உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26644 topics in this forum
-
ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) காலை பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவன் குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சில மாணவர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தப்பிக்கும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர…
-
- 0 replies
- 191 views
-
-
அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும் எதிர்வு கூறியுள்ளது. அவுகஸ் ஒப்பந்தம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மூலோபாய சமநிலையை சீர்குலைக்கும் என்றும் வடகொரிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறினார். அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் அவுஸ்ரேலியாவுக்கு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்ளும் முயற்ச…
-
- 0 replies
- 181 views
-
-
புதிய ஒப்பந்தம் : பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தையை இரத்து செய்தது பிரான்ஸ் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்ரேலியா இடையேயான அவுகஸ் உடன்பாட்டால் எழுந்திருக்கும் அசாதாரண நிலையால் பிரிட்டனுடனான பாதுகாப்பு பேச்சுவார்த்தையை பிரான்ஸ் இரத்து செய்திருக்கிறது. அவுகஸ் உடன்பாட்டால் கோபமடைந்திருக்கும் பிரான்ஸ், அமெரிக்கா தனது முதுகில் குத்திவிட்டதாகவும் பொய் கூறி வருவதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் இந்த வாரம் நடக்க இருந்த பாதுகாப்பு தொடர்பான சந்திப்பை பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரத்து செய்துள்ளார். இரண்டு நாள் நடக்க இருந்த இந்தப் பேச்சுவார்த்தை இரத்து செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதுதர…
-
- 0 replies
- 300 views
-
-
மேல்நிலை பாடசாலைகளில்... பெண்கள், கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மேல்நிலை பாடசாலைகளில் பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தடை விதித்துள்ளனர். அத்தோடு கற்பித்தல் நடவடிக்கைகளில் பெண் ஆசிரியர்கள் பங்குகொள்ள முடியாது எனவும் உத்தரவிட்டுள்ளனர். இந்த செயற்பாடு காரணமாக மாணவிகளின் கல்வி முற்றாக ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக 1990 ஆம் ஆண்டு ஆட்சிபுரிந்த தலிபான்கள் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாரிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் விவகார அமைச்சினை மூடியுள்ள தலிபான்கள், அதற்கு பதிலாக முஸ்லீம் சட்டங்களை அமுல்படுத்தும் திணைக்களமாக அதனை …
-
- 0 replies
- 262 views
-
-
பயங்கரவாதத்துக்கு எதிராக... நடவடிக்கை, எடுக்கப்போவதில்லை – ஆப்கானிஸ்தான் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என நேட்டோ நாடுகளின் தற்காப்புத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான சாத்தியத்தை முற்றிலும் நிராகரிக்க இயலாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து அங்கு பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலிருந்து அதிகமானோர் அந்த வட்டாரத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்வது குறித்துக் கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் வட்டார அளவில் நெருக்கடியை ஏற்படுத்தலாம…
-
- 0 replies
- 335 views
-
-
அமெரிக்கவுக்குள் வந்து பாலத்துக்கு அடியில் தஞ்சமடைந்த 10 ஆயிரம் குடியேறிகள் - என்ன ஆகும்? 25 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அமெரிக்க சுங்க அலுவலகத்தில் அகதியாக தஞ்சம் கோரி விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்படும்வரை இவர்கள் போக இடமின்றி எல்லை முகாம்களில் காத்திருக்கிறார்கள். அமெரிக்கா-மெக்சிகோ எல்லை பாலம் அருகே முகாமிட்டுள்ள ஆயிரக்கணக்கான குடியேறிகளை ஹேட்டிக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்லையில் முகாமிட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஹேட்டியைச் சேர்ந்த குடியேறிகள்.…
-
- 0 replies
- 488 views
- 1 follower
-
-
ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை 56 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள் தெரிவித்துவிட்டனர். 'எல்லாமே இருண்டுவிட்டது போலத் தெரிகிறது' என்று பள்ளி செல்லும் வாய்ப்பு…
-
- 0 replies
- 257 views
- 1 follower
-
-
