Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. திருமணம் என்பது ஒருஆணும்,பெண்ணும் பார்த்து ,பேசி,விரும்பி,ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு செய்வது தான் நல்லது என்பது என் கருத்து. இன்றைய நவீன காலத்தில் விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி விட்டது....ஆணோ ,பெண்ணோ 45,50 வயதிலும் கூட இளமையாக்,சுறு,சுறுப்பாக இருக்கினம்.இந்த வயதிலும் கூட அவர்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. பொதுவாக் எமது சமுதாயத்தில் திருமணம் செய்யும் போது[வெள்ளையளை விடுவம்] ஆணுக்கு பெண்ணை விட எது அதிகமாய் இருக்குதோ இல்லையோ வயது கட்டாயம் அதிகமாக இருக்க வேண்டும்...பொதுவாக எனக்குத் தெரிந்து ஆண் தன்னிலும் 10,15 வயசு குறைவான பெண்களை கட்டி இருக்கிறார்கள் அதில் சிலர் சந்தோசமாய் இருக்கிறதை கண்டு இருக்கிறன்,சிலர் கஸ…

  2. 2011 முடிய போகிறது இந்த ஆண்டு எங்களின் வாழ்க்கையில் பல நினைவுகளை விட்டு செல்கின்றது ஒரு சிலருக்கு அது மிகவும் துன்பகரமான நினைவுகளாகவும் இருக்கலாம் இன்னும் சிலருக்கு மிகவும் மகிழ்ச்சியான நினைவுகளை தந்தும் செல்லலாம் 2011 இன் ஆரம்பத்தில் நீங்க சில திட்டம்களை தீட்டி இருப்பீர்கள்..அத்திட்டம்கள் நிறைவேற்ற கூடியதாய் இருந்ததா..? 2011 ஒரு முறை மீட்டல் செய்து பார்ப்போமா.... 1) 2011 இல் உங்களின் மனசில் நிக்கும் மகிழ்ச்சியான சம்பவம் எது? ஒரு நல்ல புதிய உறவு கிடைச்சது 2) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச துயரமான சம்பவம் எது ? நட்பின் துரோகம் 3) 2011 இல் உங்களின் மனசினை பாதிச்ச உள்ளூர் அரசியல் நிகழ்ச்சி(அது உங்களுக்கு சந்தோசத்தினை தந்ததா? …

  3. எங்கடை வாழ்கைல கனக்க தரம் விடு பேயள் (முட்டாள் ) மாதிரி வேசம் போடுவம் . அப்பிடி போடேக்கை மற்றவை எங்களை பாத்து நல்லாச் சந்தோசப்படுவினம் , உணமையில நாங்கள் விடு பேய் எண்டு . ஆனா எங்கடை நோக்கம் மற்றவையை சந்தோசப்படுத்திறது . அப்ப எங்களைப் பாத்து சிரிக்கற ஆக்கள் நினைப்பனம் தாங்கள் வெண்டிட்டம் எண்டு . கடைசீல பாத்தால் நாங்கள் தான் வெண்டிருப்பம் , சிரிச்சவை தோத்துப்போயிருப்பினம் . இவனுக்கு மண்டை கிண்டை களண்டு போச்சோ எண்டு உங்கடை வாயுக்கை புறுபுறுக்கறது எனக்கு கேக்குது கண்டியளோ :lol: . என்ன செரியாய் உங்களை குளப்பிறனே ?சரி சரி இதை முதல்லை படியுங்கோ .......................................................... ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிர…

  4. அகங்காரம் அகங்காரம் என்பது ஓர் தீயகுணம் .அதுவே பல தீயவிளைவுகளுக்கு காரணமும்கூட. அகங்காரத்தில் விழுந்தவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடையமுடியாது. அகங்காரம் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மற்றவர்களிடமிருந்து அன்பு , நட்பு, பாசம் போன்றவற்றைப் பெற இயலாது. அவர்களுக்கு நல்லவற்றை சொன்னாலும் கேட்கமாட்டார்கள். நல்லது சொன்னவர்களை அற்பமானவர்களாகக் கருதுவார்கள். முடிந்த வரை அகங்காரர்களிடமிருந்து தூரவிலகிச்செல்ல வேண்டும். அவர்கள் எதிர்பட்டால் நாமே அந்த வழியிலிருந்து விலகிச் செல்லவேண்டும். அகங்காரம் அகப்பகைவன்.அதனை வெளியே இருப்பவர்களால் வெல்ல முடியாது. அவரவர்களே வென்று தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தையவர்களுக்கு ஏதுனும் துன்பம் நேர்ந்தால் அவர்களை பற்றி மற்ற…

