Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இணையத்தில் தகவல்களை தேடுவோரின் முதன்மைத் தேர்வாக கூகுள் தேடுபொறி இருக்கிறது. எந்த விஷயமாக இருந்தாலும் கூகுளில் தேடினால் கிடைக்கும் என்று சொல்லும் அளவுக்கு கூகுள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இவ்வாறு கூகுள் மூலம் தேடப்படும் விஷயங்களை ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அந்நிறுவனம் பட்டியலிடுகிறது. அவ்வகையில் 2023ஆம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட்டிருக்கிறது. செய்திகளைப் பொருத்தவரை உலகம் முழுவதும் இப்போது பேசப்படும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்பான தேடல் இந்த ஆண்டு முதலிடத்தில் இருக்கிறது. டைட்டானிக் கப்பலை ஆய்வு செய்ய சென்ற நீர்மூழ்கிக் கலன், பெப்ரவரியில் துருக்கி மற்றும் சிரியாவில் பேரழிவுகளை ஏற்படுத்திய நிலநடுக்கம் ஆகிய தேடல்கள் அடுத்தடுத்த இடங்களில் உள…

  2. மற்றவை டாக்டர் பிநாயக் சென்.. கௌரவக் கொள்ளை யர்களுக்கு எரிச்சலூட்டும் பெயர். பழங்குடி மக்களின் தோழனாக தோள்கொடுத்து நின்ற காரணத்தால் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர். உலகம் முழுவதிலிருந்தும் அறிவுஜீவிகள், மனித உரிமை ஆர்வலர்கள் தரப்பிலிருந்து எ ழுந்த கடும் எதிர்ப்பின் விளைவாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். வேலூர் சி.எம்.சி.யில் மருத்துவம் படித்தவர். மும்பையில் நடந்த கண்டனக் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தவருடன் டீக்கடையில் அமர்ந்து இந்தியில் உரையாடிய போது.. என்ன நடக்கிறது சத்தீஸ்கரில்.. டாக்டரான உங்களைக் கண்டு எதற்காக மத்திய மாநில அரசுகள் எரிச்சலடைகின்ற…

  3. கஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம்: சவுதி அரேபியா ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய அவசியமில்லை எனவும் சவுதியின் திறமையான சட்ட அமைப்புமுறையால் இந்த விசாரணையை கையாள முடியுமெனவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபெய்ர் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கஷோக்கி கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்ட அடெல் அல்-ஜுபெய்ர், அந்த படுகொலைக்கு சவுதி அரசுக்கும் தொடர்புள்ளது என்பதை மறுப்பு தெரிவித்தார். சவுதி இளவரசர் மொஹம்மட் பின் சல்மானின் ஒப்புதல் இல்லாமல் சவுதி அதிகாரிகள் இப்படுகொலையை முன்னெடுத்திருக்க வாய்ப்பில்லையென அமெரிக…

  4. ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் புறப்பட்ட கிம்யொங் உன் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் உடனான ஹனோய் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன் ரயில் மூலமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ட்ரம்ப் மற்றும் கிம்யொங் உன் இருவரும் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர். அதன்போது வடகொரியா அணு ஆயுதமற்ற நாடாக மாறும் என கிம் ஜாங் உன் உறுதி அளித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. எனினும் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவது மற்றும் வடகொரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவது போன்ற விவகாரங்களில் இருநாடுகள் இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்தது. இதற்…

  5. வடகொரியா-தென்கொரியா பிளவு ? – கூட்டுறவு அலுவலகத்திலிருந்து வடகொரியா வெளியேற்றம் வடகொரியாவும் தென்கொரியாவும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அலுவலகத்தில் இருந்து வடகொரிய அதிகாரிகள் வெளியேறியுள்ளனர். வடகொரியாவின் உத்தரவை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அதிகாரிகள் வெளியேறுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. எதிரி நாடுகளாக செயற்பட்டு வந்த தென்கொரியாவும் வடகொரியாவும் கடந்த ஆண்டு சமாதானமடைந்த நிலையில் இருநாட்டு அதிகாரிகளும் கலந்துரையாட வடகொரிய எல்லையில் கூட்டுறவு அலுவலகம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அத்தோடு இருநாட்டு தலைவர்களும் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி சேவைகளும் ஏற்படுத்தப்பட்டது. எனினும் தற்போது குறித்த அலுவலகத்தில் இருந்து …

  6. 28 APR, 2024 | 11:36 AM ரஷ்யாவிலிருந்து இந்தியா நோக்கி சென்ற எண்ணெய்க் கப்பல் மீது ஹவுதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் காசாவில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இந்தத் தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. மேலும், காசா மீதான இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக வும், செங்கடல் வழியாக செல் லும் வணிகக் கப்பல்களைக் குறி வைத்து ஏமனில் உள்ள ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருக…

