Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "சொந்தங்கள்" என்ற சொற்பதம் கழிவறைச் சேற்றுக்குள் புதைந்து ரொம்ப நாளாச்சு! அவர்களைத் தேடுவதைவிட என் வீட்டு குப்பைக் குழியில் நிறையவே கொட்டிக் கிடக்குது! சொல்லொன்று செயலொன்று... செய்ந்நன்றி மறந்தின்று... அவராடும் ஆட்டத்திற்கெல்லாம்..... ஆளும் நானில்லை... ஆடுகளமும் நானில்லை! ஆடிப்பார்க்க எனக்கும் ஆசைதான்! - ஆனால், அநியாயமாய்ப் போன அன்பென்ற ஒன்று, என்னோடு கூடிப்பிறந்ததாய்ப் பிதற்றுகின்றது இன்னும்! சொந்தமென்று ஒன்று என்னை ஓங்கி உதைத்து நான் வீழ்ந்தபோதும், நண்பனென்று சொல்லி உரிமையோடு என்னை தாங்கிப் பிடித்தது - நட்பு !!! என்னை நேசிக்கும் நட்புக்காய் உயிரையும் கொடுப்பேன்!!!!!!!!!!!!

  2. கொடி வணக்கம்! கவிதை: வாலி thanks-vikatan.com

    • 4 replies
    • 2.8k views
  3. செழுமலர் நிறைபொழில் சிதறிய திவலைகள் சொரிவது எனவிழி நீர்வழிய மெழுகெனும் குளிர்சுனை மலரது இதழ்களும் எழுமெழில் முகமதில் தீ பரவ தழுவிடு எனையென பருவமும் அவனிடம் கொலை கொலையென மனம்தான் அழிக்க எழுமிலை மறைகனி இதிலுறை பனிவிழும் எழிலுறும் வகையென இவளிருந்தாள் சொலுவென்ன குறையது சிறுவய துடையொரு சிலையெனும் வடிவெடு ஆரணங்கே கொலுவினி லிருஉரு உயிர்வர அருகினில் குறுநடை பழகிட வருமெனவே பொலபொலஎன உதிர் புதுவகை மலரெனும் பொலிவொடு இதழ்வழி மதுமினுங்க குலுங்கிடு மிவையென்ன கொடுமைகள் தருதென குடமிரு வளை யயல் கோபமிட்டான் அலைகடல்பெரியது அதைவிட இதுபெரும் அதிசய மலையுது நீரின்றியே மலையிடைஎழுமதி முகில்வரு மிடையினில் மகிழ்வென நீந்திடும் மதிகுலைய உலையிடு உயிரென ஊறிட…

  4. பள்ளிப்பருவத்திலே சித்திரம் வரைவதில் வாலி அவர்கள் மிகவும் முனைப்பாக இருந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஒவியத்தில் கரை தேர்ந்து இருந்தவர் ஓவியர் “மாலி”. அவரது தீவிரமான ரசிகரான இவருக்கு, பள்ளித் தோழன் பாபு என்பவன் ” வாலி ” என்னும் பெயர் சூட்டி ஓவியத்தில் மாலியைப் போலவே நீயும் ஒரு கலக்கு கலக்குவாய் என்று வாழ்த்தினானாம். அப்போது அவர் பாரதியாரின் ஒவியம் ஒன்றை வரைந்து அதன் கீழ் வாலி என்று கையொப்பமிட்டு அதைத் தனது தமிழ் வாத்தியாரிடம் காட்டினாராம். அதைப் பார்த்துப் பாராட்டிய தமிழ் வாத்தியார் “உனக்குத்தான் வாலில்லையே, அப்புறம் ஏன் வாலி என்று பெயர் சூட்டினாய்?” என்று கேட்டாராம். அதைக் கேட்ட சுற்றி நின்ற மாணவர்கள் சிரித்து விட்டார்களாம். அப்போது ஒரு துண்டுக் காகித…

