Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கொவிட்-19: தடுப்பு மருந்துகளைக் காட்சிப்படுத்தியது சீனா! உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை பீஜிங்கில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக கடந்த 6 ஆம் திகதி சீனா காட்சிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சினோவக் பயோடெக் (Sinovac Biotech LTD) மற்றும் சினோபார்ம்(Sinopharm) ஆகிய இரு சீன நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள குறித்த மருந்துகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சந்தையில் விற்பனைக்கு வராத நிலையில், 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து நடப்பு ஆண்டின் இறுதிக்குள் குறித்த மருந்துகளின் விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமென உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  2. விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் தொடர்ந்த வழக்கு விசாரணை மீண்டும் லண்டன் நீதிமன்றில் ஆரம்பம் விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ் (Julian Assange), அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. கொரோனா நெருக்கடி காரணமாக இந்த வழக்கு விசாரணை பல மாதங்களாக நடைபெறாத நிலையில், மீண்டும் ஆரம்பமாகும் வழக்கின் தீர்ப்பு ஜூலியன் அசாஞ்சின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வழக்கு என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ், உலக நாடுகளின் இரகசிய ஆவணங்கள், மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், முறைகேடுகள், ஊழல் மற்றும் போர்க்குற்ற…

  3. ஜப்பானை அச்சுறுத்தும் சூறாவளி – 8.1 இலட்சம் மக்கள் வெளியேற்றம் ஜப்பானின் தெற்கு பகுதியை நோக்கி ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில், 8.1 இலட்சம் மக்களை அந்நாட்டு அரசு அங்கிருந்து வெளியேற்றியுள்ளது. இந்த சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கிருந்து மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருகிறது என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும் என்றும் மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹைஷென் புயல் இன்று காலை வடக்கு நோக்கி நகர்ந்து கியூசூ தீவை தாக்கும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, கு…

  4. சீனாவுக்கும் அமெரிக்காவுகுமிடையில் மோதல் வலுக்கின்றது சீனாவின் தொலைதொடர்பு மற்றும் கட்டுமானப் பணிகள் உட்பட 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா கொண்டுவந்த தடையை தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சிறீலங்கா விவகாரம் தொடர்பில் முரன்பாடுகள் வலுத்துள்ளன. கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமானநிலையங்களை நிறுவிய இந்த நிறுவனம் மீதான தடை சிறீலங்காவின் பொருளாதாரத்தை கடுமையாக பதிக்கும். இந்த நிலையில் சீனாவும் சிறீலங்காவும் இறைமையுள்ள நாடுகள் எனவும்> அமெரிக்காவின் நடவடிக்கை அனைத்துலகவிதிகளுக்கு எதிரானது எனவும் கொழும்பில் உள்ள சீனா தூதரகம் தெரிவித்துள்ளது. உலகத்தை அமெரிக்கா இராணுவமயப்படுத்தி வருவதாகவும், உலகில் உள்ள 70 நாடுகளி…

  5. கிரிஸ் போக்மேன் கேப் டி ஏக்டே, தெற்கு பிரான்ஸ் கடந்த சில நாட்களாக பிரான்சில் அதிக அளவிலான கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. சமீபத்தில் ஒரே நாளில் 7000 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக அந்நாட்டின் தென் பகுதியான ஹெரால்ட் மற்றும் கேப் டி ஏக்டேவில் அதிகளவில் கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. இந்த இரண்டுமே ஐரோப்பாவின் மிகப்பெரிய இயற்கை உல்லாசப் போக்கிடமாகும். இயற்கையுடன் ஒன்றி இன்பத்தை அனுபவிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வருவது வழக்கம். ஆனால், தற்போது இது அதிகளவில் கொரோனா பரவும் இடமாக மாறி வருகிறது. இப்பகுதிகளில் எல்லையில…

