சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 19 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 20 மார்ச் 2023 “அவர்களுக்கே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த என் மகன்கள் என்னிடம் வந்து எனக்கு மறுமணம் செய்து வைக்கவா என்று கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதேநேரத்தில், கணவரை இழந்த எத்தனையோ பெண்கள் தனி ஆளாக தன் பிள்ளைகளை வளர்த்து வரும் இந்தச் சமூகத்தில் யாருக்குமே தோன்றாத ஒரு சிந்தனை என் மகன்களுக்குத் தோன்றியதை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது,” என்கிறார் செல்வி. கள்ளக்குறிச்சியில் உள்ள வளையாம்பட்டு ஊராட்சியைச் சேர்ந்தவர் பாஸ்கர். அவருடைய அம்மாதான் செல்வி. பாஸ்கர், அவரது தம்பி விவேக் இருவரும் …
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
சமீபத்தில் நண்பனின் அம்மா காலமாகி விட்டதாக தகவல் வந்தது. அவன் அப்பா மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் மறைந்திருந்தார். நண்பனின் அப்பா அம்மா இருவரையும் சிறுவயது முதலே அறிவேன். மனமொத்த தம்பதிகள் - என் அப்பா அம்மா போல. எல்லோருக்கும் சிறுவயதில் தங்கள் அப்பா அம்மா பற்றி அப்படிதானே தோன்றும்? விளையாடக் கூப்பிட அழைக்கும் நேரங்களில் அல்லது அவர்கள் வீட்டிலேயே விளையாடும் நேரங்களில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். என்னை 'சீராமா' என்று கூப்பிடுவார் நண்பனின் அம்மா. சிறு வயதிலிருந்தே பழகியவர்கள். அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆகி வெவ்வேறு இடங்களில் இருந்து, கடைசியில் எனக்கும் வேலை கிடைத்து சென்னையில் செட்டிலாகி என்று காலங்கள் கடந்த பின் மறுபடி நண்பனை பார்…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
நான் துறவி அல்ல, காதலன்! KaviApr 01, 2023 11:31AM ஷேர் செய்ய : சத்குரு படிக்கும் வயதில் படிக்க வேண்டும், வேலை செய்யும்போது வேலை செய்யவேண்டும் என்றால், காதலிப்பது எப்போது? காதலிக்க நேரமில்லை என்றாலும், காதலில்லாமல் வாழ முடியுமா? நாம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், அதில் காதல் கலந்திட என்ன செய்வது? சத்குரு சொல்கிறார், மேலும் படியுங்கள். “நான்கு அரியர்களை வைத்து இருக்கும் என் மாணவன், யாரோ ஒரு பெண்ணுக்காக மூன்று மணிநேரம் தெருவில் காத்திருப்பதைக் கவனித்தேன். நன்றாகப் படிக்க வேண்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வத்தைவிட, ஒரு பெண் பின்னால் சுற்றும் ஆர்வம்தானே அவனுக்கு அதிகமாக இருக்கிறது? இன்றைக்கு இளைஞர்களைச் செலுத்தும் ஒரே சக்தி க…
-
- 4 replies
- 1k views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,ஹேமா ராகேஷ் பதவி,பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் "நான் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். என் குழந்தையை கருணை கொலை செய்து விடுமாறு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்கள். அழுது அழுதே என் வாழ்க்கை தீர்ந்து விடுமோ என பயந்திருக்கிறேன். விவாகரத்து ஆன வலியும், என் குழந்தை குறித்து மற்றவர்களின் புரிதலும் மனச்சோர்வை அதிகரித்த காலத்தில், என்னிடம் துணையிருந்தது என் நம்பிக்கை மட்டுமே. அந்த நம்பிக்கை மட்டுமே என் வாழ்வில் சிறு வெளிச்சத்தை தந்தது. அந்த சிறு நம்பிக்கை வாழ்வதற்கான உந்துதலை அளித்தது. அந்த நம்பிக்கை மட்டுமே இன்று எனக்கு முழு துணையாக இருக்கிறது," என கண்களில் நம்பிக்கையோடு தெளிவாக பேசுகிறார் பார்கவி.…
