உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26673 topics in this forum
-
கனடாவின்ஒண்டோரியோ மாகாணத்தில் கடந்த 1964 முதல் இயங்கிவரும் மிக பிரபலமான ரெஸ்டாரெண்ட் Tim Hortons Restaurant. இந்த ரெஸ்டாரண்ட் தேசிய நெடுஞ்சாலை 404ல் ஷெப்பர்டு அவென்யுவின் கிழக்கு திசையில் இயங்கிவருகிறாது. நேற்றுசனிக்கிழமை மாலை நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, இந்த ரெஸ்டாரெண்டுக்குள் புகுந்தது. ரெஸ்டாரெண்ட் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, உள்ளே புகுந்த காரால், ரெஸ்டாரெண்டில் உணவு அருந்திக்கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். மேலும் காரில் பயணம் செய்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்தவிபத்து மாலை 5 மணியளவில் நடந்ததாக ஒண்டோரியோ காவல்துறை தெரிவிக்கின்றது. காயம் அடைந்தவர்கள் உடனே அருகிலுள…
-
- 0 replies
- 359 views
-
-
கடந்த காலங்களில் நடைபெற்ற போர் சம்பவங்களை மறந்து வரும் காலங்களில் புதிய உறவுக்கு முன்னேறுவோம் என இந்திய அதி்காரிகளிடம் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா-சீனா போர்:சீனாவுடனான எல்லைப்பகுதியில் ரஷ்யாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது. இந்தியா-சீனா இடையேஎல்லைப்பகுதி மூன்றுபகுதிகளில் குறுக்கிடுகிறது.இருநாடுகளிடையே உள்ளமேற்கு பகுதியான அக்சய் சீனாதன்னுடைய பகுதி என சீனாவும்,காஷ்மீர் மாநிலத்தி்ன் ஒரு பகுதி என இந்தியாவும் உரிமை கொண்டாடி வருகின்றது. அதே போல் பூடான் நேபாளம் எல்லையை ஒட்டிஅமைந்துள்ள நமது அருணசாலபிரதேச மாநிலம்சீனாவின் தென் எல்லையாக அமைந்துள்ளது. இதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு பகுதி என அப்போதைய பிரதமர் ந…
-
- 1 reply
- 530 views
-
-
இந்தியாவை உலுக்கிய தில்லி பாலியல் வல்லுறவு சம்பவத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் நீதிமன்றத்தில் தமக்கெதிரான குற்றச்சாட்டுகளை முறைப்படி மறுத்துள்ளனர். 23 வயது மாணவியை ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐந்து பேர் மீது இந்த வழக்கை விசாரிப்பதற்கென்று விசேடமாக உருவாக்கப்பட்டுள்ள விரைவு விசாரணை நீதிமன்றம், முறைப்படி குற்றப் பத்திரிகையை வாசித்துள்ளது. நீதிமன்றம் வந்து குற்றச்சாட்டுகளைக் கேட்ட ஐந்து பேரும் தாம் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளனர். இந்திய குற்றவியல் சட்டத்தின் 13 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இந்த ஐந்து பேர் மீதும் நீதிபதி யோகேந்திர கன்னா வாசித்தார். கொலைசெய்தது, ஒரே நேரத்தில் பாலியல் வல்லுற…
-
- 2 replies
- 651 views
-
-
அமெரிக்காவில் போருக்கு சென்ற இராணுவத்தினரிடையே தற்கொலை செய்வது அதிகரித்து செல்கிறது என்று கவலை வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 21 மாநிலங்களிலும் நடாத்தப்பட்ட ஆய்வில் தினசரி 22 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்வதாக தெரிவிக்கிறது. கடந்த 1999 – 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற அமெரிக்க இராணுவ வீரர்களின் தற்கொலைகள் குறித்த ஆய்வறிக்கையே மேற்கண்ட அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. போரும், அதனால் உண்டாகும் அனர்த்தங்களும் ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் அமெரிக்க வீரர்களை மணிக்கு மணி கயிற்றில் தொங்க வைத்துக் கொண்டிருக்கிறது. போரில் வெற்றி பெறுவது என்பது ஊடகங்களின் வெற்று செய்தியே அல்லாது உண்மையாக வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் என்று போரில் ஈடுபடுகிறார்களோ …
-
- 3 replies
- 647 views
-
-
மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட திம்பக்டு நகருக்கு சென்றிருக்கும் பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லோந்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சு மற்றும் மாலி படைகளால் 6 நாட்களுக்கு முன்னர் தான் திம்பக்டு நகர் கைப்பற்றப்பட்டது. ஒரு நாள் விஜயமாக மாலி சென்றுள்ள அதிபர் ஒல்லோந்துடன் பிரான்ஸின் மூத்த அமைச்சர்கள் பலரும் இணைந்துகொண்டுள்ளனர். கடந்த ஆண்டில் வடக்கு மாலியின் பிராந்தியங்களைக் கைப்பற்றிய இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சில் கடந்த மூன்று வாரங்களாக படைநடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுப் படைகளை பாராட்டுவதற்காகவே அதிபர் ஒல்லோந்த் மாலி சென்றுள்ளார். மாலிக்கு புறப்படும் முன்னதாக கருத்துத் தெரிவித்த பிரான்ஸ…
-
- 1 reply
- 412 views
-
-
