மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1239 topics in this forum
-
பகைவரிடத்தில் பாசம் யேசுவோ நமக்காக கல்வாரி சிலுவையிலே மரித்தார், பின்பு உயிர்த்தார் என்று நினைவு கூறும் அவருடைய அன்பை பெற்றவர்களாய் நம்மை பகைக்கிறவர்களிடத்தில் பகையை மறந்து அவர்களுக்கு நல்ல காரியங்களை செய்வோம். இயேசு ஒரு கிராமத்தில் சிறுமி ஒருவர் நன்றாக படிப்பதிலும் பைபிள் வாசிப்பதிலும் கவனமாக இருந்து வந்தாள். ஆனால் சிறுமியின் வீட்டின் அருகே இருப்பவர்கள் சிறுமியின் குடும்பத்தை பற்றி எப்போதும் ஒரு குற்றத்தை கண்டுபிடித்து சண்டையிட்டு கொண்டிருந்தனர். இப்படி காலங்கள் சென்று கொண்டிருந்த வேளையில் ஒரு நாள் பக்கத்து வீட்டில் இருந்தவருக்கு பிறந்த நாள் வந்தது. அந்த நாள் அந்த சிறுமியோ கையில் ரோஜா மலர்களை எடுத்துக்கொண்டு ப…
-
- 12 replies
- 2.8k views
-
-
குற்றங்கள் குறையக் காவடி எடுத்த போலீஸ்... கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பர்யத் திருவிழா! சிந்து ஆர் போலீஸார் காவடி கட்டும் நிகழ்வு குற்றங்கள் குறைய போலீஸ் அதிகாரிகளும், விவசாயம் செழிக்கப் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வேளிமலை குமரனை வழிபட காவடி கட்டிச் செல்லும் விழா தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத அதிசய நிகழ்வாகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று தக்கலை அருகே உள்ள வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுமார் ஆறரை அடி உயரத்தில் முருகப் பெருமானும், சுமார் ஐந்தரை அடி உயரத்தில் வள்ளி பிராட்டியும் கருவறையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள். நம்பிராஜனின் மகளாக வளர்ந்த வள்ளி தேவியை …
-
- 0 replies
- 505 views
-
-
அவசரமா வெங்காயம் வாங்க பக்கத்தில் இருந்த தமிழ் கடைக்கு போயிருந்தேன்... கடையை முற்றிலுமாக நேர்த்தியாக மாற்றி அமைத்து இருந்தார்கள் ... கூடவே காசாளர் மேசையில் 2 பெரிய தங்க நிறத்திலான தொப்பை வண்டியும், மொட்டை தலையுமாய், கோணலாக சிரித்தபடி பெரிய சிலைகள். திருநீறும் குங்குமமும் , கௌரி காப்புமாய் நெளிந்த கடைக்கார அக்காவிடம் கேட்டேன், இதெல்லாம் யார் என்று. அவர் போட்டாரே ஒரு போடு .. இவர் தான் குபேரன், இவரை வீட்டில் கொண்டு போய் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்று... நான் அவாவிடம் கேட்டேன் அப்போ; இவ்ளோ நாள் நான் வைத்திருந்த லக்ஸ்மி அக்காவுக்கு என்ன கெதி என்று. சிலையில் தெரிந்த குபேரனை போல கோணலாய் சிரித்தார். அவாவுக்கு சொன்னேன்... இது குபேரனும் இல்லை, குப்பனும் …
-
- 3 replies
- 1.1k views
-
-
மனதை கட்டுப்படுத்த சில வழிகள்.! 1 . மனித மனமானது மரம்விட்டு மரம் தாவும் குரங்கைப்போன்றது அது நிலைகொள்ளாமல் ஒரு நினைவிலிருந்து இன்னொரு நினைவிற்கு தாவக் கூடியது 2.மனம் நம் சொல் கேட்பது என்பது நாம் ஒன்றைப்பற்றி நினைக்கக் கூடாது என்றால் நினைக்காமல் இருக்கும் நிலையாகும். 3.மனதை கட்டுப்படுத்த முதல் வழி காலையும் மாலையும் யோகாசனம் செய்ய வேண்டும் 4.யோகாசனம் என்றால் அதிகம் உடலை வளைத்து செய்வதல்ல முதலில் மூச்சுப்பயிற்சி ் 5.மூச்சுப்பயிற்சி என்பது நம் வலது கையின் கட்டைவிரல் மற்றும் சுண்டுவிரல் கொண்டு மூக்கின் இடப் புறமாக சுவாசத்தை இழுத்து வலப்புறமாக விட்டு பின் வலப்புறமாக சு…
