கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
,வீரத்தின் விளை நிலம் விண் நோக்கி போனதுமேன்? அன்னையே தாயே அழியா புகழ் கொண்ட அற்புதமே! ஈழத்தின் புள்ளியை பூமிப்பந்தில் ஈட்டி கொண்டு எழுத வைத்த ஈகைத்தாயே. வீரத்தின் விளை நிலமே விண்ணையும் விஞ்சிய வீரனை விடுதலைக்கு ஈன்றெடுத்த வேங்கைத்தாயே, பாவத்தை அழிக்க வந்த பரவசத்தை பார் போற்ற பிறப்பெடுத்து பாலூட்டி வளர்த்த பார்வதியே! பொக்கிஷமே புண்ணியமே காலத்தால் அழியாத காவலனாம் சூரியனை பெற்றெடுத்த கண்ணகியே,, சொர்ணத்தாயே,,, நீரையும் நெருப்பையும் நிழலாக்கி நிமிர்ந்து நின்ற நாயகியே, சோலை விருட்சம் அம்மா-நீ சொந்தம் நாங்கள் துயரம் கண்டாயோ-எம் நெஞ்சு கனக்க நிலையகன்று சென்றனையோ, காற்றானாய் உன் கண்மணிகள் கண்ணில் நீரை இறைத்து நி…
-
- 15 replies
- 1.1k views
-
-
என் காதலுக்கு உயிரோட்டம் தந்தவளே ஒற்றை வார்த்தைச் சொல்லில் கட்டிப் போட்ட வித்தகியே... இந்த நாளில் உன் வாய் திறந்து நீ உரைத்த தித்திக்கும் செந்தமிழே இன்னும் என் செவியில் உன் நினைவுகளை மீட்டும் தாரகை மந்திரமாய்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியிலும் என் சிறந்த தோழியாய் நீ.... நீ என் இனிப்புப் பெட்டகம் அன்பான வார்த்தைகளின் சொந்தக்காரி கண்களில் வைரக்கல் பதித்த காதல் ஓவியம் நீ உன் செவ்விதழ் என்ற காதல் ரோஜாவால் என் இதயத்தில் பூச்செண்டு முடித்து வைத்தாய். உன் மென் விரல்கள் என்னைத் தொடும் போதெல்லாம் என் இதயம் மெ…
-
- 1 reply
- 712 views
-
-
(2004 கவிதை மீண்டும்.. நினைவுகளை மீட்க) இஸ்ரேல் இருப்புக்காய் அனுப்பியது கிபீரும் ஆட்லறியும் இந்தியா இரகசியமாய் அனுப்பியது மிக்கும் மிரண்டாவும் அமெரிக்கா அண்டப்புளுகுக்காய் அனுப்பியது பெல்லும் கிறீன்பரேட்டும் ரஷ்சியா டொலருக்காய் அனுப்பியது தரையில் தாங்கியும் ஆகாயத் தாங்கியும் சீனா சிங்களத்தோடு உறவுக்காய் அனுப்பியது எப் 7ம் ரி 56 உம் பாகிஸ்தான் பகட்டுக்காய் பரிசளித்தது மல்டிபரலும் பல்டி அடியும் சிம்பாவே சிம்பிளாய் அனுப்பியது சிணுங்க ஒரு ஆயுதக்கப்பல் இன்னும் விட்டது குறையாய் தொட்டது குறையாய் யார் யாரோ எல்லாம் ஆயுத வியாபாரச் சந்தை விரித்தார் எங்கள் அன்னை பூமியின் அழிவுகளின் மேல்....! இத்தனைக்கும் சாட்சியாய் இதோ அவள்....…
-
- 4 replies
- 1k views
-
-
யாருக்கும் பிரச்சனை இல்லை... --------------------------------------------------------- பாலஸ்தீனப் போராளிகள் பற்றி நான் பேசலாம். அயர்லாந்து சுதந்திரப் போராட்டம் பற்றி நான் எழுதலாம். தியான் மென் சதுக்கக் கொலைகளுக்கும் நான் குரல் கொடுக்கலாம்... யாருக்கும் பிரச்சனை இல்லை ஈராக் பற்றி நான் கவலைப் படலாம் திபெத்தியர்களுக்காக நான் கண்ணீர் விடலாம்.. பர்மியப் பெண்ணுக்கும் நான் பரிந்து பேசலாம். யாருக்கும் பிரச்சனை இல்லை சேகுவேராவை நான் கொண்டாடலாம்.. பிடல் காஸ்ட்ரோவை நான் வணங்கலாம்.. கொசோவா விடுதலையை நான் ஆதரிக்கலாம்.. யாருக்கும் பிரச்சனை இல்லை உலகின் எந்த மூலையில் இனக் கொலை நடந்தாலும் ந…
