Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஜெய் நடித்துள்ள வடகறி படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார் பாலிவுட்டின் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன். அப்படத்துக்காக அவர் ஆடும் அயிட்டம் பாடலும் படமாக்கப்பட்டு விட்டது. இதையடுத்து, மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து ஒரு பக்கம் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார் சன்னி. இந்நிலையில், இந்தியில் அவர் நடித்துள்ள எம்எம்எஸ்-2 என்ற இந்தி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கிவிட்டுள்ளது. ராகினி என்ற பெயரில் பாலிவுட்டில் வெளியான படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில், முதல் பாகத்தை விடவும் தனது கவர்ச்சியால் ரசிகர்களை பெரிய அளவில் அட்டாக் பண்ணும் வகையில் ஆவேச புயலாகியிருக்கிறாராம் சன்னி. படத்தின் முன்னோட்டமே அதை உணர்த்தி விட்டதால் இளவட்ட ரசிகர்…

  2. ஒளிக்குத் தப்பிய வாழ்க்கை செல்லப்பா தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் (31.10.1931) வெளியாகி 82 ஆண்டுகளாகிவிட்டன. தமிழகத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் திரைப்படம் பார்க்கும் அனுபவம் விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. திரைப்படமோ அதுசார்ந்த மனிதர்களோ இல்லாவிட்டால் பெரும்பாலான தொலைக்காட்சி அலைவரிசைகள் தங்கள் நிகழ்ச்சிகளைக் குறிப்பாகச் சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரிக்கச் சிரமப்படும் என்பதே எதார்த்தம். ஒவ்வொரு வருடமும் சுதந்திரத் தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் வசீகரமான திரைத்துறை ஆளுமைகள் தம் அனுபவங்களை விவரித்து உரையாடும் காட்சிகள் பெரும்பாலான தொலைக்காட்சிகளில் காணக்கூடி…

  3. பிரபுதேவாவை மன்னிக்க முடியாது… நயன்தாரா. சிம்புவையாவது மன்னிக்கலாம்... ஆனால் பிரபுதேவாவை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சிம்பு உடன் நயன்தாரா நடித்தபோது காதல் மலர்ந்தது. ஊடகங்களில் கிசுகிசு பரவி அது உண்மையானது. ஆனால் அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியானதால் அந்த காதல் முறிந்து போனது. பிரபுதேவாவுடன் அவருக்கு ஏற்பட்ட காதல்தான் அடுத்த கட்டமான கல்யாணம் வரை சென்றது. திருமண தேதி அறிவிக்கயிருந்த நேரத்தில் பிரபுதேவாவுடனான உறவையும் முறித்துக்கொண்டு வெளியேறினார் நயன்தாரா. சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் தொடங்கியுள்ள நயன்தாரா மீண்டும் பிஸியாக நடித்துக்கெணர்டிருக்கிறார். நன்றி தற்ஸ்தமிழ்.

  4. பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் காலமானார். ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஹைதராபாத்தில் காலமானார். அவருக்கு வயது 90. தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் நாகார்ஜூனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வரராவ் கடந்த 1923-ம் ஆண்டு பிறந்தவர். சமீபத்தில் தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடிய இவர், கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்ப்பட்டிருந்த அவர் இன்று அதிகாலையில் மரணம் அடைந்தார். 1940-ம் ஆண்டு தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் தெலுங்கு உட்பட பல்வேறு மொழிப்படங்களில் நாகேஸ்வரராவ் நடித்துள்ளார். தேவதாஸ் படத்தில் நடித…