-
- 0 replies
- 802 views
-
-
பகவத் கீதை கற்று தரும் பாடங்கள் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும். காரணம் இல்லாமல் ஏன் கவலைப்படுகின்றாய்? யாரைக் கண்டு காரணம் இல்லாமல் பயப்படுகின்றாய்? யார் உன்னை கொல்ல முடியும்? ஆத்மா பிறப்பதும் இல்லை இறப்பதும் இல்லை. ஆக இந்த தேவையற்ற கவலைகளைத் தாண்டி விடுங்கள். மிரட்டும் கவலைகளை மறந்து விடுங்கள். உங்கள் வேலைக்கான இன்டர்வியூ சரியாகப் போகவில்லையா விட்டுத் தள்ளுங்கள். அன்பான உறவிலே திடீரென விரிசலா? வேதனைப்படாதீர்கள். எல்லாமே ஏதோ ஒரு காரண காரியத்திற்காக நடக்கின்றது. உங்களுக்கு நன்மை நடந்தாலும் ஒரு காரணம் இருக்கின்றது. தீயது நடந்தாலும் ஒரு காரணம்…
-
- 0 replies
- 725 views
-
-
இந்துக்களின் புனித நூல் எது? இந்துக்களின் புனித நூல் எது? உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என்றால், இஸ்லாமுக்கு குரான், பார்சிகளுக்கு ஜெண்ட் அவஸ்தெ. அதே போல எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு கடவுள், ஒரு இறைத்தூதர், ஒரு மதத்தலைவர், ஒரு புனித ஸ்தலம் இருக்கின்றன. பிதாவின் பரிசுத்த ஆவி, யேசு, போப் ஆண்டவர், வாடிகன் நகரம், என்றோ கடவுள், அல்லா, இமாம், மெக்கா, என்றோ இருக்க, இந்துக்களுடைய கடவுள், இறைத்தூதர், மதத்தலைவர், புனித ஸ்தலம் என்ன? என்ற கேள்விக்கு விடை தேடலாம். ஆங்கிலேயேரின் வருகைக்கு முன்பு ஆதியில் ஆரியர்களின் வேதங்கள் அவர்களுக்குப் புன…
-
- 2 replies
- 5.6k views
-
-
ஒரு புரட்டின் வரலாறு ஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்லாமியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகுதான் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் வந்ததாக இந்துத்துவவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள். கிட்டத்தட்ட முஸ்லீம் சமூகத்தின் அடையாளமாகவே மாட்டிறைச்சியைச் சொல்கிறார்கள். அதோடு மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் கீழானவர்கள் அசைவம் சாப்பிடுபவர்கள் ஒருபடி தாழ்ந்தவர்கள் என்ற மதிப்பீட்டையும் உருவாக்குகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கோசாலை, பசு பாதுகாப்பு இயக்கம், என்று என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். செத்த மாட்டின்…
-
- 0 replies
- 510 views
-
-
தியானம் :: எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி.? தியானம் செய்ய உட்கார்ந்தாலே, எண்ணங்கள் தாறுமாறாக ஓடுகிறதா உங்களுக்கு ? இந்த எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவது எப்படி? சத்குரு இதில் தரும் விளக்கத்தைக் கேட்டு தெரிந்துகொள்வோம்... 