உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26634 topics in this forum
-
501,472’ பேரை காவு கொண்டது கொரோனா! – கோடியைத் தாண்டியது தொற்று! சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, பிரேஷில், ரஷ்யா, ஸ்பைன், பிரித்தானியா மற்றும் இத்தாலி எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அழித்து வருகின்றது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (28) மதியம் 1 மணி வரை 213 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 10,090,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களில் 501,472 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5,466,895 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இப்போது வரை 4,122,080 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் (Active Case) சி…
-
- 0 replies
- 360 views
-
-
சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு: நாசா வீரர்கள் விண்வெளியில் நடைபயணம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பதிவு: ஜூன் 28, 2020 07:30 AM வாஷிங்டன், விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் அமெரிக்கா, ரஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச சேர்ந்த விண்வெளி வீரர்கள் சுழற்சி முறையில் தங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவை சேர்ந்த கிறிஸ் கஸ்சிடி, ரோபர்ட் பென்கென் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நிக்கல்ஹைட்…
-
- 0 replies
- 478 views
-
-
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்தது - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 25 லட்சத்தை கடந்து, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பதிவு: ஜூன் 28, 2020 06:37 AM வாஷிங்டன், வல்லரசு நாடான அமெரிக்கா, கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் திணறிக்கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கி இன்றைக்கு உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அலை கடுமையாக வீசிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலும் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. …
-
- 0 replies
- 244 views
-
-
ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம்:சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் அமெரிக்கா வர தடை ஹாங்காங் தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பதிவு: ஜூன் 27, 2020 10:19 AM வாஷிங்டன் ஹாங்காங்கிற்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை இயற்றிய சீனாவின் ஆளும்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்கா வர விசா வழங்கப்படாது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ அறிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய மைக் பாம்பியோ ஹாங்காங்கின் சுதந்திரத்தை பறித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியை தண்டிக்கப் போவதாக ஜனாதிபதி டிரம்ப் உறுதியளித்திருந்ததன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்ப…
-
- 0 replies
- 487 views
-
-
ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 6,20,794 ஆக அதிகரிப்பு ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,800 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய சுகாதார அதிகாரிகள் தரப்பில், “ ரஷ்யாவில் நேற்று மட்டும் 6,800 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் 813 பேர் கரோனா தொற்றால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர் ரஷ்யாவில் இதுவரை 6,20,794 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,781 பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே ஒவ்வொரு நாளும் 7 ஆயிரத்துக்கும் அதிக…
-
- 0 replies
- 350 views
-
-
இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவ கவச வாகனங்கள்..! ஐ.நா அமைதிகாக்கும் படைக்கு அனுப்பபடுகிறது.. இலங்கை இராணுவ பொறியியல் பிரிவினால் தயாரிக்கப்பட்ட 9 கவச வாகனங்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா இன்று பத்தரமுல்ல இராணுவ தலமையகத்தில் பார்வையிட்டிருக்கின்றார். ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் இலங்கை படையினரின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டவை மாலிக்கு இலங்கை இராணுவத்தினாரால் கையளிக்கப்பட்டது.ஒன்பது கனரக கவச வாகனங்களையும் கண்காணித்து பரிசோதனைக்கு உட்படுத்தும் நிகழ்வு பத்தரமுல்லை இராணுவத்தலைமையகத்தில் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம் பெற்றது. இதன்போது ஒன்பது கனரக கவச வாகனங்களும் காட்சிப்படுத்தப்பட்ட…
-
- 1 reply
- 813 views
-
-
