கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கார்த்திகைப் பூக்கள் உங்களுக்காய் பூத்து நிற்கும்.... கவிதை- இளங்கவி எங்கள் மக்களின் அவலத்தில் எங்கள் வீரர்களை மறந்தோமா..? மாவீரர் ஆகி விட்ட எங்கள் புலிகளை மறந்தோமா...? ஆழிப்பேரலை போல் அழித்தவண்ணம் வந்தவனை சிறு மண்மேடாய் நின்று தடுத்தவரை மறந்தோமா..? சுற்றிவிழும் எறிகனைகள் நெருப்பு கக்கிவரும் பீரங்கிகள் காற்றுப் போல் சன்னங்கள் கழுகு போட்ட கொத்தணிகள் கருக்கிவிடும் வாயுக்கள் பொஸ்பரசின் பொசுக்கல்கள் இத்தனையும் தாங்கி எரிமலையில் நின்றுகொன்டு தன்னுயிர் போக முதல் ஒவ்வொரு தமிழரையும் காத்த எங்கள் கருங்கல்லு மலைகலை கனவிலும் நாம் மறப்போமா...? வேங்கைகள் பலருடனும் வீழ்ந்த பல விரத்தளபதிகள்... எங்கள் மக்களுக்காய் மடிந்த இ…
-
- 0 replies
- 720 views
-
-
திருமணவாழ்த்து, அரங்கேற்ற விழா வாழ்த்து எங்காவது தமிழில் வாழத்து மடலாக எடுக்க முடியுமா? யாழ் இணைய கவிஞர்களே தமிழில் பொதுவான திருமணவாழ்த்துப்பா எழுதி இணையுங்களேன் இணைப்பவர்களுக்கு நன்றி.
-
- 3 replies
- 7.2k views
-
-
நம் தலைவன் வரவுக்குகாய் காத்திருப்போம் கவிதை - இளங்கவி தமிழினத்தின் இன அழிப்பின் உச்சமான இவ்வருடத்தில் வைகாசி பதினெட்டு; வழமைபோல் மகிழ்வின்று விடிகிறது..... உலகத்தின் குரலொன்று தமிழனுக்காய் ஒலிக்காதா; எனும் சின்னஞ்சிறு நம்பிக்கையில் காலை கடனுமின்றி கணனியை தட்டுகிறேன்..... அதிர்ச்சி செய்தியொன்றில்; என் அனைத்துலகும் இருள்கிறது...! ஆம்..! தளபதிகள் நால்வர் மண்ணுக்காய் மரணிப்பு...! பதைபதைக்கும் நெஞ்சுடனே நண்பனும் நானுமாய் பாராளமன்ற சதுக்கம் விரைகின்றோம்..... கையடக்கத் தொலைபேசியில் மறுபடியும் கவலையுடன் ஓர் செய்தி..... எம் தலைவனையும் கொன்றுவிட்டார் அவன் சடலமுமெடுத்துவிட்டார்..... ஆம்...! இதுதான் அச்செய்தி தமிழர் உலகெல்லாம்…
-
- 18 replies
- 4.4k views
-
-
எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே எங்களுக்காய் வாழ்ந்து எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே ! வணங்குகிறோம். சூரியனாய்ப் பிறப்பெடுத்துச் சுதந்திரத்தின் காவலனாய் கால்நூற்றாண்டையும் கடந்து காடும் மேடும் களவாழ்வுமென வாழ்வையும் உங்கள் வம்சத்தையும் எங்களுக்காய்த் தந்தவரே ! காலப் பெருநதியில் காணாமல் போகாமல் ஓயாமல் பாய்ந்த எரிமலையே ! காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள் அவதாரனின் துயரில் அனைத்தும் அசையவோ அடுத்து நகரவோ இயலாமல் போட்டு வைத்த பிணங்கள் போல் காலம் காப்பிடமின்றி அலைகிறது. வஞ்சம் கொன்றது எங்கள் வாழ்வைத் தின்றது இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க என்ன மர்மம் உள்ளதோ…..? வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல் இ…
-
- 0 replies
- 917 views
-
-
