சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2253 topics in this forum
-
நான் காணும் தொ.ப. ஒருவரது சான்றாண்மையால் ஈர்க்கப்பட்டோர் அவரைத் தத்தமது பார்வையில் காண முயல்வர். அச்சான்றோரின் அடிப்படைத் தத்துவங்கள் எல்லோருக்கும் பொதுவாக அமையினும், பார்வைகள் சற்றே விலகி வேறுபடலாம். அவ்விலகலும் வேறுபாடும் அச்சான்றாண்மைக்கு மேலும் அணி சேர்ப்பதாகும். நான் காணும் அறிஞர் தொ.பரமசிவன் அறிவுலகில் தமக்கென தடம் பதித்தவர். அவரை அறியாதார்க்கு சில அறிமுகச் சொற்கள். திருநெல்வேலிப் பகுதியான பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்து, பேராசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே வாழ்பவர். மானுட வாசிப்பில் துறை போகியவர். சமூகப் பிரச்சனைகளில் தமது கருத்துக்களை வெளியிடுவதில் எவ்விதத் தயக்கமுமின்றி எழுதுகோலை ஆயுதமாய்க் கொண்ட சமூகப் போராளி. எடுத்து…
-
- 0 replies
- 1.8k views
- 1 follower
-
-
நாள்காட்டியில் ஆரம்பித்து இணையத்தளங்கள் வரை, ஜோதிடம் என்பது எதாவொரு ரூபத்தில் நம்மிடையே வலம் வந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த மண்ணுலகை சுற்றிக் கொண்டிருக்கும் நவக்கிரகங்களை, அவை எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக் கணித்து, அதற்குரிய சாதக பாதகங்களை கணக்கிட்டு, அதனால், மக்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும். உடல் ரீதியாக வேதனை வந்தால், மருத்துவரைப் பார்ப்பதும், மன ரீதியாக சோதனை வந்தால், ஜோதிடரைப் பார்ப்பதும்தான் மக்களின் இயல்பு. ஆனால், எந்த ஒரு ஜோதிடனும், நடந்தவற்றை 99% மிகச் சரியாக கூறும் அளவுக்கு, நடக்கப் போவதை துல்லியமாக கூறுவதில்லை. அது மிகவும் கடினம். ஏனென்றால், படைத்த பிரம்மாவை தவிர, வேறு யாராலும் நமது எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்…
-
- 0 replies
- 3.8k views
-
-
முகப்புத்தகத்தில் முகம் செய் …. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தேவ அபிரா 04 நவம்பர் 2012 இணையம் தகவற்தொழில் நுட்ப உலகில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மனிதர்களின் தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இணையம் மனிதர்களின் பௌதீக அசைவியக்கத்தை(physical movement) தூண்டாமல் மெய்நிகர் உலகில் (virtual world) அவர்களை இருந்தஇரையில் இயங்கத்துண்டுகிறது. இதற்குக் காரணமாக இணையத்தில் வளர்ந்து நிற்கும் சமூக ஊடக வலையமைப்புக்கள் (social media networks) இருக்கின்றன. இச் சமூக வலைத் தளங்கள் தனிமனித நடத்தைகளிலும் சமூகத்திலும் அந்தச்சமூகத்தின் அரசியலிலும் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நின்று ஆராய வேண்டிய தேவ…
-
- 0 replies
- 878 views
-
-
ஈழத்து தமிழர்களின் அவலங்கள் உலகம் முழுவதும் கொண்டு செல்லப்படவேண்டும். இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஈழத்து தமிழர்களின் பிரச்சனைகள் பல நிகழ்ச்சி கையாளப்படுகின்றன. பல்வேறு நிகழ்ச்சிகளில் அடுத்தது யார் பிரவுதேவா தடன நிகழ்ச்சி.-இலங்கையைச் சேர்ந்தவர் பங்கு பற்றியது விசுவின் அரட்டையரங்கம்-இலங்கை பெண் பேசியது. கோலங்கள் தொடர் நாடகத்தில் 09.09.09 அன்று நடைபெற்ற காட்சிக் கதை. இது ஒரு உதாரணம். பற்பல சந்தர்ப்பங்களில் ஈழ விடுதலைப்போராட்டம் பற்றிய கருத்துக்களை ஆசிரியர் கதையின் ஊடாக நகர்த்துகின்றார். இவை தொலைக்காட்சி உடன் மட்டும் நின்றுவிடக்கூடாது . விடியல் பிறக்கவேண்டும்.
