Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அகமதாபாத் (ஏஜென்சி) செவ்வாய்கிழமை 29 ஜூலை 2008 குஜராத் மாநிலம் சூரத் நகரில் இன்று காலையிலிருந்து அடுத்தடுத்த பல்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன. குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டதன் மூலம் மிகப்பெரிய ஆபத்து தவிர்க்கபட்டுள்ளபோதிலும், இன்னும் வெறெங்கெல்லாம் குண்டுகள் வைக்கப்பட்டிருக்குமோ என்று அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். முன்னதாக சூரத் நகரிலுள்ள வராச்சா சாலை, குடியிருப்பு சங்க பகுதி மற்றும் மார்க்கெட் பகுதி ஆகிய இடங்களில், வெடிக்கும் நிலையில் இருந்த மூன்று குண்டுகள் இன்று காலையில் கண்டெடுக்கப்பட்டன. இம்மூன்று வெடிகுண்டுகளையும், நிபுணர்கள் செயலிழக்கச் செய்ததாக…

  2. அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு.... 28.7.08 முரசொலியில் வந்த அழகு தமிழ் கட்டுரை.. ராம பக்தை - அய்யங்கார் மாமி ஜெயலலிதாவுக்கு நாள் தவறாது கலைஞரைத் தாக்கி அறிக்கை விடாவிட்டால் பொழுதுபோகாது. 26.7.2008 அன்று ராமர் பாலம் என்ற கற்பனைக்கு ஆதரவாக விடுத்த அறிக்கையில், "தி.மு.க. தலைவர் கருணாநிதி ராமபிரான் ஒரு குடிகாரன் என்று பகிரங்கமாகக் கூறுகிறார். இந்துக்களின் வணக்கத்துக்குரிய இறைவன் பெருமாள், காமத்தில் நீந்திக் களித்தவர் என்று இப்போது கருணாநிதி கண்டுபிடித்துள்ளார்." - என்று கலைஞர் மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார். ராமர் குடித்தார் - என்று கலைஞர் தன் கருத்தாக - சொந்தக் கருத்தாக ஒருபோதும் கூறியதில்லை. ராமர் குடிப்பார் அவருக்கு …

    • 0 replies
    • 1.7k views
  3. ஒரு கண் திறந்துள்ள நிலையில் உள்ள ஷீரடி சாய்பாபாவின் சிலையைக் காண பெங்களூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பெங்களூர் கவிபுரம் குட்டஹள்ளியைச் சேர்ந்தவர் பாபு. அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஷீரடி சாய்பாபா சிலையின் மூடிய நிலையில் இருந்த வலது கண் திடீரென திறந்துகொண்டது. இதை அறிந்த பக்தர்கள் வெள்ளிக்கிழமை பாபுவின் வீட்டுக்கு சென்று அந்த சிலையைப் பார்த்து அதிசயித்துச் சென்றனர். இந்தச் செய்தி தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த சாய் பக்தர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குறிப்பாக தும்கூர், கோலார் மாவட்டங்களில் இருந்து சனிக்கிழமை பெங்களூருக்கு வந்த வண்ணமிருந்தனர். அவர்கள் கவிபுரத்தில் உள்ள பாபுவின் வீட்டுக்குச் சென்றனர். இதனால் சனிக்கிழமை…

    • 12 replies
    • 3.5k views
  4. டெல்லி: டெல்லியிலிருந்து மும்பைக்கு பறந்து கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் கதவுகள் சரியாத பூட்டப்படாததால் அந்த விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது. இதையடுத்து அந்த விமானத்தின் இரு சிப்பந்திகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதில் மத்திய அமைச்சர் சரத்பவாரும் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியிலிருந்து நேற்று மாலை இந்த விமானம் மும்பை கிளம்பியது. போயிங்௭37 ரக விமானமான இந்த விமானம் 5,000 மீட்டர் உயரத்தை அடைந்த நிலையில், விமான சிப்பந்திகள் கதவு சரியாக பூட்டப்படாமல் திறந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அந்தக் கதவு வழியாக விமானத்திலிருந்து அழுத்தப்பட்ட காற்று வெளியேறியது மட்டுமல்லாமல், வெளியிலிருந்தும் காற்று புகுந்தது பெரும் சத்தம் கி…

