Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. | உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்ட நிறுவனம். இது தன் புதிய தலைமையகத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோபெர்டினோவில் ஒரு முடிவிலா வட்டமான கட்டிட வடிவில் நிர்மானித்து வருகிறது. பறக்கும் சாஸரைப் போல் ‘ஸ்பேஸ்ஷிப்’ அமைப்பிலுள்ள இந்தக் கட்டிடத்திற்கு ‘ஆப்பிள் பார்க்’ என்று பெயரிட்டுள்ளனர். மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பது ஆப்பிள். ஆகையால் இப்பொழுது கட்டப்பட்டு வரும் இந்தக் கட்டிடமும் பல சிறப்பான வடிவமைப்புகளைக் கொண்டிருக்கிறது…

    • 0 replies
    • 409 views
  2. ‘இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் போட்டி... சண்டையாக மாறிவிடக் கூடாது’: பைடன்- ஷி ஜின்பிங் பேச்சு! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். உளவு, வர்த்தகம் மற்றும் கொரோனா பெருந்தொற்று உருவான விதம் ஆகிய காரணங்களால் சீனா – அமெரிக்கா உறவு மோசமாகியுள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகின்றது. தொலைபேசியில் உரையாடிய இரு தலைவர்களும், விரிவான, கேந்திர ஆலோசனைகளை மேற்கொண்டதாகவும், ஒத்த கருத்துடைய விஷயங்கள், மாறுபடும் விஷயங்கள் என இரண்டையும் விவாதித்ததாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவிக்கிறது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கு…

  3. டெல்லி: இந்தியாவில் வெங்காயத்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து 550 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. சென்னையில் பெரிய வெங்காயம் 80 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் என மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியுள்ளார். இது தொடர்பாக மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லி, பீகார், காஷ்மீர் ஆகிய மூன்று மாநிலங்களில் வெங்காயத்துக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வெங்காயம் வில…

  4. 'டிராஃபிக் லைட் சிஸ்டம்' மூலம் பத்திரிகையாளர்களை கண்காணிக்கும் சீனா ஜேம்ஸ் கிளட்டன் வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ''கவனிக்கத்தக்க பிற நபர்களை'' முக ஸ்கேனிங் தொழில் நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் அமைப்பை கட்டமைத்து வருகின்றனர். பிபிசிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, ட்ராபிக் லைட் அமைப்பினுள் பச்சை, ஆம்பர், சிகப்பு ஆகிய வண்ணங்களில் அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். சிவப்பு பட்டியலில் வரும் பத்திரிகையாளர்கள், அதற்கேற்ப நடத்தப்படுவார்கள். இது குறித்து கருத்து கேட்டதற்கு, ஹெனான் பொது பாதுகாப்பு பிரிவு பதில் தரவில்ல…

  5. பத்தொன்பதாம் நூற்றாண்டு பல புதிய கண்டுபிடிப்புகளின் காலமாகத் திகழ்ந்தது.அவற்றுள் ஒன்றுதான் புகைப்படக்கலை. ஓவியர்கள் கண்டும், கற்பனையிலும் வரைந்த ஓவியங்களின் மூலமே முந்தையகால மேதைகளையும், மகான்களையும் நம்மால் உணர நேரிட்டது. ஆனால் புகைப்படக்கலை வந்த பிறகு அந்த மேதைகளின் உருவங்களை உள்ளது உள்ளபடியே காண நம்மால் முடிந்தது. அந்த வகையில் அப்போது அறிமுகமான புகைப்படக்கலையால் நாட்டின் பெருமைமிகு வீரத்துறவியான விவேகானந்தரின் பல்வேறுவிதமான புகைப்படங்களை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது. நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய அதே வேகத்தில் நாட்டின் சிறுமை கண்டு பொங்கியவர் இவர் ஒருவரே. விவேகானந்தரின் கண்கள் வறட்டு ஞானியின் கண்களைப்போல அல்லாமல் பக்தனின் கருணைக் கண்களாக உள்ளன என்று அவரது…

    • 0 replies
    • 2.3k views
  6. தொடரும் மோதல் - ரஷ்யாவிற்கு பலத்த பாதிப்பு உக்ரேன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல் 16-வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரேனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை, மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் ரஷ்யாவிற்கு உக்ரேனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். அதே சமயம் உக்ரேனிலிருந்து அண்டை நாடுகளுக்கு இதுவரை 20 இலட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். உக்ரேன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 2,800-க்கு மேற்பட்ட உக்ரேன் இராணுவ தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்…

