உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26861 topics in this forum
-
பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆனார். இனவாதம் பார்க்காத சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் பாரா ரூமிக்கும் வாழ்த்துக்கள். https://dailynews.lk/2025/12/15/local/914618/farah-rumy-34-first-lankan-born-elected-to-swiss-federal-parliament/
-
-
- 8 replies
- 788 views
- 1 follower
-
-
கூடங்குளம் முதலாவது அணுமின் நிலையத்தில் அடுத்த வாரம் சோதனை ஓட்டம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட 2 அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் அணுஉலையில் கடந்த அக்டோபர் 2ம் தேதி யுரேனியம் நிரப்பும் பணி நிறைவடைந்தது. இதனிடையே, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. இந்நிலையில், அங்கு அடுத்த வாரம் 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடத்த இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அணுசக்தி ஒழுங்குமுறை கமிஷனின் தலைவர் எஸ்.எஸ். பஜாஜ், அணுமின் நிலையத்தை துவங்குவதற்கு முன்னோட்ட…
-
- 1 reply
- 398 views
-
-
1986 ல் சுவீடன் முன்னாள் பிரதமர் கொலை – குற்றவாளி கண்டறியப்பட்டார் by : Jeyachandran Vithushan 1986 ஆம் ஆண்டில் சுவீடன் முன்னாள் பிரதமர் ஓலோஃப் பா(ல்)மேக் கொன்றது யார் என்று தங்களுக்குத் தெரியும் என்று ஆனால் சந்தேக நபர் இறந்துவிட்டார் என்றும் ஸ்வீடிஷ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். அவர்கள் சந்தேக நபரை ஸ்டிக் எங்ஸ்ட்ரோம் என அடையாளம் கண்டுகொண்டபோதும் “ஸ்காண்டியா மேன்” என்றும் அழைக்கப்படும் குறித்த நபர் 2000 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறியுள்ளனர். இதன் விளைவாக அவர்கள் சுவீடன் முன்னாள் பிரதமர்ஓலோஃப் பா(ல்)மே மரணம் தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவருவதாக தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டர் பீட்டர்சன் கூறினார். …
-
- 0 replies
- 547 views
-
-
படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கும் திட்டத்துக்கு ரூ. 100 கோடி: ஜெயலலிதா உத்தரவு சென்னை: படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கும் புதிய திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் 'புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம்' என்ற புதிய திட்டத்தை 2012-13 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, தொழில் தொடங்க திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, நிதிநிறுவனங்களில் நிதியுதவி பெற உதவுவதுடன், பெரும் தொழில் நிறுவனங்க…
-
- 0 replies
- 252 views
-
-
சோமாலியாவில் இரட்டை குண்டுத் தாக்குதல் : ஐ.நா.வின் 9 பாதுகாவலர்கள் பலி : அல் ஷபாப் பொறுப்பேற்பு சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே இடம்பெற்று இரட்டை இரண்டு தற்கொலைப்படை தாக்குதலில் ஐக்கிய நாடுகளின் 9 பாதுகாவலர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு அல் ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மொகடிசுவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு மேற்கொள்வதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு தாக்குதல் விமான நிலையத்தின் வாயில் அருகில் உள்ள சோதனைச்சாவடி பகுதியிலும் மற்றுமொரு தாக்குதல் விமான நிலையத்திற்கு சற்று அப்பால் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 223 views
-
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் ஒன்றை மேற்கொண்டு அமெரிக்க அதிபர் புஷ் பாக்தாத்தை சென்றடைந்தார்.அங்கு ஈராக் அதிபருடன் அவர் ஊடகவியாளர்களை சந்தித்துப் பேசினார்.அங்கு அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில்,ஈராக் ஊடகவியாளர் ஒருவர் பாதணியால் தாக்கினார். புஷ் மீது தனது பாதணியை தூக்கி எறிந்த ஊடகவியாளர் " நாய் நாய்" என பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பாதணியால் எறிந்த ஊடகவியாளர்! http://www.tamilseythi.com/world/Bush-2008-12-14.html -குயிலி
