உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26698 topics in this forum
-
காணமால் போன மலேசிய விமானத்தை அமெரிக்கா கடத்தி வைத்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காணமால் போன மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தை அமெரிக்க ராணுவம் கடத்தி, Diego Garcia என்ற தீவில் ஒளித்து வைத்திருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக செய்திகள் கசிந்து வந்தன. இந்த தீவு இந்திய பெருங்கடலில் உள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான இந்த தீவில் அமெரிக்க போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தீவில்தான் மலேசிய விமானம் …
-
- 2 replies
- 1.2k views
-
-
சேது சமுத்திரத்திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன்: – தஞ்சாவூர் கூட்டத்தில் ஜெயலலிதா பேச்சு [Tuesday, 2014-04-08 20:33:24] சேது சமுத்திர திட்டத்தை அமுல்படுத்த விடமாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். தஞ்சாவூர் நேற்று நடைபெற்ற பொதுகூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது - நாடாளுமன்றத் தேர்தல் ஊழல் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சியை நாட்டை விட்டு விரட்டும் தேர்தலாகும். சேதுசமுத்திர திட்டத்தால் 10 மீட்டர் அகலமுள்ள கப்பல்கள்தான் செல்லமுடியும். ஆனால் தமிழக அரசுக்கு சொந்தமான பூம்புகார் கப்பல்களின் அகலம் 10.9ம், 13.5ஆகவும் உள்ளது. அரசுக்கு சொந்தமான இந்த கப்பல்களே செல்ல முடியாமல் இருப்பதால்தான் இந்த திட்டத்தை நான் எதிர்த்தேன். மீனவர்களை பாதிக்கும் இந்த திட்டத்தை …
-
- 0 replies
- 372 views
-
-
இங்கிலாந்தில் இந்திய மருத்துவா்களுக்கான முக்கிய வழக்கு விசாரணை நாளை துவக்கம். [Monday, 2014-04-07 17:21:04] இங்கிலாந்தில் பொது மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தொழிலைத் தொடங்கும் முன்னர் மருத்துவத் திறன் மதிப்பீடு என்ற தேர்வினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியின் பொது பயிற்சியாளர்கள் சங்கமும், பொது மருத்துவக் கவுன்சிலும் இந்தத் தேர்வினை நடத்துகின்றன.இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் இந்தியப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகவும், சர்வதேச அளவில் தேர்வுக்கு வரும் மாணவர்கள் 16 மடங்கு அதிகமாகவும் தோல்வியை சந்திக்கின்றனர். எனவே இவர்களிடம் நிறவெறிப் பாகுபாடு காணப்படுவதாக இந்…
-
- 0 replies
- 456 views
-
-
இரண்டு பிரிட்டிஷ் பெண்கள், டெனரி ஸ்பானிஷ் தீவில் அலை கடலில் இழுத்து செல்லப்பட்டு பின்னர் இறந்துள்ளனர். அவர்கள் மகப்பேற்று ஆலோசகர் Dr உமா ராமலிங்கம், 42, மற்றும் பாரதி ரவிக்குமார் . மற்றைய மூவரும் காப்பற்றபட்டனர். கேனரி தீவுகள் அவசர சேவைகள் அவர்கள் 10 மற்றும் 14 வயது வரை உள்ள குழந்தைகள், மற்றும் ஒரு 38 வயதான பெண் கூறினார் http://www.bbc.co.uk/news/uk-26925989
-
- 1 reply
- 964 views
-
-
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 30 வருடமாக தனது மனைவியாகவிருந்த லையுட்டிமிலாவை உத்தியோகபூர்வமாக விவாகரத்துச் செய்துள்ளார். அவர்கள் இருவரும் பிரிவதற்கு தீர்மானித்துள்ளமை குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 30 வயதான முன்னாள் ஒலிம்பிக் உடற்பயிற்சி வீராங்கணையான அலினா கபயெவாவுடன் இரகசிய காதல் தொடர்பைக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியானதையடுத்து அவரது திருமண வாழ்வு முறிவடையலாம் என கடந்த பல வருடங்களாக ஊகிக்கப்பட்டு வந்தது. லையுட்மிலாவுடனான விவாகரத்தை புட்டின் உறுதிப்படுத்தியதையடுத்து அவரது உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்த லையுட்மிலாவின் (56 வயது) சுயவிபரங்கள் அகற்றப்பட்டிருந்தன. புட்டினின் இரு மகள்மார் என மரியா மற்றும் கதரினாவின் பெயர்கள் குறி…
-
- 9 replies
- 858 views
-
-
இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் இந்த தேர்தலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ள இந்த தேர்தலில் இன்றைய தினம் அசாம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 2 ஆசனங்களுக்கான வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இந்த தேர்தலின் இறுதிக் கட்டம் மே 12 ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் மே மாதம் 16 ஆம் திகதி வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. 800 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. ஊழல் மற்றும் உயர்ந்த பணவீக்கம் என்பன இம்முறை தேர்தலில் முக்கிய இடத்தினைப் ப…
-
- 1 reply
