Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை, டிச. 22- முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொடர்ந்து தமிழகததிற்கு எதிராகவே நடந்து வருகிறது மத்திய அரசு. இந்தநிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் தமிழகத்திற்கு வருகிறார். அவருக்கு எதிராக என் தலைமையில் தேமுதிகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்துவார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தில் அணையின் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் 2006ம் ஆண்டே ஆணையிட்டது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு. ஆனால் இன்று வரை நிறைவேற்றவில்லை. உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் இருக்கிறபோதே கேரள அரசு வேண்டுமென…

  2. அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்தது. உறவைச் சீர் செய்ய இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் உட்பட பல பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில் விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பது தான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் என அமெரிக்க…

  3. பிரிட்டன் தனது AAA தரநிலையை இனியும் தக்கவைப்பது கடினம் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் பிரிட்டன் சந்திக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் அதன் AAA தகுதியை மாற்றக்கூடும். இதற்கு அடிப்படைக் காரணங்களாக தொடர்ந்து இருந்து வரும் யூரோவின் நெருக்கடியும், பிரிட்டனின் பொதுக்கடன் அதிகரிப்பதும் ஆகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்த நிதியாண்டின் கணக்குப்படி பிரிட்டனின் பொதுத்துறைக் கடன் 1.27 பில்லியன் பவுண்டாகும், அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.4 சதவிகிதம் ஆகும். சென்ற வாரம் பிரான்சின் மத்திய வங்கி ஆளுநரும், மூத்த அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து பிரிட்டிஷ் பொருளாதார நிலையைக் கடுமையாக விமர்சித்தனர். பிரிட்டனின் தகுதி கணிப்பு நிறுவனங்கள் குழப…

  4. நியுஜெர்சியில் விமான விபத்து : 5 பேர் பலி ! பதிவு செய்த நாள் : 12/21/2011 15:10:33 நியுஜெர்சி : நியுஜெர்சி நெடுஞ்சாலையில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு இந்தியர் உட்பட 5 பேர் பலியாயினர். நியுஜெர்சியிலிருந்து அட்லாண்டா நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து வட நியுஜெர்சி தேசிய நெடுஞ்சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ராகேஷ் சாவ்லா வங்கி அதிகாரி உயிரிழந்துள்ளார். http://www.dinakaran.com/LatestNews_2011.asp?Nid=7664

  5. கேரள முதல் அமைச்சருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது. இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது. தமிழக பத்திரிகைகள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன. இவ்வளவுக்கும் காரணம் கேரளாவில் உள்ள பத்திரிக்கை. கேரள ஊடகங்கள். அவர்களுக்கு சொல்லுகிறோம். புத்தி வரட்டும் உங்களுக்க…

  6. சிங்களர்களுக்கும், மலையாளிகளுக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, செங்கோட்டையில் கேரளா செல்லும் பாதையில் முற்றுகையிட்ட நாஞ்சில் சம்பத் உள்பட 1357 பேர் கைது செய்ப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழிச் சாலைகளிலும் மதிமுக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். முன்னதாக அவர் பேசுகையில், தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்ட…

  7. ஈராக்கில் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு துணை அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு்ள்ளது. வளைகுடா நாடான ஈராக்கின் துணை அதிபராக தாரிக்-அல்-ஹஸ்மி,65 உள்ளார். இவர் ஈராக்கின் ஷன்னிப்பிரிவு தலைவராக உள்ளார். இப்பிரிவினர் அந்நாட்டின் வடக்கே குர்தீஷ் இனத்தவர்கள் இணைந்து ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் துணை அதிபர் தாரிக்-அல் ஹஸ்மியின் நெருங்கிய பாதுகாவலராக இருந்த குர்தீஷ் இனத்தவர் சமீபத்தில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்தன் பேரில் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஈராக்கில் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு ,அந்நாட்டின் துணை அதிபர் தாரிக் அல்-ஹஸ்மிக்கு தொடர்பிருப…