1) முதலில் எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே ஒரு எண்ணம்தான். எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்று தொடங்கிவிட்டால் அதற்கு முடிவே கிடையாது. அது ஒரு முடிவில்லாத போராட்டம். அதற்கு ஒரு வழியே யோகா. எண்ணங்களை தொடர்ந்து இருக்க அனுமதியுங்கள். அவற்றைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். அது தானாகவே அதன் வழி தொடரட்டும். எண்ணங்கள் இருக்கின்றன அதை பின் தொடர வேண்டாம் என்ற விழிப்பு நிலை உணர்வு மட்டும் உங்களுக்கு இருக்க வேண்டும். மெல்ல, மெல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனு இன்று - ஜெயமோகன் October 28, 2020 அன்புள்ள ஜெ நான் அரசியல் கருதி இந்த கேள்வியை கேட்கவில்லை.அதன் மூலமாக உங்களை சர்ச் சர்ச்சையில் சிக்க வைக்க வேண்டும் என்பதும் என் நோக்கம் இல்லை. சமீபத்தில் திருமாவளவன் பேசிய மனுஸ்மிருதி பற்றிய சில கருத்துக்கள் விவாத பொருளாக மாறிவிடுகிறது. நெடுங்காலமாகவே நம் சமூகத்தில் பெண்கள் அடக்கி வைக்கப்பட்ட தாகவே எனக்கு ஒரு எண்ணம் உண்டு. அது நல்லதா கெட்டதா என்ற தெளிவும் இன்றுவரை இல்லை. ஒரு குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒருவர் தியாகம் செய்ய வேண்டும் என்ற நியதியின் அடிப்படையில் பல விஷயங்கள் நம்முடைய பண்டைய வாழ்க்கை முறையில் பிரதிபலிப்பதாக ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. அரசியல் சர்ச்சை இல்லாமல் எனக்கு ஒரு நடுநிலையான ப…
-
- 0 replies
- 777 views
-
-
மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி தற்போது தமிழ்நாட்டில் விவாதப் பொருள் ஆகியிருக்கிறது. இந்த மனுஸ்மிருதியில் பெண்களைப் பற்றி இழிவாக கூறப்பட்டிருப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஓர் இணைய வழிக் கூட்டத்தில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை இந்து வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக ஊடங்கங்களில் பகிர்ந்தனர். திருமாவளவன் பெண்களை அவமதித்து விட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பாரதிய ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகை குஷ்புவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் திருமாவளவனை விமர்சித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனுஸ்மிருதி நூலைத் தடை செய்யவேண்டும் என்று கோரி சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடத்தியது. இதற்கிடையில் தி…
-
- 0 replies
- 766 views
-
-
நவராத்திரிக் கொண்டாட்டத்தின் பின்னாலுள்ள எருமை அரசியல்:: வி.இ.குகநாதன் 10/24/2020 இனியொரு... படம் 1 பொதுவாகவே இந்து சமய விழாக்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தொல் பழங்குடிகளை ஆரியர்கள் வெற்றி கொண்ட நிகழ்வுகளாகவே கட்டமைக்கப்பட்டிருக்கும். இதற்காக ஒரு அரக்கன் கற்பிக்கப்பட்டு, அவனது இறப்பினைக் கொண்டாடும் விழாக்களாகவே அவை கட்டமைக்கப்பட்டிருக்கும். இந்த வகையில் மகிசாசூரன் { எருமைத் தலையோன்} வீழ்ச்சியினைக் கொண்டாடும் ஒரு விழாவாகவே நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது. `பிரம்மனிடம் வரம் பெற்ற மகிசாசூரன் தேவர்களைத் துன்புறுத்த, இந்திரன் உட்பட்ட தேவர்களும் தோற்கடிக்கப்பட, துர்க்கை மகிசாசூரனைக் கொல்லுகிறாள்` என `தேவி மகாத்மியம்` எனும் புராணநூல் கூறுகின்றத…
-
- 2 replies
- 798 views
-
-
