Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. யார் சொன்னது வழிந்தோடும் என் இளமைக்கால நினைவுகளை மேய்ந்தபடிபோகும் வயல்க்கரை மாடுகளின் பாசைகளைப் புரிய முடியாதென்று...? யார் சொன்னது நான் தொலைத்துவிட்ட சிறுவன் நடந்துதிரிந்த வீதிகளில் எஞ்சியிருக்கும் புறாக்களினதும் புலுனிகளினதும் கவலைப் பாட்டினை விளங்கமுடியாதென்று....? யார் சொன்னது வெட்டைக் காணிகளின் சம்புப் புற்களுக்கிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குந்தியிருக்கும் தும்பிகளின் இறக்கைகளில் இருந்துதொடங்கும் என் பால்யகாலக் கவிதைகளைப் படிக்க முடியாதென்று...? அவைகளின் மொழிகள் உனக்கெப்படித் தெரியுமென்ற வியாக்கியானங்களை விலத்திவையுங்கள்... அவைகளின் மொழிகளில்தான் மீட்டிக்கொள்கிறேன் கிழித்து வீசப்பட்டதால் பொருளை இழந்துப…

  2. Started by pakee,

    நேசித்து பாருங்கள் முடியவில்லை என்றால் பிறர் நேசிப்பதை யோசித்து பாருங்கள் அன்பு உங்களை அடிமையாக்கி விடும்...

    • 0 replies
    • 1.7k views
  3. Started by கோமகன்,

    ஏதாவது செய் ஏ........... தாவது செய் சக்தியற்று செய்ய தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீரியமிழந்தவன் என்றும் குத்திக்காட்டும். ஏதாவது செய்.

  4. கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளைக் கனவுகள்.. ஒரு பழங்கிணற்றின் அடியில் உடையும் நீர்க்குமிழியென உடைகிறது என் ஒவ்வொரு ‘தேசத்தின் கனவுகளும்..’ கார்த்திகை தீபத்தன்று பனைப் பூ முடிந்து சிறுவர்கள் சுழற்றும் மாவலியிலிருந்து உதிரும் நெருப்புமீன்களாக பறந்து பறந்து வெளிச்சமிழந்து மண்ணில் புகுகிறது – என்னந்தக் கனவுகளும் ஆசைகளும்.. எட்டி கிளை நுனி பிடித்திழுத்து பறித்துக் கொள்ளும் இலைகளாகவும் உதிர்ந்து காலுக்கடியில் மிதிபடும் மலர்களின் கண்ணீர் தொய்ந்த வாசமாகவும் எம் கனவுகள் இத் துரோக மண்ணில் காய்ந்துப் போவதின்னும் எவ்வுயிர் பிரிந்து மிஞ்சும் கடைசி பொழுது வரைக்குமோ.. அறியோம்; அறியோம்; இறக்கை முறித்து - உயிர் உதிர்த்து - உடல் முடைந…

  5. நான் என்றுமே நேரம் தவறுவதில்லை எல்லாம் உங்களிடம் கற்றுக் கொண்டதுதான் பிந்திச் செல்வதால் நீங்கள் படும் அவஸ்தையை பக்கத்தில் இருந்து அடிக்கடி பார்ப்பவன் நான் ..... நீங்கள் தள்ளாடி நடந்ததாய் எந்த பதிவும் இல்லை என்னிடம் எத்தனை மணிக்கு வந்தாலும் ''எல்லாரும் சாப்பிட்டாச்சா'' என்று கேட்பதில் நீங்கள் தனிரகம்.... அதிகாரம் செய்வது உங்களுக்கு பிடித்தமானதொன்று ஆனால் பணியாட்களிடமும் அன்பு தான் அடிக்கடி பொறாமைப்படுவேன் உங்களைபார்த்து ''எப்பிடிதான் இவரால மட்டும் முடியுதோ ''என்று ஆனாலும் அருமையான அப்பா எனக்கு !!!!!!! ''செய்யமாட்டேன்'' என்று சொல்லி அதை செய்துமுடித்து செய்யாதது போல இருப்பது உங்கள் கை வந்த கலை அது தெரிந்த போதிலும் உங்களிடம…

