Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவார் என்று முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் களம் காண்கிறார். குடியரசுக் கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தொலைக்காட்சியில் பேட்டியளித்த முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன் கூறியது: தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பதை 5 முதல் 6 விஷயங்கள்தான் தீர்மானிக்கும் என்று கருதுகிறேன். அவை நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட தேசிய பிரச்னைகளாகவே இருக்கும். இப்போதைய நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று கருதப்பட்டாலும், தேர்தல் நடைபெறும்…

  2. ராணுவத்துக்கான செலவை சீனா தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் நடைபெறும் பாதுகாப்புத் துறை மாநாட்டில் பங்கேற்ற அந்தோனி,அங்கு சீனாவின் ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரித்துள்ளது குறித்து கூறியது: சீனா தனது ராணுவ பலத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதுகாப்புத்துறை ஒதுக்கும் தொகையையும் ஆண்டுதோறும் பெரிய அளவில் உயர்த்தி வருகிறது. இது இந்தியாவுக்கு கவலையளிக்கிறது. இந்தியா ஒருபோதும் ஆயுதப் போட்டியில் ஈடுபட்டதும் இல்லை. அதனை விரும்பியதும் இல்லை. எனினும் தேச பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. முக்கியமாக எல்லைப் பகுதியில் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கத் தேவையான தீவி…

  3. எகிப்திய ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக்கிற்கு இன்று ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எகிப்தினை தனது குடும்ப ஆட்சியாக ஆண்டு வந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த கிளர்ச்சியாளர்கள் பலரை ஹொஸ்னி முபாரக் கொலை செய்ய உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழங்கு விசாரணை ட்றயல் அட்பார் முறையில் கடந்த 10 மாதங்களாக நடந்து வந்த நிலையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட ஹொஸ்னி முபாரக்கிற்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை ஆதரரித்து மக்கள் குதூகலத்தில் குதித்தமையையும் காணக்கூடியதாக இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹொஸ்னி முபாரக்குடன் அவரது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹபீப் அல்-அட்லிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது h…

  4. தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை காலமானார் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் சோலை (வயது 81) இன்று (29.5.20120 மாலை காலமானார். கம்யூனிஸ்ட்வாதியாகவும், பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தவர் சோலை. ஜெயலலிதாவின் அரசியல் ஆலோசகராக இருந்து விலகினார். திமுக தலைவர் கலைஞருடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தார். அரசியல் விமர்சனக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி தனக்கென ஒரு தனி இடம் கொண்ட பத்திரிகையாளர் சோலை. நக்கீரன் வாரமிருமுறை இதழ் உட்பட பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவந்தார். திண்டுக்கல் மாவட்டம் அய்யன்பாளையத்தை பிறப்பிடமாகக் கொண்ட சோலை, சென்னையில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் தாம்பரத்தில் உள்ள தனியார் மர…

  5. மாவோ தீவிரவாதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தந்திரோபாயங்களை பயன்படுத்தி வருவதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய யுத்தத்தின்போது பெண்களைப் பயன்படுத்தி தாக்குதல் வியூகம் அமைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதே வழிமுறையை தற்போது மாவோ தீவிரவாதிகளும் பின்பற்றி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. பெண்களை பயன்படுத்தி படையினரின் கவனத்தைத் திசை திருப்பி அண்மைக்காலமாக மாவோ தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அண்மையில் சட்டிஸ்காரில் மாவோ தீவிராவதிகள் காட்டுப் பகுதியில் பெண்களை அழ விட்டு, அந்தக் குரலைக் கேட்டு வந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மற்றுமொரு சந்தர்ப்பத்த…

