உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26844 topics in this forum
-
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் முறுகல் அணுமூல கூறுகளை விநியோகிக்கும் நாடுகளின் குழுமத்தில் இந்தியாவை இணைப்பது தொடர்பில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழுமத்தில் 48 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதில் அங்கத்துவத்தை பெறுவதற்கு இந்தியாவும் முயற்சி எடுத்து வருகிறது. இந்தநிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் இடம்பெறும் அணுமூல கூறு விநியோக குழுமத்தின் மாநாட்டில் வைத்து அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவு வெளியிட்டிருந்தது. எவ்வாறாயினும், சீனாவின் அரச ஊடகம் தொடர்பில்லாத வகையில் இந்த குழுமத்தில் இந்தியாவுக்கு பதிலாக பாகிஸ்தானை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்…
-
- 0 replies
- 251 views
-
-
ஆப்கானில் மகப்பேற்று மருத்துவமனையில் கொடூரத் தாக்குதல்: பிறந்த குழந்தைகள் உட்பட 16பேர் உயிரிழப்பு! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள மகப்பேற்று மருத்துவமனையில், துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில், இரண்டு பிறந்த குழந்தைகள், அவர்களின் தாய்மார், தாதியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லைகளற்ற மருத்துவ அறக்கட்டளையின் மருத்துவர்கள் நடத்தும் ‘மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ்’ மகப்பேற்று மருத்துவமனையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் சீருடை அணிந்த குறைந்தது மூன்று தாக்குதல்தாரிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒரு மணிநேர நீண்ட போரா…
-
- 0 replies
- 421 views
-
-
உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்: உலக வங்கி by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக உலகநாடுகள் கடுமையான முடக்கநிலையை அறிவித்துள்ளன. இதனால் பெரும்பாலான நாடுகள் வருவாய் இல்லாமல் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் இதுகுறித்து உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், ‘உலக வங்கி மூலம் தற்போது, 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் கோடிக்கணக்…
-
- 0 replies
- 619 views
-
-
திறந்தவெளியில் மலம் கழிக்கும் இந்திய சுதந்திரம் Courtesy : The Hindu இந்தியா சுதந்திரம் வாங்கி 65 ஆண்டுகளாகி விட்டன. இரண்டாம் உலகப் போரில் நொந்து நூலான பிரிட்டன் விட்டுவிட்டு ஒடியதா அல்லது உண்மையிலேயே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் தாக்கத்தால் தான் சுதந்திரம் கிடைத்ததா என்பதே இப்போது சந்தேகமாக இருக்கின்றது. அதைவிடுங்கள் நாம் சுதந்திர தினத்தை எப்படிக் கொண்டாடுகின்றோம் என்றால் சுதந்திர தினத்தன்று கொடியேற்றிவிட்டு தேசியக் கீதத்தை ஒளிப்பரப்பி விட்டு மிட்டாய்களையோ, லட்டுக்களையோ பரிமாறிக் கொள்வோம். அதன் பின் என்ன டிவிக்களில் வரும் விதம் விதமான நடிகைகளைப் பார்த்து ஜொள்ளுவிடுவோம். மதியம் ஆகிவிட்டால் கறிச் சோறு அம்மா சமைக்க சாப்பிட்டு விட்டு எதாவது புதுப்படம்…
-
- 1 reply
- 1.2k views
-
-
“அமெரிக்காவின் அஸ்தமனம் சீனா மூலம் ஏற்படும்” பொங்கி எழுந்த வடகொரிய அதிபர்! அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. powered by Rubicon Project அமெரிக்கா சீனா சண்டை காரணமாக உலக அரசியலில் மிகவும் கொதிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது சீனாவிற்கு வடகொரியா நேரடியாக ஆதரவு அழைக்க தொடங்கி உள்ளது. சீனாவை அமெரிக்கா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் அமெரிக்காவிற்கு வடகொரியா கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியிட்டுள்ள செய்திக்கு குறிப்பில் சீனாவை தொடர்ந்து அமெரிக்கா நெருக்கி வருவதை ஏற்க முடியாது…
-
- 0 replies
- 287 views
-
-
பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டே. தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துவார். அவருடைய தலை வழுக்கையாக இருக்கும். உச்சந்தலையில் இருந்த முடிகள் ஒட்டு மொத்தமாக கொட்டி விட்டன. தலையின் இரு பக்கங்களில் மட்டும் முடி உள்ளது.ஆனால், இந்த முடியை அலங்காரம் செய்வதற்கு அவர் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார். இதற்காக மட்டும் மாதம் ரூ. 7 லட்சம் செலவு செய்வதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை பிரான்ஸ் நாட்டில் இருந்து வரும் கனார்டு என்ஜய்ன் என்ற வார பத்திரிகை வெளியிட்டுள்ளது.பிரான்ஸ் நாட்டில் பெரும்பாலான தலைவர்கள் ஆடம்பரம் மற்றும் அலங்கார பிரியர்களாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=161486&a…
-
- 0 replies
- 252 views
-
-
பிரெக்ஸிடிற்கு முன் ஜெர்மன் சான்சலர் மெர்கெலின் உதவியை நாடிய கேமரன் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதாக இல்லையா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் தோல்வி அடையாமல் இருப்பதற்காக கடைசி முயற்சியாக, ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கெலின் உதவியை நாடினார் என்று தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வாக்களித்தால், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் , ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் சுதந்திர நடமட்டம் குறித்த விதிமுறைகளை தளர்த்த ஒரு அறிக்கை விட ஒப்புக்கொள்ள தயாராக இருப்பார்களா என்று கேமரன் மெர்கெலை கேட்டுள்ளார் என்று பி பி சி புரிந்துகொள்கிறது. ஆனால் இறுதியாக …
-
- 0 replies
- 261 views
-
-
அமெரிக்க வீராங்கனையை சுண்டிப் பார்க்கும் அதிபர் புஸ் http://latimesblogs.latimes.com/washington...h-olympics.html
-
- 3 replies
- 4.4k views
-
-
விமானத்தில் இருந்து கீழே விழுந்த எண்ணெய் தாங்கி : மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் எண்ணெய் தாங்கி கீழே விழுந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாகப்பட்டிணத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான சூப்பர் சோனிக் மிக் 29 கே விமானத்தில் உள்ள 2 எண்ணெய் தாங்கிகளை சரி பார்ப்பதற்காக விமானத்தை ஓட்டிச் சென்றனர். அப்போது அதில் ஒரு எண்ணெய் தாங்கி விமானத்தை விட அதிகமாக எடை இருந்ததால் அதை கடலில் விழ வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென்று அந்த எண்ணெய் தாங்கி குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப…
-
- 1 reply
- 601 views
-
-
அரசுப் பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய டிரம்ப் உத்தரவு.. இந்தியர்களுக்கு சிக்கல்.. வாஷிங்டன்: அமெரிக்காவில் அரசு ஒப்பந்தப் பணிகளில் அமெரிக்கர்களை மட்டுமே எடுக்க வேண்டும், எச்1பி விசா வைத்துள்ளோரை எடுக்கக் கூடாது என அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இது இந்தியர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுதொடர்பான உத்தரவில் நேற்று கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் ஒரு முக்கியமான உத்தரவை பிறப்பித்து அதில் கையெழுத்திட்டுள்ளேன். மிக எளிய விதியின் கீழ் செயல்படும் வகையில் போடப்பட்ட இந்த உத்தரவின்படி, ஒப்பந்த பணிகளுக்கு அமெரிக்கர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே …
-
- 1 reply
- 777 views
-
-
வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு – ட்ரம்ப் வெளியேற்றம் வெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தப்பட்டதால் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனடியாக வெளியேறியுள்ளார். வெள்ளை மாளிகை அமெரிக்காவின் தலைநகர் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியிள் அதிகாரபூர்வ இல்லம் என்பதால் இந்த மாளிகையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். 24 மணி நேரமும் சிறப்பு பயிற்சி பெற்ற வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்த நிலையில், வெள்ளை மாளிகை பகுதி அருகே ஆயுதங்களுடன் மர்ம நபர் நடமாடியள்ளார். இதனையடுத்து, இரகசிய சேவை பாதுகாப்பு படையினர் அந்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்…
