Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? மூடநம்பிக்கை -- கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி? இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்! எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு! வாழ்க்கையில் ஏற்படும் ஆசையும், அச்சமுமே ஜோதிடத்திற்குக் காரணம். ஜோதிடம் அறிவியல் பூர்வமானது என இந்து மதத்தினர் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் ஜோதிடம் அறிவியல் போலவே இருக்கும். ஆனால் அது அறிவியல் இல்லை. வள்ளுவர் சொன்னார், கயவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனெனில் அவர்களும் மனிதர்களைப் போலவே இருக்கிறார்கள் என்றும் அதைப் போலத்தான் இந்த ஜோதிடமும்.ஜோதிடத்தைப் பலரும் நம்புகிறார்கள் என்றால் …

    • 0 replies
    • 11.8k views
  2. ஈழத்தமிழர்களின் சமூக உளவியல் மற்றும் சமூக உறவு என்பது ஸ்திரமற்ற ஒன்று என்பது மிக வெளிப்படையான ஒரு விசயம். ஈழத்தமிழர் அல்லாத பிற சமூகங்களும் இதை செவ்வனே விளங்கி கொள்ள கூடிய ஸ்திரமற்ற ஒரு நிலை நீண்ட வரலாறாக உள்ளது. கடந்த முப்பதாண்டுகளில் சில மாற்றங்கள் தென்படுகின்றன. சமூக உறவில் நெருக்கம் ஏற்படுவது காணக்கூடியவாறு உள்ளது. இவ்வாறான மாற்றம் என்பதுக்கு முற்று முழுதாக வித்திடுவது புற நிலைக்காரணிகள் தவிர அகநிலை மாற்றங்கள் என்று சொல்வதற்கில்லை. புற நிலைத் தாக்கங்கள் அதிகப்படியாக உள்ளதாலும் அதன் கால நீட்சியாலும் அக நிலையில் ஓரளவு மாற்றங்கள் இயல்பாக தோன்றக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றது. இருந்தும் அவ்வாறன எதிர்பார்ப்புகள் பலவீனமாக நகர்ந்து கொண்டுள்ளது. பொதுவ…

    • 2 replies
    • 1.4k views
  3. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், இண்டைக்கு ஒரு சின்னக் கலந்துரையாடல். அது என்ன எண்டால் புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை என்பது பற்றினது. இதுபற்றி கொஞ்சக்காலமா கதைக்கவேண்டும் எண்டு நினைச்சு இருந்தன். இண்டைக்குத்தான் சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கிது. இப்ப பாருங்கோ வெள்ளைக்காரன் புதுமை எண்டு சொல்லிக்கொண்டு என்னத்த செய்தாலும் நம்மட ஆக்கள் வாயமூடிக்கொண்டு ஆஹா ஓஹோ எண்டு சொல்லி பாராட்டுவீனம். தமிழ்நாட்டு தமிழன் சின்னத்திரை, பெரியதிரை எண்டு சொல்லி எப்படியான கூத்துக்கள் ஆடினாலும் அதையும் நம்மட ஆக்கள் ஆஹா ஓஹோ எண்டு சொல்லிப் பாராட்டுவீனம். ஏன்.. மலேசியா, சிங்கப்பூரில இருக்கிற அங்கத்தைய தமிழ் ஆக்கள் பொழு…

  4. யாழ்கள உறவுகளே..... வணக்கம். இன்றைக்கு எனக்கு மனசில பட்ட விசயம் ஒன்றைப்பற்றி கருத்துகேட்கலாம் எண்டு நினைக்கிறன். என்னோட தோழர்களும் சரி.... தோழிகளும் சரி.... கலியாணத்துக்கு முதல் எதிர்கால கணவனைப்பற்றியோ இல்லை மனைவியைப் பற்றியோ கதைக்கும் போது ஒரு எதிர்பார்ப்பு, பாசம், காதல் எல்லாம் சேர்ந்த ஒரு கலவையா உணர்களை வெளிப்படுத்துவினம். ஆனா கலியாணம் கட்டி ஒரு இரண்டு அல்லது மூன்று வருஷம் ஆன பிறகு ஏன்டா கட்டினம்.... நிம்மதி எல்லாம் போச்சு எண்டு கதைக்க கேட்டிருக்கிறேன். சிலர் சுதந்திரம் போச்சு எண்டு சொல்லுவினம்..... சிலரோ எண்ட தலையில கட்டிப்போட்டினம்.... என்னத்தை கண்டன் எண்டு நொந்து கொள்ளுவினம். இந்த பிரச்சினை எதனால் ஏற்படுகிறது.... அல்லது இது ஒரு பிரச்சினை தானா? என்னைப…