-
- 7 replies
- 792 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரிப் படம் கட்டுரை தகவல் எழுதியவர்,தேஜல் பிரஜாபதி பதவி,பிபிசி குஜராத்தி 40 நிமிடங்களுக்கு முன்னர் திருமணத்திற்கு முன்பாக மணமகன், மணமகளின் ஜாதகத்தை கேட்பது இந்திய பெற்றோர்கள் மத்தியில் வழக்கமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் சிலர் கைரேகையை கேட்பது எதனால் தெரியுமா? ஆம், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் திருமணத்திற்கு முன்பு மணமகனின் கைரேகையை சிலர் கேட்கின்றனர். இவற்றை வழக்கமான கைரேகை நிபுணர்களிடம் சென்று காட்டாமல் ஒரு கருவி மூலமாக சோதிக்கப்படுகிறது. இந்த சோதனையின் பெயர் DMIT என்று அழைக்கப்படுகிறது. மணமகனி…
-
- 0 replies
- 794 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,சுஷீலா சிங் பதவி,பி பி சி நிருபர் 6 மே 2023 "அவள் ஒரு இந்து, நான் ஒரு முஸ்லீம், ஆனால் அது எங்களுக்கு ஒரு பொருட்டில்லை. எங்களிடையிலான அன்பும் அதற்காக எந்த எதிர்ப்பையும் இணைந்து எதிர்கொள்வோம் என்பதும் மட்டும் உறுதி. எங்களின் மதங்கள் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை” இது மாலதியும் ருபீனாவும் சொல்லும் வார்த்தைகள். (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன.) மாலதியும் ருபீனாவும் மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்களின் காதல் கதை, அவர்கள் சந்தித்துக்கொண்ட பள்ளியில் தொடங்கியது. இருவரும…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 28 ஏப்ரல் 2023 காதல் உறவுகள் எப்போதும் ஒருவருடைய உடல் நலத்தை பேணிக் காப்பதோடு, நீண்ட காலம் வாழவும் உதவுகிறது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் நண்பர்களுடன் பழகுவதிலும் இதே போன்ற நன்மைகள் ஏற்படுகிறதா? பென்னி ஷேக்ஸ் என்பவர் நாட்டிங்காமில் மேடை நகைச்சுவை கலைஞராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனநல பிரச்னைகளும், பெருமூளை வாதமும் இருப்பதால் எல்லோரையும் போல் அவரால் செயல்பட முடியாது. இதனால் நண்பர்களுடன் பழகுவதற்கு அவர் குறைந்த நேரத்தையே செலவிடுகிறார். இதன் காரணமாகவே பெரும்பாலும் அவர் தனிமையில் இருப்பதை அவருடைய நண்பர்கள் புரிந்துகொள்கின்றனர். இருப்பினும் சரியான நேரத்துக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், …
-
- 2 replies
- 874 views
- 1 follower
-
-
