Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 900 பேர் அந்நாட்டு பாதுகாப்பு படைகளிடம் சரணடைந்திருப்பதாகவும், அதில் 10 பேர் இந்தியர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹர் மாகாணத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த 12ஆம் தேதி நடவடிக்கையின்போது, 13 பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட 93 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர். இதேபோல, கடந்த இருவாரங்களில் மொத்தம் 900 பேர் சரணடைந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சரணடைந்தவர்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அவர்களது குடும்பத்தினரும் அடக்கம். அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த பெண்கள், …

  2. ஆஃப்கானிஸ்தான் அரசு படைகள் மற்றும் தாலிபன் அமைப்பினர் இடையே ஏற்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது போல் தெரிகிறது. ரமலான் விழா முடிவடைந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் ஆயுதங்களை ஏந்துமாறு தங்கள் அமைப்பினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த 10 நாட்களுக்கு இந்த சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக தெரிவித்த ஆஃப்கன் அரசு, ஆனால், தேவைப்படும் சமயத்தில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. …

  3. ஆப்கானிடம் அணுகுண்டு உலகிற்கு புதிய ஆபத்து

  4. ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பும், பிற தீவிரவாத குழுக்களும் சட்டபூர்வமற்ற சுரங்கத்தொழில் மூலம் ஆண்டுக்கு மில்லியன் கணக்கான டாலர் வருவாய் பெறுவதாக லண்டனில் இருந்து இயங்குகின்ற ஊழல் எதிர்ப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.பாதக்ஷான் மாகாணத்தில் லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழில் நடைபெறுகிறது பாதக்ஷான் மாகாணத்திலுள்ள லபிஸ் லஸூலி என்ற ஓரளவு விலை உயர்ந்த கல்லை தோண்டி எடுக்கும் சுரங்கத் தொழிலில் குளோபல் விட்னஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கவனம் செலுத்துகிறது.சுரங்கங்களை எடுக்க ஏற்பட்டுள்ள வன்முறையான போட்டி ஸ்திரமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று குறிப்பிடும் இந்த அறிக்கை சில ஆப்கான் அதிகாரிகள் இந்த வர்த்தகத்திலிருந்து இலாபம் அட…

    • 1 reply
    • 475 views
  5. ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம் August 20, 2021 அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில்ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதைபந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியி ருக்கிறது. காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி ஏறிப் பயணிக்க முற்பட்ட சிலர்உயிரிழந்தமை தெரிந்ததே. விமானத்தின் கீழே சக்கரங்கள் இடையே-தரை யிறக்கும் கியர் பகுதியில்- ஏறி ஒளிந்து பயணிக்க முற்பட்ட மூவர் விமானம் மேலே கிளம்பிப் பறந்தபோது உடல் சிதறுண்டு தரையில் வீழ்ந்தனர் என்றுகூறப்படுகிறது. விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சம…

  6. ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' ஆப்கானிஸ்தானில் தெற்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள முக்கிய மாவட்டமான சாஞினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். 'ஆப்கானின் முக்கிய நகரை தலிபான்கள் கைப்பற்றினர்' அந்த நகரில் உள்ள போலிஸ் தலைமையகம் இன்னமும் ஆயுதபாணிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், உள்ளே இருக்கும் அதிகாரிகளுக்கு காபுலில் உள்ள அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த இரவு தலிபான்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களால், காபுலின் மத்திய பகுதியை நோக்கி மூன்று ராக்கட்டுகள் ஏவப்பட்டன. முன்னதாக காபுலுக்கு வெளியே பக்ரம் விமான தளத்தை தாம் தாக்குவதாக த…

  7. ஆப்கானின் முக்கிய மாகாண தலைநகரை கைப்பற்றியது தலிபான்: அரசாங்க ஊடகப்பிரிவு பணிப்பாளர் கொலை! ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணத்தில் உள்ள சராஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிம்ரூஸின் தெற்கு மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச், நேற்று (வெள்ளிக்கிழமை) தலிபான்களிடம் வீழ்ந்ததாக பல ஆதாரங்கள் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலிபான்களிடம் வீழ்ந்த முதல் மாகாண தலைநகராக இது மாறியுள்ளது. வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறுவதால் கிளர்ச்சியாளர்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் கிராமப்புறங்களை கைப்பற்றி இப்போது முக்கிய நகரங்…

  8. ஆப்கானின் முக்கிய விமான நிலையத்தை விட்டு அமெரிக்க- நேட்டோ படைகள் வெளியேறின! அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டு சக்திகளை முழுமையாக வெளியேற்றும் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு துருப்புக்கள் வெளியேறியிருப்பது அரசாங்கத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் 11ஆம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் போய்விடும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரி…