-
- 0 replies
- 341 views
-
-
துனிசியா எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக் கொலை: அரசுக்கு எதிராக போராட்டம் வெடிப்பு துனிசியா நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர், அவரது வீட்டு வாசலில் வைத்து இன்று புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இது ஒரு அரசியல் படுகொலை என்றே ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இவரது கொலையை அடுத்து நாடு முழுவதிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்துள்ளன. வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருந்த துனிசிய ஜனாதிபதி மொன்செஃப் மார்சோகி, தமது வெளிநாட்டு பயணத்தை இரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். இன்று இரவு அவர் நாடு வந்து சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. துனிசியா எதிர்க்கட்சி Unified Democratic Nationalist party தலைவரான சோக்ரி பெலாய்ட்,…
-
- 1 reply
- 299 views
-
-
பிரான்ஸில் குடியேறிகள் நெருக்கடியை கையாள பிரிட்டனுக்கு ஒல்லாந்து அழைப்பு பிரான்ஸின் வடக்கு பகுதியில் நிலவும் குடியேறிகள் நெருக்கடியை கையாள்வதில் பிரிட்டன் தனது பங்கை அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்ஸ்வா ஒல்லாந்து வலியுறுத்தியுள்ளார். கலெய் துறைமுகத்தில் ஒல்லாந்த் கலெய் துறைமுகத்திற்கு விஜயம் செய்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக பிரிட்டன் வாக்களித்துள்ளதால் மட்டும், பிரான்ஸிற்கான அதன் கடமைகளிலிருந்து பிரிட்டன் விடுபட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். குடியேறிகள் டிரக்குகளில் ரகசிய பயணம் மேற்கொள்வதை தடுக்க, பிரிட்டனின் நிதி உதவியுடன், முக்கிய சாலையில், சுவர் எழுப்பும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜங்…
-
- 0 replies
- 331 views
-
-
டொரண்டோவில் Queens Quay West பகுதி அருகே Gardiner Expressway என்ற இடத்தில் அருகேயுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது மாடியில் ஜன்னல் வழியாக திடீரென துப்பாக்கி சூடு மர்ம நபர்களால் நடத்தப்பட்டதாகவும், இந்த சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்தது என்றும் காவல்துறையினர் செய்தியாளர்களிடம் கூறினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் Highway at Spadina Avenue சாலையின் பல பகுதிகள் போலீஸாரின் விசாரணைக்காக மூடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் திறந்துவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் …
-
- 0 replies
- 358 views
-
-
சுட்டி http://vinavu.wordpress.com/2009/02/17/sswamy1/ கருத்துரிமை பற்றிய விவாதத்தில் இப்போதுதான் மையமான பிரச்சினை முக்கியத்துவம் பெற்றுள்ளது. உங்கள் வாதப்படி இந்த உலகில் எல்லோருக்கும் எல்லா நேரமும் எல்லா இடத்திலும் கருத்துரிமை வேண்டும் என்று பொருள் வருகிறது. இதை தடுப்பது கருத்துரிமை மீதான தடை அல்லது பாசிசம், சர்வாதிகாரம் என்று விளக்குகிறீர்கள். இந்த அணுகு முறையின் படி சுப்ரமணிய சுவாமிக்கு ராமர் பாலம் குறித்தும், தீட்திதர் கோவில் குறித்தும், ஈழம் குறித்தும் அவர் விரும்பியபடி கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. சு.சுவாமியின் கொள்கைகளில் உடன்பாடு இல்லையென்றாலும் அது தவறு என்று சுட்டிக்காட்டினாலும் அவருக்குள்ள கருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும். அதை முட்டை வீசி தடுப்பது…
-
- 0 replies
- 714 views
-
-