தற்கொலை குண்டுதாரியை குறிவைத்து அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக உயிர் பிழைத்த உறவினர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். தங்களது வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் வெடித்துச் சிதறியதில் அதில் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். ஆனால், இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் அமைப்பின் ஆப்கானிய கிளையுடன் தொடர்புடைய ஒருவர் இருந்த வாகனத்தை குறிவைத்து தாக்கியதாக அமெரிக்கா ராணுவம் கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் சட்ட விரோதமானது என்று தாலிபன் அறிவித்துள்ளது.தாக்குதலின்போது அருகேயிருந்த அப்பாவிப் பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிற…
-
- 2 replies
- 539 views
- 1 follower
-
-
லேடி ட்ரியூ - 3ம் நூற்றாண்டில் சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய பெண் கிளர்ச்சியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AMERICAN MUSEUM OF NATURAL HISTORY படக்குறிப்பு, லேடி ட்ரியூ (உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினான்காம் கட்டுரை இது) லேடி ட்ரியூ வியட்நாமின் ச்சியெளசோ (தற்போதைய தன்ஹோ மாகாணம்) துணை மாகாண நகரில் உள்ள ச்சியூஸென் பகுதியில் இருக்கும் யென் பின் மாவட்டத்தில் கிறிஸ்துவுக்…
-
- 0 replies
- 332 views
- 1 follower
-
-
ஆக்கஸ் திட்டம்: சீனாவை முடக்க ஒன்று கூடும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா - ஜோ பைடன், போரிஸ் ஜான்சன், ஸ்காட் மாரிசன் அறிக்கை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சீனாவை எதிர்கொள்ளும் வகையில் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சிறப்பு பாதுகாப்பு உடன்பாடு ஒன்றை அறிவித்துள்ளன. இந்த கூட்டு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு முதல் முறையாக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஆக்கஸ்(AUKUS) என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டுத் திட்டம், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும…
-
- 25 replies
- 1.4k views
- 2 followers
-
-
கடலுக்குள் புதைந்திருக்கும் உலகின் எட்டாவது கண்டம்: விலகாத மர்மங்கள் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GNS SCIENCE நீருக்குள் புதைந்திருக்கும் 8-ஆவது கண்டத்தைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞானிகளுக்கு 375 ஆண்டுகள் ஆகின. ஆனால் அதற்குள் இருக்கும் மர்மங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படவில்லை. அது 1,642-ஆவது ஆண்டு. உலகின் எட்டாவது கண்டத்தைத் தேடும் பணியில் டச்சு மாலுமியான ஏபெல் டாஸ்மென் ஈடுபட்டிருந்தார். பூமியின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு பரந்த கண்டம் இருக்கிறது என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அந்தக் காலகட்டத்தில் தெற்கு அரைக்கோளப் பகுதி ஐரோப்பியர்களுக்கு மர்மமாகவே இருந்தது. வடக்கேயுள்ள தங்…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
வலுக்கும் மோதல்: அமெரிக்கா- அவுஸ்ரேலியாவில் இருந்து தூதர்களை திரும்பப்பெற்றது பிரான்ஸ்! அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலுள்ள தங்களது தூதர்களை பிரான்ஸ் மீள அழைத்துள்ளது. முக்கியத்தும் வாய்ந்த ஆக்கஸ் என்று அழைக்கப்படும் கூட்டுத் திட்டத்தில், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளதன் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உள்ளடக்கிய முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்த நாடு உடனடியாக தூதர்களை திரும்பப் பெற்றதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ‘குடியரசுத் தலைவரின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்கா மற்றும் அவுஸ்தி…
-
- 0 replies
- 271 views
-
-
ஸ்பெயினில் உள்ள கேனரி தீவில்... ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள்: எரிமலை வெடிக்கும் அபாயம்! சமீபத்திய நாட்களில் கேனரி தீவான லா பால்மாவில் ஆயிரக்கணக்கான சிறிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள எரிமலை வெடிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்பானிஷ் தீவு கும்ப்ரே வீஜா தேசிய பூங்காவில் உள்ள டெனிகுவியா எரிமலையின் தாயகமாகும். இந்த பகுதியை சுற்றி 4222 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மாக்மா எரிமலைச் சங்கிலியில் புகுந்து, அதன் உச்சத்தை 6 சென்டிமீட்டர் (2.4 அங்குலம்) உயர்த்தியதாக தேசிய நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில், அடுத்த சில நாட்களில் நிலநடுக்கங்களின் எ…
