கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பாரதியார்: என்னையா.. என்ன.. ஏமம் சாமத்தில் பாரதி பாரதி என்று என்ன சத்தம்?! (முறுக்கு மீசை துடிக்க, கண்கள் சிவப்பேற நின்றுகொண்டிருந்தான் பாரதி.) சோழியான்: பாரதியாரே! நீர் எழுதிய பாட்டொன்றை எடுத்துவிடும்.. அந்த மெட்டுக்கு நான் ஒரு பாட்டெழுத ஆசை.. பாரதியார்: யோவ்.. அதுக்கொரு நேரம் காலம் கிடையாதா? சோழியான்: நேரம் காலம் பார்த்தா எழுதும் ஆர்வம் வரும்.. இப்போது வந்திருக்கு.. பாடுகிறீரா.. அல்லது வேறு யாராவது கவிஞரை அழைக்கவா? பாரதியார்: சரி.. பாடுகிறேன்.. ஒருமுறைதான் பாடுவேன்.. சோழியான்: சரி.. பாடும்.. பாரதியார்: தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன் தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழம் கொண்டு வருவான் - பாதி த…
-
- 46 replies
- 5.4k views
-
-
அம்மா நீ அழுதுவிடும் - உனது கண்ணீர் துளியால் எனது ! கல்லறையும் உருகுது - அம்மா! அன்று நான் மண்ணில் புரண்டு' விளையாடும் காலம் - என்னை ! மடியில் துக்கி அழகு பார்ப்பாய் - அம்மா ! இன்று நான் மண்ணுக்குள்ளேயே மடிந்து கிடப்பதைக்கண்டு-உனது மனம்படும் வேதனை எனக்கு புரிகின்றது அம்மா ! விடுதலை வீரனின் வித்துக்கள் ஒருபோதும் வீண்போகாது - அம்மா ! உனது விழிநீரை துடைத்து வீடு செல்லம்மா - மன்னிக்கவும் - அகதி முகாமில் உள்ள உனது ! கூடாரதுக்கு செல்லம்மா ! எமது வீடுசெல்லும் - காலம் விரைவில் வரும்,அம்மா !!!!!!!!!!
-
- 11 replies
- 1.2k views
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் ம…
-
- 3 replies
- 1k views
-
-
மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள் காற்றாய் வருகிறாய் தேசக்கனலாய் திரிகிறாய்…! காற்றலையின் இளையெங்கும் கவிதையாய் வாழ்கிறாய்…! ஊற்றாய் இசையின் மூச்சாய் உலகெங்கும் உலவித் திரிகிறாய்….! எங்கள் காதுகளில் உன் கானம் தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..! ‘மேஜர் சிட்டுவாய்’ தமிழ் வாழும் உலகெங்கும் தமிழிசை வாழும் திசையெங்கும் தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..! அரும்பு மீசைக்கனவறுத்து ஆழ்மனக் காதல் நினைவறுத்து ஈழக்காதல் இதயத்தில் சுமந்து இலட்சியக்கனவோடு போன புலியே….! வருவாயொரு பொழுது மீண்டும் பாடியும் பகிடிகள் விட்டும் பல கதைகள் பேசியும் கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….! இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு மீள…
-
- 11 replies
- 890 views
-
-
