Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நெய் வடியும் அழகு வதனங்களா.. பொட்டு நிறை பிறை நுதல்களா.. ஓடை நீரோட்டம் கோலம் போடும் பின்னல்களா.. அள்ளி போர்க்கும் மாராப்பு குரும்பைகளா... சங்குக் கழுத்தில் மின்னும் பசும் தங்கங்களா.. வளையல் போட்ட வளைக் கரங்களா.. தொடப் பூரிக்கும் மென் விரல் பூக்களா... மெல்லப் புன்னகையில் மெத்த பேசும் பதுமைகளா.. ஐந்தடி என்றாலும் ஐஸ்வரியம் ஆளைக் கவரும் வர்ணங்களா.. நேர் நோக்கையில் விழி தரைநோக்கும் நாணல்களா.. உங்கள் வாய்மொழி தமிழ் மொழி தேன் சுரக்கும் கொவ்வைகளா.. அந்த தகுதி ஒன்றே போதும்... நீங்கள் தானடி எங்கள் இதயம் கிள்ளும் தமிழச்சிகள்..! (படம்: முகநூல்)

  2. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்… தாயகக்கவிஞர் அ.ஈழம் சேகுவேராஃவிளம்பி "(வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள்." 1. பசி (வேட்டை நாய்களின் குரூரம்) அவர்கள் எங்கள் நிலங்களைத்தின்றுகொண்டே இருந்தார்கள். நாம் உருண்ட முற்றத்தை உழுது புரட்டினார்கள். அங்கே எங்கள் வானத்தையும் அல்லவா உடைத்துப்போட்டார்கள். புலவுகளும் பொழுதுகளும் கலவரமாயிற்று. எப்படி மனசு வரும்? அவ்வளவு இலகுவில் சொந்தம் விட்டுப்போக. குட்டி ஈன்ற பூனையாக மனசு அந்த மண்ணையே வட்டமிட்டுக்கொண்டிருந்தது. லாந்தர் வெளிச்சத்திலும் பொருள் நகர்த்தினோம். பயணப்பட்ட…

  3. உறவறுந்த துயரோடு இருள் கவிழும் மனம்... சடா கோபன் சித்திரையின் கடைசிக் கணங்களை காலம் உருட்டிக் கொண்டிருக்கிறது. ஓடி முடித்த தூரத்தையும் ஓட வேண்டிய தூரத்தையும் கணிக்க முடியாத குழப்பத்துடன் நான் வாழ்க்கையில்..... ஓடி முடித்த தூரத்தை விட ஓட வேண்டிய தூரம் நீண்டதாய் தெரிகிறது. வயதில் ஓடி முடித்தது நீண்டதாயும் ஓட வேண்டியது மிகக் குறுகியதாகவும் தெரிகிறது. எத்தனை கோடி வயதுகளையும் எத்தனை கோடி வாழ்வுகளையும் இந்த நிலம் சந்தித்திருக்கும். போராட்டங்களோடு வாழ்வும் போரோடு வயதுமாய் காலம் என்னை கடந்து போய் இருக்கிறது..... விடுதலைக் கனவுகளின் விளைநிலத்தில் மெ…

  4. மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்;து ஆண்டுகள் நான்காச்சு எந்தக் கொலையும் நடக்கவில்லை- என்ற சிங்கள அரசின் கதை தொடராச்சு எந்தக் கொலையும் செய்யவில்லை யெனில் எப்படி அவைகள் படமாச்சு மாவீரர் தூபிகளை மண்ணாக்கி மக்களை எப்படி அங்கே சிறைபிடித்தார் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் உண்மை நிலையை உணராரா சோற்றுக்குள்ளே பூசணிக்காயை மறைத்தவர் கதையும் இதுதானா பாலியல் கொடுமையால் பல பெண்கள் படுகொலைசெய்ததோ அதிக ஆண்கள் கொன்று குவித்த இளசுகளோ பெருங்கும்பல் குவியியல்குவியலாப் புதைத்ததோ எண்ணிலடங்கா குழவி குழந்தை மடந்தை மாணவி இளைஞன் இளைஞி கிழவன் கிழவி - என பாலகர் உட்பட படும்கிழம்வரை கொன்றே குவித்து கொடூரம் செய்தார் எந்நாளும் எம…