-
- 0 replies
- 258 views
-
-
டைம்ஸ் 100: நரேந்திர மோதி, ஜோ பைடன் ஆகியோருடன் தாலிபன் தலைவர் பெயரும் உலகின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர். இவர்களுடன் தாலிபன் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம் பெற்றுள்ளது. தோகாவில் அமெரிக்காவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் தாலிபன்கள் சார்பில் பங்கேற்றவரும், படை வெளியேற்ற உடன்பாட்டில் கையெழுத்தி…
-
- 2 replies
- 438 views
- 1 follower
-
-
வடகொரியாவை தொடர்ந்து... தென்கொரியா, ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்! வடகொரியா ஏவுகணை சோதனை செய்த சில மணி நேரங்களில், தென்கொரியாவும் ஏவுகணை சோதனை செய்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானங்களை மீறி ஆறு மாதங்களில் நாட்டின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நேற்று (புதன்கிழமை) வடகொரியா மேற்கொண்டது. வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, தென்கொரியா, அதன் தலைவர் மூன் ஜே-இன், நாட்டின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையின் சோதனையில் கலந்துகொண்டதாக அறிவித்தது. தென்கொரியா, வெற்றிகரமாக ஒரு சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை மற்றும் நீண்ட தூர வான்வழி ஏவுகணையான கே.எஃப்.-21 ஏவுகணை…
-
- 0 replies
- 311 views
-
-
சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழனன்று டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார். சகோலில் இடம்பெற்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான எங்கள் மோதல், மற்றொரு பாரிய வெற்றியாகும் என்று மக்ரோன் அந்த பதிவில் கூறியுள்ளார். சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவின் சகோல் பகுதியில் இஸ்லாமிய அரசின் வரலாற்றுத் தலைவராக இருந்தார் மற்றும் அவரது குழு 2017 இல் கொடிய தாக்குதலில் அ…
-
- 0 replies
- 318 views
-
-
Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து கடும் எச்சரிக்கை! Al-Qaeda பயங்கரவாத அமைப்பு குறித்து அமெரிக்க உளவுத்துறை கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. செப்டம்பர் 11 தாக்குதல்களை நடத்திய குறித்த பயங்கரவாத அமைப்பு, ஆப்கானிஸ்தானில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் வலுப்பெறும் என இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1239461
-
- 0 replies
- 224 views
-
-
தீவிரவாதிகளுக்கு உதவினால்... பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு உதவினால் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், பாகிஸ்தான் இரட்டை வேடமிடுவதாகத் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதைப் பொருத்து அந்நாட்டுடனான உறவைத் துண்டிப்பது குறித்து அமெரிக்கா முடிவெடுக்கும் என்றும் பிளிங்கென் தெரிவித்துள்ளார். அண்மையில் தலிபான் அமைச்சரவையில் ஹக்கானி தீவிரவாதிகளை இடம்பெறச் செய்ய பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளையும் பிளிங்கென் சுட்டிக்கா…
-
- 0 replies
- 217 views
-
-
ஹிட்லரின் விஞ்ஞானிகள் ஆரியர்களைப் பற்றி இமயமலையில் ஆய்வு நடத்திக் கண்டுபிடித்தது என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ULLSTEIN BILD DTL/GETTY IMAGES படக்குறிப்பு, 1939-ஆம் ஆண்டில் திபெத்தியர்களுடன் ஜெர்மானியக் குழுவினர் 1938 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் நாஜி கட்சியின் முன்னணி உறுப்பினரும், யூத அழிப்பின் முக்கிய கூட்டாளியுமான ஹென்ரிக் ஹிம்லர், ஐந்து பேர் கொண்ட குழுவை திபெத்துக்கு அனுப்பி ஆரிய இனத்தின் தோற்றம் பற்றிய அறிய முயன்றார். எழுத்தாளர் வைபவ் புரந்தரே இந்தச் சுவாரஸ்யமான ஆய்வுப் பயணம் பற்றி விவரிக்கிறார். இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பு ஜெர்மா…
-
- 0 replies
- 457 views
- 1 follower
-
-