  5. நெல்சன் மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது வீரகேசரி நாளேடு 7ஃ24ஃ2008 5:39:57 Pஆ - அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது தென் ஆபிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா டர்பனில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்தியாகிரக அமைப்பே அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருதை நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. தியாகத்தாலும் பங்களிப்பாலும் உலக மக்களின் மனதில் இடம் பிடித்தார் என்றும் அவர் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார். நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் மண்டேலா கலந்து கொள்ளவில்லை. விருதை அவருக்கு பதிலாக அவரது சிறைத் தோழரும் அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராடா பெற்றுக் கொண்டா…

    • 20 replies
    • 2.4k views
  6. பாலஸ்தீனர்களை வெளியேற்ற எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் அரசு [27 - July - 2008] எருசலேம்: எருசலேமின் பழைய நகர்ப்பகுதிகளிலிருந்து பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்கு எலிகளை ஆயுதமாகப் பயன்படுத்துகின்றது இஸ்ரேல் அரசு. எருசலேமின் பழைய நகர்ப் பகுதிகளில் தங்கியிருக்கும் பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதற்காக இஸ்ரேல் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக அம்மக்களை அப்பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற பெருச்சாளிகளை இஸ்ரேல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அரேபியர்களுக்கு மேலும் துன்புறுத்தல்களை ஏற்படுத்தும் நோக்கில், யூதர்கள், பெரிய இரும்புக் கூண்டுகளில் ஏராளமான எலிகளை கொண்டு வந்து, பழைய நகரின் தெருக்களில் விட்டுவிட்டுச் செல்கின்றன…

    • 0 replies
    • 853 views
  7. Chhotu வும் அதன் எஜமானி அம்மாவான ராஜ்குமாரி தேவி (வலது) யும். சோட்டுக்கு வயது 7. அவன் ஒரு அநாதையாக வீதியில் இருந்து எடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளான். கிழக்கு இந்திய மாநிலமான பிகார் மாநிலத்தில் வளர்ப்பு நாயான Chhotu, ஊரில் சிலரைக் கடித்து அமைதியை குலைத்ததற்காகவும் சட்டத்தை மதிக்காமல் நடந்ததற்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், விலங்குரிமை அமைப்பினரின் உதவியுடன் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் கீழ் நீதிமன்றில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளது. Chhotu உண்மையில் பொதுமக்களை கடிக்கவில்லை என்றும்.. அது அதன் எஜமானி அம்மாவின் வீட்டுக்குள் நுழைய முனையும் கள்வர்களைத்தான் கடிக்கின்றது என்றும் கள்வர்களுக்கு உதவும் அயலவர்கள் பொறாமையில் சொல்வது போல அதற்கு விசர் பிடிக்கவில்லை…

  8. தொல்லியல்தலமான ஆதிச்சநல்லூர் கட்டுப்பாடு கேரளத்திடமா?ஆய்வறிஞர் பத்மநாபன் கடுங்கண்டனம் குமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்,ை சிதரால் (திருச்சாரணத்துமலை), திருநந்திக்கரை, பார்த்திபசேகரபுரம் ஆகிய தொல்லியல் மையங்கள் மத்திய அரசின் தொல்லியல்துறை திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலேயே உள்ளன. நெல்லை மாவட்டத்திலுள்ள பல தொல்லியல் தலங்கள் ஏற்கனவே திருச்சூர் அலுவலகத்தின் ஆதிக்கத்திலே தான் உள்ளன. திருப்புடைமருதூர் கோயில் திருப்பணி செய்ய திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டியுள்ளது. தொன்மை வாய்ந்த திருமலாபுரம் குடைவரைக்கோயிலில் தினசரி பூஜை நடத்த திருச்சூர் சென்று அனுமதி வாங்க வேண்டிய நிலை உள்ளது. இக்குடைவரைக் கோயிலில் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் தினமும் அபிஷேகமும், வ…