  7. 136 பயணிகளுடன் ஆற்றில் விழுந்த விமானம் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்துள்ளது. கியூபாவில் இருந்து 136 பயணிகள், 7 ஊழியர்களுடன் புறப்பட்டது போயிங் 737 விமானம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஜாக்சன்வில் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறக்கும் போது ஓடுபாதையின் இறுதியில் இருந்த செயிண்ட் ஜான் ஆற்றில் நிலை தடுமாறி விழுந்துள்ளது. அமெரிக்க நேரப்படி நேற்றிரவு 9:40 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து ஜாக்சன்வில் மேயர் தனது ட்விட்டர் பக்கத்தில், விமானம் தண்ணீரில் மூழ்கவில்லை. பயணிகள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்.இந்த விபத்தில் 21 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வைத்தியவாலையில் சி…

  8. சவுதி அரேபியாவிற்கு எப் : 15 ஜெட்விமானங்கள் விற்பனை காரணமென்ன? மத்திய கிழக்கு விரைவில் படு மோசமாக தீப்பற்றி எரியப்போகிறது. உலகப் பொருளாதார மந்தம் மத்திய கிழக்கை எரித்து விளையாடப்போகும் அபாயம் மெல்ல மெல்ல தெரிய ஆரம்பிக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் ஏற்படப்போகும் அமைதிக் குலைவு அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்து அந்த நாட்டிற்கு எண்ணெயை வாரி வழங்கும் சவுதியின் அடி வயிற்றிலும் தீ வைக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சவுதிக்கு ஏப் : 15 இரக நவீன ஜெட் விமானங்கள் 84 ஐ விற்பனை செய்ய அமெரிக்கா இணங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. மொத்தம் 29.4 பில்லியன் டாலர்களுக்கு இந்த ஜெட் விமானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காரணங்கள் என்ன : 01. அடுத்த பத்தா…

    • 0 replies
    • 669 views
  9. இணையத் திருட்டு நிறுத்தல் சட்டத்தை (SOPA) எதிர்த்து ஆங்கில விக்கிப்பீடியா இன்று மூடப்படுகிறது இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம் (Stop Online Piracy Act, SOPA), அவை வரைவு என்றும் அறியப்படும் சட்ட வரைவு அமெரிக்க கீழவையில் அக்டோபர் 26, 2011 அன்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவையின் நீதித்துறைக் குழுவின் தலைவர் லாமர் எஸ். ஸ்மித் மற்றும் இரு கட்சிகளையும் சேர்ந்த 12 துவக்க முன்மொழிவாளர்களாலும் கொண்டு வரப்படுள்ளது. இது சட்டமானால், அமெரிக்க சட்டச் செயலுறுத்தும் முகவர்கள் மற்றும் பதிப்புரிமையாளர்களால் இணையத்தில் பதிப்புரிமை உடைய அறிவுசார் சொத்துரிமை மற்றும் போலி பொருட்களின் விற்பனையை எதிர்த்து போராடும் திறனை கூட்டும். தற்போது அவையின் நீதித்துறை குழுவில் உள்ள இந்த சட்டவரைவு இதன…

  10. சிரியாவுக்கு எதிரான ஐநா தீர்மானம்: ரஷ்யா? மேற்குலகின் ஆதரவுடன் சிரியாவுக்கு எதிராக ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் உள்நாட்டு யுத்தமொன்றுக்கு வழிவகுக்ககூடும் என்றும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. சிரியாவின் அதிபர் பஷார் அல் அஸ்ஸத் ஆட்சிப் பொறுப்பை துணைப் பொறுப்பாளர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகின்ற அந்த தீர்மானம், அங்கு வெளிநாட்டு தலையீடு இருப்பதற்கான வாய்ப்பையே காட்டுகின்றது என ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் கென்னடி கட்டிலோவ் தெரிவித்தார். சிரியாவில் நடந்துவரும் வன்முறைகளையும் மனித உரிமை மீறல்களையும் கண்டித்துள்ள அரபு லீக், அந்நாட்டுக்கு எதிராக மேலும் தடை நடவடிக்கைக…

  11. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதற்காக தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க ஆளில்லா விமானம், ஆப்கனின் கோமல் மாவட்டத்தில், கடந்த புதன் அன்று நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 15 தாலிபான்கள் கொல்லப்பட்டிருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட 15 பேரின் உடல்கள் தென் கிழக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள தேரா இஸ்மாயில் கான் நகருக்கு விரைவில் கொண்டு வரப்படும் என்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.canadamirror.com/canada/48951.html#sthash.zIc0g7dP.dpuf

