Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இபோலா நோயாளிகளுக்கு களத்தில் முன்னின்று உதவி வருகிறது எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உயிர்க்கொல்லியான இபோலா நோய் பரவிவருவதைக் கட்டுப்படுத்துவதில் வெளிநாட்டு இராணுவங்கள் உதவ முன்வர வேண்டும் என எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தொண்டு நிறுவனம் சக்திமிக்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இபோலாவைக் கட்டுப்படுத்துவதற்காக களத்தில் முன்னின்று செயலாற்றுகின்ற இந்த அமைப்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள சூழ்நிலையால் திணறிவருவதாகக் கூறுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலாவால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே இரண்டாயிரத்து ஐநூறைத் தாண்டியுள்ளது.வெளிநாடுகள் உடனடியாக இராணுவத்தினரையும், மருத்துவ உதவிக் குழுக்களையும் அனுப்பி நோயைக் கட்டுப்படுத்த வேண்…

  2. ஒரு முட்டை உற்பத்திக்கு தேவை 196 லிட்டர் 'மறை நீர்'! 2 பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்? மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர். ஒரு பொருளுக்குள்…

  3. அவுஸ்­தி­ரே­லி­யா­வா­னது தனது தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலை மத்­திய மட்­டத்­தி­லி­ருந்து உயர்­மட்­டத்­திற்கு உயர்த்­தி­யுள்­ள­தாக அந்­நாட்டுப் பிர­தமர் டோனி அப்பொட் தெரி­வித்தார். ஈராக் மற்றும் சிரி­யா­வி­லான போரா­ளிகள் பிரச்­சி­னையால் உள்­நாட்டில் ஏற்­ப­டக்­கூ­டிய விளைவு குறித்து கவலை அதி­க­ரித்­துள்­ளதை கவ­னத்திற் கொண்டே இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி போராளிக் குழு­வுடன் இணைந்து பணி­யாற்றும் அல்­லது அதனால் ஈர்க்­கப்­படும் அவுஸ்­தி­ரே­லி­யர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வது குறித்து அந்­நாட்டு பாது­காப்பு அதி­கா­ரிகள் கவ­லை­ய­டைந்­துள்­ளனர். எனினும் திட்­ட­மி­டப்­பட்ட தாக்­குதல் ஒன்று தொடர்பில் குறிப்­பி­டத்­தக்க புல­னாய்வுத் தகவல் எதுவும் தமக்க…

  4. இளைஞனைக் கத்தியால் குத்திய நான்கு இலங்கையர்களைத் தேடுகிறது பிரித்தானியப் பொலிஸ் லண்டனில் 24 வயதான இளைஞன் ஒருவரை தலையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற நான்கு இலங்கையர்களை பிரித்தானியப் பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் லண்டன் மிட்சம் பகுதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் 24 வயதான இளைஞரின் தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு நான்கு இலங்கையர்கள் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதில் ஒருவர் 5 அடி 7 அங்குல உயரமான விளையாட்டு வீரர் போலத் தோற்றமளித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. seithy.com

  5. 'எச்ஐவி' இல்லா சான்றிதழ் தந்தால்தான் திருமணம்: தமிழகத்துக்கு வழிகாட்டும் தேனி மாவட்ட கிராமம் எச்ஐவி நெகட்டிவ் எனச் சான்றிதழ் தந்தால் மட்டும் திருமணம் செய்யும் வழக்கத்தை கட்டாயமாக்கி, தமிழகத்துக்கே வழிகாட்டுகிறது தேனி மாவட்டத்தில் உள்ள கருங்கட்டான்குளம் கிராமம். இக் கிராமத்தின் சேவையை உயர் நீதிமன்றம் பாராட்டியது. ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மையால் திருமணங்கள் தோல் வியில் முடிவதைத் தடுக்க, திருமணத்துக்கு முன் ஆணுக் கும் பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும் திட்டத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்வைத்தது. இப்பிரச்சினைக் குத் தீர்வுகாணும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான சிறப்பு விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வி…

