Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள சுகலி காலனியில் வியாபாரி ஒருவர் வளர்த்து வந்த வாத்து தெருவில் செல்பவரை கொத்தியதால் போலிசார் வாத்தினை கைது செய்துள்ளனர். கடந்த வாரம் சுகிலி காலனியை சேர்ந்த ஒரு பெண் நுன்னா போலிஸ் நிலையத்துக்கு சென்று ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் தன் தெருவில் சுற்றும் வாத்து தன் 5 வயது மகளை கொத்தி காயப்படுத்தி விட்டதாக கூறினார். தெருவில் நடந்து செல்லும் எல்லாரையும் அந்த வாத்து விரட்டி, விரட்டி கொத்துவதால் மிகவும் தொந்தரவாக இருக்கிறது. எனவே அந்த வாத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பெண் தன் புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து நுன்னா போலிசார் வழக்கு பதிவு செய்து அந்த வாத்தை கைது செய்தனர். போலிஸ் நிலைய வளாகத்தில் உள்ள ஒரு மரத்தி…

  2. இது நாள் வரை மனிதர்களை ‘எய்ட்ஸ்’ எனும் நோய்தான் மிரட்டி வந்தது. அதற்கு ஓரளவு மருந்து கண்டுபிடித்து விட்ட நிலையில் உடலுறவு மூலம் பரவுகின்ற மற்றோரு நோயான வெட்டை நோய் -ஆங்கிலத்தில் கொணோரியா(Gonorrhea) என்று அழைக்கப்படும் புதிய நோய் பீதியை கிளப்ப ஆரம்பித்துள்ளது. இந்த வகையானது ஆண்டிபயாடிக் நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு கட்டுப்படாத போக்கு அதிகரித்து வருவதால், அந்நோய் விரைவில் குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி வருவதை இப்போதே கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டனில் நடக்கின்ற ஒரு மருத்துவ மாநாட்டில் எச்சரிக்கப்படவுள்ளது. உலக அளவில் பார்க்கையில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக பத்து கோடிப் பேருக்கும் அதிகமானோருக்கு இந்த நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாக ஐநா கூறுகிறது.இது நாள் …

  3. அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லுனர் எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இந்தியா அகதி அந்தஸ்து வழங்க வேண்டும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார். இரகசிய சைபர் நெட்வேர்க்கை பயன்படுத்தி அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தொலைபேசி மற்றும் இணையப்பாவணை தொடர்பில் பல லட்சக்கணக்கில் பிரத்தியேக தகவல்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை திரட்டி வைத்திருப்பதாக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வார்ட் ஸ்னோவ்டென். இவர் முன்னர் அமெரிக்காவின் இரகசிய பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர் ஆவார். தற்சமயம் அமெரிக்காவை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் கோரி வருகிறார். சுவிற்சர்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார். இந்நிலையில் இவர் தைரியமாக முன்வந்து வெளிப்படுத்திய தகவல்க…

    • 6 replies
    • 715 views
  4. மத்தியகிழக்கின் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு இடத்தில் புதிதாக ஐநூறுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டுவதற்கான திட்டம் ஒன்று வட்டார அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இட்டாமர் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள பாலஸ்தீன நிலங்களில் உரிமம் வாங்காமல் கட்டப்பட்டிருந்த 137 யூத வீடுகளை அங்கீகரித்து உரிமம் வழங்க வேண்டுமென்றும் அதிகாரிகளிடம் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் குடியேற்றத் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பராக் ஆரம்பகட்ட ஒப்புதலை சென்ற வருடம் வழங்கியிருந்தார். இஸ்ரேலிகளுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா முயன்றுவருகின்ற சூழ்நிலையில், இந்த குடியேற்றத்…

  5. சவூதி அரேபியாவுக்குள் போதைவஸ்துகளை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் சிரிய பிரஜையொருவருக்கு செவ்வாய்க்கிழமை தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது. ஹுஸம் அல் ரஜுப் என்ற மேற்படி சிரிய பிரஜை பெருந்தொகையான போதைவஸ்து மாத்திரைகளை சவூதிக்குள் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. அவருக்கு வட ஜாப் மாகாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவரது மரண தண்டனையுடன் சவூதியில் இவ்வருடம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் தொகை 51 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அந்நாட்டில் 76 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. பாலியல் வல்லுறவு, படுகொலை, ஆயுதம் ஏந்திய கொள்கை, போதைவஸ்து கடத்தல் என்பன சவூதியில் மரணதண்டனைக்குரிய குற்றங்களாகும். http://w…