நெருக்கடி என்ன – தீர்வு என்ன? முன்னிலை சோஷலிஸக் கட்சியின் வேலைத்திட்டம் சம்பந்தமாக அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் 01. இலங்கையில் பல அரசியல் கட்சிகள் இருக்கும்போது முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற பெயரில் இன்னொரு கட்சி எதற்கு? இலங்கையில் பதிவு செய்யப்பட்ட பல கட்சிகள் உண்டு. அவற்றிற்கு மத்தியில் நூறுக்கும் மேற்பட்ட கட்சிகள் பதிவிற்காக விண்ணப்பித்துள்ளன. அரசியல் கட்சிகள் எவ்வளவு இருந்தாலும், அவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம். அதாவது, தற்போதைய பொருளாதாரம், அரசியல் மற்றும சமூக முறையை இப்படியே நடாத்திச் செல்வதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள் மற்றும் இந்த முறையை மாற்றுவதற்காக தோற்றி நிற்கும் கட்சிகள். படித்தவர்களை பாராளுமன்…
-
- 9 replies
- 1.3k views
-
-
மரணமும் மரணத்துக்குப் பிந்திய துயரமும் .. பிறப்பும், இறப்பும் உலகத்தின் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. அதனை எம்மால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும் நம்மைவிட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் அன்புக்குரிய உறவுகளின் இறப்புத் துயரத்தை பலரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அதன்விளைவுகள் உள, உடல் மாற்றங்களையும் பாதிப்புக்களையும் ஏற்படுத்துகின்றன. அந்தவகையில் இறப்பு என்பது உடலில் இருந்து ஆன்மா பிரிந்து செல்வதையே குறிப்பிடுகின்றது. இதனை மரணம் எனவும் அழைப்பர். மரணமானது இயற்கை மரணமாகவோ அல்லது அகால மரணமாகவோ நிகழலாம். மரணத்துயர் என்றால் என்ன என வரையறுப்போமாயின் பெரும்பாலும் இழப்பினைத் தொடர்ந்து அதுவும் அன்புக்குரியவரின் மறைவினைத் தொடர்ந்து ஏற்படுவதாகும். …
-
- 0 replies
- 662 views
-
-
தமிழர் பகுதியின் தொன்மை வாய்ந்த வெடுக்கு நாறி மலை.! (வெடுக்கு நாறி மலை) விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதிநாளை அண்மித்திருக்கிறோம். எங்கே இருக்கிறார் இந்த ஆதி லிங்கேஸ்வரர்? வவுனியா மாவட்டத்தின், வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற நெடுங்கேணி எனும் அழகிய விவசாய சிறுநகரின் எல்லை கிராமமான பாலமோட்டை – ஒலுமடு கிராமங்களுக்கு அரண்செய்யும் அடர்வனத்துள் எழுந்தருளப்பெற்றிருக்கிறார் அடி முடி அறியமுடியாத ஆதிலிங்கேஸ்வரர். ஏ9 சாலையின் இடையே புளியங்குளம் சந்தியில் இறங்கி, முல்லைத்தீவு சாலையில் 20 கிலோமீற்றர்கள் தொலைவில் இருக்க…
-
- 4 replies
- 1.6k views
-
-
பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை.... 1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே! 2. தேவைக்கு செலவிடு. 3. அனுபவிக்க தகுந்தன அனுபவி. 4. இயன்ற வரை பிறருக்கு உதவி செய்.5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி. 6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. 9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும்.சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும். 10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. 12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.13. அவ்வப்போது பரிசுகள் அளி. …