- 292 views
-
-
பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு. [sunday, 2014-04-06 12:41:40] பிரிட்டனில் உள்ள இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்து கிராண்ட் தோர்ன்டன் எம்ற நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில் பொருளாதார வளர்ச்சியில் இந்திய கூட்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு விதிக்கின்றன. பிரிட்டனில் உள்ள 700க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். அவற்றில் முதன்மையாக 41 நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் மூலம் ஆண்டுக்கு 19 பில்லியன் பவுண்டுகள் இந்திய மதிப்பில் சுமார் 1.9 லட்சம் கோடி, வரு…
-
- 2 replies
- 538 views
-
-
“காங்கிரஸ் படு தோல்வியடையும்” – என்.டி.ரி.வி கருத்துக்கணிப்பு! இந்தியாவில் நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள லோக்சபா தேர்தலில், தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஆசனத்தையேனும் பெற முடியாது போகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.இந்தியாவின் என்.டி.ரி.வி நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் நாட்டில் முக்கியமான அரசியல் கட்சிகள் எவையும் கூட்டிணையாத நிலையில், இந்த மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை எதிர்வரும் லோக்சபா தேர்தலில், தற்போதையை எதிர்கட்சியான பாரதீயே ஜனதா கட்சி வெற்றி பெறும் என்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன்படி இந்தியா முழுவதும் பாரதீயே ஜனதா கட்…
-
- 7 replies
- 836 views
-
-
பிரேசில்: வர்க்கங்களின் கால்பந்து மைதானம் உலகம் முழுவதும் உதைபந்தாட்ட ரசிகர்களுக்கு பிடித்த நாடு பிரேசில். அதற்கப்பால் உலகின் மிகப் பெரிய நாடுகளில் (8.511.965 க்ம்) ஒன்றான பிரேசிலை அறிந்து வைத்திருப்பவர்கள் அரிது. மேற்குலகில் பிரேசில் கேளிக்கைகளின் சொர்க்கம். வர்ணமயமான கார்னிவல் அணிவகுப்புகள். பாலியல் பண்டமாக நோக்கப்படும் அழகிய பெண்கள். இவை தான் பலருக்கு நினைவுக்கு வரும். கொஞ்சம் "சமூக அக்கறை கொண்டவர்கள்" என்றால், தெருக்களில் வளரும் குழந்தைகள், நாற்றமடிக்கும் சேரிகளை பார்த்து, வறிய பிரேசில் மீது அனுதாபப் படுவார்கள். ஆனால் எண்ணெய் வளத்தை தவிர உலகின் அனைத்து செல்வங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு. என்றோ லத்தீன் அமெரிக்காவின் வல்லரசாக வந்திருக்க வேண்டியது. மொழி, இன, மதப் பிர…
-
- 3 replies
- 438 views
-
-
மலேசிய விமானத்தை கடலுக்கு அடியில் தேடும் முயற்சி இன்று தொடங்கியது! [Friday, 2014-04-04 15:29:53] விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சி,இன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலுக்கடியில் தொடங்கியிருக்கிறது. விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் கருவிகளை கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன. இரண்டு கப்பல்கள் இந்த இழுவைக் கருவிகளுடன் கடலுக்கடியில் சுமார் 240 கிமீ நீளமுள்ள பாதையில் இந்த கறுப்புப் பெட்டி விழுந்திருக்கக் கூடிய இடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. …
-
- 4 replies
- 546 views
-
-
தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமிக்ஞையானது காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள மின்கலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என…
-
- 0 replies
- 2k views
-
-
பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். Pacific El Nino தெற்காசிய நாடுகள் ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள இருப்பதாக எச்சரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளும், வானிலை ஆய்வாளர்களும், பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின் போக்கைக் கணக்கில் கொண்டு 'எல் நினோ' உருவாகும் வாய்ப்பு காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். ஆழ்கடலில் காற்றழுத்தம் ஏற்படும்போது பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும். அதன் விளைவுகள் தெற்கு ஆசிய நாடுகளின் விவசாயத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடு…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி. சி-24 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5.14 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 20-வது நிமிடத்தில், புவிவட்டச்சுற்றுப் பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது. பி.எஸ்.எல்.வி.1பி வரிசையில் ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்ட பின் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், இதேபோல் இன்னும் 4 செயற்கை கோள்களை கடல் சார் ஆராய்ச்சிக்காக இஸ்ரோ நிறுவனம் அனுப்ப உள்ளது. அதில் 2 செயற்கை கோள்கள் இந்த ஆண்டில் அனுப்ப இஸ்ரோ தீவிர ஏற்பாட்டினை செய்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நேவிகேஷன் செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1பி என்…