    • 7 replies
    • 634 views
  7. . வீரகேசரி இணையம் - உலகில் குள்ளமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பிங் பிங் (வயது 21) நேற்று மரணமானார். இத்தகவலை பிரிட்டனின் கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அறிவித்துள்ளது. சீனா நாட்டைச் சேர்ந்த பிங்பிங் தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிப்பதற்காக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிங் பிங்கின் உயரம் ஆக 74.6 சென்டி மீட்டர் (2 அடி 5 அங்குலம்) மட்டுமே. கடந்த ஞாயிறன்று இஸ்தான்புவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி ஒன்றிலும் இவர் கலந்து கொண்டார். அங்கு வந்திருந்த, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகத்தின் அதி உயர்ந்த…

  8. ரஷ்யாவில் இருந்து... நிலக்கரி இறக்குமதியை, தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு! ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு பெரும்பாலான நாடுகள் தடை விதித்தைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவில் இருந்து நிலக்கரி இறக்குமதியை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், ‘நிலக்கரி மீதான தடையால் ஒரு வருடத்திற்கு 4.4 பில்லியன் டொலர்கள் மதிப்பு கொண்ட வர்த்தகத்தை ரஷ்யா இழக்கும். எனினும் புதிய ஒப்பந்தங்களைத் தடை செய்வதற்கு முன் மூன்று மாத கால அனுமதி வழங்கப்படும். ஒப்பந்தபடி ஏற்கெனவே ரஷ்யா அனுப்பி விட்ட நிலக்கரிக்கும் இந்த தடை பொருந்தாது. ஐரோப்பிய ஒன்றியம் நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் வி…

  9. ரஷ்யாவுக்கு பதிலடி தர மேற்கு பகுதியில் உக்ரைனும் ராணுவம் குவிப்பு! [Monday, 2014-03-03 10:36:54] ரஷ்யாவுக்கு பதிலடி தர உக்ரைனும் தனது ராணுவ படைகளை குவித்து வருகிறது. இதனால் அந்நாட்டில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனில் சேர்க்க அந்நாட்டு அதிபராக இருந்த விக்டர் யனுகோவிச் மறுப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது. அதிபர் பதவியிலிருந்து விக்டர் யனுகோவிச் நீக்கப்பட்டு, இடைக்கால அதிபராக துர்ஷிநோவ் பதவியேற்றார். பதவி பறிக்கப்பட்ட விக்டர் யனுகோவிச் தலைமறைவானார். ரஷ்யாவின் தீவிர ஆதரவாளரான இவரை காப்பாற்றுவதற்காக, ரஷ்ய அதிபர் புடின் தனது ராணுவத்தை உக்ரைனுக்கு அனுப்பி வைத்ததா…

    • 26 replies
    • 2.1k views
  10. நியூ யார்க்கில் துப்பாக்கிச்சூடு, சந்தேக நபர் ஒருவர் கைது கார் ஓட்டுநர் ஒருவரால் மக்கள் சுடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் ஒருவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைCBS கீழ் மன்ஹாட்டனில் மேற்கு பக்க நெடுஞ்சாலையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த கைது நடைபெற்றுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவசரகால சேவைகள் நடைபெறுவதால் அந்த பகுதியில் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறை மக்களை வலியுத்தியுள்ளது. புகைப்பட காப்புரிமை @NYPDnews@NYPDNEWS துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால், கார் ஓட்டி சென்ற ஒருவர், மிதிவண்டி பாதையில் மதிவண்டி ஓட்டி சென்றவர்கள் மீது காரை மோதியதாக உறுதிப்படுத்தப்பட…

  11. மனஸ்தீவில் உள்ள அகதிகளை ஏற்கமுன்வந்தது நியுசிலாந்து மனஸ்தீவு தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளில் 150 பேரை நியுசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கு அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ள அதேவேளை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை மீள்குடியேற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னரே இது குறித்து சிந்திக்கப்போவதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதை நியுசிலாந்தின் புதிய பிரதமர் ஜசின்டா ஆர்டென் உறுதிசெய்துள்ளார். மனஸ்தீவு முகாமில் உள்ள 600 அகதிகளில் 150 பேருக்கு புகலிடம வழங்குவதற்கு தனது நாடு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

  12. இளவரசர் ஹேரி - மார்க்கெல் திருமணம் எங்கே? எப்போது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA Image captionஹேரி, செல்வி மார்கெலை திருமணம் செய்து கொள்ளப்போவதாக கடந்த திங்களன்று அறிவித்தார் இளவரசர் ஹேரி மற்றும் மெகன் மார்கிலின் திருமணம் அடுத்த ஆண்டு மே மாதம் வின்ட்ஸர் கோட்டையில் நடக்கவுள்ளதாக கென்னிங்ஸ்டன் அரண்மனை அறிவித்துள்ளது. இசை, பூக்கள், வரவேற்பற…

  13. தென்கொரியாவுடன் கூட்டுப்போர் ஒத்திகையை நடத்திய அமெரிக்கா. உலகின் ஆச்சரியமாக விளங்கும் ராஸ் கடல். செயற்கை வெளிச்சத்தால் மனிதர்களும் விலங்குகளும் பாதிக்கப்படுவதாக கவலை கொண்டுள்ள விஞ்ஞானிகள் உள்ளிட்ட உலகச் செய்திகளை பிபிசி தமிழின் இன்றைய சர்வதேச செய்தியறிக்கையில் காணலாம்.

