Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. 'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் எதிர்க்கும் 7 காட்சிகளை நீக்குவதாக அத்திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இணக்கம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு, கமல் தரப்பு மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூகமாக நிறைவுக்கு வந்துள்ளது என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்த கமல்ஹாஸன், திரைப்படம் வெளியாகும் திகதியை இன்று இரவே அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்படி 7 இந்தக் காட்சிகள்இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக்கொண்டார்…

  2. போர்ப்ஸ் என்ற பத்திரிகையின் இணைய தளத்தில் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்றொரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தற்போது 62 வயதாகும் ரஜினிகாந்த், சுமார் 24 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவர் இரண்டு வருடத்துக்கு ஒரு படம் என்று பட எண்ணிக்கையை குறைத்து வருகிறார். அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் என்ற தகுதி தமிழ் சினிமாவில் யாருக்கு இருக்கிறது? என்றொரு கேள்வியையும் முன் வைத்துள்ளது. ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக தற்போது விஜய், அஜீத் இருவரும்தான் இருக்கிறார்கள். இவர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள். யாருக்கு ரசிகர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகமாக இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு அவரை சூப்பர்…

  3. விஸ்வரூபம் பாணியில் அமீரின் ஆதிபகவன் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அமீர் இயக்கத்தில், ஜெயம் ரவி, நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதிபகவன். மாபியா கும்பலை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமாதம் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. ஆதிபகவன் படத்தில் இந்து கடவுளை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருப்பதாக ஐகோர்ட் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான குழுவினர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, அமீர் தன்னுடைய ராம் படத்தில், இந்து கடவுளான ராமரை, ராம் என்று சுருக்கி ஹீரோ ஜீவாவை சைக்கோ போன்று காட்டினார். இப்போது ஆதிபகவன் என்ற படத்தை …

  4. விஸ்வரூபம் படத்தில் கமலுக்கு நஷ்டம் ஏற்பட்டால், கமலின் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடிப்பேன் என்று சூ‌‌ப்ப‌ர் ‌ஸ்டா‌ர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். கம‌ல்ஹாசனின் விஸ்வரூபம் வெளியாவதில் தடை நீடித்து வருகையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் படம் வெளிவந்தாலும் கமலுக்கு நஷ்டம் தான் ஏ‌ற்படு‌ம் எ‌ன்று கூறப்படுகின்றது. இந்த படத்திற்காக கமல், தனது சொ‌த்து‌க்க‌ள் அனைத்தையும் எழுதி கொடுத்து பெரும் செலவில் இந்த படத்தை எடுத்துள்ளார். இந்த நிலையில் கமலின் நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், கமலுக்கு விஸ்வரூபம் படத்தால் நஷ்டம் ஏற்பட்டால், கமலின் இயக்கும் அடுத்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து அந்த நஷ்டத்தை ஈடுசெய்வேன் என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த பேச்சு அனைத்து …

  5. எனது தமிழகம் மதச்சார்பற்றதாக இல்லாவிட்டால், இந்தியாவின் வேறு ஒரு மாநிலத்தில், மதச்சார்பற்ற ஒரு மாநிலத்தில் போய் குடியேறுவேன். இந்தியாவில் எங்குமே எனக்கு இடம் கிடைக்காவிட்டால் வேறு ஏதாவது நாட்டுக்குப் போய் குடியேறுவேன். எங்கு போனாலும் தமிழனாகவே இருப்பேன் என்று பரபரப்பாக பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். தனது வீட்டில் இன்று செய்தியாளர்களைச் ச்ந்தித்த கமல்ஹாசன் மிகவும் உருக்கமாக, கண்களில் நீர் மல்க தனது விஸ்வரூபம் படம் குறித்தும், சர்ச்சை குறித்தும், கோர்ட் வழக்கு குறித்தும் பேசினார். அவர் பேசுகையில்,விஸ்வரூபம் தொடர்பாக பல்வேறு பேச்சுக்கள் உலவுகின்றன. அதுகுறித்து எனக்குத் தெரியாது. அவற்றை நான் நம்பவும் இல்லை. தாமதப்படுத்தப்பட்ட நீதியும், தடுக்கப்பட்ட நீதியும் ஒன்றே என்று ஆங்கில…

