வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்! பத்மினி அ+ அ- திருவாங்கூர் சகோதரிகள் என்று அவர்களைச் சொல்லுவார்கள். கேரளாவில் பிறந்தார்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் பிரபலம் அடைவதே பெரும்பாடு. அப்படிப் பிரபலமாவதற்கு திறமை ரொம்பவே முக்கியம். அந்த வீட்டில் உள்ள சகோதரிகள் மூவருமே, நடனத்திறமையுடன் திகழ்ந்தார்கள். நாட்டிய சகோதரிகள் என்றே அறியப்பட்டார்கள். அவர்களை எல்லோருக்கும் தெரியும். லலிதா, பத்மினி, ராகினியைத் தெரியாதவர் உண்டா என்ன? இதில் பத்மினிக்கு, கடவுள் இன்னொரு வரத்தையும் தந்திருந்தார். நாட்டியத்துடன் நடிப்பும் ஒருசேர அமைந்தது அவருக்கு. …
-
- 0 replies
- 675 views
-
-
சினிமா விமர்சனம்: மேயாத மான் தமிழ் சினிமா சில ஆண்டுகளாக பேய் பட அலையில் சிக்கித் தவித்ததில் ரொமான்டிக் காமெடி படங்கள் வருவதே முற்றிலும் குறைந்துவிட்டது. இப்போதுதான் மீண்டும் அவ்வகைப் படங்கள் தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றன. மேயாத மான் படத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். மெல்லிசைக் குழு நடத்தும் 'இதயம்' முரளிக்கு (வைபவ்) தன்னுடன் படித்த மதுமிதா (பிரியா) மீது ஒருதலைக் காதல். அந்தக் காதலைச் சொல்வதற்குள் மதுமிதாவுக்கு கல்யாணம் நிச்சயமாகிவிடுகிறது. முரளியின் காதலைப் பற்றி தெரியவந்த பிறகு, ஒரு வருடம் தன் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறாள் மதுமிதா. இதற்கிடையில் முரளின் தங்கையான சுடரொளிக்கு(இந்துஜா) அண்ணனின் நண்பர் வினோத் (விவேக் ப…
-
- 1 reply
- 675 views
-
-
தமிழில் சுள்ளானும் சுண்டு விரலும் கூட சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார்கள். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நான்கைந்து முன்னணி நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார்கள். இப்போது அந்த நிலையை தமிழ்ப் பட உலகிலும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாநிதி அழகிரி [^]. முதன்முதலாக தமிழில், 5 ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாநிதி. கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் வெங்கட் பிரபு. இப்போது, புதுமுகங்களை வைத்து தூங்கா நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாநிதி. அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இதையடுத்து, வ…
-
- 0 replies
- 675 views
-
-
நாட்டியத்திலிருந்து கோட்டை வரை பா. ஜீவசுந்தரி அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகிகள் என்று எடுத்துக்கொண்டால் இரண்டு வேறுபாடுகளைப் பொதுவாகப் பார்க்கலாம். 1930களின் கதாநாயகிகள் பலரும் திரைப்படத்தில் நடிக்க வரும்பொழுதே திருமணம் ஆனவர்களாகவே இருந்தனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே திருமணம் ஆகாத நடிகைகள் நடிப்புத் தொழிலைத் தேர்வுசெய்து வந்தனர். அப்போது திருமணம் ஒரு பாதுகாப்புக் கவசம் என்ற நிலையிலும் வைத்துப் பார்க்கப்பட்டது ஒரு காரணம். அக்கால வழக்கப்படி குழந்தைப் பருவத்தில் மணம் செய்து வைக்கப்பட்டதும் இன்னொரு காரணம். வறுமையின் காரணமாக நாடகம், திரைப்படங்களைத் தேர்வு செய்தும் சிலர் வந்தனர். நடிகையானதால் கணவர்கள் பிரிந்து போனவர்களும், தங்கள் வ…
-
- 0 replies
- 675 views
-
-
கிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்! கிழக்கே போகும் ரயில் - கே.பாக்யராஜ் ஒரு படத்தில் டைட்டில் என்று படத்தில் உழைத்தவர்களின் பெயர்ப் பட்டியலைப் போடுவார்கள். ஒரே படத்தில், டைட்டிலில், நான்கு இடங்களில் பெயர்கள் வரும் அதிசயம், ஆச்சரியம் அப்போதே நிகழ்ந்திருக்கிறது. அந்த சாதனைகளை நிகழ்த்தியவர்... திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ். இயக்குநர் பாரதிராஜாவின் முதல் படம் 16 வயதினிலே. ஒருவகையில், கே.பாக்யராஜுக்கும் இதுவே முதல்படம். ஆமாம்... பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முதல் படம் 16 வயதினிலே. மிகப்பிரமாண்டமான …