இரண்டாம் உலகப் போரில் பெரும் திருப்பு முனையாக அமைந்த ஸ்டாலின்கிராட் சண்டை முடிவுக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. இதற்கான நினைவு தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் பூட்டின் தலைமையில் அனுட்டிக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்த இந்தச் சண்டையில் சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஸ்டாலின் இறந்த பிறகு இந்த நகருக்கு ''வொல்கோகிராட்'' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், உள்ளூர் கவுன்ஸில் மீண்டும் இதனை ஸ்டாலின்கிராட் என்று இந்தப் போரின் நினைவு தினங்களின் போது அழைப்பதற்கான அனுமதியை அங்கீகரித்தது. ரஷ்யா, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் முன்னாள் இராணுவ தளபதிகள் மாத்திரமல்லாமல், சில ஜேர்மனிய இராணுவ மூத்த அதிகாரிகளும் …
-
- 0 replies
- 514 views
-
-
பாலிய வல்லுறவில் ஈடுபட்டால் தூக்கு- மத்திய அரசு அதிரடி சட்டம்! சனி, 2 பிப்ரவரி 2013( 09:49 IST ) பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை 7 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாகவும், பெண் கற்பழித்துக் கொல்லப்பட்டாலோ அல்லது பெண்ணுக்கு நிரந்தர பாதிப்பு ஏற்பட்டாலோ குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் முதல் வாழ்நாள் முழுவதும் சிறை அல்லது மரண தண்டனை விதிக்க முடியும் என்றும் மத்திய அமைச்சரவை இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு எதிராக குற்றம்புரிந்தவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நீதிபதி ஜேஎஸ் வர்மா குழுவின் அறிக்கை அடிப்படையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங…
-
- 2 replies
- 774 views
-
-
சென்னை நகர் முழுவதும் மு.க.அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவாளர் ஒருவர் ஒட்டியிருந்த போஸ்டரைக் கண்டு திமுக தலைவர் கருணாநிதி கடும் கோபம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஜி.வெங்கட் என்கிற ஜி.வி.ரமணா (இருவரும் திமுகவினர் அல்ல) வரும் 30-ந் தேதி அழகிரியின் பிறந்தநாளை ஒட்டி சென்னை நகர் முழுவதும் குறிப்பாக கருணாநிதியின் வீடு உள்ள கோபாலபுரம் பகுதியில் ஒருசுவர் கூட விடாமல் 3 வித போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் அழகிரியின் படம் மட்டும்தான் இடம்பெற்றுள்ளது. திமுகவினர் எப்போதும் பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் படத்தை சேர்த்து அச்சிடுவதே வழக்கம். இப்படி ஒட்டப்பட்ட போஸ்டர்களில். சுவரொட்டி வாசகங்கள்: கண்ணகி சிலம்பும், மனோகரன் விலங்கும் வீழ்ந்ததா வீழ்த்தி…
-
- 9 replies
- 4k views
-
-
One person died and two were wounded Friday when a suicide bomber blew himself up outside the U.S. Embassy in Ankara, police said. http://www.cnn.com/2013/02/01/world/europe/turkey-embassy-explosion/index.html?hpt=hp_t2
-
- 3 replies
- 607 views
-
-
முக்கிய நேரங்களில் மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்காமல் இருக்கும் செயலுக்கு மூத்த அமைச்சர்கள் சிலரிடம் பிரதமர் மன்மோகன் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், மாதத்தின் பெரும்பாலான நாள்களை மதுரையில் கழிப்பதை மு.க. அழகிரி வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அங்கிருந்தபடி அமைச்சகத்தின் அலுவல் பணிகளை அவர் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இணை அமைச்சர் மூலம் பணிகள்: அவரது துறையில் கேபினட் அமைச்சர் மேற்கொள்ள வேண்டிய பெரும்பாலான பணிகளை மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா நிறைவேற்றி வருகிறார். இதனால், மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறைகளில் கேபினட் அமைச்சராக அழகிரி பெயரளவுக…
-
- 4 replies
- 601 views
-
-
நோர்வே சிறுவர் காப்பக விவகாரம் : இலங்கை அரசு தலையீடு செய்யும் நோர்வேயின் சிறுவர் காப்பக விவகாரங்கள், அங்கு மீறப்பட்டு வருகின்ற சிறுவர் உரிமைகள் அடிப்படை மற்றும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச சட்டங்கள் தொடர்பில் இலங்கை அரசு கவனம் செலுத்தியுள்ளதுடன் தலையீடுகளை மேற்கொள்வதற்கு தகலவ்களை திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் காப்பகங்களால் பொறுப்பேற்கப்பட்டு சிறுவர் விடுதிகளிலும் வளர்ப்புப் பெற்றோரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள பெறும்பாலான சிறுவர்கள் அங்கு தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதனால் மரணங்கள் சம்பவித்திருப்பதாகவும் நோர்வேயின் பல்வேறு ஊடகங்களில் இருந்து கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். நோர்வே சிறுவர் காப்பக சிறுவர்…