-
- 4 replies
- 1k views
-
-
நிகழ்காலம்,எதிர்காலம் என எல்லாமே... நமக்கு... இறந்தகாலமாய்த்தான் இருந்தது! ஆறுதலுக்காய் ஆதரிக்க யாரும் அருகிருக்கவில்லை! அரவணைக்கக் கூட ... தம் அனுகூலம் பார்த்தார்கள்!! அனாதை நாய்களைவிட... அநியாயமாய் அழிந்தோம் நாம்!! எங்களுக்காய் குரல்கொடுக்க யாருமில்லையே!? என்ற... ஏக்கத்தவிப்பின் துர்ப்பாக்கிய முடிவாய்த்தான், துப்பாக்கியையும் சுமையாய்ச் சுமந்தோம்!!! துப்பாக்கி வேட்டுக்கள் எமைக் கொன்றுபோட்டபோதெல்லாம்... அதுக்கான அதே சத்தத்துடன் அடங்கின பல பொழுதுகள்!!! "ஆயுதம்" என்பதும் தற்காத்துக்கொள்ளவென காத்துக்கிடந்த காலம்போய், பேராயுதங்கள் போராயுதத்தினால்... நம்மைத் தின்றபோது... உயிராயுதங்களும் உணர்வோடு மெளனித்துப் போயின போல்!? கரிகாலன் தாங்கிய…
-
- 14 replies
- 2.2k views
-
-
அனைத்திற்கும் இணையானவள் தாய். ..! கோல்களனைத்தும் கொலை வெறியில் பூமியை மோதுவதற்கே சுற்றி வருகின்றன சூரிய குடும்பத்தில் காரணம் தங்களிடத்து அனைத்தும் இருந்தாலும் "தங்குவதற்கு" ஒரு நாதி இல்லையே என்ற பொறமை தான் இப்படி சிறப்புள்ள பூமிக்கு இணையானவள் "தாய்"... விண்வெளியில் விளையாடிகொண்டிருக்கும் தான் பிள்ளைகள் விண்ணிலிருந்து விழும் போது பிரிந்து தான் விழும் இதை எண்ணி விண்னெனும் தாய் கதறி அழும் அந்த கண்ணீர் தான் மண்ணில் மழையை ஒன்று சேர்க்கின்றன …
-
- 8 replies
- 1.4k views
-
-
வாடிய முகத்தோடு பூங்காவின் வாங்கினில் அவள்... அன்பின் அடையாளமாக இல்லை.. ஆட்களுக்கு அடையாளம் காட்ட தேடிப் பிடித்தவனின் வலன்ரைன் பரிசுக்காக.. உள்ளத்தில் ஏக்கங்களோடு..! நேரம் ஆகுது காத்திருப்பாளே...??! பதட்டத்தோடு தெருவோர உண்டியலில் மணிக்கு ஒரு பவுண் தாரைவார்த்து பெற்ற அந்த கார் தரிப்புச் சீட்டைக் கூட சரியாக ஒட்டாமல்.. ஓட்டமும் நடையுமாய் வந்தான் அவளிடம் அவன்..! வந்தவன் நெருங்கி பொக்கேயை நீட்டினன்..! ஆத்திரத்தில் ஆழ்ந்திருந்த வனிதையின் கரங்களில் வன்முறை..! பொக்கே வானில் பறந்து ஈர்ப்பில் கவர்ந்து பூமியில் வீழ்ந்தது..! அவன் காதலும் நொருங்கிச் சிதறியதாய் நல்ல பாடம் படித்திட்டான்.. உள்ளூர அவள்... தன் செயலில் சாதன…
-
- 20 replies
- 1.5k views
-
-
சுதந்திரத்தின் வலி தெரியாது தந்திரத்தால் வந்த சுதந்திரத்தை கொண்டாடுதாம் சிங்களம் தமிழனின் ரத்த வாடையுடன் கொண்டாடுதாம் சுதந்திரத்தை கேடுகெட்ட சிங்களம் ரெண்டுக்கும் சுதந்திரம் போய் கனகாலம் வடக்கில் ஒரு கூட்டம் சுதந்திரம் எங்கேயெண்டு தேட கிழக்கிலே ஒரு கூட்டம் உதயமாகுதெண்டு லூசுக் கதை கதைக்குது சுதந்திரம் போய் கனகாலம் வெள்ளை போட்ட பிச்சையை போராடி பெற்றதெண்டு கொண்டாடும் பே சிங்களமே சுதந்திரம் உனக்குமில்லை எனக்குமில்லை என்பதை எப்பொழுது உணரப்போகிறாய்...?