    • 30 replies
    • 7k views
  5. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், திரும்பவும் ஒரு சின்னக் கலந்துரையாடல். உங்கட எண்ணங்களச் சொல்லுங்கோ. இந்தக்காலத்தில ஒருவரை காதலிக்கிறது எண்டால் அது லேசுப்பட்ட வேலை இல்லை எண்டு காதலித்து பார்த்தவர்களுக்கு தெரியும். முதலில ஒருவரைக் காதலித்து அவரிடம் ஐ லவ் யூ எண்டு சொல்ல முன்னம்... வேறு பலரிடம் அனுமதிகள் பெறவேண்டி இருக்கிது. உங்களுக்கு காதல் அனுபவம் இருந்தால் நீங்கள் ஒருவரை காதலித்தபோது அதை யார் யாருக்கு எல்லாம் சொல்லி இருந்தீங்கள் (அதாவது உங்கட காதல் சமூக அங்கீகாரம் பெறப்படுவதற்கு யார் யார் காலில் விழுந்தீங்கள்.. ) எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ. இந்தக்காலத்தில எங்கட காதல் வெற்றி பெறுவதற்கு நாம காதலிப்பவரிடம் போய் ஐ லவ் யூ எண்டு சொல்லிறத விட (செருப்படி விழுந்தால…

    • 57 replies
    • 10.3k views
  6. அந்தக் காலத்துப் பெண்கள், எத்தனையோ சிக்கல்களுக்கு மத்தியிலும் ஓரளவு நிம்மதியாக வாழ்ந்தார்கள். ஆனால் ன்றைய படித்த, சம்பாதிக்கிற, அனுசரணையான கணவன் இருக்கிற பெண்களால் சந்தோஷமாகக் குடும்பம் நடத்த முடிவதில்லையே... ஏன்? நான் காரணம்தான் சொல்கிறேன். அது சரியா தவறா என்று பேச விரும்பவில்லை. ஒரு பெண் தன் கணவனை விரும்பும் பட்சத்தில், நேசிக்கும் பட்சத்தில், அதிகக் கேள்விகள் இன்றி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவனைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யாதபட்சத்தில் அவளால் நிம்மதியாக வாழ்ந்து முடிக்க முடியும். ஆனால், அவனைப் புரிந்துகொள்ள முயற்சி தொடங்கும் மறுகணமே அவள் தன் நிம்மதியை இழந்து விடுகிறாள். அதிக சிக்கலுக்கு உள்ளாகிறாள். அதிக சங்கடப்படுகிறாள். என்னதான் கணவன் - மனைவி ஈர…

  7. ஆண்கள் பார்வையில் என்றும் பெண்கள் - ராமச்சந்திரன் உஷா காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் மன ஓட்டங்களும், வெளி தோற்றமும் முற்றிலும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. நேற்று எல்லோராலும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் இன்று தவறு என்று நிரூபிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு காலம் ஆகியும் மாறாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான். நூறு, ஆயிர வருட பழங்கால சிற்பத்தைப் பாருங்கள். அது பெண்ணோ, வழிபடும் தெய்வமோ, கண்ணகி போன்ற கற்புக்கரசியோ அல்லது இக்காலத்திய பெண் சித்திரமோ எல்லாமே இடை சிறுத்து, மேலாடை பேருக்கு சுற்றிய பெருத்த மார்பகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கும். சிலைகளை உருவாகியவனோ, சித்திரக்காரனோ சரி எத்தனை நூற்றாண்டு ஆகியும் அவன் கற்பனை மாறவேயில்லை. அத்தனை பெண் சிற்பங்களும் சிறுத்…

