Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும் பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரை நீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்து வருகிறது. இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாக கேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது. இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்கு பயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம் 'தெளிவாக' உள்ளது. பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்கு எடுக்கும் முயற்சிகள் சில நாட்களா…

  2. ஜப்பான் - டோக்கியோ நகரில் ஏற்பட்ட 8.8 ரிச்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜப்பானிய தொலைக்காட்சி ஒன்றின் தகவலின் படி ஏற்பட்ட சுனாமியினால் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான கார்கள் கடல் நீரில் அடித்து செல்லப்பட்டதனை சற்றலைற் படம் காட்டியதாக கூறப்படுகின்றது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இலங்கை நேரப்படி இன்று காலை அதிகாலை 12.46 அளவில் 8.8 ரிச்டர் அளவில் நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 6 மீற்றர் உயரத்திற்கு கடல் நீர் உட்புகுந்துள்ளதாக டோக்கிய நகரிலிருந்து 400 கிலோமீற்றருக்கு அப்பால் 20 ம…

    • 90 replies
    • 9.9k views
  3. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது புதிய வழக்குப்போடப் போவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். ஜெயலலிதா சிறைக்குப் போவதற்கு முன்பு சாமி மீது ஐந்து அவதூறு வழக்குகளைப் பதிவு செய்தது தமிழக அரசு. ஆனால் அதன் மீதான விசாரணைக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் பதிவு செய்யப் போவதாக சாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், ஜெயலலிதா மீது புதிதாக ஒரு வழக்குப் போடப் போகிறேன். தமிழக அரசுடன் வர்த்தக் தொடர்பை மேற்கொண்டு வரும் 12 பினாமி நிறுவனங்கள் குறித்தது இது என்று அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=119852&category=IndianNews&language=tamil

  4. நொய்டா கொலைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் நொய்டா அருகில் உள்ள நித்ரி எனும் ஊரில் 31 செக்டரில் அமைந்துள்ள ஒரு பணக்கார விட்டில் அவ்வூரில் காணாமல் போன குழந்தைகளின் எலும்புகள் கண்டு எடுக்கப்பட்டன. இது தொடர்பாக மொய்ந்தர்சிங் எனும் வீட்டு சொந்தக்காரனும் அவனது வீட்டு வேலையாள் சுரேந்தர் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு போலிஸ் விசாரணையில் உள்ளனர். இந்நிகழ்வு இந்தியாவில் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் குற்றத்தை ஒத்துக்கொண்டு உள்ளான்ர். கற்பழித்து கொலை செய்தாக ஒத்துக் கொண்டு உள்ளானர் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்நிகழ்வில் காவல் துறையினர், ஏழைக்குழந்தைகள் காணாமல்…

  5. புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையால் தனியார் நிறுவனங்களுக்கு அதிக லாபம்! பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைப்பதற்காக அரசாங்கம் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்துவதால் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிரித்தானியாவிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க 395 ஹோட்டல்கள் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது. அதே நேரத்தில், ஹோட்டல்கள், வரிக்கு முந்தைய லாபத்தை 2.1 மில்லியன் பவுண்டுகளிலிருந்து 6.3 மில்லியன் பவுண்டுளாக உயர்த்தியுள்ளது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன. புகலிட அமைப்பு நம்பமுடியாத அழுத்தத்தில் இருப்பதாக உள்…

  6. போர் விதிமுறைகளை மீறி அப்பாவி மக்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது தொடர்பான ஆதாரங்களை, இந்த வாரத்தில் ஐ.நா. அறிக்கையாக வெளியிடுகிறது என்ற பரபரப்பு தகவலால் இலங்கை அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தின் போது, பொதுமக்கள் மீது இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு மற்றொரு சான்று கிடைத்துள்ளதை ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’என்ற இணையம் கடந்த வாரம் வெளியிட்டது. செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட இந்தப் படங்களில் பொதுமக்களின் சடலங்களைத் தெளிவாகக் காட்டமுடியவில்லை என்றும் அந்த இணையம் வேதனைப்பட்டுள்ளது.எனினும்,புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இதனை நிரூபிக்க முடியும் என்றும் ‘தெ கிறிஸ்டியன் சயன்ஸ் மானிடர்ஸ்’ குறிப்பிட்டுள்ளது. புவியியல் …

    • 0 replies
    • 750 views
  7. வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர் படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்…