    • 2 replies
    • 524 views
  6. ஜனவரி 21ஆம் தேதி, மலேசிய காவல் துறையினரால் விரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிடப் பட்டதாகவும் பின்னர் அடிக்கப்பட்டதாலும் மரணமடைந்ததாகக் கூறப்படும் 40 வயதான காவலாளியான சி.சுகுமாரின் நல்லுடல் 141 நாட்கள் நீடித்த போராட்டத்திற்குப் பின்னர் இன்று செராசில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் மீது இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனையை தாய்லாந்து மருத்துவ நிபுணர் போர்ன்திப் ரோஜனாசுனாந்த் மூலம் மேற்கொள்வதற்கு அவரது குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் எடுத்த முயற்சிகள் யாவும் பலனளிக்கவில்லை. பிகேஆர் உதவித் தலைவரும், சுகுமாரின் குடும்ப வழக்கறிஞருமான என்.சுரேந்திரன், உள்நாட்டு மருத்துவர்களைக் கொண்டு இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொள்ள தாங்கள் எடுத்த முயற்சிகளையும் அரசாங்கம் தடுத்ததாகக் கு…

    • 0 replies
    • 333 views
  7. கொல்கத்தா அருகில் உள்ள காம்தோனி என்ற இடத்தில் 20 வயது கல்லூரி மாணவி வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டார். கடந்த வாரம் அவர் கல்லூரி தேர்வு முடித்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து அருகில் இருந்த காம்பவுண்டுக்குள் தூக்கிச் சென்று வன்புணர்ந்தனர் . அவர்களுடன் போராடியதால் மாணவியை தாக்கி கொலை செய்து தப்பிச் சென்று விட்டனர். வன்புணர்வு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் பொது மக்கள் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் அதை கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார்கள். இதையடுத்து சம்பவ இடத்தை பார்வையிடச் சென்ற திரிணாமுல் காங்கிர…

    • 0 replies
    • 421 views
  8. அவுஸ்ரேலியாவின் எதிர்க்கட்சி நிதி திரட்டுவதற்காக நடத்திய ஓர் விருந்தில் தன்னுடைய உடல் அங்கங்களை கேலி செய்யும் விதமாக உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்ததை அவுஸ்ரேலியாவின் பெண் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கண்டித்துள்ளார். தாராளவாத தேசியக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக களமிறங்கவுள்ள முன்னாள் அமைச்சர் மால் புரோ கொடுத்த ஒரு விருந்தில் சாப்பிட வந்தவர்களுக்காக இந்த உணவு விவர அட்டை உருவாக்கப்பட்டிருந்தது. 'ஜூலியா கில்லார்ட் கெண்டக்கி காடை வறுவல் - சிறுத்த மார்புகள், பெருத்த தொடைகள்' என அந்த அட்டையில் ஒரு உணவுக்கு விவரணை எழுதப்பட்டிருந்தது. மலிவான ரசனையுடனும், அவமதிக்கும் விதமாகவும், பெண் பாலாரை ஏளனம் செய்யும் விதமாகவும் செய்யப்பட்ட ஒரு காரியம் இது என பிர…

  9. அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி, ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ரஷ்யாவின் அதிபராக புதின் பதவியேற்றபோது, எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 27 பேர், கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னி, அவரது மனைவி உள்பட ஏராளமான மக்கள், 'உமது விடுதலையே எமது விடுதலை' என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டக்காரர்களை வழிநடத்தினர். எதிர்க்கட்சி தலைவர் நவால்னி மீது, மாஸ்கோ கோர்ட்டில் ஏற்கனவே ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்…

    • 0 replies
    • 452 views
  10. தனி தெலுங்கானா கோரி சட்டசபையை நோக்கி பேரணி நடத்தப்போவதாக தெலுங்கானா போராட்ட குழு அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்கள் . பேரணியில் மாவேஸ்டு தீவிரவாதிகள் ஊடுருவி வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதால் அனுமதி மறுக்கப்படுவதாக ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அனுராக் சர்மா திட்டவட்டமாக கூறி விட்டார். தடையை மீறி போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்து உள்ளார். ஆனாலும், தடையை மீறி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து ஐதராபாத் நகரில் இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட ஆயிரக்கணக…

    • 0 replies
    • 377 views
  11. வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் தன்னம்பிக்கை + முயற்சி = சாதனை வெள்ளை மாளிகையின் உயர் விருது பெற்ற சாதனைத் தமிழன் பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தனுடன் நேர்முகம் செவ்வி கண்டவர் : ஆதிரையன் பேராசிரியர் சிவநாதனைப் பற்றி ஒன்பது பேர் அடங்கிய குடும்பத்தில் ஆறாவது பிள்ளை பிறப்பிடம்: மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி தந்தையார்: தமிழ்ப் பண்டிதர் – ஓய்வுபெற்ற அதிபர் (ஊரிக்காடு, வல்வெட்டித்துறை), தாயார்: ஆசிரியர் ஆரம்பக்கல்வி: மட்டுவில் சரஸ்வதி மகாவித்தியாலயம் இரண்டாம் நிலைக் கல்வி: யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1967-1975) உயர்கல்வி: பேராதனைப் பல்கலைக்கழகம் (1976-1980) முதல் தொழில்: விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம…

