Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சமாதான உடன் படுக்கை கையெழுத்தான ஆரம்ப நாட்களில் எழுதிய கவிதை... மீண்டும் வராதோ குறைந்த பட்சம் அந்தச் சமாதானம் என்ற ஏக்கம் அடிக்கடி என்னுள் வந்து போகும்.... சிவன் வந்தான் சிவனோடு அவன் மகன் குகனும் வந்தான் மூத்தவன் கணபதியும் அன்னை பார்வதியும் பிறிதொரு நாள் வருவதாக சேதியும் வந்தது! "என்ன திடீர் விஜயம்...?" என்றேன் "நாட்டில் சமாதானமாமே... அது தான் சும்மா சுற்றிப் பார்க்க வந்தோம்" என்றான் குகன் மயலிறகால் காது குடைந்த வண்ணம்... "கழுத்தில் நஞ்சு கட்டியவர்கள் சுதந்திரமாக நடமாடலாமாமே... அதுதான் நானும் வந்தேன்" என்றான் நீலக் கழுத்தை தடவிய வண்ணம் சிவன்...! பாம்பு பல்லிளித்தது மயில் தோகைவிரித்து அழகு க…

    • 4 replies
    • 2k views
  2. எங்கும் எதிலும் தமிழோசை லண்டன் எதிரொலிக்கும் அந்த மணியோசை பொங்கும் தமிழ்ப்பாட்டின் இன்னோசை மனம் பூரித்துப் பாடுதம்மா என்னாசை சங்கம் வளர்த்த தமிழ் உலகமெங்கும் இங்கு தனிநடை போடுதம்மா வீறுகொண்டு சங்கக்குலவிளக்கை தமிழ்த்தாயை இந்த தலைநகர் பாடுதம்மா ஆவல் கொண்டு முருகன் கழுத்துக்கொரு மணியாரம் அவன் முன்னின்று பாடுதற்கு தேவாரம் நிறுமித்த நெஞ்சினிற்குப் புகழாரம் இந்த நேரத்தில் நான் இசைக்கும் தமிழாரம் ஆக்கத்திரைக் கடலும் தமிழ் ஒலிக்கும் அதில் ஆடிடும் மீன்களெல்லாம் தமிழ்ப்படிக்கும் தீர்த்தக்கரையில் பெண்கள் குரல் ஒலிக்கும் அது திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கும் எங்கும் எதிலும் தமிழோசை உலகம் முழுதும் சென்றான் தொழில் நடத்த…

  3. என்னைப் பிரிந்து நீ எங்கோ வாழ்கிறாய் இருந்தும் நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த மறுக்கிறது என் காதலின் நினைவு* உன்னோடு வாழ்ந்த காலத்தைவிட உன் நினைவுகளோடு வாழும் காலம்தான் அதிகம் என்றபோதும் என்னைக் கவலைப்பட விட்டதில்லை உன் ஞாபகங்கள் * எரிக்க மனமின்றித்தான் எரித்தேன் உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது என்னோடு எரிந்துவிட வேண்டும் என்பதற்க்காக * என் கவிதைகள் எல்லாமே சோகத்தோடு பிறப்பதால்த்தான் உன் கண்ணில் படமாலிருக்க என் கையாலே கொள்ளிவைத்து விடுகிறேன். * உன்னைச் சந்திக்கும் வரை உன் முகத்தை யார் யாரோ முகத்தில் தேடிப்பார்த்தேன் உன்னைப் பிரிந்த பின் என் முகத்தை யார் யாரிலோ தேடிப் பார்க்கிறேன் * தயவு செய்து என் பெயர…

  4. தமிழீழம் எங்கள் தேசம் தமிழீழம் எங்கள் தேசம் தமிழரென்று சொல்லி நாங்கள் தலை நிமிர்ந்த தேசம் தங்கத் தமிழன் தம்பி தன்னை தந்து நின்ற தேசம் தலைவன் வழியில் தமிழர் சென்று தலை நிமிர்ந்த தேசம் வித்தாகிய வேங்கைகளின் விளைநிலம் இத்தேசம் வரிப்புலியின் வீரமதில் பெருமை கொண்ட தேசம் (தமிழீழம் எங்கள் தேசம்) அன்னவயல் தானியங்கள் அருங்கனிமம் கொண்டு அலைகடலின் தாலாட்டில் அமைதிகொண்ட தேசம் இந்துமகா கடல்நடுவே இயற்கையன்னை பெற்ற இனியதிரு கோணமலை துறைமுகத்தின் தேசம் (தமிழீழம் எங்கள் தேசம்) எவ்வினமும் நம்மினமே எங்கள் மண்ணிலே! எம்மதமும் சம்மதமே எங்கள் நெஞ்சிலே! எங்கும்தமிழ் ஈழம் பெறும் வெற்றியென்பதே! என்றும் பெறும் தமிழீழம் வெற்றிவெற்றியே! (தமிழீழம் …

  5. கனவுகள் கற்பனைகள்! மனிதா கனவு கான் அது தான் உன்னால் முடியும். மனிதா கற்பனை செய் அதுவும் உன்னால் முடியும். எது எப்படியோ? இரண்டையும் கண்டுமட;டும் இருந்து விடாதே! அதனை செயற்படுத்து. அதுவும் உன்னால் தானே முடியும். விடியும் இரவு உள்ளவரை எதுவும் முடியும் முடியும்.