-
- 0 replies
- 579 views
-
-
"விக்ரம்' படத்தின்போது நடிகர் கமல்ஹாசன் குறித்து எம்ஜிஆருக்கு ஜெயலலிதா எழுதிய கடிதம் தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தரத் தயாராக இருக்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: "வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி' என்ற தலைப்பில் புதன்கிழமை கடிதம் ஒன்று எழுதினேன். அதில் கமல்ஹாசன் தொடர்பாக எம்ஜிஆருக்கு ஜெயலலிதா தன் கைப்பட எழுதிய கடிதம் குறித்தும் குறிப்பிட்டிருந்தேன். இது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், எம்ஜிஆருடன் தினமும் பேசுவதற்கு தனக்கு வாய்ப்பு இருந்ததால் எதற்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுள்ளார். இதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தன் பேட்டியில் கூறியுள்ளார். நான் …
-
- 2 replies
- 1.1k views
-
-
புதுடில்லி:""இந்திய குடிமக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; நீங்கள் உங்கள் நாட்டு மக்களை கவனித்து கொள்ளுங்கள். தேவையில்லாமல், எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்,'' என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங் பதில் அளித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான், மும்பையில், தன் மனைவி, கவுரியுடன் வசிக்கிறார். "பொது இடங்களில், மது அருந்தி குழப்பம் ஏற்படுத்தினார்' என்றும், "புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களில், மீறி புகை பிடித்தார்' எனவும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் இவர்.சில நாட்களுக்கு முன், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஷாருக் கான், "நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சி…
-
- 3 replies
- 485 views
-
-
விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார். நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை…
-
- 5 replies
- 1k views
-
-
சீனாவில் பாயும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில், யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது. சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த அணை கட்டுவது குறித்து, அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது. சீன வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஈரானில் நபரொருவருக்கு விரல்களை வெட்டித்தண்டனை: அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் By General 2013-02-01 09:59:30 திருட்டு மற்றும் முறைகேடான பாலியல் தொடர்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்ட நபரொருவரின் விரல்கள் விசேட வெட்டும் உபகரணமொன்றின் மூலம் துண்டிக்கப்படும் கொடீர காட்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேற்படி நபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில், விரல்களை வெட்டும் இயந்திரத்துக்கு அருகே அழைத்து வரப்பட்டு அவரது கரம் இயந்திரத்தின் வெட்டுப் பகுதியில் வைக்கப்பட்டு விரல்கள் துண்டிக்கப்படும் காட்சியை மேற்படி புகைப்படங்கள் விபரிகின்றன. ஆனால், தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளான நபர் எதுவித வலியுணர்வையும் வெளிப்படுத்…
-
- 0 replies
- 416 views
-
-
தீக்குளிக்கத் தூண்டியதாக திபெத் புத்த துறவிக்கு சீனாவில் மரணதண்டனை! [Friday, 2013-02-01 08:11:33] சீனாவில் திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் துறவிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவரது உறவினருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிராகப் போராட்டம் நடந்து வரும் திபெத்தில் இளைஞர்களை தீக்குளிக்க தூண்டியதான குற்றச்சாட்டில் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு சிச்சுவான் மாகாண நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மொத்தம் 8 பேரை தீக்குளிக்கத் தூண்டியுள்ளனர். அதில் 3 பேர் இறந்துவிட்டனர். 5 பேர் காப்பாற்றப்பட்டனர். எனவே முக்கியக் குற்றவாளியான புத்தத் துறவி லோராங்க் கோன்சோக்குக்கு …
-
- 0 replies
- 240 views
-
-
கனடாவின் சுற்றுச்சூழல் துறை இன்று விடுத்துள்ள அறிக்கையில், Mississauga, Brampton, Milton and Halton Hills, மற்றும் Toronto நகரின் சில பகுதிகள் முதலிய இடங்களில் பனிப்புயல் தாக்கக்கூடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. மேற்கண்ட நகரங்களின் சாலைகள் முழு அளவில் பனியால் மூடப்பட்டும், எதிரே வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், முக்கியமாக தேசிய நெடுஞ்சாலை 401 மற்றும் 427 ஆகிய சாலைகளில் பனிமூட்டம் மிக அதிகமாக காணப்படுவதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நகரங்களில் சாலைகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடனும், மெதுவாகவும் செல்லும்படி காவல்துறையினர் அறிவு…