-
- 4 replies
- 714 views
-
-
எதுவும் நிரந்தரம் இல்லை - எடுத்துக் காட்டிய புகழ்பெற்ற நடிகர்.! தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்” என்று அறிவித்தார் நாட்கள் நகர்ந்தன … பதவி போனது .. புகழ் போனது .. …
-
- 0 replies
- 623 views
-
-
நல்லூர் கோயில், மாபாண முதலியார். மாபாண முதலியார்...!! இவர்தான் நல்லூர் கோயில் மாபாணமுதலியார் ,உலகின் சிறந்த நிர்வாகம் கொண்டசைவக்கோயில்,இந்திய பிரதமர் மோடிவந்த போதும் மேலாடையுடன் கோயிலுக்குள் அனுமதிக்க வில்லை, பாரத பிரதமர் மேலாடை கழற்றி ஆலயத்துள் செல்வது இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அவ்வளவு உவப்பாகப்படாமையினால் கொஞ்சம் அதிகாரத் தொனியில் கேட்டுள்ளார்கள். அதற்கு மாப்பாணர் முதலியார் அவர்கள், நீங்களே அச்சகர்களைக் கூட்டிவந்து நீங்களே பூசைசெய்து, நீங்களே என்னவும் செய்யுங்கள்.ஆனால், முருகன் அடியார்களாகிய நாம் எதுவும் செய்யோம்.எமது அந்தணரும் எதுவும் செய்யார்.முருகன் விக்கிரகத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பதா இல்லையா என்பதை அ…
-
- 0 replies
- 463 views
-
-
பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிய முடியும்.! - செர்ன் (CERN) . உலகப் புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து ‘டெட்ரா குவார்க்’ (tetraquark) எனப்படும் புது வகை அணு துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பால் பிரபஞ்சம் உருவானதன் ரகசியத்தை அறிய முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ‘இந்தப் பிரபஞ்சம் எதனால் உருவானது’ எனும் கேள்விக்கு விடை காணும் முயற்சியாக " கடவுள் துகள் " எனப்படும் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கூடம் தான் செர்ன் (CERN). செர்ன் நிறுவனத்தின் ஆய்வுக் கூடம் ஸ்விட்சர்லாந்து – பிரான்ஸ் நாட்டு எல்லையில் 157 மீட்டர் ஆழத்தில், 27 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள…
-
- 21 replies
- 2.9k views
-
-
திருமந்திரம் கற்பது ஜெயமோகன் August 15, 2020 வணக்கம் அய்யா 2017 மேமாதம் முதல் உங்கள் வலை தளத்தின் வாசகன் நான். வாழ்வில் வெறுத்து போயிருந்த காலம் அது. தங்களது பகவத் கீதை பற்றிய எல்லா பதிவுகளையும் படித்த பிறகுதான் எனக்கு ஒரு தன்னம்பிக்கை வந்து அதன் பிறகு அந்த காலத்தை கடந்து வந்தேன்.. எனக்கு பல மானசீக குருக்கள் உள்ளனர். எல்லாரும் எதாவது ஒரு விதத்தில் என்னை அடுத்த நிலைக்கு முன்னேற்றியவர்கள்.. அந்த வகையில் நீங்களும் என்னை தூக்கி மேலே விட்டவர்களில் ஒருவர். இப்போதும் ஒரு வழி காட்டுதல் தேவை. நான் திருமந்திரம் படிக்க ஆசைப்படுகிறேன்.. எந்த மூலமும் உரையும் சிறப்பாக இருக்கும் என்பதை சொல்ல முடியுமா? வெறும் வார்த்தை வார்த்தைக்கு அர்த்தம் இல…
-
- 1 reply
- 985 views
-
-
https://www.bbc.com/news/world-south-asia-15347430 http://www.trans-techresearch.net/wp-content/uploads/2015/05/three-hundred-Ramayanas-A-K-Ramanujan.pdf https://www.youtube.com/watch?v=m4tdSUOGwwQ
-
