Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆஸ்பத்திரியில் மண்டேலா... புதைக்கும் இடம் குறித்த சண்டையில், கோர்ட் சென்ற குடும்பத்தினர். ஜோகன்ஸ்பர்க்: மருத்துவமனையில் இருக்கும் மண்டேலா நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என உலக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், மண்டேலா குடும்பத்தினர் மண்டேலா இறந்த பிறகு எங்கே புதைப்பது என்ற சச்சரவில் கோர்ட் படியேறியுள்ளனர். கறுப்பர் இன விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த ,தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான மண்டேலா, கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மண்டேலா மிகவும் கவலைக்க…

  2. தூங்கிக் கொண்டிருந்த கணவரின் 'மர்மத்தை' நறுக்கிய பெண்ணுக்கு ஆயுள்! கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரின் மர்ம உறுப்பை நறுக்கி தனியாக துண்டித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. மர்ம உறுப்பை நறுக்கி அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார் அந்தப் பெண்மணி. அப்பெண்ணின் பெயர் காத்தரின் கியூ. 50 வயதான இவர் 7 வருடத்திற்குப் பிறகுதான் பரோலிலேயே வெளியே வர முடியும். முன்னதாக கியூ தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடுகையில், கியூவுக்கு மன நலப் பிரச்சினை இருந்தது. சிறு வயது முதலே அவர் வீட்டு வன்முறைக்கு இலக்கானவர். தனது கணவராலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில்தான் இச்சம்பவம் நடந்து விட்டது என்றார். ஆனால் கியூவின…

    • 11 replies
    • 1.8k views
  3. தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் உயிருக்கு போராடி வருகிறார். ஆனால் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மண்டேலா மரணம் அடைந்ததும் அவரது இறுதி சடங்கை நடத்திவிட்டு உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா தெரிவித்துள்ளார். அங்குதான் மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்தள்ளது என்று கூறியுள்ளார். அதற்கு மண்டேலாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரது மகள்கள் ம…

  4. அமெரிக்காவின் பதில் துணைச் சட்ட மா அதிபர் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் என்பவர் கடமையாற்றி வருகின்றார். உலக வங்கியின் நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி வரும் ஏ.தர்மரட்னம் என்பவரின் புதல்வியான மைதிலி ராமன் துணைச் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். மைத்லி ராமன், இலங்கை வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் சீ.லோகநாதனின் பேத்தி எனத் தெரிவிக்கப்படுகிறது. மைதிலி ரமானின் பெற்றோர் வடமாராட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்க நீதித் திணைக்களத்தின் குற்றவியல் பிரிவின் பதில் துணைச் சட்ட மா அதிபராக மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tab…

  5. நெல்சன் மண்டேலா உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கின்றார் – ஒபாமா 30 ஜூன் 2013 தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டலோ முழு உலகத்திற்குமே முன்னுதாரணமாக திகழ்கின்றார் என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். கொள்கைகளை முன்னெடுப்பதில் மண்டேலா காட்டிய ஸ்திரத்தன்மை அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஜொஹனர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் உரிமைகளுக்காக மண்டேலா தொடர்ந்தும் குரல் கொடுத்துள்ளார். இதேவேளை, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. பரக் ஒபாமா, மண்டேலாவின் குடும்பத்தாரை சந்தித்து பேசியுள்ளார். மண்டேலா…

  6. இலங்கை ராணுவத்தினருக்கு அளிக்கப்படும் போர் பயிற்சிகளை தொடர்ந்து அளிக்கவும் மேம்படுத்தவும் பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானி, இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யாவிடம் இது தொடர்பாக உறுதி அளித்ததாக இலங்கை ராணுவம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளது. பாகிஸ்தான் - இலங்கை ராணுவ உயரதிகாரிகளிடையே நடைபெற்ற கூட்டத்தில் பாகிஸ்தானில் மேலும் பல இலங்கை ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.http://www.dinaithal.com/tamilnadu/world/16578-we-will-continue-to-exercise-the-sri-lankan-army-pakistan-confirmed.html

    • 0 replies
    • 410 views
  7. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஜூன் 25-ம் தேதி வரை 4 ஆயிரத்து 825 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில், அதிகபட்சமாக டெல்லியில் மட்டும் ஆயிரத்து 507 பேர் பாதிக்கப்பட்டனர். அதிகமான மக்கள் நெருக்கம் கொண்ட டெல்லி நகரில் நோய்த்தொற்று எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளதால் இந்நோயின் தாக்கம் அதிகம் என்று கூறப்படுகிறது. அதிகமான நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டாலும் டெல்லியில் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். குஜராத்தில் ஆயிரத்து 29 பேருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதில் 195 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் பன்றிக் காய்ச்சலுக்கு 600 பேர் பலியாகியுள்ளனர். மேற்கண்டவாறு மத்திய சுகாதார அம…