  12. அணுவாயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருட்டு – வடகொரியா மீது புதிய குற்றச்சாட்டு! வட கொரியா தனது அணுவாயுத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இணைய திருட்டில் ஈடுபட்டு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோகரன்சி எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களை வடகொரியா திருடியுள்ளதாக அந்த அறிக்கையில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான 35 இணைய தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரித்து வருவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வௌியாகியுள்ளன. கடந்த இரண்டு வாரங…

    • 1 reply
    • 433 views
  13. டரைவோன் மார்டின் கொலையும் அமெரிக்காவும் ஒபாமாவும் கறுப்பினத்தவரான 17 வயதான டரைவோன் மார்டின் கொலை அமெரிக்காவை உலுக்கியதுடன் வழமையாக இனம் சம்பந்தப்பட்ட விடயங்களில் விலகி இருக்கும் அதிபர் ஒபாமாவையே தனக்கு ஒரு மகனிருந்தால் என ஒப்பிட வைத்து பேசவைத்துள்ளது ! இந்த இளையவர் 'முதலில் கொல் பின்னர் காரணத்தை கூறு' என்ற சட்டத்திற்கு அமைய கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு பலரும் கொல்லப்பட்டு, கொன்றவர்கள் எவருமே தண்டனை அனுபவித்ததில்லை. ஆனால், இம்முறை இந்த சட்டம், அதன் தீமைகள் விவாதிக்கப்படலாம்.

    • 12 replies
    • 1.4k views
  14. ஈரான் மீதான தனது பதில்த் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இம்மாத ஆரம்பத்தில் தன்மீது நடத்தப்பட்ட 180 இற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், ஈரானின் கூலிகளான ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள், ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் இஸ்லாமியக் குழுக்கள் ஆகியவற்றின் ஊடாக தன்மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இஸ்ரேல் சனி அதிகாலையிலிருந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது

  15. லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் ஒன்றானது, இராணுவப் பதிலளிப்பு ஒன்றை நியாயப்படுத்துகின்ற போர்ப் பிரகடனம் ஒன்று என லெபனான் ஜனாதிபதி மிஷெல் அன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றில், லெபனானுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் ஜன் குபிஸிடமே நடைபெற்றது போர்ப் பிரகடனமொன்று என ஜனாதிபதி மிஷெல் அன் கூறியுள்ளார். இதேவேளை, இஸ்ரேலுடனான போர்ப் பதற்றம் விரிவடைவதைத் தவிர்க்க தமது அரசாங்கம் விரும்புவதாக லெபனானியப் பிரதமர் சாட் ஹரீரி நேற்று தெரிவித்தபோதும், லெபனானிய இறையாண்மையின் இஸ்ரேலின் மோசமான மீறலை சர்வதேச சமூகம் கட்டாயம் நிராகரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். பெய்ரூட்டின் தென…

    • 0 replies
    • 425 views
  16. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கொட்டிய கனமழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரண பொருட்கள் பல்வேறு தரப்பினரால் வினியோகம் செய்யப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதவிக்கரம் நீட்டியவர்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே உள்ளது.அந்த வரிசையில் தற்போது சபரிமலை தேவசம்போர்டும் இணைந்துள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதில் இருந்து மீளவும், வெள்ளத்தால் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையவும் சபரிமலையில் சிறப்பு ஹோமமும், வழிபாடும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சபரிமலையில் நேற்று தேவசம்போர்டு கூட்டம் நடைபெற்றது. …

  17. தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சம்ஹாரம் நிஜம்-சரத் சென்னை: வந்தாரை வாழவும், ஆளவும் வைத்த தமிழர்களின் பரந்த மனப்பான்மையை ஏமாளித்தனம் என்று நினைத்தால் பிற மாநிலத்தினர் நினைத்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என இந்திய மக்கள் சமத்துவக் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்போதெல்லாம் கர்நாடகாவில் வாழக்கூடிய தமிழர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலை நீடித்தால் பிராந்திய உணர்வு, வெறியாக மாறி தேச ஒற்றுமைக்கே குந்தகம் விளைந்து விடும் அபாயம் இருக்கிறது. மத்திய அரசு நடுநிலை தவறி தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்கும், தங்…

  18. பணயக் கைதிகளாகயிருந்த 4 இஸ்ரேலிய இராணு வீராங்கனைகளை விடுதலை செய்தது ஹமாஸ் 25 JAN, 2025 | 05:34 PM ஹமாசின் பிடியில் பணயக்கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவவீராங்கனைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர். காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலைசெய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/204874

  19. சென்னை: மதிமுகவின் 15வது ஆண்டு விழாவையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் ஜெயலலிதா கூறியிருப்பதாவது: கால ஓட்டத்தில் நிகழும் பல்வேறு மாற்றங்களில் கரைந்து போகாமலும், சுய முகத்தை இழக்காமலும், தான் சார்ந்திருக்கும் தமிழ் சமூகத்தை புத்துருவாக்கம் செய்யும் பணியில் மதிமுக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைந்தது. 15ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். மதிமுகவை இரும்புக் கோட்டையாக நிர்மாணிப்பதற்கான லட்சியப் பயணத்தில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, துரோகங்களை தூள் தூளாக்கி, நிகழ்கால கோளாறுகளை சரி செய்து, எதிர்கால வர…