    • 3 replies
    • 733 views
  6. தமிழர்கள் கொந்தளிப்பு : நடிகை தப்பி ஓட்டம் ’ஏழாம் அறிவு’, ’காதலில் சொதப்புவது எப்படி’ உட்பட சில படங்களில், சின்ன, சின்ன வேடங்களில் நடித்தவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணா. பெங்களூருவைச் சேர்ந்த இவர், தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆசையில், தமிழகத்துக்கு வாய்ப்பு தேடி வந்தார். சென்னையிலுள்ள தனது தோழிகளுடன் தங்கியிருந்த அவர், சினிமா வாய்ப்பு தேடி, சினிமா கம்பெனிகளில் ஏறி, ஏறி இறங்கினார். "ஏழாம் அறிவு' படத்தில் சிறிய வேடத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார். சமீபத்தில் வெளியான "காதலில் சொதப்புவது எப்படி' என்ற படத்திலும் சிறிய வேடம் கிடைத்தது. இதையடுத்து, ப…

  7. ஜெயலலிதாவின் எச்சரிக்கையால் பணிந்தது கேரளா! முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப்பதற்காக மத்திய ஆய்வுக் குழு வினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு அனுமதி வழங்கியுள்ளது. அணையின் பலத்தை ஆராய போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள போலீசார் தடுப்பதாகவும், எனவே அங்கு மத்திய படைகளை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழக போலீசாரை அங்கு நிறுத்தவேண்டியது வரும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று கடிதம் எழுதியிருந்தார். இதன் எதிரொலியாக,முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை பரிசோதிப் பதற்காக மத்திய ஆய்வுக்குழுவினரால் போடப்பட்ட துளைகளை அடைக்க கேரள அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. http://www.irukkiram...2905201204.html

  8. லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்லஸ் டெய்லருக்கு ஐம்பது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஆதரவு சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு முதல் 2002மாம் ஆண்டு வரையில் சியரோ லியோனில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது கிளர்ச்சியாளர்கள் இனப்படுகொலைகளை மேற்கொள்ள ஜனாதிபதி டெய்லர் உதவியாக கடந்த மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஜனாதிபதி பதவி மற்றும் மக்களுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் போன்ற காரணிகளின் அடிப்படையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் நீதவான்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், 64 வயதான டெய்லர் தாம் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை எனவும், தாம் …

  9. பிரான்சின் 19வயது வீரமங்கையான ஜோன் ஒப் ஆர்க் இன் சிலிர்பூட்டும் வீரவரலாறு இன்று எல்லாமே முடிந்து விட்டதக நினைத்து மூலையில் இடிந்துபோய் இருப்பவர்களும் பழைய சுதந்திர வாழ்வை மறந்துவிட்டு கிடைத்துள்ள இனத்தை கருவறுக்கும் இன்றைய சிங்களத்தின் சதிகார வாழ்வை ஏற்று வாழத்தலைப்பட்டுள்ளவர்களும் அறியவேண்டிய விடையமாகும். யார் இந்த ஜோன் ஒப் ஆர்க்? உலக சரித்திரத்தில் அழியாத இடம்பெற்ற ‘ஜோன் ஒப் ஆர்க்’ என்ற இளம் பெண்ணைப்பற்றி வல்லாதிக்க சக்திகளின் பக்கத்துணையுடன் சிங்களத்தால் அழிக்கப்பட்டுள்ள நாங்கள் அறிந்து கொள்வது அவசியம். அது 15ஆம் நூற்றாண்டு. இங்கிலாந்து பிரான்சு ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்து பிரான்சின் பல பகுதிகளை கைப்பற்றியது. பிரா…

  10. கர்நாடகத்திடம் தண்ணீர், கரண்ட்டுக்கு பிச்சை எடுக்கிறோமாம்: சொல்கிறார் 7ம் அறிவு நடிகை ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி ஆகிய படங்களில் நடித்த தன்யா பாலகிருஷ்ணா இனி கோலிவுட் படங்களில் நடிக்கவே மாட்டாராம். ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாகவும், காதலில் சொதப்புவது எப்படி படத்திலும் நடித்துள்ளவர் பெங்களூரைச் சேர்ந்த தன்யா பாலகிருஷ்ணன். அவர் கையையும், காலையும் சும்மா வைத்துக் கொண்டிருக்க முடியாமல் ஃபேஸ்புக்கில் தமிழகத்தை பற்றி கமெண்ட் அடித்துள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது, டியர் சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீர்கள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்திற்காக பிச்சை எடுக்கிறீர்கள் நாங்கள் கொடுக்க…

