்திகள் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றால் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும், கையெழுத்துப் பரப்புரை ஒன்றை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த புதன்கிழமை இணையவழி (skype) மூலம் ஆரம்பித்து வைத்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ்நாட்டு மக்களின் முனைப்பான பங்களிப்பு மிகவும் அவசியமானது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது இணையவழி உரையில் தெரிவித்திருந்தார். ஈழத்தமிழ் மக்கள் இனப்…

    • 0 replies
    • 274 views
  18. திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாகும் ஈழத்தமிழ் பெண்கள்: - யேர்மனியில் சர்வதேச பெண்கள் மாநாடு [Friday 2015-05-08 15:00] கிழக்கு மாகாண சபையின் பெண்கள் விவகாரங்களுக்கான துணை அமைச்சர் மேற்கொண்ட ஆய்வின்படி இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் மட்டும் 86,000 விதவைகள் உள்ளனர். அனைவரும் தமிழர்கள். பாதுகாப்புப் படையினரின் பாலியல் வன்கொடுமைகளுக்கும் வல்லுறவுகளுக்கும் இந்த விதவைகளே எளிதாக பலியாகின்றனர். அரசு படையினர் மற்றும் ஒட்டுக் குழுவினரின் பாலியல் வன்செயல்களிலிருந்து விதவை தாய்மார்கள் தங்கள் இளவயது பெண்களை காப்பதற்கு பெரும்பாடுபடும் அதே நேரத்தில் இளம் விதவைகள் தங்களைத் தாங்களே பாதுகாப்பதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. இந்த விதவைகள் மற்றும் …

  19. ரொறன்ரோவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தவுள்ள தேசிய துக்கநாள் - மே 18 [Thursday 2015-05-07 19:00] நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மே 18 ஐ தேசிய துக்கநாளாக அறிவித்து வருடா வருடம் பல்வேறு நாடுகளில் உணர்வு பூர்வமாக கடைப்பிடித்து வருவது அறிந்ததே. கடந்த ஆண்டுகள் போலவே இவ்வருடமும் கனடாவில் இந்நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னேடுக்கப்படவிருக்கின்றது. இவ்வருடம் இந்நிகழ்வு மே 18, 2015 அன்று Peter and Paul Banquet Hall (231 Milner Avenue) இல் 2.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. கனடாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள தமிழ் மக்களும் தமது வசதிக்கேற்ப இந்நிகழ்வை செய்வதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னாலான உதவிகளை செய்ய விரும்புகின்றது. இந்நிகழ்வுகளில…

  20. நெதர்லாந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் வழக்கை நேற்று நெதர்லாந்து நீதிமன்று தள்ளுபடி செய்தது. மேலதிக விபரங்கள் விரைவில் ...............

  21. April 30, 2015 பொதுசன வாக்கெடுப்பே ஈழத்தமிழர்களின் அரசியற்தீர்வுக்கான சிறந்த பொறிமுறை : வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ ! 0by tmdas5@hotmail.com • HDA ஈழத்தமிழர்களது அரசியற்தீர்வுக்கு சிறந்த பொறிமுறையாகவுள்ள பொதுசன வாக்கெடுப்பே இலங்கைத்தீவின் அமைதிக்கு வழிவகுக்கும் என வைத்திய கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் லண்டனில் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தாடல் நிகழ்வொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை கலாநிதி பிரைன் செனெவிரட்னெ அவர்கள் முன்வைத்துள்ளார். அனைத்துலக சமூகத்தின் உறுதுணையுடன் தமிழீழத் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் ஈழத்தமிழர்களது …

  22. தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: [Tuesday 2015-04-28 18:00] தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக ஆறாவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது . தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது . இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் உல்லூர் மேற்பிரிவுக்கான 7 கழகங்களும் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட 4 கழகங்களும் 12 வயதுக்கு உட்பட்ட 3 கழகங்களும் பங்குபெற்றியது. சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்…

  23. கடந்த கோடை காலத்தின் போது எனது அண்ணனின் மகன் சிட்னி அவுஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்தார்.வந்தவரை கூட்டிக் கொண்டு திரியும் போது ஒரு நாள் கைதொலைபேசியில் போட்டு வைத்திருந்த Waze என்னும் ஜிபிஎஸ் இல் இருந்து அரை மைல் தூரத்தில் பொலிஸ் என்று சொன்னது தான் தாமதம் அமைதியாக இருந்தவர் ஏதோ கலை வந்த ஆட்களைப் போல திடீர் என்று எழும்பி சித்தப்பா எங்கே இருந்து இந்த அறிவித்தல் வந்தது எப்படி வந்தது என்று கேட்டு அமர்க்களப்படுத்தி விட்டார். இப்படி ஒன்றைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.உலகத்திலேயே வாகனத்துக்கு கூடிய பணம் அறவிடும் இடம் சிட்னி தான்.எமது வீட்டுக்கு உண்மையிலேயே இரண்டு வாகனம் தேவை கட்டுற பணம் கூட என்பதால் ஒன்றையே வைத்து பாவிக்கிக்கிறோம்.ஒரு வருடத்துக்கு பதிவு செய்யவே ஆயிரக் கணக்…

    • 12 replies
    • 1.3k views
  24. ஒன்றாரியோ மாகாண புரோகிரசிவ் கட்சியின் தலைவரிக்கான தெரிவில் தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் ஓக்ரிட்ஜ் மார்க்கம் (Oak Ridges and Markham) ஏற்படுத்தப்பட்டுள்ள அசௌகரியம் குறித்து தமிழர்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தத் தொகுதியிலுள்ள சுமார் 1,800 அங்கத்துவர்களில் 75 வீதத்திற்கு மேற்பட்ட மேற்படி கட்சி அங்கத்துவர்கள்; பயண சிரமத்திற்குள்ளாவர்கள் என்பதும் இந்தத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட கட்சி அங்கத்துவர்களில் பெரும்பாலானவர்கள் திரு. பற்றிக் பிரவுனிற்காகப் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதால் இது குறித்து சமூக அக்கறையுள்ளவர்கள் செயலாற்றி வருகின்றனர். இவர்களிற்கான வாக்களிற்பு நிலையம் பெரிய நிலப்பரப்பை கொண்டுள்ள ஒரு தொகுதியான இத்தொகுதியில் வாக்களார்கள் செறிந்து வாழ…

    • 0 replies
    • 307 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.