  8. ஜெயலலிதாவுடன் நிரூபமா ராவ் திடீர் சந்திப்பு-ஏன்? முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் தூதராக பணியாற்றியவர் நிரூபமா ராவ். பின்னர் மத்திய வெளியுறவுத்துறை செயலாளராகவும் பணியாற்றினார். தற்போது அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இவர் பொறுப்பு வகிக்கிறார். இந்த நிலையில் சென்னை வந்த நிரூபமா ராவ் திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ராவ் தெரிவித்தார். நிரூபமா ராவின் பூர்வீகம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது. …

  9. ஆர்பாட்டம் செய்வோர் பயங்கரவாதிகள் அவர்களுக்கு தூக்குத்தண்டனை மேலை நாடுகள் 2001 ம் ஆண்டு செப் 11 ல் உருவாக்கிய பயங்கரவாதம் என்ற சொற்பதத்தை தென்னாசியாவில் சில நாடுகள் தப்பாக பயன்படுத்தியதுபோல இப்போது சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார். நாட்டில் ஆர்பாட்ட ஊர்வலங்களை நடாத்துவோர் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு தூக்கில் போடப்படுவர் என்று கூறியுள்ளார். இதற்கான சட்ட மூலத்தில் கைச்சாத்திட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சிரிய உதவி வெளியுறவு அமைச்சர் பைசல் மக்கடாட் நேற்று அரபுலீக்குடன் முக்கிய ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் தாம் சர்வதேச கண்காணிப்பாளரை சிரியாவிற்குள் அனுமதிக்கத் தயார…

    • 0 replies
    • 508 views
  10. பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது. ஏற்கனவே லட்சக்கணக்கான மக்கள் தினமும் திரண்டு கேரள எல்லையை முற்றுகையிட்டு வரும் நிலையில், வைகோ கம…

    • 2 replies
    • 962 views
  11. நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று போராட்டம் நடத்தத் திரண்டபோது போலீஸார் அனைவரையும் தடுத்துக் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை பிரச்சனை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. இதனால் தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் 13 பாதைகளில் பெரும் பாலான பாதைகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வாகனமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் முரண்டு பிடிக்கும் கேரளாவுக்கு பொருளாதார தடை மூலம்தான் பாடம் புகட்ட முடியும் என பல்வேறு அமைப்புகள் உறுதியுடன் நம்பி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அத்திவாசிய பொருட்கள் கொண்டு செல்ல தொடர…

  12. முல்லைப் பெரியாறும் பாபர் மசூதியும். முல்லைப் பெரியாறு காப்பது தமிழரின் கடமை முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதற்கான அவசியத்தை, தமிழகம் சாராத பிற, இந்திய பகுதி முழுவதும் செய்திகள் விதைக்கப்படுகின்றன. தமிழரின் நியாயம் என்பதாக எதுவும் இல்லாமல் மலையாளிகளின் பயம் மட்டுமே அரசியலாக மையப்படுத்தப்பட்டு கருத்துப் பரப்பல்களும், செய்தி பரப்பல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான தாக்குதல், தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் மறைக்கப்பட்டன, மறைக்கப்படுகின்றன. இதை வெளிகொணர்ந்த ஆங்கில ஏடுகளின் பத்திரிக்கையாளர்கள் கூட கடும் நெருக்கடிக்கு உள்ளானதை நாம் அறிவோம். முல்லைப் பெரியாறை உடைப்பதற்கு ஆதரவு தெரிவித்து நீதியரசர் வி.ஆர் கிருட்டின அய்யர் …

  13. வட கொரிய நாட்டு ஜனாதிபதி கிம் ஜோன்-இல் தனது 69வது வயதில் காலமானதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவர் காலமானார். இவருடைய இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெறவுள்ளன. இவருடைய மறைவை அடுத்து 17ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 29ம் திகதிவரை வட கொரியாவில் துக்க தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளது. http://youtu.be/klzg5MHHuG8 http://www.saritham.com/?p=44470

  14. ஜெயலலிதா அதிரடி முடிவு: சசிகலாவை அதிமுவில் இருந்து நீக்கினார்... மேலதிக செய்திகள் விரைவில்...... செய்தியின் மூலம் நக்கீரன், தற்ஸ் தமிழ்.