    • 0 replies
    • 210 views
  8. குஜாராத் முதல் மந்திரி நரேந்திர மோடியின் வளர்ச்சியையும் புகழையும் கண்டு காங்கிரஸ் பயப்படுகிறது என்று மாஹாராஷ்டிரா பாரதீய ஜனதா தலைவர் தேவேந்திர பதான்விஸ் தெரிவித்துள்ளார்.மேலும் மோடியின் உத்திரகாண்ட் பயணம் பற்றிய விமர்சனத்துக்கு பதிலளித்த அவர்,உத்திரகாண்டிற்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மக்களை மட்டுமே காப்பாற்ற சென்றார் என்பது தவறானது. அவர் முதலில் அம்மாநில முதல் மந்திரி விஜய் பகுணானாவை சந்தித்து உத்திரகாண்ட் மாநிலத்திற்கு உதவ தயாராக இருப்பதாகத்தான் அவர் தெரிவித்து இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.http://www.dinaithal.com/tamilnadu/india/16569-congress-is-scared-of-modi-s-popularity-devendra-patanvis.html

    • 0 replies
    • 389 views
  9. மண்டேலா இறந்து விட்டதாக பேசிய ஆஸி. அமைச்சர் மன்னிப்பு கோரினார் நெல்சன் மண்டேலா உயிரிழந்துவிட்டதாக தவறாக பேசிய அவுஸ்திரேலிய அமைச்சர் மன்னிப்புக் கோரியுள்ளார். தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை மிக மோசமாக உள்ளது. இந்த நிலையில், இவர் உயிரிழந்து விட்டதாக, அவுஸ்திரேலிய மேம்பாட்டு துறை அமைச்சர் கேரிகிரே தவறாக பேசினார். ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர் இந்த தகவலை வெளியிட்டார். இது தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிரதமர் பதவியில் இருந்து ஜீலியா கிலார்ட் விலகியதை அடுத்து, கான் பெர்ராவில் உ…

    • 0 replies
    • 536 views
  10. சனநாயகத்தின் கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று. கட்சி விட்டு கட்சி தாவும் தொற்று நோய். காசிற்கு பதவிற்கு சுகபோகத்திற்கு மனிதர்களை இலகுவில் விலைக்கு வாங்கும் தன்மை சனநாயகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று. போராளி அமைப்புக்களைப் பலவீனப்படுத்தவும் அதிகார வர்க்கங்கள் இதே வழிமுறைகளைக் கையாள்வதுண்டு. அப்போதெல்லாம் அதிகார வர்க்கங்கள் அதற்கு வழங்கும் முக்கியத்துவமும் அடைமொழிகளும் மக்கள் மத்தியில் பாரிய உளவியல் தாக்கங்களைச் செய்யவல்லனவாக அமைந்து விடும். ஆனால்.. இங்கே ஒரு தாவல்... சகோதர யுத்தம்.. காதும் காதும் வைத்தாற்போல் நடந்து முடிந்துள்ளது. நாளை பருதி இளம்வழுதி லொறி மோதி இறந்தால் கூட அது.. விபத்தாக இருக்கும். சகோதர யுத்தத்தின் விளைவாக இருக்காது. ஈழத்தமிழர்கள் மீது சகோதர யுத்…

  11. கனடாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் மீது வெறுப்புகொண்ட சிலர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே லட்சுமி நாராயணர் இந்து கோவிலின் ஜன்னல்களை கடந்த 23-ம் நாள் அடித்து உடைத்து சென்றனர். இது கனடாவில் வாழும் இந்துக்களை வெறுப்பூட்ட செய்தது. இந்நிலையில் அங்குள்ள இரகசிய கமராவில் இருவர் பேஸ்பால் பேட்டை வைத்துக் கொண்டு கோவிலின் ஜன்னல்களை உடைத்து விட்டு பேட்டை தூக்கி எறிந்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது இன ரீதியிலான வெறுப்புணர்விலேயே நடந்து இருக்கலாம் என்று அங்குள்ள இந்துக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், சர்ரே காவல்துறையினர் இன ரீதியிலான வெறுப்பு உணர்வாக தோன்றவில்லை, இது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலாக தெரிவதாக அவர்கள் கூறியுள்ளன…

  12. டேராடூன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய புனித தலங்களில் ஒன்றான கேதர்நாத்தில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் முடிவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேதர்நாத்தில் சிக்கி தவித்த அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் இடிபாடுகளை அகற்றுவது மற்றும் இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணி மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. கேதர்நாத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இன்று மதியத்துடன் தங்களது மீட்பு பணிகளை முடித்துக்கொண்டனர்.அதே சமயம் பத்ரிநாத், தரசு மற்றும் ஹர்சில் ஆகிய இடங்களில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக அப்பகுதிகளில் ஏராளமானோர் இன்னமும் சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் தெரிவ…