புலிகளுக்கு ஓய்வு கொடு, உன் கையை நீ உயர்த்து இளங்கவி- கவிதை கவலைகளை நீ நீக்கு உன் கடமைகளை நீ நோக்கு தமிழினத்தை கரை சேர்க்க துடுப்புகளை நீ தூக்கு... தோல்விகளா நீ பெற்றாய் நம் தலைவனிடம் எதை கற்றாய்..? தணலிலே எரிந்தால் தான் ஜொலிக்கும் தங்கமாய் உருப்பெறுவாய்... துவண்டுவிட நீ வாழை மரமா...? இல்லை.! இரும்பு தெறிக்கும் வீர மரம்..! உன் நிலத்தில் வாழ்வில்லையென்றால் என் நிலத்தில் உன் வாழ்விருக்கும்.... கலங்கரை விளக்கத்தால் உனக்கு வழிகாட்டத்தான் முடியும்... அந்தவழி தொடராவிட்டால் இருள்தானே உன் வாழ்வில் மிஞ்சும்... எடுத்த உன் ஆயுதத்தால் உன் வீரம் சொல்லி நின்றாய்... இப்போது உன் கடமை அகிம்சையில் உரிமை வென்றிடுவாய்.... இதை விட…
-
- 12 replies
- 2.6k views
-
-
பாடியவர்: 'தேனிசை" செல்லப்பா இசைத்தட்டு: காலம் எதிர்பார்த்த காலம் பாடலை கேட்க :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை.. சிங்களவன் குண்டு வீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்ல.. எங்கள் காட்டில் ஒரு குருவி - அதன் கூட்டில் கண்ணீர் அருவி (2) (சிங்களவன் குண்டு வீச்சிலே) குச்சிகளும் சிறகுகளும் கொண்டு செய்த கூடு குருவிக்கல்லோ தெரியும் அதை கட்டப்பட்ட பாடு.. நாலுபக்கம் எரியுதம்மா நெருப்பு நெருப்பின் நடுவில் அல்லோ குருவிகளின் இருப்பு! (சிங்களவன் குண்டு வீச்சிலே) இன்னும் குஞ்சு பொரிக்கவில்லை இரண்டு மூன்று முட்டை.. இறக்கை கொட்டி ஏங்கி ஏங்கி துடிக்குது பார் பெட்டை..!…
-
- 6 replies
- 2.7k views
-
-
என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நிச்சயம் கிடைக்கும் தானைத்தலைவன் கண்சிவப்பது என் இனத்தின் மீது சூரிய ஒளி பட்டொளியாய் வீசவே அன்னைபூமியின் மடியில் உறங்கும் பாலகர் மீது சத்தியம் மாய்ந்து விட்ட மழழைகள் மீது சத்தியம் மரணித்த மங்கையர் மீது சத்தியம் வித்துக்களை தந்த வீரத்தாய் மீது சத்தியம் பண்பாட்டின் பாட்டிகள்.பாட்டனார்மீது சத்தியம் மானம் காத்த மறவர் மீது சத்தியம் சகோதரி சகொதரன் மீது சத்தியம் என் இனமே என் சனமே கூடு சேரும் பறவைகளே நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும் அதுவும் தானைத் தலைவன் காலத்திலே என் இனமே என் சனமே பூக்கள் பூத்துக் குலுங்கும் தேனீக்கள் இசை பாடும் நெற்கதிர்கள்வரவேற்கும் தலயசைத்து முற்றத்து…
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரபாகரனைத் தொலைத்து விட்டுத் தேடிக்கொண்டிருக்கும் சிங்கள அரசே பிரபாகரனை உனக்கு நான் காட்டுகிறேன் உன் தடுப்பு முகாம்களின் முள் வேலிகளுக்கு மேலாய் சற்றே எட்டிப்பார். அங்கே தாய் தந்தையரை இழந்து பசியால் வாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையும் நாளைய பிரபாகரன்கள் அவர்கள் பொங்கி எழும் வேளையில் உன் ஆணவம் பிணமாகும் http://gkanthan.wordpress.com/index/eelam/where/
-
- 5 replies
- 9k views
-
-
உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை.... இளங்கவியின் - கவிதை..... முற்றத்தில் வேப்பம் பூ கோலமிட... வாசலுக்கு வெற்றிலைகள் மாலையிட... செம்பருத்தி பூ வருவொரை வரவேற்க ஆச்சியின் எடுப்பான வெளிப்பல்லு சொந்தங்களை அன்பாக வரவேற்ற.... எங்கள் அன்பான தமிழீழம் அழிந்து அடிமண்ணில் புதைந்ததுவே..... இடப்பெயர்வில் தொடங்கி பட்டினியில் தொடர்ந்து பயத்திலே வாழ்ந்து பாதியாய் செத்து; பின்னர் மீதியும் செத்த; மானமுள்ள தமிழினமாம்..! ;இன்று மண்ணோடு மண்ணாக மரணப் புதைகுழியில்.... கடைசிக் கதறலும் கயவனுக்கு கேட்கவில்லை கண்ணீரில் பல குழந்தை அவர்கட்கு காயமும் வலிக்கவில்லை ஆனாலும் தன் மரணம் ஏனென்றுதான் புரியவில்லை உயிருடன் உள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
-
என் தேசத்து உறவுகளே நாசமாகி கொண்டிருக்கும் -ஒரு நகரத்தின் குரல் இது இப்போ பேரம் பேசப் படுவது - அங்கே உயிர்களும் உடல்களும் நாடு விட்டு நாடு வந்து கூடு இழந்தவர் நாம் -பெரும் பாடு பட்டு நாம் வளர்த்த -நல் தேசியத்தில் பிறந்தவர் நாம் காடு வெட்டி களனி ஆக்கி -நெற் சுடு அடித்து வாழ்ந்தவர் நாம் -இப்போ அநாதியற்று இப்புமியிலே அனாதைகளாகி விட்டோம் - நம் தேசம் ஒன்றின் விடிவிக்காய் பாசங்களை தொலைத்தவர் நாம் கூடு இழந்த குருவிகள் போல் - இத் தெரு கோடியிலே கதறுகிறோம் காப்பரும் ஒபாமாவும் என்ன மகிந்கவின் கைப் பொம்மைகளா...? சிங்களவன் மகிந்கனுக்கு சின்ன வீடா எங்கள் மண் அடிக்கடி அங்கு வந்து ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாயிருந்தும் கண்ணிருந்தும் -…
-
- 0 replies
- 762 views
-
-
எங்கள் முகாரிகளே.. முரசுகளாக மாறும். மௌனித்துக் கொண்டவர்களே! இனிமேல் மனிதத்தைப்பற்றிப் பேசாதீர்கள். பேசினால் உங்கள் கருத்தைக் காவிவரும் மொழி களங்கப்பட்டுவிடும். எட்ட நின்று வேடிக்கை பார்த்துவிட்டு, ஆதாயம் உண்டென்றால் இனவாத அரசின் செயலை ஆதரித்து, இந்த இனஅழிப்பிற்கு, “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று முத்திரை குத்திவிட்டு முறுவலித்துக் கொள்ளுங்கள். இப்போது முகாரிகள் எங்கள் தேசியமொழியாகிக் கிடக்கிறது. வலியனை வாழ்த்துவது வழமையானதுதான்… நாங்கள்தான் முட்டாள்கள் போலும். எங்கள் ஒப்பாரிகள்…. உங்கள் செவிப்பறையில் மோத மானிடத் துடிப்புக் கொள்வீர்கள் என்று நம்பி, ஏமாந்து கொண்டிருக்கிறோம். எங்கள் பிள்ளையர்தான் எங்கள் வல்லமைகள்…
-
- 6 replies
- 1.8k views
-
-
தரணியில் தலை (குனிந்த) சிறந்த இராணுவம்....... வல்லரசு நாடுகள் அனைத்திலும் மானத்தை விற்று மண்டியிட்டு பொய்களை அவிட்டு விட்டு ஆயுதத்தையும் ஆள்பலத்தையும் அளவு கணக்கின்றிப் பெற்றுக் கொண்டு பயங்கர வாதத்தை ஒழிக்கிறோம் என வான் பிளக்க பரப்புரை செய்து கொண்டு ஒன்றும் அறியா அப்பாவி பொது மக்களை இரக்கம் இன்றி குலை குலையாக கொன்று குவித்துவிட்டு போர் விதி முறைகளை புதைகுழிக்குள் போட்டு புதைத்து விட்டு சில நாட்கில்; போர் முடியும் என சொல்லி பல மாதங்கள் தொடர்ந்து முட்டாள் தனமான ஆதாரங்கள் பல புனையப்பட்ட அப்பட்டமான பொய்யுடன் வெற்றி வாகை சுhடி நிற்கும் இராணுவமே தரணியில் தலை சிறந்த இராணுவம்
-
