Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. செல்வராகவன் இயக்கிய முதல் படத்தில் இருந்தே தனக்கென்று தனிப்பாணியைப் பின்பற்றி படம் எடுத்து வருகிறார். மயக்கம் என்ன படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படம் இரண்டாம் உலகம். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், அனுஷ்கா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படம் பற்றிய டாப் சீக்ரெட் தகவல் ஒன்று தற்போது வெளியே கசிந்துள்ளது. See more at: http://www.vuin.com/news/tamil/arya-landed-in-a-new-planet

    • 0 replies
    • 298 views
  2. மணிமேகலையின் தேவதைகள் வாசிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்த, மற்றும் கணணி வசதிகளும் கொண்ட பெரும்பான்மையானவர்களுக்கு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பதற்கும் அனைவருடனும் பகிர்வதற்கும் பல்வேறுவகையான சாதனங்களும் சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இன்றுள்ளன. ஆகவே அளவுக்கதிகமான கருத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதைவிட அதிகமாக விமர்சனங்கள் மலிந்து போயிருக்கின்ற சூழலாக இருக்கின்றது இன்று. இருப்பினும் இது ஒரு வகையில் ஆரோக்கியமானதுதான். ஆனால் இந்த கருத்துக்கள விமர்சனங்கள் எந்தளவு பொறுப்புணர்வுடன் முன்வைக்கப்படுகின்றன என்பதில் கேள்வி உள்ளது. பொதுவாக பெரும்பாலான விமர்சனங்கள் எனப்படுபவை தமது நண்பர்களின் அல்லது ஓரே கருத்துடையவர்களின் படைப்புகளை புகழ்ந்தும…

    • 9 replies
    • 1.5k views
  3. துப்பாக்கி படத்தைத் தொடர்ந்து ‘தலைவா’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இளையதளபதி விஜய். இந்தப் படம், மும்பையில் வாழ்ந்து மறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையை புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது. இதே வரதராஜ முதலியார் கதையை மணிரத்னம் நாயகனாக எடுத்தார். அதில் கமல் தனது வாழ்நாள் கதாபாத்திரத்தை வாழ்ந்திருந்தார். ஆனால் விஜய்க்கு இத்தனை இளம் வயதில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் ஒகேதானா என்று விஜயின் அப்பா எஸ்.ஏ.ஏசியிடம் கேட்டபோது “ விஜய் நாற்பது வயதைக் கடந்துவிட்டார். இந்தப் படம் பண்ண இதுதான் சரியான தருணம். படம் முடிந்து டபுள் பாசிட்டிவ் எனக்குப் போட்டுக்காட்டினார்கள். எனக்கே விஜய் மீது கூடுதல் மரியாதை வந்துவிட்டது. See more at: http://vuin.com/news/tamil/who-is-t…

    • 0 replies
    • 608 views
  4. தடைகள் பல கடந்து வெளியான விஸ்வரூபம் தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்தியா ஆகிய மூன்று ஃபாக்ஸ் ஆபீஸ்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் வசூல் செய்தது! விஸ்வரூபம் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கமல் இயக்கி நடித்து வரும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் எதிர்பார்ப்பு வானளாவ உயர்ந்து நிற்கிறது. காரணம் சமீபத்தில் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், படம் எப்போது வெளிவரும் என கமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தற்போதைய நிலை என்ன? ‘விஸ்வரூபம் ’ படத்தின் திரைக்கதை எழுதும்போதே இரண்டு பாகங்களாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்ததால், முதல் பாகத்தில் நீக்கப்பட்ட காட்சிகளோடு புதிதாக பல காட்சிகளையும் சேர்த்து தயாராகி வருகிறது இந்த இரண்…

  5. தலைவா படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்வது என்று படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முடிவு செய்து இருப்பதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு சாதாரண இளைஞன், தான் வாழும் பகுதி மக்களுக்கு சின்னச்சின்ன உதவிகள் செய்யப்போய், ஒரு கட்டத்தில் எப்படி அந்தப் பகுதி மக்களின் அபிமானத்துகுரிய தலைவனாகவும் தாதாவாகவும் மாறுகிறான் என்பதுதான் தலைவா படம். மணி ரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் சாயல் படத்தில் கண்டிப்பாக இருக்கும், ஆனால் இது விஜய் ஸ்டைலில் இருக்கும் என்று கூறியிருக்கிறார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கும் சத்தியராஜ்! see more at: http://vuin.com/news/tamil/thala…