  6. அமெரிக்க யுத்த விமானம் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அமெரிக்காவுடைய புதிய தாக்குதல் வியூகத்தின் கீழ் அந்த ஜிகாதி குழுவின் நிலைகள் மீது அமெரிக்கப் படைகள் முதல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. மோதல்களில் இராக்கிய பாதுகாப்பு படைகளுக்கு நேரடியாக ஆதரவு வழங்கும் நோக்கத்தில், அமெரிக்காவின் யுத்த விமானங்கள் இராக்கின் வட பகுதியிலும் பாக்தாத் அருகிலும் உள்ள இலக்குகள் மீது குண்டுகள் வீசியுள்ளன. அதிபர் ஒபாமா இந்த புதிய வியூகத்தை சென்ற வாரம் அறிவிப்பதற்கு முன்பாக, அமெரிக்கப் படையினரை பாதுகாக்கும் நோக்கிலோ அல்லது மனிதாபிமான நோக்கங்களுக்காகவோதான் முன்னதாக நடத்தப்பட்ட வான் தாக்குதல்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று வாஷிங்டன் கூறியிருந்தது. சமீபத்தில் இராக்க…

  7. இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | படம்: பிடிஐ 9 மாநில இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கை ஓங்கியுள்ளது; ராஜஸ்தானிலும் ஆளும் பாஜகவுக்கு படுதோல்வி ஏற்பட்டுள்ளது. மூன்று மக்களவை மற்றும் உ.பி.யின் 11, ராஜஸ்தானின் 4, குஜராத்தின் 9, மேற்கு வங்காளத்தின் 2, அசாமின் 3 மற்றும் சிக்கிம், திரிபுரா, சத்தீஸ்கர் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தலா ஒன்று என மொத்தம் 33 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அத்தனை தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக அமையவில்லை என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குஜராத் …

  8. 2016-அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரி விருப்பம் இண்டியனோலா:அமெரி்க்காவின் மாஜி அதிபர் பில் கிளிண்டனில் மனைவியும் மாஜி வெளியுறவு அமைச்சரும்ான ஹிலாரி.ஜனநயாக கட்சியில் முக்கிய தலைவராக இருக்கிறார்.2016ல் நடக்கவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஹிலாரிக்கு ஆர்வம் உள்ளதாக தெரியவந்துள்ளது.இது குறித்து நேற்று அயோவா மாகாணத்தின் டெஸ் மோய்னஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சி பிரசார கூட்டத்தில் ஹிலாரி கலந்துகொண்டு பேசினார்.அப்போது இது குறித்து கேட்டபோது அதிபர் தேர்தல் என்றாலே எனக்கு உற்சாகம் வந்துவிடுவதாக அவர் தெரிவித்தார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1071607

  9. கர்நாடகாவில் சூடு பிடிக்கும் இந்தி எதிர்ப்பு போராட்டம். இந்தி திணிப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளித்தனர் கன்னட மக்கள் ! இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் அறிவோம். இந்தியை மட்டுமே ஒற்றை ஆட்சி மொழியாக்கி மற்ற தொன்மையான மொழிகளை எல்லாம் இரண்டாம் தர மொழிகளாக இந்திய அரசு பாவித்து வருகிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் வகையில் இந்தி அல்லாத பிற மொழிகளை இந்திய அரசு புறக்கணித்து வருகிறது. இது உலகில் மிகப்பெரிய மொழித் தீண்டாமை ஆகும். இந்தி தெரியாவிட்டால் தமிழகத்தை தாண்ட முடியாது , சென்னையை தாண்ட முடியாது , வீட்டை தாண்டி வெளியே வர முடியாது என்றெல்லாம் பொய்யான திணிப்பு பரப்புரைய…

  10. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் வருகிற 20 ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துப்பட்டியல் விவரம்... 1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும் 3. ஐதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம். 3. ஐதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்) 4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம். 5. செய்யாறு கிராமம், சர்வே எண்…

