உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26610 topics in this forum
-
ரகசிய வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்! திங்கள்கிழமை, டிசம்பர் 13, 2010, 10:42[iST] டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் தொடர்பான விவரங்களை அளிக்க சுவிட்ஸர்லாந்து உள்பட 10 நாடுகள் சம்மதித்துள்ளன. இந்தத் தகவலை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் அளித்துள்ளது. சுவிட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் ரகசிய வங்கி கணக்குகளை தொடங்கி, அவற்றில் தாங்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த (கறுப்பு) பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை பறிமுதல் செய்து இந்தியாவுக்கு திரும்பக் கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என்று பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, இந்தியர்கள…
-
- 0 replies
- 513 views
-
-
காஷ்மீர் பகுதி மக்களுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்தியுள்ளது. இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து சீனாவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சீன பிரதமர் வென் ஜியாபோ, இந்தியாவுக்கு புதன்கிழமை வரவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இருநாடுகளின் ராஜாங்க உறவுகளைப் பாதிக்கும் விவகாரங்களை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்போம் என்று சீன அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இதில் முக்கியமாக சீனா செல்லும் காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை நிறுத்துவதை பரிசீலிப்பதாக அந்த அதிகாரிகள் கூறியிருந்தனர். அதன்படி இப்போது காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குவதை சீனா நிறுத்திக் கொண்டுள்ளது என்று இந்திய வெளிறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் தில்லியில்…
-
- 0 replies
- 560 views
-
-
கிட்டத்தட்ட 70 நாடுகள் இதுவரை கோசோவோ நாட்டை அங்கீகரித்துள்ளன சேர்பியாவிலிருந்து 3 வருடங்களுக்கு முன்னர் பிரிந்த கொசோவோவில் முதலாவது பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. பதவி விலகிச் செல்லும் பிரதமர் ஹசிம் தாச்சியின் கொசோவோ ஜனநாயகக் கட்சி (டி.பி. கே) இத்தேர்தலில் வெல்லும் எனவும் ஆனால், உறுதியான பெரும்பான்மை கிடைப்பது கடினம் எனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இக்கட்சிக்கு கொசோவோ ஜனநாயகக் கூட்டணி (எல்.டி.கே.) பெரும் சவாலாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 16 லட்சம் பெரும்பான்மையான அல்பேனிய இன வாக்காளர்களுடன் 120,000 சிறுபான்மையான சேர்பியர்களும் இத்தேர்தலில் கவனத்திற்குரியவர்களாகின்றனர். அங்குள்ள சேர்பியர்களில பெரும்பான்மையானோர் கொசோவோ தனிநாடாகியதை …
-
- 0 replies
- 600 views
-
-
ஸ்ரொக்கோம் ( சுவீடன்) மத்திய பகுதியில் குண்டு வெடிப்பு குண்டு வைத்தவர் இறப்பு. இருவர் காயம். அப்கானிஸ்தானில் சுவீடனின் பங்களிப்பு காரணமாக இருக்கலாம். http://www.youtube.com/watch?v=WuMFvCNt21s&feature=player_embedded
-
- 1 reply
- 731 views
-
-
முன்கூட்டியே பேசி வைத்துக் கொண்டபடி இன்றைய அலப்பறை கூட்டம் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே கூடியது. “அய்யோ பாவம்! இந்த காந்தி தேசத்திற்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா”என்று புலம்பியபடியே உட்கார்ந்தார் சித்தன். ”காந்தி தேசத்திற்கு என்ன குறைச்சல்.அதான் உலகம் பூராவும் நல்லா சிரிக்கிறார்களே” என்று நக்லலடித்தபடி உட்கார்ந்தார் சுவருமுட்டி. எடுத்த எடுப்பிலேயே பேசிய சித்தன் “இதப்பாருப்பா சுவருமுட்டி! உன்னோட ரவுசு தாங்க முடியல.நீ பாட்டுக்கு ஏதாவது பேசிடறே.கடைசியில எங்க தலைதான் உருளும்.எற்கனவே கடுப்புல இருக்கிற திமுக எங்களுக்கு ஆட்டோவை அனுப்பி ‘விருந்து’ கொடுத்துடப் போவுதுன்னு கவலையா இருக்கு. படுத்தா தூக்கம் வரமாட்டேங்கிறது” என்று கெஞ்சாத குறையாக வேண்டுகோள் வைத்தார். …
-
- 3 replies
- 878 views
-
-