  15. வட கொரியா தலைவர் இறப்பு மாரடைப்பால் தலைவர் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. N Korean leader Kim Jong-il dies North Korean leader Kim Jong-il has died at the age of 69, state-run television has announced. Mr Kim, who has led the communist nation since the death of his father in 1994, died on a train while visiting an area outside the capital, the announcement said. He suffered a stroke in 2008 and was absent from public view for months. His designated successor is believed to be his third son, Kim Jong-un, who is thought to be in his late 20s. http://www.bbc.co.uk...d-asia-16239693 http://www.youtube.com/watch?v=jkhMVmfrkgo

    • 3 replies
    • 1.1k views
  16. அமெரிக்கா இதுவரை கண்டிராத அதிர்ச்சியை ஈரான் கொடுத்துள்ளது ! 18 Dec 2011 அமெரிக்காவின் அதி நவீன ஆளில்லா உளவுபார்க்கும் விமானம் ஒன்றை கடந்த வாரம் தாம் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. ராடர் திரையில் விழாமல் தன்னை உருமறைத்துக்கொண்டு பறக்கத்தக்க இந்த விமானம் தான் இருக்கும் இடத்தை வேறு இடத்தில் இருப்பது போன்ற பொய்யான ... தோற்றப்பாட்டையும் மேற்கொள்ள வல்லது. அதுமட்டுமல்லாது அதி நவீன கண்காணிப்புப் கருவிகளைக் கொண்டுள்ள இவ்விமானம் தரையில் இருந்துவரும் ஆபத்துக்களையும் அறிந்து அதற்கு ஏற்றால் போல தனது பறக்கும் திறனை மாற்றவல்லது. இதனை எவ்வாறு சுட்டு வீழ்த்த முடியும் என்பதே பெரும் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதனை ஈரானிய இராணுவத்தினர் பத்திரமாகத் …

  17. சென்னை: கேரளத்தைச் சேர்ந்த மலையாளக் கட்சிகள், அரசியல்தலைவர்கள் ஆகியோர் கடும் எதிர்ப்பு மற்றும் நெருக்குதலைத் தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தான் கூறிய கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றுள்ளார். தேவையில்லாமல் தான் பேசி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்களின் நெருக்குதலைத் தொடர்ந்தே ப.சிதம்பரம் இந்த வாபஸ் முடிவுக்குத் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னையில் 17-12-2011 அன்று நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் நான் பேசினேன். எனது பேச்சு சில பத்திரிகைகளில் முழுமையாக வெளியாகி உள்ளன. எனது முழுமையான பேச்சை தமிழக-…

  18. Started by akootha,

    உடையும் இந்தியா இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர். இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து திராவிட, தலித் சமூகங்களைப் பிரித்தெடுக்கு…

    • 0 replies
    • 1.1k views
  19. சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணியசாமி பரபரப்பு சாட்சியம் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் சிதம்பரத்தை சேர்க்கக்கோரும் வழக்கில் சி.பி.ஐ. கோர்ட்டில் சுப்பிரமணியம்சாமி பரபரப்பு சாட்சியம் 1/1 புதுடெல்லி. டிச.18.- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் குற்றவாளியாக சேர்க்க கோரும் வழக்கில் நேற்று சி.பி. ஐ. கோர்ட்டில் ஆஜராகி சுப்பிரமணியம் சாமி பரபரப்பு சாட்சியம் அளித்தார். ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இப்போது ஆ.ராசா திகார் சிறையில் இருந்த…

  20. லிபியா நாட்டின் முன்னாள் அதிபர் கடாபியை கொன்றது போர்க்குற்றம் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடாபி கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதியன்று புரட்சிப் படையினரால் கைது செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் இவர் கொல்லப்பட்டது போர்க்குற்றம் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், அதன் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மொரேனோ அகாடம்போ தெரிவித்துள்ளார். லிபியா முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டது ஒரு போர்க் குற்றமாகும். அது குறித்து வருகிற ஜனவரி 10 ஆம் தேதி லிபியா அரசு நீதிமன்றத்தில் பதில் கூற வேண்டும். கடாபியின் மகன் சயீப் அல்-இஸ்லாமும் லிபியா அரசால் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச சர்வதேச குற்றவியல் நீதிமன்ற…