    • 0 replies
    • 1.6k views
  5. முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள் முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம் பிணங்கள் முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளது காலங்காலமாய் தமிழனை எதிர்த்த கண்ணாடிக்கர னொருவன் கலந்தே இருந்த இன்னொருவன் கடிதென விலகி கரைமாறி நின்றவன். காட்டி கொடுத்தே கலைத்தமிழை கயவர் அழிக்க கருத்தோடு உதவினர் கருக் குழந்தை முதல் கட்டிளம் காளையர் கன்னியர் கனவான்கள் வயோதிபர் பெண்கள் வயது வேறுபாடின்றி வகை தொகையுமின்றி வளைத்து வைத்து கொண் றோழித்தனர் வழக்க மில்லா குண்டுகள் கொண்டே வஞ்சக மான உதவிகள் கொண்டே போர் விதிமுறை எல்லாம் போக்கியே வீணர் வென்றனர் கொண்டாடினர் போதி மரத்தவன் நாமம் புகன்றே போதித்த தருமத்தை புத்தியில் கொள்ளாதோர் இன மானம் உள்ளோ…

  6. வருடங்கள் நான்காகி, உருண்டு செல்கின்றது, காலம்! வறண்டு போன வனாந்திரத்தில், ஆழப்புதைந்திருக்கும் நீராக, அவலங்களின் நினைவுகள், பாதாளத்தை நோக்கிச் செல்கின்றன! புதைக்கப் பட்ட மனித எச்சங்களின் மீது, மனதாபிமானத்தின் முலாம் பூசிய உதவிகள், கட்டிடங்களாக உருவாகின்றன! பரம்பரை, பரம்பரையாய், வரம்பு கட்டி வளம் படுத்தியவர்கள், போரின் வடுக்கள் தந்த வலிகளில், புதைந்து போய் விட்டார்கள். சொந்தமென்று நம்பியிருந்த மண்ணில், வந்தேறு குடிகளாய்க், காடைகளும், காவாலிகளும், கலிகாலத்தின் சான்றுகளாய், களவாகக் குடியேறுகின்றன! தூக்கணாங்குருவிகளின், வாசல்கள் வளைக்கப் பட்ட, தொங்கும் குருவிக் கூடுகளாய்க், கவனமாகப் பின்னப்பபட்ட, கொலைக்கூட்டினுள், எமது மரணங்கள் நிகழ்த்தப் பட்டன! எட…

  7. முள்ளிவாய்க்காலுடன் முடிந்தது ஆண்டுகள் நான்கு மனிதம் தொலைந்து மானுடத்தின் மரணவீடானது. கொத்தணிக் குண்டுகள் கொட்டிய மழையில் கொத்துக் கொத்தாய் உடல்கள் மட்டுமா வீழ்ந்தது ? முற்று முழுதாய்த் தமிழினம் முகம் தொலைத்த நாளது மூடர்கள் மூட்டிய தீயினில் முழுவதும் எரிந்து போனது மொத்தமும் இழந்து மூளிகளாக்கி முழுதும் அழித்து மீண்டது சொத்து சுகங்கள் சொந்தம் எல்லாம் எதிரிக்கென்றானது ஊர் இழந்து உறவுகள் இழந்து உடைமைகளும் தானிழந்து ஒப்பாரி ஒன்றே ஊர்முழுதும் கேட்கும் ஒலியானது சிங்களன் மூட்டிய சிதையின் நடுவே சித்தம் கலங்க சிதைந்து அன்றோ போனது சீருடன் வாழ்ந்த வாழ்வு வீடிழந்து வீதி இழந்து வேர்களுடன் விழுதுகள் இழந்து ஓடிவிளையாடிய ஊரிழந்து கூடிக் களித்த உறவுகள் இழந்து கொட்டும் …