  6. கௌதம் மேனனனுக்கும் துப்பறியும் கதைக்கும் அப்படி என்னதான் மூன்றாம் பொறுத்தமோ, அஜித்துடன் ‘துப்பறியும் ஆனந்த்’ என்று பரபரப்பாகி, கதை பெரிதாகக் கவரவில்லை என்று கடைசிநேரத்தில் கழன்று கொண்டார். அதே கதையில் ‘ யோஹனாக’ மாற இருந்த விஜய்க்கும் அந்தக்கதையில் நடிக்கும் யோகம் இல்லை! தற்போது சூர்யா - கெளதம் மேனன் கூட்டணியில் அதேகதையில் படப்பிடிப்பிற்கு கிளம்பத் தயாராக இருந்த கடைசி நேரத்தில் 'துருவ நட்சத்திரம்' எரிநட்சத்திரமாகி கண் இமைக்கும் நேரத்தில் அடிவானத்தில் மத்தாப்பாக சிதறுவதுபோல இதுவும் டிராப்பாகி விட்டது என்று சூடு கிளம்பியிருக்கிறது கோலிவுட்டில். See more at: http://vuin.com/news/tamil/surya-to-stay-away-from-detective-script

  7. ஏ.ஆர். முருகதாஸ் – இளையதளபதி விஜய் இணையும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கப்போகிறார் என்று செய்திகள் பரபரத்துக் கிடக்கின்றன. லிங்குசாமி படத்தில் சூர்யா ஜோடியாக சமந்தா நடிப்பதைத் தொடர்ந்து, “ நமது படத்துக்கும் சமந்தாவையே ஒப்பந்தம் செய்யலாமே” என்றாராம் விஜய். இதை ஏற்று இயக்குனர் முருகதாஸ் முதலில் சமந்தாவிடம் கால்ஷீட்டுக்காக பேசியதும் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம். ஆனால் இயக்குநர் முருகதாஸூக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்கிறார்கள். விஜய்க்குச் சம்மதம் என்றானபிறகு முருகதாஸ் வேண்டாமென்று சொல்வது ஏன் என்று தெரியாமல் யூனிட்டில் பலரும் வியக்கிறார்களாம். - See more at: http://vuin.com/news/tamil/samantha-excluded-from-vijays-film

    • 0 replies
    • 494 views
  8. பாத்தநீங்க சொல்லுங்களே....

  9. "கடவுள் இருக்கிறார்" என்கிறார் ரஜனிகாந் 40514089da49c9eacbc393905cc43715

  10. அரசியல் பிரச்சனையால் சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தலைகாட்டும் வடிவேலுவின் புதிய படம், "ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. இதற்காக ஏ.வி.எம்., ஸ்டூடியோவில் பிரமாண்ட வடிவில் செட் அமைத்து 12 நாட்கள் இந்தப் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். முதலில் பாடல் காட்சியை படமாக்கிய அவர்கள் அதில் வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று எடுத்துள்ளனர். இப்படத்திற்காக பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடித்தாராம் வடிவேலு. தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் நடத்திட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வடிவ…

    • 0 replies
    • 1.3k views
  11. என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி. சென்னை: எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார். கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார். இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில், பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன் …

    • 2 replies
    • 942 views
  12. எண்டர் தி டிராகன் படத்தில் வில்லியம்ஸ் வேடத்தில் நடித்தார் ஜிம் கெல்லி எண்டர் தி டிராகன் எனும் பிரபலத் திரைப்படத்தில் புரூஸ் லீயுடன் நடித்த நடிகரும் கராத்தே வல்லுநருமான ஜிம் கெல்லி புற்றுநோய் காரணமாக தமது 67 ஆவது வயதில் காலமானார். 1973 ஆம் ஆண்டில் வெளியான எண்டர் தி டிராகன் திரைப்படத்தில், வில்லியம்ஸ் எனும் பாத்திரத்தில் நடத்த அவர் அதில் பேசிய ஒற்றை வசனங்களுக்காக நன்கு அறியப்பட்டார். பிளாக் பெல்ட் ஜோன்ஸ், த்ரீ த ஹார்ட் வே, கோல்டன் நீடில்ஸ் மற்றும் பிளாக் சமுராய் ஆகியவை அவர் நடித்த இதர பிரபலப் படங்கள். குங் ஃபூ தற்காப்பு கலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களில், மிகப் பிரபலமாவைகளில் ஒன்றாக எண்டர் தி டிராகன் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் புரூஸ் லீ நடித்த முதல் படமு…