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 86 அகவையைக் கடந்த நிலையிலும் பல வழிகளில் தனித்தன்மையோடு செயல்படுகிறார். நிறைய சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறார். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களைச் சந்திக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் திரளும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்த ஊக்கமும், உழைப்பும் பொதுவாழ்வில் ஈடுபடும் யாரும் கைக்கொள்ளத்தக்கன ஆகும். அண்மையில் தமிழக முதல்வர் பங்கேற்ற பல பொது நிகழ்ச்சிகளில் இரண்டைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். கடந்த 20.09.02010 அன்று நாகர்கோவிலில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் தம் நிறைவுரையைப் பின்வருமாறு முடிக்கிறார். ‘நான் என்றும் உங்கள் வீட்டுப்பிள்ளை 86 வயதுக்குப்பின் எப்படிப் பிள்ளையாக முடியும் என்று கேட்பீர்கள். 9…
-
- 0 replies
- 689 views
-
-
இந்தியாவில் ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்தார். சிவசேனைத் தலைவர் பால் தாக்கரேவை மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் சுப்ரமணியம் சுவாமி இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுவாமி மேற்கண்டவாறு தெரிவித்தார். ஊழலுக்கு எதிராக மும்பையில் பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட உள்ளது. ஊழலுக்கு எதிரான இந்த பிரசாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக சுவாமி தெரிவித்தார். http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=343492&SectionID=164&M…
-
- 4 replies
- 722 views
-
-
விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகிவரும் அமெரிக்கா தொடர்பான ரகசியத் தகவல்களில், இப்போது இந்தியாவின் காங்கிரஸ் கட்சியும் சிக்கியுள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஆளும் காங்கிரஸ் கட்சி, மதவாத அரசியலில் ஈடுபட்டதாக இந்தியாவுக்கான அமெரிக்காவின் அப்போதைய தூதர் டேவிட் முல்ஃபோர்டு தனது அரசுக்குத் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதர்களுக்கும் அவர்களது அரசாங்கத்துக்கும் இடையில் நடைபெற்ற பல்வேறு ரகசிய தகவல் பரிமாற்றங்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வருகிறது. இந்தியாவின் காங்கிரஸ் கட்சியைப் பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பைத் தாக்குதலில் இந…
-
- 1 reply
- 609 views
-
-
வெள்ளிக்கிழமை, 10, டிசம்பர் 2010 (15:34 IST) முதல்வர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிடுவீர்களா? சீமான் பரபரப்பு பேட்டி தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தனர். இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்டம் என் மீது பாய்ந்துள்ளது. இரண்டு முறையும், தமிழக அரசு தவறாக என் மீது சட்டத்தை போட்டுள்ளது என நீதிமன்றம் என்னை விடுதலை செய்துள்ளது. இந்த …
-
- 1 reply
- 686 views
-
-
செந்தமிழன் சீமான் நேற்று அவர் மேல் போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடைத்து வெளிவந்தார். நேற்று வேலூர் சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டம் வரை முழுமையான புகைப்பட தொகுப்பு. http://74.53.30.66/~seemaan/gallery/#/content/994_thalaimaiseyalagam/998_/
-
- 2 replies
- 476 views
-
-
அண்மையில் ஒன்ராரியோ பிரதேசத்தில் வந்த காற்றில் அகப்பட்ட இவை, ஒரு சேதமும் இல்லாமல் தப்பிவிட்டன
-
- 8 replies
- 839 views
-
-
வடகொரியா உதவியுடன் மியான்மர் (Burma) ரகசியமாக அணு ஆயுதம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் ஆவணம் தெரிவிக்கிறது. பர்மாவை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர், தனது நாட்டில் வடகொரியாவின் உதவியோடு ரகசியமாக அடர்ந்த காட்டுப்பகுதியில் அணு ஆயுதம் மற்றும் அணு உலை தயாரிப்பில் ஈடுபட்டு உள்ளதை தான் நேரில் பார்த்ததாக அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்துள்ளார். இத்தகவல் அமெரிக்க தூதரக அதிகாரி தனது நாட்டு தலைமைக்கு அனுப்பிய ஆவணங்களில் இடம்பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. http://www.newsonews.com/view.php?22cQ0ESc2e2VZBZb2e2cAOJ7acd3eQAA0cde4KMCC0b4edlmA2a4dndnB4202dq86A40
-
- 0 replies
- 512 views
-
-