  5. என் மகளே செங்கொடி....! *செங்கொடி* நீ செழித்து வேரூன்றி விழுதெறிந்து மானிட விடுதலையை வென்றிருக்க வேண்டிய வித்து நீ. ஏனடி பெண்ணே…? எரிந்தாய் நெருப்பில்….? அவசரப்பட்டு விட்டாய் மகளே..…! அண்ணன்களைக் காக்க நீ அணைத்த தீ அவர்களை வாழும்வரை வருத்தப்போகிற வலியல்லவா உனது தீ….! நீ வாழ்ந்திருக்க வேண்டியவள் வரலாறுகள் படைத்திருக்க வேண்டிய பலம் நீ. ஏனடி பெண்ணே….? இந்த அவசரம்….? உன்போல்வீரமும்மானிடப்பெறுமதியும்புரிந்தவர்கள் இவ்வுலகில்அதிகமில்லையடிமகளே…..! மாற்றங்கள் நிகழ உன்போன்ற மங்கையரும் மகனாரும் தேவையடி எங்களுக்கு….! அரசியல் புலிகளும் நரிகளும் உங்கள் உயிரில் தீமூட்டிக் கரியாக்கி வீர உரை நிகழ்த்தி இன்றோடு உன்ன…

    • 4 replies
    • 1.4k views
  6. இதுவா உங்கள் நியாயம்? ------------------------- உண்மையற்ற பொய்மையுலகே உன்னிடம் நேர்மையிருந்தால் எங்கள் உறவுகள் அழிந்திருப்பார்களா? அழிக்கப்படுமிந்த நிலையிது சரியா? எண்ணெயிருப்பதால் போராளிகள் எதுவுமற்றதால் பயங்கரவாதிகள் என்னதானோ உங்கள் நியாயம்! திரிப்பொலி வீழ்ந்தது போராட்டமாம் ஈழம் மீட்பது பயங்கரவாதமாம் நியாயமற்ற உலகிடமல்லவா துடியாய் துடித்து நீதியைக் கோரி எங்கள் தமிழினம் உலகிலலைந்தது எங்கள் அலைவுகள் என்றோ ஒருநாள் உங்களைக்கூடச் சுட்டெரிக்கலாம் அப்போதுகூடச் சுரண்டலைப் பற்றியே உங்கள் சிந்தனை அளக்க முனையலாம் ஆதிக்க சக்திகள் நிலைப்பதுமில்லை அன்னியராதிக்கம் நிற்பதுமில்லை அதுவரை நாங்கள் ஓய்வதுமில்லை. ஓய்வொன்றுவரலாம் உலகமழிந்திடில் …

    • 7 replies
    • 1.2k views
  7. ஊரெல்லாம் வீடுகள் இருந்தது வீடெல்லாம் மனிதர்கள் இருந்தார்கள் தேர்முட்டியில் ஆட்கள் இருந்தார்கள் திருவிழாக்களில் கூட்டம் இருந்தது. நாடுமாற நாங்கள் திசைமாறி வந்தோம். ஊரெல்லாம் வீடுகள் இருக்கிறது வீடுகள்தான் பாழ்பட்டுக் கிடக்கிறது சிலவீடுகள் கூரையில்லாது தவிக்கிறது சிலவீடுகள் சுவருடைந்து தவிக்கிறது சிலவீட்டில் காட்டாக்காலி வாழ்கிறது வேலிகள் இல்லாது வளவுகள் தவிக்கிறது துகில் போனபின் அது அம்மணமாய் துடிக்கிறது வாடகை கொடுத்துக் குடியிருந்தார் அப்பொழுது வருமானம் வேண்டிக் குடியிருக்கிறார் இப்பொழுது காலம் மாறி இருக்கிறது. கனடாவுக்கு கதைத்து முடிவெடுக்கிறார். ஆண்டவனைத் துாக்குவதற்கே ஆள்பிடிக்கப் அலைகிறார்கள். அகப்பட்டால் அவர் சகடையில் ஊர்வலம் …

  8. என் தொண்டைக்குழியில் இறங்க மறுக்கும் சோறு - எனக்கு தூக்குக் கயிற்றை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றது! நீதி தேவதையின் கண்களை... இப்பொழுதாவது, திறந்து விடுங்களேன்!!!! இல்லையெனில், மூவரோடு நால்வராய்... அவளையும் சேர்த்துத் தூக்கில் போடுங்கள்! அன்று, கண்ணகியின் கோபம் மதுரையை எரித்ததாம்!? இன்னும் நம்புகின்றோம்...!!! அது உண்மையோ... இல்லையோ....!!!??? நிச்சயமாக மீண்டும் எரிக்கும்!!! நீதியின் கூக்குரலும்... அழுகுரலும்!!!