- 0 replies
- 1.5k views
-
-
அஞ்சலி அஞ்சலி கண்ணீர் அஞ்சலி மண் மீட்க புறப்பட்ட மாவீரருக்கு அஞ்சலி மாவீரராகிவிட்ட வன்னி மக்களுக்கு அஞ்சலி அஞ்சலி செலுத்தி கடன் முடிக்க அருகதை சிறிதும் எனக்கோ இல்லை தளபதிகளுக்கு என் தாள் பணிந்து அஞ்சலி இனம் தெரியாத உறவுக்கும் இளையோருக்கும் அஞ்சலி கருவறையில் உலகம்கானாத கண்மணிக்கு அஞ்சலி கருவாகி உருவாகி மண் மீது தவளாத பாலகருக்கு அஞ்சலி வீரப்பெண் போராளிகளுக்கு அஞ்சலி உணவின்றி குடிக்க நீரின்றி உடுத்திய உடைகளுடன் துஞ்சிய உயிர்களுக்கு அஞ்சலி வெறி கொண்ட படையின் தடையற்ற வல் வளைப்பில் அழுகுரலோடு கற்பழிந்த பெண்களுக்கு அஞ்சலி சித்திரவதையில் சிதைந்த இளையோருக்கு அஞ்சலி "பேரர்களுடன் சாகிறேன் "என்ற பாட்டி மார்களுக்கு அஞ்சலி இரவென்றும் …
-
- 6 replies
- 6k views
-
-
சூரியப்பேரொளியைச் சுற்றிக் காவியப்போராளிகள் வருவர் இயலாப்பொழுதின் புலர்வாய் ஒளிசொட்டிய சூரியக் கதிர்களுக்குள் இருள் முட்டி இதயம் முட்டி எதுவெனச்சொல்ல இயலாமல்…. எதை இழக்க எதை மறக்க ? எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை…. எல்லாம் முடிந்துவிட்டாற்போன பிரமை கண்ணுக்குள் வந்து மறையும் காட்சிகளாய் கடைசிக்கணங்களின் நுனியில் சாவின் நொடிகளை நுர்கின்றன…. சந்திப்புகள் சரித்திரக் கதைகள் சாதனைகளின் நீளமாய் ஒவ்வோர் நினைவும் முகமும் கலங்கிய விழிக்கனவோடு கரைந்து கரைந்து கடல் வற்றிக் காய்ந்து பாழங்கள் நிறையும் மயானக் காட்டின் நெடிலின் நுகர்வோடு கவிதையும் கடந்தகால நினைவுகளும் கசங்கிக் காற்றள்ள முன்னம் கடைசியாய் ஏவப்பட்ட …
-
- 0 replies
- 912 views
-
-
எல்லாம் இனிதே நடக்கிறது. இன்னும் சில மணிகளில் முற்றிலும் மயானமாகிவிடும் புகை மண்டலத்தினுள்ளிருந்து சிங்கக் கொடி உயரும் நிலத்தில் வீழ்ந்து இறந்துகொண்டிருப்பவர்கள் ஏலவே இறந்துபோனவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
-
- 4 replies
- 1.2k views
-
-
நாம் செய்த தியாகமெல்லாம் ஓட்டைக் குடத்தில் பால் தானா நாம் சிந்திய ரத்தமெல்லாம் கடலில் பெய்த மழை தானா நாம் பட்ட பாடெல்லாம் காற்றில் செதுக்கிய சிலை தானா நாம் கொண்ட நினைவெல்லாம் ஊமை கண்ட கனவு தானா நாம் எழுதிய மடலெல்லாம் தண்ணீரில் இட்ட கோலம் தானா நாம் போட்ட கூச்சலெல்லாம் செவிடன் காதில் ராகம் தானா நாம் அழுத அழுகையெல்லாம் தண்ணீரில் மீன்விட்ட கண்ணீர் தானா நாம் எல்லோரும் மொத்தத்தில் கவனிப்பார் அற்ற இனம் தானா http://gkanthan.wordpress.com/index/eelam/inam/
-
- 5 replies
- 1.7k views
-
-