    • 2 replies
    • 1.3k views
  11. லடாக்கில்.... 100 இந்திய வீரர்களை. 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்? டெல்லி: ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 100 இந்திய வீரர்களை 300 சீன ராணுவத்தினர் முற்றுகையிட்டிருப்பதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சீனா இடையே உறுதியான எல்லைக்கோடு வரையறுக்கப்படவில்லை. இதனால் இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. காஷ்மீரின் லடாக் பகுதியில் புர்ட்சே என்ற இடத்தில் கடந்த மாதம் 25 கி.மீ தூரம் சீனப் படையினர் ஊடுருவினர். இந்திய ராணுவத்தினர் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் லடாக் பகுதியில் டெம்சாக் என்ற இடத்தில் சீன வீரர்கள் 30 பேர் கடந்த 11ந் தேதி 500 மீட்டர் தூ…

  12. பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் ஐக்கிய ராஜ்ஜியத்திடமிருந்து ஸ்காட்லாந்து பிரிந்துபோவது பற்றிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பற்றி பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் முதல் முறையாக தனது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். மக்கள் வியாழக்கிழமை தங்கள் வாக்குகளை போடும் போது எதிர்காலத்தைப் பற்றி கவனமாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். அவரது கருத்துக்கள் ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு எதிரானவர்களுக்கு ஆதரவானதாக அவர்களால் கூறிக்கொள்ளப்படலாம் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் பக்கிங்காம் அரண்மனை அதிகாரிகளோ இந்த கருத்துக்கள், அரசி, பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின்படி வகிக்கும் பக்கசார்பற்ற நிலையை மீறவில்லை என்று கூறுகிறார்கள். பிரிட்டிஷ் …

  13. பிரித்­தா­னிய ஐக்­கிய இராச்­சி­யத்­தி­லி­ருந்து ஸ்கொட்­லாந்து பிரிந்து செல்­லப்­போ­கி­றதா? உலக அரங்கில் தற்­போ­தைய மிகப்­பெ­ரிய கேள்­வி­களில் ஒன்று இது. ஸ்கொட்­லாந்து பிரிந்து தனி நாடாக வேண்­டுமா? என்­பது தொடர்­பான சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் எதிர்­வரும் 18 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை ஸ்கொட்­லாந்து மக்கள் வாக்­க­ளிக்­க­வுள்­ளனர். இதில் ஆம் என அதி­க­மானோர் வாக்­க­ளித்தால் இரு வரு­டங்­க­ளுக்குள் ஸ்கொட்­லாந்து சுதந்­திர தனி நாடா­கி­விடும். இங்­கி­லாந்து, ஸ்கொட்­லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்­லாந்து ஆகி­ய­ன­வற்றை இணைத்­துதான் ஐக்­கிய இராச்­சியம். முன்னர் அயர்­லாந்தும் பிரிட்­ட­னுடன் இணைந்­தி­ருந்­தது. ஆனால் 1922 ஆம் ஆண்டு அயர்­லாந்து சுதந்­திரம் பெற்று தனி நாடா­கி­யது. அயர்­ல…

  14. அடல் பிஹாரி வாஜ்பாய் - வாழ்க்கை வரலாறு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், 3 முறை பிரதம மந்திரி பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், முன்னாள் ஜன சங்கம் அரசியல் கட்சியை (இன்றைய பாரதிய ஜனதா கட்சி) நிறுவினார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அவர், பாரதிய ஜனதா கட்சியின் ஆணிவேரென்று அக்கட்சி உறுப்பினர்களால் அழைக்கப்படுகிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்ம விபூஷன்’ விருதை வென்ற அவர், ஒரு சிறந்த கவிஞரும் கூட. அவர், ‘ட்வென்டி-ஒன் போயம்ஸ்’, ‘க்யா கோயா க்யா பாயா: அ…