  20. குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய சமூகத்தை ஸ்திரமிழக்கச் செய்யும்: பிரஞ்சுப் பிரதமர் அகதிகள் நெருக்கடி தொடர்பில் பிபிசிக்கு பிரஞ்சுப் பிரதமர் பேட்டியளித்துள்ளார். ஐரோப்பாவுக்கு வரும் ஒவ்வொரு அகதியையும் உள்ளே விட்டுக்கொண்டிருந்தால் ஐரோப்பிய சமூகம் மொத்தமாகவே ஆட்டங்காணும் என பிரஞ்சு பிரதமர் மனுவெல் வால்ஸ் எச்சரித்துள்ளார். இந்தக் குடியேறிகள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த எதிர்காலத்துக்குமே மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். குடியேறிகளைக் கரம் நீட்டி வரவேற்கும் விதமான ஜெர்மானிய ஆட்சித்தலைவி அங்கேலா மெர்க்கெல்லின் கொள்கை 'தைரியமான ஒரு விஷயம்' என்று அவர் வர்ணித்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில…

  21. சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது குறித்த சர்வதேசமாநாடு இன்று ரோமில் ஆரம்பம் 02 பெப்ரவரி 2016 சிரியா மற்றும் ஈராக்கில் ஐஎஸ் அமைப்பினை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து ஆராயும் சர்வதேச மாநாடு இன்று ரோமில் ஆரம்பமாகின்றது. 23 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டில் லிபியாவில் எவ்வாறு ஐஎஸ் அமைப்பினை கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது. ரோமில் ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் 23 நாடுகளும் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் பிடியில் உள்ள பகுதிகளை எவ்வாறு மீட்பது என்பது குறித்து ஆராயவுள்ளன.. சமீபத்தில் ஐஎஸ் அமைப்பிடமிருந்து மீள கைப்பற்றப்பட்ட திக்ரித் நகரில் எவ்வாறு ஸ்திரதன்மையை ஏற்படுத்துவத…

  22. போலாந்து நாட்டு வார இதழின் அட்டைப்படத்தால் சர்ச்சை ஐரோப்பாவில் குடியேறும் அகதிகளால் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் என சித்தரிக்கும் விதமான அட்டைப்படம் ஒன்றை போலாந்து நாட்டு வார இதழ் ஒன்று வௌியிட்டு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. அந்த அட்டைப்படத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியை ஆடையாக அணிந்த பெண் ஒருவரை அகதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அத்துடன் அதில் "ஐரோப்பாவில் இஸ்லாமிய பாலியல் துஷ்பிரயோகம்" என்ற வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க மற்றும் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்டு உள்ள உள்நாட்டு போரினால் அங்கு இருந்து இலட்சக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர். அவ்வாறு வரும் அகதி…

  23. திருவண்ணாமலை: எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும், மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை மாற்றும் எண்ணமும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதன் கூறியுள்ளார். நித்யாவுடன் சண்டை பின்னர் சமரசம் என்று மாறி, மாறி அந்நியன் விக்ரன் ரேஞ்சுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டியாக மாறிவிட்டார் ஆதீனம். இந் நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய நித்யானந்தாவுடன் வந்தார் மதுரை ஆதீனம். அவர்கள் வந்தபோது கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கோயில் கொடிமரம் அருகே உள்ள விநாயகரை இருவரும் வழிபட்டனர். பின்னர் மதுரை ஆதீனம் நிருபர்களிடம் பேசுகையில், மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தர், 20 நாள்கள் கையிலாய யாத்திரை புறப்படுகிறார். அவரை வ…

    • 4 replies
    • 3.4k views
  24. இன்றைய நிகழ்ச்சியில்… - ஐரோப்பாவுக்கு கடல் கடந்து வரும் குடியேறிகளை தடுக்க தான் தவறிவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை கிரேக்கம் கோபத்துடன் நிராகரித்துள்ளது. - பிரேஸிலின் ஸீகா பரவலை உலகுக்கு காட்டிய ஒரு புகைப்படத்தால் பிரபலமான தாய் மற்றும் அவரது பாதிக்கப்பட்ட குழந்தை ஆகியோரின் சோகக்கதை. - ஆஸ்திரேலியா தனது தளர்ந்துவரும் பொருளாதாரத்தை காப்பாற்ற ஆசியாவுக்கு விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய முனைகிறது. அது சாத்தியமா என்று ஆராயும் காணொளி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.