உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26630 topics in this forum
-
ஈராக் ஊடகவியாளார் நேற்று அமெரிக்க அதிபர் புஷ் மீது தனது பாதணியை களற்றி எறிந்தார்.அதன் பின்னர் அவர் ஈராக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புஷ் மீது தாக்குதல் நடத்திய ஊடகவியாளரின் பெயர் Muntadhar al-Zaidi என தெரியவருகின்றது. தாக்குதல் நடத்திய நபர் புஷ்சினை தீய வார்த்தைகளால் பேசினார். ஈராக் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவர் ஆவேசமாக பேசினார். ஈராக்,பாக்தாத்தில் தாக்குதல் நடத்திய ஊடகவியாளரை விடுவிக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தாக்குதல் நடத்திய ஊடகவியாளரை ஈராக் மக்கள் புகழ்ந்து பேசி வருவதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்…
-
- 4 replies
- 1.9k views
-
-
இந்தியா=பாகிஸ்தான் இடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டி இன்று சென்னையில் பரபரப்பாக நடந்தது. இதில் பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 227 ரன்கள் எடுத்த, இந்திய அணியால், பாகிஸ்தான் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியாத காரணத்தால் வெற்றியை இழந்தது. தோனி 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இரண்டாவதாக பேட் செய்த பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடி 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்து, தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. நசீர் ஷாம்ஷெட் அபார விளையாடி 101 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வித்திட்டார். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் படங்கள் பார்க்க....
-
- 0 replies
- 557 views
-
-
கொலம்பியாவில் உள்ள ஹொண்டியுராஸ் தூதரகத்தில், கிறிஸ்துமஸ் விருந்தின்போது பாலியல் தொழிலாளர்கள் வந்து அவ்விடத்தில் பொருட்களைத் திருடி அட்டூழியம் செய்தனர் என்று வெளியாகியுள்ள தகவல்களை விசாரிக்கப்போவதாக ஹொண்டியுராஸ் அரசாங்கம் கூறுகிறது. பொகோட்டாவில் உள்ள இந்த தூதரகத்தின் ஊழியர்கள் தமது கிறிஸ்துமஸ் விருந்திலே குடித்துவிட்டு களியாட்டம் போடுவதற்காக பாலியல் தொழிலாளர்களை அழைத்திருந்தனர் என்றும், அந்த விருந்தின்போது அங்கிருந்த கணிணிகள், கைத்தொலைபேசிகள் போன்றவை திருடுபோயுள்ளன என்றும் ஹொண்டியுராஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. களியாட்டம் போடச் சென்றவர்கள் தூதரின் அலுவலக அறைக்குள் மலம் கழித்துவிட்டுச் சென்றிருந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஹொண்டியுராஸ் மற்றும் கொலம்பியா இடையே போதைமர…
-
- 1 reply
- 759 views
-
-
பதற்றத்தைத் தணிக்க பேச்சுவார்த்தை: இந்தியா - பாக்.கிற்கு ஐ.நா. ஆலோசனை ஐ.நா.:இந்திய வீரர்கள் 2 பேர் படுகொலை செய்யப்ப்பட்டதை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐ.நா. அறிவுறுத்தி உள்ளது. ஜம்மு - காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி வந்து 2 இந்திய வீரர்களை படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 6 ஆம் தேதி எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்திய ராணுவத்தினர் வந்ததாகவும், எல்லைச் சாவடியை சோதனை செய்ததாகவும் இந்தியா மீது பாகிஸ்தான் பழிசுமத்தியது.இதை இந்தியா மறுத்தது. இந்நிலையில் இதுபற்றி ஐக்கிய நாடுகள் சபையின்…
-
- 2 replies
- 325 views
-
-