  13. கமல் மகள் சுருதிஹாசன் படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ளது. 'டிடே' என்ற படத்தில் விலைமாது கேரக்டரில் ஆபாசமாக நடிப்பதற்கும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கமல் மகள் எல்லை தாண்டி கவர்ச்சியாக நடிக்கிறார் என்று என்னை விமர்சிக்கின்றனர். சினிமா என்பது ஒரு தொழில் நடிக்க வந்த பிறகு கதை என்ன கேட்கிறதோ அதில் முழுமையாக ஈடுபடவேண்டும். நீச்சல் உடையில் நடிக்க வேண்டிய நிலை வரும் போது நடிக்கத்தான் வேண்டும். அது தவறல்ல. விலைமாது கேரக்டரில் நான் ஆபாசமாக நடிக்கிறேன் என்கின்றனர். கலைகண்ணோட்டத்தோடு அதை பார்க்க வேண்டும். நிறைய நடிகைகள் விலைமாது கேரக்டரில் கவர்ச்சியாக நடித்துள்ளனர். அவர்களை யாரு…

    • 0 replies
    • 922 views
  14. சென்னை: இசை படம் இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறதாம். இதில் ஏ.ஆர். ரஹ்மான் தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி, இசையமைத்து, நடிக்கும் படம் இசை. இந்த படத்தில் அவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தோற்றத்தில் நடிக்கிறாராம். படம் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையைப் பற்றியது தானாம். இசைஞானி என்பதில் ஞானியைத் தூக்கிவிட்டு இசை என்று படத்திற்கு தலைப்பு வைத்துள்ளாராம் சூர்யா. படத்தில் இளையராஜாவை ரசிகர்கள் கடவுளாக நினைத்து வணங்கியது, போஸ்டர் அடித்து ஒட்டியது உள்ளிட்ட பல சம்பவங்கள் இடம்பெறுள்ளதாம். http://tamil.oneindia.in/movies/news/2013/07/isai-is-ilayaraja-s-biopic-178188.html

  15. உத்தரபிரதேச மாநிலம் பனாரஸ் தான் கதைக்களம். கோவில் புரோகிதரின் மகன் தனுஷ். கல்லூரியில் பேராசிரியரின் மகள் சோனம் கபூர். சிறு வயதிலிருந்து சோனம் கபூர் மீது தனுஷுக்கு ஒருவிதமான ஈர்ப்பு இருந்து வருகிறது. அது இளம்பருவத்தை அடைந்ததும் காதலாக மாறுகிறது. சோனம் கபூரும் தனுஷ் மீது காதலில் விழுகிறார். இந்நிலையில் மேல்படிப்புக்காக டெல்லிக்கு செல்கிறார் சோனம் கபூர். பிறகு ஒருவருடம் கழித்து இருவரும் சந்திக்கும்போது தனுஷ் மீதான காதலை வெறும் ஈர்ப்புதான் என்று கூறி மறுக்கிறார். இதனால் மனமுடையும் தனுஷ் சோனம் கபூருடனான நட்பை விடாமல் தொடர்ந்து பழகி வருகிறார். இந்நிலையில் சோனம் கபூரின் விருப்பமின்றி அவருடைய பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார்கள். இந்த திருமணத்தை நிறுத்த த…

    • 0 replies
    • 840 views
  16. வித்தகன், துரோகி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பூர்ணா. தற்போது ‘படம் பேசும்‘ என்ற படத்தில் சக்தி ஜோடியாக நடிக்கிறார். ராகவா இயக்குகிறார். இதனை நாராயணபாபு, பூர்ணிமா, வாசன் எஸ்.எஸ். தயாரிக்கின்றனர். இதில் நடிப்பது பற்றி பிரஸ் மீட்டில் பூர்ணா கூறியதாவது: இதுவரைக்கும் ஆறு படங்களில் நடிச்சுட்டேன். எதுவுமே ஓடல. ஆனால் இந்த படம் எனக்கு தமிழ்சினிமாவில் பெரிய இடத்தை கொடுக்கும். இப்படத்தின் கதையை இயக்குனர் ராகவா எனக்கு மெயிலில் அனுப்பி 2வது ஹீரோயினாக நடிக்க கேட்டிருந்தார். அந்த கேரக்டரை படித்ததும் வித்தியாசமாக இருந்தது. 2வது ஹீரோயின் பாத்திரமாக இருந்தாலும் நடிக்க சம்மதித்தேன். இதைவிட ஹீரோயின் வேடம் நன்றாக இருந்தது. அந்த கதா பாத்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனது…

