கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
வெற்று காகிதம் .. ... நாட்களும் நகருகின்றன. நெருடும் நினைவுகளுடன் வாழ்க்கையும் நகருகின்றது. வண்ண எழத்துக்களாலும். கிறுக்கல்களாலும் வாழ்க்கையின் பக்கங்கள் நிரப்படுகின்றது. கற்பனையில் சில கவிதைகள் நினைவில் சில கவிதைகள் நிகழ்வில் சில கவிதைகள் என என்கை எழுகின்றது. நான் இழந்தவைகள் ஏதுவாயினும் எஞ்சியிருப்பது நம்பிக்கையே. அடி மனதில் அடுக்கடுக்காய் அலுமாரியில் அடுக்கிய புத்தகங்களாய் மீண்டும் புரட்டிப் படிக்க நினைத்தால் புண்பட்டு போகுது என் மனசு . நான் எங்கு சென்றாலும் துன்பங்களும் வேதனைகள் என் கழுத்தை நெரிக்கின்றான. எத்தனை பேரின் சொல் காயப…
-
- 0 replies
- 623 views
-
-
ஏய் சுதந்திரமே உன்னை எம்மால் தொட அகிம்சையாளும் முடியவில்லை ஆயுதத்தினாலும் முடியவில்லை ஆகவே வேண்டாம் நீ என ஒதுங்கிட முட்கம்பி அகதியல்ல புலம்பெயர் அகதி நாம்
-
- 1 reply
- 623 views
-
-
கார்முகில் திரை போட்டு வெண்பனி தூபம் இட மின்னல் தீபம் காட்ட சிங்காரமாய் தேரில் வீற்றிருக்கும் தேவதைக்கும் நாட்கணக்கில் தவமிருந்து வாரம் தோறும் பூஜை செய்து பூச்சரங்கள் மாலையாக்கி அர்ச்சனை செய்ய காத்திருக்கும் பக்தனுக்கும் உறவுகள் பலர் சேர்த்து வைத்து ஊர்வலமாய் கொண்டு செல்ல மங்கலமாய் நிறைவு பெரும் பந்தத்தின் ஆரம்பம் .
-
- 0 replies
- 623 views
-
-
என் இனமே! சாகாவரத்தோடு உயிர்போகும் ரணவலியையும் இலவசமாய்ப் பெற்ற இனம் எம் தமிழினம்! அதனால்தானோ என்னவோ, இன்னும் குற்றுயிராய்த் துடிக்கின்றது! கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் முன்தோன்றிய மூத்தகுடியாம் தமிழினம் என்பார்கள்! இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை -இன்னும் தலைகுனிந்தே நிற்கிறது அகதியாய்...வாடகை நிலத்தில் ! கட்டப்பொம்மனுக்கு ஒரு எட்டப்பன், பண்டாரவன்னியனுக்கு ஒரு காக்கைவன்னியன், கரிகாலனுக்கு ஒரு கருணா என தலைமுறையாய் தவறாது தொடரும் தமிழினத்தின் சாபக்கேடுகள்!!! காசுக்குக் காட்டிக்கொடுக்க ஒரு கூட்டம்! காரியத்துடன் காய்நகர்த்த இன்னொரு கூட்டம்!! கேவலமாய் இருக்கின்றது "தமிழன்" என்று சொல்ல!!! வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்ற…
-
- 0 replies
- 622 views
-
-
அன்பும் அறமும் சவப் பெட்டிக்குள் வைத்து அடைக்கப் பட்ட தினம்..! ******************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* காடுகள் கண்ணீர்விட்டு அழுத தினம்.. அதுவே தமிழன் செந்நீர் விட்டு மடிந்த தினம்! கூடுகள் பிய்த்தெறியப்பட்டு எமது குஞ்சுகள் ஆதரவின்றிக் கூக்குரல் இட்ட தினம்..! நாடுகள் பல ஒன்றுசேர்ந்து ஒ..நாய்கள்போல் நிம்மினத்தை வஞ்சகத்தால் அழித்த தினம்.. நம்.. பேடுகளின் சிறகுகள் நடுத்தெருவில் பெருச் சாளிகளால் சிதைக்கப் பட்ட தினம்..! முள்ளி வாய்க்கால் என்னும் களப்போரில் மூர்க்கப் புலிகள் வீர காவியம் ஆன தினம்..! கொள்ளிதனைக் கையில் ஏந்தி..வீதி வீதியாய் கொத்திவாய்ப் பிசாசுகள் கொடூரம் புரிந்த தினம்! அன்பும் அறமும…