  8. தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று சொல்லப் பட்டுள்ளதே தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற மாகாவியங்களில் முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன. காலம்தோறும்…

    • 1 reply
    • 1.6k views
  9. ஆரியன் வந்தான் சாத்திரத்தையும் சாதியையும் விதைத்தான்..! மொகலாயன் வந்தான் மதத்தையும் மதத்தால் அழிவையும் விதைத்தான்..! ஆங்கிலயன் வந்தான் சுரண்டலையும் அதனால் பசியையும் வறுமையும் விதைத்தான்..! ஏமார்ந்த தமிழன் எல்லாவற்றையும் ஏற்று கொண்டான்..! தன்னை தானே இழித்து கொள்ளும் தரங்கெட்ட நிலைக்கு தாழ்ந்தும் போனான்..! கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..! ஈழம் சென்று கங்கை கொண்டு கடாரம் வென்று இமயத்தில் கொடி நாட்டியவன்..! இன்று இனம் பிரிந்து மொழி மறந்து அகதிகளாய் முகம் தொலைத்து முகவரியற்று அலைகிறான்..! இன்று அங்கவையும் சங்கவையும் கேலிபொருள்கள் கோப்பெருந்தேவியும் குழல்வாய்ம…

  10. தமிழ் மொழி! தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும்போது மட்டும் இ..ஈ.. சூடு பட்டால் மட்டும் உ...ஊ.. அதட்டும்போது மட்டும் எ..ஏ... ஐயத்தின்போதுமட்டும் ஐ... ஆச்சரியத்தின்போதுமட்டும் ஒ...ஓ... வக்கணையின் போது மட்டும் ஒள... விக்கலின்போது மட்டும் ...? என்று தமிழ் பேசி மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழரிடம் மறக்காமல் சொல் உன் மொழி தமிழ் மொழியென்று !!! http://pudhiyatamilan.blogspot.com.au/2011/08/blog-post_31.html#!/2011/08/blog-post_31.html

  11. இரத்தம் எழுதிய கவிதை வ.ஐ.ச.ஜெயபாலன் (1985ல் குமுதினிப் படுகொலைச் சேதி கேட்டு எழுதிய கவிதை) மே பதினைந்தில் இந்துட்துமா கடலில் வானம் அதிர ஓலமிட்டது புயல் தீண்டிய கருங்கடலல்ல. என்னரும் தீவின் மக்கள் அறிவீர்! அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய தோரணங்களும் கொடிகளுமல்ல. உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி! கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில் கடித்துக் கிடந்த நாவுகள் தோறும் இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன். போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என் மூதாதையரின் கிராமியப் பாடலில் முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன். கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில் தலைவிரித்தடின கறுத்த பனைகள். நெடுந்தீவின் பசும்…

  12. ஆக்கிரமிப்புப் பூதம் எல்லையின்றி ஊதித் தள்ளிய கந்தகப் புயலில் சிக்கி குருதியில் குளித்து கறுத்துப் போன பூமியே.. ஆடவன் என்றும் மகளிர் என்றும் குழந்தை என்றும் வேற்றுமை உணரா உருக்குத் துகள்களுக்கு உடலைப் படையல் செய்த பூமியே.. விடுதலைக்காய் எழுந்த ஓயாத அலைகளின் தொடக்கப் புள்ளியே முடிவுப் புள்ளியுமானது கண்டு இரத்தம் வடித்த தாயே... ஆடை மறைப்புக்குக் கூட அருகதையற்ற நிலையில் எதிரிமுன் அம்மணமாய் நின்ற தமிழர் தேகம் சுமந்து வேதனையில் வெந்த தேசப் பூமியே.. சிங்களச் சாத்தானின் இனவெறி வெற்றி இச்சைக்கு உன்னையே தந்திட்டு வெறித்துக் கிடக்கும் தேசமே.. தமிழ் தாயிவள் சேயை இரும்புக் கவசம் அல்ல தேகக் கவசம் தந்து காக்க உறுதுணையாய் நின்ற தீரமே... …