-
- 27 replies
- 6.2k views
-
-
சுதந்திர தினம் வருகின்ற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.வருகின்ற 15-ம் தேதி, நாடு முழுவதும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக விமான நிலையம் உள்பட முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், தேசியச் சின்னங்கள் முன் செல்ஃபி எடுக்க, ஒரு வார காலத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில சுற்றுலாத் துறைக்கும், மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் சுற்றறிக…
-
- 0 replies
- 326 views
-
-
:காங்கிரஸ் கட்சியும், இந்தியாவும் என் உயிர், என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் பேசினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், துணைத் தலைவர், ராகுல் பேசியதாவது: காங்கிரஸ் கட்சியும், இந்த நாட்டு மக்களும் என் உயிர். கட்சி மற்றும் நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக நான் பாடுபடுவேன். என் இந்த போராட்டத்திற்கு, உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும். (ராகுல் இவ்வாறு கூறியதும், சோனியா, மன்மோகன் சிங் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற, 1,000க்கும் மேற்பட்டவர்கள், எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்) இந்த நாட்டின் இளைஞர்கள், அரசியல் மீதும், அரசியல்வாதிகள் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். இந்த கோபத்திற்கு காரணம் என்ன தெரியுமா... அரசியல் வர்க்கத்திலிருந்து அவர்கள் நீக்கி வைக்கப்பட்டுள்ளனர். அ…
-
- 10 replies
- 619 views
-
-
இஸ்லாமாபாத்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என பாக்.உள்துறை அமைச்சர் , இந்தியாவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர், ஷாருக் கான் (47) இவர் கவுரி என்ற பெண்ணை மணந்து, மும்பையில் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் , நான் முஸ்லிம் என்பதால், அரசியல்வாதிகளால் அவ்வப்போது மிரட்டப்படுகிறேன். அண்டை நாடான பாகிஸ்தானுடன் அடிக்கடி தொடர்பு படுத்தப்படுகிறேன்.நான் இந்தியனாக இருந்த போதிலும், வேறுபடுத்தப்படுகிறேன். என்னை மும்பையை விட்டு வெளியேற்றவும், பாகிஸ்தானுக்கு செல்லும் படியும், நான் விரட்டப்படுகிறேன் என கூறியிருந்தார். பாக். வாருங்கள்: ஹபீஸ் சயீத் இதை அறிந்த, பாக்., பயங்கரவாத அமைப்புகளின…
-
- 1 reply
- 366 views
-
-
டெல்லி மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது! March 9, 2013 10:04 am டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவியும் வழங்கினார். மாணவியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் விருதினை பெற்றுக் கொண்டார். டெல்லி மாணவியை தைரியமான பெண் என குறிப்பிட்ட ஜான் கெர்ரி, அவருக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். மேலும் டெல்லி மாணவி, உயிர்வாழ விரும்பியதையும், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ப…
-
- 4 replies
- 872 views
-
-
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த புத்தபிட்சு ஒருவர் இலங்கை செல்வதற்கு வழிதெரியாமல் வியாழக்கிழமை ராமேசுவரம் வந்தவரை மத்திய,மாநில உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாய்லாந்து நாட்டினை சேர்ந்த புத்த பிட்சு பி.ஜெ.எமுராய்.இவர் அவரது நாட்டிலிருந்து இலங்கை செல்ல சென்னை சென்றிருந்த போது அங்கிருந்த சிலர் ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சுலபமாக செல்ல முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து அவர் சென்னையிலிருந்து ஓகா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்துள்ளார். இவரது வருகையை அறிந்த ராமேசுவரம் ரயில்வே போலீஸார் மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸாரிடம் இவரை ஒப்படைத்தனர்.அவர்கள் விசாரணை செய்து பத்திரமாக மீண்டும் சென்னைக்க…