-
- 1 reply
- 622 views
-
-
ஈழத் தமிழன் இன்று மறத்தமிழர் வீழ்ந்து போயினர் ஆயினும் தமிழரின் வீர சரித்திரமாயினர் வீரன் வீழ்ந்தாலும் வாழ்வான் பல தமிழர் அகதி ஆயினர் வரலாறில் யூதரும் அகதி தான் அகதி என்பது அகதியின் இழுக்கல்ல யார் அகதி ஆக்கினர் என உரத்து சொன்னால் பல தமிழர் மாண்டு போயினர் யாரேனும் காப்பார் என இறுதி வரை காத்திருந்து சிலர் எதிரியிடம் அகப்பட்டு மறைந்து போயினர் எல்லோருமே ஒருவகையில் சீரழிந்தனர் மேலும் பலர் வேறு வழியின்றி அடக்குமுறைக்குள் வாழப் பழகினர் மனித உரிமை பேசியோர் எல்லாம் தூர ஓடினர் சீனா காரன் பலம் கண்டு சிலர் எல்லாம் மறந்து சேர்ந்து வாழ்வோம் அடுத்த முறை அரசு அடிக்கும் வரை என்றனர் வெகு காலம அடிவாங்கி பழகிய இனம் சோழன்…
-
- 0 replies
- 620 views
-
-
காலை எழுந்தவுடன் email வாலைக் குமரியுடன் facebook சாலை முழுவதும் Mobile Talk மாலை முடியும் வரை Chit Chat மாலை முடிந்ததும் Work Hour Start பொய்யுரை எழுத Status Reports மெய்யுரை சொல்ல Company Reports பொய்யை மெய்யாக்க Status Call மெய்யை உறுதியாக்க Conference Call பொய்யும் மெய்யும் கலந்த Live Call டாகுமென்ட் எழுத Copy & Paste ப்ரோக்ராம் எழுத Cut & Paste மறந்ததைப் படிக்க E-Learning படிக்காமல் உறங்க Audio-Learning படித்ததை நினைவூட்ட Google Search கூடிப் பேச Conference Hall கூடாமல் பேச Coffee Break காதல் செய்ய Live Chat குறட்டை விட Training Session அரட்டை அடிக்க Lunch Break ஓசியில் திங்க Team Lunch தின்றதைச் செரிக்…
-
- 0 replies
- 619 views
-
-
காலத்தை வென்ற கவிஞன் விடுதலை நெருப்பில் குரல் எழுப்பிய புலவன் மலர்ந்தநாள். சுதந்திர சிறகடிற்பிற்காய் இயந்திரமாய் எழுதிய கவிஞன் மண்ணைப்பாட பிறந்தநாள். இவன் விற்பனை கவிஞனும் அல்ல கற்பனை கவிஞனும் அல்ல காலநதியில் கரைந்து போன கவிஞனும் அல்ல கூவி வந்த கந்தக துகள்களுக்குள்ளும் சாவு விழுந்த வலிகளுக்குள்ளும் மூசி மூசி வீசிய புயல்காற்று. இவன் காலத்தை வென்ற கவிஞன் ஈழயாகத்தை தமிழால் வளர்த்த அறிஞன் யாருக்கும் கொள்கையை விற்கா வியாசகன் யாதுக்கள் நிகழ்த்திய யாதனைகளை பாடிய பாவலன் தேசியத்தலைவனின் அண்ணனாய் மணணை நேசித்த சந்திரிகை. எப்படி ஜயா உமை மறப்போம் நீ பாடித்திரிந்த திசையை தேடிப்பார்க்கிறோம். விடியவில்லை விடுதலைராகம் கேட்கவில்லை மாறக நாற்…
-
- 0 replies
- 618 views
-
-
எழுதப்படாத ஓலைகள்! ------------------------------- எவருமே தழுவிக்கொள்ள மறந்த அந்த இரவுகளில் மரணம் மட்டும் மறக்காமல் எங்களைத் தழுவிக்கொண்டிருந்தது! தூரத்தே இருந்த சாக்குருவிகள் எங்கள் இழப்புகளிலும் பூபாளம் பாடிக்கொண்டிருந்தன! ........... ........... ........... ........... ........... அவை இப்போதும் பாடிக்கொண்டுதான் இருக்கின்றன! :0 முள்ளிவாய்க்காலில் சாவடைந்த அனைத்துப் போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்!