  13. தீரமும் துயரமும் தோய்ந்த திருநாடு (சிறுவன்) ஆடடா கண்ணா அதற்கு நான் பாடுறேன் அம்மா சோச்சி ஆறிபோச்சேயென் றோடிப்போன காலம் போச்சு ஆனதென்ன ஆகாததென்னென் றாராஞ்சு பார்க்க நேரமாச்சு. (எல்லோரும்) ஆடடா கண்ணா........ (சிறுவன்) அப்பாக்கும் துணிசல் இருக்கு பலே பலே அவர் அநியாயத்தை எதிர்த்திருக்கார் கூறே கூறே சிங்களது சேகுலரை திருப்பி அனுப்பி செந்தமிழில் வரையுமென்று செப்பி நிற்க கோபம் கொண்ட கூலிகள் குழிபறித்து கோள் சொல்லி கொள்ளி வைச்சு வேலை தள்ள வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (எல்லோரும்) வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா வேலை இன்றி வீடு வந்தார் எங்கள் அப்பா (சிறுவன்) சிங்களமே வெளியேறு செந்தமிழ் நாட்டால் செய்யாட்டில் செய்ய வ…

  14. நிலம் மிதித்தவனின் வதை கோ- நாதன் எனதான மார்பு பால் சுரந்து மடியறங்கம் திரண்டிருக்க மழலை முகம் புதைத்து மகிழ்ந்த அதர சிறு புன்னகையினை பிடுங்கி பெரும் நிலத்தினை மிதித்தவன் தலை வெட்டி திருகித் தூக்கி வீசியிருந்தான். என் கால்களையும்,கைகளையும் பல பூட்ஸ்க் கால்கள் மண்ணிலழுத்தி மல்லாந்து கிடத்திய போது எனதான வெள்ளைத் தோலின் மார்புகளை கடைவாய்களும் கடித்து குதறி உமிழ.. இரத்தமும், காயமும் உடம்பெல்லாம் வழிந்து உறைந்தது.காமப் பிசாசுகள் முலையறுத்து முலைக் காம்பினை குழந்தையின் குதத்தில் திணித்து. மொத்த இயக்கங்களுமற்ற சின்ன யோனித் துவாரங்கள் வழியே எண்ணிக்கையற்ற பெருத்த ஆண்குறிகள் வக்கிரம் தீர்த்து கொண்டிர…

  15. அம்மா தாயே உன்னை - உன் அன்பு மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, பேஸ்புக்கில் அவள் பற்றி அடிக்கடி கவிதைகள் ! ஊரெல்லாம் அவள் பற்றி ஏதேதோ பேசுவேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் ஒத்தைமகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, காதலின் வலி கொண்டு கண்ணீர் வடிப்பேனம்மா உன்னை நினைத்து நான் அடிக்கடி சிரிப்பேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் மூத்த மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, நீயும் நானும் ஒன்றம்மா நீயின்றி நானேது பெத்தம்மா உன் மகன் காதல் செய்தால் உனக்கேதும் கஷ்டமா? மரணம் ஒன்றில் தானம்மா - உன் செல்லமகன் உன்னை மறப்பேன் அன்று என்னையும் தான் மறப்பேன், மன்னித்து விடுவாய் அல்லவா???