-
- 18 replies
- 1.8k views
-
-
பான்கீமூன் மனிதத்தைக் கொன்று மனிதாபிமானத்தை மரணக் குழிக்குள் தள்ளி சுயலாபம் தேடும் சூட்சிக்காரனின் தலைவா! மனிதனைக் கடிக்கும் விசர் நாய்க்கு மரணம்தான் தீர்ப்பென்றால் பல இலட்சம் மக்களைப் படுகொலை செய்தவனுக்கு பதவியும் பாராட்டுமா?
-
- 5 replies
- 824 views
-
-
காதலின் வலி. நீளமான மெளனங்கள்............. நீ பேசியதை விட - உன் மெளனங்கள்...... பேசியவை ஏராளம் வர்த்தைகளை விட வலிமையானவை மெளனங்கள் - என்பதை உன்னைக்காதலித்த போது தெரிந்துகொண்டேன் என்னுள் நானே பேசி......... ஏகாந்ததில் சிரித்து............... அர்த்தமற்ற சந்தோசம் கொண்டாடுவதற்கு நீயல்ல - உன் காதல்தான் கற்றுத்தந்தது............ காதலியே! உனக்காக காத்திருக்கிறேன் கனவுகளை மட்டும் பரிசளித்து சென்றுவிட்டாய் காலமெல்லாம், கண்ணீருடன் நான் உன் வீட்டைக்கடக்கும் பொழுதெல்லாம் இதயத்துள், ஒரு இதமான அவஸ்தை உள்ளே நீ இல்லாவிட்டாலும் கூட காதலின் அவஸ்தைகளை புரியவைத்தவள் நீ ஆனால் உனக்கு மட்டும் அது புரியாமல் போனது ஏனோ?
-
- 7 replies
- 5k views
-
-
மனதில் மறையாத பனித்துளிகள்..... காதலர் தினக்கவிதை - இளங்கவி சூரியன் திசை நோக்கும் சூரியகாந்தி போல இந்தக் சூரியன் போகும் திசையையும் நோக்கியது ஒர் சூரியகாந்திப் பூ.... ஆம்.. அவளும் ஓர் பூதான் அவள் பெயர் செவ்வந்தி..... அவளின் தரிசனத்துக்காய் காத்து நிற்கும் இடம் வண்ணங்களால் மனதைத வருடும் காகிதப்பூச் சோலையொன்று...... செவ்வந்தி வருகைக்காய் காத்து நிற்கும் ஒவ்வொரு கணங்களும் காகிதப் பூக்களைப் பார்த்து வண்ணங்கள் இருந்தென்ன என்னவள் போல உங்களுக்கு வாசமில்லையே என்று சொல்லிச் சிரிப்பதுண்டு...... காகிதப் பூக்களுக்கு என்னில் கோபமிருந்தாலும் என்னவள் வருகையறிந்தவுடன் சிறு சலசலப்புக் காட்டிவிட்டு தானாகவே மறுபக்கம…
-
- 0 replies
- 677 views
-
-
-
வாழும்வரை நேசிப்போம் காதலை மூச்சாய் சுவாசிப்போம் கனவிலே கூட காதலை யோசிப்போம் காதலை கவிதையாய் வாசிப்போம் காதல் மாறாதது என்பது உண்மை. ஆள் மாறினாலும் இல்லாள் மாறினாலும் காதல்மாறுவதில்லை கண்களில் காதல் வைத்து இதயத்தில் காதலியை தைத்து கனவில் காதல் கீதம் இசைத்து காலமெல்லாம் காதலோடு வாழத்துடிக்கும் காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...