  6. 'கடனுக்குப் பாலியல் சேவை' என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று. ஆனால் கொரோனா வைரஸ் மலேசியாவில் இதை சாத்தியமாக்கி உள்ளது. கொரோனா விவகாரத்தால் பெரும்பாலானோர் வருமானத்தையும் ஊதியத்தையும் இழந்து தவிக்கின்றனர். இதைப் புரிந்துகொண்டு மலேசியாவில் இயங்கி வந்த சட்டவிரோத பாலியல் கும்பல் ஒன்று வெளியிட்ட நூதன மற்றும் கவர்ச்சிகர அறிவிப்பு, வாடிக்கையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறது. "முதலில் எங்கள் சேவையை அனுபவியுங்கள்... கட்டணத்தைப் பிறகு செலுத்துங்கள்," என்பது தான் அந்த அறிவிப்பு. வெளிநாட்டவர்களை குறிவைத்து இந்த அறிவிப்பை ரகசியமாக பரப்பிய அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தற்போது கைதாகி உள்ளனர். அண்மையில் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இந்தக்…

  7. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: அரசியல் விளம்பரங்களுக்குத் தடை விதித்தது பேஸ்புக்! September 5, 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அரசியல் விளம்பரங்கள் எதையும் வெளியிடுவதில்லையென, பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் கொரோனாத் தொற்று மற்றும் வாக்குப் பதிவுகள் தொடர்பானத் தவறான பதிவுகளும் நீக்கப்படவுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்தவகையில் வாக்குகளின் எண்ணிக்கை நிலவரம் குறித்த தவறான தகவல்களை தடுக்க வேட்பாளர்களின் அதிகாரபூர்வ பதிவுகளுக்கு மட்டும் இணைப்பினை வழங்கவும் பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…

  8. விடுதலைப்புலிகளை தீவிரவாத பட்டியலில் இருந்து நீக்கலாம்: மகாதீர் வலியுறுத்தல் 4 செப்டெம்பர் 2020, 14:34 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,BEHROUZ MEHRI/AFP/GETTY IMAGES படக்குறிப்பு, மகாதீர் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு இந்த ஆண்டின் துவக்கத்தில் தாம் கடிதம் எழுதியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். தாம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும், தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில்…

  9. கொரோனாவால் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி சிறுமிகள், பெண்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் கொரோனா தாக்கத்தால் வரும் 2021ஆம் ஆண்டிற்குள் 4.7 கோடி பெண்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுவார்கள் என ஐ.நா. ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டக் குழு சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின்படி கொரோனா தொற்று காரணமாக ஆண்களைவிட பெண்கள் அதிகளவில் வறுமைக்கோட்டிற்குகீழ் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கினை அடைய கொரோனா தொற்று தடையாக இருக்கின்றது. அத்துடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு சேவைகள், வீட்டு வேலைகள், தங்கும் விடுதி…

  10. வெனிசுவேலா ஜனாதிபதியை கொல்ல ட்ரம்ப் திட்டம்: அதிர்ச்சி தகவலால் பரபரப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட காணொளி பதிவில் அவர் கூறுகையில், ‘நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டொலர்கள் நிர்ணயித்துள்ளது. என்னை கொலை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் என்னை கொல்ல வெனிசுவேலாவில் துப்பாக்கி சுடும் குழுவை நியமிக்க முயற்சிக்கிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை ட்ரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார்’ என கூறினார். எனினும், வெனிசுவேலா ஜனாதிபதி, அமெரிக்கா தன்னை கொல்வதற்கு முயற…

  11. சவுதியின் வான் எல்லை வழியாக விமானம் பறக்க இஸ்ரேலுக்கு அனுமதி! இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரக உறவு தொடர்பான வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையேயும் விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சவுதி தனது வான் எல்லை வழியாக இஸ்ரேல் விமானம் பறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் விமானங்கள் இனி சவுதி வான்பரப்பை பயன்படுத்தி நேரடியாக ஐக்கிய அமீரகத்திற்கு செல்லலாம். அதேபோல் அமீரக விமானங்கள் சவுதி வான்பரப்பை பயன்படுத்தி இஸ்ரேல் செல்லலாம். இதன்மூலம் பயண நேரம் பல மணி நேரம் குறையும். இந்த நிகழ்வு சவுதி மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை தணித்து அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்…