-
- 8 replies
- 745 views
-
-
பல்லாயிரம் மைல்கள் தொலைவிலிலுள்ள வடக்கு - மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சஹாரா பலைவனத்திலிருந்து பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்படும் மணல் தூசுகள் பிரித்தானியாவில் படிக்கின்றன. சஹாரா பாலைவனத்தில் கடந்த வார இறுதியிலிருந்து கடுமையான காற்று வீசுகின்றது. இதனால் சுமார் 3,220 கிலோ மீற்றர்கள் தொலைவிலுள்ள பிரித்தானியாவின் ஹேர்ட்ஸ் மற்றும் எஸெக்ஸ் நகரங்களில் படிகின்றன. நேற்றும் நேற்று முன்தினமும் அதிகளவான மணல் தூசுகள் சிறிய படையாக கார் மற்றும் ஜன்னல்களில் படிந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அவதானமாக செயற்படுமாறும் மணல் சூறாவளி ஆடைகளுடன் தாயாராக இருக்குமாறும் நெரிசல்நேர சாரதிகள், பாடசாலை சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஹேர்ட்போர்ட்ஷயர் மற்றும் எஸெக்ஸ் நகர சபை…
-
- 13 replies
- 1.3k views
-
-
மாயமான மலேசிய விமானம் கடலுக்குள் விழவில்லை என்றும், ஆப்கானிஸ்தானில் இருப்பதாகவும் ரஷ்ய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி 227 பயணிகள், 1 விமானி, 1 துணை விமானி மற்றும் 10 சிப்பந்திகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்ற விமானம் மாயமானது. பின்னர் அது தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்துவிட்டதாகவும், அதில் பயணித்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசியா அறிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் அந்நாட்டு மொழியில் வெளியாகும் எம்கேஆர்யூ என்ற செய்தித்தாள் விமானம் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் மலேசிய விமானம் பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாரின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது என்றும், அதில் பயணி…
-
- 4 replies
- 2.3k views
-
-
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் பண்ணை வீடு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. முஷாரபை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த படுகொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான இருதய நோய் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பர்வேஸ் முஷாரப் இன்று அதிகாலை 3 மணி அளவில் அங்கிருந்து பண்ணை வீட்டிற்கு மாற்றப்பட்டார். பாதுகாப்பு நிறைந்த பைசாபாத் - ரவால் டாம் சவுக் சாலையில் பர்வேஸ் முஷாரப் பாதுகாப்பு வாகனம் கடந்து சென்ற போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். சம்பவ இடத்தில் ஒரு அடி அளவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. இந்த சம்பவம் முன்னாள் …
-
- 0 replies
- 311 views
-
-
இயேசு கிறிஸ்துவின் இறுதி இராபோசனத்தின் போது அவர் அருந்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அலங்கார கிண்ணம் ஸ்பெயினிலுள்ள சிறிய அருங்காட்சியகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வரலாற்று அறிஞர்கள் இருவர் தெரிவிக்கின்றனர். வட ஸ்பெயினில் லியோன் நகரிலுள்ள சான் இஸிடோரோ தேவாலயத்தில் தூசு படிந்த நிலையில் மேற்படி கிண்ணம் 1000 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 1950 களில் மேற்படி தேவாலயத்தில் அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்ட போது அந்தக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தக் கிண்ணம் இயேசு கிறிஸ்துவால் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றுள்ளதாக வரலாற்று அறிஞர்களான மார்கரிதா ரொரஸூம் ஜோஸ் ஒர்ரிஸா டெல் றியோவும் தெரிவித்தனர். இந்த கிண்ணம் கிறிஸ்துவுக்கு முன் சுமார்…
-
- 0 replies
- 866 views
-
-
பலஸ்தீனியர்கள் தங்களுக்கான நாட்டை அங்கீகரிக்கக் கோரி ஐ நாவில் பிரேரணை கொண்டுவர ஆயத்தமாகின்றனர். இந்தத் தகவலைப் பாலஸ்தீனிய அதிபர் அப்பாஸ் அவர்கள் சற்று முன்னர் வெளியிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன: பலஸ்தீனியர்களால் இந்தப்பிரேரனை ஐ நாவில் முன்வைக்கப்பட்டால் அமேரிக்கா முன்மொழிந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் தடங்கல் ஏற்படலாம் எனவும் கருதப்படுகின்றது.