அமெரிக்க தேர்தல்: மீண்டும் பலத்தை நிரூபித்த இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தாரேந்திர கிஷோர் பிபிசி பட மூலாதாரம், GETTY IMAGES/TWITTER அமெரிக்கத் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு தலைவர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வெற்றி பெற்றுள்ளனர். டாக்டர் ஆமி பெரா, ரோ கன்னா, பிரமிளா ஜெய்பால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரே அந்த நால்வர். மும்பையில் பிறந்த 52 வயதான மருத்துவர் ஹெரல் திபிர்னெனி, குடியரசுக் கட்சி வேட்பாளர் டெபி செல்கோ ஆகியோர் இடையே அரிசோனாவில் கடுமையான போட்டி நிலவுகிறது. வாக்கு எண்ணிக்கை இங்கே இன்னும் தொடர்கிறது. …
-
- 0 replies
- 649 views
-
-
டொரண்டோவில் உள்ள king street west என்ற பகுதியில் இன்று நடந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் உயிருக்கு போராடிய நிலையில் டொரண்டோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். டொரண்டோவில் உள்ள king street west என்ற பகுதியில் இரண்டு இளைஞர்கள் இன்று அதிகாலை 2.00 மணிக்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இரண்டு மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் முன்னால் சென்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது சுட்டனர். துப்பாக்கி குண்டுகள் ஒரு இளைஞரின் பின்தலைப்பகுதியிலும், இன்னொரு இளைஞரின் தோள் மற்றும் கைகளிலும் பாய்ந்தன. இதனால் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்த இளைஞர்களை அவ்வழியே சென்று கொண்டிருந்தோர் மருத்துவமனையில…
-
- 0 replies
- 425 views
-
-
சிறிலங்கா, செசெல்ஸ் போன்ற நாடுகளில் நிலைகளை அமைக்க வேண்டும் என்ற இந்து சமுத்திரம் தொடர்பான இந்தியாவின் கொள்கை குறித்து சீனா கவலை கொண்டுள்ளதாக ஆயுதக் கட்டுப்பாடுகள் தொடர்பான அமெரிக்க நிபுணர் கலாநிதி லோறா சால்மன் தெரிவித்துள்ளார். சீனாவின் ஆயுதக்கட்டுப்பாட்டுக் கொள்கை, இந்திய - சீன மற்றும் சீன- ரஸ்ய மூலோபாய உறவுகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட கலாநிதி லோறா சால்மன், அது தொடர்பான விபரங்களை இந்திய ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார். நேற்று முன்தினம் இது தொடர்பாக ஹைதராபாத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசிய கலாநிதி லோறா சால்மன், “சீனாவில் உள்ள சில நிபுணர்கள், கடற்படைப் பலத்தில் சீனாவுக்குச் சமமாக இந்தியா இருக்கிறது அல்லது அதனை முறியடிக்கக் கூடிய நிலையில் உள்ளது என்று உணர்கிறார்கள…
-
- 0 replies
- 531 views
-
-
நாங்கள் இந்திய சமூக அமைப்பிலும் ஈழத்தின் ஆரம்பகால சமுக அமைப்பிலும் கூட்டுக்குடும்ப அமைப்பு முறை இருந்ததை அறிந்திருக்கிறோம்.ஈழத்தில் அது தற்போது வழக்கிழந்து போய்விட்டாலும் இந்தியாவில் நடுத்தர மேல்தட்டு வர்க்கத்தினரிடம் அது தொடர்வதை பார்த்தி;ருக்கிறோம்.இந்த கூட்டுக் குடும்ப அமைப்பு முறை ஆணாதிக்கத்தின் வடிவமாகவும் குடம்ப வன்முறையினதும் மாமியார் மருமகள் கொடுமையின் இருப்பிடமாகவும் இருப்பதாக சினிமாக்களிலும் சின்னத்திரைகளிலும் நிறையவே சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.இதிலே மிகைப்படுத்தப்பட்ட தகவல்கள் இருந்தாலும் மூத்த தலைமுறையின் ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் சுதந்திரத்துக்கான கட்டுப்பாடுகளும் இந்த கூட்டுக்குடும்ப முறையில் அதிகம் என்பது மறுக்க முடியாது. ஐரோப்பாவிலேஇதைப் போன்ற கூட்…
-
- 1 reply
- 591 views
-
-
Auto Trader print edition to stop as focus shifts to digital Trader Media Group, publisher of Auto Trader, will print the final edition of its magazine in June as it moves to become an online digital business. The last edition of its magazines, including Auto Trader, Top Marques, Truck and Plant, Van Trader and Farm Trader, will be published on June 28. The titles will continue online. The company, which is jointly owned by Guardian Media Group and private equity firm Apax Partners, said the decision to stop the print editions "marks the culmination" of its strategy to "migrate all its activities to digital platforms". Zillah Byng Maddick, Interim chief …