  8. பொய்யைக் கண்டறிய சில வழிகள் ! ( தமிழ் ஓசை - களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை) பொய் பேசுபவர்களோடு பழகவும், இணைந்து பணியாற்றவும், வாழவும் வேண்டிய சூழல் எல்லோருக்குமே நேரிடுகிறது. பொய் பேசுபவர்களிடம் அகப்பட்டு பணத்தையும், பொருளையும், நிம்மதியையும் இழந்து திரியும் மக்களைக் குறித்த செய்திகள் நாளேடுகளில் தினமும் இடம் பெறுகின்றன. பொய் மெய்யுடன் கலந்து மெய்யும் பொய்யும் செம்புலப் பெயல் நீர் போல இன்று மனித பேரணியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பேசுவது பொய் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் எப்படி இருக்கும் ? அதொன்றும் பெரிய வித்தையில்லை என்கிறார் பல ஆண்டுகாலம் அமெரிக்க காவல் துறையில் பணியாற்றிய நியூபெர்ரி என்பவர். ஒருவர் பேசுவது பொய்யா இல்லையா என்பதைக்…

    • 9 replies
    • 5.5k views
  9. மனப்பொருத்தம்(Dating) அவசியமானதா? ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 18 replies
    • 5.1k views
  10. Started by Manivasahan,

    தலை சுத்துது (வழமை மாதிரியே) ஐயா இண்டைக்கு வருசம் பிறக்குதாம். சரி பிறக்கட்டும் . பிறக்கிறது நல்லது தானே! என்ன பிரச்சினையெண்டால் இந்தப் பிராமணியள் பிழைப்புக்காகச் செய்;யிற வேலைகளாலை எப்ப பிறக்குது எண்டு தெரியேல்லை. வாக்கிய பஞ்சாங்கப்படி பின்னேரம் 4.55 க்குப் பிறக்குதாம். திருக்கணித பஞ்சாங்கப்படி 6.29க்குப் பிறக்குதாம். அப்ப கொண்டாடுற அக்கள் எத்தனை மணிக்குக் கொண்டாடுறது. களத்திலை சமய தத்துவங்களை கற்றுத் தேர்ந்த சமஸ்கிருத மந்திரங்களின்ரை தெய்வீகத் தன்மை தெரிஞ்ச ஆக்கள் இருப்பினம். அந்தப் பெரிய ஆக்களிலை ஆராவது வந்து எத்தனை மணிக்கு விளக்குக் கொழுத்தி வருசத்தை வரவேற்கிறது எண்டு சொல்லுறியளா? இது வழமையா நடக்கிற கூத்துத்தான். ஒரு கூட்டம் சொல்லும் காலிலை வே…

    • 14 replies
    • 3.8k views
  11. வழமையாக ஆணுக்கு செவ்வாய் குற்றம் எண்டால் பரிகாரங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். வாழைக்கு தாலிகட்டிப் பிறது அதனை வெட்டி எண்டெல்லாம். பெண்ணுக்கு செவ்வாய் குற்றம் உள்ள போது என்ன பரிகாரங்கள். அதாவது 7இல செவ்வாய் குற்றமுள்ள பெண் செவ்வாய் குற்றமில்லாத ஆணை திருமணம் செய்ய வேணும் எண்டால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

    • 6 replies
    • 3.8k views
  12. எனது முதல் பதிவாக என்ன போடலாம் என்று தலையைச் பிச்சுக்கொண்டிருந்த வேளை நான் ஏன் காதல் பற்றி எனது முதல் பதிவு இருக்ககூடாது என யோசித்து அதையே கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி எழுதுவம் என எண்ணி என் முதல் உளறலாக காதலை உளறுகிறேன் பார்த்தியலா காதல் என்றாலே உளறல்தான். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை. கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போ…

  13. ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும்இ நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும்இ ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோஇ காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல. நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்தஇ பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும்இ அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி. …

    • 10 replies
    • 2.7k views
  14. ஆண்களைப் பொறுத்தவரை பெண்களின் மனது என்பது புரிந்து கொள்ள முடியாத... புரியாத புதிர்தான்! அதனால் தான் சிலர் பெண்களின் மனதை கடலின் ஆழத்துக்கு ஒப்பிட்டு சொல்வார்கள். பெண்களுக்கு ஆண்களிடம் பிடிக்காத ஐந்து விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். படித்து தெரிந்து.. புரிந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்ளுங்கள் ஆண்களே... * பெண்களுக்குப் பிடிக்காதவைகளில் முக்கியமாக முதலிடத்தைப் பிடிப்பது ஆண்களின் அருவறுக்கத்தக்க பார்வை. சில ஆண்கள், பெண்களை பார்க்கும் பார்வையே புது மாதிரி யாக இருக்கும். அதாவது ஏதோ வேறு உலகில் இருந்து வந்தவர்கள் போல்... பெண்களை அப்பத் தான் புதியதாக பார்ப்பது போல்... பார்ப்பார் கள். சிலரோ... பெண்களின் அங்கங் களையே உற்று உற்று பார்ப்பார்கள். இப்படி யான `பார்…