  16. திரும்பும் திசையெல்லாம் திருடப் பார்க்கிறார்கள். தமிழனின் தன்மானத்தை.. வறண்ட தீவாய் முல்லை மண் வந்து போகிறது கனவில்.. ஈரப்பதம் இல்லை அதிலெங்கும்.. கண்களில் கூடத்தான் தினமழுது தீர்ந்துவிட்டது என் செய்வேன் யார் யாரோ சொல்கின்றனர், தனி நாடு அமைப்போம் என்றும் தனி ஆட்சி செய்வோம் என்றும் உரிமைகள் தொலைத்து, உயிரையும் தொலைத்து, சலனமற்ற சடலங்களால், செய்யப்போகிறோமா அதை.? கேள்விக்குறியாக இருக்கும் எம்மிடம் கேள்வி கேட்க ஆயிரம் பேர் முற்றுப்புள்ளி வைக்க எவனும் இல்லை முடிந்த கதை முடிந்த கதை என்று எம்மை முடக்க தான் பார்கிறார்கள்.

  17. வேண்டாம் நண்பா விட்டுவிடு ...! விபரன் இனி நாம் சகோதரத்துவத்துடன் வாழலாம் எனவும், பிரச்சனைகள் எல்லாமே தீர்ந்து விட்டதாகவும்... நீயே முடிவு செய்கிறாய்...!! உனது தலதாவிலும், தலை நகரிலும், குண்டுகள் வெடித்ததையும்; தசாப்தங்கள் கடந்தும் மறக்கவியலாத நீ, எல்லாவற்றையும் மன்னித்ததாக… இப்போ பெருந்தன்மையுடன் எனது தோழிலே கை போடுகிறாய்..! உன்னுள்ளே பெருமைப்பட்டும் கொள்கிறாய்..!! தாலி... இன்னமும் சிங்களச்சிறைகளுக்குள் அடகு வைத்த தமது தாலிகளை மீட்க வேண்டி வீதிகளிலே பல பெண்கள் திரிவதை பார்த்தாயா..? அவர்கள் திருமணம் செய்ததெல்லாம் மனைவியாக வாழவே அன்றி விதவையாக மாழ்வதற்கல்ல.. உயர் பாதுகாப்பு வலயம்... உனது சுற்றுலா வண்டிகள் கவனித்திருக்க கூட…

    • 0 replies
    • 573 views
  18. நான் கண்டது என்ன கனவா கனவா.. கன்னி அவள் கண்கள் எனைத் தீண்டியது என்ன நனவா நனவா..! பாதைகள் ஆயிரம் இருக்க பக்கம் வந்து முட்டிப் போனது என்ன முட்டுமுட்டு பாடலின் விளைவா விளைவா..! பார்வைகள் பரிமாறி மெளன மொழி பேசியது என்ன நாட்டியமா நாடகமா..! கருங் கூந்தல் பரப்பிய அவள் முதுகு என்ன சந்தனம் பரப்பிய அம்மிக் கல்லா கல்லா என் கண்கள் என்ன அதில் உருளும் அம்மிக் குழவியா குழவியா..! காற்றிலாடும் சுடிதார் என்ன சாமிக்கு வீசும் சாமரமா இந்த ஆசாமி அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன விதியா சதியா..!! முடிவாய் என்ன கண்களுக்குள் சிக்கி மூளையில் பதிவானது அவள் நினைவா நினைவா அதன் தவிப்பில் இவன் கமராவை நோண்டுவது என்ன தலை விதியா விதியா..! இதன் பெயர்தான் …

    • 67 replies
    • 7.5k views
  19. கண்ணுக்குள்ள நிக்கிறியே -என்ன (னை) விண்னுக்குள்ள தள்ளுறியே, அடியே...... எ எண்ணத்தில தீய வைக்கிறியே........ செவ்விதழை மடிக்கிறியே-என்ன(னை) செவ்வாயில புதைக்கிறியே, கொடியே.... ஏஞ்சிந்தையில புது சிந்துபாடுறியே............... ஒத்திவச்ச காணிய கடக்கயில பத்தியெளும் பெருமூச்சு-உன்ன பாக்கையில தோணுதடி! பொத்திவச்ச ஆசையெல்லாம் முத்திவந்து முனுங்குதடி!! நெத்தி சுருக்கி நீ பாக்கையில நெட்டுருகி போகுதடி! எட்டுவைச்சு பாதகத்தி நீ நடக்கையிலயென் சத்திகெட்டுப்போகுதடி!! மனச சுத்தி அடிக்கிறியே மலைய சுருக்கி சுமக்கிறியே....... கனவ அள்ளி தெளிக்கிறியே கையளவிடை மறைக்கிறியே....... ஊன உருக்கி -புது உருவம் திரட்டுறியே கானக்குயிலாய் உருவேத்திறியே........... …