-
- 0 replies
- 449 views
-
-
உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அபாயகரமான முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு ஆளாகி பிழைத்துக்கொண்டேன். இப்போது மீண்டும் இரண்டாவது கண்டம். இந்த கண்டத்திலும் உனை காணுகின்ற வாய்ப்பை மீண்டும் பெற்று மருத்துவமனையிலே மகிழ்ச்சியோடு இருக்கிறேன். மகிழ்ச்சிக்கு காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதைப்போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருப்பது ஓர் உயிர். அது போகப்போவது ஒரு முறை. ஆனால் அது நல்ல காரியத்துக்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனை ஆண்டு காலமாக…
-
- 2 replies
- 1.7k views
-
-
உலக வல்லரசு நாடுகளின் பட்டியல் - 2017 நன்றி :நியுஸ்18தமிழ்நாடு "அய்யா உடம்பு சரி இல்லைங்கய்யா .." -தம்பி அங்க வானத்துல பாரு....அதான் மாங்கள்யான் !! "அய்யா பசிக்குதுங்கய்யா" - சனியனே அதோ பார் சந்திராயன் ..!! நீ பேசாம இருக்க மாட்ட? டிஸ்கி : கழுவி கழுவி ஊற்ற விருப்பமுள்ளவர்கள் .. எங்கிருந்தாலும் உடனே விழா மேடைக்கு வரவும் ..!!
-
- 2 replies
- 3.6k views
-
-
ஜனவரி 21ஆம் தேதி, மலேசிய காவல் துறையினரால் விரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிடப் பட்டதாகவும் பின்னர் அடிக்கப்பட்டதாலும் மரணமடைந்ததாகக் கூறப்படும் 40 வயதான காவலாளியான சி.சுகுமாரின் நல்லுடல் 141 நாட்கள் நீடித்த போராட்டத்திற்குப் பின்னர் இன்று செராசில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் மீது இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனையை தாய்லாந்து மருத்துவ நிபுணர் போர்ன்திப் ரோஜனாசுனாந்த் மூலம் மேற்கொள்வதற்கு அவரது குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் எடுத்த முயற்சிகள் யாவும் பலனளிக்கவில்லை. பிகேஆர் உதவித் தலைவரும், சுகுமாரின் குடும்ப வழக்கறிஞருமான என்.சுரேந்திரன், உள்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள தாங்கள் எடுத்த முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்ததாகக் கு…
-
- 0 replies
- 331 views
-
-
ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்முக் காஷ்மீர்ப் பகுதியில் ஆர்ப்பாட்டாக்காரர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஆறுபேரைக் கொன்றுள்ளதோடு இன்னும் பலரைக் காயப்படுத்தியிருக்கிறது. அப்பகுதியில் இருந்த பள்ளிவாசல் ஒன்றினுள் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முகாமின் முன்னால் கூடிய பொதுமக்கள் மீது எல்லைப் பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும் கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட பலர் காயமடைந்திருக்கிறார்கள். இத்தாக்குதல் சம்பவத்தையடுத்து இந்திய ஆக்கிரமிப்பிற்குற்பட்ட காஷ்மீர் பகுதியெங்கும் பரவலான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற…
-
- 0 replies
- 454 views
-
-
`லண்டன் தாக்குதல்தாரியை புலனாய்வு அமைப்புக்கு தெரியும்': உரிமை கோருகிறது ஐ.எஸ். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய தாக்குதல்தாரி பிரிட்டனை பிறப்பிடமாக கொண்டவர் என்றும், அவர் யாரென்று காவல்துறைக்கும், புலனாய்வு சேவை அமைப்புக்கும் தெரியும் என்ற தகவலையும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் காப்புரிமைPA/FACEBOOK Image captionஉயிரிழந்த கீத் பால்மர் மற்றும் ஐஷா ஃபிராடே இத்து தொடர்பாக பிரிட்டனின் பிரதிநிதிகள் சபையில் வெளியிட்ட அறிக்கையில், வன்முறை மிகுந்த தீவிரவாத நடவடிக்கைகள் தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த தாக்குதல்தாரி விசாரிக்கப்பட்டார் என்று தெரிவித்த தெரீசா மே , ஆனால் அவர் தொடர்புக்கு…
-
- 0 replies
- 405 views
-