http://inioru.com/?p=37023 ஆதாரங்களை அழி சேதாரங்களை துடை துயிலுமில்லங்களைக் கிளறு நடுகற்களை நாசமாக்கு வாசனைத்திரவியங்களைத் தெளி நாற்றத்தை மறை வருக வருக ஆசியாவின் அதிசயத்தை பார்க்க வந்த அம்மையே வருக நான்காண்டுக்குப் பிறகு நாடு பார்க்கவந்துள்ளார் வருக கொத்தாகக் குண்டு போட்டு குற்றுயிராய் குறையுயிராய் அக்கினிக் காட்டிடை கிடந்து நாம் துடிக்கையிலே பன்றிக்கு பால் கொடுத்த பரசிவனாரும் வரவில்லை பாரம் சுமப்பவரே வாருமென்ற பரமபிதாவும் வரவில்லை அயலவனும் அடுத்தவனும் அழித்தவனுக்கே வழி மொழிந்தனர் அம்மையே ஆண்டு நாலு போய் திங்கள் மூன்று ஆனபின் இப்போதாகிலும் வந்துள்ளீர்கள் பிணம் புணரும் தேசம் உங்களை வரவேற்கிறது கண்ணீரும் ரத்தமும் காய்ந்துவிட்டதென்ற நம்பிக்கையுடன் வந்திருப்பீர்கள் வந்து பா…
-
- 0 replies
- 611 views
-
-
இது சித்திரக் கவிகளில் நான்கரைச் சக்கரம் வகையைச் சேர்ந்தது. எனது முதல் முயற்சி... வேதியன் மகவே வேய்தோள் உருவே வேல்விழி கனிவே வேரிப்பூ நறவே வேட்டம் புகவே வேகுதடி நினைவே வேரில்லா வாழ்வே வேண்டும் விடிவே வேதியன் - வேதம் ஓதுபவன்; மகவே - மகளே; வேய்தோள் - மூங்கில் தோள்; வேரிப்பூ - மதுரை மகளிர் கற்காலத்தில் சூடும் ஒரு மலர் நறவே - நறு மணம்; வேட்டம் - வேட்கை; விளக்கம் : வேதியன் மகளே!! மூங்கில்போல் தோள் கொண்டவளே!! வேல் விழிகளில் கனிவைக் கொண்டவளே!! வேரிப்பூ நறுமணம் கொண்டவளே !! உன்னை நினைக்கவே என் மனதில் காதல் வேட்கை புகுகிறது. அந்த வேட்கையால் உடல் வேகிறது. வேரில்லாமல் இருக்கும் மரம்போல் உயிரில்லாமல் உள்ளதடி வாழ்க்கை. இதற்கு விடிவே கிடையாதா!!
-
- 13 replies
- 1.2k views
-
-
தாயகவிடுதலைக்கனவோடு சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்! சட்டென்று போனானே… சிறகு முளைக்கும் முன்னால்! பாடல்கள் பல தந்து நின்றவன் – மண்ணின் தேவைகள் சில முந்த… தன் காதலையும் தேடலையும், தனியாக ராகம் பாட விட்டவன், தான் காதலித்த மண்ணுக்காய்… சிட்டாய்ப் பறந்து போனானே பாடலோடு! வந்த பகை நின்று முறிக்க, இடையிடை புகுந்தவன்… தன் வாழ்வினை விடை கொடுத்து… வந்தானே பாடையோடு! நீ தந்த ராகங்களும் பாடல்களும்… சிறுநாக்காய்…. எம் தொண்டைக் குழியில் இன்னும், அவ்வப்போது அலறி இசைக்கும்! – ஆனால் உன்னினிமை ராகம் கேட்க... நீ வரணும் மீண்டும் சிட்டாய்! உறுதியாய் ஒன்றுமட்டும்…. எம் தாகம் தீரும்வரை… உன் ராகம் ஓயாது! உன் ராகமும் தாளமும் இன்ற…
-
- 4 replies
- 810 views
-
-
நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது குறியீடுகளால் குறியிடமுடியாத ஒன்றிணைவு. காலம் கரங்களை தரும். கரங்களுள் காணமல் போவது மனதின் சுரங்களை பொறுத்தது. நண்பனை பெற்றுக்கொள்ளுதல் என்பது வரலாறுகளால் வரையப்படாத அனுபவக்கீறல். இடங்கள் நெருக்கங்களை தரும். நெருக்கங்களுள் நெகிழ்ந்து போவது நேசிப்பின் வேர்களை பொறுத்தது. ஒரு நண்பன் ஒரு பறவையைப்போல ஒரு மழையைப்போல ஒரு புலர்வைப்போல ஒரு நல்ல வாசனையைப்போல நெருங்க வேண்டும். அவனின் நட்பு மாலையாக இருக்கவேண்டும் கழுத்தில் நீண்ட மனவெளிகளை.... நீண்ட மௌனங்களை......... பயமுறுத்தும் சில பொழுதுகளை........ ஒதுக்கும் சில சடங்குகளை..... கடக்க உதவியும், முயன்றும் பாருங்கள் நண்பனின் கரம் பற்றி. எப்போதும், நல்ல நண்பன…
-
- 10 replies
- 909 views
-
-