    • 4 replies
    • 1.2k views
  9. ரசித்த சில குட்டிக் ஹைக்கூக் கவிதை வரிகளுக்குக் காட்சி கொடுத்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்தேன்... (வரிகளுக்குச் சொந்தக்காரரின் பெயரை மறக்காமல் இணைத்துள்ளேன் ) தொடரும்...

  10. காணும் காட்சியெல்லாம் கறைபடிந்த சிறைச்சுவர்கள் .கனவில் வருவதெல்லாம் அம்மா உன் கண்ணீர் கன்னங்கள். இதழால் ஈரம்செய்து நான் இனிக்கத் தந்த முத்தங்களை கண்ணீர் ஓடி ஓடி கரைத்தே விட்டதாம்மா? குழந்தைப் பருவத்தேநீ கொஞ்சி மகிழ்ந்த தெல்லாம்நினைவில் வந்துவந்துநிதமும் வதைக்குதாம்மா? பாசம் காட்டி என்னை - நடைபழக்கிய இடங்களெல்லாம் தீயாய் நினைவில் நின்றுமனதை கருக்குதாம்மா? கண்ணீராலும் கரையாதகவலைகள் கூடிக்கூடி - உன்நெஞ்சம் புண்ணாகநிதமும் வதைக்குதாம்மா? என்னம்மா நான் செய்ய? இரும்புக்கம்பிகளின் விலகாத பூட்டுகளால் என்னை விடுதலைசெய்துவிடமுடியாமல் இருக்கிறதே. பந்தம் பாசமெல்லாம் தூரத்தில் கிடந்தாலும் சொந்தம் என்று சொல்லிக்கொண்டு நீ சிறைக்கு வருவதால்தான்உறவுகள் …

  11. என்னடா வாழ்க்கையிது??????? அடிக்கடி வாயில வாற வார்த்தை இது! உண்மையில் அதுதான் உண்மை! ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை! என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில என் தலையிலதான் வந்து விழுகுது! நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ... எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!! தன் கதை வசனத்துக்கு... என் தலையில, தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை... இன்னும் தேடுகின்றேன் நான்! என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!! "கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்! உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்! சேர்த்துச் செய்துவிட்டு... நான் போகின்றேன் நரகத்துக்கு!!! இந்த உலகத்தில் வாழுவதைவிட நரகம் எவ்வளவோ மேல்!

    • 4 replies
    • 1.2k views
  12. சிங்களவன் உயிரணுவில் உதித்து.. சிங்களத்தி கருவறையில் வளர்ந்து அவள் முலை பிடித்து உணவருந்தி சிங்கள தேசத்தில் உருவானவன்..! ராஜபக்ச வம்ச வழியில்.. கோத்த பாய எனும் ராஜ கொலைஞனின் கொலைக் களத்தில் கோரம் செய்ய கற்றுக் கொண்டவன். தமிழ் பெண்கள் கற்பு எடுப்பு - பின் அவள் முலை அறுப்பு கோத்தாவின் கட்டளை...! பிசகாமல் அதை செய்து முடிப்பதே என் பிறவிக் கடன். முள்ளிவாய்க்கால் என் பயிற்சிக்களம்.. நந்திக்கடலில் எனக்கு பட்டமளிப்பு.. தமிழர் தலை கொய்து - அதில் பட்டம் பெற்றவன். பயங்கரவாதப் போர் முழக்கம்... கழுகுகள்.. மயில்கள்.. றகன்கள்.. பீனிக்ஸ்கள்.. எல்லாம் கைகோர்க்க.. சிங்கத்தின் கையால் புலி அழிப்பு அ…