  5. மாரிமுத்து இயக்கத்தில் விமல், பிரசன்னா, இனியா, அனன்யா, ஓவியா நடிக்கும் படம் 'புலிவால்'. மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘சாப்பகுரிஷி’ என்ற படத்தின் ரீமேக் படம் இது. 'சாப்பகுரிஷி' படத்தில் ஃபஹத் பாசில் , ரம்யா நம்பீசனுக்கு லிப் லாக் முத்தம் ஒன்றை கொடுத்திருப்பார். அதேபோன்று ஒரு முத்தக் காட்சி 'புலிவால்' படத்திற்காக சமீபத்தில் எடுக்கப்பட்டது. ஓவியாவுடன் இந்த முத்தக்காட்சியில் நடிக்கும் போது பிரசன்னா மிகவும் பதட்டப்பட்டாராம். உடனே ஓவியா தைரியம் கொடுத்து பிரசன்னாவை நடிக்க வைத்தாராம். பிரசன்னாவின் பதட்டத்தால் இந்த முத்தக்காட்சியை படமாக்க 12 டேக் வரை எடுக்கப்பட்டதாம்.12வது டேக்கில் அந்த முத்தக்காட்சி ஓ.கே ஆகியிருக்கிறது. http://cinema.vikatan.com/articles/news/28/3604

  6. திருவனந்தபுரம்: நடிகை நஸ்ரியா நஸீமுக்கும், தனது மகனும் நடிகருமான பஹதுக்கும் திருமணம் நடக்கப் போவதாக இயக்குனர் பாசில் தெரிவித்துள்ளார். நஸ்ரியாவின் பெயர் படங்கள் தொடர்பாக செய்திகளில் வருவதை விட சர்ச்சை, கிசுகிசுக்களுக்காக அதிகம் வருகிறது. நஸ்ரியா மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. துல்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்நிலையில் நஸ்ரியாவின் திருமணம் குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது. More : http://oneindia.in/tamil/movies/heroines/nazriya-marry-director-fazil-s-son-fahad-191682.html

  7. யாழ்... இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணக் கதை! யாழ்ப்பாணத்தையும் தமிழர் கலாச்சாரத்தையும் மையப்படுத்தி உருவாகும் படம் யாழ். இதில் இதுவரை சொல்லப்படாத யாழ்ப்பாணத்தின் கதையை முழுக்க முழுக்க ஈழத் தமிழர்களைக் கொண்டே சொல்லியிருக்கிறார்களாம். மிஸ்டிக் பிலிம்ஸ் சார்பாக ஆஸ்திரேலியா வாழ் தமிழர் எம்.எஸ். ஆனந்த் தயாரிக்கிறார். இப்படத்தில் வினோத், சசி கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக லீமா, மிஷா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சானா, சார்மி, வீரசந்தானம் ஜெ.பி, கைலாசம்பிள்ளை, சஞ்சீவி, சார்லஸ் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ரக்ஷனா நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.ஆனந்தே படத்தை இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "யாழ் திரைப்படம் ஒரு வித்தியாசமான…

    • 12 replies
    • 1.7k views
  8. வாரணம் ஆயிரம், வேட்டை, நடுநிசி நாய்கள், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. இவருக்கும் மும்பை தொழிலதிபர் ஒருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் திருமணம் என்று தேதியும் இருவீட்டார் சம்மதத்துடன் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீர் என மும்பையில் உள்ள சமீரா ரெட்டியின் வீடு நேற்று முதல் பரபரப்புடன் காணப்பட்டது. காரணம் கேட்டபோது இன்று மாலை சமீராவுக்கும் அதே தொழிலதிபருக்கும் இன்று மாலையே சமீராவின் வீட்டில் ரகசிய திருமணம் நடக்கவுள்ளதாக செய்திகள் கசிந்தன. பத்திரிகையாளர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல், நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்கின்றனர். மணமகன் திடீரென தொழில் சம்பந்தமாக வெளிநாடு செல்ல இருப்பதால் உடனடி த…

