Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுவிஸின் ஜெனிவா நகரில் UBS என்ற வங்கி இயங்கி வருகிறது. இதே பகுதியில் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் வீடும் அமைந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை இரவு வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அந்த ஊழியரையும் அவரது மனைவியையும் சிறை பிடித்துள்ளனர். பின்னர், அருகில் இருந்த வங்கிக்கு வந்த கொள்ளையர்கள் மில்லியன் கணக்கில் பிராங்குகளை மூட்டை கட்டி அள்ளிச்சென்றுள்ளனர். இந்த தகவல் நேற்று காலை 8 மணியளவில் வெளியானதை தொடர்ந்து, அந்நகர பொலிசார் வங்கியின் முன்னால் திரண்டு விசாரணையை மேற்கொண்டனர். எனினும், நள்ளிரவு முழுவதும் கொள்ளையர்கள் வங்கியில் இருந்தனரா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பேசிய Maria Lucinda என்ற ஊழியர், ‘வீட்டில் சிறை ப…

  2. இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் - ஹமாஸ் அரசியல் தலைவர் உயிரிழப்பு! தெற்கு காசாவின் கான் யூனிஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் சலா அல்-பர்தவீல் கொல்லப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. ஜனவரி மாதம் ஆரம்பமான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து, இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகப் பாலஸ்தீன சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் அலுவலகத்தில் உறுப்பினராக இருக்கும் பர்தவீலுடன் சேர்ந்த…

  3. மெக்ஸிகோவில் கண்டெடுக்கப்பட்ட 50 சடலங்களையும் அடையாளங் காணும் பணிகள் தீவிரம்! வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் ஓரே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 50 சடலங்களையும் அடையாளங் காணும் பணிகள், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவருதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தற்போதுவரை, இதுவரை 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதில் 12 ஆண்கள் மற்றும் ஒரு பெண் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் முன்னர் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் என கூறப்டுகின்றது. தடயவியல் நிபுணர்கள் மீதமுள்ள நபர்களின் பாலினத்தை அல்லது மரணத்திற்கான காரணத்தை இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும், அதற்கான பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். …

  4. ஆமதாபாத்:குஜராத்தை சேர்ந்த 60 இளைஞர்கள், தங்களை அரவாணியாக மாற்றிக் கொள்ள அனுமதி கோரி, கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு வேலை கிடைக்காதது தான், அரவாணியாக முடிவு எடுத்ததற்கு காரணம்.குஜராத்தில் அரவாணிகள் ஏராளமாக சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். 10 அரவாணிகள் கொண்ட குழுவினர், ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் இடையே, ஏரியா பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்படுவது கூட உண்டு.தங்கள் குழுக்களில் இடம் பெறுவதற்காக, இளைஞர்களை கடத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக அரவாணியாக மாற்றுவதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, அரவாணியாக மாற விரும்புவோர், கோர்ட்டில் அ…

  5. Kim Jong Un's Iran Visit Will Mark First Official Overseas Visit Posted: 08/22/2012 2:01 pm Updated: 08/22/2012 2:02 pm Bon voyage! (AP Photo/Korean Central News Agency via Korea News Service) Half a year after taking over for his late father Kim Jong Il, North Korea's young head of state is planning his first official trip abroad next week. NBC News reports that Kim Jong Un is headed to Iran to attend the Non-Aligned Movement (NAM) summit. Just what sort of meeting would draw the leader of the hermetic state halfway across the world? AFP explains: The NAM, born at the height of the Cold War, brings together nations that consider thems…

    • 3 replies
    • 669 views
  6. அதிக வெப்பநிலை காரணமாக 150 பேர் பலி இந்தியாவில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக, இதுவரை 150 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மாத்திரம், 120க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சராசரியாக 40 பாகை செல்சியஸ் வெப்ப நிலை நிலவி வருவதாகவும் இந்த வெப்பநிலையானது எதிர்வரும் தினங்களில் 44 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிஷா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மதுரை, கோவை, திருநெல்வேலி, மாவட்டங்களில் கடும் வெயிலுடனான காலநிலை நிலவியத…

  7. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஹச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் டாலர் அளவிற்கு உயர்த்தும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப். கட்டுரை தகவல் பெர்ன்ட் டெபுஸ்மான் ஜூனியர் வெள்ளை மாளிகை டேனியல் கேய் வணிக செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலர் (சுமார் 88 லட்சம் இந்திய ரூபாய்) அளவிற்கு உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். அந்த உத்தரவில், ஹெச்-1பி திட்டம் தவறாகப் பயன்படுத்துவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பத…