கனத்த இதயம் இன்று கனத்த இதயத்துடன் கண்விழித்த எனக்கு, என் இதயம் அடிபட்டு நொந்து கிடப்பதையும், அதன் வலியையும் உணரக்கூடியதாக இருந்தது. எதுவரை இது தொடரப்போகிறது. ஈழத்தமிழனின் வலிமையை அழித்துத் துடைக்கவும், உலகத் தமிழனின் ஆற்றலை முடமாக்கவும் எங்கள் பிராந்திய வல்லரசு சிங்கள ஏகாதிபத்தியத்துடன் இணைந்து வித்தை காட்டிவிட்டது. இதையும் ஒரு சுனாமியாக உலகத் தமிழினம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் விசேடமாக இந்திய இலங்கையின் கூற்றுப்படி நாலாம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இந்த வல்லரசுகள் செய்த, செய்து கொண்டிருக்கும் திருவிளையாடல்களை மறைக்க இப்போதும் பிரபாகரனின் கதை என்னும் படம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்திற்கு நல்ல படம் காட்டிய அநேகர…
-
- 0 replies
- 1.7k views
-
-
முள்ளிவாய் வீரத்தின் உள்ளக் குமுறல்கள் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி உடுக்க உடையின்றி ஊனுக்கு மருந்தின்றி உள்ளம் ஒன்றே உறுதியென்று உயிரை தம் உடலுள் புதைத்து வாழ்ந்தால் மானத்துடன் வாழ்ந்திடுவோம் அஃதின்றேல் அழிந்திடுவோம் அரக்கன் சிங்களவன் உலகத்துணைகொண்டு நெருங்கி வந்து தடைகொண்ட ஆயுதத்தால் போர்விதி மீறி அழித்தபோது மௌனித்த இவ்வுலகில் வாழ்வென்னும் வளம் ஒன்று தேவைதானா? ஈழமது எங்கள் தேசம் அதில் சுதந்திரமா வாழ்வது தான் எங்கள் தாகம் இன்றேல் நீதியற்ற உலகத்திலே இதுவே நீதியற்ற விதியென்றால் எம்முயிரை மாய்ப்பது எங்கள் திண்ணம் முள்ளிவாய்தனில் எழு அழுவோசை காப்பாற்று காப்பாற்று எனும் அபயக்குரலெல்லாம் வானெழுந்து உலகமெல்லாம் ஒலித்தபோது …
-
- 1 reply
- 1.3k views
-
-
சத்தியம் செய்வோம் இந்த நாளிலே! ------------------------------------------------------ சுக்குநூறாக வெடித்துப் பறக்கும் இதயங்களான எம் தமிழ் உறவே துயரம் நிறைந்த இந்த நாட்களை எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்! மனிதாபிமானம் பேசிடும் உலகோ மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது தமிழர் குருதியில் கைகளை நனைத்து விருந்தினையுண்டு சிரித்து மகிழுது ! சிறுமை நிறைந்த சீரற்ற உலகை நம்பியதாலே எம் தாயகமிழந்தோம் தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம் உலகை நம்புதல் நன்மையல்லவே என்பதையல்லவா உலகு சொன்னது எம்மை நம்புவோம் தாயகம் மீட்க தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே ! கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !…
-
- 3 replies
- 1.1k views
-
-
கொடிய ஸ்ரீலங்கா அரச அதிபர் மஹிந்த என்று அழைக்கப்படும் அரக்கன் ராஜபக்ஷே விமானத்தில் இருந்து இறங்கி மண்ணை முத்தமிட்ட வேளையில் கால் தடுக்கி விழுந்தான். அவன் தனது இரத்தவெறியை அடையாளப்படுத்தும் முகமாக அணிதுள்ள அவனது சிவப்பு துண்டே அவனுக்கு தூக்கு கயிறாக மாறி அந்த இடத்தில மாண்டான். இறந்தது மஹிந்த இல்லை என்று அவன் உடன்பிறந்த இன வெறியன் கோதபாய DNA test பின்னர் தாம் அதை உறுதிபடுத்துவதாக இன்று லங்க புவத் செய்தி நிறுவனத்திற்கு அறிவித்தான். அரகர் கூட்டம் தமது ரத்த துளிகளில் இருந்து பெருகி வருவதாக புராணங்கள் கூறுகிறது .அதைபோல தான் புத்த மதத்தின் புனித மஹா வம்சம் கூறுகிறது.. இது எனது உடன் பிறப்பு இல்லை என்றும்..அவனை போல plastic surgery மூலம் முகம் மாற்றப்பட்ட யாரோ என்றும் கோதபாய அறி…