  15. பெண்கள் உயர் பதவிகளில் இல்லை ஏன்? ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை மாணவர்களை விட மாணவிகளே சிறந்த முறையில் படிக்கின்றனர். பொதுத் தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேறுகின்றனர். மதிப்பெண் பெறுவதிலும் முதலிடத்தில் உள்ளனர். இவை எல்லாம் மகிழ்ச்சி அடைய கூடியவைகள் தான். இந்த திறமைகள், புத்திசாலித்தனம் எங்கு சென்று அடைக்கலம் ஆகின்றன. பெண்கள் ஏன் தொழில் வர்த்த நிறுவனங்களில் உயர் பதவிகளை எட்டிப்பிடிப்பதில்லை. நாம் ஏற்றுக் கொண்டாலும், மறுத்தாலும் அத்தி பூத்தார் போல் 3.3 விழுக்காடு பெண்களே உயர் பதவிகளில் உள்ளனர். இது பெண்களை குறைத்து மதிப்பிடவோ அல்லது கற்பனையான தகவல் அல்ல. அசோசெம் என்று அழைக்கப்படும், இந்திய வர்த்தக மற்று…

    • 3 replies
    • 1.7k views
  16. குழந்தைகளும் இன்டர்நெட்டும் ரேகா, ஸ்ரீதர் இருவரும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் தங்கள் 12 வயது மகன் திவாகர் கம்ப்யூட்டரில் ஆர்வம் காட்டியது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. ரூ. 8,000 தொலைபேசி கட்டணம் வந்த பிறகுதான் திவாகர் பல மணி நேரம் இன்டர்நெட்டில் வலம் வருவது அவர்களுக்குத் தெரிந்தது. மேலும் ஆராய்ந்ததில் அவன் செக்ஸ் வெப்சைட்களைப் பார்ப்பது தெரியவந்தது. இருவருக்கும் அதிர்ச்சி! குழந்தைகள் இன்டர்நெட்டில் தங்கள் நேரத்தை எந்த விதத்தில் செலவிடுகின்றனர் என்பதை பெற்றோர் கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு போன்ற விஷயங்களைப்பற்றி குழந்தைகள் அறிந்துகொள்ள இன்டர்நெட் உதவினாலும் தவறான வழிகளில் செல்லவும் இது உதவுகிறது. குழந்தைக…

    • 0 replies
    • 933 views
  17. மதங்கள் பெயரில் நடக்கும் சடங்குகள், நிகழ்வுகள் (பெரும்பாலும் மூடநம்பிக்கையில்) தேவைதானா? ஆமா எனில் அவை எப்படியான நன்மைகள் தரக்கூடியவை? இதோ சில உதாரணங்கள், எப்படி மனித இனத்தை மதங்கள் போட்டு ஆட்டுகிறதென்று; இந்துமதத்தில்: பல இலட்சக்கணக்கானோர் வந்து குளிக்குமிடத்தில் எவ்வளவு அசுத்தம் ஏற்படுகிறது என்று யாரும் நினைத்துக்கூட பாரக்கமாட்டார்களா? இதன்மூலம் நோய்கள் ஏற்பட நிறையவே வாய்ப்புக்கள் இருக்கிறது என்று அறியாதவர்களா? எல்லாம் மூடநம்பிக்கை அவர்களின் கண்களை மறைக்கிறது போல! கிறிஸ்த்துவ மதத்தில்: ஒளிப்படம் 01 ஒளிப்படம் 02 ஒளிப்படம் 03 ஒளிப்படம் 04 ஒளிப்படம் 05 ஒளிப்படம் 06 ... இஸ்லாமிய மதத்தில்: ஒளிப்படம் 01 ஒளிப்படம் 02 ஒள…