இன்றைய வாழ்க்கை சூழலில் விமானத்தில் பயணிப்பது என்பது தவிர்க்க முடியாத ஒரு ஊர்தியாகும். கடல் கடந்து தொழில் செய்பவர்களுக்கெல்லாம் இது ஒரு வரப்பிரசாதம். உலகை நாம் நேரில் காண வழிவகுக்கும் ஒரு போக்குவரத்து. ஆனால் இது எவ்வளவு வசதியானதோ அந்த அளவுக்கு பாதுகாப்பும் இல்லாதது. Jet Airliner Crash Data Evaluation Centre (JACDEC) என்கின்ற ஒரு நிறுவனம் விமான விபத்துகள் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய தகவல்களை சேகரித்து அதன் வருடாந்திர விமானத்துறை பாதுகாப்பு ரேங்கிங்கை வெளியிட்டுள்ளது. இந்த ரேங்கிங் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்றால் எத்தனை விமானங்கள் சேதமாகின, எத்தனை உயிரிழப்புகள் ஏற்ப்பட்டன என்பதை வைத்தும் (கடந்த 30 வருடங்களில்) மேலும் சில அடிப்படைகளை வைத்தும் வழங்கப்படுகின்றன. அ…
-
- 2 replies
- 386 views
-
-
மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திம்பக்டு நகருக்கு சென்றிருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு மற்றும் மாலி படைகளால் 6 நாட்களுக்கு முன்னர் தான் திம்பக்டு நகர் கைப்பற்றப்பட்டது. ஒரு நாள் விஜயமாக மாலி சென்றுள்ள அதிபர் ஒல்லோந்துடன் பிரான்ஸின் மூத்த அமைச்சர்கள் பலரும் இணைந்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் வடக்கு மாலியின் பிராந்தியங்களைக் கைப்பற்றிய இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சில் கடந்த மூன்று வாரங்களாக படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுப் படைகளை பாராட்டுவதற்காகவே அதிபர் ஒல்லோந்த் மாலி சென்றுள்ளார். மாலிக்கு புறப்படும் முன்னதாக கருத்துத் தெரிவித்த பிரான்ஸ…
-
- 1 reply
- 411 views
-
-
மது அருந்த வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிப்பதேன்? அனந்த் பிரகாஷ் பிபிசி பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லி உட்பட வட இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு குளிர் அலை நிலவும் எனவும் வெப்ப நிலை மிகவும் குறையக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் டெல்லி என்.சி.ஆர், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகியவையும் அடங்கும். இந்தப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. காலை வேளைகளில் திறந்தவெளி இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்…
-
- 0 replies
- 760 views
-
-
10 வயது பத்திரிகையாளரைப் பார்த்து நடுங்கும் இஸ்ரேல்... ஏன்? 'போரும், போராட்டமும் இறுதியில் அநாதைகள் ஆக்குவது என்னவோ குழந்தைகளைத்தான்' என்பார்கள். ஆனால், பல யுகங்களாகத் தொடரும் இஸ்ரேல்-பாலஸ்தீனியப் போர், பத்து வயதாகும் ஜன்னா ஜிகாதை ஊடகவியலாளராக்கி இருக்கிறது. உலகின் மிகச்சிறிய பத்திரிகையாளர் ஜன்னாவாகத்தான் இருக்க முடியும். பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நிகழ்த்திவரும் தொடர் தாக்குதல்களை உலகத்துக்கு, தான் எடுக்கும் காணொளிகள் வழியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறாள் ஜன்னா. இஸ்ரேலியர்கள் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதியான நபி சலேதான் ஜன்னா ஜிகாத் இருப்பிடம். இத்தனைக்கும் அவளது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் கிடையாது. பிறகு அவளுக்குள் எப்படி…
-
- 0 replies
- 332 views
-
-
சவுதி அரேபியாவின் முக்கிய சமூக செயற்பாட்டாளர் 3 ஆண்டுகளின் பின் விடுதலை 24 Views சவுதி (Saudi Arabia)அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், பல்வேறு விழிப்புணர்வுகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் சமூக செற்பாட்டாளரான லூஜின் அல் ஹத்லால். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் லூஜின் கைது செய்யப்பட்டார். லூஜினின் சிறைத் தண்டனைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு பின் லூஜின் அல் ஹத்லால் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். ஆனால் அவரது விடுதலை குறித்து சவுதி அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும்…
-
- 0 replies
- 434 views
-
-
ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை கொலை செய்ய முயன்றதை அடுத்து ரஷ்யர்கள் மற்றும் அந்நாட்டு நிறுவனங்கள் மீது அமெரிக்கா இன்று பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னியை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஜோ பைடனின் கோரிக்கையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். http://athavannews.com/அலெக்ஸி-நவல்னியை-கொலை-செ/
-
- 0 replies
- 460 views
-
-
ஆஸ்திரேலியா: வணிக வளாகத்தில் விழுந்து நொறுங்கிய விமானம். அதிர்ச்சி தகவல் செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (07:42 IST) ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிய மெல்போர்னில் சற்று முன்னர் வணிக வளாகம் ஒன்றின் மீது விமானம் விழுந்து நொறுங்கியது. plane crash" width="600" /> இந்த விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர். இந்த விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், காயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. காயம் அடைந்தவர…
-
- 0 replies
- 422 views
-
-
சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்குகிறது சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். பதிவு: ஏப்ரல் 11, 2021 16:47 PM சார்ஜா, சார்ஜாவில் 12-வது குழந்தைகள் வாசிப்பு திருவிழா அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கும் என சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சார்ஜா புத்தக ஆணையத்தின் தலைவர் அகமது பின் அல் அமெரி கூறியதாவது:- ‘உங்களது கற்பனையில்’ சார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி மற்றும் சார்ஜா ஆட்சியாளரின் மனைவி ஷேக்கா ஜவகர் பிந்த் முகம்மது அல் கா…
-
- 0 replies
- 358 views
-
-
பல உலக நாடுகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றன மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்துகளை சந்தைகளில் இருந்து விலக்கிக்கொள்வதை உலக நாடுகள் துரிதப்படுத்த வேண்டும் ஐநாவின் உணவு மற்றும் விவசாயக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் பள்ளியில் சத்துணவு உட்கொண்ட 23 பிள்ளைகள் இம்மாதத்தில் முன்னதாக உயிரிழந்த நிலையில் இந்த அறிவிப்பு வருகிறது. மிக அதிக நச்சுத் தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்து இந்த உணவில் கலந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பல உலக நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ள ஒரு பூச்சிக்கொல்லி மருந்து இதுவாகும். இவ்வகையான ரசாயனங்கள் விற்கப்படுவதும் பயன்படுத்தப்படுவதும் மனிதர்களின் ஆரோக்க…
-
- 0 replies
- 306 views
-
-
பாக். தாக்குதல்- மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க சோனியா, ராகுல் வலியுறுத்தல். டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் அருகே எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 இந்திய வீரர்கள் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற அப்பட்டமான துரோகத்திற்கு இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது. இது தொட…
-
- 5 replies
- 536 views
-
-
மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை! [Wednesday 2017-04-26 08:00] மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ORIX Rentec Corporation என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி (YUMI) எனப்படும் அந்த மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் யுமி ரோபோவை மக்கள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=181182&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 325 views
-
-