-
- 3 replies
- 1.3k views
-
-
கனிவான கன்னி என்று உன்னை நினைக்க நீ, என்னை கண் கலங்க வைத்தாயடி. உதிரம் எல்லாமே உனக்காக என்றிருந்த என்னை, உயிரோடு வதம் செய்தாயடி . ஒரு முறையேனும் உன் இன்முகம் காட்டி கனிமொழி கேட்க நான் , ஏங்கியிருந்து , வாடியிருந்து , இளமைதனை இழந்து ஏமாந்து போனனடி. என்னுயிர் நீ என்று தன்னுயிர் பாராது கண்ணீருடன் இருந்த என் தாயன்பினை நான் உணர்ந்து , பாசம் உள்ள அன்னையவள் அன்பு மட்டும் எனக்கு இப்போ ஈசன் தந்த சொர்க்கமடி. உன் நினைப்பு எனக்கு தந்தது வெறும் வெட்கமடி . சிந்தை கலங்குதடி எந்தன் சிறுபிள்ளை தனத்தை எண்ணி …..கலை http://www.siruppiddy.net/?p=7317
-
- 0 replies
- 604 views
-
-
கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல் ஜெ.கி.ஜெயசீலன் நான்: தார்மீகப் பெரு நெறியைத் தக்கபடி போதித்து யார் மீதும் பகையில்லா யாகத்தைச் செய்தவனே! உனதடியை வணங்கி வரும் உன்னரிய புத்திரர் தாம் மனதறியச் செய்துவரும் மா கொடுமை அறியாயோ! ஊருறங்கும் நள்ளிரவில் ஊளைவிடும் 'ஷெல்' நரிகள்! போருறங்காப் பூமியிதில் பொழுதெல்லாம் குண்டு மழை நீ வளர்த்த கருணையினை நெஞ்சத்திற் பேணாமல் தீ வளர்த்த தென்னிலங்கை திருந்த வழி சொல்வாயா? புத்தர்: அன்பார்ந்த தமிழ் மகனே! அவலத்தின் உள்ளே மண்பாய்த்து அழிகின்ற மடமை பல கண்டேன்! போதி மர ஞானமதைப் போதித்தும் என்பக்தர் நீதி தரவில்லையெனும் நீசத்தாற் துடிக்கின்றேன்! கொல்லாமை பேரறமாம்; குரலெடுத்துக் கூறிய என் சொல்லாலே ஏமாற்றிச்…
-
- 1 reply
- 607 views
-
-
I just can't control myself I can't be with no one else It seems like I'm addicted to The way you like to touch me I don't think they understand Why love at your command From the words you speak so deep Our bodies read I have to have you I love you............... You're perfect A manifestation of my dreams Body feel About a million different things எங்கேயோ சுட்டது....