  6. விஜய் பேர் இருந்தாலே இப்போ வெற்றி என்கிற மாதிரியே போயிட்டு இருக்கு. இளையதளபதி விஜய் நடித்த துப்பாக்கிக்கு முன் வந்த விஜய் சேதுபதி நடித்த பீட்சா சூப்பர் வெற்றி. துப்பாக்கி சூப்பர் டூபர் வெற்றி. இப்போ மறுபடியும் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெளியாகியுள்ளது. படம் வெளியாகும் முன்பே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலர் இயக்குநரையும், இதில் நடித்த விஜய் சேதுபதியையும் வெகுவாக பாராட்டி உள்ளார்கள். லியோ விஷன் சார்பில் ராஜ்குமார் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் பிரஷாந்தின் தந்தை, நடிகர் தியாகராஜன் படம் வெளியாகும் முன்பே வாங்கியிருக்கிறார். இவற்றுக்கு மேல…

  7. விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட் சென்னை: விஸ்வரூபம் படம் மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த இறுதிக்கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்…

  8. சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அரசு விருந்தினராக வருமாறு அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாண அரசு அழைப்பு! மேரிலான்ட் மாகாணத்தின் வெளியுறவுத் துறை துணைச் செயலர் (அமைச்சர் ) டாக்டர் ராஜன் நடராஜன் இந்த அழைப்பினை ரஜினியை அவரது இல்லத்தில் இன்று நேரில் சந்தித்து வழங்கினார். அமெரிக்க அரசியலில் இத்தனை உயரிய பதவியில் இருக்கும் முதல் இந்தியர் – தமிழர் அதுவும் நம்ம புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் ராஜன்தான் என்பதை அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும் தெரிவித்தார். ரஜினிடம் டாக்டர் ராஜன் பேசும்போது, “தமிழர்களின் பெருமை நீங்கள்.. உங்கள் ப்ளட்ஸ்டோன் படத்தை அமெரிக்கர்கள் பார்த்து ரசித்தனர். ஹாலிவுட்டிலேயே கோலோச்சும் அளவுக்கு உங்களுக்கு வாய்ப்புகள் இருந்தும், அவற்றை ஏற்காமல் தமிழுக்காகவும் த…

  9. கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை ஆதரித்துப் பேசியுள்ளார் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரதிநிதி குமார ரஜா! திரையுலக நண்பர்கள் நீங்கலாக தொழில்முறை சினிமா கலைஞர்களின் ஆதரவுக்குப்பிறகு அரசியல் ஆதரவும் கமல் படத்திற்கு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தில் பயங்கரவாத சம்பவங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார் குமார ராஜா. மற்ற மாநிலங்கள் சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாதபோது தமிழகத்தில் ஏன் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குமாரராஜா. ஆகவே, கமலுக்கு தங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும், படத்தை ரிலீஸ் செய்ய கமலுடன் இணைந்து போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1301/29/1130129045_1.htm

  10. சென்னை: விஸ்வரூபம் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது. நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள்இருப்பதாகக் கூறி எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து, படத்தை தமிழகத்தில் திரையிடமாநில அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அடுத்து, நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு நேற்று முன்தினம் விஸ்வரூபம் படத்தை பார்த்து ஆய்வு செய்தது. இதில், தயாரிப்பு நிறுவனம், ரசிகர்கள் மற்றும்மனுதாரர்கள் தரப்பிலும் பிரதிநிதிகள் அந்தப் படத்தை பார்த்தனர். இந்நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