-
- 0 replies
- 675 views
-
-
விஜய், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள குருவி, மே 3ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் முதல் தயாரிப்பில், தரணி இயக்கத்தில் உருவாகியுள்ள கில்லி படமான குருவியின் ஆடியோ சமீபத்தில் ரிலீஸாகி பாட்டுக்கள் ஹிட் ஆகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் படம் மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 3ம் தேதிக்கு மாற்றியுள்ளனர். மே 2ம் தேதி அகில இந்திய பந்த் ஒன்றை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இதையடுத்து மே 3ம் தேதிக்கு பட ரிலீஸை தள்ளிப் போட்டுள்ளனர். படம் முழுக்க முடிந்து விட்டது. சின்னச் சின்ன நகாசு வேலைகளையும் முடித்து விட்டனர். தற்போது பிரசாத் லேப்ஸ் பிரிண்ட் போடும் வேலையில் மும்முரமாக…
-
- 0 replies
- 675 views
-
-
எஸ்பிபி 50: 'பாடும் நிலா'வை உருகவைத்த யேசுதாஸின் புகழாரம் எஸ்.பி.பி 50 பத்திரிகையாளர் சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் பேசும் போது | படம்: எல்.சீனிவாசன் எஸ்.பி.பி தனது சாதனையை இந்த உலகுக்கு நிரூபித்துள்ளார் என பாடகர் யேசுதாஸ் புகழாரம் சூட்டினார். திரையுலகில் பாடகராக 50 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி, பத்திரிகையாளர்களை சந்தித்தார் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அப்போது, வெளிநாட்டில் 'எஸ்.பி.பி 50' என்ற பெயரில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியைப் பற்றி வீடியோ பதிவு ஒன்றைத் திரையிட்டார்கள். இச்சந்திப்பில் பாடகர் யேசுதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அங்கு எஸ்.பி.பி குடும்பத்தினர், யேசுதாஸ் மற்றும் அவருட…
-
- 1 reply
- 674 views
-
-
சென்னை: சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கம்முன்னு கெட என்று மனோரமா பேசிய வசனம் அப்போது மிகவும் பிரபலம் ஆனது. விசு இயக்கி நடித்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நன்றியுள்ள பணிப்பெண்ணாக நடித்திருந்தார் மனோரமா. கண்ணம்மா என்ற கதாபாத்திரமாகவே வாழ்த்திருந்தார் ஆச்சி. அந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் கம்முன்னு கெட என்று அவர் பேசிய வசனம் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற வசனம் போன்று மிகவும் பிரபலமானது.வீட்டு முதலாளியின் மகளை அவரது கணவருடன் சேர்த்து வைக்கும் நல்ல எண்ணத்தில் தான் மனோரமா நடித்திருப்பார். முதலாளியின் சம்பந்தியை பார்த்து மனோரமா நறுக் நறுக்கென்று பேசுவார். அதை கேட்ட முதலாளியின் மனைவியும், மகளும் பதறிப் போய் கண்ணம்மா, கண்ணம்மா என்பார்கள். அதற்கு மனோரமாவோ அவர்களின் …
-
- 0 replies
- 674 views
-
-
இந்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 ஜனவரி, 2014 - 16:43 ஜிஎம்டி இந்திய அரசின் பத்மா விருதுகள் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, கடம் கலைஞர் டி எச் விநாயக்ராம் ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழ்நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் சிவன், டாக்டர். அஜய் குமார் பரிடா, மல்லிகா சிறினிவாசன், தீபக் ரெபேக்கா பள்ளிக்கள், பேராசிரியர் ஹக்கீம் செய்யத் ஹலீஃபதுல்லா மற்றும் டாக்டர் தேனும்கல் பொலூஸ் ஜேக்கப் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தி நடிகை வித்யா பாலனுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது தனக்கு அளிக்கப்பட்டிருப…
-
- 1 reply
- 674 views
-
-