  12. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா, டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து மிகக்குறைந்த விலைக்கு நிலங்களை பெற்றதாக ‘ஆம் ஆத்மி‘ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை தனக்கு தருமாறு நுதன் தாக்குர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். அனால் , பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது. ‘இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்…

    • 0 replies
    • 452 views
  13. Germany appears to be the most snooped on EU country by the US, a map of secret surveillance activities by the National Security Agency (NSA) shows. EU officials are to question their US counterparts on data snooping in Europe. The color-coded map of secret surveillance activities by the NSA ranks countries according to how much surveillance they are currently undergoing - green for the least and red for the most watched. While all EU member states boast variant shades of green, Germany stands out, color-coded orange. The source behind the revelation of the top-secret NSA surveillance program, already referred to as one of the most significant intelligence leaks in US…

  14. அரபு நாடுகளில் வீட்டு வேலை செய்வதற்காக செல்லும் பெண்கள் சந்தித்து வரும் கொடுமைகள் பற்றி பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும், அரபு நாடுகளுக்கு சென்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளில் வசிக்கும் பெண்களுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எஜமானியின் சித்ரவதையால் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 29 வயது வேலைக்காரப் பெண் துபாயில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அரபு நாடுகளில் வேலை செய்யும் வெளிநாட்டு பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்த கதீஜா கமெல் என்ற அந்த பெண் துபாயில் உள்ள போலீஸ் அதிகாரியின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலைக்கு சேர்ந்தார். அவரது மனைவிக்கு எடுபிடி வேலைகளை செ…

    • 3 replies
    • 1.4k views
  15. குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கு, தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர் பதவி கொடுத்து அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதை விரும்பாத அத்வானி, கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார். இது, பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பா.ஜ.க.வுக்கு கட்சி ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவானது. ஆனால், அத்வானியின் ராஜினாமாவை பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து நேற்றிரவு பா.…

    • 2 replies
    • 567 views
  16. உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் கடந்த 2007ம் ஆண்டு காலை நேர நடைபயிற்சிக்கு சென்ற பிரபல ஆன்மிகவாதி சுவாமி சங்கர் தேவ் திடீரென்று மாயமானார். இச்சம்பவத்திற்கு சில தினங்களுக்கு பிறகு சுவாமி சங்கர் தேவை யாரோ கடத்தி விட்டார்கள் என்று அவருடன் திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளை மடத்தில் தங்கியிருந்த நண்பர் பாலகிருஷ்ணா என்பவர் போலீசில் புகார் அளித்தார். மாயமான சுவாமி சங்கர் தேவ், யோகா குருவான பாபா ராம்தேவ்-வின் ஆன்மிக குருவாக கருதப்படுபவர். திவ்ய யோக் மந்திர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை கைப்பற்றும் நோக்கில் பாபா ராம்தேவ் அவரை கடத்தியிருக்கலாம் என்று கூட ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. சில நாட்களில் இந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. எனினும், 6 ஆண்டுகளாகியும் சுவாமி சங…

    • 0 replies
    • 454 views
  17. சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தின் தண்டேவடா வனப்பகுதியில் கடந்த மாதம் 25-ந் தேதியன்று காங்கிரஸ் கட்சியினர் நடத்திய யாத்திரை மீது மாவோயிஸ்டுகள் மிகப் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். இந்த தாக்குதலில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சல்வா ஜூதும் அமைப்பை உருவாக்கிய அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மா உட்பட 28 பேர் பலியாகினர். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா உள்ளிட்ட 35 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.…

  18. அத்வானியின் ராஜினாமா விவகாரம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பிரதமர் பதவிக்கு குறிவைத்தே அவர் இந்த ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாக அத்வானியின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. பிரதமர் பதவி பிரதமர் பதவி மீது அத்வானிக்கு இருக்கும் தீரா காதல் நாடறிந்த ஒன்று. தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதிலும், அதற்கு முன்னதாக அந்த பதவிக்கு வர துடியாய் துடித்தார் அத்வானி. ஆனால் பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தால் அத்வானி மீது படிந்த தீவிர இந்துத்துவா தலைவர் என்ற இமேஜ் அதற்கு வில்லனாய் அமைந்தது. அத்வானியை பிரதமராக ஏற்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், மிதவாத முகமூடி கொண்ட வா…

  19. நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடைபெற்றதாக எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் குற்றம் சாட்டின. நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பிய எதிர்கட்சிகள், கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரை முழுமையாக முடக்கி வைத்தன. இதனையடுத்து, சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டலின் பேரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. நிலக்கரி ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் மற்றும் சில இடைத்தரகர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே ஊடகங்களுக்கு கசிய விட்டதாக சி.பி.ஐ. இயக்குன…