    • 0 replies
    • 546 views
  17. ஒரு அழகான ஹீரோயின் கூட நான் டூயட் பாடறது கூட பொறுக்கல பல ஹீரோக்களுக்கு! - வடிவேலுஒரு அழகான ஹீரோயினுடன் நான் டூயட் பாடினா கூட இங்குள்ள பல ஹீரோக்களுக்கு பொறுக்கவில்லை, என்று கூறியுள்ளார் வடிவேலு. 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு வடிவேலு மீண்டும் நடிக்கும் படம் ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன். இதில் அவர் தெனாலிராமன், மன்னர் கிருஷ்ணதேவராயர் ஆகிய இரு வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு இந்தப் படத்தில் ஏகப்பட்ட ஜோடிகள். குறிப்பாக கிருஷ்ணதேவராயராக வரும் வடிவேலுவுக்கு 36 மனைவிகளாம்! படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தவர் பில்லா 2 படத்தில் நடித்த பார்வதி ஓமணக் குட்டன். ஆனால் இப்போது அவர் இல்லை. மீனாட்சி தீக்ஷித் என்பவர் நடிக்கிறார். இதுகுறித்து வடிவேலு கூறுகையில், "அந்தப் புள்ளை தாங…

    • 4 replies
    • 785 views
  18. நடிகை ஸ்ரேயா இப்போது சந்திரா, பவித்ரா என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சந்திரா படத்தில் இளவரசியாக அசத்தினாலும் பவித்ரா படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கிறார். அழகாக இருந்தாலும் சில படங்கள் மட்டுமே ஹிட் ஆகி தமிழில் சரியான வாய்ப்புகள் இன்றி இருக்கிறார் ஸ்ரேயா. தெலுங்கில் இஷ்டம், தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தில் அறிமுகமான ஸ்ரேயா, சிவாஜி படத்தில் ரஜினியுடன் ஜோடி என்ற அளவிற்கு உயர்ந்தார். அடுத்தடுத்த படங்கள் ஹிட் ஆகாமல் ஏமாற்றவே சரியான வாய்ப்புகள் இல்லை. ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால், என பல முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் சந்திரா, பவித்ரா படங்கள் தனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில…

  19. வாழ்க்கையில் குறைந்த பட்ச ஒழுக்கத்தை கூட கடைபிடிக்காதவர்களின் வாழ்வு இப்படி தான் இருக்கும். – எயிட்ஸ் பிடித்த ஒரு பிரபல நடிகையின் கதை.. June 29, 2013 9:15 am பதிந்தவர் Supes கமலோடு டிக்…டிக்….டிக், ரஜினியின் ஸ்ரீராகவேந்திரர், பாலசந்தர் இயக்கத்தில் கல்யாண அகதிகள் இன்னும் விசு, சந்திரசேகர் டைரக்ஷனில் என பல படங்கள் மற்றும் இளமை இதோ இதோ, முயலுக்கு மூணு கால், மானாமதுரை மல்லி, எனக்காகக் காத்திரு போன்ற பல படங்களில் கதா நாயகி யாக நடித்தவர் நடிகை நிஷா. இப்போது நாகூர் தர்கா வாசலில் ஈ, எறும்பு மொய்க்க சாக கிடந்த அவரை, யாரும் சரியாக கவனிக்க வில்லை. அப்படியே சில நாட்கள் அனாதை யாகக் கிடந்தார் நடிகை நிஷா. எய்ட்ஸ் நோய் இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்தார்…

  20. இங்கிலாந்தின் பிரபல மாடல் டமாரா எக்கிள்ஸ்டோன், கடந்த வாரம் தன் காதலரைக் கரம் பிடித்தார். மூன்று கோடி ரூபாய் வாடகையைக் கொட்டிக்கொடுத்து ஹைடெக் படகு ஒன்றை ஹனிமூனுக்காக அமர்த்தினார். இத்தாலி கடலில் மிதக்கும் படகில் இருந்தபடி ஹனிமூன் போட்டோக்களை வெளியிட்டுத் தன் திருமணத்தை டமாரம் அடித்து மகிழ்ந்தார் டமாரா எக்கிள்ஸ்டோன்.http://www.dinaithal.com/cinema/16573-honeymoon-photos-ekkilston-published.html