தங்கர்பச்சானின் உதவியாளர் கீரா இயக்கியுள்ள பச்சை என்கிற காத்து என்ற தமிழ் படத்தில் வரும் பாடல்களில் உள்ள வரிகள் ஈழத்தமிழர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக உள்ளது. இது தமிழக முதல்வரை எரிச்சல் படுத்தும் என்று அரசியல் அவதானிகளால் கருதப்படுகின்றது. இப்பாடல்கள் உண்மையாக தமிழை நேசிக்கும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. எனவே இப்பாடல் இடம் பெற்றுள்ள பச்சை என்கிற காத்து திரைப்படத்திற்கு பல நெருக்கடிகளை ,தனது அரசு இயந்திரத்தைக் கொண்டு, கலைஞர் ஏற்படுத்தக்கூடும் என்று தமிழக அரசியலை உற்று நோக்கும் அவதானிகள் ஆரூடம் கணிக்கத் தொடங்கி உள்ளனர். இம்மாதிரியான காரியங்களைச் செய்வதன் மூலம் அவர், காங்கிரஸின் மனசை குளிரச் செய்து கூட்டணியில் காங்கிரஸை நீடிக்கச் செய்யலாம…
-
- 0 replies
- 674 views
-
-
1:49 AM IST பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 25,2015, 1:49 AM IST மும்பை, நடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23–ந் தேதி நடக்கிறது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார். தமிழ் படங்கள் ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அறிமுகமானவர் அசின். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்தார். விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்றோருடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அசின் நடித்த ‘கஜினி’ படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படம் அமீர்…
-
- 4 replies
- 674 views
-
-
ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம் காட்டில் வாழும் பழங்குடியின நாயகன், ஒரு விபத்தில் மெட்ரோ சிட்டி நாயகியிடம் வந்து வசிப்பதால் நிகழும் சம்பவங்களே ‘வனமகன்’. கார்ப்பரேட் நிறுவனத் தொழிற்சாலை ஒன்றை அந்தமான் காட்டுக்குள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதனால் அங்குள்ள பழங்குடியின மக்களை அப்புறப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்தப் பழங்குடியின மக்களில் ஒருவர்தான் ஜாரா (ஜெயம்ரவி). சென்னையில் வசிக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவரான காவியா (சயிஷா) சுற்றுலாவாக அந்தமான் வருகிறார். இவரால் ஜெயம்ரவிக்கு விபத்து ஒன்று ஏற்படுகிறது. ஜெயம்ரவியைக் காப்பாற்ற சென்னை அழைத்துவருகிறார் நாயகி சயிஷா…
-
- 1 reply
- 674 views
-
-
அடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத் குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும் . விஜயா productions சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத் குமார் ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்தது. தயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி , பாரதி ரெட்டி ஆகியோர் இன்று இப்படத்தை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர். See more at: http://vuin.com/news/tamil/2014-pongal-is-thala-pongal
-
- 0 replies
- 673 views
-
-
புலி திரைப்படத்தை ஆன் லைன்ல பார்க்க கிழே சொடுக்குங்கள் http://toolstube.com/video/OWMMB4484N62/Puli-2015
-
- 0 replies
- 673 views
-
-
மனித நேயத்தை உணர்த்தும் போர் எதிர்ப்பு சினிமா! -தயாளன் இந்த வருடத்தின் நான்கு ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கும் ஜெர்மன் சினிமா All Quiet on the Western Front! அச்சு, அசலான ஒரு போரை கண் முன் காட்டும் இந்தச் சினிமா, மானுட அறத்தை உரக்கப் பேசுகிறது. போருக்கான சில நெறிமுறைகளை மீறினால் ‘போர்க் குற்றம்’ என்பார்கள். ஆனால், இந்தப் படமோ, ‘போரே ஒரு குற்றம்’ என ஓங்கிச் சொல்கிறது. சிறந்த சர்வதேசப் படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் விருதை அள்ளியிருக்கிறது, இப் படம். முதலாம் உலகப் போரின் போது நடந்த நெஞ்சை பதற வைக்கும் கதையே கரு. படத்தின் விமர்சனத்திற்குள் போகும் முன், சில தகவல்களை…
-
- 2 replies
- 673 views
-
-