  6. மாரீசன் என்ற மாயமானில், மதியிழந்த சீதா தேவியின், மயக்கம் போல, இரவு பகலாகத், தினமும் பூக்கின்ற,, இணையத் தளங்களின் பூக்களால், பாலும், நீரும் கலந்த கிண்ணத்திளிருந்து, பாலை மட்டும் பிரித்தெடுக்கும், வல்லமையில்லாத, பாவப் பட்ட அன்னப் பறவையாய், உண்மையும் பொய்யும், ஒன்றுடன் ஒன்று, குலவிக் கலவும் , உலகத்தில், உண்மையைத் தேடுகின்றேன்! பொன்னும், மணியும், புன்னகைகளும் அணிந்து, பொய்மை வலம் வருகின்றது. மண்ணின் மைந்தர்கள், என்ற கவசம் பூட்டித், தென்றல் காற்றின் மென்மையோடு, பொய்மை உலா வருகின்றது. புனிதமேனும் பேழையில். பத்திரமாகப் பூட்டிவைத்துப், பீடத்தில் அமர்த்தித், தூவிய அர்ச்சனைப் பூக்களிலும், துளித் துளியாய்ச் சிந்திய, துவர்ப்பு…

  7. நாவீரமாய், விலக்கவோ இழக்கவோ முடியவில்லை நினைவுகளை ............. கள்,கள்ளகசிப்பு ௬ட தந்ததில்லை வெடித்தெழும் போதை _உன் விழி மடிக்கையில் விழுதுப்பாலாய் ஒட்டிவிட்டது வெண்சிரிப்பு _இனி அழுது முடியுமோவென் பிழைப்பு . பாடை மேளம் எல்லாம் தயாராக, ஊர்வலம் பிந்துகிறது . அட நான் இன்னும் சாகவில்லையே ............! வத்தாக்கிணற்றடியில் முத்தாதகொவ்வை பளபளப்பு , பாவற்காய் மினுமினுப்பு , என்னவோ செய்யுது , சரம் தூக்கி நடப்பது , றோட்டில் நாயை துரத்தி ஓடி மகிழ்வது _என் மட்டுமிருந்த எனை தாடி சொறிந்து வானம் பார்க்க வைத்த கொடுமை ....... காத்தடிக்க நீவர சைக்கிள் கடையிலிருந்த எனக்கல்லவா வேர்த்தது ? எப்பவோ …

  8. முள்ளிவாய்க்காலும், கொல்லிஅலைக் காலரும் ... அள்ளிய உயிர்கள் கொஞ்ச நஞ்சமல்ல!!! கடவுளரும் கண்மூடிப் பார்த்திருக்க ... கடலன்னைகூட இரக்கமற்றுப் போனாளே!!! போற்றித் துதித்த மரியன்னை கூட ... வேடிக்கைதான் பார்த்திருந்தாராம்! கடவுளர் மேல் நம்பிக்கை போய்.... ஏழு வயசாச்சு எனக்கு! - ஆனாலும், மீண்டும் சோதிச்சு ... மூன்று வருசமாகுது! ! முள் முடி தரித்த யேசு கூட.... செல்லடிக்கு பயந்து ஒளிந்து போனாரோ?! - இல்லை, புத்தரிடம் சரணடைந்து.... முள்வேலிக்குள்.... சிலுவை சுமந்தாரோ?! வைக்கோற் போருக்குள் பாலகன் பிறந்து மகிழ்ந்திருக்க... நம் பாலகர்களை ...பனை வட்டுக்குள்ளும் முள்வேலிக்குள்ளும் அல்லோ, பொறுக்கியெடுத்து... பொங்கியழுது ...பின் பொறுத்துக்கொண்டோம்!!! …

  9. Started by கோமகன்,

    இது......... இந்தப் பாலகனது இரண்டாவது பா . எனது சகபடைப்பாளிக்குப் பதிவாகப் போட்டாலும் , பாணர்கள் வரிசையில் இடம்பிடிக்க ஓர் உந்தல் . பாலகனைத் தூக்குவீர்களா உறவுகளே??????????? நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார் பாலகனின் வருகையை வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!! எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!