-
- 7 replies
- 676 views
-
-
ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல் குவைடா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டன. இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரான்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டுகோள் விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள்ளார். மாலியில் நிலமை மோசமடைந்து பயங்கரவாத அமைப்பொன்று வெற்றிபெறும் நிலை உருவானதைத் தொடர்ந்து ஐ.நா வின் பாதுகாப்பு சபை சென்ற மாதம் அவசரமாகக் கூடியது தெரிந்ததே. அதைத் தொடர்ந்து மாலியில் ஏற்படும் நகர்வை தடுக்க ஆகவேண்டிய அனைத்தையும் செய்யும்படி பாதுகாப்பு சபை உத்தரவு வழங்கியிருந்தது. ஆபிர…
-
- 31 replies
- 1.8k views
-
-
By FARNAZ FASSIHI, JULIAN E. BARNES and SAM DAGHER Conflicting accounts emerged Wednesday over an apparent Israeli airstrike inside Syrian territory earlier in the day—with several regional and Western officials saying Israeli jets had struck a convoy of trucks carrying arms near the Lebanon-Syria border, while Syria's state media described an Israeli strike on a military facility near Damascus. Israel launched an airstrike against a convoy of trucks moving near the Lebanon-Syria border Tuesday, a senior U.S. official and a Lebanese security official said. WSJ's Farnaz Fassihi joins The News Hub with the latest. Photo: Getty Images. The early-morning Israeli strik…
-
- 6 replies
- 577 views
-
-
இன்றைய டொரண்டோ பங்குச்சந்தையில், பிளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதிய வகையான ஸ்மார்ட் மொபைல் போனை அறிமுகப்படுத்தி சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தபோதும், சரிவையே சந்தித்து உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் குறைந்து கொண்டே வருவதால், நிர்வாகம் கவலையடைந்துளளது. The Waterloo, Ont. நிறுவனத்தின் பங்குகள் இன்று மட்டும் சுமார் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. சந்தை ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களிலேயே அதனுடைய மதிப்பில் இருந்து $12.76 குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளாக்பெர்ரி நிறுவனம் இந்த வாரத்தில் BlackBerry Z10 and the BlackBerry Q10. ஆகிய இரண்டு புதிய வகையான மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இவை பொதுமக்கள் மத்தியில் ஆர்வமாக கவனிக்கப்பட்டு, ஆரம்ப நி…
-
- 1 reply
- 447 views
-
-
விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
-
- 2 replies
- 825 views
-
-
-
A Halifax navy intelligence அதிகாரியாக பணிபுரிந்த ஒருவர் ரஷ்யாவிற்காக கனடாவின் பல ரகசியங்களை பணத்திற்காக விற்பனை செய்ததாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. A Halifax navy intelligence அதிகாரியா 41 வயது Delisle என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் சுமார் $71,817 பணத்தை ரஷ்ய உளவாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு, கனடாவின் முக்கிய பல ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அவர் மொத்தம் 27 தவணைகளில் பெற்றுள்ளதாக Crown attorney Lyne Decarie அவர்கள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட Delisle நீல நிற ஸ்வட்டர் அணிந்துகொண்டு, தனது வழக்கறிஞருடன் நீதிமன்ற…
-
- 0 replies
- 402 views
-
-
கருகும் பயிர்களை காப்பாற்ற காவிரி நீருக்காக, தமிழகம் சுப்ரீம் கோர்ட், காவிரி கண்காணிப்புக்குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையம் என பந்தாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், இப்பிரச்னையில் தமிழக அரசுக்கும் மிகவும் சோதனையான ஆண்டு என்றே கூறலாம். அந்த அளவிற்கு காவிரி பிரச்னையில் தமிழகமும், தமிழக அரசும் பந்தாடப்பட்டுள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரைகுறுவை மற்றும் சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால், தமிழகத்தில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பா பயிரையாவது, பிழைக்க வைக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் …
-
- 1 reply
- 293 views
-