டிசம்பர் 15 முதல் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா! சென்னை: எட்டாவது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவை, செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி தொடங்கி வைக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ், பிலிம் சேம்பர், ஐநாக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. துருக்கி, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், கனடா உள்ளிட்ட 43 நாடுகளைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், தமிழில் நந்தலாலா, அங்காடித் தெரு உட்பட 12 திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. மாலை நேரங்களில் சம்பந்தப்பட்ட திரையரங்க வளாகங்களில் சினிமா குறித்த விவாதங்களும் நடைப…
-
- 0 replies
- 673 views
-
-
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கடலில் மீன்பிடிக்கப் போன கணவன் அருளப்பசாமிக்காக (விஷ்ணு) காத்திருக்கிறார் எஸ்தர் (நந்திதா தாஸ்).. வீட்டு முன்பு அருளப்பசாமியின் எலும்புக்கூட்டை எஸ்தரின் மகன் கண்டுபிடிக்க எஸ்தர் கைது செய்யப்படுகிறார்… எஸ்தரிடம் நடக்கும் போலீஸ் விசாரணையில் பிளாஷ்பேக்காக கதை நமக்கு சொல்லப்படுகிறது… சதா குடித்துக் கொண்டிருக்கும் அருளப்பசாமிக்கும், எஸ்தருக்கும் (சிறு வயது எஸ்தராக சுனைனா) இடையே காதல்… இயலாதவர்களுக்காக பிரார்த்திக்கும் ஒரு கிறிஸ்தவப் பெண் நாயகியாக வருவது தமிழ் சினிமாவுக்கு புதுசு… அருளப்பசாமியின் தலையில் கை வைத்து எஸ்தர் பிரார்த்திப்பது, ‘’சாத்தானே அப்பால போ’’ என அவனைப் பார்த்து பதறுவது என பல காட்சிகள் சுவாரஸ்யம்… கடலோர கிராமத்தை இவ்வளவு அ…
-
- 0 replies
- 673 views
-
-
நடிப்பு: விஷ்ணு, சுனைனா, சரண்யா, ராம், சமுத்திரக்கனி, அழகம்பெருமாள் ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியன் இசை: என் ஆர் ரகுநந்தன் மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: ரெட்ஜெயன்ட் உதயநிதி ஸ்டாலின் எழுத்து - இயக்கம்: சீனு ராமசாமி அழகிய கடல்புறம்... அங்கே கிளிஞ்சல்களாய் சிதறிக்கிடக்கும் எளிமையும் இயல்பும் நிறைந்த மீனவர் வாழ்க்கை... கடல் மணலில் கடவுளின் குழந்தைகளாய் திரியும் சின்னஞ்சிறுசுகளின் காதல்.. மேலும் படங்கள் -கேட்கவே நல்லாருக்குல்ல... ஆனால் அதை திரையில் ரசித்துப் பார்க்கும்படி எடுத்திருக்கிறாரா சீனு ராமசாமி? பார்க்கலாம் வாங்க! கடலலையில் அனாதையாய் வந்து மேரி - லூர்து தம்பதிக்கு மகனாகும் அருளப்பசாமியைப் பார்த்து அந்த கடல்புற கிராமமே அலறுகிறது. பயத்தினால…
-
- 4 replies
- 672 views
-
-
மாலிக் - சினிமா விமர்சனம் பட மூலாதாரம், Malik - official teaser படக்குறிப்பு, மாலிக் படம். நடிகர்கள்: ஃபஹத்ஃபாசில், நிமிஷா சஜயன், வினய் ஃபோர்ட், சலஜா, சலீம் குமார், ஜோஜு ஜார்ஜ், பார்வதி கிருஷ்ணா; ஒளிப்பதிவு: சானு வர்கீஸ்; இசை: சுஷின் ஷ்யாம்; கதை, இயக்கம்: மகேஷ் நாராயணன். வெளியீடு: அமேசான் ப்ரைம். மலையாளத் திரையுலகில் சமீப காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் இது. ஃடேக் ஆஃப் படத்திற்குப் பிறகு இயக்குனர் மகேஷ் நாராயணனும் ஃபஹத் ஃபாசிலும் மீண்டும் இணைந்திருந்தது மட்டுமே இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் அல்ல. 2009ல் கேரளாவின் பீமாப…
-
- 0 replies
- 672 views
-
-
ஒரே மேடையில் பத்துப் பெண் குழந்தை களுக்குத் திருமணம் செய்து வைத்த தகப்பனின் திருப்தியில் இருந்தார் பாரதிராஜா. அரைகுறை ஆடையோடு ஆடும் குத்துப் பாட்டோ துதிப்பாடல்களோ இல்லாமல் இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழாவை நடத்தி அட்ட காசப்படுத்தி விட்டனர். இன்னமும் தமிழ்சினிமா படைப்பாளிகளின் கையில்தான் இருக்கிறது என்பதை உணர வைத்தது இந்த விழா. பாரதிராஜாவிடம் பேசினோம். உதவி இயக்குநராக நீங்கள் சேர்ந்த அந்த நாளும், இன்று இயக்குநர் சங்கத் தலைவராக இருந்து விழாவை நடத்தி முடித்த இந்த நாளும் உங்களுக்குள் எந்த மாதிரியான மன உணர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது? ‘‘நான் ‘நிழல்கள்’ படத்துக்காக விருது வாங்கினபோது ‘நீங்கள் சங்கத்துல சேரணும்’ன்னு சொன்னாங்க. அப்பதான் அப்படி ஒ…