  8. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டாம் பேட்மேன் வெள்ளை மாளிகை வெளியுறவுத்துறை செய்தியாளர் 30 செப்டெம்பர் 2025, 08:44 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸா போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது திட்டம் "மனிதகுல வரலாற்றின் சிறந்த நாட்களில் ஒன்றாகவும், மத்திய கிழக்கில் நிலையான அமைதியைத் தரக்கூடியதாகவும்" இருக்கும் என்று கூறினார். இப்படி மிகைப்படுத்திப் பேசுவது டிரம்பின் வழக்கமான பாணிதான். ஆனால், திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தபோது அவர் வெளியிட்ட 20 அம்சங்களைக் கொண்ட இந்தத் திட்டம், அவரது சொற்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும், ராஜ்ஜீய ரீதியாக ஒரு முக்கியத் தருணமாகவே உள்ளது. இந்த…

  9. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, காஸா அமைதி திட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டது. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்துக்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ளன. காஸாவில் இரண்டு ஆண்டுகளாக தொடரும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முக்கிய நகர்வாக இது பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் மூலம் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் எனவும், இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும் என்றும் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் பற்றிய செய்திகள் வெளியானதை அடுத்து காஸாவிலும் இஸ்ரேலிலும் மக்கள் ஒன்றுகூடி கொண்டாடின…

  10. கொரோனா வைரஸ் எவரையும் தாக்கலாம் ஆனால் சில சமூகத்தினர் ஏனையவர்களை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன என பிபிசி தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் இனசிறுபான்மை குழுக்களின் மீது அளவுக்கதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவதை புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தியுள்ளன என பிபிசி தெரிவித்துள்ளது. தீவிரகிசிச்சை பிரிவின் தேசிய கணக்காய்வு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரசினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 35 வீதமானவர்கள் சிறுபான்மை மற்றும் கருப்பினத்தை சேர்ந்தவர்கள் என பிபிசி தெரிவித்துள்ளது. இங்கிலாந்து வேல்ஸ் வடஅயர்லாந்து மருத்துவமனைகளில் தீவிரகிசிச்சை பிரிவுகளில் உள்ள 2000 நோயாளிகள் மத்தியில் மேற்க…

    • 4 replies
    • 691 views
  11. 100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்கு படகுகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. படம்: ஏஎப்பி பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா வில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மழை காரணமாக ஜெர்மனியில் 8 பேரும் பிரான்ஸில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக் கானோர் வீடு, உடைமைகளை இழந்துள்ளனர். ஒரு வாரமாக மழை பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் மற்றும் அந்த நாட்டின் மத்திய, தென்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை ப…

  12. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் ஆண்டனி ஸுர்கர் வட அமெரிக்க செய்தியாளர், வாஷிங்டன் 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசாங்க முடக்கம் 43 நாட்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அரசு ஊழியர்கள் மீண்டும் சம்பளம் பெறத் தொடங்குவார்கள். தேசிய பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படும். குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு சேவைகள் மீண்டும் தொடங்கும். அனைத்தும் அமைதியான பிறகு, நிதி மசோதாவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்ட மை காய்ந்த பிறகு, இந்தச் சாதனை படைத்த அரசு முடக்கம் என்ன சாதித்தது? அதன் விலை என்ன? செனட் சபையில் ஜனநாயகக் கட்சியினர் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், குடியரசுக் கட்சியினர் அரசாங்கத்திற்குத் தற்…

  13. இராமர் மோசமானவர், இலட்சுமணன் அதை விட மோசமானவர்: சர்ச்சையை கிளப்பியுள்ள ஜேத்மலானி By General 2012-11-09 14:38:39 பாஜகவுக்குள் இருந்து கொண்டே பாஜக தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள ராம்ஜேத்மலானி அடுத்து இந்துக் கடவுளான இராமரைப் பற்றி சர்சையை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இராமாயணத்தின் நாயகனான இராமர் ஒரு மோசமான கணவராக இருந்தார். எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. ஏதோ சில மீனவர்கள் எதையோ சொன்னார்கள் என்பதற்காக தாலி கட்டிய மனைவியை வனவாசம் அனுப்பிய கணவர் ராமர். சீதை பரிதாபத்துக்குரிய பெண். இராமர் இப்படி என்றால், அவரது தம்பி இலட்சுமணன் இன்னும் மோசம். சீதா கடத்தப்பட்டபோது, இலட்சுமணனைப் போய…