    • 0 replies
    • 420 views
  21. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் சென்னையில் நடந்தது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர். அதன்படி இருவருக்கும் நேற்று நிச்சயதார்த்தம். ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சைந்தவிக்கு மோதிரம் அணிவித்தார் ஜிவி பிரகாஷ். இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடந்தது. மணமகள் சைந்தவிக்கு ஜிவி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்…

  22. தனுஷ் ஆச்சர்யக்குறி ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாவதி பார்த்தேன், தனுசைப் பற்றி சிறிது பேச ஆசை, தனுசைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு கிடைத்தது தின முரசு பத்திரிகை மூலம் ,தின முரசு பத்திரிகை ஈ பி டி பி யின் பத்திரிகை ,அரச சார்பானது ,ஆனால் அந்தப் பத்திரிகையை கடும் புலி ஆதரவாளர்கள் ,தேசப் பற்றாளர்கள்,உணர்வாளர்கள் என அனைவருமே வாங்குவார்கள்,வாங்கி ஒளிவு மறைவாகப் படிப்பார்கள் காரணம் சிம்பிள் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சம் அஜால் குஜாலானது ,இந்தியாவில் இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கு என சரோஜா தேவி போன்ற புத்தகங்கள் ஈழத்தில் திரைகடல் ஓடினாலும் கிடைக்காது ,இன்டெர் நெட்டில் அறிவை வளர்க்கலாம் என்றால் கிரகம் …

    • 3 replies
    • 2.1k views
  23. சூர்யாவின் சம்மதத்துடன், ஜோதிகா மீண்டும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா 2006ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பு நடிப்பதில்லை என்று திரையுலக வாழ்க்கையை விட்டு ஒதுங்கியிருந்தார். ஆனால் நீண்ட நாள் இடைவெளிக்கு பின்பு சூர்யாவுக்காக ஒரு விளம்பர படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஜோதிகா. இதனைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்கப்போகிறாராம். 'ஹரிதாஸ்' சினேகா கதாபாத்திரம், 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' ஸ்ரீதேவி கதாபாத்திரம் போல் கிடைத்தால் நடிப்பதற்கு தயாராக உள்ளாராம். இதற்கு சூர்யாவும் தன்னுடைய சம்மதத்தை தந்து விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபடியும் ஜோதிகாவின் "ரா ரா"!!! http://dinaithal.com/c…

  24. பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்குமார் – பின்னணிப் பாடகி சைந்தவி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமாரும் பாடகி சைந்தவியும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இரு தரப்பு பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இரு ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்தனர். அதன் படி இருவருக்கும் நேற்று ஹோட்டல் ரெயின் ட்ரீயில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மோதிரம் அணிவித்துக் கொண்டனர். இன்று காலை இருவருக்கும் சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. மணமகள் சைந்தவிக்கு ஜி.வி பிரகாஷ் தாலி கட்டினார். திருமணத்துக்கு திரளான நட்சத்திரங்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.…

    • 0 replies
    • 663 views
  25. ஆதிபகவன் திரைப்படத்திற்குப் பிறகு ஃபெப்சி தலைவராகவும், இயக்குனர் சங்க தலைவராகவும் பதவி வகித்துக்கொண்டிருந்த அமீர், தனது திறமை பதவிகளுக்கு அடியில் சிக்கிவிடக் கூடாது என முடிவெடுத்து ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே’ திரைப்படத்தில் ஒப்பந்தமானார். ஆதாம்பாவா தயாரிப்பில் ‘கொள்ளைக்காரன்’ திரைப்பட இயக்குனர் சந்திரன் இயக்கத்தில் உருவாகிறது பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். மதுரையைச் சேர்ந்த இளைஞன் அரசியலில் முன்னேறும் கதையை அலப்பறைகளுடன் சொல்கிறதாம் பேரன்பு கொண்ட பெரியோர்களே திரைப்படம். பருத்திவீரன் திரைப்படத்தில் கார்த்தியின் பாடி லாங்குவேஜ் மொத்தமும் அமீர் இறக்கியது என்பதால், இந்த கதையை அமீர் தைரியத்துடன் கையில் எடுத்திருந்தார். ஆனால் சமீபத்தில் பேரன்பு கொண்ட பெரியோர்களே படப்பி…

    • 0 replies
    • 440 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.