-
- 0 replies
- 2.4k views
-
-
எழுந்திருங்கள் எழுந்திருங்கள் சோர்வதற்கான நேரமல்ல இது உறுதி கொள்ளுங்கள் சபதமெடுங்கள் மரணித்துப்போன மாவீரர்கள் மீது மாண்டுபோன மக்களின் மீது அவர்களின் தியாகத்தின் மீது சபதமெடுத்துக்கொள்ளுங்கள் உயிருள்ளவரை தமிழீழம் காண உழைப்போமென்று போராடுவோமென்று அழுதது போதும் விம்மியது போதும் துடித்தது போதும் துவண்டது போதும் இழந்தது போதும் நம்பிக்கை இழக்காதீர்கள் தலை நிமிருங்கள் புலியாக மாறுங்கள்............. முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள் தமிழீழம் காணவேண்டும் இப்போது விட்டால் எப்போதும் இல்லை எம் விடிவு புறப்படுங்கள் நீதி கேளுங்கள் ஐநாவிடம் உலகநாடுகளிடம் பார்க்கவில்லையா? உணரவில்லையா? இவர்கள் என்ன செய்தார்களென்று எம்மினத்தை…
-
- 0 replies
- 2k views
-
-
இனி என்னிடம் கவிதைக்கான எந்த ஒரு இலக்கிய வார்த்தையும் மிச்சம் இல்லை என் வார்த்தைகள் பிண வாடையுடன் தான் இனி வரும் *************** எனது மகன் mc donalds MC chicken கேட்கின்றான் அவனது சகோதரங்கள் அரைவாசி எரிந்த உடலுடன் கிடக்கின்றார்கள் என்பதை அவன் அறிய நான் விடவில்லை தமிழ் குழந்தைகளின் இரத்தம் இனியது என்கின்றான் என் சிங்கள நண்பன் அவை உப்பு கரிப்பது இல்லையாம் நேற்றும் எதிரியின் பரம்பரை தமிழ் குழந்தையின் பிஞ்சு போன சதையின் வழி ஊறிய இரத்தத்தை குடித்த பின் சொன்னார்களாம் தமிழ் குழந்தையின் இரத்தம் அதிக யுத்த போதை ஊற்றும் என்று *************** என் மகன் pizza கேட்கின்றான் அவன் அறிய நான் விடவில்லை அவனின் அதே …
-
- 5 replies
- 1.4k views
-
-
உலகே உனக்கு கண் இல்லையா? என் இனமே நாம் போராடினால் தோற்றுபோகோம்.துரோகிகளின் துரோகத்தினால் அல்லவா எம் இனம் அழிந்துகொண்டிருக்கிறது. வீரபாண்டிய கட்டபோமனுகே ஒரு எட்டப்பன் இருக்கும் போது பதவிக்கும் பணத்துக்கும் விலை போகாத நம் தேசிய தலைவனுக்கு ஆயிரம் எட்டபர்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. யேசுவிற்கு கூட ஒரு யூதாஸ் துரோகிகளே இல்லாத வரலாறே இருக்காதா? கூட இருப்பவர்கள் தானே குழி பறிகிறார்கள் இறைவா இன்னுமா இவர்களை நீ பார்த்துக்கொண்டு இருக்கிறாய்? அழித்துவிடு அழிந்துகொண்டிருக்கும் எம் இனத்தை இவர்கள் இன்னமும் அழித்துக்கொண்டு இருக்கும் எம் இனத்தை அழிபவர்களை அழித்துவிடு எங்கள் போராளிகளே உங்கள் மனத்துணிவும் ஆற்றலும் எமக்க எம் சந்ததிக்காக நீங்கள் சிந்திய ஒவொரு து…
-
- 0 replies
- 6.5k views
-
-
அன்பின் நன்பர்களே, இது தோல்வியல்ல, சிறிய பின்னடைவு மட்டுமே, இது முடிவல்ல, ஒரு விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமே, நாங்கள் விழுந்தோம், ஆனால் மீண்டும் எழுவோம், நாங்கள் ஒன்றுபடுவோம், போராட்டத்தைத் தொடருவோம், களத்திற் சிந்திய ஈழத்தமிழர்களின் இரத்தத் துளிகளைக், கயவர்கள் கண்களில் இருந்து வழிய வைப்போம். தமிழர் தாகம், தமிழீழ தாயகம்.
-
- 0 replies
- 1.1k views
-