-
- 0 replies
- 860 views
-
-
பெண்கள் குடிப்பதை இயல்பாக்கம் செய்வது இன்றைய நகரமயமாக்கப்பட்ட சூழலில் பெண்கள் மட்டுமல்ல இளம்பெண்கள், சிறுமிகள் குடிப்பது, புகைப்பது, போதை மருந்தை பயன்படுத்துவது பரவலாகி வருகிறது. அங்கங்கே குடித்துவிட்டு சாலையை மறித்து தகராறு பண்ணும், சாலை விபத்தை ஏற்படுத்தும், போதை மருந்தை பயன்படுத்தி அதற்கு அடிமையாகி தற்கொலை முயற்சி பண்ணும் பெண்களைப் பற்றின செய்திகளைப் பார்க்கிறோம். அனேகமாக எல்லா கார்ப்பரேட் ஆசிரமங்களுக்குள்ளும் போதை மருந்து பழக்கத்தில் சிக்கிய ஏகப்பட்ட பெண்கள் இருக்கிறார்கள். இச்செய்தியும் நமக்குத் தெரியும். சாலை முனையில் நின்று கப்பு கப்பென்று சிகரெட்டை ஊதித்தள்ளும் சிறுமிகளை நான் பெங்களூரில் பரவலாகப் பார்க…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
சிந்திக்க தூண்டும் பகிர்வு . ஆனாலும் தெய்வமாக போற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
-
- 0 replies
- 554 views
-
-
என்னிடம் வரும் சில ஆண்கள்,''எனக்கும் என் மனைவிக்கும் உள்ள கருத்துவேறுபாடுதான் செக்ஸ் இன்பத்துக்குத் தடையாக இருக்கிறது. இதற்கு கவுன்சலிங் தாருங்கள்" என்பார்கள். இப்படி வந்தவர்களில் ஒருவர் கேட்ட கேள்வி, 'இந்த பொம்பளைங்களைப் புரிஞ்சுக்கவே முடியாதா?'என்பதுதான்! கிங் ஆர்தர் என்கிற இங்கிலாந்து மன்னரிடம் டேர்னே வேத்திலைன் என்கிற வீரன் ஒரு கேள்வி கேட்டான். 'பொதுவாக, எல்லாப் பெண்களும் ஆண்களிடம் என்னதான் எதிர்பார்க்கிறார்கள்?'இதற்குச் சரியான விடையைச் சொல்ல கிங் ஆர்த ருக்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்தான் டேர்னே. 'அப்படிச் சரியான பதிலைச் சொல்லவில்லை எனில், என்னிடம் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும்'என்றும் கேட்டுக்கொண்டான். நாட்டில் இருக்கும் ஞானிகள், பெரியவர்க…
-
- 0 replies
- 2.2k views
-
-
2021 புத்தாண்டு: சமூக இடைவெளியில் கழிந்த 2020 - தொடுவதால் ஏற்படும் நன்மை என்ன? பட மூலாதாரம், GETTY IMAGES நீங்கள் உங்கள் அன்புக்குரியவரை கட்டி அணைப்பதையோ, முத்தம் கொடுப்பதையோ மிஸ் செய்கிறீர்களா? உங்கள் அலுவலகத்தில் சக பணியாளர்களுக்கு கை கொடுப்பதை மிஸ் செய்கிறீர்களா? இந்த 2020ஆம் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு 'சமூக இடைவெளி' ஆண்டாக அமைந்திருக்கும். அதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட ஆண்டின் முக்கால் பகுதி பொது முடக்க கட்டுப்பாடுகளுடனேயே இருந்தது. இந்நிலையில் அன்புக்குரியவர்களை நேரில் சந்திப்பது, பேசுவது, அதாவது இந்த கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு முந்தைய காலத்தில் இருந்ததை போல, ஒருவரோடு ஒருவர் இண…
-
- 0 replies
- 455 views
-
-
சிலாபம் திண்ணனூரான் 'மனிதன் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் ஆணை. உழைப்பால் தான் உயரமுடியும். உழைப்பில் ஏற்றத்ததாழ்வுகள் இருக்கலாம். படிகளின் ஏறி இறங்குவதுப் போல ஒன்றில் ஈடுபட்டால் தானே உழைக்க முடியும். மனிதனால் முடியாதது எதுவுமே இல்லை.' இவ்வாறு பாம்புகளை சீராட்டி வளர்த்து அதன் மூலமாக உழைக்கும் முனியாண்டி சுனில் கூறுகிறார். முனியாண்டி சுனிலை கொம்பனி வீதி கங்காராம ஏரிக்கறையில் கண்டோம். அவரைக் கடந்து செல்லும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை 'ஹலோ சேர் ஸ்நேக்' என பாம்புகளை காட்டி அழைத்தார். சிரித்துக் கொண்டே உல்லாசப் பயணிகள் அவரைக் கடந்துச் சென்றனர். இவரின் பரம்பரையினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ஆனால் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியாது எ…
