Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வீடு, கார், பாதுகாப்பு போன்ற எந்த வித அரசு சலுகைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார். டெல்லி அரசின் தலைமை செயலாளர், கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். அப்போது தனக்கு எந்த வித அரசு சலுகையும் தேவையில்லை என்று கூறியதாக தெரிகிறது. முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் கூட தேவையில்லை என்று கூறிய அவர், கடவுள் தான் தனக்கு எப்போதும் பாதுகாப்பு என்று கூறினார். தனது அமைச்சர்களும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தகவலை டெல்லி அரசும், டெல்லி காவல் துறையும் உறுதி செய்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=99805&category=IndianNews&language=tamil

  2. வீடுகளை காலி செய்யும் இந்தியா - பாக்., எல்லைகளில் வசிக்கும் கிராமவாசிகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகே வசிக்கும் கிராமவாசிகள், இருநாடுகள் இடையேயான உறவு மேலும் மோசமாகும் என்பதால் தங்கள் வீடுகளைவிட்டு உடமைகளுடன் வெளியேறி வருகின்றனர். இவர்களை போன்று பாகிஸ்தானிலும் எல்லையோரம் வசிக்கும் கிராமவாசிகள் தங்கள் வீடுகளை காலி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வியாழன்று சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் ,பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் நிலைகள் மீது துல்லிய தாக்குதலை நடத்தியதாக இந்தியா அறிவித்ததை அடுத்து, இந்த இடம்பெயர்தல் நடைபெறுகிறது. தனது படைவீரர் ஒருவர் சர்ச்சைக்குரி…

    • 4 replies
    • 568 views
  3. அமெரிக்காவில் தற்போது கடும் பனிப்புயல் வீசுகிறது. இதனால் பல பகுதிகள் பனி மூடிக் கிடக்கின்றன. பாஸ்டன் நகரம் இதில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அடி உயரத்துக்கு பனி படர்ந்து உள்ளது. தெருக்களிலும், வீதிகளிலும் கொட்டி கிடக்கும் பனியை அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியின் வீடு பாஸ்டன் நகரில் பீகான் மனு பகுதியில் பிங்க்னீ தெருவில் உள்ளது. அங்கு அவரது வீட்டின் முன்பு அதிக அளவில் பனி கொட்டிக்கிடந்தது. அதை அகற்ற அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து பாஸ்டன் நகர நிர்வாகம் மந்திரி ஜான் கெர்ரிக்கு அபராதம் விதித்தது. அதை அவர் முறைப்படி செலுத்தி விட்டார். இந்த தகவலை கெர்ரியின…

  4. வீட்டில் இருந்த படியே மாதம் 16 லட்சம் ரூபாய் உழைக்கும் சின்ன பொண்ணு பிரிட்டனில் இளம் பெண் ஒருவர் வீட்டில் இருந்தபடியே மாதம் £7.650 பவுண்டுகள் உழைக்கின்றார். இது இலங்கை ரூபாயில் பதினாறு லட்சம் ரூபாய்க்கு மேல். இந்த கணக்கு விளையாட்டை நீங்களும் தான் கேட்டு பாருங்க... நம்மளுக்கு ஒண்ணுமே புரியல்ல உங்களுக்கு ஏதாச்சும் புரிஞ்சுதோ..? http://www.newjaffna.com/moreartical.php?newsid=39697&cat=sports&sel=current&subcat=5

    • 1 reply
    • 1.8k views
  5. வீட்டில் கொடூரமாக இறந்து கிடந்த சிறுமி, பெற்றோர் கைது - என்ன நடந்தது ? படக்குறிப்பு, கெய்லியா லூயிஸ் டிட்ஃபோர்ட் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ’வேல்ஸின் போவிஸ் பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் தனது அறையின் படுக்கையிலேயே இறந்து கிடந்தார். அரிய வகை நோயினாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடலை தூக்கும்போது அங்கே பூச்சிகள் மொய்த்தன, அவரது படுக்கையில் புழுக்கள் ஊறிக் கொண்டிருந்தன. அங்கே தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது. உணவு பொட்டலங்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தன. பிளாஸ்டிக் பால் பாட்டில்களில் சிறுநீர் இருந்தது. சுவர்களில் மலம் படிந்து கிடந்தது’. தனது மகளின் மரணித…