    • 0 replies
    • 376 views
  20. உச்சாணிக்கொம்பில் சில நிமிடம்... 'ஜோ மெக்னாலி' என்ற புகைபட கலைஞர், உலகின் மிக உயரமான கட்டிடமான துபை "புர்ஜ் கலீஃபா" (Burj Khalifa - 2722' அடி) மாடியின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள இடி தாங்கி கொம்பின் மேல் வரை ஏறி நின்று மயிர்கூச்செறியும் பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து சாதனை புரிந்துள்ளார். இவர் மொத்தமுள்ள 160 மாடிகள் ஏறியபின், உச்சியில் அமைந்துள்ள உலோகத்தாலான 450 அடி உயர குழாயினுள் நுழைந்து ஏறி, கயிற்றல் இடுப்பை கட்டிகொண்டு தொங்கியவாறு படமெடுத்ததை ஓர் புதிய அனுபவமென தெரிவித்துள்ளார். http://youtu.be/30_b22TVY7s செய்தி மூலம்:http://www.dailymail.co.uk/news/article-2338050/Joe-McNally-Photographer-scales…

  21. உலக வெப்பமயமாதலின் காரணமாக உலகில் நிலப்பரப்பு குறையும் என்று டோக்கியோ பல்கலைக்கழகம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருகி வரும் உலக வெப்பமயமாதலின் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 42 சதவிகித நிலப்பரப்பு, குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் இயற்கை மற்றும் காலநிலை துறையை சேர்ந்த science journal Nature Climate Change என்ற பத்திரிகை தனது ஆய்வில் தெரிவித்துள்ளது . பெருகி வரும் மக்கள் பெருக்கத்தாலும் காலநிலை மாற்றங்களாலும் 2100-ம் ஆண்டிற்கு முன்னர் உலக வெப்பத்தின் அளவு 3.5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று டோக்கியோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை தலைவர் Yukiko Hirabayashi தெரிவித்துள்ளார். இந்த காலநிலை மா…

    • 0 replies
    • 722 views
  22. பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள ராஜினாமாக் கடிதத்தில், நான் எனது வாழ்நாள் முழுவதும் ஜனா சங் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிக்காகவே உழைத்துள்ளேன். அதில் நான் அடைந்த திருப்திக்கு முடிவே இல்லை. ஆனால், அண்மையில் கட்சியின் தற்போதைய நிலைமையோடு என்னால் ஒத்துப் போக முடியாது என்பதை நான் அறிந்து கொண்டேன். கட்சி போகும் பாதை எனது கருத்துக்கு மாறானது. டாக்டர் முகர்ஜி, பண்டிட் தீனதயாள்ஜி, நானாஜி, வாஜ்பேயிஜி ஆகிய தலைவர்களின் கொள்கைகளோடு உருவாக்கப்பட்ட கட்சியில் தற்போது அந்தக் கொள்கைகள் இல்லை. பாஜகவில் இருக்கும் பல தலைவர்கள், தங்கள் சொந்த நலனை முக்கியமாகக் கொண்டே செயல்படுகின்றனர்.…

  23. மகராஷ்டிர மாநிலத்தலைநகர் மும்பையில் உள்ள மஹிம் நகர் கேடல் சாலையில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. மழை பெய்ததை அடுத்து இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிறைய பேர் அருகில் உள்ள பாபா மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு 8 தீயணைப்பு படைப்பிரிவு வண்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மும்பையில் நேற்றிலிருந்து தென்மேற்கு பருவமழை காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.http://dinaithal.com/index.php?option=com_co…

  24. இந்தோனேசியா நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு 15 அடி உயரமுள்ள சரஸ்வதி தேவி சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பாலி கலை நுணுக்குத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி தேவி சிலை வெண்ணிறத்தில் தங்க முலாம் பூசப்பட்டு எழிலுற காணப்படுகிறது. ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே சரஸ்வதி தேவியின் இந்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த சிலை இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.எனினும், இப்போதே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சரஸ்வதி தேவியின் சிலையை கண்டு வியக்கின்றனர் …

  25. பாகிஸ்தானில் மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விஷம் வைத்து கொன்றதாகக் கூறப்படும் தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவது, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் மாவட்டத்தின் நவன் கோட் பகுதியை சேர்ந்தவர் சப்தார் ஹூசைன். இவரது மகள் சுமார் இரண்டு வாரத்துக்கு முன் மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால் இந்த பெண்ணின் தோழி சோபியா அமான் என்பவர் லாகூர் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தனது தோழி அவளது தந்தையால் பாலியல் வல்லுறவுகுட்படுத்தப்பட்டு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை வாசித்த நீதிபதி சோபியா அமானின் தோழி இறந்தது குறித்து விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.