-
- 5 replies
- 579 views
-
-
ஆந்திர பிரதேச மாநிலத்தில் 10 ரூபாய் தர மறுத்த தாயை அவரது மகனே தீயிட்டு எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் துர்காபாய் (50), இவருக்கு அம்பேத்கர் (25) என்ற மகன் உள்ளான். எப்போதும் தாயிடம் செலவுக்கு பணம் வாங்கி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்த அம்பேத்கர், நேற்று செலவுக்காக அவரது தாயிடம் 10 ரூபாய் கேட்டுள்ளார். மகன் கேட்ட 10 ரூபாயை கொடுக்க துர்காபாய் மறுத்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அம்பேத்கர், துர்காபாயின் மீது கேரோசினை ஊற்றி தீயிட்டு எரித்தார். துர்காபாயின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு விரைந்த அக்கம் பக்கத்தினர், அவரை உடனடியாக மருத்துவமனையில் …
-
- 0 replies
- 424 views
-
-
அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மூன்று பெண்கள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பெண்கள் அனைவரும் அமெரிக்க மாநிலமான ஒஹையோவின் க்ளீவ்லாண்ட் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்கப் போலிசார் கூறுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 16வது வயதில் காணாமல் போன அமாண்டா பெர்ரி என்ற பெண் இந்த வீட்டிலிருந்து பக்கத்து வீட்டார் ஒருவரின் உதவியுடன் தப்பித்து, பின்னர் இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்கு சொன்ன பின்னர்தான் இது அம்பலத்துக்கு வந்தது. 50 வயதுகளில் இருக்கும் மூன்று சகோதரர்கள் இது தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜீனா டிஜீசஸ் என்ற பெண் , 204ம் ஆண்டு , அவரது 14வது வயதில், பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது …
-
- 4 replies
- 1.4k views
-
-
ரஷ்ய தயாரிப்பான ஸ்பூட்னிக் வியின் 2 மில்லியன் டோஸ்களை வாங்கும் ஈரான் 2 மில்லியன் டோஸ் ரஷ்ய தயாரித்த ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை கொள்வனவு செய்யவுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படுவதாகவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் மொஹமட் ஜவாத் ஸரீப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் மிக மோசமாக கொரோனா தொற்று பதிவாகிய ஈரான், ரஷ்யா, இந்தியா அல்லது சீனா தயாரித்த தடுப்பூசிகளை மட்டுமே நம்புவதாகவும் அறிவித்துள்ளது. ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு ஈரான் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில் 2 மில்லியன் டோஸ்களை பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதேவ…
-
- 2 replies
- 954 views
-
-
சீனாவின் ‘இரு குழந்தைகள்’ சட்டத்தையடுத்து மக்கள் தொகையில் சடுதியான உயர்வு சீனாவில் அமலில் இருந்த ‘ஒரு குழந்தை’ சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. இதன்படி, 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு சுமார் பதின்மூன்று இலட்சம் குழந்தைகள் மேலதிகமாகப் பிறந்துள்ளன என்று தெரியவந்துள்ளது. சனத்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 1979ஆம் ஆண்டு முதல் ‘குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற சட்டத்தை அமல் படுத்தியது சீன அரசாங்கம். இதனால் பிறப்பு விகிதம் குறைவடையத் தொடங்கியது. எனினும், இந்தச் சட்டத்தால் வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மத்திய வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை க…
-
- 0 replies
- 240 views
-
-
ஜூன் 01, 2013 கூகுள் இணையதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் குறித்து அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ (F.B.I.) கேட்கும் தகவல்களை அந்த நிறுவனம் தரவேண்டும் என்று சான் ஃப்ரான்சிஸ்கோ (San Francisco) மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இணையதள சேவை வழங்குவோர், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட அமைப்புகளிடம் தகவல்களை கேட்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூகுள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. 2001 செப்டம்பர் 11-ஆம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர், அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அந்நாட்டு உளவுத்துறையின் தீவிரவாதத் தடுப்பு அதிகாரிகள் நீதிபதியின் ஒப்புதல் இல்லாமலேயே உத்த…