  13. போறன் என்றோ ... போயிட்டு வாறன் என்றோ .. சொல்லிவிட்டுப் போகாத என் அண்ணன் அடிக்கடி வந்து நினைவில் நிக்கிறார்! அவரைப் பாத்தா ரெண்டு கேள்வி கேக்கோணும்; எண்டுதான் நான் நினைச்சிருந்தன்! -ஆனால் நேத்திரவு கூட கனவில வந்தவர்... என்னால ஒண்டுமே கேட்க முடியேல. சத்தியமாச் சொல்லப் போனால்.... அண்ணை செய்தது மெத்தச் சரி! ஏன் தெரியுமோ...!?? எங்கட சனத்தின்ர குணம் உங்களுக்குத் தெரியாதே? போறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டு படுத்திருப்பாங்கள்! போயிட்டுவாறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டுதான் படுத்திருப்பாங்கள்! என்னைப் பொறுத்தவரையில்........ அண்ணை எல்லாத்தையும் செய்திட்டார்! இதுக்குமேலயும் அந்த மனுஷனே வரோணும் உங்களுக…

    • 3 replies
    • 859 views
  14. என் கண்கள் கெட்டுவிட்டது எங்கே சூரியன். இன்றுகாலை அம்மாவுடனான தெலைபேசி உரையாடல். அவர்சொன்ன புதினத்திலொன்று கல்வளை கொடியேறிட்டுது கதைத்து முடித்ததும் என் குரங்கு எண்பதுகளிற்கு தாவியது கல்வளைப்பிள்ளையாரின் காற்றோட்ட மண்டபம் எங்கள் நண்பர் கூட்டம் என் கையிலோர் கரித்துண்டு கீறத்தொடங்கினேளன் சிலாபத்தில் தொடங்கி காங்கேசன்துறையில் வழைந்து மட்டக்கிளப்பில் நிறுத்தினேன். பக்கத்திலிருந்தவன் சொன்னான் அம்பாறையும் எங்கடைதான் அது முஸ்லிம்களிற்கு இது இன்னொருவன். அவங்களும் தமிழர்தானே அம்பாறையும் எங்கடைதான் அம்பாறைவரை வரைந்தேன் கதிர்காமமும் எங்கடைதானாம்.. இழுத்தான் இன்னொருத்தன். இப்போதைக்கு இது போதும் பிறகுபாக்கலாம். பண்டத்தெருப…

  15. பெண் மலர் தான் மலிவல்ல...?! பெண் மலர் தான் மலிவல்ல... சில்லறை வண்டுகள் ரீங்காரமிடும்போது , சில்லிட்டு உறையாமல் சிக்காமல் மீண்டு எழுந்தால்; பெண் மலர் தான் மலிவல்ல...! ஆப்பிள் தேவதைகள் தான் ... அழுகிப் போகாமல் காக்கும் வரை; சாக்லேட் தேவதைகள் தான் ... சாக்கடையில் நழுவாமல் தன்னைத் தானே காக்கும் வரை; பெண் மலர் தான் மலிவல்ல! ஆதாமின் முதுகெலும்பு ஏவாள் என்றால்... ஏவல்களில் தேய்ந்து போன பெண்ணியத்தின் முதுகெலும்பில் விரிசல்களை எண்ணக்கூட வராதொழிக்கும் ஆதாமை சட்டை செய்யாது விட்டு விடுதலையாகி சிட்டுப் போல் சிறகு விரித்து பறந்து திரிந்து ஊரில் பல…

    • 3 replies
    • 1.3k views
  16. பாம்பு !! உடைப்பெடுத்த ஆற்றைப் போல் பீறிட்டு எழும் ஆர்பரிப்புடன் என் முன்னே ஆடியது வரிகள் எல்லாம் அதன் தோலாக தோலெல்லாம் அதன் வரிகளாக நெளிந்து நெளிந்து சீறிக் கொண்டே ஆர்ப்பரித்தது இதிகாசங்கள் தம்மை ஏமாற்றிய தவிப்பு ஒரு கண்ணில், ஆயிரம் ஆயிரம் ஆண்டு கடந்தும் மனிதன் மீது மாறா வெஞ்சினம் அதன் மறு கண்ணில் தனக்கும் மனிசனுக்குமான தீர்க்க முடியா கணக்கை பாம்பு சொல்லியது ஒவ்வொரு வரியிலும் மனிதன் பெயர் வரும்போது வெறுப்புடன் துப்பியது பாம்பின் கால்கள் எல்லாம் நியாயம் கேட்டு வரலாறு முழுதும் நடந்து நடந்தே அழிந்து போனதாம்... அதன் காதுகள் மனிதனின் பம்மாத்து வாக்குறுதிகளால் அறுந்து விழுந்ததாம் ஏவாளுக்…