  15. செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்; 95 சதவீத பயணம் நிறைவானதாக அறிவிப்பு! இன்னும் 10 தினங்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிய நீள்வட்டப் பாதையில் நுழைந்துவிடும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகமான இஸ்ரோ அறிவித்துள்ளது. 450 கோடி ரூபாவில் ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 5 ஆம் திகதி, ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. சூரியனைச் சுற்றிய ஒரு நீள்வட்டப் பாதையில் விநாடிக்கு 22.47 கி.மீ. என்ற வேகத்தில் மங்கள்யான் பயணிக்கிறது. செவ்வாய்க்கிரகத்தை நோக்கிய அதன் பயணம் சுமுகமாகத் தொடர்ந்து வருகிறது. தற்போது பூமியில் இருந்து 2110 இலட்சம் கிலோமீட்டர்…

  16. உலகின் மிகச்சிறந்த மலையேறிகளில் ஒருவர் தமிழ்நாட்டிலும்! : ஆனால் வேறுவடிவில்! (காணொளி இணைப்பு) BY TRT தமிழ் ஒலி செய்திப்பிரிவு on 14 செப்ரெம்பர் 2014 Monkey_King Monkey King என்பது இவருக்கு வைக்கப்பட்ட பெயர். எந்தப் பாதுகாப்பு அணிகலன்களும் இல்லாது மிக உயரமான மலையேறும் வீரர்களில் இவருக்கு முதலிடம் கூட கொடுக்கலாம். தமிழ்நாட்டின் குக்கிராமம் ஒன்றில் பிறந்து, இளம் வயதிலேயே கோயில் ஒன்றில் அனாதரவாக கைவிடப்பட்ட ஜோதி ராஜ் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்ய முடிவெடுத்து இப்பாரிய கற்குவியல் இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அங்கு ஒரு உயரமான கற்பாறை ஒன்றின் மீது ஏறி உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்வது அவர் தீர்மானம். ஆனால் உச்சிக்கு ஏற வழி ஒன்றும் இல்லாததால், குரங்கைப் பார்த்து அதே …

  17. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் எண்ணிக்கை மூன்றே மாதங்களில்3 மடங்கு அதிகரித்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அறிவித்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும். ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம்…

  18. குழந்தை திருமணம் - இரண்டாம் இடத்தில் இந்தியா news தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிராந்தி யத்தில் சுமார் 46 சதவீத பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதில் 18 சத வீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள். குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இட…

  19. அண்மையில் சிரியாவில்ஆரச விமானப்படைத் தளத்தைக் கைப்பற்றிய ஐஸிஸ் எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள், முகாமை விட்டு பாலைவனத்திற்குள் தப்பியோடிய சிரிய ராணுவத்தினர் 200 பேரைக்கைதுசெய்து, உள்ளாடையுடன் மட்டுமே நடத்திச்சென்று பின்னர் கூட்டாகக் கொன்றுதள்ளியது நினவிலிருக்கலாம். 2009 முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவப் பேய்களின் தமிழினம் மீதான படுகொலையினை அடிப்படையாக வைத்தே இந்தப் படுகொலையும் நடத்தப்பட்டிருக்கிறது. முள்ளிவாய்காலில் முழுநிர்வாணப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டது தமிழினம். இங்கே ஐஸிஸ் பேய்களால் அரைநிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிரார்கள் சிரிய ராணுவ வீரர்கள். ஐஸிஸ் பயங்கரவாதம் இதோ... http://us.tomonews.net/ISIS-says-it-executed-more-than-200-captured…

  20. இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலநடுக்கம் மூலம் அதிக அளவில் சுனாமி பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் கூறுகையில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய- ஆஸ்திரேலிய நிலத்தட்டுகள் சந்திக்கும் சுமத்ரா- அந்தமான் பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலநடுக்கங்களால் உருவானவை. அங்கு படிந்துள்ள மணலை ஆராய்ச்சி செய்த அவர்கள் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி குறித்து வரலாற்று பதிவ…