லிஸ் கிளெமென்ட்ஸ் பதவி,பிபிசி 4 மணி நேரங்களுக்கு முன்னர் 18 வயதே நிரம்பிய இளம்பெண், திருமணத்துக்கு முன் கன்னித்தன்மை பரிசோதனை மேற்கொள்ள வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிரேட் பிரிட்டனின் ஒரு அங்கமான வேல்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இளம்பெண் ஃபரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயதான இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். திருமணம் செய்து கொள்ள கொஞ்சமும் விருப்பமில்லை என்று அவர் கதறினாலும், ஃபராவின் பேச்சை அவரது அம்மா கேட்பதாக தெரியவில்லை. அத்துடன் நிற்காமல், தமது மகளை சுத்தமானவள் என்று சமூகத்துக்கு நிரூபிக்க, ஃபராவின் தாய் அவரின் கன்னித்தன்மையை பரிசோதி…
-
- 1 reply
- 862 views
- 1 follower
-
-
குறைத்து ஒலிப்பதும் கூறுவதும் எழுதுவதும் தவறாகும். நாம் செய்யும் மரியாதையில் பிழை ஏற்பட்டு விடும். எனவே "ஐயா" என்றே கூறவேண்டும், எழுதவேண்டும், படிக்க வேண்டும். ஒரு சொல்லில் ஒரு எழுத்து இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு எழுத்து(கள்) வந்து பொருளை வேறுபடுத்தாமல் இருக்குமானால் அந்த எழுத்துப் போலி எழுத்து எனப்படுகிறது. ஐயா’ என்று எழுதுவது மிகச் சரியானது. https://oomaikkanavugal.blogspot.com/2015/04/3.html
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
perceptions காரணமே இல்லாமல் ஒருவரை பிடிக்கல; காரணமே இல்லாமல் ஒருவரை பிடிச்சி போச்சு, இதற்கு பின்னால் ஒரு காரண காரிய இருக்கும். அது ஏதேனும் ஒன்றை காரணமாக அமைந்து இருக்கும். இது பெரும்பாலும் உணர்வு சார்ந்த காரணமாக இருக்கலாம். ஒருவரைப் பார்க்கின்றோம். நம்முள் சட்டென ஒரு நிலைப்பாடு உருவெடுக்கும். அந்நபரின் தோற்றம், ஆடை அணிகலன்கள், பேச்சுநடை, அங்க அசைவுகள் இவற்றின் பேரிலான நம் கடந்தகால நினைவுகளின் அடிப்படையிலான யூகங்கள் அந்த நிலைப்பாட்டைத் தோற்றுவிக்கும். பின் அது சேமிப்பிலும் பதிவாகும். இப்படிப் பதிவாகும் நின…
-
- 0 replies
- 999 views
- 1 follower
-
-
கடவுள் கொடுத்த அழகான விடயங்களில் ஒன்று பாலுறவு என்று பாப்பரசர் பிரான்சிஸ் ஆவணப்படமொன்றில் விவரித்துள்ளார். டிஸ்னி+ தயாரிப்பான “தி போப் ஆன்சர்ஸ்” என்ற இந்த ஆவணப்படம் நேற்று வெளியானது. கடந்த ஆண்டு ரோமில் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 10 பேருடன் அவர் நடத்திய சந்திப்பு இவ்வாறு ஆவணப்படமாக்கப் பட்டுள்ளது மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமைகள், கருக்கலைப்பு, பாலியல் தொழில், பாலுறவு மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பாப்பரசர் பதிலளித்துள்ளார் . அதில் “பாலுறவு என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த அழகான விடயங்களில் ஒன்றாகும்” என்று அவர் ஆவணப்படத்தில் கூறினார் “பாலியல் ரீதியாக உங்களை வெளிப்படு…
-
- 0 replies
- 1k views
- 1 follower
-
-
"நாங்கள் இணைந்து வாழ கல்யாணம் தேவையில்லை, காதல் போதும்" - லிவ்-இன் உறவில் வாழும் கவிதா பட மூலாதாரம்,KAVITHA GAJENDRAN கட்டுரை தகவல் எழுதியவர்,சிவகுமார் இராஜகுலம் பதவி,பிபிசி தமிழ் 52 நிமிடங்களுக்கு முன்னர் "என்னுடைய சுதந்திரத்தையும் இயக்கத்தையும் கட்டுப்படுத்தாத உறவும், வாழ்க்கையும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அந்த வகையில் 10 ஆண்டு காதல் தராத புரிதலையும் நெருக்கத்தையும் லிவ்-இன் வாழ்க்கை தந்துள்ளது" என்கிறார் கவிதா கஜேந்திரன். சென்னையைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்துப் பெண்ணான இவர் இடதுசாரி அரசியல் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர். பழைமைவாதமும் ஆ…