******************** சிகாகோ பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஓர் அமெரிக்க மாணவி இந்தியா வந்திருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை செய்தியாக்கி உலக அளவில் பெரும் சர்ச்சையை தொடங்கி வைத்துள்ளார். ‘இந்தியா: நீங்கள் கேட்க விரும்பாத கதை’ என்று அவர் கொடுத்துள்ள தலைப்பால், இந்தியா எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அக்கறை இல்லாதவர்களும் இதை படித்துவிட்டு நமது நாட்டை விமர்சித்த வண்ணம் இருக்கின்றனர். மிஷலா க்ராஸ் என்ற அந்த பெண் தன் கதையை சிஎன்என் வலைதளத்தில் பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் பத்து லட்சம் பேருக்கு மேல் வாசித்துள்ளனர். பல ஆயிரம் பேர் கருத்து கூறியுள்ளனர். அந்நிய நாகரிகங்களை அனுபவபூர்வமாக அறிந்து கொள்வதற்காக மாணவர்கள் வெளிநாடு சென்று மாதக்கணக்கில் தங்குவதையும…
-
- 0 replies
- 418 views
-
-
பருவநிலை மாற்றம்: வெள்ளத்தையும், வெப்பத்தின் தீவிரத்தையும் முன் கணிக்கத் தவறிய அறிவியல் ரோஜர் ஹர்ராபின் பிபிசி சுற்றுச்சூழல் பகுப்பாய்வாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, ஐரோப்பிய வெள்ளம். ஜெர்மனி வெள்ளப்பெருக்கையும், வட அமெரிக்காவில் வீசிய வெப்ப அலையையும் கணிக்கத் தவறிவிட்டதாக முன்னணி சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் ஒப்புக்கொண்டனர். ஆனால், புவி வெப்பநிலை வேகமாக அதிகரிப்பது நாசம் விளைவிக்கும் வெப்ப அலைகளையும், பெரு வெள்ளத்தையும் கொண்டுவரும் என்று பல பத்தாண்டுகளாக சரியாகவே எச்சரித்து வந்தனர். ஆனால், அது போன்ற வா…
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
சென்னை: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நாசவேலையை செய்வதற்காக 40 கிலோ வெடி பொருட்களுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் பதுங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவம் போல மீண்டும் ஒரு தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்ட மிட்டிருப்பதாக மத்திய உளவு பிரிவினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நெல்லை மேலாப்பாளையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 17½ கிலோ மட்டும் சிக்கிய நிலையில் மீதமுள்ள வெடி பொருட்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர் . கடலோர தாக்குதல் தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங…
-
- 1 reply
- 405 views
-
-
வாஷிங்டன்: சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு அமெரிக்கா மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராமல் நழுவி வருவதால் அமெரிக்க அதிபர் ஒபாமா அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிரியாவில் புரட்சி நடத்துவோரை அதிபர் ஆசாத்தின் ராணுவம் கடுமையாக ஒடுக்கி வருகிறது. கடந்த 21-ந் தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே ரசாயன குண்டுகளை வீசி குழந்தைகள் உள்பட 1,429 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்தன. இதற்காக மத்திய தரைக்கடல் பகுதியில் போர் கப்பல்கள் குவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பிரான்சு, ஜெர்ம…
-
- 8 replies
- 1.1k views
-
-
வணக்கம்... வேறொன்றும் இல்லை... ஊருலை இருக்கேக்க கேட்கிற சியாமாசெட்டி.. கிபீர்... மிக் மிகையொலி விமானங்களிண்ட இரைச்சலில டொரண்டோ அதிருது. நேற்று, இன்று பயிற்சி நடைபெறுகிதாம். நாளை சனி, ஞாயிறு, திங்கள் விதம் விதமான விமானங்களிண்ட சாகசங்களை நீங்கள் டொரண்டோவுக்கு வந்தால் பார்க்கலாம். வீட்டுக்கு மேலால பேரிரைச்சல் கேட்க.. குண்டுபோட குத்திக்கொண்டு குனிஞ்சு வாறானோ எண்டுற பிரமை வருகிது. வேடிக்கை பார்க்கவிரும்புற ஆட்கள் கீழுள்ள தளத்தில மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். Canadian International Air Show at the Canadian National Exhibition. சாகசத்தில கலந்துகொள்ளும் விமானங்களை இங்கு பார்வையிடலாம் உவையுக்கு விளையாட்டு. எங்களுக்கு பழசை நினைக்க வ…