    • 0 replies
    • 972 views
  18. வணக்கம் எல்லோருக்கும் நீண்ட நாட்களின் பின் மீண்டும் ஒரு விவாவதத் தலைப்புடன் கள உறவுகளைச் சந்திப்பதில் ஆனந்தம். தலைப்பைப் பார்த்தவுடன் விளங்கியிருக்கும், நாங்கள் களத்தில் நெடுக காதலைப் பற்றி மிகவும் அதிகமாகவே கதைத்து விட்டோம், ஆகவே தற்போது கொஞ்சம் நட்பைப் பற்றியும் பேசலாமே என்ற எண்ணத்தில் உங்களுடன்.. சும்மா நட்பு என்றால் அதில் அனைவருக்கும் ஒரே கருத்துதான் இருக்கும் அதாவது அது உயர்வானதென்று, ஆதலால் சற்று மாறுதலுக்கா விவாதத்திற்கு ஏற்புடையதாக தலைப்பை இன்றைய சூழலில் ஆண் பெண் நட்பின் நிலை? எல்லொரும் உடனே நட்பில் ஆண் என்ன பெண் என்ன அது போன்ற வித்தியாசம் ஏதுமில்லையென்று சுருக்கமாகக் கூறி முடித்துவிடாதீர்கள், இதில் நிச்சயம் நிறைய வேறுபா…

    • 28 replies
    • 8.5k views
  19. கலரைச் சொல்லுங்கள்! காதலைச் சொல்கிறோம்! கலர்புல் சைக்காலஜி நீங்கள் காதலில் கில்லாடியாக இருக்கலாம். எல்லோரையும் வசியப்படுத்தும் கலையும் தெரிந்திருக்கலாம். ஆனால் அந்தரங்க விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட பர்ஸனாலிட்டி என உங்களுக்கு தெரியுமா? உங்கள் செக்ஸூவல் பர்ஸனாலிட்டியைத் தெரிந்துகொள்ள இதோ லேட்டஸ்ட்டான கலர் சைக்காலஜி. உங்களுக்கு பிடித்த நிறத்தைக் குறிப்பிடுங்கள். உங்கள் அந்தரங்க பர்ஸனாலிட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள். சிவப்பு: அந்தரங்க விஷயத்தில் நீங்கள் புலி. கற்பனையில் தோன்றுவதை மிகச் சுலபமாக சாதித்து விடுவீர்கள். உங்களுக்கு ஆர்வம் மட்டும் வந்துவிட்டால் அவ்வளவு தான். சுலபமாக அந்த ஆர்வத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் ஜோடியும் சிவப்பு நிற…

    • 0 replies
    • 981 views
  20. எல்லாருக்கும் வணக்கம், புலத்தில் வாழும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளிற்கும் மிக எளிதில் கருத்து வேறுபாடு வந்து விடுகின்றதே.. இது எதனால??? பிள்ளைகள் பெற்றோரை புரிந்து நடப்பதில்லையா? இல்லை தாம் நினைப்பதுதான் தம் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதாலா?? சரி இப்போ விடயத்திற்கு வாருகிறேன்... இங்கு கல்வி கற்கும் மாணவர்களிற்கு (bachelor/master) அவர்களின் 3வது அல்லது 4வது வருடத்தில் ஒரு பகுதியோ இல்லா முழுமையாகவோ வேறு நாடு சென்று கல்வி கற்க சந்தர்ப்பம் உள்ளது. எனைய மாணவர்கள் போல தமிழ் மாணவர்களிற்கும் வேறு நாடு சென்று படிக்க வேண்டும் என்னும் ஆசை இருக்க கூடதா? இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்வதில்லை? ஏன் வேறு நாடு செல்வதர்க்கு பெற்றோர் அனுமதிப்பதில்லை?? அவ…