மேற்கத்திய நாடுகள் சீனாவை தனிமைப்படுத்த முயல்வதாக, சீன ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில், நோபல் பரிசுக்குபோட்டியாக கன்பூசியஸ் அமைதி பரிசு என்ற பெயரில் தைவான் முன்னாள் துணை ஜனாதிபதி ஒருவருக்கு பரிசு வழங்கி சீனா அதிரடி காட்டியுள்ளது. சீன அரசுக்கு எதிராக போராடி வரும், லியூ ஷியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிறையில் இருக்கும் லியூவை விடுதலை செய்யவும் அந்நாடு மறுத்துவிட்டது. நோபல் பரிசு வழங்கும் விழாவை, சீனா உட்பட அதன் 18 நட்பு நாடுகளும் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதில் தற்போது இலங்கையும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=142613
-
- 1 reply
- 486 views
-
-
நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சீமான், தன் மீதான வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதால் நாளை 10ந்தேதி காலை 930 மணியளவில் சிறையில் இருந்து சீமான் வெளியில் வருகிறார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் நோக்கி வருகின்றனர். இந்நிலையில் சீமான் விடுதலையாவையொட்டி மும்பை நாம் தமிழர் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தலைவர் சேலம் செல்லத்துரை தலைமையில் , செயலாளர் சி.ராஜேந்திரன் முன்னிலையில் அ.கணேசன், சுந்தர்,டேனியல், சிவா,கென்னடி,துரை,சரவணன் உட்பட பலர் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர…
-
- 1 reply
- 632 views
-
-
வாக்கிங் சென்ற வக்கீலை கொத்திய சேவல் "கைது' சேலம்: சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வக்கீல் விஜயகுமார் இரு தினங்களுக்கு முன், தேவேந்திரபுரம் எக்ஸ்டென்ஸன் பகுதியில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது, வழியில் நின்ற சேவல், வக்கீல் விஜயகுமாரை கொத்தியுள்ளது. பொதுவாக கொத்திய சேவலை "கல்'லால் அடித்து துரத்தி விடுவர். ஆனால், சாலையில் நடந்து சென்ற போது சேவல் கொத்தியது குறித்து, வக்கீல் விஜயகுமார் சேலம் செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார். செவ்வாய்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வக்கீல் விஜயகுமாரை கொத்திய சேவலை தேடிப்பிடித்து "கைது' செய்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். சேவல் கைது செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்த சேவலின் உரிமையாளர் கமலா என்பவர் நீதிமன்றத்திற்கு…
-
- 8 replies
- 915 views
-
-
இலங்கை சுகாதார மந்திரி, இன்று (10.12.2010) பெங்களூரு அரண்மனை மைதானத்திற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பு சார்பில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அகில கர்நாடக தமிழ் கூட்டமைப்பினர், இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின்போது 21/2 லட்சம் அப்பாவி தமிழர்கள், ரஜபக்சே அரசால் கொல்லப்பட்டனர். பலர் இன்னும் முள் வேலியில் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சே கலந்து கொள்ள சென்றபோது, அங்கு வசிக்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தியதால் திரும்பி சென்றார். தற்போது ராஜபக்சே அரசில் சுகாதார துறை மந்திரியாக இருக்கும் சலிண்டா தசநாயகா, பெங…
-
- 0 replies
- 395 views
-
-
மொறட்டுவ பல்கலைக்கழத்தில் குழு மோதல்: 16 பேர் காயம் 12/10/2010 3:31:09 PM Share மொறட்டுவ பல்கலைக்கழத்தில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 16 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 393 views
-
-
இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் * Friday, December 10, 2010, 4:15 சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தும் வகையிலும், மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கத்துடனும் டிசம்பர் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1948ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச மனித உரிமைகள் தினத்தைப் பிரகடனம் செய்ததையடுத்து கடந்த 62 ஆண்டுகளாக மேற்படி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல பாகங்களிலும் பல்வேறு விசேட நிக…
-
- 1 reply
- 428 views
-
-
லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கே கைது Wikileaks founder Julian Assange arrested in London The founder of the whistle-blowing website Wikileaks, Julian Assange, has been arrested by the Metropolitan Police. The 39-year-old Australian denies allegations he sexually assaulted two women in Sweden. Scotland Yard said Mr Assange was arrested on a European Arrest Warrant by appointment at a London police station at 0930 GMT. He is due to appear at City of Westminster Magistrates' Court later. Mr Assange is accused by the Swedish authori…