  6. Started by வர்ணன்,

    ஓடுமீன் ஓடுமோ....... உறுமீன் வருமோ.......... வாடி நிற்குமாம் கொக்கு.......... வயிறு காய காய! கூரிய முள்ளு தொண்டை............... கிழித்தால் - கொக்கும் செத்துபோகும்! ஏர் கொண்டு உழுத நிலமல்ல......... எலும்புகூடுகளின்மேல் எழுகின்ற பூமி... அத்திவாரத்தின் கீழிருந்து..... அவசரமாய் நீர் அதிர்ந்தால்....... அழிந்து போவது........... யாருமல்ல- நாமேதான்!! (இது மட்டுறுத்தினர் - யாழ்பிரியாவுக்கு)

  7. Started by Tamizhvaanam,

    ஆணிவேர் உலக தரத்தில் உண்மை சொல்ல தமிழை உயர்த்தும் புதிய திரைப்படம்! வன்னி நிலத்தை விழிகள் பருக அகிலம் போற்றும் ஈழத் திரைப்படம்! உடல் சுமக்கும் உயிர் விறைக்க இதயம் கனக்கும் ஈழத்துக் காட்சிகள்! பெயரிலே உறுதியும் திரைத்துளி பார்க்க இமைகள் துடிக்கும் போரின் சாட்சிகள்! உறவை தூக்கி நெஞ்சில் அணைக்க நெருப்பகை; கிழிக்கும் நிமிர்ந்த வேகம்! எதிரியின் பிடியில் தங்கை தவிக்க மூச்சை உடைக்கும் எரிமலைத் தாகம்! வலைக் கூட்டிலே குழந்தை சிரிக்க வலியில் துளிர்க்கும் இனிய காதல்! குரல் வளையை சுடுகுழல் ருசிக்க எதிரியை எரிக்கும் மருத்துவர் மோதல்! முள்ளும் மலரும் நெஞ்சத்தைக் கிள்ள உதிரிப் பூக்களின் …

  8. Started by amudhini,

    அதிகாலை வேளை அடிக்கப்பட்டது சிங்களவனுக்கு சாவு ஓலை சென்றன இரண்டு குண்டுகள் செத்தொழிந்தன சிங்கள மண்டுகள் பறக்குமா எம் வானில் உன் ஊர்தி பறந்தால் குறிக்கப்படும் உன் சாவு தேதி அழிப்பது எம் சிவம் அறியாது போனால் ஆவாய் நீ சவம் பறந்து திரும்பிய எம் புலிகளின் பாதம் பணிகிறேன்.

    • 4 replies
    • 1.4k views
  9. Started by வர்ணன்,

    வென்றால் சிரி.............. வெள்ளம் கால் நனைத்தால்..... சிரி............ முழங்கால்மேலது உயர்ந்தால்........... முற்றும்போனதென்று புலம்பு...! ஒண்டும் காணம் ... ஒண்டும்காணமென்றே அழு.,... ஏதும் நடந்தால்...... இடுப்பை குலுக்கி குலுக்கி........ என்னமோ பண்ணு...... நான் என்ன சொல்ல.......... சிலவிடத்தில்........ சத்தம் போட்டு அழுவதை விட... மெளனமாய் சிரிப்பது மேலாம்!

  10. வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! உன்னோட உயர்வுக்கு உன்னோட எழுத்து என்னோட உயர்வுக்கு என்னோட எழுத்து யார் எழுத்தையும் யாராலும் தடுக்க முடியாதடா யாரும் கெடுக்க முடியாதடா..! அடுத்தவன் வாயைப் பார்க்காம வாடா வாடா வந்து சுய ஆக்கமா எழுதிப் போடடா இது உன்னோட களமடா..! வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! அடுத்தவன் காக்காவை காவடியை தூக்கிப் போடடா …

  11. Started by kavi_ruban,

    'பூக்களைப் பறிக்காதே' என்கிறது எச்சரிக்கைப் பலகை! ஆனாலும் புற்றரை யெங்கிலும் பூக்களின் சிதறல்! காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர் பாவம் அதற்குப் படிக்கத் தெரியாது! ----இது ஒரு ஜப்பானியக் கவிதை...... எப்போதோ படித்தது....