  11. ரெண்டு சூட்கேசுக்குள் அடங்கியாக வேண்டுமே, இல்லாவிட்டால் 'ஒன்றரை லட்சம் கோடி' என்று கூட டைட்டில் வைத்திருப்பார்கள். தங்கம் வைரம் கரன்ஸி இம்மூன்றும் நிறைந்த சூட்கேஸ் இரண்டை நீரா ராடியா மாதிரி ஒரு ஜில் ஜில் லேடியிடமிருந்து அடித்துக் கொண்டும் கிளம்பும் கல்லு£ரி நண்பர்கள் நான்கு பேர் அதை 'அனுபவித்தார்களா' என்பதுதான் படம். ஆரம்பத்திலேயே நடக்கும் கல்லு£ரி கலாட்டாக்கள், முதல் இரண்டு ரீல்களை சர்வ நாசம் செய்வதால் மேலும் ஒரு ஐயாயிரம் கோடிக்கு கள்ள ஜாமீன் போட்டுவிட்டாவது வெளியேறி விடலாம் என்ற நினைப்பு வந்துவிடுகிறது நமக்கு. நல்லவேளை... அதற்கப்புறம் கெமிக்கல். லேப் பரிசோதனை. ஆளே மறைந்துவிடுகிற விட்டலாச்சார்யா விஷுவல் என்று நம்மை கதைக்குள் இழுத்துக் கொள்கிறார்கள். கூடவே படிக்கி…

    • 0 replies
    • 1.1k views
  12. என் தமிழகமே என்னிடம் விளையாடிவிட்டதே என்று வருத்தப்பட்டுள்ளார் கமல்ஹாஸன். அமெரிக்காவின் ப்ரீமாண்ட் பகுதியில் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு நேரடியாக தியேட்டருக்கு வந்தார் கமல்ஹாஸன். அப்போது ரசிகர்களிடம் அவர் பேசுகையில், "என் தமிழகத்தில் விஸ்வரூபம் வெளியீடு சில காலத்துக்கு நிறுத்தபட்டுள்ளது. என் தமிழ் நாட்டிலேயே எனக்கு இந்த நிலையா என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. நீங்கள் வெளியில் இருக்கிறீர்கள் (அமெரிக்க வாழ் தமிழர்கள்). நானும் வெளியில்தான் உள்ளேன் இப்போது. என் தமிழகம் என்னை இப்படி விளையாடி பார்த்துவிட்டதே என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனால் இது எல்லாம் மாறும். நான் செய்திருப்பதில் தவறேதும் இல்லை. இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் என்ன சொல்ல விரும்புகிறேன்.. …

  13. காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில்…

  14. விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையால் கமலை விட்டு நழுவிய பத்ம விருது http://dinamani.com/india/article1437382.ece விஸ்வரூபம் திரைப்பட பிரச்னையைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசனுக்கு பத்மபூஷண் விருது கிடைக்காமல் போனதாகத் தெரிகிறது. பத்மபூஷண் விருது பெறுவோரின் தகுதிப் பட்டியலில் கமலஹாசன் பெயர் இருந்ததாகவும், கடைசித் தருணத்தில் அவரது பெயரை மத்திய அரசு நீக்கியதாகவும் கூறப்படுகிறது. சிறுபான்மையினரின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி, விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டது. "பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமைக்கு முந்தைய நாள் வரை, கமல் பெயர் விருது பெறுவோர் தகுதிப் பட்டியலில் இருந்தது. அவரது விஸ்வரூபம் திரைப்படத்துக்கு தமிழகத்தைத் …

  15. துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த பின் இனி எப்ப ஓரளவுக்கேனும் நல்ல தமிழ் படம் பார்க்கலாம் என்று இருந்த எனக்கு கும்கி படம் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. இன்று TMT இணையம் மூலம் கும்கி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சினிமாத்தன காட்சிகள் தவிர்ந்த (கிளைமாக்ஸில் யானைக்கு கிடைக்கும் முடிவு) மிச்ச காட்சிகள் எல்லாம் அப்படியே மனசை அள்ளும் காட்சிகள். தமிழகத்தின் காடுகளுக்குள் இன்றும் மரணித்துப் போகாமல் இருக்கும் மனிதர்களின் இயற்கையுடனான பின்னிப் பிணைந்த வாழ்க்கையையும், அவர்களின் நம்பிக்கைகளையும் அதை அவர்கள் காப்பாற்ற முயலும் முரட்டுத்தனத்தையும் அழகாக காட்டியுள்ளார்கள். தமிழ் சினிமாவில் யானையை இந…