-
- 7 replies
- 1.1k views
-
-
ரானின் கடற்படையினரால் பெருந்தொகையான தற்கொலைப் படகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கர வெடிமருந்துகள் இணைக்கப்பட்ட 9000 க்கும் அதிகமான வேகப் படகுககளை ஈரானின் கடற்படை உருவாக்கியுள்ளது. இந்தப் படகுகள் பாரசீக வளைகுடாப் பிரதேசத்தில் காவல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இந்தப் பிரதேசத்தில் தான் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தற்கொலைப் படகுகள் அனைத்திலும் தீவிர தற்கொலைப் போராளிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எதிரிக் கப்பல் ஒன்றில் மூர்க்கமாகப் பாயும் ஆற்றல் கொண்ட இந்தப்படகுகள் ஒரு கப்பலில் ஏழு மீட்டர் ஆழமான குழியை ஏற்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளைக் கொண்டவை. ஈரானியப் போர்க்கப்பல்களையும். இத்தகை…
-
- 0 replies
- 622 views
-
-
மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தாள் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையும் அளவிற்கு அமைந்துள்ளது. நமது நாட்டின் சட்டங்களையும், மதஉ…
-
- 0 replies
- 887 views
-
-
வடஇந்தியாவின் காசி மாநகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். பால் பாத்திரத்துக்குள் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததாக உத்திரப் பிரதேசக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாலையில் கங்கையில் நீராட வந்திருந்த பக்தர்கள் மத்தியில் குண்டு வெடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காசியில் இடம்பெற்ற மற்றொறு குண்டு வெடிப்பில் இருபது பேர் கொல்லப்பட்டனர். இந்துக்களின் புனித நகரங்களில் காசி முக்கிமானது. இந்த குண்டு வெடிப்பை தாங்கள்தான் செய்ததாக இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு உரிமைகோர…
-
- 2 replies
- 489 views
-
-
சொந்தங்களுக்காக பதவி வகிப்பவர் கருணாநிதி: விஜயகாந்த் சிதம்பரம் : சொந்தங்களுக்காக பதவி வகிக்கும் கருணாநிதி மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை என விஜயகாந்த் எம்.எல்.ஏ., கூறினார். கடலூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நேரு நகர், நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர் ஆகிய பகுதிகளை தே.மு.தி.க., நிறுவனத் தலைவரும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான விஜயகாந்த் நேற்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கன மழையால் கடலூர் மாவட்டம் தான் அதிகம் பாதித்துள்ளது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதிகளை பார்வையிடும் போது, குடிசை வீடுகள் இடிந்த…
-
- 0 replies
- 504 views
-
-
சவுதி அரேபியாவில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கின் தண்டனையை சவுதி மன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷானாவின் தண்டனை ரத்துச் செய்யப்பட்டு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்ததை அடுத்தே இந்த தண்டனையை தற்காலிகமாக இடை நிறுத்த சவுதி மன்னர் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலவாழ்வு அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் ரிஷானாவின் தண்டனையை ரத்துச் செய்யும் …
-
- 0 replies
- 837 views
-
-
வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் சரக்கடிக்கும் வரையோ அல்லது அடுத்த புதியத் தமிழ்த்திரைப்படம் வெளியாகும் வரையோ, பேசிப் பொழுதுபோக்குவதற்கு வழிசெய்திருக்கிறது ஒரு இணையதளம், பெயர் 'விக்கிலீக்ஸ்' (www.wikileaks.org).ஆரம்ப காலங்களில் இருந்து விக்கிலீக்ஸ் குறித்து அவதானித்து வருபவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. கிட்டத்தட்ட நம் ஊர் ஏ.வி.எம் ஸ்டுடியோஸிற்கு அடுத்தப்படியாக சொன்ன தேதி தவறாமல் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு, அதிரடித் திருப்பங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர்கள். வழக்கம் போல நாம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட புதிய/பழையத் தகவல்கள் குறித்து இங்கு பேசப்போவதில்லை, விக்கிலீக்ஸ் எப்படிக் கட்டமைக்கப் பட்டது, அதன் வரலாறு, எவ்வாறு செயல்படுகிறது, இணையத்தளத்தின் பாதுகாப்பு, அதில் ப…
-
- 0 replies
- 1.2k views
-