-
- 1 reply
- 1.1k views
-
-
காலதேவனின் சாபம் காற்றடைத்த பைகளை நிரப்ப கருமேகங்களிடம் கையேந்தும் நிலை வர்ணங்களைப் பிரிக்கத் தெரியவில்லை எனக்கு நீலம்,பச்சை என கருமையும் செம்மையுமே என் கனவிலும் குடிகொள்கின்றன புரியாத புதிர்களாய்ப் புரட்டிப் போடப்படுகின்றன பொழுதுகள் புலர்ந்தாலும் சாய்ந்தாலும் விதைக்கப்படுகின்றன நச்சு விதைகள் நத்தைகளுக்கு கூட ஓடு இல்லையாம்- இது கொசுறுத்தகவல் கருவேலங்காட்டிற்குள் கானக்குயில் பாட்டிற்காய் காத்திருந்த காலங்கள் போய் கறிவாடை வீசாத விடியலுக்காய் காத்திருக்கின்றோம் மொட்டுக்கள் மலரமுன்னே வண்(ம்)டு(பு)களால் வன்புணரப்படும் போது பேசாதிருந்து பிறப்புறுப்புகளைப்பற்றி பேசியவுடன் பிறவிப்பலன் அடைந்ததாய் பெருமைகொள்கிறது பெண்ணியம் உச்சி மீத…
-
- 9 replies
- 1.9k views
-
-
சினேகிதிகளின் கணவர்கள் அவளது கணவனைப்போலவே அவளது இருப்பை ஒரு விளையாட்டுப் பொருளாக்குகிறேன் . எதைப் பற்றிய பேச்சிலும் கணவரைப் பற்றிய ஒரு பின் குறிப்பை இணைத்துவிடுகிறாள் . எவ்வளவு குடிக்க வேண்டும் ஜோக்குகளை எங்கே நிறுத்த வேண்டும் நாற்காலிகள் எவ்வளவு தூரத்தில் அமையவேண்டும் எந்தக் கணத்தில் வெளியேற வேண்டும் என எல்லாவற்றையும் பழகிக்கொண்டேன் . நான் குழப்பமடைவதெல்லாம் சினேகிதியை பெயர் சொல்லாமல் எப்படி அழைப்பதென்று . ஒரு சிநேகிதியை ’சிஸ்டர்’ என்று அழைக்கும் ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து எப்படித் தப்பிச் செல்வது என்று ------------------ மனுஷ்யப் புத்திரன் அதீதத்தின் ருசி தொகுப்பில் இருந்து...................
-
- 4 replies
- 2.4k views
-
-
ஆதி மனிதன் தொட்டு அண்மைக்காலம்வரை அன்பெனும் பிணைப்பால் பின்னிப்பிணைந்து வாழ்ந்;த நம் உறவுகள் ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும் ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோது ஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள் காசைப்பார்த்ததும் மாறியதோ? கடல் தாண்டி வந்தபின் மாறியதோ? கருணை மனம் எங்கு ஓடியதோ? தன்வயிற்றை ஒட்டவைத்து தன்னுள் கருவாக்கி உன்னை ஊர் போற்ற உருவாக்கிய அன்னைக்கு உதவாமல்? உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும் உன்னால் யாருக்கென்ன நன்மை? கண்ணை மறைத்ததோ காசு வந்து உன்னை? பின்னால் ஒருகாலம் உன்னிலை உணரும்போது மண்ணில் இருக்காளே அன்னை? அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்மை? ஆக்கம் இசைக்…
-
- 3 replies
- 1.4k views
-
-
ஊருக்கு ஏற்றார்ப்போல் பேசி... உறவுகளுக்காக நடித்து...... வேலைக்கு ஏற்றார்ப்போல் ஆடி... வேண்டிய மட்டும் பொய் வார்த்தைகள் கூறி... நாட்களை நகர்த்துகிறேன் நான்.... என்னுடைய சுயத்தை இழந்தபடி.... http://www.ilankathir.com/?p=2622
-
- 1 reply
- 730 views
-
-