- 1 reply
- 665 views
-
-
சிறப்புக் கட்டுரை: ஆத்திகம், நாத்திகம், இந்து மதம்: மனம் புண்படுவது தேவைதானா? மின்னம்பலம் ராஜன் குறை ஆத்திகம், நாத்திகம் இரண்டுமே மனித சிந்தனையின் சாத்தியங்கள்தான். வெகுகாலமாகவே இரண்டும் முரணுற்று விவாதித்து வந்துள்ளன. நல்ல பண்பட்ட சமூகத்தில் இரு தரப்பும் தொடர்ந்து இயங்குவதும், அவை தத்தமது பார்வைகளைத் தடையின்றி வெளிப்படுத்துவதும் அவசியம். அரசியல் நிர்ணய சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளில் தங்கள் மனத்துக்கு ஒப்பும் மதத்தைப் பின்பற்றும் உரிமையும் அடக்கம். அப்படி மத நம்பிக்கைகளை பின்பற்றாமல் அவற்றை கேள்விக்கு உட்படுத்துவதும், நாத்திகத்தை பிரச்சாரம் செய்வதும் அந்த உரிமையின் ஒரு பகுதிதான். அதாவது நாத்திகமும் ஒரு நம்பிக்கைதான். ஆத்திகம், நாத்திகம் ஆகிய இர…
-
- 0 replies
- 893 views
-
-
தமிழர் மெய்யியல் -செல்வி- July 17, 2020 Admins ஆய்வுகள், கட்டுரைகள் 0 காலாகாலமாக இனச்சிதைப்பிற்கு ஆட்பட்டும் அதை எதிர்கொண்டும் வரும் தமிழினம் மாற்றாரின் ஊடுருவல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவதற்கு தமிழினவரையியல் தொடர்ச்சியில் வழிவழி வந்த மெய்யியல் உறுதுணையாய் நிற்கும் என்ற கூற்றில் சிறிதளவும் மிகையில்லை. மண்ணினாலும் மொழியினாலும் மக்களின் வாழ்வியல் தொடர்ச்சிகளின் கூட்டிணைவாகவும் முகிழ்த்த அறிவுப்பேறு தமிழர்களின் மெய்யியலானது. மண்ணுரிமை என்பது மீமிசை அரசியல் என்று குறிப்பிடும் அறிவர் குணா அவர்கள், தமிழன் தன் உரிமையையும் கொற்றத்தையும் ஒற்றுமையையும் இழந்த வரலாறென்பது மண்ணை இழந்த வரலாறாகவே கருதப்படவேண்டும் என்கிறார். காலங்காலமாக படிப்படியாக நிகழ்ந்த மண்ணிழப…
-
- 1 reply
- 2.6k views
-
-
Block Universe Theoryயும் ஆசீவகத்தின் நியதிக் கொள்கையும்,சங்கத்தமிழும் பி.பி.சி யின் கீழ் காணும் காணொளியை கண்ட போது , ஆசீவகத்தின் நியதிக் கோட்பாபாட்டிற்கும் , சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் உள்ள பிளாக் யுனிவர்ஸ் கோட்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி நினைக்க தோன்றியது. பிளாக் யுனிவர்ஸ் கோட்பாடு படி உலகில் நிகழ்காலம், இறந்த காலம் மற்றும் எதிர்காலம் என்று இல்லை. அனைத்து நிகழ்வுகளுமே முன்னதாகவே தீர்மனிக்கப்பட்டு நடந்தவை. ஒவ்வொரு நிகழ்வும் கார்ட்டூன் படத்திற்காக வரையபட்ட வரிசையான எண்ணிலடங்கா நிகழ்வுகளின் தொகுப்பு போன்றதே. The future is predetermined and therefore there can not be any thing as free will. அதாவது ஒருவருடைய முடிவெடுக்கும் திறன், வாய்ப்புகள், தனிப்பட…
-
- 0 replies
- 533 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 680 views
-
-
பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பஜனை பாடல்கள் இல்லை” மத வழிபாட்டு தலங்களில் புதிய விதிமுறைகள் பிரசாதம் இல்லை, புனித தீர்த்தம் இல்லை, பக்திபாடல்கள் இல்லை மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 05, 2020 08:57 AM புதுடெல்லி மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 8 ஆம் தேத…
-
- 0 replies
- 599 views
-