    • 4 replies
    • 732 views
  20. வெளியினிலும் தெரியும் வெறுங்கால் தடங்கள்...... சடா கோபன் காணி நிலம் வேண்டும் என் சொந்த காணி நிலம் வேண்டும்! உயர் காப்புவலயம் உள்வாங்கிக் கொண்ட என் காணி நிலம் வேண்டும்! பட்டைகட்டி துலா மிதித்து என் பூட்டன், நிலம் செழிக்க நீர் இறைத்த அந்தத் தோட்டத்துக் கிணத்திலே ஒருவாளி தண்ணியள்ளி என்தொண்டை நனைத்திடல் வேண்டும் என் காணி நிலம் வேண்டும்! ஆயிரமாய் சப்பாத்துக்கள் அழுத்திச் சென்றாலும் இலட்சங்களாய் சில்லுகள் உருண்டு திரிந்தாலும் அழியாது சுவடுகள் எந்தனது முன்னோரின் வெறுங்கால் சுவடுகள்.... ! சாகாது இன்னும் பத்திரமாய் அங்கு உயிர்ப்போடு இருக்கிறது…

  21. Started by கோமகன்,

    என்வலி ஒரு பேப்பருக்காக கோமகன் சொல்லிச் சொல்லி சொல்லால் அடித்தாயே அடியே சொல்லால் அடித்தாயே பொட்டுப் பொட்டாய் உடைந்ததுவே என் இதயம் சொட்டுச் சொட்டாய் வடிந்ததே வலியாய் ரத்தம் நீயும் நானும் கூடிய வாழ்க்கை ஒருவரை ஒருவர் உயர்த்திய வாழ்க்கை தெளிந்த ஓடைபோல் நகர்ந்த எம் வாழ்வில் கல்லை எறிந்தது யார் சொல் விழுந்த கல் தந்தது அலையை மட்டுமா எம் வாழ்வின் வேரையே ஆட்டியதை நீ அறியாயோ அடி கிளியே நீ அறியாயோ என் மூச்சிருக்கும் வரை உன் பேச்சு இருக்கும் என் இதயத்தின் ஓரத்தில் உன் பேச்சு இருக்கும் என்னதான் நீ என்னை சொல்லால் சுட்டாலும் என் இதயத்து சிம்மாசனத்தில் நீதானே நித்திய கல்யாணியடி நித்தம் நான் காணும் உன் முகம் வாடவும் விடு…

    • 19 replies
    • 1.8k views
  22. துரோகத்தின் தருணம் by ஃபெய்ஸ் அஹ்மத்ஃபெய்ஸ் இன்னும் சிறிது நேரத்தில் கூரைகளின் மீது தன் ஒளியை வாரி இறைத்துவிடும் தன்னுள் இருந்த பிம்பங்கள் மறைய கண்ணாடிகளுக்கு தாகம் எடுக்கும் தூசிபடிந்த தாரகை சொர்க்கத்தின் கண்ணீராய் கீழே விழும் சிலர் தங்கள் பாழடைந்த அறைகளில் தனிமையை போர்த்திக் கொள்வார் வேறுசிலர் விரக்தியை போர்த்தி இருப்பார் இது நீசத்தனமான துரோகத்தின் தருணம் அனைத்து கருணையும் முடிவுக்கு வரும் தருணம் அனைவருக்கும் சுயநலமே நோக்கமாக மாறும் தருணம் எங்கே செல்வாய் நீ என் ஊர் சுற்றி நெஞ்சமே உன்னிடம் யார் சினேகம் கொள்வார் இன்னும் கொஞ்சம் காத்திரு விடியலின் அம்பு பாய்ந்து குருட்டுக் கண்களுக்கு பார்வைகிட்டும் வரை அன்னியோன்னியமான முகங்களுக்கு காத்திரு …