    • 1 reply
    • 1.7k views
  9. போதுமிந்த வாய்ப்பந்தல்! கோடியக்கரை பகுதியில் இரண்டு தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப் பட்டிருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டு களில் சுமார் 800க்கும் மேற்பட்ட மீனவர் களை சிங்களக் கடற்படையினர் சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். கடந்த இரண் டாண்டுகளில் மட்டும் கொல்லப் பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 250க்கும் மேல். தமிழக மீனவர்கள்மீது இலங்கை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்து வதும், கைது செய்து இழுத்துச் செல்வதும், படகுகளையும் மீன்பிடிக்கும் சாதனங்களையும் சேதப்படுத்துவதும் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வேடிக்கை என்னவென்றால், பல முறை இலங்கை இராணுவத்தினர் நமது எல்லைக்குள் வந்து மீனவர்களைத் தாக்கி இருக்கிறார்கள். ஹெலிகாப்டரில் வந்து சுட்ட சம்பவங்…

  10. அரசியல் கைதிகள் விடுதலைக்கான குழு அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டது இந்திய சிறைகளில் இருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான குழு ஒன்று அண்மையில் தொடங்கப்பட்டது. இக்குழுவின் அறிமுகக் கூட்டம் கடந்த சூலை 6, 2008 அன்று சென்னையில் நடைபெற்றது. இக்குழுவின் அகில இந்திய செயலாளர் நாயகமான வங்காளத்தைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான அமித் பட்டாச்சார்யா, துணைத் தலைவரான தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியரும், நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் பொடா நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவருமான பேரா. கிலானி ஆகியோர் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள…

  11. துருக்கியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 14 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று (27.07.2008) இரவு 22.00 மணியளவில் இஸ்தன்பூல் என்ற இடத்தில் இடம்பெற்றதாகவும், அங்கு 14 பேர் குண்டு வெடித்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும்,100 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவருகின்றது. மேலும் வாசிக்க............ http://www.tamilseythi.com/world/14-killed-in-Tyrkia.html

    • 0 replies
    • 640 views
  12. பெங்களுரில் 7 தொடர் குண்டு வெடிப்பு: 5 பலி! 20 பேர் காயம் வெள்ளி, 25 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] இந்தியாவின் பெங்களுர் மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை அடுத்து அடுத்து வெடித்த 7 குண்டு வெடிப்பில் பெண் ஒருவர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 20 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முதலாவது குண்டு பெங்களுரில் மதியம் 1.45 மணியளவில் ஒசூர் ரோட்டில் உள்ள மடிவாளா சோதனைச்சாவடி அருகே உள்ள போரம் மால் என்ற இடத்தில் முதல் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளிகளில் நாயந்தஹள்ளி, சிவாஜி நகர், கோரமங்களா-ஆடுகோடி, லாங்போர்ட்டவுன் உள்ளிட்ட 7 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. pathivu.co

    • 9 replies
    • 1.3k views
  13. வீரகேசரி நாளேடு - உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தையான லூஸி பிறவுண், தனது 30 ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை நாளை கொண்டாடுகிறார். உலகங்குமுள்ள மில்லியன்கணக்கான குழந்தைகளற்ற தம்பதியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் லூஸி பிறவுண், தனது கணவர் வெஸ்லி முலின்டர் மற்றும் 18 மாத குழந்தையான கமெரொன் ஆகியோருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் 1978 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இங்கிலாந்தின் ஓல்ட்ஹாமிலுள்ள மாவட்ட பொதுமருத்துவமனையில் பிறந்தார்.

  14. மன்மோகன் தப்பிப் பிழைப்பார்? இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பப் படுகிறது. இன்னும் சொற்ப வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இந்திரா காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

    • 20 replies
    • 2.5k views
  15. 2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக வெனிசுலாவின் டயானா மொண்டோஸா வீரகேசரி இணையம் 7/14/2008 10:20:16 AM - 2008 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக வெனிசுலா நாட்டின் இருபத்து இரண்டு வயதான டயானா மொண்டோஸா இன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

    • 22 replies
    • 3.3k views
  16. நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் அரசு வெற்றி வீரகேசரி நாளேடு 7ஃ22ஃ2008 7:58:42 Pஆ - இந்திய பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 275 வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஇ அரசின் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் வகையில் இன்று இரவு 7.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக 275 வாக்களும் எதிராக 256 வாக்குகளும் கிடைத்தன. இதனையடுத்து 19 வாக்குக்களினால் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு தப்பிப் பிழைத்தது. மொத்தமாக 531 உறுப்பினர்கள் இன்று வாக்களிப்பில…