    • 57 replies
    • 4.7k views
  16. .சத்யராஜ் -மணிவண்ணன் காம்பினேசன் என்றாலே அந்த படத்தில் ஒரு பரபரப்பு இருக்கும். இன்னார் என்று பாராமல் கலாய்க்கும் அரசியல் காமடி சிரிக்க வைத்து விலா எலும்புகளை பதம் பார்க்கும். மொத்தத்தில் இந்த காம்பினேசன் பெரிய ஹிட் கொடுத்த படங்கள் ஏராளம். ‘வாழ்க்கை சக்கரம்’, ‘நூறாவது நாள்’, ‘புதுமனிதன்’, ‘மாமன் மகள்’ போன்ற படங்கள் உதாரணம். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘அமைதிப்படை’ படத்தின் இரண்டாம் பாகம் ‘நாகராஜ சோழன் எம்.ஏ.,எம்.எல்.ஏ.,’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இது, சமீபத்திய அரசியலை கிண்டல் செய்யும் காமெடி படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், சீமான், ரகுமணிவண்ணன், வையாபுரி, எம் எஸ் பாஸ்கர், கோமல்ஷர்மா, வர்ஷா, மிருதுளா, அன்சிபா, கிருஷ்ணமூர்த்தி என்ற ம…

    • 0 replies
    • 592 views
  17. கவர்ச்சி என்பது ஒரு ஊறுகாய் போல - லட்சுமி மேனன் சினிமாவில் கவர்ச்சி என்பது ஒரு ஊறுகாய் போலத்தான் என நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் மலையாளிகளின் ஆதிக்கம் வெகுவாகவே உள்ளதென தற்போது வெளியாகும் படங்களை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். தமிழை குறைவாக கற்றுக்கொண்டாலும் அழகின் மூலமாக இளம் நடிகைகள் நுழைந்து வந்தனர். தற்போது பள்ளிக்கூட மாணவிகளும் படத்தில் நடித்து வருகின்றார்கள். இதற்கு சிறந்த உதாரணம் நடிகை லட்சுமி மேனன். இவர் 10ம் வகுப்பு தான் படிக்கிறார். சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்து வெற்றிநாயகியாக வலம் வரும் இவர், குட்டிப்புலி, மஞ்சப்பை என இரு புதிய படங்களிலும் நடித்து வருகின்றார். இந்நிலையில் இயக்குனர் ஒருவர் இவரி…

  18. காலம் தாழ்த்தி கிடைக்கும் கவுரவம், எனக்கு தேவையில்லை. எனக்கு கொடுக்கப்பட்டுள்ள, பத்ம பூஷன் விருதை, ஏற்கப் போவது இல்லை, என, பிரபல பின்னணி பாடகி, ஜானகி, அதிரடியாக அறிவித்துள்ளார். பிரபல சினிமா பின்னணி பாடகி, எஸ்.ஜானகி, 75. தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம், இந்தி உள்ளிட்ட, பல்வேறு மொழிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிஉள்ளார். தமிழில், சிங்கார வேலனே தேவா, காற்றில் எந்தன் கீதம், நெஞ்சினிலே... நெஞ்சினிலே உள்ளிட்ட, புகழ் பெற்ற பாடல்களை பாடியுள்ளார்.தேசிய அளவில் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை, நான்கு முறை பெற்றிருந்தாலும், பத்ம விருதுகளை, இதுவரை, மத்திய அரசு தனக்கு கொடுக்கவில்லையே என்ற மனக்குறை, அவருக்கு இருந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, மத்திய அ…

  19. விஸ்வரூபத்திற்கு கொதிக்கும் நடிகர்கள் தேன்கூடு, ஆணிவேர் படத்திற்கு குரல் கொடுக்காதது ஏன்?...உச்சிதனை முகர்ந்தால் வெளிவேந்தபோது அந்த படத்தின் விளம்பரம் மற்றும் பாடல் காட்சிகள் எப்.எம். மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவில்லை...எங்கே போனது கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?... கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்... காவிரி டெல்டாவில் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்... அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்... முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்... பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை …

  20. ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரைகளில் இதுவரை சினிமா உலகில் கொடிகட்டிப் பறந்த நட்சத்திரங்களின் பெயர்கள் தான் அடிபட்டிருக்கின்றன.ஆனால் ஆஸ்கார் வரலாற்றில் இதுவரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் மிக வயது குறைந்த நடிகை தான் குவாஞ்சனே வாலிஸ் (Quvenzhane Wallis)என்ற 9 வயதுச் சிறுமி. த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் (The Beasts of the Southern Wild) என்ற குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தக் குழந்தையின் அபாரத் திறமைக்காக அவளின் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலகத் தொடர்புகளின்றி, பின்னடைந்த சமூகமொன்றின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கின்ற இந்தப் படத்தில் ஹஷ் பப்பி என்ற பாத்திரத்தில் குவாஞ்சனே வாலிஸ் நடித்…

  21. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின்தலைவர் அமீர் இன்று விஸ்வரூபம் தடை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் தான் இன்னும் படத்தை பார்க்கவில்லை என்றும், படத்தை பார்த்த பின்புதான் கருத்து தெரிவிக்க இயலும் என்றும், எனவே இதுகுறித்துதிரைப்பட கலைஞர்கள் யாரும், தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு பிரச்சனையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், நீதிமன்ற தீர்ப்புக்கு பின் கருத்து தெரிவிக்கலாம் என்றும் மழுப்பலாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இயக்குனர் அமீரின் முழு அறிக்கைப் புகைப்படம் பார்க்க....

    • 0 replies
    • 635 views
  22. சென்னை : பிரமாண்டமாக உருவாக்கியுள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு கமல் 100 கோடி ரூபாய் செலவழித்துள்ளார். இதற்கு அவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என எண்ணிப்பார்க்க வேண்டும். இதனை நினைக்கும்போது மனம் கலங்குகிறது. கமலை தமக்கு 40 ஆண்டுக காலமாக தெரியும் என்றும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு கொண்டு சென்றவர் கமல் என்றும், அவர் யாரு‌டைய மனதையும் புண்படுத்தும்படி நடந்து கொள்ள மாட்டார் என்றும், அவரது திரைப்படத்தை வெளியிட அமர்ந்து பேசி தீர்க்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திரைப்படத்திற்கு மாநில அரசு தடை விதித்தது. கேரளாவில் …

    • 2 replies
    • 466 views
  23. விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை! அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி …

  24. முஸ்லீம்க‌ள் "விஸ்வ‌ரூப‌ம்" ப‌ட‌த்தை எதிர்க்கும் கார‌ண‌ங்க‌ள் ஆறு. பெரும் பொருட் செலவில் கமல்ஹாசன் நடித்து, இயக்கித் தயாரித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களையும், இஸ்லாமையும் இழிவுபடுத்துவது போலவும், மோசமாக சித்தரிப்பதாகவும் உள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் விஸ்வரூபம் படம் தொடர்பாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் இவைதான்... 1)விஸ்வரூபம் படத்தில் தீவிரவாதியாக காட்டப்படும் நபர் முஸ்லீமாக காட்டப்படுகிறார். மேலும் எந்த ஒரு தீவிரவாத செயலையும் செய்யும் முன்பு …

  25. நார்வே தமிழ் திரைப்பட விழா கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வருகிறது. தமிழ் திரைத்துறையினருக்கு இது முக்கியமான திரைப்பட விழா. த‌மி‌‌ழ் இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வதும் ர‌சிகர்களுடன் கலந்துரையாடுவதும் ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா இந்த ஆண்டு நடக்கிறது. இதற்கான பத்தி‌ரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. இந்தமுறை சற்று விசேஷம். ஐரோப்பாவிலுள்ள லண்டன், ஆஸ்லோ, பெர்லின் ஆகிய நகரங்களில் இந்த விழா நடக்கிறது. முன்பு ஒரே நகரத்தில்தான் இந்த விழா நடந்து வந்தது. ஏப்ரல் 24ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் திரையிட பதினைந்து படங்கள் தேர்வாகியுள்ளன. அவை... நடுவுல கொஞ்சம் பக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.