  6. வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது. காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காலி கலேகானே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்த நபரை வீட்டு வாயிட் கதவு அருகாமையில் இறந்து கிடந்த நிலையில் உறவினர்கள் மீட்டுள்ளனர். இலங்கைக்கே உரிய உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு நடத்தி வரும் ஆய்வுக் குழுவொன்றின் அங்கத்தினராக இவர் கடமையாற்றி வந்தார். பிரதேசத்தில் பல்வேறு வீடுகளுக்கு வரும் பாம்பு இனங்களை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு சென்று ஆய்வு செய்து வந்துள்ளார்…

  7. போபால்: வீட்டு வேலைக்காரரை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, மத்திய பிரதேச நிதி அமைச்சர் ராகவ்ஜி பதவி விலகினார். ராகவ்ஜி வீட்டில் வீட்டு வேலையை கவனித்து வந்தவர்களில் ஒருவர், தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி தன்னை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக காவல் துறையில் அளித்துள்ள புகாரில் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் ராகவ்ஜி மட்டுமல்லாது, அவரது நண்பர்கள் இருவரும் தன்னை அதே காரியத்திற்கு உட்படுத்தியதாக கூறியுள்ளதாக குற்றம் சாட்டி உள்ள அந்த வீட்டு வேலைக்காரர், இதற்கு ஆதாரமாக சி.டி. ஒன்றையும் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், அது தொடர்பாக இது வரை வழக்கு பதிவு செய்யவோ அல்லது செய்ததற்கான ரசீதை கொடுக்கவோ இல்…

    • 2 replies
    • 923 views
  8. சேலம்: "தேர்தலில் என்னை வெற்றி பெற செய்தால், வீட்டுக்கு ஒரு நானோ கார் இலவசமாக வழங்கப்படும்' என, மனுத்தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சேலம், அம்மாபேட்டை வித்யா நகரைச் சேர்ந்தவர் ஷாஜஹான்(41). வக்கீல் தொழில் செய்யும் அவர், கடந்த சட்டசபை, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார். 2004 லோக்சபா தேர்தலில், 8,466 ஓட்டுக்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். இந்த தேர்தலில், சேலம் வடக்கு, தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட விரும்பி மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது தேர்தல் அறிக்கையை, கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாளன்று அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன…

    • 2 replies
    • 1.1k views
  9. ஏழை மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதற்காக, வீட்டுக்கு பத்து ரூபாய் நன்கொடை யாக வசூலிக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார் ஒரு மாவட்ட ஆட்சியர். இது தேசிய செஞ்சிலுவை சங்கத்தின் உள்ளூர் அமைப்பின் மூலம் அமல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் மாநிலம் கைமூர் மாவட்ட ஆட்சியர் அர்விந்த்குமார் சிங் கூறியதாவது: மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் நான்கு லட்சம் குடும்பத்தின ரிடம் தலா ரூ.10ஐ நன்கொடை யாக தரும்படி கேட்டுக் கொண் டிருக்கிறோம். இதன்மூலம், குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் நல்ல வர வேற்பு உள்ளது. காரணம், உடனடி சிகிச்சை மற்றும் உதவிகள் கிடைக் காமல் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த …

  10. வீட்டிற்கு வெள்ளை அடிக்க வேண்டுமென கூட்டிச் சென்ற இளைஞரை, இரு நபர்கள் ஏமாற்றி குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து, பணத்துடன் ஓட்டம் பிடித்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. சரிஷாகுரி என்ற கிராமத்தை சேர்ந்த தயாள் மகாதோ (வயது 45), என்பவர் தினக்கூலி தொழிலாளி ஆவார். ஆறு குழந்தைகளுக்கு தந்தையான இவர், அருகில் உள்ள சாஸ் என்ற பகுதிக்கு சென்று வேலை ஏதாவது கிடைக்குமா என தேடுவது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, வழக்கம் போல சாஸ் நகரின் டீக்கடை முன் உட்கார்ந்திருந்த தயாள், வேலைக்கு யாராவது கூப்பிடுவார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார். அங்கு வந்த இருவர், வெள்ளையடிக்க வேண்டியுள்ளது வருகிறாயா? என தயாளிடம் கேட்டுள்ளனர். சம்பளம், வேலை நேரம் என, அனைத்தையும்…