  21. வழக்கை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர் இந்திய மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் இத்தாலிய கடற்படையினர் இருவரில் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக இத்தாலி திரும்ப இந்திய உச்சநீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. மாலிமிலினோ லத்தோர் மற்றும் சால்வடோர் ஜிரோன் ஆகிய இரு இத்தாலிய கடற்படையினரும், இத்தாலிய எண்ணெய்க்கப்பல் ஒன்றில் பாதுகாப்புக்காக பயணித்து வந்த போது, இந்தியாவின் கேரளாவை ஒட்டிய கடல் பகுதியில், 2012 பிப்ரவரி மாதத்தில், இரு இந்திய மீனவர்களை சுட்டுக்கொன்றதாகக் கைது செய்யப்பட்டனர். அந்த மீனவர்கள் வந்த படகை தாம் கடற்கொள்ளையர்கள் படகு என்று தவறுதலாக நினைத்து சுட்டதாக அவர்கள் கூறினர். இந்த வழக்கு இந்தியாவில் நடந்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் இ…

  22. புகழ்மிக்க தென்னாப்பிரிக்க பாராலிம்பிக் வீரர் ஆஸ்டர் பிஸ்டோரியஸ் மீது திட்டமிட்ட கொலையின் வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்தல் என்ற குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. தீர்ப்பு வாசிக்கப்பட்ட நேரத்தில் பிஸ்டோரியஸ் தவறுதலாக தனது காதலி ரீவா ஸ்டீன்காம்ப்பை பிஸ்டோரியஸ் கொன்றிருந்தார் என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. ஆஸ்கர் பிஸ்டோரியஸ் திட்டமிட்டு தனது காதலியைக் கொன்றிருக்கவில்லை என வியாழனன்றே நீதிபதி தெரிவித்திருந்தார். கழிவறையில் இருப்பது "வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வெளியாள் என தவறுதலாக நம்பி ஆளையே பார்க்காமல் கதவு முன்னாலிருந்தபடி பிஸ்டோரியஸ் துப்பாக்கியால் சுட்டது "அலட்சியமான" செயல் என்று நீதிபதி தொகொஸிலே மஸிபா வெள்ளியன்று கூறினார். ரீவா…

  23. பாரா ஒலிம்பிக் ஒட்டப்பந்தயத்தில் பல சாதனைகளைப் புரிந்துள்ள தென் ஆப்பிரிக்காவின் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்சுக்கு எதிரான அனைத்துவகையான கொலைக்குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். தங்கப்பதக்கம் வென்றுள்ள வீரரான பிஸ்டோரியல், தனது பெண் நண்பர் ரீவா ஸ்டின்கேம்பை திட்டமிட்டுக்கொலை செய்தார் என்பதை சந்தேகத்துக்கு இடமின்று நிரூபிக்க அரசதரப்பு தவறிவிட்டதாக நீதிபதி தொகோசில் மசிபா கூறியுள்ளார். பிரிட்டோரியாவில் உள்ள தனது வீட்டுக்குள் அடையாளம் தெரியாத நபர் புகுந்ததாகக் கருதி தான் சுட்டதாக பிஸ்டோரியஸ் தொடர்ந்து கூறிவருகிறார். அதேசமயம், Culpable homicide என்று ஆங்கிலத்தில் கூறப்படும் கொலைக்குற்ற வரம்பிற்குள் வராத மரணம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு தண்டனை வழ…

  24. புதுடெல்லி: டெல்லியில் ஆட்சி அமைக்கும் பா.ஜனதாவின் முயற்சிக்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் ஆதரவு தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த ஆண்டு இறுதிவாக்கில் ஆட்சியமைத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜன்லோக்பால் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்ற காங்கிரசும், பா.ஜனதாவும் ஒத்துழைக்கவில்லை என்று கூறி பிப்ரவரி 14 ஆம் தேதி பதவி விலகினார். இதையடுத்து அங்கு சட்டசபை முடக்கி வைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சட்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பா.ஜனதாவை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஜனாதிபதிக்க…

  25. குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் உயர்நீதிமன்றம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் அவுஸ்திரேலிய நடைமுறையை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்க மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடியேற்றவாசிகளை தடுத்துவைப்பதற்கான அரசமைப்பு எல்லைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஒருவருக்கு விசா வழங்குவதற்க்கும், அல்லது நிராகரிப்பதற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.