  10. வடக்கால உள்ள காணியை அடகுக்கு விட்டு ஊர் சாகட்டும் நீ பத்திரமா.. வடக்கை விட்டு ஓடு என்று ஆத்தா விரட்டி அடிக்க.. ஓடி வந்து.. சிங்களக் குகையினில் சிங்கிள் றூமில.. பதுங்கிக் கிடந்து.. எனக்கு முதலாவே செல்லடிக்க முதலே 83 யூலையோட.. வசதியா தாம் வாழ என்று இருந்த இரண்டு மாடி வீட்டை வித்துப் போட்டு.. மேற்கால ஓடி வந்த குடும்பத்தில வந்த ஒருத்தனை செற்றப் பண்ணி.. நானும் மங்கை என்று வந்து செற்றிலாகி இப்ப நாலு குழந்தை பெத்து அதுகளும் குழந்தை பெறும் நிலைக்கு வந்திட்டுதுகள்..! ஒரு நாள் தற்செயலா.. கண்ணாடி முன்னாடி நிதானமா நிற்க.. தலைமுடி ஓரமா டை பூசாமல் விட்டதால தெரிஞ்ச அந்த நரைக்கும் வெள்ளை முடிகள்... ஊரில.. வெத்தில…

  11. Started by pakee,

    ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. செல்லமாக சீண்டி உன்னைச் சிணுங்க வைக்க ஆசை நீ சிரிக்கும் அழகினிலே சித்தம் பறிகொடுக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத் தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை- உன் கோபப் பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போதும் உன் மடி சாய ஆசை...

  12. 'வாழ்தல் எனும் மரணிப்பு' எனும் இந்தக் கவிதை சரிநிகரில் என் சொந்தப் பெயரில் வெளியாகி இருந்தது. அந்தப் பெயரை மறைப்பு செய்து இதில் கவிதையை மட்டும் ஒட்டி உள்ளேன் அன்று சிங்களவர்களுக்கு மத்தியில் இருந்து சொந்தப் பெயரில் எழுதும் போது இருந்த அச்சமில்லா மனவுணர்வு, இன்று போலித் தமிழ் தேசியவாதிகள் மலிந்து போன காலத்தில் இல்லை என்பது ஒரு வெட்கப்படவேண்டிய முரண்நகை

    • 9 replies
    • 1.2k views
  13. தமிழீழம் கிடைத்தது போல் ஈழமண் துள்ளியது! எமதீழம் வந்து குந்தி... இந்தியமும் சொல்லியது! அமைதி என்று வந்ததற்காய், கொஞ்சக் காலம்... சொந்தங் கொஞ்சித்தான்... கோலம் போட்டார்கள்!!! சில காலை விடிவதற்குள்... கோலங் கலைந்து, அலங்கோலமான காலங்களில்... அரி மிஞ்சிய அசிங்கங்களை அரங்கேற்ற ஆரம்பித்த பாரதம், பாதகம் தனைமட்டும் பதறாமல் தொடங்கியது!!! பஞ்ச வேண்டுதலோடு பட்டினி கிடந்து போராடி... நலிந்து குறுகி, பார்த்தீபன் மடிந்த போதுதான்... உணர்ந்திருப்பார் மகாத்மா, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டில்... தான் சாகவில்லையென்று! வீணர்கள் பார்த்து ரசிக்க ...வீணாகிப் போனதோர் தியாகம்!!! பாரத தேசத்தின் பாதகங்கள்... புலி தரித்த ஆயுதங்களையும், பறித்து விட்டல்லோ தொடங்கியத…

  14. ஆதி மனிதன் பேச மொழியற்று ஆடைகள் அற்று திரிந்த அந்நாளில் எல்லாம் இருந்தன அண்டவெளி அழகாக இருந்தன. பூமி ஆடை கட்டி பூரித்திருந்தது. பச்சை நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலாடை பூவாடை கட்டிய பூமி தாய், நீராடையும் கட்டி இருந்தாள். மரங்களை விறகுக்காக வெட்டாத கோடரி பாவனைக்கு வராத காலம் காடுகள் கற்பழிக்க படாது காயங்களின்றி கிடந்தன. குயில்களின் பாட்டை எல்லோரும் கேட்டனர் எவரும் கல்லெடுத்து அடிக்கவில்லை. கந்தக கலப்பில்லாத காற்றும், அமிலமற்ற ஆற்று நீரும் கிருமி நாசினியற்ற கிழங்கு வகையும் பேசா மனிதனை போசித்தன. இயற்கை மாசற்ற மனிதனை உருவாக்கியது. பேச மொழி அற்று இருந்த போதும் மனிதன் சிரித்தான். யானையை வாலில் பிடித்து தூக்கும் வல்லமை அவனுக்கிருந்தது. கூட்டமாக ந…

  15. வேற ஒன்றை தேடும் போது இன்று நான் 1996 இல் 22 வயதில் எழுதிய ஒரு கவிதையை Google ஆண்டவர் கொண்டு வந்து காட்டினார்.