  13. தங்கள் நாட்டை ரகசியமாக உளவு பார்த்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிரிட்டனிடம் ஜேர்மனி கேட்டுக் கொண்டுள்ளது. ஜேர்மனியில் இருந்து இணையத்தின் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை பிரிட்டனின் உளவு அமைப்பு கடந்த 18 மாதங்களாக பதிவு செய்து வந்துள்ளது. அதாவது தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்கள் என அனைத்தையும் பிரிட்டன் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஜெர்மனி சட்டம், நீதித்துறை அமைச்சர் சபினி லியுத்யூசர் கூறுகையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான ஜேர்மானியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இப்படிச் செய்வதற்கு எந்த நாட்டு சட்டத்திலும் இட…

    • 0 replies
    • 461 views
  14. காஷ்மீர் எல்லையில் இந்தியா , பாகிஸ்தான் ராணுவத்துக்கு இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி இந்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் ராணுவம் அரை மணி நேரம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. பூஞ்ச் மாவட்ட எல்லையில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்நிலையில், இதே மாவட்டத்தில் சைதன் , தோடா இடையிலான எல்லைப் பகுதியில் நேற்று காலை 10.45க்கு இந்திய முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கியது. இதற்கு, இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். அரை மணி நேரம் நடந்த சண்டைக்குப் பிறகு அமைதி ஏ…

  15. அவுஸ்திரேலிய பிரதமராக கெவின் ரொட் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். http://tamilworldtoday.com/?p=19202

    • 0 replies
    • 403 views
  16. கெவின் ரொட் விரைவில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது மேலதிக விபரங்களுக்கு.. http://tamilworldtoday.com/?p=19161

    • 0 replies
    • 304 views
  17. நெல்சன் மண்டேலா இறந்துவிட்டார் என்று வெளியான தகவல்கள் தவறானவை – ஆனால் மிக மோசமான உடல் நிலையில் இருக்கிறார்.. பிரபலங்களின் இறப்பு தொடர்பாக வெளிவரும் புரளிகளின் தொடர்ச்சியாக தற்பொழுது முன்னால் தென் ஆபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா அவர்கள் மரணித்துவிட்டார் என்ற தவறான செய்தி டிவிட்டர் சமூகத்தளத்தின் மூலம் பரப்பப்பட்டுள்ளது. நெல்சன் மண்டேலா பிரிட்டோரியாவில் உள்ள வைத்தியசாலையில் நுரையீரல் தொற்றுக்காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்பொழுது அவரது உடல்நிலை மிகவும் தீவிரமான கட்டத்தில் இருப்பதாகவும் தென் ஆபிரிக்காவின் தற்போதைய ஜனதிபதி Jacob Zuma அறிவித்துள்ளார். ஆனால் சி.என்.என் செய்தியாளர் பியர்ஸ் மோர்கனின் டிவிட்டர் அக்கவுண்ட் போன்று போலியாக உருவாக்கப்பட்ட டிவிட…

  18. அவுஸ்ரேலியாவில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தொழிலாளர் கட்சியின் வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் கெவின் ரூட்டும் , ஜீலியா கிலாட்டும் போட்டியிட்டனர் , வாக்கெடுப்பின் முடிவில் கெவின் ரூட் கட்சியின் தலைமைப்பதவியையும் , பிரதமர் பதவியையும் பெற்றுக் கொண்டார் , அத்துடன் தனது உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்தும் அவர் வெளியேறியுள்ளார் , மேலும் ஜீலியா கிலாட் , மகிந்த இராஜபக்ஸ தலைமையிலான இலங்கை அரசுடன் நெருங்கிய உறவைப் பேணியவர் என்பது குறிப்பிடத்தக்கது... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=7730:2013-06-26-10-28-15&catid=1:latest-news&Itemid=18

  19. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தலிபான்கள் தாக்குதல் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது இன்று (25) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான் ஆயுததாரிகள் ஆப்கானிஸ்தான் நேரப்படி இன்று காலை 6.30 மணியளவில் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜனாதிபதி மாளிகை பாதுகாப்பு படையினர் மற்றும் மாளிகைக்கு அருகிலுள்ள கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.adaderana.lk/tamil/news.php?nid=40817

    • 4 replies
    • 659 views
  20. புதுடெல்லி: உத்தரகாண்டில் இன்னும் 72 மணி நேரத்தில் மீட்பு பணி நிறைவடையும் என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகள் குறித்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று மீட்புப் பணிகள் குறித்து, மத்திய, மாநில அரசுகள் இன்று தனித்தனியே அறிக்கை தாக்கல் செய்தன. மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், "இதுவரை 1,189 முறை மீட்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பொதுமக்களை காப்பாற்றியுள்ளது. அதேப்போல, விமானப் படைக்குச் சொந்தமான விமானம் 419 முறை விமானத்தில் பறந்து மீட்புப் பணிகளை செய்துள்ளது. அனைத்து…