ஆஸ்திரியாவில் ஜூலை 1ஆம் திகதி விபச்சார விடுதி மீண்டும் திறப்பு! by : Anojkiyan ஆஸ்திரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஒரு பகுதியாக, எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி விபச்சார விடுதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார நடவடிக்கைகளை உருவாக்க நாட்டின் 8,000 பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களுடன், சுகாதார அமைச்சகம் செயற்பட்டு வருவதாக ஆஸ்திரியா பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில், வோக்ஷில்ஃப் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் ‘சோஃபி’ என்ற ஆலோசனை மையத்தின் தலைவரான ஈவா வான் ரஹ்டன், தொற்றுநோயால் பல பாலியல் தொ…
-
- 1 reply
- 417 views
-
-
சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலக அளவில் படைகளை நியமிக்க அமெரிக்கா பரிசீலனை! by : Anojkiyan சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, உலக அளவில் படைகளை நியமிக்க அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க வெளியுறவுச்செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஜேர்மன் மார்ஷல் நிதியத்தின் 2020 பிரஸ்ஸல்ஸ் மன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்தியா, மலேசியா, இந்தோனேசியா, மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளுக்கு சீனாவால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, மக்கள் விடு…
-
- 0 replies
- 443 views
-
-
ஒசாமா பின்லேடனை தியாகி என குறிப்பிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ;வலுக்கும் எதிர்ப்பு பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பதிவு: ஜூன் 26, 2020 12:01 PM பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை தியாகி என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை வெளியிட்டு இருந்த அறிக்கையி பயங்கரவாதிகளின் சொர்க்கபூமியாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு எந்த கடுமையான நடவடிக்…
-
- 0 replies
- 524 views
-
-
கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை - பெரும் கவலையில் உலக சுகாதார ஸ்தாபனம் உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடியை நெருங்கவிருக்கும் நிலையில், நோயாளிகளுக்கு தேவையான ஒட்சிசன் இருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் அதானோம் தெரிவித்துள்ளார். கொரோனாவால் உலகம் முழுக்க சுமார் 93 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 480,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது ஒரு வாரத்திற்கு 10 இலட்சம் பேர் என்ற விகிதத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவிவருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும் 88,000 பெரிய ஒட்சிசன் சிலிண்டர்கள் அல்லது 620,000 கன மீற்றர் ஒட்சிசன் பயன்படுத்தப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாள…
-
- 0 replies
- 353 views
-
-
ஐரோப்பாவிற்குள் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை விதிக்கப்படலாம்? எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல், வெளி எல்லைகளை மீண்டும் திறக்க திட்டமிட, ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த பேச்சுவார்தையின் போது, ஐரோப்பிய எல்லைக்குள் அமெரிக்கா நுழைவதற்கு அனுமதி மறுக்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் கருதுகின்றது. கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. சில ஐரோப்பிய நாடுகள் சுற்றுலாப் பயணிகளுக்காக தங்களது எல்லைகளை திறக்க ஆர்வமாக உள்ளன. ஆனால் மற்றநாடுகளில் வைரஸ் தொற்று பரவுவதால் இதுகுறித்து அந்நாடுகள் அச்சம் கொண்டுள்ளன. பாதுகாப்பான பட்டியலை முடிவெடுப்பதற்கு முன…
-
- 0 replies
- 599 views
-
-
லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம் லண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீசாரின் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன. பதிவு: ஜூன் 26, 2020 06:41 AM லண்டன் இங்கிலாந்தின் பிரிக்ஸ்டனில் நேற்றிரவு நடந்த சட்ட விரோத நிகழ்ச்சி குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்த சென்று தடுத்து நிறுத்த முயன்று உள்ளனர் . அப்போது ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில், போலீஸ் அதிகாரிகளை மிரட…
-
- 0 replies
- 418 views
-
-
கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியல் கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியலை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. பதிவு: ஜூன் 26, 2020 06:56 AM லண்டன் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான பொது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், அமெரிக்கா ,ஈரான், ஜெர்மனி போன்ற 10 நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தது.தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாலும், உயிரிழப்பு அந்தளவிற்கு இல்லாத காரணத்தின் காரணமாகவும், பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிகள் கொஞ்சம், கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகி…
-
- 0 replies
- 535 views
-
-
H1B, H2B விசாவுக்கான தடை நீடிப்பு: அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து அங்கு தங்கியுள்ளோர் வேறு வேலையைத் தேட வழியில்லை என்பதுடன், 60 நாட்களுக்குப் பினனர் கால நீட்டிப்பிற்காக அனுமதியும் கோர முடியாது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட முடக்கத்தைக் கருத்திற்கொண்டு H1B, H2B விசாவை நிறுத்தி வைத்துள்ள ஜனாதிபதி ட்ரம்ப், அந்தத் தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவர்களுக்கு வழங…
-
- 3 replies
- 626 views
-
-
அக்டோபரில் அமெரிக்காவில் கொரோனா இறப்புகள் 1.8 லட்சத்தை நெருங்கும் நிபுணர்கள் கணிப்பு அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 179,106 கொரோனா இறப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். பதிவு: ஜூன் 25, 2020 14:52 PM வாஷிங்டன் அமெரிக்கா முழுவதும் 23.8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 121,969 பேர் இறந்துவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது. உலகின் மொத்த நோய்த்தொற்றுகள் மற்றும் மொத்த உலகளாவிய இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு அமெரிக்காவில் உள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 179,106 கொரோனா இறப்புகள் ஏற்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆனால் முககவசம் 33,000 உயிர்களைக் காப்பாற்றும் என…
-
- 0 replies
- 357 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகபட்ச தொற்று ஆஸ்திரேலியாவில் கடந்த இரு மாதங்களில் இல்லாத அளவு ஒரே நாளில் அதிகபட்ச தொற்று பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் கடந்த 10 நாட்களாக இரட்டை இலக்க எண்களில் கரோனா பரவல் பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 33 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இங்கு சுமார் 270 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. மேலும் கடந்த 10 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனைகள் செய்…
-
- 0 replies
- 396 views
-
-
இதே நிலை தொடர்ந்தால் கொரோனாவை ஒழிக்க முடியாது...!! தலையில் அடித்துக் கதறும் ஐ.நா பொதுச் செயலாளர்..!! covid-19 தொற்றுநோயைக் கையாள்வதில் சர்வதேச நாடுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதது மிகவும் கவலை அளிக்கிறது என ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அந்தோணி குட்ரெஸ் விமர்சித்துள்ளார். covid-19 க்கு எதிரான போரில் பல நாடுகள் தனித்தனியாக கொள்கை வகுத்துக்கொள்வதன் மூலம் அந்த வைரஸை தோற்கடிக்க முடியாது எனவும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா தொற்றுக்கு எதிராக உலகளவிலான ஒருங்கிணைப்பு அவசியம் என்பதை உலக நாடுகளுக்கு புரியவைக்க வேண்டிய நிலை உள்ளது. நாடுகள் தனித்தனியே செயல்படுவதன் மூலம் பொதுக் கட்டுப்பாடுகள் மீறப்படும் சூழல் உருவாகியுள்ளது என …
-
- 0 replies
- 398 views
-
-
கொரோனாவால் பெண் குழந்தைகளுக்கே பெரும் பாதிப்பு- யுனெஸ்கோ விடுத்துள்ள எச்சரிக்கை! கொரோனா வைரஸ் பரவலினால் பெண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் கற்றலில் பாலின இடைவெளி ஏற்படலாம் என்றும் யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. யுனெஸ்கோவின் சர்வதேச கல்விக் கண்காணிப்பு அமைப்பின் ஆண்டறிக்கை வெளியாகியுள்ள நிலையில் இந்த விடயத்தை யுனெஸ்கோ கல்விக் கண்காணிப்புக் குழுவின் இயக்குநர் மனோஸ் ஆன்டோனினிஸ் (Manos Antoninis) தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை, கற்பவர்களின் குடும்பப் பின்னணி, அடையாளம், பாலினம், இருப்பிடம், இனம், வறுமை, இயலாமை, மொழி, மதம், இடப்பெயர்வு, நம்பிக்கை, அணுகுமுறை, பாலியல் அடையாள வெளிப்பாடு ஆகியவை உலகம் முழுவதும் உள்ள கல்வி முறைகளில் ஏற்பட்ட புறக்கணி…
-
- 0 replies
- 252 views
-
-
அபாயத்தின் உச்சத்தில் அமெரிக்கா: உலகம் அறிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்னும் மிக மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவிருப்பது உறுதியாகியிருக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையின் (United States Congress), எரிசக்தி மற்றும் வணிகத்துக்கான நிலைக்குழுவினர் (United States House Committee on Energy and Commerce) முன்னிலையில் சுகாதார நிபுணர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் அந்த அபாயத்தின் அறிகுறிகளைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இன்றைய தேதிக்கு அமெரிக்காவில் 24,24,492 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றனர். 1,23,476 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால், அதிபர் ட்ரம்ப்போ இவ்விஷயத்தில் தொடர்ந்து அலட்சிய…