  14. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகல்: அடுத்தது என்ன? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமென பிரிட்டன் வாக்களித்திருக்கிறது. சரி இனி என்ன நடக்கும்? உடனடியாக ஒன்றும் மாறாது. அடுத்து என்ன செய்வது என அரசியல்வாதிகள் முடிவெடுக்கும்வரை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே நீடிக்கும். ஐரோப்பிய ஒன்றிய முக்கிய தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். அடுத்து பிரஸ்ஸல்ஸில் நெருக்கடிகால கூட்டங்கள் கூட்டப்படும். அப்படியானால் அதிகாரப்பூர்வ வெளியேற்றம் எப்போது ஆரம்பிக்கும் என்பதே பலரின் கேள்வி? லிஸ்பன் ஒப்பந்தம் 50 ஆவது பிரிவு அதற்கான நடைமுறையை விளக்குகிறது. அதன்படி, வெளியேறுவதற்கான ம…

  15. 'நான் ஒரு போர்க்கைதி': அமெரிக்க நீதிமன்றத்தில் மதுரோ பேசியது என்ன? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவும் அவரது மனைவியும் ஆஜர்படுத்தப்பட்டதை சித்தரிக்கும் வரைபடம் கட்டுரை தகவல் மெடலின் ஹால்பெர்ட் நியூயார்க் நீதிமன்றத்தில் இருந்து 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் வெனிசுவேலா தலைவர் நிக்கோலஸ் மதுரோ முதன்முறையாக நியூயார்க் நகர நீதிமன்ற அறைக்குள் நுழைவதற்குச் சில கணங்களுக்கு முன்பு, அவரது கால்களில் பூட்டப்பட்டிருந்த விலங்குகள் உரசிக்கொள்ளும் சத்தம் கேட்டது. பின்னர் அவர், நிரம்பி வழிந்த செய்தியாளர்களிடமும் பொதுமக்களிடமும் தான் இப்போதுதான் "கடத்தப்பட்டதாக" கூறினார். அவர் நுழைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு, நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டைன், வ…

  16. 9/11 இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான ‘கோப்பு எண் 17’ வெளியிடும் ரகசிய தகவல்கள் 9/11 பயங்கரவாதத் தாக்குதல். | கோப்புப் படம்: ஏ.பி. 9/11 என்று அழைக்கப்படும் அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான கோப்பு எண் 17-ன் மூலம் சில ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இந்தக் கோப்பை அமைதியாக வெளியிடப்படுவதற்கான ஆவணமாக்கியுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு சவுதி அரேபியாவுடனான தொடர்பு அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ‘தீவிரமான சவுதி ஆதரவு அமைப்பு’ “பயங்கரவாதிகள் அமெரிக்காவில் இருந்த காலக்கட்டத்தில் தீவிர சவுதி ஆதரவு இருந்துள்ளது. கோப்பு எண் 17-ல் கூடுதலாக விடை தெரியாத சில கேள்விகல் எழுந்துள்ளன. 9/11 பற்றி இப்படித்தான் நாங்கள் சிந்திக்கிறோ…

  17. இலங்கைத் தமிழர் அறப்போர் இலங்கையில் நடக்கும் அறப்போரை ஆதரித்தும், இலங்கை அரசின் அடக்குமறைகளை கண்டித்தும் நடத்தப்படும் முதல் கூட்டம் இதுதான். திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலாக இப்படிப்பட்ட கூட்டத்தை இன்றயதினம் கூட்டியிருக்கிறதென்றால் இதை அரசியல் வரலாற்றில் எங்கோ ஒரு மூலையில் தள்ளிவிடும் சாதாரண பிரச்சனையாக இது இருக்க முடியாது. இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையும், அவர்கள் மீது வீசப்படும் பழிச்சொற்களும், இழிச் சொற்களும், தமிழர் கடை சூரையாடப்படுவதையும், ஆடவர், பெண்டிர், முதியவர், குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டியடிக்கப்படுவதும், துடிக்கத் துடிக்க வெட்டப்படுவதும் கேட்டு நமக்கெல்லாம் மனம் பதறச் செய்கிறது. இதை எண்ணும்போது எனக்கு தமிழ் …

  18. ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற சீன ஜனாதிபதியிடம் ட்ரம்ப் உதவி கோரினாரா? by : Anojkiyan எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற உதவுமாறு, சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிடம் தனிப்பட்ட முறையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உதவி கோரியதாக, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. The Room Where It Happened என்ற தலைப்பில் ஜோன் போல்டன் எழுதியுள்ள குறித்த புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், புத்தகத்தின் ஒரு பகுதி வால் ஸ்ட்ரீட் ஜர்னல், நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வெஷிங்டன் போஸ்ட் ஆகிய பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.…