  14. ' இந்தியர்கள் 3 பேரில் ஒருவர் ஊழல்வாதி' இந்தியர்கள் மூன்று பேரில் ஒருவர் ஊழல்வாதியாகவே உள்ளதாக நேற்று முன்தினத்துடன் பதவி விலகிய மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பிரதியுஸ் சின்ஹா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், மூன்றில் ஒரு இந்தியர் முற்றிலும் ஊழல்வாதியாக உள்ளதாகவும், பாதி இந்தியர்கள் ஏறக்குறைய ஊழலின் எல்லையில் உள்ளதாகவும், அதிகரித்து வரும் செல்வ அதிகரிப்புதான் இந்த பிரச்சனக்கு அதிக காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மக்கள் மிக அதிகமாக எந்திரத்தனமாக மாறிவிட்டதே ஊழல் அதிகரிப்புக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்பெல்லாம் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாற்று கூறப்பட்டால் அவர் அவமானத்தில் தலை கவிழ்ந்து போவார் என்றும், ஆனால் …

  15. இந்திய தூதரகம் தாக்கப்பட்டபோது பாய்ஸ், புல்லட்–புரூப் ஜாக்கெட் உள்ளதா என விசாரித்த மோடி சென்னை, மே. 28– ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தகவலை கேள்விபட்டதும் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய தூதரரிடம் முறைப்படி பேசினார். அதைத் தொடர்ந்து இந்தோதிபெத்திய ராணுவ படை கமாண்டரை வீடியோ கான்பரசிங் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர்களிடம், ‘‘பாய்ஸ், உங்கள் எல்லோரிடம் புல்லட் புரூப் ஜாக்கெட் இருக்கிறதா? புல்லட்புரூப் ஜாக்கெட் இல்லாத வீரர்கள் தூதரகத்துக்குள் செல்லுங்கள். புல்லட்புரூப் ஜாக்கெட் அணிந்து இருக்கும் 6 இந்திய வீரர்களும் வெளியில் இருந்து சுடும் தீவிரவாதிகளை வேட்டையாடுங்கள். இதற்காக நீங்கள் ஆப்கானிஸ்தான் போலீஸ் உத்தரவுக்காக…

    • 1 reply
    • 440 views
  16. சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஔி வட்டம்! நாசா விளக்கம்! சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் இவ்வாறு சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டமானது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில் சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்திற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள விளக்கத்தில்:- "இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது பனித்துளியானது காற்றில் உறைந்து இருக்கும். அது மிகச்சிறிய லெ…

  17. ஈழத் தமிழர்கள் மூன்று பேர் தமிழகத்தில் நேற்றுக் கைது! போலி கடன் அட்டையப் பயன்படுத்தி தமிழ்நாட்டு வங்கிகளில் லட்சக்கணக்கான பணத் தைச் சூறையாடிய லண்டனை வதிவிடமாகக்கொண்ட மூன்று இலங்கைத் தமிழ் இளைஞர் களை தமிழக பொலிஸார் நேற்றுக்கைது செய்துள்ளனர். ராஜசீலன், ரமேஷ், ராஜன் என்ற இந்த மூன்று இளைஞர்களிடமிருந்தும் இலங்கைப் பெறுமதியின்படி 13 லட்சம் ரூபாவும், 156 போலி கடன் அட்டைகளும், ஆறு கைத்தொலை பேசிகளும், காரொன்றும் மீட்கப்பட்டன எனத் தமிழக மத்திய புலனாய்வுப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் பாலு தெரிவித்தார். www.uthayan.com http://www.dinamalar.com/

    • 2 replies
    • 1.2k views
  18. ரோமன் கத்தோலிக்கப் பாதிரியார்களால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களை போப் பிரான்ஸிஸ் இன்று திங்கட்கிழமையன்று சந்திக்கிறார். பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் அவர் தினசரி நடத்தும், தனியான காலை நேர வழிபாடு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் அவருடன் பேசுவார்கள். போப் பிரான்ஸிஸ் 16 மாதங்களுக்கு முன்னர் போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இத்தகைய சந்திப்பு நடப்பது இதுவே முதன் முறையாகும். இது போல ரோமன் கத்தோலிக்கப் பாதிரியர்களின் பாலியல் துஷ்பிரயோகத்தைத் தான் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கும் போப் பிரான்ஸிஸ், இதைக் கையாள்வது திருச்சபையின் நம்பகத்தன்மைக்கு மிகவும் முக்கிய…