  11. இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் பல இயக்கங்களின் உள்ளகத் தகவல்களை உலகுக்கே வெளிச்சம் போட்டுக் காட்டிய விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை அடுத்து அவர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அவரை திரும்ப ஒப்படைக்குமாறு சுவீடன் அரசு இங்கிலாந்து அரசிடம் கோரியது. இதனை எதிர்த்து அசாஞ்சே இங்கிலாந்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த 7 நீதிபதிகளில், 5 பேர் ´அசாஞ்சேவை நாடு கடத்தவேண்டும்´ என்று கூறினர். இதை அடுத்து, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் அசாஞ்சேவை சுவீடன் நாட்டுக்கு கடத்த ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. உயர் நீதிமன்றின் உத்தரவை எ…

    • 0 replies
    • 478 views
  12. http://news.sky.com/...module/15284400 மேலயுள்ள லிங்கில 1976 ஆண்ட அமத்தி வீடியோவ play பண்ணிபாருங்க... அற பழசான் செய்தி தான். எண்டாலும். எல்லா தமிழரும் 18 நூற்றாண்டில தான் இந்தியாவிலவிருந்து இலங்கைகு வந்தது எண்டுறான். இவண்ட அறிவ என்ன செய்ய??? ஆர நோக... ஆரவது வடிவா ஆங்கிலத்தில விளக்கம் அனும்புங்கோ, அவர twitter id http://twitter.com/#!/skytwitius http://twitter.com/#!/skytwitius அடுத்த முறையவது ஒழுங்க சொல்லட்டும் ;(

  13. முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு 50 வருட சிறைத்தண்டனை லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லருக்கு ஐ.நா. ஆதரவுடனான போர்க்குற்ற விசாரணை நீதிமன்ற,ம் 50 வருடகால சிறைத்தண்டனை விதித்துள்ளது. தற்போது 64 வயதான சார்ள்ஸ் டெய்லர், ஆயுத கிளர்ச்சியில் ஈடுபட்ட அமைப்பொன்றின் தலைவராக இருந்தவர். 2007 ஆம் ஆண்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் 2003ஆம் ஆண்டு சர்வதேச நிர்ப்பந்தங்கள் காரணமாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அவர் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், சியாரா லியோனில் பயங்கர வன்முறையில் ஈடுபட்ட குழுவினருக்கு ஆயுதங்களை விநியோகித்து அவற்றுக்குப் பதிலாக இரத்தினங்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தார். …

    • 0 replies
    • 301 views
  14. மாவோயிஸ்ட்களிடம் 6 ஆயிரம் ரொக்கெட் லோஞ்சர்கள் இருப்பதாகவும், ஆயுதங்கள் கொள்முதலுக்காக அவர்கள் ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் தேசிய புலனாய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆயுதங்கள் நிர்வாக பிரிவு தலைவராக கருதப்படும் ராமகிருஷ்ணன் என்பவர், அண்மையில் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திர மாநிலம் வாராங்கல்லை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் ஒரு பயிற்சி பெற்ற இன்ஜினி…

  15. சிரிய இராணுவத்தின் வெறியாட்டம்: குழந்தைகள் உட்பட 92 பேர் பலி. சிரிய ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 32 குழந்தைகள் உட்பட 92 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் பதவி விலக வேண்டும் என்பதற்காக கடந்த 14 மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹெளலாவில் நேற்று இராணுவம் நடத்திய தாக்குதலில் இளம் பிஞ்சுகள் அகோரமாகக் கொல்லப்பட்டுள்ளனர். சிலரது மண்டை ஓடுகள் பிளந்து இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடக்கிற காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. சிரிய ராணுவத்தின் கோரத் தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன…