  8. அமெரிக்க குடியேறிகள் விவகாரம்: பிரித்து வைக்கப்பட்ட 1800 குழந்தைகள் குடும்பத்துடன் சேர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீதிமன்றத்தின் காலக்கெடு உத்தரவின்படி குடியேறிகளாக அமெரிக்காவுக்கு பெற்றோர்களுடன் வந்த 1800 குழந்தைகளை, அவர்களின் குடும்பத்தினருடன் தங்கள் மீண்டும் சேர்த்து வைத்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETT…

  9. சீனாவின் வடபகுதியில், ஹெபேய் என்னும் மாகாணத்தில் சீனர்களை திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை. கிராமப்புறங்களில் உள்ள வறிய சீன ஆண்களை திருமணம் செய்த இந்தப் பெண்களை சீனப் போலிஸார் தற்போது தேடி வருகின்றனர். இந்த பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைக்க உதவியை பெண் கல்யாணத் தரகரையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது. இந்த திருமண ஏற்பாடுகளுக்காக இந்த தரகர் ஒவ்வொரு பெண்ணுக்கும் 16,000 டாலர்கள் வரை தரகுப் பணம் பெற்றிருக்கிறார். இந்தப் பெண்கள் ஒட்டுமொத்தமாக காணாமல் போனது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உள்ளூர் மாகாண அதிகாரி ஒருவர் செய்தி ஊடகங்களுக்கு கூறியுள்ளார். சீன ஆண்கள், சீனப் பெண்களை திருமணம் செய்வதாயின் அவர்களுக்க…

  10. லண்டன: தீவிரவாதி ஒசாமா பின்லேடன் வசித்து வந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் நான் ஜாகிங் போயுள்ளேன் என்று கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப். இதுகுறித்து அவர் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவ அகாடமிக்கு வெகு அருகே பின்லேடன் வசித்து வந்தது பெரும் ஆச்சரியமாக உள்ளது. இது பாகிஸ்தானுக்கும், அதன் ராணுவத்திற்கும் பெரும் தர்மசங்கடமான செய்தி. நான் பின்லேடன் வசித்து வந்த வீடு உள்ள பகுதியில் முன்பு ஜாகிங் போயுள்ளேன். கிட்டத்தட்ட 9 மைல்கள் அளவுக்கு நான் ஜாகிங் போவேன். அந்த வீட்டைக் கடந்தும் கூட நான் ஜாகிங் போயிருக்கலாம். நான் பாகிஸ்தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது பின்லேடன் குறித்த எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. இருப்பினும் உளவுத்துறையில் ச…

  11. "லேசர்" தொழில் நுட்பத்தில், புதிய சாதனை.. 3 பேருக்கு நோபல் பரிசு. 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 பேர் இணைந்து இந்த பரிசைப் பெறுகின்றனர். இந்த வருடத்திற்கான நோபல் பரிசுகள் நேற்றில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது. நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று 2018ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.கனடா, பிரான்ஸ், அமெரிக்கா நாட்டை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சின் ஜெரார்ட் மெளரு, கனடாவின் டோனோ ஸ்டிக்லேன்ட் ஆகியோருக்கு…

  12. வெள்ளிக்கிழமை, 15, ஜூலை 2011 (9:6 IST) அணுசக்தி மூலம் மின்சார உற்பத்தியை கைவிட ஜப்பான் முடிவு ஜப்பானில் புகுஷிமா அணுஉலைக்கூடத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கதிரியக்க கசிவு ஏற்பட்டது. விபத்து 4 ஆண்டுகளான பிறகும், கதிரியக்க கசிவு நின்றபாடில்லை. இதனால் சுவாசிக்கும் காற்றிலும் தண்ணீரிலும் கூட கதிரியக்கம் கலந்து உள்ளது. இதனால் அணுமின் நிலையங்களை மூடுவது என்ற முடிவுக்கு ஜப்பான் பிரதமர் கான் வந்து விட்டார். இதை அவர் புகுஷிமா அணுஉலைக்கூடத்துக்கு சென்றபோது தெரிவித்தார். அணுமின் உற்பத்தியை ஜப்பான் கைவிடுவது என்று தீர்மானித்து உள்ளது. இந்த முடிவு செயல்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் அணுஉலைக்கூடங்களே இருக்காது என்று அவர் தெரிவித்தார். ஜப்பானில் மொத்தம் உள்ள 54…