  11. வீட்டுச் சிறையிலிருந்து மியான்மர் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூகியி விடுதலை சனிக்கிழமை, நவம்பர் 13, 2010, 17:57 யாங்கூன்: கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறை, சிறைவாசம் என தொடர்ந்து அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த மியான்மர் ஜனநாயகத் தலைவி ஆங்சான் சூகியி இன்று விடுதலை செய்யப்பட்டார். வீட்டுச் சிறையிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெளியில் வந்து மக்களைப் பார்த்து வணங்கி கையசைத்தார் ஆங் சான். அவரைக் காண பல்லாயிரக்கானோர் அங்கு கூடியிருந்தனர். புன்னகை பூத்தபடி காணப்பட்ட ஆங்சான், தனது வீட்டுச் சுவரின் கேட் வரை வந்து மக்களைப் பார்த்தார். ஆங்சானை பார்த்த சந்தோஷத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் மியான்மர் தேசிய கீதத்தைப் பாடினர். பின்னர் …

  12. வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால்... தனது பொறுப்பை செய்ய தவறும் ஐ.நா : ஜி4 நாடுகள் குற்றச்சாட்டு! வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் அமைதியைப் பராமரிக்க வேண்டிய தனது பொறுப்பை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பல வேளைகளில் பூர்த்தி செய்யவில்லை என இந்தியா உள்ளிட்ட ஜி4 நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் குறித்து ஐ.நா சபையின் அதிகாரபூர்வமற்ற கூட்டத்தில் இந்தியா, ஜெர்மனி, பிரேஸில், ஜப்பான் உள்ளிட்ட ஜி4 நாடுகள் சார்பில், ஐ.நாவுக்கான ஜப்பான் தூதா் கிமிஹிரோ இஷிகானே மேற்படி குற்றசாட்டினை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ” வீட்டோ அதிகாரப் பயன்பாட்டால் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்…

  13. லண்டன்: ஆண்டுதோரும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால், உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. உணவுப் பொருட்களை வீணாக்காதீர்கள், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுங்கள் என எவ்வளவோ பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் படுகின்ற போதும், தயாரிக்கப்படுகின்ற உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாவதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படி வீணாகின்ற உணவின் காரணமாக, தினமும் 87 கோடி உலகமக்கள் பட்டினியால் அவதிப்படுவதாக பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். http://tamil.oneindia.in/news/international/one-third-food-produced-globally-wasted-annually-183294.html

  14. வீதிக்கு வந்த குடும்பச் சண்டை 1971 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் வெற்றிபெறும் தி.மு.க. தோல்வியைத் தழுவும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் மிருக பலத்துடன் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்றது தி.மு.க. இதையடுத்து "தி.மு.க.வை இனி யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க. வினரே அதை செய்ய நினைத்தால் தவிர" என அப்போதைய ஊடகங்கள் விமர்சனம் செய்தன. அந்த விமர்சனத்திற்கு தற்போது வடிவம் கிடைத்துள்ளது. "என் வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது தொடர்ந்து 24 மணிநேரம் கூட நீடித்ததில்லை. அப்படியே நீடித்தாலும் அதை தீப்பந்தம் கொண்டு சுட்டுப் பொசுக்குபவர்கள் தொலைவில் இருக்கும் எதிரிகளாகவும் இருக்கலாம். அவர்கள் அதனை செய்ய தாமதமானால் அருகிலிருக்கும் அன…

  15. வீதியில் அழுத சிறுமியின் ஒளிப்படத்திற்கு சர்வதேச விருது! அமெரிக்க – மெக்ஸிகோ எல்லையில் சிறுமி அழுது கொண்டிருக்கும் ஒளிப்படத்திற்கு உலக பத்திரிக்கை ஒளிப்பட விருது கிடைத்துள்ளது. கடந்த வருடம் ஜுன் மாதம் 12ஆம் திகதி, மெக்ஸிகோ – அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியதாக அமெரிக்க எல்லைப் பாதுகாப்புபடை வீரர்கள் சிலரைக் கைது செய்தனர். கைதான பெண் ஒருவர் தன் மகளை அங்கேயே விட்டுவிட்டு அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களின் வாகனத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் அக்குழந்தை இரவு முழுவதும் அதே இடத்தில் அழுது கொண்டு இருந்தது. இக்காட்சியை அந்நாட்டு ஒளிப்பட கலைஞர் ஜோன் தன் கேமராவில் படமாக்கினார். உலகெங்கிலுமிருந்து சுமார் 4738 கலைஞர்கள…