ஆனந்த புரத்தில் எழுதப்பட்டது.. ************************************* புற நானூற்றின் புதிய பக்கம்.! ********************************** மு.வே.யோகேஸ்வரன் ************************** சுடச் சுட எழுந்தனர் புலிகள் .. சுற்றிவர நின்று .. 'படப் பட'வென்று பொழிந்தது ராணுவம்.. விழ விழ எழுந்தனர் வீரர்..! ஆனந்த புரமா அது ?..இல்லை... இலங்கை அரசின் தானென்ற அகங்காரத்தை தகர்த்த மண்! வானிறங்கி வந்து மேகங்கள் மழை பொழிவதுபோல்.. குண்டுமழை நடுவே.. புறநானூற்றின் புதிய பக்கமொன்றை பொறித்த மண்.! முன்னூறு மூர்க்கப் புலிகள் தளபதிகள்..சுற்றிவரப் 'பெட்டிகட்டி'.. விண்ணோரும் போற்றும் வீரத் தலைவனை காக்கப் போர்புரிந்து.. கருந்தீயைக் கக்கும் 'பொஸ்ப…
-
- 4 replies
- 758 views
-
-
முன்னர் சகாறா அக்காவின் ஒரு திரியில் எனது கவிதைகளை காட்சிகளுடன் பகிர்ந்தேன்...ஆனால் அங்கு பகிர்ந்த ஒன்றையும் காணவில்லை..எல்லாம் தொலைந்துவிட்டன..அவற்றின் பிரதிகளும் என்னிடம் இல்லை...அதனால் அதன் பின்னர் எழுதியவற்றை இந்த புதிய திரியினூடு பகிர்கிறேன்... அலுப்பூட்டும் உரையாடல்களில் இருந்தும், மனிதச் சுமைகளில் இருந்தும் இலக்கியம்களும்,இயற்கையின் பாடல்களும், குழந்தைகளுமே மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன....மனதை அதன்வழியில் பேசவிட்டு வழிந்த மொழிகளை நெஞ்சுக்கு இனிமையை தந்த இந்த படங்களினூடு இங்கு பகிர்கிறேன்...மொழிக் குமிழிகள் உடைந்து சிந்திய என் கவிதைக்குழந்தையின் காலடித்தடங்களின் சுவடுகளை மீட்டிப்பார்க்கிறேன் இந்த திரியினூடு.. படித்துவிட்டு யாரோ சிந்தும் கண்ணீர்த் துளிக…
-
- 38 replies
- 3.4k views
-
-
-
மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா ஆளுனர் தலையசைத்தால்தான் மூத்திரமே பெய்யலாம் கோவணம் இறுக்குவதற்கும் கொழும்பில்தான் அனுமதியாம் போக்கறுந்த சபைக்கு பொலீஸ் அதிகாரமும் இல்லை கந்தறுந்த ஆட்சியால் காணியும் இல்லை நீதிமான் சொல்கிறார் மாகாண …
-
- 0 replies
- 466 views
-
-
நன்றாகவே தலையாட்ட பழகிக்கொண்டு விட்டனர் அல்லது, பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர். எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன எங்கள் பிரச்சனைகள் தீர்க்க முடியாதவையல்ல தீர்க்கப்பட விரும்பாதவை. இன்றைய கால முதற்பிரச்சனை தலையாட்டல், எந்தப்பக்கம் எந்தக்கணத்தில் எதற்காக தலையாட்டுகிறார்கள் என்பதை எந்தப்பக்கம் இந்தக்கணத்தில் அந்த தலையாட்டாலால் பிழைத்துப்போகிறது என்பதனை உணர்ந்துகொள்ள முயன்று தோற்றுப்போவதில் ஆரம்பிக்கிறது இன்றைய பிரச்சனை. எங்களது பிரச்சனைகள் பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை தலையாட்டுபவர்களுக்கு. எமக்கு பிரச்சனைகள் இருக்கின்றன.... நீர் நிலம் வளம் என ஒவ்வொன்றிலும், இனம் மொழி பரம்பல் என ஒவ்வொன்றிலும், கொடூரமாக கொல்லப்பட…
-
- 7 replies
- 709 views
-
-