  9. ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான... உறுதிமொழியை, பிரித்தானியா வழங்கவில்லை: ஜெனரல் சர் ஜொன் மெக்கால்! நேட்டோவுடன் இணைந்து பணியாற்றிய பிறகு, தலிபான்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளான ஆப்கானியர்களுக்கு உதவுவதற்கான உறுதிமொழியை பிரித்தானியா வழங்கவில்லை என ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய பிரித்தானிய ஜெனரல் சர் ஜொன் மெக்கால் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு வர தகுதியான நூற்றுக்கணக்கானோர் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு நாங்கள் உறுதியளித்தோம், நீங்கள் ஒரு உறுதிமொழியைச் செய்தீர்கள், நீங்கள் அதை வழங்கவில்லை, எனவே அதை வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்குங்கள்’ என கூறினார். இத…

  10. ஆப்கானிலிருந்து அமெரிக்க துருப்புக்கள் ஒகஸ்ட் மாத இறுதிக்கும் வெளியேறும்: வெள்ளை மாளிகை! ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க படைகள் ஒகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியேறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தாவுக்கு எதிரான போரின் மையமாக 20 ஆண்டுகளாக உள்ள பாக்ராம் விமான நிலையத்தை விட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள், வெளியேறிய நிலையில் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் ஜென் சாகி கூறுகையில்,’ஒகஸ்ட் இறுதிக்குள் துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறும். ஜனாதிபதி நீண்ட காலமாக உணர்ந்தார்… ஆப்கானிஸ்தானில் போர் இராணுவ ரீதியாக வெல்லக்கூடிய ஒன்றல்ல என்று. எனினும், ஆப்கானிஸ்தானுக்கு, எ…

  11. ஆப்­கா­னி­லி­ருந்து அமெ­ரிக்க படைகள் வெளியேற வேண்­டிய நேரம் வந்து விட்­ட­து: ட்ரம்­புக்கு தலி­பான்கள் எச்சரிக்கை கடி­தம் 2017-01-27 10:55:07 ஆப்கானி­ஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டியதற்கான நேரம் வந்துவிட்டது என ட்ரம்ப்புக்கு தலி பான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்­து தலிபான் அமைப்பு, அமெரிக்க ஜனா­தி­ப­தி ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அந்தக் கடிதத்தில் தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சைபிஹுல்லா முஜாஹித், "அமெரிக்கப் படைகள் ஆப்கானில் உள்ளவரை அங்கு அமைதி ஏற்படாது. அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைவ…

  12. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் ஓட்டெடுக்கவில்லை என்று அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். வருகிற 2011 ஆம் ஆண்டு முதல் திரும்பத் தொடங்கிவிடும் என்று ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வெளியிட்டுள்ள புதிய கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ஹிலாரியிடம், ஆப்கானிஸ்தானை கைகழுவிவிட்டு அமெரிக்கப் படைகள் ஓட்டமெடுக்கிறதா? என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஹிலாரி, "நிச்சயமாக இல்லை, இதனை நான் மிகவும் அழுத்தமாக கூற விரும்புகிறேன்" என்றார். "ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் என்ன நிகழ்ந்தது என்பது குறித்த எங்களது ஆய்வு மிகச்சரியானதே என நிரூபிக்கப்பட்டுள்ளது. …

  13. ஆப்கானில் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்காது! ஆப்கானிஸ்தானில் கடந்த ஒகஸ்ட் மாதம் 10 பேரைக் காவுக்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குலுக்கு, எந்த அமெரிக்க துருப்புகளும் அல்லது அதிகாரிகளும் பொறுப்பேற்க மாட்டார்கள் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, காபூலை விட்டு வெளியேறிய இறுதி நாட்களில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலின் போது, ஒரு தன்னார்வ ஊழியர் மற்றும் ஏழு சிறுவர்கள் உட்பட குடும்பத்தின் ஒன்பது உறுப்பினர்கள் உயிரிழந்தனர். காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஒரு தற்கொலை குண்டுதாரி 170 பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க துருப்புக்களை கொன்ற சில நாட்க…

  14. ஆப்கானில் அமெரிக்க இராணுவப் பணி ஆகஸ்ட் 31 உடன் முடிவைடையும் - பைடன் உறுதி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவப் பணி எதிர்வரும் ஆகஸ்ட் 31 க்குள் முடிவடையும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் வியாழனன்று கூறியுள்ளார். மேலும் உள்நாட்டுப் போரைத் தடுக்கு ஒன்றிணையுமாறு நாட்டின் தலைவர்களையும் அவர் கேட்டுக் கொண்டார். 20 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர், படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முன்னர் அமெரிக்க ஒரு காலத்தில் கொண்டு வர விரும்பிய சிறந்த நிலைமைகள் ஆப்கானிஸ்தானில் ஒருபோதும் நிறைவேறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். உலகை உலுக்கிய அமெரிக்கவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு காரணமான அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா கடந்த 200…