    • 0 replies
    • 691 views
  9. தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பது நேர விரயமே என எனக்கு நானே நீண்டகாலமாகச் சொல்லிக்கொண்டாலும் அது நிறுத்திவிட முடியாத கெட்ட பழக்கமாகவே என்னைத் தொடர்கிறது. தமிழ்த் திரையெங்கும் குவிந்துகிடக்கும் வண்ண வண்ணப் பிரமாண்டக் குப்பைகளிடையே ‘தூங்கும் பனிநீரே’ என்ற குடியானவனின் பாடலைப் போலவோ, கு. அழகிரிசாமியின் ஒரு சிறுகதையைப் போலவோ, பஷீரின் ஒரு நாவலைப் போலவோ, சீனத்துச் சினிமாவான ‘ரூகெதரை’ப் போலவோ எளிமையும் உண்மையும் அழகியலும் கொண்ட ஒரு தமிழ்ப்படத்தைக் கண்டெடுத்துவிட மாட்டேனா என்ற நப்பாசையே தொடர்ந்தும் என்னைத் தமிழ்ச் சினிமாவைப் பார்க்க வைக்கிறது. இது பெரியார் சொன்னதுபோல மலத்தில் அரிசி பொறுக்கும் முயற்சிதான். பத்து வருடங்களிற்கு ஒருமுறை அப்படி ஓர் அரிசி கிடைத்தும் விடுகிறது. அண்மையில் எனக…

    • 0 replies
    • 801 views
  10. லைட்டாப் பொறாமைப்படும் கலைஞன் இசை தினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில்ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு. இலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந…

  11. http://youtu.be/79_EosxhbWY http://youtu.be/PkoloYY9KrA

  12. "வீரம்" ஹிட்டானால்... சம்பளத்தை உயர்த்த, தமன்னா திட்டம். சென்னை: வீரம் படம் ஹிட்டானால் தனது சம்பளத்தை உயர்த்தும் எண்ணத்தில் உள்ளாராம் தமன்னா. கோலிவுட்டில் டாப் கியரில் சென்ற தமன்னாவின் மார்க்கெட் திடீர் என்று சரிந்தது. ஒரு கட்டத்தில் தமன்னா கோலிவுட்டில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் தான் அவருக்கு அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீரம் படத்தை நடித்து முடித்துள்ள அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்துள்ளன. மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கோடிகளில் சம்பளம் வாங்கியவர் தமன்னா. அதன் பிறகு அவரது சம்பளம் குறைந்துவிட்டது. இந்நிலையில் வீரம் படம் ஹிட்டானால் கோலிவுட்டில் தனது சம்பளத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளாராம் தமன்னா. வீரம் தனக்க…

  13. சென்னை:ஆர்யா படத்துக்கு கால்ஷீட் மறுத்த ஸ்ருதிஹாசன், விஷாலுடன் நடிக்கவும் மறுத்துள்ளார்.மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் மீகாமன். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனிடம் பேசப்பட்டது. இந்தியில் 2, தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி. ஆர்யாவுடன் நடிக்க கேட்டதும் யோசித்து சொல்வதாக சொன்னவர், பதிலே சொல்லவில்லையாம். பிறகு மீண்டும் தயாரிப்பாளர் தரப்பில் கேட்டபோது கால்ஷீட் இல்லை என மறுத்துள்ளார். ஆர்யாவின் நெருங்கிய நண்பர் விஷால். அவன் இவன் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருவரும் தோழர்கள் ஆகிவிட்டனர். இந்நிலையில் ஹரி இயக்கும் படத்தில் விஷால் நடிக்கிறார். ஸ்ருதியை மீகாமன் படத்தில் நடிக்க வைக்கலாம் என ஐடியா கொடுத்தவர் ஆர்யா. அதேபோல் தனது படத்திலும் …