    • 3 replies
    • 1.4k views
  17. நளினிக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த நீதிமன்றத்தில் கோரிக்கை மனு சமர்ப்பிப்பு: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு ஆதரவாகச் சென்னையில் திருவல்லிக்கேணியில் கூட்டம் ஒன்றை நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர்கள், ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் நளினி 17 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் நிலையில் அவரை விடுதலை செய்ய விடுதலை செய்ய மறுக்கப்பட்டு வருவதாக அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. இந்தநிலையில் நளினியை வி…

    • 0 replies
    • 588 views
  18. காங்கிரஸ் அரசுக்கு இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாடு எமனாக அமையுமா? இந்த உலகில் எதுவும் நிச்சயமில்லை. பொன் பொருள், பட்டம் பதவி, உற்றா உறவினர் எவரும் சதமில்லை. அதனால்தான் “காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே” என்று பட்டினத்து அடிகளார் பாடினார். வாழ்வு நிச்சயமில்லை என்பது அரசியலுக்கும் பொருந்தும். படை பட்டாளம் சூழ ஆட்சி செய்யும் அரசியல் தலைவர்கள் முடியும் குடையும் இழந்து ஒருகால் தெருவுக்கு வரலாம். 2004 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடந்த தேர்தலில் அதிக இருக்கைகளைக் கைப்பற்றிய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இடதுசாரிகளின் வெளி ஆதரவோடு ஆட்சிக் கட்டில் ஏறியது. இப்போது இடதுசாரிகள் காலை வாரிவிட்டதால் அதற்குக் கண்டம் ஏற்பட்டுள்ளது. வருகிற செவ்வாய்க்கிழமை (யூலை 22) நடை…

    • 6 replies
    • 1.1k views
  19. ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சாதுர்யமான காய்நகர்த்தலால் பந்தை அரசாங்கத்தின் பக்கம் நகர்த்தியுள்ளார்.ஒரு இக்கட்டான சூழ்நிலைய அரசாங்கத்திற்கு இதன் முலம் ஏற்படுத்தியுள்ளார். இவ்வறிக்கையின் பின் வெளிவிவகார அமைச்சர் பதில் அறிக்கைகளை வெளியிட்டு பிதற்றிக்கொண்டிருக்கிறார். பொருத்தமான நேரத்தில் வந்த தலைவரின் அறிவிப்பு. விஷேடமாக இந்திய தலைவர்களுக்கு சற்று தடுமாற்றத்தை உண்டாக்கலாம். இன்றைய நாளில் நடக்க இருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் தோற்றால் தேர்தல் நடைபெறும் வரை ஒரு இடைக்கால…

    • 0 replies
    • 1.1k views
  20. வாங்க எல்லாரும் அப்பவும் நினைச்சனான் தலைப்ப பாத்த உடண எல்லாரும் வருவிங்கள்னு..அட இப்படி எல்லாம் நான் அறிவிப்பு விடலப்பா இது இந்தியால ஒரு பொண்ணு அறிவிச்சு இருக்கு... பொண்ணுக்கு வயசு 22 அம் சன்டீஸ்கர் மாநிலமாம் 8 ம் வகுப்பு மட்டும் படிச்சுpருக்காம்... அப்பா தன்னோட செல்ல மகளுக்கு கல்யாணம் கட்டி கொடுக்க ஒரு சுயம்வரத்த ஏற்பாடு செய்து இருக்காராம்.. அந்த சுயம்வரத்தில பங்கேற்கும் மணமக்களிடம் தானாம் இந்த 5 கேள்விகளும் கேட்க படுமாம்... 5 கேள்விகளுக்குட யர் சரியாக பதில் அளிக்கிறாறோ அவர் தான் மாப்ஸ்ஸாம்... 5 அறிஞர்கள் முன்னிலையில தான் அந்த பொண்ணு நறுக்கின்னு 5 கேள்வி கேட்டகபோதாம்... சோ யாழ் களத்தில இருந்தும் இந்த சுயம்வரத்தில சின்னப்பு குமாரசாமி போன்ற இளையர்கள் இந…