சான் ஜோஸ்: ரூ.1.5 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கிய பொக்கிஷக் கப்பல் - அள்ளப் போவது யார்? விக்டோரியா ஸ்டன்ட் பிபிசி ட்ராவல் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சான் ஜோஸ் என்ற கப்பல் கடலில் காணமல் போனது. இப்போது அது எங்கு இருக்கிறது என்று தெரியும். ஆனால் அது யாருக்குச் சொந்தமானது என்பதில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால், அதில் இருந்தது அத்தனையும் தங்கமும் இன்னபிற மதிப்புமிக்க பொருள்களும். அதன் மதிப்பு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய். அது 1708-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 தேதி. கொலம்பியா நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் சான் ஜோ…
-
- 1 reply
- 429 views
- 1 follower
-
-
பாரம்பரிய திருவிழாவில் ஒரே நாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டொல்பின்கள் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் 1,400-க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டன. பாரம்பரிய திருவிழாவை கொண்டாடிய ஃபேரோ தீவு மக்கள், படகுகள் மூலம் 1,428 டொல்பின்களை பிடித்து கரைக்கு எடுத்து வந்தனர். பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்தனர். இதனால் கடற்கரைப் பகுதி நீர் முழுவதும், இரத்தம் சிந்தப்பட்டு சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டொல்பின்கள் கொல்லப்பட்டதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/113350
-
- 0 replies
- 423 views
-
-
துருக்கியுடனான பதற்றம்: மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் கிரேக்கம்! கிழக்கு மத்திய தரைக்கடலில் துருக்கியுடன் பதற்றம் நீடித்து வருவதால், மேலும் ஆறு ரஃபேல் போர் விமானங்களை வாங்க கிரேக்கம் திட்டமிட்டுள்ளது. கிரேக்கப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் இதனை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன், கிரேக்க ஊடக அறிக்கையின்படி, ஏதென்ஸ் நான்கு புதிய போர் கப்பல்களை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஜனவரியில், கிரேக்கம் 18 விமானங்களுக்கு முன்பதிவு செய்தது. அவற்றில் 12 விமானங்கள் 2.5 பில்லியன் யூரோ ஒப்பந்தத்தில் கிரேக்கத்தின் பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டது. முன்னர் ஒப்புக்கொள்ளப்பட்ட 18 ரஃபேல் ஜெட் விமானங்களில், 12 தற்போது பிரான்ஸில் சேவையில…
-
- 0 replies
- 310 views
-
-
தனிப்பட்ட வாழ்க்கையை... ஆழமாக ஆராய, சீனா ‘சட்டங்களை’ அறிமுகப்படுத்துகிறது! சீன கம்யூனிஸ்ட் கட்சி (சிசிபி) சீன மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆழமாக ஆராய அதன் வேகத்தை அதிகரித்துள்ளது. ஏனெனில் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் டாலி யாங் கூறியுள்ளதாவது, “இப்போது பொழுதுபோக்கு மற்றும் பலவற்றின் விதிமுறைகளுடன், தேர்வுகளின் அனைத்துப் பகுதிகளும் கணிசமாகக் குறுகுவது போல் உணர்கிறது. குழந்தைகளுக்கான வீடியோ கேம் நேரத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பெற்றோர்களால் பாராட்டப்பட்டன. ஆனால் டிவி மற்றும் பொழுதுபோக்கு ந…
-
- 0 replies
- 203 views
-
-
ஆப்கானில் மனிதாபிமான நெருக்கடி: சர்வதேச சமூகத்திடம் ஒரு பில்லியன் டொலர்கள் நிதி கோரும் ஐ.நா.! ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியவர்களுக்கு உதவ, ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தலிபான் ஆளுகையில் உள்ள ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவி வழங்க சர்வதேச சமூகத்தை ஐக்கிய நாடுகள் சபை முறைப்படி கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானியர்களுக்கு உணவு, மருத்துவம், சுகாதார வசதிகள், சுத்தமான குடிநீர், சுகாதார வசதிகள் போன்றவை அத்தியாவசியமாக தேவைப்படுகிறது என்று ஐ.நா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு மிகவும் மோச…
-
- 0 replies
- 161 views
-
-
ஜப்பானின் பெரும்பகுதியை... தாக்கும் திறன் கொண்ட, ஏவுகணையை சோதித்தது வடகொரியா! வடகொரியா ஜப்பானின் பெரும்பகுதியை தாக்கும் திறன் கொண்ட புதிய நீண்ட தூர பயண ஏவுகணையை சோதித்துள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வடகொரிய அரசாங்கம் நடத்தும் கொரிய மத்திய செய்தி முகமையான கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பாதுகாப்பு அறிவியல் அகாடமி செப்டம்பர் 11ஆம் மற்றும் 12ஆம் ஆகிய திகதிகளில் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது என்றும், இரண்டு வருடங்களாக ஆயுதங்கள் வளர்ச்சியில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் மற்றும் விரோதப் படைகளின் இராணுவ சூழ்ச்சிகளை வலுவாகக் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கையாக இந்த சோதனை மூலோபாய மு…
-
- 0 replies
- 227 views
-