    • 2 replies
    • 546 views
  16. ரஷ்யா, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் பெயரிடப்படாத புதிய நீண்டதூர ஏவுகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ளது. நேட்டோவின் ஐரோப்பிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை ஊடுருவி செல்லும் வகையில் இந்த புதிய ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. ஐரோப்பாவில் தமது புதிய ஏவுகணை பாதுகாப்பு கட்டமைப்பை நேட்டோ செயற்படுத்தி சில நாட்களில் ரஷ்யா இந்த பரீசோதனையை மேற்கொண்டுள்ளது. இந்த ஏவுகணை ஆறாயிரம் கிலோமீற்றர் வரை சென்று இலக்கை தாக்கக் கூடிய திறன் கொண்டதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் தமது முதலாவது ஏவுகணை பரிசோதனை தோல்வியில் நிறைவடைந்த நிலையில், ரஷ்யா இந்த பரீசோதனை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. நேட்டோ தமது அணு செயற்பாட்டை த…

  17. தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, "ராகுல் மக்கள் சேவகர் பேரவை' சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று நடந்தது. அதில், கோஷ்டித் தலைவர்கள் யாரும் பங்கேற்காமல் புறக்கணித்ததால், தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையுண்டபோது, அவருடன் 16 பேர் கொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மூவருக்கு, சுப்ரீம் கோர்ட் விதித்த தூக்குத் தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தி, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை விமர்சித்து, இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேணடும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலை…

  18. பாரதத்தின் இளைய தலைவர், காங்கிரஸ் கட்சியில் எப்போது வேண்டுமானாலும், பிரதமர் பதவியை அடைய தகுதி பெற்றவர் என்று கூறப்படும் ராகுல், பார்லிமென்டில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 22 நாட்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. 35 நாட்கள் நடந்த கூட்டத்தொடரில் 13 நாட்களே சபைக்கு வந்திருந்தார். மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என, சபையின் எந்த பெரிய விவாதங்களிலும் அவர் பங்கு பெறவில்லை.காங்கிரஸ் தலைவர் சோனியா, 16 நாட்கள் சபைக்கு வரவில்லை. எப்போதும் போல், அவர் சபையின் எந்த விவாதங்களிலும் பங்கு பெறவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மற்றும் பா.ஜ கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, லோக்சபாவின் அனைத்து நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று 100 சதவீத வருகையை பதிவு செய்த…

  19. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பில் கடந்த 6 நாட்களாக காணப்பட்ட சரிவு இன்றும் தொடர்கிறது. நேற்றைய வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.39 ஆக சரிந்து அதிர்ச்சி அளித்த நிலையில் இன்று மேலும் 43 காசுகள் வரை சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.82 ஆக இருந்தது. மதியத்திற்கு மேல் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.56.21 ஆக இருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்து நிலவி வரும் நிதிச் சிக்கல் காரணமாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பும் குறைந்து வருவதாலும் இந்திய ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு நிலை காணப்படுகிறது. இதன் காரணமாகஇந்திய பங்குசந்தைகளில் …

    • 8 replies
    • 1.5k views
  20. யுறோ வலயத்தில் கிறேக்கம் தொடர ஐரோப்பிய தலைவர்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. கிறேக்கம் யுறோ வலயத்தில் தொடர்ந்து இருக்கவேண்டுமெனவும், வழங்கிய உறுதிமொழிகளை அந்த நாடு கடைப்பிடிக்கவேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் விரும்புவதாக ஐரோப்பிய சபையின் தலைவர் ஹேர்மன் வான் றொம்புயி தெரிவித்தார். உத்தியோகப்பற்றற்ற முறையில் பிறஸல்ஸில் இடம்பெறும் ஐரோப்பிய உச்சி மகாநாட்டில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் உரையாற்றியபோது, கிறேக்கம் மேற்கொண்டுள்ள மிக முக்கியமான சீர்திருத்தங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது, அந்நாடு பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு முக்கியமானதென கூறினார். 2010 ஆம் ஆண்டில் இருந்து, கிறேக்கத்திற்கு உதவியாக 150 பில்லியன் யுறோவை, ஐரோ…