-
- 8 replies
- 1.3k views
- 2 followers
-
-
பொய்மையும் வாய்மையிடத்த - சுப. சோமசுந்தரம் "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இல்லாத சொலல்" ------(குறள் 291; அறத்துப்பால்; அதிகாரம் : வாய்மை) திருமணப் பத்திரிகைகளில் ஒவ்வொருவரும் அவரவர்க்குப் பிடித்த ஏதோ ஒரு பாடலுடன் தொடங்குவார்களே, அதுபோல் இக்கட்டுரைக்கு மேற்கண்ட குறளே நாம் போடும் பிள்ளையார் சுழி (!). இப்பீடிகையைப் பார்த்தாலே தெரிய வேண்டும் - இவன் சில பொய்களுக்குப் புடம் போட்டு, முடிந்தால் நமக்கு மூளைச்சலவை செய்து ஏதோ கருத்தியல் சார்ந்த சுழலில் தள்ளப் பார்க்கிறான் என்று. ஏமாற்ற நினைப்பது உண்மைதான். பின்னர் ஏன் இந்த முன்னறிவிப்பு ? ஏமாற விருப்பமில்லையெனில் ஆரம்பத்த…
-
- 1 reply
- 1.4k views
- 2 followers
-
-
-
பெண்கள் குடிப்பதை இயல்பாக்கம் செய்வது இன்றைய நகரமயமாக்கப்பட்ட சூழலில் பெண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள், சிறுமிகள் குடிப்பது, புகைப்பது, போதை மருந்தை பயன்படுத்துவது பரவலாகி வருகிறது. அங்கங்கே குடித்துவிட்டு சாலையை மறித்து தகராறு பண்ணும், சாலை விபத்தை ஏற்படுத்தும், போதை மருந்தை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தற்கொலை முயற்சி பண்ணும் பெண்களைப் பற்றின செய்திகளைப் பார்க்கிறோம். அனேகமாக எல்லா கார்ப்பரேட் ஆசிரமங்களுக்குள்ளும் போதை மருந்து பழக்கத்தில் சிக்கிய ஏகப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். இச்செய்தியும் நமக்குத் தெரியும். சாலை முனையில் நின்று கப்பு கப்பென்று சிகரெட்டை ஊதித்தள்ளும் சிறுமிகளை நான் பெங்களூரில் பரவலாகப் பார்க…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
குழந்தைகள் பொய் சொல்வது பெருங்குற்றமா? பெற்றோர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? கட்டுரை தகவல் எழுதியவர்,க. சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் 4 மார்ச் 2023, 02:50 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES குழந்தைப் பருவத்தின்போது பெற்றோரிடம் பலமுறை அடி வாங்குவது, முட்டி போடுவது, தோப்புக்கரணம் போடுவது போன்ற தண்டனைகளைப் பெற்றுள்ளேன். அதில் பெரும்பாலான சூழ்நிலைகளில் பொய் சொல்வதே அத்தகைய தண்டனைகளைப் பெறுவதற்குக் காரணமாக இருந்துள்ளன. அப்படி ஒவ்வொரு முறை பொய் சொன்னதற்காகத் தண்டனை பெற்ற பிறகும், அடுத்த முறை மீண்ட…
-
- 0 replies
- 622 views
- 1 follower
-
-
"நீ பொண்ணு, திருமணம் செஞ்சுக்க'னு சொல்வாங்க, ஆனா கேட்கமாட்டேன்" - 40 வயதில் உலகம் சுற்றும் 'சிங்கிள்' பெண் பட மூலாதாரம்,AISHWARYA SAMPATH படக்குறிப்பு, ஐஸ்வர்யா சம்பத் 22 ஜனவரி 2023, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "திருமண வாழ்க்கை, குழந்தை என இரண்டும் இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையே முழுமையடைகிறது" என்பதுதான் இந்திய பெரும்பான்மை சமூகத்தின் மனப்பான்மை. ஆனால், கல்வி, பயணம், வாசிப்பு அனுபவம் இவையும் வாழ்க்கையை முழுமையடையச் செய்யும், நம்மை மகிழ்ச்சியாக்கும் என்கிறார், சென்னையைச் சேர்ந்த 40 வயதான ஐஸ்வர்யா சம்பத். “திருமண…