மக்கள் எழுபத்து ஏழில் தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர் தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுளே காப்பாற்றவேண்டும் என்றார் வேறுவழியில்லை கைகளில் ஆயுதம் நாங்கள் அடித்தால் அடிவாங்க பயந்தாங்கோழிகளோ மகாத்மாக்களோ இல்லை அடித்தார் திருப்பி அடித்தோம் அடித்தவரில் குற்றம் சொல்லா உலகு திருப்பி அடித்தவரில் எங்ஙனம் குற்றம் காண்பது? எங்கள் கைகளை மட்டும் கட்டி எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது முதுகை குறிவைத்தது இயங்கிய உடல் ஓயலாம் போராட்ட ஆத்மா சாகாது அடிமைத்தனத்தை ஏற்காது நீறு பூத்த நெருப்பாய் விடுதலை தாகம் இருக்கும் ஒரு நாள் தீரும்
-
- 2 replies
- 509 views
-
-
1.1. செய்யுளும் கவிதையும் யாப்பு என்பது கட்டும் நியதி. யாத்தல் என்பது பிணித்தல், புனைதல். யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பு. எழுத்தும் அசையும் சீரும் தளையும் தொடுத்து அடிகளில் ஒருசேரக் கட்டிப் பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். செய்யுள் என்பது செய்யப் படுவது. பத்தியும் பாட்டும் காவியம் உரையும் செய்யுள் என்பதன் பிரதி பதங்களே. கவிதை என்பது கவினுற விதைத்தல். பாட்டு என்பது பாடப் படுவது. செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த மாலை போலச் சொற்கள் விரவி சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். மாலையின் நுகர்ச்சி மணமே போலச் செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம். மாலையின் ஊடகம் அதன்நார் என்றால் செய்ய…
-
- 2 replies
- 2.2k views
-
-
Defending Tamils is Tamils’ responsibility Saturday, 02 May 2009 21:02 administrator -When - When Sri Lankan state unleashed its hate, World failed to defend Tamils’ fate. When they killed without hesitation, World stood still in hallucination. When they sent us on boats to the North, World looked at us as refugees of no worth. When the Tsunami swallowed our families, World treated us like we were anomalies. When we saw murders with heart full of terror, World looked in its rearview mirror. When those devils did the slaughter, World let Tamil lives become shorter. When we stood-up peacefully against Racists, World …
-
- 1 reply
- 1.4k views
-
-
நேற்றுவரை ஒன்றாய் வாழ்ந்தவரை, வீரச்சாவு என கேட்கும் கணங்கள் மனம் பிழிந்து சாறாகும் நிமிடங்கள் அவர் உறவுகளை காணும் நிமிடத்துளிகள் உலகில் யாருக்குமே வரக்கூடாது எங்கள் பணிகளுக்குள் உறவுகளுக்கு ஆறுதல் சொல்லி இறுதி நிகழ்வை நடாத்தி எல்லோரும் போன பின் துயிலும் இல்லத்தில் இருந்து நாங்கள் அழுவோம் சிலர் ஊமையாய் அழுவர் சிலர் ஒப்பாரி வைப்பர் சிலர் சாமம் தாண்டியும் மண்ணில் வீழ்ந்துகிடப்பர் கூடி அழுதவரை இன்னொருநாள் விதைத்துவிட்டு எஞ்சியவர் துடித்து அழுவோம் யாரும் குறிப்பெடுக்கா சோகம்
-
- 5 replies