    • 46 replies
    • 8k views
  21. மனிதப் பெண்களுக்கு இயற்கையாக மாதவிடாய் என்பது நிகழ்கிறது. குறிப்பாக 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு இந்த மாதவிடாய் மாதத்தில் எப்பவோ 3 - 5 நாட்கள் வந்தே தீரும். அது கிட்டத்தட்ட 28 நாட்கள் என்ற தவணை முறையில் வருகிறது. இக்காலத்தில் பெண்களின் உடல்நிலை மட்டுமன்றி மனநிலையிலும் மாற்றங்கள்.. சோர்வு.. கோபம்.. எரிச்சல்.. தலையிடி.. வயிற்றுவலி போன்றன ஏற்பட்டு அவர்கள் சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்பது என்னவோ வருந்தத்தக்க ஒன்றுதான். அண்மைய நாட்களாக இந்திய தமிழ் தொலைக்காட்சி ஒன்றில்.. விளம்பரங்களில் ஒரு 30% விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் பெண்கள் பயன்படுத்தும் உபகரணம் தொடர்பானது என்று அமைகிறது. அதில் ஒரு விளம்பரத்தின் இறுதியில் "Have a nice day" என்பது போல "…

  22. சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் அவளுக்கு வேலை. மிகப் பெரிய தொகை சம்பளம். சென்னையைச் சுற்றியுள்ள பொழுதுபோக்குகளிலும் ஆர்வம் உண்டு. நடுத்தர வருவாய் கொண்ட குடும்பத்தை சேர்ந்த பெற்றோர் அவளால் கார், பங்களா என்று வாழ்க்கையை அனுபவித்ததால், அவளாக சொன்னால் திருமணம் பற்றி யோசிக் கலாம் என்றுவிட்டு விட்டனர். அம்மா வற்புறுத்தும்வரை சுதந்திரமாக இருக்கலாம் என்று அவளும் கருதியதால் திருமண சிந்தனையே எழவில்லை. இந்த நிலையில் 28 வயதில் அவளிடம் காதல் எட்டிப்பார்த்தது. மகளின் காதலுக்கு பெற்றோரும் பச்சைக் கொடி காட்டினர். காதலரும் வசதியான பார்ட்டிதான். இரண்டு குடும்பத்திலும் பரஸ்பரம் பேச்சு வார்த்தை களோடு... `ஒப்பந்த தட்டு`களும் பரிமாறப்பட்டன. ஆடம்பரத்துக்கு பஞ்சமின்றி... அன…

    • 9 replies
    • 4.2k views
  23. மதத்தில் இருந்து கற்பு, ஆடை என்று தன்னை தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கவைப்பதால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் டென்னிஸ் ஆட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்று சானியா மிர்சா அறிவித்திருப்பது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது என்றாலும் நடந்தவற்றை நன்கு அறிந்தவர்கள் அவர் முடிவு சரியானதே என்று நிச்சயம் கூறுவார்கள். முன்னாள் வீரர்கள் அவருக்கு அறிவுரை வழங்கத் துவங்கியுள்ளனர். லியாண்டர் பயஸ் கூட சானியா மிர்சா புகழினால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். விஜய் அமிர்தராஜ் "எங்களது காலத்தில் இந்தியாவில் விளையாடுவது என்பது ஒரு பெரிய விஷயம்” என்று கூறியுள்ளார். முன்னாள் டேவிஸ் கோப்பை இந்திய டென்னிஸ் அணித் தலைவர் அக்தர் அலி மட்டுமே ச…

  24. எல்லாருக்கும் வணக்கம்! காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு ஆராய்ச்சி: "எமக்கு காதல் ஏற்படுவதற்கு காரணம் என்ன?" ... இதுபற்றிய ஒரு கலந்துரையாடல்.. எமக்கு காதல் ஏன் ஏற்படுகின்றது? எமக்கு ஏற்படும் காதலும், ஏனைய விலங்குகளிற்கு ஏற்படும் காதலும் அடிப்படையில் ஒரே மாதிரியானதா? காதல் உணர்வு எமக்குள்ளேயே இருக்கின்றதா அல்லது வெளியில் இருந்து ஏற்படுகின்றதா? காதல் வயதுடன் சம்மந்தப்பட்ட ஓர் தற்காலிக உணர்வா? காதல் தெய்வீகமானது எண்டு சிலர் சொல்லிறீனம். தெய்வம் எமக்குள்ள இருக்கிறதாலதான் காதல் ஏற்படுகிதா? பதில் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ. இன்னும் கேள்விகள் நிறைய இருக்கிது. தொடர்ந்து கேட்கிறம். காதல் நாங்கள் விரும்பியபடி அமைஞ்சால் சந்தோசமாக இருக்கும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.