    • 5 replies
    • 531 views
  15. தீவிரவாத அமைப்பு என தடைசெய்யப்பட்ட ஜமாத் உத் தாவாவின் தலைவர் ஹபீஸ் முகமத் சயீத் காஷ்மீரில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வருட இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை வெளியேறுகிறது. இந்நிலையில், இந்தியாவும் காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும் என்று ஹபீஸ் அடவாடியாக பேசியுள்ளார். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹபீஸ் இதனை தெரிவித்துள்ளார். ஹபீஸுக்கு லஷ்கர்-இ-தொய்பா இயகத்திற்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டின்படி இந்தியா அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.dailythanthi.com/2014-01-13-India-will-be-forced-to-Kashmir-just-like-US-in-Afghanistan-Hafiz-S…

  16. ஆப்கானில் அமெரிக்காவுக்கு பெரும் இழப்பு ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள தளம் ஒன்றின் மீது புதனன்று பிற்பகல் நடத்தப்பட்ட தற்கொலைத்தாக்குதலில், அமெரிக்காவின் சி.ஐ.ஏ உளவு நிறுவனம் கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய இழப்பை எதிர்கொண்டதாக தெரியவந்துள்ளது. கோஸ்ட் மாகாணத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் முழு நேரமாகவோ, அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ சி.ஐ.ஏவுக்காக பணியாற்றிய 8 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 அமெரிக்கர்கள் இதில் காயமடைந்தனர். ஆப்கானிய இராணுவ அதிகாரியாக பணியாற்றிய தமது ஆளே அந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர். பல சோதனைச் சாவடிகளின் ஊடாக கடந்து சென்று, அந்த நபர் உடற்பயிற்சி நிலையத்தில் அந்த தாக்குதலை ந…

  17. துருக்கியைச் சேர்ந்த பயணிகள் ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரை ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறை பிடித்துச் சென்றுள்ளனர். துருக்கியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் நகரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பணிகளை மேற்பார்வையிட அதன் அதிகாரிகள் குழு கோஸ்ட் நகருக்குச் சென்றுவிட்டு காபூலுக்கு ஹெலிகாப்டரில் திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது அஸ்ரா மாவட்டத்தில், கடும் சூறைகாற்றும், பலத்த மழையும் பெய்ததால், ஹெலிகாப்டர், ஒரு கிராமத்தில் அவசரமாக தரையிறங்கியது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரைச் சூழ்ந்த தலிபான்கள் அதில் இருந்த 11 பேரையும் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=81063&category=WorldNews&language=tamil

  18. Published By: RAJEEBAN 14 MAY, 2024 | 12:48 PM ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியாவின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சட்டத்தரணி டேவிட் மக்பிரைட்டிற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஐந்து வருடங்கள் 8 மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இராணுவஇரகசியங்களை திருடி அம்பலப்படுத்தியதை மக்பிரைட் கடந்த வருடம் ஏற்றுக்கொண்டிருந்தார். உண்மையை தெரிவிப்பது தனது தார்மீக கடமை என தான் கருதியதாக அவர் தெரிவித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகளின் போது அவுஸ்திரேலிய படையினர் ஆப்கானிஸ்தானில் 38 பொதுமக்களை கொலை செய்தமை தெரியவந்தது. யுத்த குற்றங்கள்குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம…

  19. ஆப்கானில் இன்று அரசாங்கத்தை அமைக்கவுள்ள தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தலிபான்கள் இன்று நாட்டில் அரசாங்கத்தை அமைக்க உள்ளனர். தலிபான்கள் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு அரசாங்கத்தை அமைப்பார்கள் என்று சர்வதேச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். பல தசாப்த கால போருக்குப் பிறகு நாட்டில் அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை மீண்டும் வலியுறுத்தி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வெளியேறிய பிறகு இஸ்லாமிய போராளிக் குழுவினர் தங்கள் வெற்றியை வெளிப்படுத்தினர். இந்த வாரம் அமெரிக்கப் பட…

    • 2 replies
    • 541 views
  20. ஆப்கானில் இரண்டு ஜனாதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் உள்நாட்டு போர் உருவாகும் அபாயம்! by : Anojkiyan ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளதால், அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கானி, நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இதேபோல, அஷ்ரப் கானியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவும் காபுல் நகரில் தனது ஆதரவாளர்க…