-
- 2 replies
- 618 views
-
-
ஆப்பிழுத்த குரங்கர்கள் - எங்கள் தமிழ்த்தேசம் தோர்க்குமென்று நினைப்பாரோ.!? அதனாலும் உறுதியொன்று நாம்கொள்ள இதுவாச்சு தக்க நேரம். பொன்னான பூமியிலே தமிழ்க் கண்ணான ஈழதேசம் - இன்று ஒப்பாரி ஓலமிட – ஆங்கே கொத்தணிக் குண்டெறிந்து கொல்கிறானே கோத்தபாயாக் குண்டர்கள். முண்டங்களாய் பிண்டங்களாய் - எம் தமிழன் அறுபட்ட மிருகம்போல அங்கங்கள் சிதறிப்போய்க் கிடக்கிறானே அவரொடு ஏதறியாப் பாலகரும் சாகிறதே கொத்துக் கொத்தாய்..!? தட்டி அதைக் கேட்பதற்கோ நிறுத்த அதைச் சொல்வதற்கோ நாதிகள் தாம் ஏதுமற்ற நிலையாச்சே இவ்வுலகில். அன்றென்றால்... பாரதமே படுகுழியுள் போகுமென்று பாக்கிஸ்த்தானாய்..! பங்…
-
- 0 replies
- 617 views
-
-
என்ன இப்படி குளிர்கிறது .. உச்சி முதல் பாதம் வரை .. சில மணித்துளி கழிந்து .. அனல் வெட்க்கை உடலை தின்னுது .. ஓ ..நான் இறந்து விட்டேனா .. அரப்பு வைத்து தலைமுழுகி .. பின்தான் எரித்தார்கள் போலும் .. ஒருவேளை என் சாம்மல் ஆவது .. தூன்மையா இருக்கட்டும் என்றா .. மரணம் கூட சுத்தபத்தம் பார்க்கும் ஆ.
-
- 0 replies
- 616 views
-
-
பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது... ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து... வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது... பயங்கரவாதம்..! இருந்தும்... மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே.... மனிதனை இயந்திரம் கொன்றால் "Just war"..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம் இது..! ஏவி விட்டு தூர இருந்து கொன்று விட்டால் இல்லை இல்லை.. ஊரையே அழித்திட்டால் சாட்சியும் இல்லை குற்றவாளியும் இல்லை அழுவதற்க…
-
- 0 replies
- 616 views
-
-
வாசல்களில் மரணத்தின் வரவுகளை கணக்கு வைத்திருந்த கணப்பொழுதுகள் அவை . முன்பெல்லாம் உறவுகள்கூடி உடலம் சுமந்து மயானம் செல்வோம், ஊரே மயானமாகிப்போக இறுதிக்கடன் மட்டுமல்ல இறுதியாய் கண்ணீர்கூட விடாமல் உடலங்களை கடந்த தினங்கள் அவை. எங்காவது எமக்காய் எம் குழந்தைகளுக்காய் எம் உறவுகளுக்காய் ஒரு குரலாவது ஒலிக்காதா என்று ஏங்கிக்கிடந்தோம். கரகரத்த குரலாவது ஒலிக்கும் என்று முனுங்கிக்கிடந்தோம். காற்றும் கடலும் வானும் எண்திசைகளும் எரிந்தன எரிகுண்டுகளாலும் எறிகுண்டுகளாலும், உடலங்களை கண்ட நாய்களும் நரிகளும் இன்னபிற விலங்குகளும் அஞ்சியோடின, அப்போதும் வலிகளோடு ஏங்கித்தான்கிடந்தோம். எதிலியாகி நடந்தோம். அறிந்தவன் நீ எரிந்துபோனாய். தோழனே முத்துக்குமார் !!!! நீ மூட்டியது…
-
- 5 replies
- 616 views
-
-