- 703 views
-
-
காடுகளில் வாழத்தொடங்கும் வரை காடுகளின் சொர்க்கம் தெரிந்திருக்கவில்லை வீடும் சுற்றமும் அற்பமாய் போயிற்று காடுகளில் வாழும்வரை இன்று கலைந்த கூட்டில் தாயை தேடும் குஞ்சுகளாய் காடற்று வாழும் வாழ்வு காடுகளில் தவழும் இசையை கேட்க மனம் மீண்டும் மீண்டும் துள்ளும் பாலுக்கு அழும் குழந்தையைப்போல காடுகள் அபாயமானவை பழகாதவனுக்கு காடுகள் அதிசயம் நேசிப்பவனுக்கு ஊர்வாழ்க்கை சீனி/சர்க்கரை காட்டுவாழ்க்கை தேன் காட்டினுள் மிருகங்கள் குளம் நாடிவரும் அழகு வேட்டையால் சிதறும் கொடுமை அழகிய ஊரில் கிபீர் இரைச்சலுடன் குண்டு வீசுவது போல கொடும் வெயிலிலும் குளிர்மையை பரிசளிக்கும் காடு (யுத்த) காட்டுத்தீயால் வெந்தது கூடி வாழ்ந்த உறவுகளுடன் க…
-
- 8 replies
- 5.1k views
-
-
விடிவைத் தேடிப் பாதளக் குழிக்குள் முடிவை நாடிச் செல்வது போல் ஏதுமில்லா மாகாண சபை போதுமென்பார் இருக்கையிலே தமிழிங்கு வாழு மோடி - தோழி எம் கலையிங்கு தேறு மோடி சூத்திரத் தமிழன் ஆளக்கூடாது எனச் சாத்திரம் பேசிச் சதி செய்யும் ஆத்திர ஆரியர்கள் இங்கிருக்கையில் தமிழ்தான் வளருமோடி தோழி எம் கலைதான் மிளிருமோடி பெருவிளக்காயிருந்து பெருந்தியாகம் புரிந்து எமக்காக அணைந்த மாவீரர்க்கு ஒரு விளக்கேற்ற ஒற்றுமை இல்லாத போது தமிழை வளர விடுவாரோடி தோழி எம் கலையை ஒளிர விடுவாரோடி வந்தாரை வாழவைப்பது பண்பாடடி வந்தேறிய தெலுங்கனையும் கன்னடத்தியையும் ஆளவைத்து அடிமையாய் இருப்பது இளிச்சவாய்த்தனமடி தோழி கையாலாகக் கூட்டமடி நம்மை நாம் ஆள வேண்டுமடி நம் மொழியோடு க…
-
- 4 replies
- 572 views
-
-
துப்பாக்கி விழுங்கிய நரிகள் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் உயிர்களையும் பாராளுமன்றத்தில் குழிதோண்டி புதைத்த பயத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் இம்முறை ஊருக்கு வரும்போது துப்பாக்கி விழுங்கிய நரிகளை கூட்டி வந்தார் அவரது நரிகள் அமெரிக்க இராணுவம் போல ஊரெல்லாம் ஓடின முதலில் ஒரு எருமைமாடு நரிகளுடன் ஸ்நேகம் கொண்டது நரிகள் தாமரை மலர்களால் தேய்த்து எருமை மாட்டை சேற்றிலே நீராட்டின வாய்பார்த்திருந்த கழுதையையும் நரிகள் வாசசவர்க்காரம் பூசி குளிப்பாட்டின ஊர்நாய்களுக்கு குறிஞ்சியின் உரியை கற்றுக் கொடுத்தன ஆடுகளுடன் கட்டிப்பிடித்தவாறு பகல்தூக்கம் போட்டன மாடுகளுக்கு புண்ணாக்கு ஊட்டி விட்டன ரௌடிக் காளைகளுக்கு மதநீர் கொடுத்தன நரிகளை எ…
-
- 3 replies
- 965 views
-
-
Seelan Ithayachandran கைபேசி மூலமாக 5 மணி நேரம் முன்பு: · இருள் கொஞ்சம் அதிகம்தான் : ச.நித்தியானந்தன் நோவேதுமில்லாத மூன்றாம் கட்ட பயணம் போவோமா புதையுண்டு சாவோமா…! மீண்டும் கலர் கலராய் தோரணங்கள் வடக்கு வீதியில் சின்ன மேளம் கிழக்கே மேளச் சமா தெற்கே காவடி மேற்கே கச்சான் கடைகளென தேர்தல் திருவிழா அரிதாரம் பூசியவர்களின் அணிவகுப்பு வானத்தை வில்லாய் வளைப்பவர்களாகவும் விடுதலையை வென்று தருபவராகவும் சிலர் ஒருபடி மேலே போய் தாயகத்தை தோண்டி பெருவாழ்வு பெற்றுத் தருவதாகவும் ஆளுக்கொரு மூடையுடன் அவர்கள் மூடைகளின் அளவுகளில் வேறுபாடிருந்தாலும் எல்லாம் புளுகுமூடைகள்தான் தொடுத்த வில்லிற்கும் கொடுத்த விலைக்கும் ஈடுதான் என்ன மாகாண சபைதானா …