-
- 0 replies
- 773 views
-
-
காதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "அவர் அடிக்கடி பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு வருவார். சில தடவை என்னிடம் வருவார் மற்றும் சில தடவை மற்ற பெண்களிடம் செல்வார்…" "ஆனால், படிப்படியாக என்னிடம் வருவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார். அவருக்கும் எனக்குமிடையிலான சிறப்பான…
-
- 0 replies
- 1.4k views
-
-
"ஆசை [desire] இன்றி சாதனை ஏது?" ஆசை இன்றி சாதனை ஏது சொல்லுங்கள்! ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசை கொண்டால்த் தான், வெற்றி அடைய முடியும். பொதுவாகவே ஆசை என்பது ஒவ்வொரு உயிரோடும் ஒன்றிய ஒன்று. நல்ல வழியில் ஒன்றின் மேல் ஆசைப்பட்டு அதை அடைவது என்பதாகும். ஆனால் பேராசை [greed, greediness] என்பது தீயவழியில் சென்று தீமையை அடைவது. இந்த தீமை, தீயவழி [இது] பெரும்பாலும் மனிதனையே குறுக்கும். அது மட்டும் அல்ல ஒரு மனிதன் பேராசையை அவனுல் ஏற்றுக்கொண்டானால் அவனுடைய எண்ணம் முற்றிலும் மாறிவிடும். அதாவது பேராசை வந்தால் மனம் குரங்காய் மாறிவிடும், ஆபத்துகள் தேடிவரும். தொழிலில் நாம் ஒரு நிலைக்கு வந்துவிட்டோம…
-
- 0 replies
- 627 views
-
-
தத்துவமும் அறிவியலும்: - ஈழத்து நிலவன் - [Friday 2016-03-18 22:00] ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே. அவர்களுக்குள் ப…
-
- 0 replies
- 990 views
-
-
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. உங்கள் கைகளில் ரத்தம் படிந்த கத்தியும், அரிவாளும் இருப்பதை அறிந்துகொண்டே, இந்த நொடி நான் உங்கள் முன் நிற்கிறேன். எந்தவித சலனமும் இல்லாமல் உங்களை உற்றுப் பார்க்கிறேன். சில கேள்விகளை முன்வைக்கிறேன். 'நான்' மாலினி ஜீவரத்தினம். இயக்குநர், மனித உரிமை செயற்பாட்டாளர். ஒரு ஆண் பெண்ணை நேசிப்பதைப்போல், ஒரு பெண்ணாய் சக பெண்ணை காதலிக்கும் ஒரு பாலின ஈர்ப்பாளர். நானும், நாமும் நான் என்பது சுயநலமான சொல் என்றே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'நான்' என்பது சுயநலமான சொல் அல்ல. மிகவும் சுய மரியாதையான சொல். …
-
- 0 replies
- 634 views
-
-
சுழியோடி மீன் தேடும் கடலவன் அந்தக் கோவில் விசாலமானது. அதன் அருகில் அதற்கேயுரித்தான கேணி அமைந்திருந்தது. அது தனது சுற்றுப்பிரகாரங் களைப் படிக்கட்டுக்களைக் கொண்டு எல்லைப் படுத்தியிருப்பதைப்போலவே தனது குறைந்த ஆழத்தையும் நேர்த்தியான தரையமைப்பால் சீராகக் கொண்டிருக்கின்றது. சுற்றியமைந்தி ருக்கும் உயர்ந்த படிக்கட்டில் நின்று பார்க்கையில் சலனமற்ற அந்த நீர் நிலை கொண்டிருக்கும் அமைதியான அழகு மனதை மௌனிக்கச் செய்யும். இவ்வளவையும் தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தது பிரமபுரம், வெங்குரு, தோனிபுரம், வேணுபுரம், பூந்தாரம், சிரபுரம், புறவம், சண்பை, காழி, கழுமலம், கொச்சை…
-
- 0 replies
- 466 views
-
-