மீள்குடியேற்றம் மீண்டும் அகதியாய் ! கோடைகாலச் சூரியனால் உறிஞ்சப்பட்ட ஆழக்கடலின் கரைகளின் பாழங்களாய் வாழ்ந்திருந்த வீடும் வழியறிவித்த தெருக்களும் வடிவு தந்த பச்சைய மரங்களும் எட்டும் தூரம் வரையும் எதுவுமில்லாத் தரைமட்டமாய்…. சுடுகாட்டு வாசம் நாசியில் முட்டித் தொண்டைக்குள் உறைகிறது…. ஊர் திரும்பிய மகிழ்வு உதிர்ந்து கருக மீளவும் தடையரணில் கால்கள் தடையிடப்படுகிறது….. போரின் கோரம் மேமாதத்து நிகழ்வின் மீதமாய் பெருநிலம் முழுவதும் யாருமற்றுப் போன பின்னும் நிழல் இறக்கித் தலைவிரித்துத் தாண்டவ நெருப்போடு காத்திருக்கும் கனம் இன்னும் மீதமாய் குடியேற்றம் ஆயுதங்கள் நடுவே அமுலாகிறது…… *மீள்குடியேற்றம்* மீண்டும் நிவாரணம் வரிசை நிம…
-
- 0 replies
- 615 views
-
-
வரலாற்றில் எங்களை அவர்கள் அரக்கன்கள்களாக சித்திரித்தனர் எங்கள் வரைபடத்திலும் எங்கள் கதைகளிலும் இருளை நிரப்பி தீபாவளி என்றனர் எங்களை அடக்கி எங்களை ஒடுக்கி எங்கள் அசுரர்கள் என்றழைத்து தாங்கள் செய்தனர் மாபெரும் அநீயை எங்கள் இனத்தை அழிக்க மகிந்த நடத்திய மனிதாபிமானப் போரைப்போலவே வீரன் என்றும் தர்மத்தின் தலைவன் என்றும் மகிந்த மார்தட்டுவதைப் போலவே வல்லமைகளைப் பயன்படுத்தி அதிகாரங்களை பயன்படுத்தி மக்களை கொடுமைப்படுத்துபவர்கள் கொல்பவர்கள்தான் அரக்கர்களாம்... அப்படி என்றால் எம்மை வதம் செய்து எம்மை கொன்று எம் இரத்தம் குடித்து சதை தின்று பேய்க் கூத்தாடுபவர்கள்தான் அரக்கர்கள் அந்த அரக்கர்கள் இன்னும் அழியவில்லை எங்கள் மண்ணில் இன்னும் எந்த ஒளியுமில்லை http://gl…
-
- 0 replies
- 615 views
-
-
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்... பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் ... படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்... அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் .... அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் .... பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் .... மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் ..... பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் ... முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் .... வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதென…
-
- 0 replies
- 615 views
-
-