  14. சென்னை: மலையாளத்தில் நீலதாமர என்ற படத்தில் முதன்முதலாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்பட பயணத்தை தொடங்கினார் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அமலா பால். சிந்து சமவெளி படம் ஏற்படுத்திய சர்ச்சைகளை மறக்கடித்து, அமலா பாலை நடிக்கத் தெரிந்த நடிகை என்ற பெருமையைப் பெற்றுத் தந்தது மைனா. அதனைத் தொடர்ந்து, அமலா பால் நடித்த வேட்டை, தெய்வத் திருமகள் மற்றும் தலைவா போன்ற படங்கள் மூலம் பிரபலமானார். தற்போது தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது திருமணம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- எனக்கு 22 வயது தான் ஆகிறது. எனக்காக திருமணம் சற்று காத்திருக்கும். திருமணம…

  15. தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான வே.பாலச்சந்திரனின் கதை திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. பாலச்சந்திரன் கதையை 'புலிப்பார்வை' என்ற பெயரில் சினிமாவாக எடுக்கிறார்கள். பிரவீன் காந்த் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். இதனை வேந்தர் மூவீஸ் மதன் தயாரிக்கிறார். 100 சிறுவர்களை நேர்காணல் நடத்தி பாலச்சந்திரன் போன்ற தோற்றம் கொண்ட சிறுவனை கண்டுபிடித்து நடிக்க வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிக் கட்டப் போரில் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகைப்பட ஆதாரங்களுடன் ஆவணப்படம் வெளியிட்ட செனல் 4 தொலைக்காட்சி பின்னர் பாலச்சந்திரன் உயிருடன் பிடிபட்டு பிஸ்கட் உண்ணும் காட்சி அடங்கிய ஆதாரத்துடன் மற்றுமொரு ஆவணப்படத்தையும் வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தால…

  16. Best picture 12 Years a Slave American Hustle Captain Phillips Dallas Buyers Club Gravity Her Nebraska Philomena The Wolf of Wall Street Best picture nominees in profile Best director Alfonso Cuaron, Gravity Steve McQueen, 12 Years a Slave Alexander Payne, Nebraska David O Russell, American Hustle Martin Scorsese, The Wolf of Wall Street Director profiles Best actor Christian Bale, American Hustle Bruce Dern, Nebraska Leonardo DiCaprio, The Wolf of Wall Street Chiwetel Ejiofor, 12 Years a Slave Matthew McConaughey, Dallas Buyers Club Actor profiles Best actress Amy Adams, American Hustle Cate Blanchett, Blue Jasmine Sandra Bullock, Gravity …

    • 0 replies
    • 588 views
  17. -எஸ் ஷங்கர் Rating: 3.0/5 நடிப்பு - விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், சூரி, மகத், சம்பத், பூர்ணிமா ஜெயராம் இசை - டி இமான் ஒளிப்பதிவு - கணேஷ் ராஜவேலு தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி இயக்கம் - ஆர்டி நேசன் ஆக்ஷன் கதைகளுக்கு லாஜிக் தேவையில்லை என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. ஆனால் அதற்காக இப்படியா? என்ற கேட்க வைக்கிற, கற்பனையை தோற்கடிக்கும் போலீஸ் ஸ்டோரி, விஜய் - மோகன்லால் நடித்துள்ள ஜில்லா. மதுரையின் அசைக்கமுடியாத தாதா மோகன்லால். தன்னை எதிர்க்க வேண்டும் என்ற நினைக்கு ஒருவனுக்கு எழுந்தாலே அவனை அழித்துவிடும் சிவன். (ஜில்லா படங்கள்) அவரது வளர்ப்பு மகன்தான் விஜய். தன் ஒரிஜினல் அப்பாவை கண்ணெதிரிலேயே போலீஸ் சுட்டுக் கொன்றதைப் ப…