  5. ஒரு சமயம் இந்தியா தனது நீண்ட தூர ஏவுகணையை (Long Range Missile) வானில் செலுத்திப் பரிசோதித்த போது பாகிஸ்தான், இது பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று கூறியது. "எங்கள் தலைக்கு மேலே பறந்தபடி எங்கோ செல்லக்கூடிய ஏவுகணை பற்றி நாங்கள் ஏன் அச்சப்பட வேண்டும்" என்று பாகிஸ்தான் குறிப்பிட்டது. அந்த அளவில் இந்தியா நவம்பர் 15 ஆம் தேதி வானில் செலுத்தி சோதித்த அக்னி-4 ஏவுகணை பற்றி பாகிஸ்தான் கவலைப்படாது. ஆனால் நிச்சயம் சீனா கவலைப்படும். அக்னி-4 ஏவுகணை நன்றி:DRDO அக்னி-4 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளை இந்த ஏவுகணை கொண்டு தாக்க இயலும். இதன் முகப்…

  6. Started by கோமகன்,

    எமது மண்ணின் பண்பாட்டுச்சின்னங்களில் ஒன்று துலா . இந்தத் துலா என்பது ஒரு நீளமானதும், நேரானதுமான , ஒரு மரத் தண்டு ஆகும். இந்த மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும். ஆடுகால்கள் முன்பு பூவரசங்கதியால்களாலும் , பின்பு சீமந்தினாலும் உருவாக்கப்பட்டது . அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளிய…

    • 34 replies
    • 9.8k views
  7. அடையாளமாகும் ஆபரணங்கள் நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது. பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு ‘ நகை ‘ என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள்.அணி என்னும் சொல்லும் ‘அணிதல்’ மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பலப்பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும் பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது மிகையான நகையல்ல. சரி… இந…

  8. உங்களிடம் இதயம்.. உண்டா.. மனிதாபிமானம் உண்டா... அளவு கடந்த அன்பு உண்டா.. விரைந்து அல்லது மெதுவாக.. முடிவெடுக்கும் நபரா.. எது என்றாலும்.. ஆம் என்றால்.. தொடர்ந்து படியுங்கள்.. பதில் அளியுங்கள்... கூடவே பதிலுக்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்.. 1. நீங்கள் உயர்கல்வி கற்கும் வயதை அடைந்துள்ள நிலையில் உங்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் சம நேரத்தில் அளிக்கப்படுகிறது. நிபந்தனையாக ஒரு வாய்ப்பை மட்டுமே நீங்கள் தேர்வு செய்து பாவிக்க முடியும். நீங்கள் தவற விடும் மற்ற வாய்ப்பை வாழ்க்கையில் எப்போதுமே நீங்கள் அடைய முடியாது. அ: பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு. ஆ: திருமணம். இதில் நீங்கள் எதனை தெரிவு செய்வீகள்.. ஏன்..??! 2. உங்களிடம் மிகவும் காக்கப்பட வேண்டி…

    • 16 replies
    • 1.8k views
  9. ரகசியத்தைக் காப்பதில் ஆண்களை விட பெண்கள் படு மோசம் பெண்களால் ரகசியத்தை ரகசியமாக வைக்கவே முடியாது என்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதுக்கு ஆய்வு எங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் தெரிந்த விஷயத்திற்காகவும் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 3,000 பெண்கள் கலந்து கொண்டனர். அதில் 10ல் ஒரு பெண் தன்னால் ரகசியத்தை மனதில் வைக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் கூட அவர்களால் ரகசியத்தை காப்பாற்ற முடியதாம். ஆய்வில் கலந்து கொண்ட பெண்களில் 85 சதவீதம் பேருக்கு அடுத்தவர்களைப் பற்றிப் பொறணி பேசுவது என்றால் அலாதிப் பிரியமாம். 13 சதவீதம் பேருக்கு வேண…

    • 2 replies
    • 1.1k views
  10. Started by கோமகன்,

    இன்றைய நாள் எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாகும் . அதை உங்களிடம் பகிரலாம் என்று நினைக்கின்றேன். நான் வேலை செய்கின்ற தங்கு விடுதியில் (Hotel Mercure ) பலதரப்பட்ட உணவு ரசனைகளையும் , குணாம்சங்களையும் , உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கின்றேன் . ஒருசிலர் எனது கையாலேயே சாப்பிடவேண்டும் என்று அடம் பிடிப்பவர்களும் இருக்கின்றார்கள் . ஜோன் பிரான்சுவா (Johon François ) என்பவரும் அந்த ரகத்தைச் சேர்ந்தவரே . பிரான்ஸ்சின் வட மேற்குப்பகுதியான கப்பல் கட்டும் துறையில் பெயர்போன நகரான செயின் நாசர் (Saint nazer ) பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்த ஜோன் பிரான்சுவா . பிரான்ஸ் மின்சாரசபையில் (EDF ) பாரிஸ்சின் தென்மண்டல நிறைவேற்று இயக்குனராக இருக்கின்றார் . வேலை நிமித்தம் பாரிஸ்சுக்கு …