    • 0 replies
    • 347 views
  19. சென்னை: பாலியல் வன்முறை தொடர்பாக தமிழக அரசு செய்துள்ள சில அறிவிப்புகள் ஏற்கத்தக்கவையாக இருந்தாலும் பல ஏற்கத்தக்கவையாக இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கோடு தமிழக அரசு சில அறிவிப்புகளை செய்திருக்கிறது. காவல் துறையினருக்கு பெண்கள் தொடர்பான சட்டங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், பாலியல் வன்முறை வழக்குகளை விசாரிக்க நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என விடுதலை சிறத்தைகள் வலியுறுத்தி வந்தது. தற்போது தமிழக அரசின் அறிவிப்பில் இந்த இரண்டு நடவடிக்கைகளும் இடம் பெற்றுள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. பாலியல் வன்முறை த…

    • 3 replies
    • 1k views
  20. இஸ்தான்புல்: அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது எறியப்பட்ட ஷூவைத் தயாரித்த நிறுவனத்திற்கு பயங்கர கிராக்கி ஏற்பட்டுள்ளது. அந்த கம்பெனிக்கு திடீரென ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளனவாம். இதனால் 100 பேரை புதிதாக வேலைக்குப் போட்டு விறுவிறுவென ஷூக்களைத் தயாரித்துத் தள்ளுகிறதாம் அந்த நிறுவனம். துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லைத் தலைமையிடமாகக் கொண்ட ஷூ நிறுவனம் பெய்டன் ஷூ கம்பெனி. இந்த நிறுவனத்தின் ஷூக்களைத்தான் பத்திரிக்கையாளர் முன்டாசர் அல் ஜெய்தி அணிந்திருந்தார். இதைத்தான் புஷ் மீது அவர் வீசினார். குவியும் ஆர்டர்கள் இதையடுத்து பெய்டன் ஷூக்களுக்கும் படு கிராக்கி ஆகி விட்டது. இதனால் உச்சி குளிர்ந்து போயிருப்பவர் பெய்டன் ஷூ நிறுவனத்தின் உரிமையாளரான ரமஸான் பெய்டன்தான். அவரது…

  21. அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு இணையத்தளம் முடக்கம் அவுஸ்திரேலியாவின் குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதலைத் தொடர்ந்து, அவ்விணையத்தளத்தை முடக்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பதற்கு, அந்நாட்டு அரசாங்கம் முயல்கிறது. இந்த இணையத் தாக்குதலின் காரணமாக, மக்களின் தனிப்பட்ட தகவல்கள் எவையும் திருடுபோகவில்லை என நேற்றுப் புதன்கிழமை தெரிவித்த அவுஸ்திரேலிய அரசாங்கம், முன்னெச்சரிக்கையாகவே இவ்விணையத்தளத்தை முடக்கும் முடிவை எடுத்ததாகத் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் ஆரம்பித்த இந்த இணையத் தாக்குதல்கள…

  22. ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா- பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே நேற்று கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. பூஞ்ச் மாவட்டம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையைக் கடந்து ஊடுருவ முயன்றனர். இதனால் அவர்களைத் தடுக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். அப்போது ராணுவத்தினரின் கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய தரப்பில் பதிலடி தரப்பட்டது. நேற்று இரவு நிகழ்ந்த இந்த மோதலால் எல்லையில் தொடர்ந்தும் பதற்றமான நிலை நிலவி வருகிறது ஏற்கெனவே இந்திய ராணுவ வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் மிகக் கொடூரமாக கொலை செய்திரு…

  23. அமெரிக்காவில் மீண்டும் டொனால்டு டிரம்ப் ஆட்சியே தொடரும் - கருத்துகணிப்பில் தகவல் அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள் அல்லது தற்போதைய ஜனாதிபதிக்கே இன்னொரு வாய்ப்பை வழங்குவார்கள். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் நூறு நாட்களே உள்ள நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்துக் கணிப்புகளில் மோசமான நிலையில் உள்ளார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் வெற்றி பெறுவார் என்றே கணிக்கப்படுகிறது. 2016 தேர்தலுக்கு முன்னர் இரு…

  24. அணு உலையில் இருந்து அமிலம் கலந்த கழிவு நீரை கடலில் விடுகிறார்கள். அது கடல் நிறத்தை மாற்றுவதோடு மட்டுமல்லாமல் பயங்கர ரசாயன வாடையும் அடிக்கிறது என்று அணுசக்தி எதிரான மக்கள் இயக்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்: நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி நாராயணசாமி, கூடங்குளம் அணு உலையை பொறுத்தவரை மக்களின் பாதுகாப்புதான் மிகவும் முக்கியம் என்று கூறியிருக்கிறார். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்துள்ள கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நிறைவேற்றும் பணிகள் நடந்து வரும் காரணத்தால்தான் மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்று அவர் கூறியிருக்கிறார். அப்படி என்றால் கூடங்குளம் அணுஉலை இத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.