-
- 0 replies
- 488 views
-
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா- இதெப்படி சாத்தியம் என வியக்கிறது மருத்துவ உலகம் மெக்சிகோ: புத்தம் புதிதாய் இந்த மண்ணில் வந்து பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் ஆச்சரியம், நம்பிக்கை, கனவு என எல்லாவற்றின் தொடக்கமுமாக அமையும் என்று உருகுவார் அமெரிக்க பெண் எழுத்தாளர் எடா ஜே லேசன். அப்படி ஒரு குழந்தை இந்த மண்ணில் வந்து உதித்த சில மணித்துளிகளில் உயிர்க்கொல்லி வைரசான கொரோனா பாதிப்புக்கு ஆளானால்? மனது கனத்துப்போகிறது. கொலைகார வைரஸ் என்று கொரோனாவை சொல்வது சரிதான். இப்படித்தான் மெக்சிகோ நாட்டில் நடந்திருக்கிறது. அங்கு ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ‘ட்ரிபுள் டமாக்கா’ என்று அந்தக் குழந்தைகளின் தாயு…
-
- 0 replies
- 689 views
-
-
ரஷியாவுடன் பனிப்போர் : விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்டஅமெரிக்கா...! நிலவை பிடிக்க பனிப்போர்: ரஷியாவை முறியடிக்க விண்வெளியில்,அணுஆயுதத்தை வெடிக்க செய்ய திட்ட மிட்ட அமெரிக்கா...! பதிவு: ஜூன் 24, 2020 09:55 AM வாஷிங்டன் விண்வெளி என்பது பிரபஞ்சத்தின் பொருட்கள் எல்லாம் நகர்ந்து செல்லக்கூடிய கிட்டத்தட்ட ஒரு வெற்றிடம் ஆகும். நகர்ந்து செல்லும் பொருட்களில் நமது பூமியும் அடங்கும். இந்த பரந்த விண்வெளியில் நட்சத்திரங்களும் கிரகங்களும் பூமியும் மிகமிக சிறிய புள்ளிகளே. விண்வெளி காலம் மனிதன், பூமி, நிலவு, கிரகங்கள், சூரியன் மற்றும் நட்சத்திரங்கள்…
-
- 0 replies
- 960 views
-
-
கொவிட்-19 முடக்கநிலையை மீண்டும் உள்ளூர் மட்டத்தில் அறிவித்தது ஜேர்மனி! இறைச்சி பதப்படுத்தும் ஆலையில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவத் தொடங்கியுள்ள நிலையில், ஜேர்மன் அதிகாரிகள் உள்ளூர் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருகின்றனர். சுமார் 360,000 மக்கள் வசிக்கும் கெட்டர்ஸ்லோ மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் திரும்பும் என்று வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் முதல்வர் ஆர்மென் லாஷெட் கூறியுள்ளார். முடக்கநிலை கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கும் என்றும், இந்த நடவடிக்கை ஒரு ‘தடுப்பு நடவடிக்கை’ என்றும் அவர் விபரித்தார். மே மாதத்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்த தொடங்கியதிலிருந்து, புதிதாக நடைமுறைப்படுத்தப்படும் என …
-
- 0 replies
- 281 views
-
-
பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி முதல் முடக்கநிலையில் தளர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு ஜூலை 4 ஆம் திகதிமுதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. குறித்த வைரஸ் பெருந்தொற்றால் பிரித்தானியாவும் பாதிப்புக்கு இலக்காகியிருந்த நிலையில், இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதை தொடர்ந்து முடக்க காலத்தில் அனுமதி…
-
- 0 replies
- 227 views
-
-
கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது; அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு இயக்குனர் கொரோனா வைரஸ் அமெரிக்காவை தலைகுனிய வைக்கிறது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் கூறி உள்ளார். பதிவு: ஜூன் 24, 2020 09:03 AM வாஷிங்டன் அமெரிக்காவில் 23 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், கிட்டத்தட்ட 121,000 பேர் இறந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் நேற்றைய நிலவரப்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது 25 மாநிலங்களில் அதிக புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன அவை அரிசோனா, கலிபோர்னியா, கொளராடோ, டெலாவேர், புளோரிடா, ஜார்ஜியா, ஹவாய், இடாஹோ, கன்சாஸ…
-
- 0 replies
- 362 views
-
-
கல்வானில் தாக்குதல் நடத்த சீன ராணுவம் உத்தரவிட்டுள்ளது: அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவல் கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சீனா உத்தரவிட்டது என்றுஅமெரிக்க உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மே 22-ம் தேதி பாங்கோங்டிசோ, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. கடந்த15-ம் தேதி இரவு இந்திய -சீன ராணுவ வீரர்களுக்குள் மோதல்ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 வீரர்கள் காய…
-
- 1 reply
- 506 views
-