  12. ஜப்பானில் 43பேர்- ஆயிரக்கணக்கான கால்நடைகளுடன் சரக்குக் கப்பல் மாயம்: ஒருவர் மீட்பு சூறாவளியின் போது மாயமான சரக்குக் கப்பலில் பயணித்த ஒருவரைக், ஜப்பானிய கடலோர காவல்படை மீட்டுள்ளது. 43பேர் மற்றும் 6,000 கால்நடைகளுடன் பயணித்த ‘வளைகுடா கால்நடை 1’ என்ற கப்பல், சூறாவளியில் சிக்கிய பின்னர் கிழக்கு சீனக் கடலில் இருந்து அவசர உதவி கோரி அழைப்பை அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், குறித்த கடற் பகுதியில் பாதுகாப்பு அங்கியுடன் கடலில் தத்தளித்த ஒருவரை மீட்டுள்ளது. புயலில் இருந்து அதிக அலைகள் மற்றும் பலத்த காற்றுக்கு மத்தியில், மீட்புக் குழுவினர், கப்பல் மற்றும் விமானங்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர். குற…

  13. சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்: இம்ரான் கான் சவுதி அரேபியா எப்போதும் பாகிஸ்தானின் நண்பன்தான் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் விவகாரத்தில், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (ஓஐசி) சர்வதேச அளவில் குரல் கொடுப்பதில்லையே என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு இம்ரான் கான் பதிலளித்துள்ளார். அதில், “ஆம். காஷ்மீர் விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். இருப்பினும் ஒன்றை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். சவுதி அரேபியா எப்போதும் எங்கள் நண்பன்தான்” என்று இம்ரான் கான் தெரிவித்தார். முன்னதாக, காஷ்மீர் விவகாரம் தொடர…

  14. தேடலில் இலங்கையை பின்தள்ளியது எத்தியோப்பியா 2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகுளில் ‘செக்ஸ்’ வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது. 2012ஆம் ஆண்டி…

  15. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங்கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து செயற்படாமல் தனித்து இயங்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக உலகளவில் இதுவரையில் 2 கோடியே 61 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 8 இலட்சத்து 67 ஆயிரத்து 347 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், உலக நாடுகள் பல தனியாகவும் ஒன்றாகவும் இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. எனினும் இதுவரையில் கொரோ…

  16. ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸே நவால்னிக்கு, நோவிசோக் எனப்படும் நச்சு ரசாயனம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, நச்சுயியல் பரிசோதனை முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் விமான பயணத்தின்போது மயங்கிய நிலைக்கு சென்ற நவால்னி, கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, அங்கிருந்து ஜெர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்திருப்பது ரஷ்ய அரச…

  17. 2009 இலி முடித்துவைக்கப்பட்ட இந்தியாவின் தலைமையிலான இனவழிப்புப் போரில் இந்தியப் போர்க்குழுவில் ( இதை நான் எழுதுவதால், ஐயோ, இதுமுறையோ, உங்களில் குற்றம் தேடாமல், மற்றையவர்களிடம் தேடுகிறீர்களே என்று ஒருவர் வருவார். அவர் மேனனின் தெரிவுகள் எனும் புத்தகத்தைப் படித்தால் இந்தக் குழுபற்றிய உண்மைகள் துலங்கும்) முக்கிய பங்காற்றிய அந்நாள் பாதுகாப்புத்துறை மற்றும் வெள்விவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது 84 ஆவது வயதில் மரணித்தார். மூளையில் ஏற்பட்ட நோய் ஒன்றிற்கு (2009 இற்குப்பிறகாக இருக்கலாம்) சத்திர சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகி கோமா நிலைக்குச் சென்று மரணித்திருக்கிறார் இந்த மனிதர். இந்திரா காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருடன் மிக …

  18. இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நேரடி விமான சேவை நேற்று ஆரம்பமாகியுள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த கடந்த 13 ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3 ஆவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் தன்னை உறுதிப்படுத்தியுள்ளது. இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரப…