  19. பிரித்தானியாவின்... புதிய பிரதமராக, லிஸ் ட்ரஸ்... உத்தியோகபூர்வமாக தேர்வு! பிரித்தானியாவின் புதிய பிரதமராகவும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராகவும் லிஸ் ட்ரஸ் உத்தியோகபூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ட்ரஸ் 81,000 க்கு மேல் வாக்குகளைப் பெற்றார். லிஸ் ட்ரஸின் கடும் போட்டியாளரான சுனக் 60,000க்கு மேல் வாக்குகளை பெற்றுள்ளார். சுனக்கின் 60,399 (43%) வாக்குகளுடன் ஒப்பிடுகையில், ட்ரஸ் 81,326 (57%) வாக்குகளைப் பெற்றார். 82.6% வாக்குப்பதிவு நடந்ததாக கூறப்படுகின்றது. வெற்றியின் பின், லிஸ் ட்ரஸ் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளைப் பின்பற்றுவதாக உறுதியளித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதை வழங்க முடியும் என்பதை கன்சர்வேட்டிவ் கட்ச…

  20. புளோரிடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலர் பலி Advertisement புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பள்ளியில்…

  21. தமிழக அரசு நிதிநிலை அறிக்கை முக்கிய அம்சங்கள்! இலங்கைத் தமிழர் : · அதிகரித்துவரும் இலங்கைத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிட ரூ.35.53 கோடி நிதி ஒதுக்கீடு. · அகதிகள் தற்போது மாதந்தோறும் பெற்று வருகின்ற மத்திய அரசின் நிதியுதவியான ரூ.200 என்பதுடன் தமிழக அரசின் சார்பாக ரூ.200 சேர்த்து ரூ.400 ஆக வழங்கப்படும். · நலிந்த நிலையில் வாழும் கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியினை ரூ.500லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது. · பழனி மற்றும் கொடைக்கானல் நகரங்கள் இடையே பழனி திருக்கோயில் நிர்வாகத்தால் கம்பிவட ஊர்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட ஆய்வு. · வேலூர் சிப்பாய் புரட்சி பற்றி…

    • 1 reply
    • 1.1k views
  22. கேரளாவை தலைகுனிய வைத்த நிகழ்வு! கேரளாவில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி வாலிபரை அடித்துக் கொன்ற சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் சிறந்த ஆட்சி நிலவுகிறது என்றும் கேரள மாநில முதல்வர் பல முற்போக்கான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார் என்றும் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த மாநிலமாக விளங்கியது கேரளா. இந்த நிலையில் அம் மாநிலத்தை சேர்ந்த ஆதிவாசி வாலிபர் மது என்பவரை அரிசி திருடியமைக்காக சிலர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அம் மாநிலத்தை தலை குனிய வைத்துள்ளது. கேரள மாநிலம் அட்டப்பாடியை அடுத்த முக்காலி கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான மது என்பவ…

  23. நடிகர் விஜய் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் திங்கள்கிழமை திடீரென ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். தன்னுடைய ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அரசியல் இயக்கமாக மாற்றுவது குறித்தும், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களது நிலைப்பாடு குறித்தும், தலைமை அலுவலகம் அமைப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கடந்த வருடம் அரசியல் பிரவேசம் குறித்து தன் கருத்தை வெளியிட்ட நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக ராகுல் காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸில் இணைய ராகுல் கோரிக்கை வைத்ததாகவும், அப்படி இணைந்தால் இளைஞர் காங்கிரஸில் முக்கிய பதவி தர வேண்டும் என விஜய் கேட்டதாகவும் செய…

    • 0 replies
    • 513 views
  24. சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா இடம்பெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது இங்கிலாந்து மன்னர் மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழா அடுத்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி பாரம்பரிய முறைப்படி நடைபெறவுள்ளது. மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியின் மறைவுக்குப் பின்னர் இரண்டு நாட்களில் புதிய மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், 70 ஆண்டுகளுக்குப் பின்னர் பல ஆரவாரங்களுக்கு மத்தியில், மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழா மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. முன்னதாக, ராணி இரண்டாம் எலிசபெத்…

  25. ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது பகிர்க ரஷ்யாவில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிவிட்டது. மாஸ்கோவின் நேரத்தில் இருந்து ஒன்பது மணி நேரம் முன்னால் இருக்கும் தொலைதூர கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் தொடங்கிவிட்டன. படத்தின் காப்புரிமைAFP Image captionரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் நான்காவது முறை அதிபராவதற்காக களத்தில் இருக்கிறார். புதினைத் தவிர வேறு ஏழு பேரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலின் முதல்கட்ட முடிவு ஞாயிற்றுக்கிழமை மாலை வெளிவரும். 2000ஆம் ஆண்டு முதல் அதிபர் அல்லது பிரதம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.