-
- 2 replies
- 409 views
-
-
கனடாவில் பெட்ரோலியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மெயின் நகருக்கு சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் தீப்பிடித்தில் 80 பேர் வரை மரணமாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மொன்ட்றியல் நகரிலிருந்து 155 மைல் கிழக்கே கியுபெக் மாகாணத்தில் உள்ள லக் மெகன்டிக் நகரின் அருகே செல்லும்போது ரயிலில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் பெட்டிகள் தடம் புரண்டு, அருகில் உள்ள கட்டங்களுக்குள் புகுந்தன. இதனால் ஏற்பட்ட தீச்சுவாலையிலும், கரும்புகையிலும் அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தன. பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்புத்துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட…
-
- 4 replies
- 919 views
-
-
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், போலீஸ் சீருடையில் சென்று, சிறைக் காவலர்களுடன் சண்டையிட்டு டிரான்ஸ்பார்மர்களைத் தகர்த்து சிறையில் இருந்த 300 கைதிகளை அதிரடியாக விடுவித்துள்ளனர் தாலிபன் தீவிரவாதிகள். பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள தேரா இஸ்மாயில் கான் என்ற பகுதி பாகிஸ்தானின் பழங்குடியினர் வாழும் தெற்கு வரிசிஸ்தான் எல்லையில் உள்ளது. இங்குள்ள சிறைச்சாலை ஒன்றில் சுமார் 5000 கைதிகள் உள்ளனர். அவர்களுள் 250 பேர் கொடூரமான தீவிரவாதிகள். நேற்று மாலை அச்சிறைக்கு போலீஸ் சீருடையில் வந்த 150க்கும் மேற்பட்ட தாலிபன் தீவிரவதிகள் உள்ளே வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். அவர்களின் அதிரடித் தாக்குதலால் சிறையின் வெளிப்புறத் தடுப்புச் சுவர் சுக்கு நூறானது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக…
-
- 0 replies
- 239 views
-
-
மணிலா: தமிழக மழையை உள்வாங்கிக் கொள்கிறது தென்சீனக் கடல் புயல் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியிருந்தார். அவர் சொன்ன புயல் தற்போது தென் சீனாவையும் பிலிப்பைன்ஸையும் பதம் பார்த்து வருகிறது. தென் சீனக் கடலில் மையம் கொண்டுள்ள புயலால் இதுவரை இல்லாத அளவு மழை தென் சீனப் பகுதியிலும் பிலிப்பைன்ஸிலும் பதிவாகி இருக்கிறதாம். கொட்டும் கனமழையால் ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் மரங்கள் வேரோடு சாய்ந்து வீழ்ந்துள்ளன. கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தகம் மூடப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில்தான் பிலிப்பைன்ஸை பெரும் புயல் …
-
- 0 replies
- 311 views
-
-
டெல்லி: சீனாவுக்கு செல்ல இருந்த இந்திய விமானப் படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் என்.ஏ.கே. பிரவுனியின் பயணத்தை மத்திய அரசு திடீரென ரத்து செய்துவிட்டது. எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் ஊடுருவல்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்கு நமது விமானப் படைத் தலைவர் நல்லெண்ணப் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா கருதுவதாகத் தெரிகிறது. முன்னதாக பிரவுனியை தனது நாட்டுக்கு வருமாறு சீன அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், பிரவுனி அங்கு செல்வதற்கு முன் சீனாவில் இருந்து முப்படைத் தலைவர்களில் ஒருவர் இந்தியாவுக்கு வரட்டும் என்று மத்திய அரசு கருதுவதாகத் தெரிகிறது. அதே போல இந்திய ராணுவத் தளபதி பிக்ரம் சிங் வரும் நவம்பரில் சீனா செல்ல உள்ளார். சீனா-இந்தியா கூட்டு ராணுவப் பயிற…
-
- 0 replies
- 332 views
-
-