பாரத மாதா வின் கவட்டுக்குள் ஒரு சாக்கடை அங்கோர் அழுக்கு தின்னிக் கெழுத்தி.. அதன் பெயர் ஜனநாயகம்..! கெழுத்தியின் உடலுலோடு ஓர் ஒட்டுண்ணி அதன் பெயர் சுப்பிரமணியம் சுவாமி. அந்த ஆசாமிக்கு ஒரு கட்சி அது தேர்தலில் நின்றதில்லை ஆனால் வெற்றி முழக்கத்திற்கு குறைவில்லை..! மக்களோ அந்த ஐயனின் குசும்பில் தினமும் சொல்லாமல் செல்கின்றார் கீழ்ப்பாக்கம்..! சுவாமிக்கு அடிக்கடி நெஞ்சில் ஓர் வலி உள்ளூரில் ஓய்வின்றிய புறணிக்கு அப்படி வருவது விசேடம் அல்ல..! இருந்தாலும் ஓய்வுக்கு ஊளையிட.. அப்பப்ப எட்டிப் பார்ப்பது அண்டை அயலில் ஈழத்தை..! கூவிற கூச்சலுக்கு றோ போடும் பிச்சையில் மருத்துவம்..! புலி என்றால் ஐயாவுக்கு…
-
- 20 replies
- 2.2k views
-
-
மரணமே நெருங்காதே கண்ணீர் மழையால் உம்மை தொழுகிறேன் மரணமே நெருங்காதே கிடைத்தற்கரிய பரிசாய் எனக்கும் கிடைத்தான்....என்னை நனைத்தான் என்னுள் நனைந்தான் கடந்த கால நினைவுகளை காயங்களாக கொண்டவனின் காயம் போக்க காதல் செய்ய வரம் கிட்டியது என் பேறு தொலைவில் இருந்தாலும் காதலால் தீண்டுகிறான் தேன் துளியாய் அவன் நினைவுகள் தித்திக்க வார்த்தைகள் தெவிட்டுகிறதே அவன் அன்பை வருணிக்க..... அன்னாகரீனா, நாஸ்தென்காவை காதலிகளாக கொண்டவன் என்னையும் காதலியாக ஏற்றான் அவன் அன்பிற்கும் மட்டுமல்ல அறிவிற்கும் நிகரில்லா என்னை ஆயுள் வரை அவனோடு பயணிக்க எதற்காக தேர்ந்தெடுத்தான் என்னில் எதை வியந்தான்....? உள்ளூர் அரசியலே தெரியாத என்னிடம் உலக அரசியல் பே…
-
- 1 reply
- 717 views
-
-
நீ பயனற்றுப் போகையில் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுகிறாய் உன்மீதான மனக்குறைகள் நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன உன்னைப் பற்றிய புகார்கள் என்றென்றைக்குமாக ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன நீ பயனற்றுப்போகும்போது வேலியில் பூத்துக்கிடக்கும் ஒரு கொடிபோல ஆகிவிடுகிறாய் உனக்கு யாரும் நீரூற்றுவதில்லை உனது மலர்களுக்காக யாரும் காத்திருப்பதில்லை ஆனாலும் நீ ஒரு செடியாகவோ மலராகவோ இருக்கத்தான் செய்கிறாய் உன் மேல் திணிக்கப்பட்ட குற்ற உணர்வுகளை இறக்கி வைப்பதற்கு உனக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை நீ செய்யத் தவறிய ஒவ்வொன்றிற்கும் பதிலளிக்கும் கடமையிலிருந்து நீ விடுவிக்கப்பட இதைவிட்டால் உனக்கும் வேறொரு தருணம் வர…
-
- 7 replies
- 1.1k views
-
-
கடலுக்கு அரசி கடற்காரிகைகளில் அவள் அழகு சுந்தரி..! கவிழ்ந்திடாத வரலாறு தந்து காலம் பல வாழ்ந்து காவியங்கள் படைக்க வந்தவள்..! அவள் தான் கொஸ்ரா கொன்கோடியா..! அன்றைய பொழுதும் நீலக் கடல் நடுவே.. அவள் பயணம் அமைதிப் பயணம்..! அரசியின் ஆட்சியில்.. ஆயிரம் ஆயிரம் பேராய் அரசவையில் அகம் மகிழ்ந்திருக்க இவள் வந்தாள்.. கண்ணிமை பொழுதில் அரசனைக் கவிழ்ந்தாள்.. அரசியும் கவிழ்ந்தாள்..! வரலாறு மாறிப் போனது.. கவிழ்த்திட முடியாது என்பதே பெண் என்பதன் முன் கவிழ்ந்து கிடந்தது…! உயிர்ப் பலிகளும் அங்கு..! பேயே கவிழும் போது கப்பல்…???! கப்பலே கவிழும் போது.. அர்ப ஆண்கள்..?! இது சதியா… விதியா..??! இயற்கையே உனக்கேனிந்தக் கொலைவெற…
-
- 2 replies
- 980 views
-
-
ஓ... காலனே, இந்த வேசம் போடாத வெண்பஞ்சு முடிபேசும் கதைகள் கொஞ்சமல்ல அவற்றைப் பேசி முடித்தபின்னால் ஓலை அனுப்புகிறேன் அதுவரைக்கும்....
-
- 26 replies
- 5.4k views
-