  16. வீதியோர கடைகளில் விற்கப்படும் பூனை கறி பிரியாணி: - அதிர வைக்கும் சம்பவம்! [Monday 2016-10-31 17:00] சென்னை ரோட்டோர கடைகளில் விற்கப்படும் உணவுகளில் பூனை கறி பயன்படுத்தி வருவது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.விலங்கு உரிமை ஆர்வலர்கள் பல்லாவரம் பகுதி இளைஞர்களின் உதவியோடு பூனைகள் இறைச்சிக்காக பயன்படுத்துவதை வீடியோவாக பதிவு செய்து ஆதாரத்துடன் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.குறித்த வீடியோவில் பூனைகளை உயிருடன் கொதிக்கும் தண்ணீரில் முக்கி கொன்று தோலை உரித்து இறைச்சிக்காக பயன்படுத்துவது பதிவாகியுள்ளது. விலங்கு உரிமை ஆர்வலர்கள் கொடுத்த புகாரை தொடர்ந்து பல்லாவரம் பகுதியல் உள்ள ரோட்டோர கடைகளில் பொலிசார்…

  17. வீதியோர குண்டு வெடித்ததில் 14 பாகிஸ்தான் வீரர்கள் பலி A ROADSIDE bomb has killed at least 14 Pakistani soldiers and injured 25 others in a lawless tribal area bordering Afghanistan, officials say. The improvised explosive device hit a military convoy in Dosali village in the troubled North Waziristan tribal district, a stronghold of Taliban militants, a senior military official said on Sunday. News.com பாகிஸ்தான் வீரர்கள் மீது Waziristan பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கு

  18. தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மத்திய அரசு சுதந்திர தின விழாவில் அசோக் சக்ரா விருது வழங்கி சிறப்பிக்க உள்ளது. சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார். தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை துச்சமாக எண்ணி திறமையாக போரிட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற்றவர். அவர் தனக்கு கீழ் உள்ள படையினரை வழிநடத்துவதில் திறமை மிகுந்தவர். இந்நிலை…

  19. கருணை மனுவை நிராகரிக்க மிக அதிகமான காலதாமதம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, இந்திய உச்சநீதிமன்றம் சந்தனக் கடத்தல் வீரப்பன் "கூட்டாளிகள்" நால்வர் உள்பட 15 பேரின் மரண தண்டனையினை இன்று செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது. இதன் விளைவாக மீசை மாதையன், பிலவேந்திரன், சைமன், ஞானப்பிரகாசம் ஆகிய அந்நால்வரின் மரணதண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது. தலைமை நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவரின் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். மேலும் கருணை மனு நிராகரிக்கப்பட்ட தகவலை குற்றவாளிக்கும் அவரது உறவினர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும், மரணத் தண்டனை விதிக்கப்பட்டவர்களை …

  20. என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி கல்யாணம் செய்து கொண்டார் வீரப்பன். நான் அவரை விருப்பப்பட்டு கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று அவரது மனைவி முத்துலட்சுமி கூறியுள்ளார். வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மீது கர்நாடக போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். போலீஸ் எஸ்.பி.ஹரிகரன் மற்றும் போலீசார் வெடிகுண்டு வைத்து கொன்ற வழக்கும் இதில் உள்ளன. நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் தொடர்பாக முத்துலட்சுமியை போலீசார் கைது செய்து மைசூர் சிறையில் அடைத்து உள்ளனர். ஒரு வருடமாக அவர் ஜெயிலில் இருக்கிறார். வழக்கு விசாரணைக்காக அவரை சாம்ராஜ்நகர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் வீரப்பனை விரும்பி திருமணம் செய்யவில்லை. …