-
- 5 replies
- 2.4k views
-
-
இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடாபில் பயோமெற்றிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, கனடா வீசா கோரும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் வீசா அல்லது ஏனைய வீசாக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பிக்கும் போது கைவிரல் அடையாளங்களையும் விண்ணப்பித்தில் உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/article…
-
- 0 replies
- 380 views
-
-
இடா சூறாவளி தாக்கத்தால் அமெரிக்காவில் 46 பேர் பலி அமெரிக்காவின் நியூயோர்க், நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் இடா சூறாவளியின் தாக்கத்தல் உண்டான பலத்த மழை வீழ்ச்சி மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர். இவற்றில் நியூயோர்க் நகரம் மற்றும் புறநகர் வெஸ்ட்செஸ்டர் பகுதியில் வெள்ள நீரில் சிக்கி 16 பேர் வரை உயிரிழந்துள்ளதாக மாநில அதிகாரிகள் கூறுகின்றனர். நியூஜெர்சியில் குறைந்தது 23 பேர் பலியானதாத மாநில ஆளுனர் பில் மர்பி கூறினார். பென்சில்வேனியாவில் குறைந்தது ஐந்து உயிரிழப்புகளும், கனெக்டிகட் மற்றும் மேரிலாந்தில் தலா ஒவ்வொரு உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் …
-
- 0 replies
- 271 views
-
-
இத்தாலி: கால்பந்து போட்டியை திரையில் பார்த்தபோது, கூட்ட நெரிசலில் 1500 பேர் காயம் படத்தின் காப்புரிமைEPA Image captionசதுக்கத்தை விட்டு வேகமாக வெளியேறியதால் பரும் தங்களின் காலணிகளை இழந்தனர் இத்தாலியின் டியூரின் நகரில், சனிக்கிழமை இரவு நிகழ்ந்த ஒரு பட்டாசு வெடிப்பால் உருவான கூட்ட நெரிசலில் சுமார் 1500 பேர் காயமடைந்துள்ளனர். ரியல் மாட்ரிட் எதிராக ஜுவண்டிஸ் கால்பந்து அணி விளையாடிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை கார்டிஃபில் நேரலையில் ஆயிரக்கணக்கானோர் பார்த்து கொண்டிருந்தனர். படத்தின் காப்புரிமைAFP Image captionபெரிய திரையில் கால்பந்து விளையாட்டு போட்டியை பார்க்க மக்கள் அந்த இடத்தில் நிறைந்திருந்தனர் அப்போ…
-
- 0 replies
- 356 views
-
-
சூடானில் முன்னெடுக்கப்பட்ட சதி முயற்சி தோற்கடிப்பு சூடானில் முன்னெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சதி முயற்சியை அடுத்து சூடானிய தலைநகர் கார்டூம் தெருக்களில் இராணு டாங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஓம்துர்மனில் உள்ள அரசு வானொலியை கட்டுப்படுத்தும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை காலை இந்த சதி முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "சதித்திட்டக்காரர்கள் அரசு ஊடக கட்டிடத்தை கைப்பற்ற முயற்சித்தார்கள், ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது" என்று அந் நாட்டு அரசாங்கத்தின் உயர்மட்ட ஆதாரங்கள் AFP செய்திச் சேவையிடம் கூறியுள்ளன. சதித…
-
- 0 replies
- 356 views
-
-
தாய்வான் உடன்படிக்கைக்கு... இணங்க, சீனா ஒப்புக்கொள்வதாக பைடன் அறிவிப்பு தைபே மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையைக் நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஒப்பந்தத்தை கடைபிடிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யக்கூடாது என்பதை தெளிவுபடுத்திய நிலையில் இதற்கு இருதரப்பும் இணங்க ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். தாய்வானை தனது சொந்த பிரதேசம் என கூறிவரும் சீனா, தேவைப்பட்டால் அதனை வலுக்கட்டாயமாக எடுப்போம் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு சீனாவே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தாய்வான், தாங்கள் ஒரு சுதந்திர நாட…
-
- 0 replies
- 269 views
-