  11. Started by கோமகன்,

    இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடி…

  12. சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரின் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன். தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும் கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய “பழந்தமிழரின…

  13. 'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான். பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம் கண்ட குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம். முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான். அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்…

  14. தமிழர் வரலாறு கி.மு 14 பில்லியன் முதல் - கி.மு. 1 வரை///கி.பி. 1 முதல் - கி.பி. 1676 வரை 2010-12-12 05:43:40 தமிழரின் தொன்மையும் மேன்மையையும் அறிவது தமிழர்க்கு மட்டுமன்று, எல்லா மனிதருக்கும் ஒரு கண்ணோட்டக் கண்ணாடியாக விளங்கும் - உதவும். மொழியும் இனமும் இணைந்ததொரு பரிணாமபடப்பிடிப்பு, காலத்திரையில் தமிழனின் கால்பதிப்பு, தமிழன் விழுந்ததும் எழுந்ததும், இணைந்ததும் பிரிந்ததும், வாழ்ந்ததுமான வரலாற்றின் பகுப்புத் தொகுப்பு. கி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் மு…

  15. இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் குங்குமப்பொட்டு வைத் துக்கொள்வது மங்கள மானதாக கருதப்படுகிற து. அது அழகுத் தொடர் பானதும் கூட. மஞ்சளா ல் உருவாக்கப்பட்ட தூய் மையான குங்குமத் தை தான் வைத்துக்கொ ள்ள வேண்டும். குங்குமத் தை கழுத்தில் உள்ள கண் டம், புருவத்தின் இடைப் பகுதி, நெற்றியி ன் உச்சி போன்ற இடங்களில் வைத்துக் கொள்வார்கள். அப்படி பொட் டு வைப்பதற்கு பல காரண ங்கள் உள்ளன. வசியத்தில் இருந்து தப்பலாம்: வசியம் என்பது ஒரு கலை. இந்நாளில் மெஸ்மரிசம், ஹிப் னாடிசம், போன்றவை வழக்கத் தில் உள்ளன. மற்றவர்களை வசியப்படுத்தும் போது தம் பார்வை ஆற்றலை செலுத்த கண்டம், புருவத்தின் இடைப் பகுதி, வகிட்டு நுனி, கழுத்தின் பின்பகுதி ஆகிய இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். கழுத்தின் பின்பகுதி …

  16. திருமணமான புதிதில் இளம் தம்பதிகள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும். இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள். பெரும்பாலும், `நான் கோபமாக இல்லை’ என்று பெண் சொன்னால், கண்டிப்பாக `நான் கோபமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம். `நான் வருந்துகிறேன்’ என்று அவள் கணவனிடம் சொன்னால், `நீயும் வருந்து’ என்று பொருள். `நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று மனைவி கேட்டால், கணவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்…

  17. விசரன் என்னை மன்னிப்பார் என்கின்ற நம்பிக்கையில் , எனக்குப் பிடித்த அவரின் ஆக்கத்தை உங்களுடன் பகிர்கின்றேன் . ஆனால் , இதைப் பிரதேசவாதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதைத் தயவு செய்து பார்க வேண்டாம் . எமது மக்களின் ஊத்தைகளை எள்ளலுடன் விபரித்துள்ளார் . இனி.................................................................... ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் வாழ்ந்திருந்த காலமது. என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். நான் மட்டுமே மட்டக்களப்பைச் சேர்ந்தவன். மட்டக்களப்பு என்பதாலேயே சில நக்கல் கதைகள் என்னை நோக்கி வரும். அதில் நக்கல், பகடி இருந்ததே அன்றி விஷம் பூசிய வார்த்தைகள் இருந்ததில்லை. அப்படி நான் உணர்ந்ததுமில்லை. டேய் உன்னூர்…

  18. Started by அபராஜிதன்,

    'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு! இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா? அப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்! சின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்! அப்பாக்களின் அட்வைஸ்களை சிறுவயது முதல் கேட்டுக் கொண்டிருந்ததாலோ என்னவோ அப்பா எதையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை,…