  21. ம‌த்‌திய அரசை நட‌த்துவது ஐ.மு. கூ‌ட்ட‌ணியா? எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்களா? வைகோ கே‌ள்‌வி பெட்ரோல் விலை உய‌ர்வு‌க்கு க‌‌ண்டன‌ம் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ள ம.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ, ம‌த்‌திய அரசை நடத்துவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா? கொள்ளையடிக்கும் எண்ணெய் நிறுவனங்களா? என கேள்வி எழு‌ப்பி‌யு‌ள்ளா‌ர். இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைக் காரணம் காட்டி மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை ஆகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பொருளாதார கொள்கைகள்தான், பணவீக்கத்துக்கும், ரூபாய் மதிப்பு சரிவதற்கும் காரணம் ஆகும். பெட்ரோல் விற்பனை மூலம் எண்ணெய்…

  22. உலகில் கடந்த நூறு வருடங்களாக நடைபெற்ற விடயங்களை 10 நிமிடம் கொண்ட வீடியோவாக உருவாக்கி உள்ளார்கள் உலகில் நடை பெற்ற சரித்திரத்தை மாற்றிய 100 விடயங்கள், முக்கிய தலைவர்களின் பேச்சுக்கள் என்பன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன 1911 முதல் 2011 வரை வீடியோவை கண்டு களியுங்கள் youtube இலும் இது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே.

  23. 20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. 20 ஆம் நூற்றாண்டின் முதற்கொண்டே இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவந்திருக்கின்றது. இருப்பினும் 21 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் பன்மடங்காக அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவும், சீனாவும் இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தி, தம் நலன் சார்ந்த போட்டியிலீடுபடுகின்றன. இந்து சமுத்திரத்தில் உள்ள பல நாடுகளில், சீனா தன் துறைமுகங்களை மிகத் தீவிரமாக அமைத்து வருகின்றது. அதன் மூலம் அதன் கடற்படை இந்துப் பிராந்தியத்தில் படிப்படியாக விஸ்தரிக்…

  24. மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மீது கடும் அதிருப்தியில் உள்ளன. இதனால், மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும் வாய்ப்பு உள்ளது என, பா.ஜ தெரிவித்துள்ளது.பா.ஜ பார்லிமென்ட் குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது: பார்லிமென்ட் கூட்டத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பா.ஜ., எம்.பிக்களுக்கு, மூத்த தலைவர் அத்வானி பாராட்டு தெரிவித்தார். நடப்பு கூட்டத் தொடரில், பல நேரங்களில், காங்கிரஸ் கட்சிக்கு, எங்கள் எம்.பிக்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.ஐக்கிய முற்போக்கு கூட்டணி, இரண்டாவது முறையாக பதவியேற்று, மூன்று ஆண்டுகள் முடிவடைந்துள்ளதாக பெருமையுடன் கூறுகின்றனர். ஆனால், இந்த மூன்று ஆண்டுகள…

    • 12 replies
    • 967 views
  25. ஆரம்ப பொது வழங்கல் (Initial public offering, அல்லது IPO) எனப்படுவது, ஒரு நிறுவனம் தனது பொதுப் பங்குபத்திரம் மற்றும் பங்குகளை முதல் முறையாக வெளியிடுவதைக் குறிக்கின்றது இது நிறுவனங்கள் தமது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டு தேவையான நிதியினைத் திரட்டிக்கொள்வதற்கான ஒரு வழியாகும். சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மட்டுமன்றி பாரிய நிறுவனங்களும் இதனை நிதிதிரட்ட உபாயமாகக் கையாள்கின்றன. அவ்வகையில் தற்போது பரபரப்பாக அனைவரையும் பேசவைத்துள்ள ஒரு விடயம் பேஸ்புக்கின் பங்குச்சந்தைப் பிரவேசமாகும். சமூகவலையமைப்பு மற்றும் இணைய உலகில் ஜாம்பவானான பேஸ்புக்கின் ஆரம்பப் பொதுப் பங்கு வழங்கல் ( IPO- Initial public offerings) கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. நஸ்டக் (Nasdaq stoc…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.