  12. Started by Brammam,

    சுஜீத்ஜியின் முதல் கிப்பொப் இசைப் பேழை SINGLES (2005) இப்பொழுது இணையத்தில் தரவிறக்கக்கூடிய வாய்ப்புடன் வொய்ஸ் ரமிலில்!!! http://www.voicetamil.com/index.php?option...view&id=131

  13. குழந்தையாய் இருந்தபோது! கொப்பனை உரிச்சு வைச்சிருக்கிறான் என்றார்கள் சிரித்தேன்! கொம்மாவபோல் என்றார்கள் சினந்தேன்! சித்தப்பன் போல் என்றார்கள் நடந்தேன்! சுப்பர் ஸ்டார் என்றார்கள் ஏது செய்தபோதும் யாரோ போல் என்றார்கள். ஒரு போதும் என்னை அவர்களுக்கு நானாய் அடையாளம் தெரியவில்லை. வருடங்களின் பின் நாடு சென்றபோது விமான நிலையத்தில் காத்திருந்தார்கள் என் குழந்தையை ஓடிவந்து வாரி அணைத்தார்கள் - அட 'அப்படியே உன்ன மாரி இருக்கிறான்" என்றார்கள் ஆக அவன் "சுயமும்'' அழிந்து போயிற்று

    • 9 replies
    • 1.6k views
  14. i have attached video if u want i will attach some other video of che guvera ,i try to type in tamil editor if i copy and paste means it is showing some differentsymbol--watch in realpalayer che01.zip

    • 12 replies
    • 1.4k views
  15. Started by இனியவள்,

    மெழுகின் கண்ணீரில் திரியின் தியாகம் எந்தன் கண்ணீரில் என் காதலின் தியாகம் இனியவள்

  16. Started by இளவரசன்,

    தொல்லை பூவுக்கு சந்தோஷம் வண்டு மொய்ப்பதல், புல்லுக்கு சந்தோஷம் மாடு மேய்வதல், மண்ணுக்கு சந்தோஷம் மனிதன் விளையாடுவதால், மரத்துக்கு சந்தோஷம் காற்று வீசுவதால், காதலியே எனக்கு சந்தொஷம் உன்னை தொல்லை பண்ணுவதல்

  17. Started by இனியவள்,

    யாரோ உன் கவிதைக்கு கை தட்டுவது எனக்கும் கேக்கிறது ஆமாம் ; அது உன் காதல் கவிதை என்பதால் இனியவள்

  18. ''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' ''நிதர்சனத்திற்கு நன்றிகள் '' இரும்பு கரமதிலே இறுகி கிடந்தவனை அகிம்சை வாளெடுத்து எப்படி அறுத்து வந்தாய்...?? கம்பிச் சிறையினிலே கட்டுண்டு கிடந்தவனை தங்கு தடையின்றி எப்படி தப்பிக்க வைத்தாய்...?? தேதி குறித்தங்கு சாவு காத்திருக்க காலன் வர முன் எப்படி காத்து வந்தாய்..?? நினைத்து பார்க்கையிலே நெஞ்சு வியக்குதய்யா இத்தனை துணிவுணக்கு எப்படி வந்ததய்யா...?? ''நீதியின் முன்னாலே நிற்கின்ற நிதர்சனமே- உந்தன் பாதம் பணிந்தே யான் வணங்கி எழுகின்றேன்...'' ஈழ மைந்தனவன் இன்னுயிரை காத்தவரே காலம் புராவும் - உம்மை கையெடுத்து வணங்குகிறோம்... இதய மில்லாமல் இருக்கின்ற மனிதர் முன் மனிதத்த…

    • 3 replies
    • 1.4k views
  19. வர்ணங்கள் காட்டுகின்றாய் இருக்கும் இடம் கொண்டு படைத்தவன் பெருமையது பாரினில் அது மிகச்சிறப்பு உயிர் காக்கதந்த வரம் உத்தமனார் கொடுத்த நிறம் பகுத்தறிவு கொண்ட மானிடா....................... உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகின்றாய் சந்தர்ப்பம் கண்டு-நீயும் மாறுகின்றாய் பச்சோந்தி மனிதனாக...... நியாயமா?