மலையகத்துக்கு மலை முகடுகளின் தகரக் கொட்டைகளிடை மாடி வீட்டு மகன்.. கருங்கற் பாறைகள் துளைக்க நடக்கும் அந்தப் பாதணியற்ற கால்களிடை சொகுசுப் பாதணி போட்ட மகன்.. தேயிலை தடவி வரும் குளிர்காற்றில்.. அன்னைத் தமிழின் வாசனை மங்குமோ.. மறக்குமோ ஏக்கங்களிடை சிங்களமே என் மேன்மை..பேசிய மகன்.. நெடித்து நெளிந்து வீசிய சுழற் பந்துகளிடை கோணலின் கோணத்தில் வீசிய தூஸ்ரா மகன்... மகிந்த மாமாவின்.. கோத்தா அங்கிளின் சுறாக்களிடை வளர்ந்து நின்ற செல்லக் கிளி மகன்.. சொந்த அன்னை நித்தமும் தொழுது சென்ற செல்வ விநாயகன் முன்னிடை தொழாது பள்ளியும் பன்சலையும் தொழுத மகன்.. …
-
- 1 reply
- 615 views
-
-
எனது மண் முற்றத்து பலாக்கனிகள் முகம்மலர்ந்து வரவேற்க செம்பாட்டான் மாங்கனிகள் அசைந் தசைந்து தலையாட்ட தோடை எலுமிச்சை கிணற்றடியில் சுற்றிநிற்க தொங்கும் துலாவிற்கு முள்முருங்கை தோள்கொடுக்க வாழைகள் கூடி நின்று வம்சத்தை நினைவு சொல்ல வாசலில் தென்னைமரம் வாவென்று எனை அழைக்க மந்திகள் கூட்டமாக மாமரத்தில் விளையாட கொம்புத் தேனீக்கள் கூட்டமாய் அதைக் கலைக்க கொய்யாவும் மாதுளையும் குலுங்கிக் கூத்தாட உழுந்தும் பயறும் வயலெங்கும் படர்ந்து நிற்க நெல்மூடை வாசலிலே விருந்தினரை வரவேற்க மாலைக் கதிரொளிகள் மரத்தோப்பினில் ஊடுருவ கொத்திப் புரட்டிய கோடரி மண்வெட்டி கொல்லைப் புறத்தங்கே. தோள்சாய்த்து ஓய்வெடுக்க நானும் அமைதியாய் என் குடிலில் த…
-
- 2 replies
- 614 views
-
-
முள்ளிவாய்க்காலுடன் முடிந்தது ஆண்டுகள் நான்கு மனிதம் தொலைந்து மானுடத்தின் மரணவீடானது. கொத்தணிக் குண்டுகள் கொட்டிய மழையில் கொத்துக் கொத்தாய் உடல்கள் மட்டுமா வீழ்ந்தது ? முற்று முழுதாய்த் தமிழினம் முகம் தொலைத்த நாளது மூடர்கள் மூட்டிய தீயினில் முழுவதும் எரிந்து போனது மொத்தமும் இழந்து மூளிகளாக்கி முழுதும் அழித்து மீண்டது சொத்து சுகங்கள் சொந்தம் எல்லாம் எதிரிக்கென்றானது ஊர் இழந்து உறவுகள் இழந்து உடைமைகளும் தானிழந்து ஒப்பாரி ஒன்றே ஊர்முழுதும் கேட்கும் ஒலியானது சிங்களன் மூட்டிய சிதையின் நடுவே சித்தம் கலங்க சிதைந்து அன்றோ போனது சீருடன் வாழ்ந்த வாழ்வு வீடிழந்து வீதி இழந்து வேர்களுடன் விழுதுகள் இழந்து ஓடிவிளையாடிய ஊரிழந்து கூடிக் களித்த உறவுகள் இழந்து கொட்டும் …
-
- 3 replies
- 614 views
-
-
காலம் கனிகிறது நேரம் நெருங்குகிறது நெருப்பு வைத்தவர் நெஞ்சேறி மிதிக்கவென பற்ற வைக்கக் குச்சி கொடுத்தவர் படம் காட்டி எம்மை பதற வைக்கிறார் எமக்காக அவர் ஏதேதோ செய்கிறார் ஏக்கத்துடன் நாம் பார்த்திருக்கிறோம் எம் பெண்களை எப்படி வதைத்தார் துணி களைந்து துடிக்க வைத்தார் நிர்க்கதியாக்கி நெரித்துக் கொன்றார் ஆவிதுடிக்க அந்தரிக்க அத்தனை வதைகளும் எம்மவருக்கு எத்தர்கள் செய்தார் அத்தனையும் நாம் பார்த்திருக்கிறோம் அழுதுவிட்டுக் காத்திருக்கின்றோம் இன்னும் எத்தனை படங்கள் போடுவார் ??? எதிரியை எப்போ சிக்க வைப்பார் ???? நீதிமன்றின் முன் நிக்க வைப்பார் ???? எத்தனை கேள்விகள் எம்மிடம் உண்டு ஆயினும் மற்றவன் எமக்காய் எல்லாம் செய்வதை மானம் கெட்டுப் பார்த்திருக்கின்றோம் ந…