    • 23 replies
    • 4.3k views
  21. டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்திற்குத் தேவையான எம்.பிக்களை பெற்றுள்ளதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. அதே சமயம், எதிரணியை விட 1 எம்.பியே காங்கிரஸ் கூட்டணிக்கு கூடுதலாக உள்ளதால் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே குழப்பம் தொடர்கிறது. இந் நிலையில் பாஜகவில் உள்ள 6 அதிருப்தி எம்பிக்கள், ஒரு பிஜூ ஜனதா தள எம்பி, 1 சிவ சேனை எம்பி மற்றும் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 11 பேர் வாக்களிக்கப் போவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்களின் கையில் தான் அரசின் எதி்ர்காலம் உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் திருப்பங்கள். அவர் இங்கே தாவுகிறார், இவர் அங்கே போகிறார் என்ற செய்திகள். யாருக்கு எத்தனை பேர் ஆதரவு என்பதில் நிலையில்லாத நிலை என டெல்லி வட்டா…

    • 0 replies
    • 565 views
  22. பயங்கரவாதிகள் தாக்குதலில் 9 இந்திய இராணுவத்தினர் பலி தாக்குதலுக்கு இலக்கான பேருந்து இந்தியாவின் நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் இந்திய இராணுவத்தினரில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீநகருக்கு வடக்கே இருக்கின்ற நர்பல் பகுதியில் துருப்புகளை ஏற்றி சென்ற பேருந்து குண்டு வெடிப்பில் சிக்கிய இச்சம்பவத்தில் மேலும் இருபத்து மூன்று பேர் காயம் அடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலர் ஆபத்தான நிலையில் இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு எந்த பிரிவினரும் இதுவரையில் உரிமை கோரவில்லை. சர்ச்சைக்குரிய காஷ்மீர் ப…

  23. டெல்லி: அரசுக்கு ஆதரவு தரும் எம்.பிக்களை திரட்டுவதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையாக திணறி வருகிறது. மாறாக, எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆதரவு கூடிக் கொண்டே போகிறது. இதனால் அரசு கவிழுமோ என்ற கவலையில் காங்கிரஸ் ஆழ்ந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் லோக்சபாவில் நடக்கப் போகும் நம்பிக்கை வாக்கெடுப்பு, அரசுக்கு முடிவுரை எழுதுமா அல்லது அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முன்னுரை எழுதுமா என்ற எதிர்பார்ப்பில், டெல்லி அரசியல் வட்டாரத்தில் தினசரி ஒரு பரபரப்பு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆதரவு எம்.பிக்களைத் திரட்டுவதில் காங்கிரஸ் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் படு மும்முரமாக உள்ளன. ஆரம்பத்தில் காங்கிரஸ்தான் படு தீவிரமாக எம்.பிக்களை இழுத்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது …

  24. நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்! தென்னாபிரிக்காவின் முன்னாள் அரசுத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான நெல்சன் மண்டேலா இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.தென்னாபிர

  25. மீனவர்கள் நலனுக்காகவும்,கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் ராமேஸ்வரத்தில் தனது தலைமையில் ஆர்ப்பாட்டம்நடக்குமென்று கடந்த வாரம் விஜயகாந்த் அறிவித்த போதே, மாவட்டத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டது. தவிர, ஆர்ப்பாட்டத்துக்கு முந்தைய நாள் வேதாரண்யத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால், ராமேஸ்வரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகள் மிகவும் சென்சிட்டிவ் நிலைக்கு மாற, அந்தச் சூழலில் விஜயகாந்த் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் முக்கியத்துவம் பெற்று விட்டது. ஆகவே,மத்திய-மாநில உளவுத்துறையினர் ராமேஸ்வரத்தில் குவிக்கப்பட்டு விஜயகாந்த் பேச்சு, மீனவர்களின் எழுச்சி, மக்களின் ஆதரவு, கூடிய கூட்டம் என அத்தனை நடவடிக்கைகளையும் வீடியோவில…

    • 13 replies
    • 2.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.