-
- 0 replies
- 550 views
-
-
பிரசவ வலி இருட்டு உலகத்திலிருந்து விடுதலையை விரும்பும் சிசுவின் போராட்டம் கருவறையின் சுகமான வேதனை - தாய்க்கு பிரசவம் உயிரின் வரவிற்காய் உயிரைப் பணயம் வைத்து உயிர்கள் நடத்தும் போராட்டம் குழந்தை இருட்டுச் சிறையிலிருந்து வெளிச்சச் சிறைக்கு இடம்மாறும் கைதி சிறுவயது வண்ணாத்துப் பூச்சியைப்போல வாழ்க்கையில் சிறகடித்துப்பறப்பதற்கான கற்றலின் ஆரம்பம் வாலிபம் ஆலோசனைகளை அலட்டல்களாக்கி அசட்டுத்துணிச்சலில் தனித்து எதையும் எதிர்கொள்ளத் துணியும் பருவம் காதல் ஓமோன்களின் காட்சிமாற்றம் எதிர்ப்பாலினரில் ஏற்படும் ஒ…
-
- 14 replies
- 1.2k views
-
-
மோசமான நாட்கள் உக்கிரமடைந்த போர் வேட்டையில் கலைக்கப்படும் மிருகத்தைப்போல ஓடுகின்றோம் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இரத்த ஓடைகள், பிணக்குவியல்கள் மனிதப்பேரவலம்! உலகம் சொல்லிற்று காப்பாற்றுவார் யாருமில்லை! கோழியின் இறகுக்குள் பதுங்கும் குஞ்சுகள் போல பிள்ளைகள் உயிரைக்காக்கும் இறுதி முயற்சியில் பதுங்குகுழிகள்! அவையே சவக்குழியாகும் அவலம்! இறுதியில் ஆக்கிரமிப்பாளனிடமே போக வேண்டிய துர்ப்பாக்கியநிலை! நீரேரி வழியாக வெளியேற நிர்ப்பந்தம்! நெஞ்சளவு தண்ணீர் நடக்கமுடியாத அம்மா! எப்படி கொண்டு செல்வது நடக்கக்கூட ஜீவனில்லை! பெற்றெடுத்து தோளில் சுமந்தவள் கூலிவேலை செய்து என்னை வளர்த்தெடுத்தவள்! மொட்டுவிடும் பருவத்தில் பேரப்பிள்ளைகள்! திரிசங்கு நிலையில் நான், யாருக்கும் வரக்கூடாத…
-
- 12 replies
- 862 views
-
-
இதயத்தில் இருக்கை போட்டு அமர்ந்தவன் விரல்களின் நளினத்தில் வெட்கம் தொலைத்து சிணுங்கிக் குலுங்கி நாணி ஓடுகிறாள்..! அவள் சிணுங்களில் சித்தம் உந்த உணர்ச்சிக் கொப்பில் தாவிய இரண்டு உள்ளங்கள் உடல்கள் உரசி இதழ்கள் சுவைத்து கண் மூடிக்கிடக்கின்றன..! அட அசிங்கமே முகம் சுழிக்கும் ஆச்சியின் கையில் ஐபாட்... கதை விரிக்க அவள் விழிகள் விரிக்கிறாள் தொடர்கதை முடிக்க....! அந்த நிமிடத்தில் ஐபாட் மீது அவன் கண் வைக்க கைகள் தேட களவு ஒன்று அரங்கேறுது..! கூச்சலும் குழப்பமும்.. குலுங்கலும் சிணுங்கலும்.. ஓய்வுக்கு வர ரயில் பயணம் முடிக்கிறது...! விசாரணை தொடர்கிறது..!
-
- 11 replies
- 813 views
-
-
யுத்தம் தந்த பட்டம் - விதவை! சொந்தம் தந்த பட்டம் - தனிமை! கணவர் தந்த பட்டம் - கௌரவம்! குழந்தை தந்த பட்டம் - சொர்க்கம்! சமூகம் தந்த பட்டம் - சகுனம்! இனம் தந்த பட்டம் - பரிதாபம்! வரலாறு தந்த பட்டம் - அவலம்! வாழ்க்கை தந்த பட்டம் - வறுமை! தனிமை தந்தது - தயக்கம்! ஏக்கம் தந்தது - தாயகம்! நான் பெறாத பட்டம் - களங்கம்!
-
- 15 replies
- 783 views
-