  13. பட மூலாதாரம்,DEAGOSTINI/GETTY IMAGES படக்குறிப்பு, நெப்போலியன் புரட்சி, போர் என்ற பாதையில் பயணிக்காமல் இருந்திருந்தால் ஒரு அறிவியல் அறிஞராக உருவாகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி உலகச் செய்தி 28 டிசம்பர் 2023 வரலாற்றில் மிகப் பெரிய ராணுவ ஜெனரல், பல வல்லுநர்கள் அங்கீகரித்துள்ளபடி, தீவிர எண்ணங்களைக் கொண்ட ஒரு மனிதர். அவருடைய அந்த எண்ணங்களில் ஒன்று அறிவியல். இது அவ்வளவு நன்றாக யாருக்கும் தெரியவில்லை. "நான் ஒரு பொதுத் தலைவன் என்பதுடன் ஒரு பெரிய அளவிலான மக்கள் தலைவராக இல்லாமல் இருந்திருந்தால் அறிவியலில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டு படித்…

  14. டிரம்ப் மட்டுமே அமெரிக்கா இல்லை – ஜேர்மனிய அமைச்சர் டிரம்ப் மட்டுமே அமெரிக்கா இல்லை என ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas தெரிவித்துள்ளார். ஜேர்மனிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த பல ஆண்டுகளாக ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்க விதத்தில் அதிகரித்துள்ளது. ஒரு ஜனாதிபதி மட்டுமே இரு நாடுகளுக்கிடையேயான உறவை முற்றிலுமாக அழித்து விட முடியாது. ரஷ்யாவுடனான எரிவாயு திட்டம் ஒன்றில் பங்கேற்பதற்காக தொடர்ந்து ஜேர்மனியை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்து வரும் நிலையிலும் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் காணப்படுகின…

  15. 'தொழிலுக்கு வயதில்லை'- பிரிட்டனில் சட்டம் பிரிட்டனில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒருவர் தொழிலொன்றிலிருந்து ஓய்வு பெற வேண்டிய (65 வயது) சட்ட ரீதியான வயது உச்ச வரம்பு முற்று முழுதாக நீக்கப்பட்டுவிட்டது. ஒருவர் 65 வயதை அடைந்தவுடன் வயதைக் காரணம் காட்டி அவரை தொழிலிருந்து நீக்குவதற்கு தொழில் வழங்குநருக்கு இருந்த அதிகாரத்தை இந்தப் புதிய சட்டம் இத்துடன் ஒழித்துவிட்டது. ஆனாலும், பிரிட்டனில் உள்ள தொழில் ஸ்தாபனங்களில் பத்தில் ஒரு நிறுவனம், ஊழியர்களை குறித்த ஒரு வயதில் ஓய்வு பெறச் செய்வதற்காக ஊக்குவிப்பு சலுகைகளை வழங்குவதாக நோர்ட்டன் ரோஸ் என்ற சட்ட நிறுவனமொன்று நடத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. …

  16. 26 மார்ச் 2024, 08:27 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. ஏழு பேர், பல வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தற்போது சம்பவ இடத்தில் இருக்கும் பால்டிமோர் நகர தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் காணொளிகளில் காண முடிகிறது. மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீட்டம் நீளம் கொண்ட இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீஸ் ஹெலிகாப்டர்கள் அப்பகுதியில் பலமுறை சுற்றிவருவதை விமா…

  17. அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் வெள்ளை மாளிகை பாதுகாப்பு மிகுந்த இடமாகும். அரசின் அறிவிப்புகள் வெளியாகும் இடம் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 40 ஆண்டுகளாக அங்கு வரும் சுற்றுலா பயணிகள் கேமிராவில் போட்டோ எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, அங்குள்ள பென்சில்வேனியா அவென்யூவில் செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவியும், அந்நாட்டின் முதல் குடிமகளுமான மிசெலி ஒபாமா 40 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறாக, போட்டோகிராபியை ஊக்குவிக்கும் வகையில் புதிய அடையாளத்துடன் வெள்ளை மாளிகை இனி திகழும் எனவும் தனது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள…

    • 0 replies
    • 332 views
  18. படத்தின் காப்புரிமை Getty Images Image caption பட்டுப்பாதை புதிய பட்டுப்பாதை திட்டம் எனும் சீனாவின் கனவுத் திட்டத்தில் இத்தாலியும் இணைந்திருக்கிறது. சீன அதிபர் ஜின்பிங்கின் ரோம் பயணத்தின் போது 2.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 29 ஒப்பந்தத்தில் இத்தாலி மற்றும் சீன தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், அதே நேரம் இத்தாலியின் இந்த முடிவானது அதன் மேற்கத்திய கூட்டாளி நாடுகளை கவலையுற செய்துள்ளது. சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தில் இணையும் ம…