-
- 2 replies
- 800 views
- 1 follower
-
-
சுவிஸ் நாட்டின் ஆர்கவ் மாநிலத்தில் ஈழத் தமிழர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் ஒன்று 2023 பெப்ரவரி 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது. 57 வயது நிரம்பிய கணவர் , மூன்று பிள்ளைகளின் தாயான 47 வயது நிரம்பிய தனது மனைவியை பலரும் பாத்திருக்கையில் கொலை செய்துள்ளார். ஒரு உணவு விடுதியில் காலை 8.30 அளவில் இச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கொலை செய்யும் நோக்கத்துடனேயே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. தனது மனைவியை, கணவன் ஒன்பது தடவைகள் கத்தியால் குத்தியுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தபோது கொலையாளி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காது போலீசாரிடம…
-
- 5 replies
- 1k views
-
-
அருந்ததி பார்க்கும் திருமண சடங்கில் அறிவியல் உள்ளதா? வைரல் வீடியோவும் விஞ்ஞானி விளக்கமும் கட்டுரை தகவல் எழுதியவர்,அ.தா.பாலசுப்ரமணியன் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHESH/SARANYA 'அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து' திருமணம் செய்யும் நடைமுறை தமிழ்நாடு உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களில் பல சாதிகளில் உள்ளது. திருமணம் நடக்கும் இடத்தில் உள்ள அலங்கரிக்கப்பட்ட அம்மிக்கல் ஒன்றில் கால் வைத்து வானத்தில் மேலே அண்ணாந்து மணமகன் வானத்தில் உள்ள அருந்ததி நட்சத்திரத்தை மணமகளுக்கு காட்டுவதாகவே இந்த சடங்கு இருக்கும். வழக்கமாக திரும…
-
- 1 reply
- 818 views
- 1 follower
-
-
இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைக் கண்டிருக்கிறது… நேற்று குடும்பநல நீதிமன்றத்தில் வைத்து ஒரு வித்தியாசமான ஜோடியைப் பார்த்தேன் - இருவரும் எனக்கு எதிரே தான் இரண்டு மணிநேரங்களுக்கு மேலாக அமர்ந்திருந்தார்கள். அந்த ஆண் இடைவிடாமல் தன் பெரிய வாயைத் திறந்து பேசிக்கொண்டே இருக்க அவள் அந்த வாயை ரசித்துக் கொண்டு ஒரு மங்காத புன்னகையுடன், ஒளிரும் கண்களுடன், அவற்றில் பொங்கும் காதலைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அப்படி ஒரு அபாரமான கெமிஸ்டிரி இருவருக்கும். ஆனால் அவர்களுடைய முக அமைப்பின் ஒற்றுமையைக் கண்டு இருவரும் அண்ணன் தங்கையோ என்று கூட சந்தேகம் எழாமல் இல்லை. மதிய இடைவேளையின் போதும் இருவரும் “பாய்ஸ்” படத்து “வாய்தா வாய்தாம்பாங்களே ஜட்ஜய்ய…
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
விலங்கினங்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை: க.நாகராசு வாழ்க்கை வாழ்வதற்கே என்பதனை நம்மில் எத்தனைபேர் தெளிவான புரிதல் கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவை மிக மிக அரிதாகவே உள்ளது. இந்த மானுடம் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற ஆழ்ந்த எண்ணமும் அறிவும் கொண்டிருக்க வேண்டும். இவ்வாழ்வு எனக்கானது; நமக்கானது என்ற உண்மை இருக்கையில், வெகு சிலர் குறுகிய எண்ணத்தின் காரணமாகத் தடம் மாறிப் புதைகுழியில் விழுந்து, தன்னை இடையில் மாய்த்த்துக்கொள்ளும் அவலத்தினையும் பார்க்கிறோம். இதனை நினைக்கும்போது அவை மனித இனத்திற்கே அவமானமாகவே உள்ளது. ஏனெனில், மனித இனம் மட்டுமே தனக்காவும் பிறருக்காவும் வாழும் …