  21. மைசூர்: சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல வீரப்பனின் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர். மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று அவரை மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். முத்துலட்சுமி மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். மேட்டூர் கொளத்தூர் அருகே புதைக்கப்பட்டுள்ள வீரப்பனுக்கு அங்கு நினைவிடம் கட்ட சில நாட்களுக்கு முன் பூமி பூஜை நடத்தினார் முத்துலட்சுமி. இந் நிலையில் நேற்றிரவு தனது தந்தை அய்யண்ணனுடன் இருந்த முத்துலட்சுமியை கர்நாடகா போலீசார் திடீரென கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். பழைய வழக்குகளில் மைசூர் கோர்ட்ட பிறப்பித்த பிடி…

  22. பிரபல மலையாள நடிகர் கிஷோர் வீரப்பனாகவும், அவரைச் அதிரடிப் படை மூலம் சுட்டுக்கொண்ட விஜயகுமார் ஐபிஸாக அர்ஜூனும் நடித்துள்ள படம் 'வனயுத்தம்.’ இந்தபடத்தை குப்பி, காவலர் குடியிருப்பு படங்களின் மூலம் உண்மைச் சம்பவங்களை படமாக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷ் இயக்கியிருகிறார். உண்மையில் இந்தப் படத்துக்கு வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிதான் தடை வாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் தடைவாங்கியிருப்பது கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வனயுத்தம் படத்தின் கன்னடப் பதிப்பான ‘அட்டகாசத்துக்கும்’ தடைகோரிப்பெற்றிருகிறார் கோபால்! முன்னதாக சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனுவில், "பல ஆண்டுகளாக வீரப…

  23. பதான்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தேசிய பாதுகாப்பு படை அதிகாரியை பேஸ்புக்கில் இழிவுபடுத்திய கேரள வாலிபர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவரான தேசிய பாதுகாப்பு படை அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிரஞ்சன் குமார், தாக்குதல் சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பயங்கரவாதி ஒருவனின் உடலில் இருந்த வெடிகுண்டை செயல் இழக்க முயன்றபோது, அது வெடித்ததில் நிரஞ்சன் குமார் பலியாகியுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த இவர் பெங்களூரில் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ராதிகா பெங்களூரில் மருத…

  24. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள ஆஸ்திரேலிய ராணுவ வீரர்களுடன் ஆஸ்திரேலிய நடிகை தானியா சயீட்டா, செக்ஸ் வைத்துக் கொண்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய டிவி ஸ்டன்ட் ஷோவான ஹூ டேர்ஸ் வின்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தானியா சயீட்டா. இந்தியில் வெளியான மிஸ்டர் பிளாக், மிஸ்டர் ஒயிட் ஆகிய படங்களிலும் சயீட்டா நடித்துள்ளார். இதனால் அவரை பாலிவுட் நடிகை என்றே ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இதுதவிர பே வாட்ச் தொடரிலும் தலை காட்டியுள்ளார். இங்கிலாந்து டிவி நாடகமான மிஷன் இம்பிளாசிபிள் தொடரிலும் நடித்துள்ளார். சயீட்டா தற்போது பெரும் சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலை நாட்டுவதற்காக சென்றுள்ள ஆஸ்திரேல…

    • 2 replies
    • 2.6k views
  25. இந்தியன் பேட்மிண்டன் லீக் தொடரின்போது டெல்லி ஸ்மாஷர்ஸ் வீராங்கனைகளை ஒரு போட்டியி்ல விளையாட விடாமல் தடுத்தது தொடர்பாக முன்னணி வீராங்கனை ஜுவாலா கட்டாவிடம் விசாரணை நடத்த ஐபிஎல் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஐபிஎல் அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தவுள்ளது. பெங்களூரில் ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த போட்டியில் விளையாட விடாமல் டெல்லி வீரர்களை ஜுவாலா தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பங்கா பீட்ஸ் அணிக்கு எதிரான போட்டி இது. இதில், காயமடைந்த வீரர் ஹூ யூன்-க்குப் பதில், ஜான் ஓ ஜோர்ஜென்சனை சேர்க்க அந்த அணி முயன்றது. இதற்கு ஐபிஎல் நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த மாற்றத்தை ஜுவாலா விரும்பவில்லை. மாற்றக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். மேலும் நமது கோரிக்கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.