  21. எட். ஸ்நோவ்டன் ரஷ்யாவிலிருந்து ஈக்வடோர் செல்கிறார் அமெரிக்க முன்னாள் புலனாய்வு கணினி நிபுணர் ஈக்வடோரில் தஞ்சம் கோருவதற்காக அடுத்த சில மணிநேரத்தில் ரஷ்யாவிலிருந்து வெளியேறுகிறார். மாஸ்கோவிலிருந்து கியூபத் தலைநகர் ஹவானாவுக்குச் செல்லும் விமானத்தில் அவர் ஏறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். பின்னர் ஹவானாவிலிருந்து ஈக்வடோர் செல்வது அவரது திட்டம்.அவரை மீண்டும் அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான சகலவிதமான வழிகளையும் சிந்திக்குமாறு ரஷ்யாவிடம் அமெரிக்கா கேட்டுவருகிறது. இணையதளங்களை உளவுபார்க்கும் மற்றும் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்கும் அமெரிக்க உளவுத்துறையின் ரகசியக் கண்காணிப்புத் திட்டம் தொடர்பான திட்டங்களை கசியவிட்டு ஸ்நோவ்டன் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் ம…

  22. எகிப்தில் இனக்கலவரம், தீ வைப்பு: 4 பேர் பலி எகிப்தில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லீம் களிடையே மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கெய்ரோ அருகேயுள்ள ஜிஷா மாகாணத்தில் உள்ள ஷாவியத் அபுநகரில் ஷியா பிரிவினரின் மத திருவிழா நடந்தது. அதில் பங்கேற்க ஏராளமான உறவினர்கள் வந்து திரண்டு இருந்தனர். இந்த நிலையில் அங்கு கும்பலாக வந்த சன்னி பிரிவினர் திருவிழாவுக்கு வந்தவர்களை தாக்கினர். மேலும் அவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். ஷியா பிரிவினரின் வீடுகளுக்கும் தீவைத்தனர். இதனால் அங்கு மோதலும் அதை தொடர்ந்து கலவரமும் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஷியா பிரிவை சேர்ந்த ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 பேர…

    • 0 replies
    • 322 views
  23. பாகிஸ்தான் அணு ஆயுதங்களை காக்க 25,000 வீரர்கள் கொண்ட சிறப்புப் படை பாகிஸ்தானில் அணு ஆயுதங்களை பாதுகாப்பதற்கென 25,000 வீரர்கள் கொண்ட சிறப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு நிதி அமைச்சர் இஷாக் தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தொடர்பான விவாதத்தை நிறைவு செய்து நிதி அமைச்சர் இஷாக் தர் கூறியதாவது: சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட, அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய 25,000 வீரர்கள் கொண்ட சிறப்பு படை அணு ஆயுதங்களை பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் காக்க சிறப்புப் படை, சிறப்பு கடலோர காவல்படை, உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிறப்பு உளவுப் பிரிவு அதிகாரிக…

    • 0 replies
    • 471 views
  24. சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவ உதவி போர்க் குற்றங்களுக்கு வழிவகுக்கும்: ஐ.நா. எச்சரிக்கை சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா செய்யும் ராணுவ உதவி அங்கு மேலும் போர்க் குற்றங்கள் நிகழ வழிவகுக்கும் என ஐ.நா. மனித உரிமை ஆணையம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்த ஆணையத்தின் நிர்வாகி பாலோ பினிரோ கூறியதாவது சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ராணுவ உதவி அளிப்பது என்ற அமெரிக்க அரசின் முடிவு குறித்து ஐ.நா. விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவோ அல்லது மற்ற நாடுகளோ சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அளிக்கும் ராணுவ உதவி அங்கு மேலும் பிரச்னைகளை உண்டாக்கும். அமெரிக்காவிடமிருந்து நவீன ஆயுதங்களைப் பெறும் கிளர்ச்சியாளர்கள் கூடுதல் உத்வேகத்துடன் சண்டையிடுவார்கள். அமெரிக்கா …

    • 0 replies
    • 378 views
  25. மண்டேலா உடல்நிலை மிகவும் மோசமடைந்தது: சிகிச்சையை நிறுத்த குடும்பத்தினர் ஆலோசனை தென்ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பர் இன அதிபர் நெல்சன் மண்டேலா (94). கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த பின் வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது முக்கிய உடல் உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாடுகள் 50 சதவீதம் குறைந்து விட்டன. மேலும் சில உடல் உறுப்ப…

    • 0 replies
    • 305 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.