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
மனைவிக்கு ஊதியம் கொடுக்கலாமா? கேள்வி: தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது கூட unpaid work என்று பெண்கள் சொல்கிறார்களே. இது ஏன்? நீங்கள் இதை ஏற்கிறீர்களா? இந்த unpaid என்கிற வார்த்தை ஆண்களை வம்புக்கு இழுக்கிறது. பதில்: ஆம், பெண்ணியவாதிகள் சொல்வது சரி தான். குடும்பம் என்பது ஒரு தொழிற்சாலை, அங்கு பெண்கள் உழைக்கிறார்கள், அதற்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மனைவியாக இருப்பதற்கான ஊதியம் கொடுக்க வேண்டும் எனும் கோரிக்கை அரசின் முன் இருக்கிறது. ஆனால் அரசு இதை சட்டமாக்காமல் இருக்கிறது. இப்படி ஒரு சட்டம் வந்தால் நான் அதை முழுமையாக ஆதரிப்பேன். அதே நேரம் எனக்கு சில நிபந்தனைகள் உண்டு: 1. இதை ஒரு உழைப்பாக அன்றி கடமையாகவும், புனிதமா…
-
- 5 replies
- 551 views
- 1 follower
-
-
தப்பிப் பறந்த சிட்டு ஒரு வாசகர் அழைத்து ஆச்சரியமானதொரு செய்தியை சொன்னார் - அவர் மென்பொருள் துறையில் பணி செய்கிறார். அவருக்கு சில மாதங்களுக்கு முன் ஒரு பெண்ணுடன் நிச்சயமாகி இருக்கிறது. பெண் பார்க்க செல்லும் போது “உன் எதிர்பார்ப்பு என்ன?” என்று இவர் கேட்டதற்கு அவள் “எனக்கு சொத்து, பணம் எல்லாம் முக்கியமில்ல, என்னை அன்பா வச்சிக்கிட்டா போதும்” என சொல்லிட இவர் “அடடா நமது வாழ்க்கைக்கு ஏற்ற பெண்கள் இவள் தான்” என மகிழ்ந்து ஒப்புதல் அளித்திருக்கிறார். ஆனால் நிச்சயதார்த்தத்துக்கும் கல்யாணத்துக்கும் இடையே அப்பெண்ணின் மற்றொரு முகம் வெளிப்பட்டிருக்கிறது. இவர் ஊரில் உள்ள தன் குடும்ப வீட்டை மறுசீரமைத்துக் கட்ட நினைத்திருக்கிறார். அதற்கு பணம் போதாமல் போக தன் அ…
-
- 4 replies
- 713 views
- 1 follower
-
-
குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VISAGE நேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது? எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்? டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இற…
-
- 1 reply
- 684 views
- 1 follower
-
-
இழப்பும் துக்கமும்! KaviFeb 11, 2023 07:23AM சத்குரு கேள்வி: நெருக்கமான பிரியமான ஒருவரை இழந்து நிற்கும் தருவாயில், அவரை இழந்த துக்கத்தையும் துயரையும் ஒருவர் எவ்வாறு தாங்கிக்கொள்வது? பதில் நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களின் துக்கம் யாரோ ஒருவர் இறப்பதால் ஏற்படுவதல்ல. ஏதோ ஒரு உயிர் விட்டுச்செல்வது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை விடுகிறார்கள். உங்களின் நகரத்தில் மட்டும் பலர் இறந்து போகிறார்கள். அதனால் பலர் துக்கத்தில் இருக்கிறார்கள். எனினும் அந்த துக்கம் உங்களைப் பாதிப்பதில்லை. அது உங்களுக்குள் ஒரு வெறுமையை உருவாக்குவதில்லை. பிரச்சனை என்னவெனில், ஒரு குறிப்பிட்ட உயிர் விட்டுச்…
-
- 0 replies
- 330 views
-