  18. UTV மோஷன் பிக்சர்ஸ், விஷால் பிலிம் பாக்டரி இணைந்து தயாரித்து வரும் படம் “நான் சிகப்பு மனிதன்”. இதன் படப்பிடிப்பு கடந்து ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு பாடலை ஜீ.வீ.பிரகாஷ் உருவாகியுள்ளார். வெள்ளை, மஞ்சள், கருப்பு, நீளம், பச்சை என ஐந்து நிறங்களை வைத்து நா.முத்துகுமார் இப்பாடலை எழுதியுள்ளார். “ஏலேலோ மெதப்பு வந்திருச்சி...” என்ற இப்பாடலை ஜீ.வீ.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்காக முட்டுக்காடு அருகில் கடல் தண்ணி சூழ்ந்துள்ள இடத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் ‘சர்ச்’ செட் போடப்பட்டது. “பருத்திவீரன்”, “ஆடுகளம்” படங்களுக்கு பணிபுரிந்த ஜாக்கி இதை உருவாக்கியுள்ளார். திடீரென உருவான இந்த ‘சர்…

  19. -எஸ் ஷங்கர் Rating: 3.5/5 நடிப்பு - அஜீத், தமன்னா, விதார்த், நாசர், சந்தானம், பாலா, அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத், முனீஷ், சோஹைல் ஒளிப்பதிவு - வெற்றி எடிட்டர் - மு காசி விஸ்வநாதன் வசனம் - சிவா, பரதன் தயாரிப்பு - விஜயா புரொடக்ஷன்ஸ் எழுத்து, இயக்கம் - சிவா தமிழ் சினிமாவின் எவர்கிரீன் வெற்றி ஃபார்முலாவான அண்ணன் - தம்பி பாசம், காதலை கமகம பொங்கல் மசாலாவாகத் தந்திருக்கிறார் இயக்குநர் சிவா. படத்தில் அதிகபட்ச, நம்ப முடியாத ஹீரோயிசம் இருந்தாலும், ஏன் எதற்கு என்று கேட்க வைக்காமல் பரபரவென காட்சிகளை நகர்த்தியிருப்பது ரசிகர்களை இருக்கையில் கட்டிப் போட வைக்கிறது. மதுரை ஒட்டன்சத்திரம்தான் கதைக் களம். இங்கு தானிய கிடங்கு வைத்திருக்கும் விநாயகம…

  20. டைட்டிலைப் பார்த்ததும் என்னடா இது ஹன்சிகாப் பத்தின ஏடாகூடமான மேட்டர்னு நெனைச்சிற வேணாம். இது அவர் நடிச்சிருக்கிற படத்தைப் பத்தின நியூஸ் தான். பல மொழி மாற்றுப் படங்களை தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் எஸ்.சுந்தரலட்சுமி தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற “தேனிகா நானா ரெடி” ங்கிற படத்தை தாம் தமிழ்ல ‘நாங்க எல்லாம் அப்பவே அப்படி’ங்கிற பேர்ல டப் பண்ணி ரிலீஸ் பண்ணப்போறாங்க. ஹீரோவாக விஷ்ணு மோகன்பாபு நடிக்கிறார், ஹீரோயினாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். மற்றும் சீதா, சுமன், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ், ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருக்கிறார் ஏ.ஆர்.கே.ராஜராஜா. இவர் இருநூறுக்கும் மேற்பட்ட படங்களை த…

  21. 6 ஜனவரி 2014 ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் பஞ்சகட்டா பகுதியில் தனது அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வைத்து தெலுங்கு நடிகர் உதய் கிரண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு வயது 33 இருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த 2000ம் ஆண்டு தெலுங்கு திரைப்படங்களில் முதன்முதலாக தோன்றி நடிக்க ஆரம்பித்த உதய் கிரண் சித்திரம் என்ற தெலுங்கு படம் வழியாக ரசிகர்களிடம் பிரபலமானார். இந்த படத்தை தேஜா இயக்கியிருந்தார். மேலும் நுவ்வு நேனு மற்றும் மனசந்தா நுவ்வே உள்பட சில பிரபலமான படங்களிலும் அவர் நடித்துள்ளார். கடந்த 2013ம் ஆண்டு... ஏப்ரல் மாதத்தில் வெளியான ஜெய் ஸ்ரீராம் படத்தில் இவர் கடைசியாக நடித்திருந்தார். அதனுடன், 3 தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில…