-
- 4 replies
- 614 views
-
-
இரு வேறுபட்ட இல்லத்தில் .... பிறந்து ஒரு வேறுபாடும் .... தெரியாமல் வாழ்வது ... நல் இல்லறம் ....!!! ஆயிரம் கிளைநதிகள் .... சங்கமிப்பது சமுத்திரத்தில் .... ஆயிரம் எண்ணங்கள் .... சங்கமிப்பது , வாழ்வது.... நல் இல்லறம் ....!!! + கே இனியவன் இல்லறக்கவிதைகள்
-
- 3 replies
- 614 views
-
-
http://inioru.com/?p=37023 ஆதாரங்களை அழி சேதாரங்களை துடை துயிலுமில்லங்களைக் கிளறு நடுகற்களை நாசமாக்கு வாசனைத்திரவியங்களைத் தெளி நாற்றத்தை மறை வருக வருக ஆசியாவின் அதிசயத்தை பார்க்க வந்த அம்மையே வருக நான்காண்டுக்குப் பிறகு நாடு பார்க்கவந்துள்ளார் வருக கொத்தாகக் குண்டு போட்டு குற்றுயிராய் குறையுயிராய் அக்கினிக் காட்டிடை கிடந்து நாம் துடிக்கையிலே பன்றிக்கு பால் கொடுத்த பரசிவனாரும் வரவில்லை பாரம் சுமப்பவரே வாருமென்ற பரமபிதாவும் வரவில்லை அயலவனும் அடுத்தவனும் அழித்தவனுக்கே வழி மொழிந்தனர் அம்மையே ஆண்டு நாலு போய் திங்கள் மூன்று ஆனபின் இப்போதாகிலும் வந்துள்ளீர்கள் பிணம் புணரும் தேசம் உங்களை வரவேற்கிறது கண்ணீரும் ரத்தமும் காய்ந்துவிட்டதென்ற நம்பிக்கையுடன் வந்திருப்பீர்கள் வந்து பா…
-
- 0 replies
- 614 views
-
-
"வீரத் தமிழ் மகன்" ரவிச்சந்திரனே உனக்கு எம் வீர வணக்கங்கள்" ஈழ தமிழருக்காக சத்திய பிழம்பாய் சாவினை ஏந்திய மறத் தமிழ் மைந்தனே உந்தன் மேனி தழுவி மெய் மறந்து விம்மிட நெஞ்சம் கனக்கிறது கடல் தடுக்கிறது உன் தேகம் எரித்த காற்று இந்த துயர் சொல்லி போயிட்டு குண்டுக்கும் கருகாத எம் கானகங்கள் கூட இன்று சோபையிழந்து கிடக்கிறது வீர மகனே !!! வேங்கையின் பிறப்பே !!! ஈழ மண்ணின் விடிவில் உந்தனுக்கொர் நீண்ட இடமுண்டு. நிம்மதியாய் சென்றுவா மகனே-இன்று தலைவராய் காமராஜர்கள் எவருமில்லை இந்த காங்கிரசில் காந்தி இல்லை நேரு இல்லை ஏன் தமிழ் காக்க என்று பேச்சுக்கு தானும் ஒரு தலைவன் இல்லை மகிந்தவின் காசுக்காக ஒருவன் …
-
- 0 replies
- 613 views
-
-
-
[size=4]நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு.. நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்.. உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ.. துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ.. என் உயிரை நீ அழிக்கலாம், உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...[/size]
-
- 3 replies
- 612 views
-