  17. Started by கவிதை,

    நான் கேட்டுத் தூங்கிய ஆராரிரோ பாட்டில், பாதிப் பாட்டை பாடி முடித்த... பாசத்தின் உருவம் அவர்! சரியெது பிழையெது எதுவும் தெரியாத பருவம், அம்மாவைத் தாண்டினாலும்..... என் அப்பாதான் எல்லை! கண்டிப்பும் தண்டிப்பும் இருந்தாலும், அன்பு அத்தனைக்கும் உறைவிடம் அங்கேதான்! அப்பாவின் கைபிடித்து நடைபயின்ற நேரங்களும், கல்லூரிவரை கவனித்த காலங்களும், இன்றுவரை கண்முன் காட்சிகளாய்... காலத்தால் அழியாத பாசங்களின் சாட்சிகள்! உயிரைக் கொடுத்து உருவாக்கி... தன் உயிரைக் கொடுத்தும் தன் உயிராய் எனை நினைத்து வளர்த்த... என் தெய்வத்துக்கு, என்ன கடன் பட்டேனோ? என்ன தவம் செய்வேனோ?? நாளைக்கு.... நானும் ஒரு அப்பா!!!

  18. Started by nedukkalapoovan,

    வரிப் புலிகள் வாழ்ந்த காலம்.. விறகு வெட்டி கட்டி கண்டி வீதி வழி நடுச்சாமம் தாண்டியும் பெண்டிர் கூட மிதித்து வைக்க ஓடிய வண்டிகள்.. யாழ் நகர் வந்து சேர செம்மணிப் பேய்கள் கூட அமைதி காத்தன...! வானரப் படைகள் வாழும் காலம்.. விறகுவெட்டியும் தூக்கில் தொங்குகிறான் மாற்றான் மனையாளொடு கட்டியணைத்தபடி. பெண்டிர் மிதிக்கா வண்டிகள் பெற்றோலில் ஓட பெற்றோர் ஓடுகிறார் அவர் பின் பிள்ளை ஓடிப் போயிடுவாளோ என்றே பதறியடித்தபடி. செம்மணிப் பேய்களை விஞ்சி.. கோத்தாவின் ஏவல் பிசாசுகள்.. கிறீஸ் பூதங்களாய் மகளிரை மட்டும் குறிவைத்து கருவறுக்கும் நிலை..! தமிழினம் ஈழத்தில் வேரறும் நிலை...! புட்டுக்கு தேங்காய்ப் பூவாய் இருந்த ச…

  19. எனக்கு என்னாயிற்று...? என்ன நடக்குது...? ஒன்றுமே புரியவில்லையே...! எல்லாமே வித்தியாசமாய்த் தெரிகிறது!! அனைத்துமே புரியாத புதிர்களாய்!!! சின்ன வயசில் ஓடி விளையாடிய போதும், நான் நன்றாகத்தான் விளையாடுவேனாம்; அம்மா சொன்னா...!? பள்ளிக்கூடத்தில படிக்கும் போதும், நன்றாகத்தான் படிப்பேனாம்; ஆசிரியர் சொன்னார்கள்...!? வேலை செய்யும் இடத்தில் கூட, நன்றாகத்தான் வேலை பார்க்கின்றேனாம்; எல்லாருமே சொல்கின்றார்கள்...!? எப்பவுமே சாதரணமாய்த்தான் இருப்பேன்... அது எனக்கே தெரியும்!? இப்படி எல்லாமே நன்றாகத்தானே இருக்கு!? அப்புறம் எனக்கேன் இந்தக் குழப்பம் ??? என்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் போதெல்லாம், எனக்குள் எந்தக் குழப்பமும் இல்லை…