  19. சிறீலங்காவில் இயங்கும் சீனா நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை சீனாவில் உள்ள 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தனது தடையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள சீனாவின் நிறுவனங்களும் அடங்கும். தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் நிர்மாணிக்கும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்கள் ஊடாக பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அந்த அரசின் அனுமதியை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமான நிலையம் போன்றவற்றை நிர்மானித்த நிறுவனங்கள் மீதும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இது இரு நாடுகளின் இறைமை தொடர்பான விடயம் அதில் அமெரிக்கா தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது. …

  20. 17 ஆண்டுகால மோதல் முடிவுக்கு வந்தது: சூடான் அரசு-கிளர்ச்சிப் படைகள் சமாதான ஒப்பந்தம் சூடானின் அரசாங்கமும் பிரதான கிளர்ச்சிக் கூட்டணியும் 17 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இன்று (திங்கட்கிழமை) சமாதான உடன்படிக்கைக்கு உடன்பட்டுள்ளன. மேற்கு பிராந்தியமான டார்பூரிடமிருந்தும், தென் மாநிலங்களான தெற்கு கோர்டோபன் மற்றும் ப்ளூ நைலிலிருந்தும் கிளர்ச்சிக் குழுக்களின் கூட்டணியான சூடான் புரட்சிகர முன்னணி (எஸ்.ஆர்.எஃப்) அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது அண்டை நாடான தெற்கு சூடானின் தலைநகரான ஜூபாவில் நடைபெற்றது. 2019 இன் பிற்பகுதியில் இருந்து நீண்டகால பேச்சுவார்த்தைக்கு தெற்கு சூடான் மத்தியஸ்தம் வகித்துள்ளது. இறுதி ஒப்பந்தம் பாதுகாப்பு, நில உடைமை…

  21. 4 ஆகஸ்ட் 2020, 16:53 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், AFP லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் இன்று சக்திவாய்ந்த வெடி சம்பவங்கள் நிகழந்தன. 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்புகள் வர இருக்கும் நிலையில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதல் வெடி சம்பவம் துறைமுக பகுதியில் நிகழ்ந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன. இரண்டாம் வெடிப்பு எங்கு நிகழ்ந்தது என தெரியவில்லை. இந்த வெடிப்பு குறித்த சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய அதிகாரபூர்வ அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. கொலை வழக்கு 2005ஆம் ஆண்டு முன்னாள் ப…

  22. விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு ஓராண்டுக்கு பயணம் செய்ய தடை: வெஸ்ட் ஜெட் விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. செப்டம்பர் 1ஆம் முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும், பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டால், விமானம் திரும்பி அதன் தொடக்க நிலைக்குத் திரும்பும் என வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் கூறுகையில், “பயணிகள் முதலில் விமான ஊழியர் குழு…

  23. மொரிஷியஸ் தீவுக்கு அருகில் 40 டொல்பின்கள் உயிரிழப்பு சிதைவடைந்த ஜப்பானிய கப்பலிருந்து வெளியேறிய எண்ணெய் கசிவானது கடல் நீரை மாசுபடுத்தியுள்ளது. இதன் காரணமாக கிழக்கு ஆபிரிக்காவின் மொரிஷியஸ் தீவுக்கு அருகில் குறைந்தது 40 டொல்பின்கள் உயிரிழந்து கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் கடலில் எண்ணெய் கசிந்து வரும் ஜப்பானிய கப்பல் குறித்து விசாரிக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அதேநேரம் குறித்த கப்பலும் திங்கட்கிழமை அகற்றப்பட்டது. சுமார் 4000 டொன் எரிபொருளை ஏற்றுக் கொண்ட பயணித்த எம்.வி.வகாஷியோ என்ற ஜப்பானுக்கு சொந்தமான இந்த கப்பலானது ஜூலை 25 அன்று மொரீஷியஸ் பகுதியில் ஒரு ஒரு பவளப்பாறையுடன் மோதி விபத்துக்குள்ளானது. …

  24. சுவீடனில் குரானை எரித்த தீவிர வலதுசாரி அமைப்பு: கலவரமாக மாறிய போராட்டம் EPA சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறது போலீஸ். போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கல் எரிவதாகவும், கார் டயர்களுக்கு தீ வைப்பதாகவும் போலீஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி முகமை. மேலும் குரான் எரிக்கப்பட்ட அதே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.