-
- 0 replies
- 672 views
-
-
சிம்பு - ஹன்சிகா பிரிவின் பின்னணி ‘சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலித்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதமும் தெரிவித்தோம். அத்துடன் திருமணத்திற்கு பிறகு நடிப்பைத் தொடரக்கூடாது என்றோம். ஆனால் இதனை ஹன்சிகா ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் இருவரும் பிரிந்தனர்.’ என்று சற்று தாமதமாக விளக்கமளித்திருக்கிறார் நடிகரும் இயக்குநரும் சிம்புவின் தந்தையுமான டி ராஜேந்தர். ஆனால் இந்த நிபந்தனையை சிம்புவின் தாயார் விதித்ததாகவும், அதனாலேயே ஹன்சிகாவிற்கு பிடிக்காமல் போனதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் விளக்கமளித்தனர். தற்போது சிம்புவிற்கும் கையில் படமில்லை. ஹன்சிகாவிற்கும் பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 1 reply
- 672 views
-
-
கமலின் மருதநாயகம்தான் மர்மயோகி படக் கதை எனக் கூறப்படுகிறது.ஆங்கிலேயர்களு
-
- 0 replies
- 671 views
-
-
முதல் பார்வை: தும்பா உதிரன்சென்னை கேரள வனத்தில் இருந்த புலி ஒன்று எல்லை தாண்டி தமிழக வனத்துறைக்குள் நுழைந்தால், அப்புலிக்கு மனிதர்களால் ஆபத்து நேர்ந்தால் அதுவே 'தும்பா'. பெயின்டிங் கலையில் உச்சம் தொட நினைக்கும் தீனாவுக்கு டாப் ஸ்லிப்பில் ஓர் ஒப்பந்தப் பணி கிடைக்கிறது. தன் நண்பன் தர்ஷனுடன் இணைந்து சென்னையில் இருந்து டாப் ஸ்லிப் புறப்படுகிறார். ஐஏஎஸ் அதிகாரியின் மகளான கீர்த்தி பாண்டியனுக்கு வைல்ட் லைஃப் புகைப்படங்களில் ஆர்வம். காட்டில் உலவும் புலியைப் படமெடுக்க டாப் ஸ்லிப் செல்கிறார். தமிழக வனத்துறைக்குள் நுழைந்த புலியை சட்டவிரோதமாக விற்பனை செய்ய டாப் ஸ்லில் வனத்துறை அதிகாரி சதித்திட்டம் தீட்டுகிறார். இந்த நால்வரைச் சுற்றியும் நகரும் கதையின் அடுத்தடுத்த நகர…
-
- 0 replies
- 671 views
-
-
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை ஆதரித்துப் பேசியுள்ளார் சிவசேனா கட்சியின் தமிழகப் பிரதிநிதி குமார ரஜா! திரையுலக நண்பர்கள் நீங்கலாக தொழில்முறை சினிமா கலைஞர்களின் ஆதரவுக்குப்பிறகு அரசியல் ஆதரவும் கமல் படத்திற்கு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தில் பயங்கரவாத சம்பவங்கள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது என்று கூறுகிறார் குமார ராஜா. மற்ற மாநிலங்கள் சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாதபோது தமிழகத்தில் ஏன் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் குமாரராஜா. ஆகவே, கமலுக்கு தங்கள் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்றும், படத்தை ரிலீஸ் செய்ய கமலுடன் இணைந்து போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1301/29/1130129045_1.htm
-
- 3 replies
- 670 views
-
-
நானும் நீயுமா? - 1 : உச்சத்தில் ஒருவர், ஒரு படி கீழே இன்னொருவர்... தொடரும் இருபெரும் ஆளுமைகளின் கதை! சுரேஷ் கண்ணன் நானும் நீயுமா? - 1 தமிழ் சினிமாவில் தொடரும் இருபெரும் ஆளுமைகள் குறித்து சுரேஷ் கண்ணன் எழுதும் புதிய தொடர்... நானும் நீயுமா? இந்த இருமைகள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து பிரிக்க முடியாத இணைப்பாக அமைந்து இருக்கும். ஒன்றையொன்று சார்ந்திருக்கும். தொடர்ச்சியாக அமைந்திருக்கும். எதிரெதிர் முனைகளில் நின்று கொண்டிருப்பதான பாவனையைத் தரும். ‘'இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதில் வந்து விடு'’ என ‘அலைகள் ஓய்வதில்லை’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய வரியில் இதை அற்புதமாக உணரலாம். …
-
- 1 reply
- 669 views
-