    • 8 replies
    • 1.8k views
  19. 11.11.11 என்ற நாளின் சிறப்புப் பற்றி விஞ்ஞான ரீதியாக என்னவெல்லாம் பேசலாம், கதை தயாரிக்கலாம் என்றெல்லாம் டிவி சேனல்கள் இதுவரையில் யோசிக்கவில்லை.. அன்றைய தினத்தில் அவதரிக்கப் போகும் அல்லது கட்டாயமாக வெளிக்கொணரப்பட இருக்கும் ஜூனியர் ஐஸ்வர்யாராய் அல்லது ஜூனியர் அபிஷேக்பச்சன் பற்றித்தான் அவர்களுக்குக் கவலை..! தடுக்கி விழுந்த செய்தி வந்தாலே சுடு செய்தியாகப் போட்டு இந்தியாவையே பயமுறுத்தும் செய்தி ஸ்தாபனங்கள், இந்த நல்ல நாளை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன..? குண்டி கழுவ தண்ணீர் இல்லாமல் அலையும் இந்தியனை பற்றிக் கவலைப்படாத சமூகத்தில் இதுவெல்லாம் சகஜம்தானே..! மும்பை செவன்ஹில்ஸ் மருத்துவமனையின் 5-வது மாடியில் நாளை நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிற…

  20. Started by குட்டி,

    Toughest Place to be a Bus Driver Documentary about a London Bus Driver who goes to Manila in the Philippines to experience what it is like to live and work as a Jeepney driver in Manila.

  21. மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் மொத்த பிறப்பிடமான உலகத்தின் வெற்றிகரமான, தலைசிறந்த இந்திய தொழில் முனைவோர் கிரன்மஜும்தர் ஷா ஆவார். இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் 1953 ஆம் வருடம் பெங்களூரில் மார்ச் மாதம் 23ந்தேதி பிறந்தார் இவர் தனது பள்ளி படிப்பை பிஷப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்1968ம் வருடம் முடித்தார். பிறகு மருத்துவ படிப்பை படிக்க நினைத்தார்.ஏனோ அவர் கவனம் உயிரியல் பாடத்தில் சென்று பி.எஸ்.சி ஜுவாலஜி ஹானர்ஸ் படிப்பை மவுண்ட் காராமல் கல்லூரியில் பெங்களூரு பல்கலைகழகத்தில் 1973ம் வருடம் முடித்தார். பிறகு தனது பட்டமேற்படிப்பை மால்டிங் மற்றும் புரூவிங் கல்வியை பல்லாரத் கல்லூரி மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் 1975ம் ஆண்டு முடித்தார்.மெல்போனி…

  22. ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும். பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் அறிந்து கொள்ள வேண்டும். ஆண்களிடம் பெண்கள் பொதுவாக எதிர்பார்ப்பது என்ன பெண்கள் ஒரு விசயம் குறித்து ஆண்களிடம் பேசும் போது அதை தெளிவாகவும் கவனமாகவும் கேக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவ்வாறு கேட்டு…

  23. முக்கியமாக லண்டன் சிவன் கோவிலில் நடப்பவைகள்பற்றி எழுதவேண்டும் என்று ஜோசித்துக்கொண்டு இருந்தேன்.... நேரமும் இல்லை கொஞ்சம் பயமாகவும்தான் உள்ளது... எவனாவது இருட்டு அடி கொடுக்கிறானோ தெரியவில்லை ஆனாலும் பயந்தால் ஒன்றுமே பண்ண முடியாது... சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்..... கன காலமாக சிவன் கோவில் சின்ன இடத்தில் இருந்து பெரிய கோவிலாக கட்டி அமைத்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ... கோவில் கட்டும்போது அய்யர் தேவராம் பாடுகிறது மாதிரி ஓவ்வொரு நாளும் பாட மக்களால் உருவாக்கப்பட்டதுதான் சிவன் கோவில்... பணம் இருந்த ஒரு சிலர் கூடுதலாக காசு போட்டிருக்கலாம்... ஒரு சிலர் தனி தனியாக உள் வீதி எடுத்து ஓவ்வொரு பக்கமாக கட்டினார்கள்.... கோவில் கட்டி கும்பாவிசேகம் நடந்தது இந்த வருட…

  24. 'குடி குடியைக் கெடுக்கும்': ஸ்காட்லாந்தின் புதிய முயற்சி ஸ்காட்லாந்தில், மதுபாவனையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள், உடல்நலக் குறைபாடு பிரச்சனைகள் மற்றும் இந்தக் காரணங்களால் வேலைக்குச் செல்லாது வீட்டில் இருப்பவர்கள்- இப்படியான விடயங்களுக்காக ஆண்டுக்கு ஐந்தரை பில்லியன் டொலர்கள் அதாவது 550 கோடி டொலர்களுக்கும் அதிகளவில் அரச பணத்தில் செலவிடப்படுவதாக அரசு கூறுகின்றது. அங்கு 20 இல் ஒரு மரணம் மதுபாவனையுடன் தொடர்புடையதாக உள்ளது. இதனால் ஸ்கொட்லாந்து குடிப்பழக்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தையே நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. மதுபானத்தின் விலைக்கும் அதன் பாவனைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிவதாக ஸ்காட்லாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நிக்கோல…

    • 0 replies
    • 951 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.