  20. காதலித்துப்பார்........... தேன் கசக்கும் வேப் எண்ணை இனிக்கும் அம்மா சொல்வது காற்றில் பறக்கும் காதலி சொல்வது வேதவாக்காகும், கெட்டவனாய் ஊர் உலகத்துக்கு தெரிவாய் நல்லவன் வல்லவன் ஆவாய் உன் காதலிக்கு, பகல் இரவாகும் சூரியன் சுகமாகும் இரவு பகலாகும் நிலவு சுடும் நீ உன் காலில் எழும்பி நிற்க முடியாதவரை சொல்வாய் உன் சிரிப்பு என்னை பலவீனமாக்கி விட்டது என்று பலம் பெற மீண்டும் ஒரு முறை சிரியேன் என்பாய் உன் வங்கியில் இருப்புக் குறைய கதலியின் கண்ணில் வெறுப்புத் தெரியும் உன் மடியின் கனம் குறையும் அவளை தேடி இன்னுமொரு மடி வரும் வங்கியில் இருப்புடன் தெளிவான வானமாய் உன் மனம் இருந்திருந்தால் நீ இந்த சாக்கடைக்குள் வீழ்ந் திருக்கமாட்டாய…

  21. நிலவுக்கு விடைகொடுத்த பின்னும், தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்... கனவுகளும் வெறுங் கனவாகிப்போக, உன் நினைவுகளை மீட்டியபடி... வளர்ந்து தேயும் நிலவுகளோடு, அமாவாசையானது என் ஆசைகளும்!

  22. Started by ஆரதி,

    எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நண்பி ஒருவர் இமெயிலில் அனுப்பிய கவிதை ஒன்றை யாழ்களத்தில் பகிர்கின்றேன். ஈழமுரசு "நகைச்சுவை இரவு" நிகழ்வில்(06.08.2011) வாசிக்கப்பட்ட கவிதை ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெர…

  23. Started by சுபேஸ்,

    பிரிவு... நீயில்லாத நிமிடங்களில் ஒவ்வொரு நொடிகளும் எனைப்பிடித்துப் பெருஞ்சர்ப்பத்தைப்போல அணுவணுவாக விழுங்கிவிடுகின்றன காற்றில்லாத வெற்றிடமொன்றில் அடைத்து விடப்பட்டதுபோல நீயில்லாத கணங்களில் என் ஒவ்வொரு சுவாசங்களும் பெருஞ்ச்சுமையாய் இடம்பெறுகின்றன அருகேதானே இருக்கிறேன் என்று தொலைபேசியில் நீ சிணுங்கினாலும் சுடர் அணையும் சிறுகணத்தில் கனமாய் இறங்கும் இருளைப்போல சிலுவைகளாய்க் கனக்கின்றன நீயற்ற சிறு நொடிகளும் பிரிவு முடித்து உன் ஒவ்வொரு மீள்கையிலும் நீயற்ற நிமிடங்களின் வலிகளை அனுப்பிவிட்டு ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த தாயைப்போல ஒவ்வொரு தடவையும் பூரித்துப்போகிறது எனதுள்ளம் எல்லாப்பிரிவுகளின் முடிவிலும் இன்னமும் இன்னமும் பேரன்…

  24. Started by சுபேஸ்,

    பிரிவு பூக்கள் உதிரும்போது காம்புகள் அநாதையாகின்றன... ஒய்வு ஒவ்வொரு இறகையும் கோதிவிடுகையில் உதிர்ந்து போகிறது பறவையின் களைப்பு... கவலை துரத்தில் மைதானத்தில் புள்ளி புள்ளியாய் கால்பந்தாடும் சிறுவர்கள் யன்னலோரம் கவலைகளில் இளமையைத் தொலைத்துவிட்டு நான்.. மதம் எல்லா வீதிகளும் தொலைந்து போகின்றன நெடுஞ்சாலையில்... மரணம் ஒவ்வொரு மரணத்திலும் முற்றுப்பெறுகிறது காலம் எழுதிமுடித்த ஏதோ ஒரு அத்தியாயம்.. முயற்ச்சி மின்மினிகள் போராடுகின்றன இரவை எரித்துவிட.. மௌனம் காற்றின் சலனங்களில் கலைந்து போகிறது மரங்களின் மௌனம்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.