  20. சாவுக்கு ஒரு தூது! சாவே சட்டென வந்தென்னை அணைத்துக் கொள் சகதி வாழ்க்கையில் தொலைந்திட விருப்பமில்லை மொட்டுக்களே உங்கள் குவிந்த உதடுகளை விரித்துப் புன்னகையுங்கள் பூப்பெய்திய பெண்களைப் பார்த்ததில்லையா? துடுப்பென இருசிறகு கக்கத்தில் கட்டிய பறவைகாள்! ஆகாய வீதியில் ஒன்று கூடுங்கள் மரணத்தின் முன்னால் ஒரு மகிழ்ச்சிக் கீதம் கேட்க வேண்டும் ஆங்காங்கே நரைத்த முடிகளை காட்டாது ஓடி மறையும் மேகங்களே... கறுப்புச் சாயம் பூசிக் கொள்ளுங்கள் மண்ணின் மார்புச் சேலை நனைக்க மழைவேண்டாமோ? அருமை நண்பர்களே அஞ்சலிக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள்! உங்களில் ஒருவன் பிரியப் போகின்றான்! கனவுப் பயிர் வளர்த்தவன் க…

  21. கண்ணீர் நொடிகள் - என்.சுரேஷ். சென்னை கல்யாணி கவரிங் கல்யாணி கவரிங் என்ற விளம்பரம் கேட்டு கவரிங் நகை வாங்கச் செல்லும் ஏழை கல்யாணி நிஜ நகைகளுக்காக ஏங்கிக் கலங்கும் நொடிகள்! விதவையாகிப்போன அந்த பூக்காரி அக்காவின் நினைவுகளும் கனவுகளும் மனதை குத்தும் நொடிகள்! காதலனும் காதலியும் பிரிந்த பின் சந்திக்க அவர்தம் கணவனுக்கும் மனைவிக்கும் முன் ஒருவருக்கொருவர் அறியாதவர்கள் போல் நடித்துத் துடித்த தவிப்பின் நொடிகள்! சொந்த இனத்தின் அழிவக் கண்டும் சட்டத்தால் வாய்ப்பூட்டிடப்பட்டும் அமைதியின் வேடத்தில் தவமிருக்கும் வீரத்தின் எழுச்சி எரிமலை கண்ணீரால் துடிக்கும் நொடிகள்! பட்டியலிட்டால் அடங்கா எத்தனை எத்தனை கண்ணீர…

    • 4 replies
    • 1.1k views
  22. சோற்றுக்கு வேண்டும் உலை சாப்பாட்டுக்கு வேண்டும் இலை உணவுண்பது ஒரு கலை காத்திருக்கிறது உனக்காக இலை இலையில் இருக்கின்றன இன்சுவைப்பதார்த்தங்கள் உலகினில் உயிர் வாழ உணவு முக்கயம் உணவு வேண்டுமெனும் உணர்வு முக்கியம் உணர்வென்பது உருவமற்றது உணவென்பது உருவமுள்ளது உருவமற்ற உணர்வின் தூண்டலால் உருவமுள்ள உணவையுண்டு உலகத்தில் உயிர் வாழ்வோழ்ம் இந்தக் கவிதைக்கு பாராட்டுக்கள் வரவேற்கப்படுகின்றன.

    • 7 replies
    • 1.4k views
  23. பாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களே............ நீங்கள் ஒடுக்கப்பட்ட நம் தமிழினத்திற்காக மண்ணிற்க்குள் புதைக்கப் பட்டு, விதைக்கப் பட்டவர்கள். நீங்கள் மண்ணிற்க்குள் புதைக்கப் படவில்லை நமது தாயகமெனும் கட்டிடத்திற்க்கு உறுதியான அத்திவாரமாக்கப் பட்டவர்கள். மண்ணிற்க்குள் விதைக்கப்பட்ட உங்களின் கனவுகள் எரிமலைகளாக குமுறிக்கொண்டிருக்கின்றன நாளை நிச்சயம் எரிமலைகள் வெடித்துச் சித்றும் அப்போது உங்கள் ஆசைகள் நிறைவேறும் உறங்குங்கள் அமைதியாக அதன்பின்பு

  24. Started by கந்தப்பு,

    மனிதா! - என்.சுரேஷ், சென்னை தமிழினத்தின் அழிவைக் கண்டு குருடனாக வாழ்வோன் உனக்கு கண்களெதற்கு? கைகுட்டையை உடையாய் அணியும் நடிகைகளின் சதையழகை கண்டதும் அவர்களோடு ஆடுவதாய் கனவு காண உறங்கச் செல்லும் மனிதா! உந்தன் சகோதரிகள் விதவைகளாகும் நிஜம் கண்டு எந்த உணர்ச்சியுமில்லையே உன்னிடம்? அன்பை மறந்த மனிதா! உணர்ச்சியும் உணர்வுமில்லாத ஒரே இடம் கல்லறை தானே? உனக்கிந்த பூமியிலென்ன வேலை நரகத்திற்கு ஓடிச்செல்! கனிவே இல்லாத மனிதா! உந்தன் இதயம் பாறைகளாயிருப்பின் அவைகளும் அழுதிருக்கும் பட்டினி மரணத்தால் ஆங்காங்கே சாகும் தமிழினத்தின் நிலை கண்டு! ஆனால் உன் இதயம் எதைக்கொண்டு தான் செய்துள்ளதோ? தமிழ் பேச வெட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.