  19. நேபாளத்தில் புயல் வீசியதில் 25 பேர் பலி Published : 01 Apr 2019 11:26 IST Updated : 01 Apr 2019 11:26 IST நேபாளத்தில் புயல் வீசியதில் இதுவரை 25 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நேபாள ஊடகங்கள், ''நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புயல் தாக்கியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 25 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளன. தவறவிடாதீர் விண்வெளியில் மிதக்கும் இந்தியா அழித்த செயற்கைக்கோளின் பாகங்கள்: அமெரிக்கா நேபா…

  20. பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார். தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார். "நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்று இளவழகன் கூறியுள்ளார். வேட்புமனு இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார். "போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள…

  21. 26 MAY, 2024 | 01:12 PM காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகர…

  22.  மலையாளிகளின் ஊதுகுழல்களான 'இந்து', 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஏடுகளுக்கு தமிழ் மண்ணில் என்ன வேலை? தமிழகத்தின் தலைநகராம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ‘இந்து' நாளிதழும், அதன் இரு வார இதழான பிரண்ட்லைன் ஏடும், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருகின்றன. ‘நடுநிலைமை', ‘நியாயமான செய்திப் பதிவு' தரமான இதழ்கள் என்று பிதற்றிக் கொண்டு அலையும் இந்தப் பத்திரிகைகளைச் சற்று கூர்ந்து படிப்பவர்கள் இவற்றின் சார்பு நிலையை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஏதோ அன்றன்று நிகழும் நிகழ்வுகளை அப்படியே வாசகர்களுக்கு செய்திகளாக வழங்குவது மட்டும்தான் இதுபோன்ற பத்திரிகைகளின் வேலை என்று சாதாரணமாக பத்திரிகைகளைப் புரட்டுவோர் …

  23. 'மிஸ்டர். மோடி... வெல்கம் டூ சிலிக்கான் வேலி!'- யு டியூப்பில் சுந்தர்பிச்சை வெளியிட்ட வீடியோ பிரதமர் மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா சபையில் நடைபெற்ற நிலையான பொருளாதார வளர்ச்சி மாநாட்டில் உலகத் தலைவர்களிடையே பேசிய அவர், மீடியா ஜாம்பவான் ராபர்ட் முர்டோக் உள்ளிட்ட தொழில் நிறுவன பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பிரபல 'ஃபோர்ச்சூன்' இதழ் ஏற்பாடு செய்திருந்தது. இதில், அமெரிக்காவின் 50 நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். போர்ட் நிறுவனத் தலைவர் மார்க் பீல்ட்ஸ், ஐ.பி.எம். தலைமை செயல் அதிகாரி ஜின்னி ராமட்டி, பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி உள்ளிட்டவர்கள் இதில் முக்கியமானவர்கள். இவர்களிடையே பேசிய பிர…

  24. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, அக்டோபர் 7, 2023ம் ஆண்டு பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்பதில் அரசும் பிரதமரும் தோல்வி அடைந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கட்டுரை தகவல் எழுதியவர், டியர்பைல் ஜோர்டன், ஆலிஸ் கடி பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஹமாஸ் இயக்கத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஆறு பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேல் ராணுவத்தினர் காஸாவில் இருந்து மீட்டது இஸ்ரேலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாடெங்கும் போராட்டங்களை நடத்தினார்கள். டெல் அவிவ், ஜெருசலேம் மற்றும் இதர நகரங்களில் தங்கள் நாட்டுக் கொடிகளுடன் ஒன்று கூடிய ஆயிர…

  25. இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒப்படைப்பு! இத்தாலியில் திருடப்பட்ட ஓவியம் ஒன்று 75 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கையளிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனிய அரசாங்கம் குறித்த ஓவியத்தினை மீண்டும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘Flower Vase’ என்பது ஓவியத்தின் பெயர். ஜோன் வான் ஹ்யூசெம் எனும் ஓவியரின் மிகச் சிறந்த ஓவியமாக அது கருதப்படுகிறது. மலர்களை மிக நுணுக்கமாக வரைவதில் வல்லவர் அவர். 1944ஆம் ஆண்டு நாஸி படைவீரர் ஒருவர் தனது மனைவிக்குப் பரிசளிக்கும் நோக்கில் குறித்த ஓவியத்தைத் திருடிச் சென்றதாய்க் கூறப்பட்டது. இந்தநிலையில் ஜேர்மனி குறித்த ஓவியத்தை இத்தாலியிடம் திருப்பிக்கொடுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.