    • 19 replies
    • 3.4k views
  16. என் மனநிலைக்குள் எனைத் தொலைக்க யார் காரணம் ? என் (தலை) எழுத்தின் தடைகளுக்கு... எவை காரணம் ? வெற்றுத் தாள்களில் எழுதிக் கசக்கியெறிந்தாலும், நிம்மதியாய் இருந்திருக்குமோ ??? விளங்கவில்லை...! புரியவில்லை...!! தெரியவில்லை...!!! கண்றாவிக் க(வி)தைகளை... கோவேறு கழுதைகளில் சுமந்த, பாவியாகிப் போனேனோ...... இன்று ? மற்றவரின் கேலித்தனமான அடைமொழிக்குள்... அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சா நான்? என்ற கேள்விகள் எனக்குள்! கேலிக்கூத்தாட,கேளிக்கை களியாட வென்றுகொண்டே இருப்பவர்களா நாம்?? விழுந்த வேகத்தில் எழும் என் வார்த்தைகளை... "அடக்குதல்" என்பதுதான் என் 'நாகரீகம்' என்பதுவும் வீண்தானோ??? கேள்விகள் கேட்கப்போனால்... நக்கீரன்களையும், நிறையக் கேட்கலாமோ? உண்மையான பதிலி…

  17. உன்னை பிரிய மனமின்றி பிரிந்து தனிமையில் திரிகிறேன் உன்னை பிடிக்காமல் அல்ல உன்னை காயப்படுத்தாமல் இருக்க...

  18. அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...

    • 4 replies
    • 1.3k views
  19. அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...

    • 0 replies
    • 743 views
  20. Started by pakee,

    நீ கொடுத்ததில் விலை மதிக்கமுடியாதது எது தெரியுமா? நீ உனக்கே தெரியாமல் எனக்கு கொடுத்த உன் நினைவுகள்தான்...

    • 0 replies
    • 822 views
  21. Started by pakee,

    எதையும் தாங்கும் இதயம் எனக்குள் இருக்கிறதென நீண்ட காலமாய் நினைத்துக் கொண்டிருந்தேன் உண்மை அதுவல்ல என்று உண்மையைச் சொன்னது உனது பிரிவு!...

    • 2 replies
    • 1.1k views
  22. யாருக்காக சிரித்தாயோ அவரை ஒருவேளை நீ மறந்துவிடலாம்... ஆனால் யாருக்காக அழுதாயோ அவரை ஒரு நாளும் உன்னால் மறக்கவே முடியாது...

    • 0 replies
    • 1k views
  23. படித்ததில் பிடித்துப் போய் பகிர விரும்பும் ஒரு கவிதை இது விகடன் இணையத்தில் உலாவரும் போது கண்ணில் பட்ட ஒரு கவிதை. நானே கேள்வி நானே பதில் பகுதியில் இடம்பெற்று இருந்தது. ''ராஜபக்ஷே...'' ''சமீபத்தில் 'காக்கைச் சிறகினிலே’ என்கிற சிற்றிதழில் படித்த ஸீர்கோ பெகாஸின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது... 'வான்வெளியில் கொல்லப்பட்டன அந்தப் பறவைகள் கொலைகாரர்களுக்கு எதிராக நட்சத்திரங்களும் மேகங்களும் காற்றும் கதிரவனும் சாட்சி கூறவில்லை என்றாலும் அடிவானம் அதுபற்றிக் கேட்க விரும்பவில்லை என்றாலும் மலைகளும் ஆறுகளும் அவற்றை மறந்துபோய்விட்டாலும் ஏதேனும் ஒரு மரம் அந்தக் கொடுஞ்செயலைப் பார்த்துத்தானிருக்கும் தன் வேர்களில் அக்கொடியோனின் பெயரை எழுதிவைக்கத…

  24. Started by pakee,

    மாய உலகமிது எதுவும் உண்மையில்லை - நம்பாதே எதையும் நம்பாதே யாரையும் நம்பாதே எல்லாம் பொய் யாரையும் எதையும் உன்னால் மாற்ற இயலாது மாற்றவும் வேண்டாம் யாருக்காகவும் நீ மாறாதே ! நீ நீயாகவே வாழ் - முழுமையாக உண்மையாக ! உறுதியாக ! நீயாக மாறிவிடு..... உன்னைத்தேடு கண்டுப்பிடி நீ யார் என்றறி நீ உன்னை அறிந்தால் இவ்வுலகமே உன்னை அறியும்...

    • 0 replies
    • 1.3k views
  25. புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ திட்டம் போட்டு அறுந்த விழ…

    • 10 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.