-
- 0 replies
- 432 views
-
-
மதுரை: இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி தரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி தரும் திட்டத்தை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் தலையிட விரும்பவில்லை என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். http://news.vikatan.com/article.php?module=news&aid=26405
-
- 1 reply
- 367 views
-
-
இந்தி பேசத்தெரியாத காரணத்தால் மோடியை எதிர்த்து போட்டியிடவில்லை: ப.சிதம்பரம் பேட்டி [Tuesday, 2014-04-01 12:10:27] எனக்கு இந்தி பேசத்தெரியாததால் தான் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடவில்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறினார். பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்றுமுன்தினம் மிகவும் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார். அதற்கு பதிலடி கொடுப்பதுபோல நேற்று டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில், ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் நிலை குறித்துப் பேசினார். பா.ஜ.க.வின் பொருளாதார கொள்கை பற்றியும் அக்க…
-
- 1 reply
- 478 views
-
-
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசின் முதல் பெண் மேயராக ஸ்பெயின் வம்சாவளியை சேர்ந்த ஆனி ஹிடால்கோ (54) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்பெயினின் தென்மேற்கு பகுதியில் உள்ள காடிஸ் என்ற இடத்தில் 1959ம் ஆண்டு பிறந்தவர் ஆனி. குழந்தை பருவத்திலேயே பிரான்சில் குடியேறியவர். லையான் பகுதியில் வளர்ந்த அவர் படிப்பை முடித்த பிறகு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. தனது 30வது வயதில் லியோனெல் ஜோஸ்பின் தலைமையில் சோஷியலிஸ்ட் கட்சியில் இணைந்தார். கடந்த 13 ஆண்டுகளாக அரசியலில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்தி கொண்டுள்ள ஆனி, முதல் முறையாக பாரிசில் நடந்த மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது மேயராக உள்ள பெர்ட்ரான் டெலான்னோவுக்கு அடுத்தபடியாக ஆனி அந்த பொறுப்பை ஏற்க உள்ளார். கடும் எதிர்ப்புக்கு இடையே மேயர் தே…
-
- 1 reply
- 500 views
-
-
சில வருடங்களுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், நித்யானந்தா நெருக்கமாக இருக்கும் படி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது நடிகை ரஞ்சிதா மீதும் நித்யானந்தா மீதும் பலர் போர்க்கொடித் தூக்கினர். இந்நிலையில் பாலியல் வீடியோ வழக்கில் சிக்கிய நித்யானந்தா இப்போது ‘நித்தியே ஜெயம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நித்யானந்தா. மேலும் கர்நாடகா மாநில மகளிர் அணித்தலைவியாக நடிகை ரஞ்சிதாவை நியமனம் செய்துள்ளார். கட்சியின் மாநில நிர்வாக பொறுப்புகளைத் தன்னுடைய சிஷ்யர்களுக்கு வழங்கியுள்ளார். நாட்டில் தீயவர்களும், கயவர்களும் நிறைய பெருகிவிட…
-
- 14 replies
- 1.1k views
-
-
பல இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துவருகிறது. புவியில் ஏற்பட்டுவரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. பெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. வெள்ளப்பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது. ஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முட…
-
- 0 replies
- 454 views
-
-
அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சபையும், இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் இணைந்து நடத்தும் பாதுகாப்பு பயிற்சி பட்டறை நாளை ஆரம்பமாகிறது. http://www.colombopage.com/archive_14A/Mar31_1396286257CH.php
-
- 1 reply
- 536 views
-
-
சோனியாவையும் ராகுலையும் ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு! [Monday, 2014-03-31 09:45:44] காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஆடைகளை அவிழ்த்துவிட்டு இத்தாலிக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் ராஜஸ்தான் மாநிலம் டோங் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சோனியா, ராகுலை ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும் என அவேசமாக பேசினார். பாஜக எம்.எல்.ஏ. வெறிப் பேச்சு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆடைகள…
-
- 1 reply
- 645 views
-