  22. நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு திடீர் ஆபரேஷன் நடந்தது. கமல் மகள் ஸ்ருதிஹாசன். தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக மும்பையிலிருந்து சமீபத்தில் ஐதராபாத் வந்தார். விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு ஸ்கேன் பரிசோதனை எடுத்தனர். அப்போது வயிற்றில் குடல்வால் நோய் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். இது பற்றி ஸ்ருதி தரப்பில், கமலிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஐதராபாத் மருத்துவமனையிலேயே ஸ்ருதிக்கு ஆபரேஷன் செய்யும்படி கூறினார். இதையடுத்து ஸ்ருதி ஹாசனுக்கு ஆபரேஷன் மூலம் குடல்வால் அகற்றப்பட்டது. இது குறித்து ஸ்ருதி மேனேஜரிடம் கேட்டபோது, ஸ்ருதி தைர…

  23. இலங்கை இறுதியுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா பற்றிய திரைப்படமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். ஹபோர்களத்தில் ஒரு பூ' என்ற தலைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை கணேசன் இயக்குகிறார். கன்னடத்தில் சில படங்களுக்கு பணியாற்றிய இவர், தமிழில் இயக்கும் முதல் படம் இதுவாகும். இதில் இசைப்பிரியாவின் கதாபாத்திரத்தில் அனு என்பவர் நடித்து வருகிறார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஆரம்பத்தில் இசைப்பிரியாவின் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனரே அவரைப் பற்றி எனக்கு விபரமாகக் கூறினார். மேலும், சில வீடியோக்களையும் காண்பித்தார். அதை கேட்பதற்கும் பார்ப்பதற்க…

  24. 06.01.2014 சென்னை சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கடந்த மாதம் 23–ந்தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ‘ஆஞ்ஜியோ பிளாஸ்ட்’ சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் கடந்த மாதம் 27–ந் தேதி அவர் வீடு திரும்பினார். சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்தபின், மீண்டும் இசையமைக்க தொடங்கியிருக்கிறார். இன்று (திங்கட்கிழமை) சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெறும் ‘ராஜராஜ சோழனின் போர்வாள்’ என்ற படத்தின் பாடல் பதிவில் கலந்து கொண்டு அவர் இசையமைக்கிறார். இந்த படத்தை கவிஞர் சிநேகன் தயாரித்து கதாநாயகனாக நடிக்கிறார். அமுதேஸ்வர் டைரக்டு செய்கிறார். தொடர்ந்து அமீதாபச்சன் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கும், இன்னொரு புதிய இந…

  25. நடிப்பு பட்டறையில் மூன்று வருட பயிற்சி…, முறைப்படி நடனம்…! இவற்றின் விளைவாய்.. ஷங்காய் ஃபிலிம் பெஸ்டிவலில் சிவப்புக்கம்பள வரவேற்பு…. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் நடிகை தேனுகா. ஈழத்தமிழர்களின் சாதனை திரைப்படமாகிய எ கன் அண்ட் எ ரிங் படத்தின் நாயகி..! 'எ கன் அண்ட் எ ரிங்' திரைப்படம் தான் தேனுகாவின் முதல் படம். இதற்கு முன் இவர் வேறு எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. இப்போது ஒரு ஜெர்மேனிய படத்தில் நடித்துக்கொண்டிருந்தவரை இலங்கை கலைஞன் இணையத்தளத்திற்காக தொலைபேசியில் பிடித்தோம். பேச்சில் அத்தனை அமைதி.. மிக எளிமையாக, மிக சாதாரணமான ஒரு பெண்ணாக எங்களுடன் தன் அனுபவங்களை அழகு தமிழிலில் பகிர்ந்துகொண்டார். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்? …

    • 7 replies
    • 946 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.