மான்செஸ்டர் தாக்குதல்: அமெரிக்காவுடன் தகவல் பரிமாற்றத்தை நிறுத்திய பிரிட்டன் படத்தின் காப்புரிமைNEW YORK TIMES Image captionஇந்த ஆதாரங்கள் சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்டதாக நியு ஆர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது மான்செஸ்டர் அரங்க தாக்குதல் குறித்து பிரிட்டன் காவல்துறை பகிர்ந்து கொண்ட புலன் விசாரணை தகவல்களை ஊடகங்களில் கசியவிட்ட அமெரிக்காவிடம் இனிமேல் தகவல்களை பகிர்வதை பிரிட்டன் காவல்துறை நிறுத்திவிட்டதாக பிபிசிக்கு தெரியவருகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் குண்டுவெடிப்பு இடிபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால் பிரிட்டன் அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். குழந்தைகள் உட்பட 22 பேர் கொல்லப்பட…
-
- 1 reply
- 528 views
-
-
ஜெர்மனி ஜி20 உச்சி மாநாட்டில் டிரம்ப் - புதின் ரகசிய உரையாடல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் இந்த மாதம் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் முன்பு வெளியில் அறிவிக்கப்படாத கூட்டம் ஒன்றில் இரண்டாவது முறையாக சந்தித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு அதிகாரபூர்வ அமர்விற்கு பிறகு இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்து வெள்ளை மாளிகை எதையும் வெளியிடவில்லை. இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்த தகவல்களை ''போலியான செய்தி'' என்று கூறி மறுக்கிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப். கடந்த ஆண்டு நடைபெற்…
-
- 0 replies
- 333 views
-
-
உலகிலேயே "நீளமான" தொங்கும் பாலம் ஸ்விட்சர்லாந்தில் திறப்பு படத்தின் காப்புரிமைEPA Image captionஇதற்கு முன்னதாக இங்கு இருந்த பாலம் பாறைகள் விழுந்து சேதமாகிவிட்டது ஸ்விட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் 500 மீட்டர் (1,640 அடி) நீளத்தில், உலகிலேயே நீளமான தொங்கும் நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. காற்று வாங்க அல்லது உடற்பயிற்சிக்காக இயற்கையான சூழலில் சென்றுவர உகந்த அளவில் இந்த தொங்கும் நடைபாதை பாலம் உள்ளது. படத்தின் காப்புரிமைEPA "ஐரோப்பிய பாலம்" என்று பெயரிடப்பட்டுள்ள 494 மீட்டர் நீளமான இந்த பாலம் கிராபென்குஃபர் செங்குத்து குறுகிய பள்ளதாக்கிற்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்திற்கு மேலே 110 …
-
- 0 replies
- 634 views
-
-
டுபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும் ரோர்ச் ரவரில் தீவிபத்து டுபாயின் மெரினா பகுதியில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிங்களில் ஒன்றாக கருதப்படும் 79 மாடிகளை கொண்ட ரோர்ச் ரவர் ( torch tower ) இல் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் 9-ஆவது மாடியில் பற்றிய தீ, தொடர்ந்து எரிந்து அடுத்தடுத்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து தீயணைப்பு படையினர் அங்கு சென்று அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களில் தங்கியிருப்பவர்களை உடனடியாக வெளியேற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்தினால ; ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என…
-
- 1 reply
- 373 views
-
-
புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வருமாறு தீவிரவாதி மசூத் அசார் அழைப்பு விடுத்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு நேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம்,பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனையை ஏற்று காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் அப்போது விடுவிக்கப்பட்டான். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சென்ற மசூத், ஜெய்ஷ் இ மொகமத் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான ஜிகாத் ( புனிதப்போர்) நடத்த அவ்வப்போது அழைப்பு விடுத்து, தீவிரவாதிகளை தூண்டுவிடு…
-
- 2 replies
- 537 views
-