  21. ஆப்கானில் இளவரசர் ஹரி 25 பேரைக் கொன்றதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல்! இளவரசர் ஹரி ஆப்கானிஸ்தானில் அப்பாச்சி ஹெலிகொப்டர் விமானியாக இருந்த காலத்தில் 25 பேரைக் கொன்றதை ஒப்புக்கொண்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விரைவில் வெளியிடப்படவிருக்கும் ‘ஸ்பேர்’ என்ற அவரது சுயசரிதையை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2007-2008 வரையிலான வான்வழித் தாக்குதல்களில் முதலில் ஆப்கானிஸ்தானில் முன்னோக்கி விமானக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய அவர், 2012-2013ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தாக்குதல் ஹெலிகொப்டரை ஓட்டினார். 38 வயதான அவர் விமானியாக ஆறு பயணங்களை மேற்கொண்டார், அது மனித உயிர்களை எடுக்க வழிவகுத்தது என்று டெய்லி டெல…

  22. ஆப்கானில் இளவரசர் ஹாரி . Friday, 29 February, 2008 02:30 PM . லண்டன், பிப்.29: ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் சண்டையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி பங்கெடுத்துள்ளதாக புதிய தகவல் வெளியாகிவுள்ளது. . கடந்த கிருஸ்துமஸ் பண்டிகை முதலே இளவரசர் ஹாரி "புல்லட் மேக்னட்' என்ற புனை பெயரில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில் ஒரு சாதாரண வீரனாக செயல்பட்டு வருகிறார் என்று "தி டிரட்ஜ் ரிப்போர்ட்' செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஈராக்கிற்கு சென்று இளவரசர் ஹாரி போர் பயிற்சி பெற திட்டமிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த திட்டம் கைவிடப்பட்டு, ஆப்கானிஸ் தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் போர…

  23. இங்கிலாந்து விமானப்படையில் பணிபுரியும் இளவரசர் ஹாரி ஆப்கானிஸ்தான் சென்று இருந்தார். அங்கு முகாமிட்டுள்ள இங்கிலாந்து ராணுவத்தின் அபாச்சி ஹெலிகொப்டரின் விமானியாக பணிபுரிந்தார். அங்கு முகாமிட்டிருந்த முஜாகிதீன் மற்றும் தலிபான் தீவிரவாதிகளை வெடிகுண்டு வீசி அழித்தார். தற்போது அங்கு பணிமுடித்த அவர் இங்கிலாந்து திரும்பி விட்டார். இந்தநிலையில் ஆப்கானிஸ்தான் குன்னார் மாகாணத்தின் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி குவாரி நஸ்ருல்லா இங்கிலாந்தின் டெய்லி மிரர் பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்தபோது இளவரசர் ஹாரி தான் எங்களுக்கு முதல் இலக்காக இருந்தார். அவரை பிடிக்க குறி வைத்திருந்தோம். அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டோம். இங்கிலாந்தில் வேண்டுமா…

  24. ஆப்கானில் உள்ள 5 இராணுவத் தளங்களை மூடியது அமெரிக்கா நான்கு மாதங்களுக்கு முன்னர் தலிபானியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பகுதியாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐந்து இராணுவ தளங்களை அமெரிக்கா மூடியதாக பென்டகன் அதிகாரி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஹெல்மண்ட், உருஸ்கான், பக்திகா மற்றும் லக்மன் ஆகிய மாகாணங்களில் உள்ள இராணுவத் தளங்களையே அமெரிக்கா இவ்வாறு மூடியுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலீபான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இடம்பெற்று வரும் மிக நீண்ட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாக கொண்டு இரு தரப்புகளுக்குமிடையே ஒப்பந்தம் கடந்த பெப்ரவரி மாதம் கைச்சாத்திடப்பட்டது. கட்டாரின் தலைநகர் டோஹாவில் பல மாத பேச்சுவா…

  25. ஆப்கானில் உள்ள அமெரிக்க பிரிட்டிஸ் படையினரை கொலை செய்வதற்கு சன்மானம் வழங்குகின்றது ரஸ்யா- புலனாய்வு அதிகாரிபரபரப்பு குற்றச்சாட்டு June 28, 2020 ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பிரிட்டிஸ் படையினரை கொலை செய்வதற்கு ரஸ்ய புலனாய்வு பிரிவு தலிபான் அமைப்பினை சேர்ந்தவர்களிற்கு சன்மானம் வழங்குகின்றது என ஐரோப்பிய நாடொன்றின் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. ரஸ்யாவின் நோக்கம் என்னவென்பது தெளிவாக தெரியாதபோதிலும் அந்த நாடு வழங்கிய சன்மானம் காரணமாக ஆப்கானில் உள்ள சர்வதேச படையினர் மத்தியில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். ரஸ்ய புலனாய்வு பிரிவினரின் இந்த அணுகுமுறை திடுக்கிடவைக்கின்றது கண்டித்தக்கது என …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.