  23. By ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் - சுதந்திர விடியல் இதுவல்ல கரை படிந்த வெளிச்சம் இரவு குதறித் துப்பிய விடியல் இதுவல்ல எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியரைந்த தெளிந்த விடியல் இதுவல்ல பரந்து விரிந்த வானத்தின் கால்வெளியில் தாரகை நிரைத்து நிற்கும் இலக்கொன்று இருக்கும்! பொங்கிப் பெருகும் இரவின் அலைகள் அமைதி கொண்டு கழுவிச் செல்லும் கரையொன்று இருக்கும் இதயச் சுமையை ஏற்றிவரும் ஓடம் தங்கி இளைப்பாறும் துறையொன்றிருக்கும் என்று எனது தோழர்கள் தாகங்கொண்டு தேடியலைந்த தெளிந்த விடியல் இதுவல்ல! புரியாத புதிராய் வாலிப ரத்தம் தழுவத் தூண்டும் கரங்கள் கிரங்கிப்போன பார்வைகள் அன்பும் அழகும் தொட்டும் தொலைவில்.... இருந்தும் காவு கொடுத்த காதல்கள் எத்தனை? விடியலின் சுடர்மிகு…

  24. அழகு மலர்களின் மெளன மொழியில் காதல் கொண்டு.. விரியும் இதழ்களின் காந்தக் கவர்ச்சியில் கவர்ந்து..கள்ளுண்டு கலவி கண்டு கருத்தரிக்க உதவுகிறான் காதல் தூதுவன் இவன்..! அந்த விசயத்தில் இவன் ஒரு "பிளே பாய்"..! மானுட உலகம் மாற்றி அமைத்திட்ட இயற்கையின் நியதியில் கருத்தடை மாத்திரைகள் கருப்பைகளுக்கு விடுமுறை தர யோனிகளுக்கோ ஓய்வில்லாத உரசல்கள்..! உராய்வு நீக்கிகளுக்குக் கூட அங்கு பஞ்சம்.. கிழியும் அந்த உறைகளின் வியாபாரமோ இன்று உச்சியில்..! நிமிட நேர உள்ளக் களிப்பில் போதை கண்டு.. உடலில் சேரும் அந்த மாத்திரை நஞ்சுகளின் தாக்க அறிதல் இன்றி கூடிக் களித்திருக்குது மானுட சமூகம்..! பாவம் இவன் அதே.. மானுட உலகின் அரக்கச் சிந்தனையில் பூச்சி கொல்லி…

  25. a உன்னை ஒரு தமிழனாகப் பார்த்தால் படி இதை!. ''நான் முதலில் இந்தியன்'' என நினைத்தால் படிக்காதே இதை! வெம்புலி பெற்ற அம்புலி -கவிஞர் வாலி கன்னியாகுமரியிலிருந்து கை...தட்டிக் கூப்பிட்டால், ஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ; தொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி - இங்கிருக்கும் சோழத்தமிழன்தான் அங்கிருக்கும் ஈழத்தமிழன் ; அங்கிருக்கும் ஈழத்தமிழன்தான் இங்கிருக்கும் சோழத்தமிழன்! சோழத் தமிழன் சோர்வு தவிர்க்க- ஓர் 'அண்ணா' வாய்த்தது போல்- ஈழத் தமிழன் ஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி' வாய்த்தான்! முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது - தமிழின் உயிரும் மெய்யும்; ஆனால்- ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது- தமிழரின் உயிரும் மெய்யும் ! பிரபாகரன்! அவ் ஆறெழுத்து அல்…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.