'90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்'- ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க '90 சதவிகித பெண்கள் தங்கள் உடலை வெறுக்கின்றனர்', உடல் மீதான பெண்களின் சுயவெறுப்புக்கு அவர்களுடைய தாயின் பொறுப்பும் முக்கியமானது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES "13 வயதாக இருந்தபோது என்னை பார்ப்பவர்கள் வயதுக்கு மீறிய வளர்ச்சி என்று சொல்வார்கள். அப்போது 5.6 அடி உயரம் இருந்த என்னைப் பற்ற…
-
- 0 replies
- 755 views
-
-
ஆரியமாயை " நாம் இந்து அல்ல " அறிஞர் அண்ணா நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச்சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தைய்யலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும். இந்தச் சேதியைக் கேட்டால் உலக நாகரீக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வாரே. இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நாம் தலையில் தூக்கிப்போட்டுக்கொ…
-
- 0 replies
- 1.6k views
-
-
சாதிய விடுதலைக்கான முன்நிபந்தனை? மீராபாரதி லண்டனில் 2008 ஆண்டு பிப்ரவரி மாதம் 16 - 17 தேதிகளில் நடைபெறவுள்ள இரண்டாவது தலித் மாநாட்டிற்கான இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. பொருளாதார காரணங்களினால் மாநாட்டில் நேரடியான பங்குபெற முடியாமையினால் இக்கட்டுரை மாநாட்டிற்கும் மற்றும் பிற சஞ்சிகைகளுக்கும் அனுப்பப்படுகின்றது. சுமூக விடுதலைப் போராட்டமோ அல்லது தேசிய விடுதலைப் போராட்டமோ சாதியின் பெயரால் அடக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையிலும் விடுதலையைப் பெற்றுத்தரப் போவதில்லை. இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆயுதங்தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டம் கடைசிவரை சாதி விடுதலையை முன்னெடுத்து விடுவிக்கும் என்பதற்கான எந்த சாத்தியப்பாடுகளும் இல்லை. தேசிய விடுதலையையே பெற்றுத்தராது விடப்போகும்…
-
- 0 replies
- 707 views
-
-
நவீன சாதனங்களின் வருகையால் வாசிப்புப் பழக்கம் அருகி வருகிறது - பழைய புத்தக நிலைய உரிமையாளர் கோவை கணேஷ் (சிலாபம் திண்ணனூரான்) “முயற்சியும் துணிவும் உழைப்பும் தான் ஒரு மனிதனுக்கு எப்போதும் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. சிறு வயது முதல் புத்தக வாசிப்பில் பெரும் ஈடுபாடுகளைக் கொண்டிருந்தேன். இதன் வளர்ச்சி எனக்குள் வேர்விட்டு மரமாகி படர்ந்து நல்ல கனிகளைக் கொடுத்தது. அதன் அறுவடையாக என் இருபத்தி மூன்றாவது வயதில் கோவை புத்தக நிலையம் என்ற நாமத்தில் பழைய இலக்கிய புத்தகங்களை விற்பனை செய்யும் வியாபாரத்தை ஆரம்பித்தேன். விளையாட்டுப் பருவ க…
-
- 0 replies
- 476 views
-
-
பண்பாட்டு உடை அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்! நலமா? ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் ஆடை என்பது அதன் தனி அடையாளமாக உள்ளதை நாம் அறிவோம். மரப்பட்டைகளும் – தழைகளும் கட்டிக் கொண்டிருந்த காலம் முதல் ஜீன்ஸ், சல்வார் கமீஸ் போடும் காலம் வரையும்! நம் முன்னோர்கள், இடுப்பில் ஒரு 4 முழு வேட்டியும், தோளில் துண்டும் அணிந்தவர்கள். அப்புறம் 8 முழு வேட்டி – உடன் சட்டை. என் பாட்டி, முப்பாட்டிகள் ரவிக்கை அணிந்திருக்கவில்லை. அதிகபட்சம் ஒற்றைப் பிரியில் சேலை. நவீன தொழில் நுட்பமும், பஞ்சாலைகள் மற்றும் செயற்கை நூல் இழைகளின் வரவால்- ஆடைகளின் உபயோகமும், வடிவமும், பயன்பாடுகளும் மாறிவிட்டன. இச்சூழலில் எந்த ஒரு இனத்திற்காகவென்றும் தனித்த ஆடை அடையாளம் சாத்தியமா? உதாரணமாக, தமிழன் என்றால் வேட்டி,…