  21. இன்னும் 15 நாளில் கூடங்குளம் அணு உலை செயல்படத் துவங்கும் என்று ரஷ்யாவில் இருந்து இந்திய பிரதமர் அறிவித்தார். அவர் அறிவித்த சில மணி நேரங்களில் கூடங்குளம் போராட்டம் பரபரப்புக் களமானது. மேலதிகமான துணை ராணுவப்படையும் போலீஸ் கலவர வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போராட்டக் குழுவினர் இன்று மாலை தொடர் போராட்டங்களை அறிவித்தனர். நாளை பிரமாண்ட பேரணி, அணு உலை முற்றுகை என போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் தமிழக அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இந்திய பிரதமருக்கு கடும் கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூ்டங்குளம் அணு உலை இன்னும் இரண்டு வாரத்தில் செயல்படும் என தாங்கள் ரஷ்யாவில் போய் அறிவித்தது அத…

  22. கடந்த 5-ம் தேதி கொச்சினில் மலையாள சினிமா உலகினர் ஒன்றுகூடி, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ‘அணையை உடைப்போம்…’ என்று குரல் எழுப்பினார்கள்.அதில் மம்முட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப், முகேஷ் போன்ற நடிகர்களும் கமல், உன்னிகிருஷ்ணன் போன்ற டைரக்டர்களும் அடக்கம். தமிழ் சினிமா மட்டும் இன்னும் அமைதி காக்கும் சூழலில், இயக்குனர் பாரதிராஜாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. ”இன்று, முல்லைப் பெரியாறு பிரச்னை அந்த அணையைக் காட்டிலும் பிரமாண்டமாக எழுந்து தமிழனை மிரட்டுகிறது. நேற்று வரை சகோதரனாக இருந்த மலையாளி, இன்று சண்டையாளி. இரண்டு மாநில மக்களையும் சமாதானப்படுத்த வேண்டிய மத்திய அரசு, கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மாநில அரசுகளை மோத விட்டு ஓரமாய் உட்கார்ந்து ரசிக்கிறது. இப்போது கேரள…

  23. கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்த மன்மோகன் சிங்கின் அறிவிப்பால் போராட்டக்குழு மத்தியில் பெரும் கொந்தளிப்பு! ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கிருந்தபடியே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உற்பத்தி அடுத்த வாரம் ஆரம்பிக்கும் என அறிவித்துள்ள நிலையில், தங்கள் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றார்கள். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகள் முடங்கியது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசின் சார்பில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்ட…

  24. பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதை…

  25. ஜூனியர் விகடன் தமிழ் மக்களின் நாடித்துடிப்பு என்று சொல்லிக் கொள்வது உண்மையோ இல்லையோ பிற ஊடகங்களை ஒப்பிடும் பொழுது கடந்த 3 ஆண்டுகளில் பெரும்பாலான மக்கள் பிரச்சனைகளை சிறப்பாகவே வெளிக் கொணர்ந்து உள்ளது. ஜெயலலிதாவோ,கருணாநிதியோ யார் மீதான விமர்சனம் என்றாலும் கூர்மையாகச் செய்வது,மற்ற பத்திரிக்கைகளைக் காட்டிலும் சமரசமின்றி எழுதுவது என்று இவர்கள் செயலைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். (ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஆ.ராசாவை வன்மத்துடன் பாய்ந்து கடித்துக் குதறுவதும் மாறன் சகோதரர்களிடம் வாலை ஆட்டியபடி மண்டியிட்டுக் கிடப்பதும் தனி) அதுவும் கடந்த திமுக ஆட்சியில் மக்கள் விரோத காரியங்கள்,மற்றும் நடைபெற்ற ஊழல்,முறைகேடுகள் நடைபெற்ற பொழுது பெருமளவு அதனைப் பொது வெளிக்குக்…

    • 0 replies
    • 3.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.