-
- 0 replies
- 1k views
-
-
சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்கள் சார்ந்த நோட்டிபிகேஷனை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு-ஐந்து தினங்களாக, "Ms XYZ mentioned you in their tweet" என்பது போன்ற நோட்டிபிகேஷன் எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன். என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் #MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் #MeToo என்ற ஹாஷ்டேக்கை பயன்படுத்தி வெளிக்கொணரும் நிகழ்வு கடந்த ஒருவருடத்திற்கு முன்பு ஹாலிவுட்டில் தொடங்கி…
-
- 0 replies
- 668 views
-
-
-
- 0 replies
- 848 views
-
-
விழிப்புலனற்றவர்களுக்கு துணையாக இருப்போம்: சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் இன்று! உலகிலே உயிர் பெற்ற அனைத்து ஜீவராசிகளின் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம். அதேவேளை கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடப்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும். உலக வெள்ளை 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புலனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக ம…
-
- 0 replies
- 3k views
-
-
வெற்றியடைய 10 சுலபமான வழிகள் வெற்றியடைய 10 சுலபமான வழிகள் !!! நேரத்தை நன்றாகத் திட்டமிட்டுச் செலவு செய்ய, அப்படிச் செய்தபின் அதற்கான தக்க பலனையும் அடைய உளவியலாளர்கள் பரிந்துரைக்கின்ற 10 முத்தான வழிகள் : 1.ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வதை நிறுத்துங்கள்: சமீப காலங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொல்தான் இந்த மல்டிடாஸ்கிங் என்பது அடிப்படையில், அறிவியல்ரீதியாகப் பார்த்தால் மல்டிடாஸ்கிங் என்பது ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்குத் தாவுவது/ மாறுவது என்று பொருள்படும். நம் மூளையால், ஒரே நேரத்தில் இரண்டு/மூன்று கடினமான செயல்களில் கவனம் செலுத்த முடியாது. ஆக, மல்டிடாஸ்கிங் செய்வது பயனற்றது மற்றும் அயர்ச்சியைத் தரக்கூடியது. …
-
- 0 replies
- 1k views
-
-
இதுக்கு போயி அலட்டிக்கலாமா... -------------------------------------------------------------------------------- cரி உலகில் மிகப்புனிதமானது எது என்று கேட்டால், தாய்மை என்று பொதுவாக சொல்வார்கள். ஒரு சிலர், நட்புதான் உலகிலேயே மிகவும் உன்னதமானது என்று சொல்வார்கள். இளமை ஊஞ்சாலுடும், வாலிப முறுக்கு சிலிர்த்து புடைத்து நிற்கும் நம் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கேட்டு பாருங்கள். காதல் தெய்வீகமானது என்பார்கள். நட்பு காதலாகி, காதல் இருமனம் இணையும் திருமணமாகி, இரண்டு மூன்றாகும் தாய்மையும் வந்து சேரும். வாழ்க்கையின் உன்னதமான அனுபவம், மக்கட்பேறுதான் என்று குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் வரை சலிக்காமல்சொல்வார்கள்இரண்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
பேசுடா..பேசு...உன்னை மாதிரி லட்ச்சம் இளைஞ்ஞர்கள் வரனும்...ஊத்தை அடைஞ்சு போய்க் கிடக்கும் இந்த சமூகத்தை,தமிழ் நாட்டுச் சமூகத்தை வெளுக்கணும்.... http://www.youtube.com/watch?v=qkHdmLRGQk8
-
- 0 replies
- 661 views
-