வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5549 topics in this forum
-
அஜீத், நயன்தாரா நடித்த பில்லா படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகம் ‘பில்லா-2’ என்ற பெயரில் தயாராகிறது. பில்லா படத்தில் டேவிட் என்ற சர்வதேச கடத்தல் மன்னன் வேடத்தில் அஜீத் நடித்தார். பில்லா-2 வில் அவரது கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இலங்கை தமிழ் அகதி வேடத்தில் அவர் நடிப்பதாக வதந்தி பரவு உள்ளது. தமிழ் அகதியான அவர் எப்படி சர்வதேச கடத்தல்காரனாக மாறுகிறார் என்பதுபோல் கதை சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் படக்குழுவை சேர்ந்தவர்கள் இதை மறுத்தனர். அஜீத் இலங்கை தமிழனாக நடிக்கவில்லை என்றும் தமிழகத்தில் இருந்து இலங்கை சென்ற தமிழ் தம்பதிக்கு பிறந்த மகனாக நடிக்கிறார் என்றும் கூறினர். இதன் சண்டை காட்சிகள் நவீன தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் ரகத்தில் எடுக்…
-
- 0 replies
- 748 views
-
-
20.09.2008 இன்று கனடா மண்ணில் காதல் கடிதம் திரைப்படம் காண்பிக்கப்படுகின்றது சிறிபாலஜி, அனிசா நடராஜசிவம் மற்றும் பலர் நடிப்பில் காதல் கடிதம் வசீகரன் - வி.எஸ்.உதயா திரை அரங்கம்: Woodside Cinema Showtime: 13.30 மேலதிக தொடர்புகட்கு: தொலைபேசி இலக்கம்: 416 286 9448
-
- 0 replies
- 873 views
-
-
தனது இளைய மகளின் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். மூத்த மகளும் இயக்குனர் என்றபடியால் அவரது இயக்கத்திலும் நடித்தாக வேண்டும். ஒரு கண்ணுக்கு ஆக் ஷனும் இன்னொரு கண்ணுக்கு கட்டும் சொல்ல முடியாது. அப்படி கட் சொல்ல முடியாத ஆஃபர் மூத்த மகள் ஐஸ்வர்யாவால் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அக்சய் குமார் தயாரித்து கிருஷ்ணராக கெஸ்ட் ரோலில் நடித்த ஓ மை காட் பாக்ஸ் ஆஃபிஸில் இப்போதும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை தமிழில் ரிமேக் செய்யும் நோக்கத்தில் அக் ஷய் குமாரை மும்பையில் சென்ற ஞாயிறு சந்தித்தார் ஐஸ்வர்யா. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்திருப்பதாக தகவல். ரொம்ப நாள் முன்பே ஓ மை காட் ரீமேக்கில் ரஜினி நடிப்பதாக இருந்தால் ரீமேக் ரைட்ஸை தருவதாக அக்சய் கூறியிருந்தார்.…
-
- 0 replies
- 788 views
-
-
Pinned by OLIPARAPPU ஒளிபரப்பு S.t.a_ S.t3 weeks ago (edited) நான் இலங்கை தமிழர்களின் பல திரைப்பட படைப்புகளைப் பார்த்து இருக்கின்றேன். ஆனால் இதுபோன்று ஒரு இயற்கையான தத்ரூபமான நடிப்பில் சிறந்த திரைக்கதை அமைப்பிலும் ஒரு படம் பார்த்தது இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் அதில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் பாராட்டத்தக்க விடயம் என்னவென்றால் நமது இலங்கை தமிழர்களின் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த . பிள்ளைகளின் தமிழ் உச்சரிப்பு மிகவும் பாராட்டத்தக்கது.👍👑 இவ்வாறு தமிழைக் கதைத்து நடிக்கக் கூடிய திறமை படைத்தவர்களாக இலங்கையில் கூட சிறுவர்கள்(. இளம் தலைமுறையினர்) இருக்கமாட்டார்கள். இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகவும் திறமையாக நடித்திருக்…
-
- 1 reply
- 589 views
-
-
ஜெனிலியா கலியாணம் முடித்து போய் விட்டதால், பெரும் கவலையில் இருக்கும் தமிழ் சிறியருக்காக யாஷிகா ஆனந்த்... கடைசி படத்தில சின்னப்பொடியனின் ரசனை... அருமை.
-
- 17 replies
- 2.6k views
-
-
சச்சின், ஒருநாள் போட்டிகளிலிருந்து, ஒய்வு பெற்றுவிட்டார். இந்த, தகவல் கிரிக்கெட் ரசிகர்களை, எவ்வளவு கலங்க செய்திருக்கும்? அதே, அளவுக்கு, ஜாக்கிசானின் ஆக்சன் பட ரிடையர்மென்ட்டும், என்னைப்போன்ற எக்கச்சக்க ஜாக்கி ரசிகர்களுக்கு, மிகப்பெரிய அதிர்ச்சிதான். குட்டிப்பையனாக, எத்தனை, ஜாக்கிசான் படங்கள் பார்த்திருப்போம். அப்போதெல்லாம், தமிழ் டப்பிங் இருக்காது. ஆங்கிலம்தான். படத்தின் பெயர்கள் கூட குத்துமதிப்பாகத்தான் தெரிந்திருக்கும். மொழி புரியவில்லையென்றாலும் வெறும் காட்சிகளாலேயே நம்மை விலா நோக சிரிக்க வைத்தவர் ஜாக்கி. எவ்வளவு கடினமான ஆக்சன் காட்சிகளையும் சிரித்த முகத்தோடு ரத்தம் சிந்தி நடித்தவர். மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்களில் புரூஸ்லீ கமலஹாசன் என்றால் ஜாக்கிதான் ரஜினி. ஜாக்க…
-
- 0 replies
- 493 views
-
-
இளையராஜா - பாரதிராஜா உரசல், அரசல் புரசலாக இருந்தது போய்... வெளிப்படையாகவே வெடித்துவிட்டது. அன்னக்கொடியும் கொடிவீரனும் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னை வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டு மேடையில் அவமதித்துவிட்டார் பாரதிராஜா என இளையராஜா குமுறியுள்ளார். குமுதம் இதழில் வாசகர் ஒருவர் "மதுரையில் உங்கள் நண்பர் பாரதிராஜாவின் பட விழாவில் அவர் இப்போதும் இளைஞர் போல் படு சுறுசுறுப்பாகவும் நடிகைகளுடன் ஜாலியாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் உங்களைப் பற்றி பேச வரும்போது மட்டும் குறை கூறியும், புத்திமதி சொல்வதுமாக இருந்தாரே, அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?", என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இளையராஜா, தன் மனக்குமுறலை பகிரங்கமாகக் கொட்டியுள்ளார். தனது பதிலில், "மேடையில் எ…
-
- 1 reply
- 873 views
-
-
சிரேஷ்ட தென்னிந்திய நடிகர் சிவகுமார் தனது இரண்டு மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் இணைந்து தமிழக முதல்வரின் கொவிட்-19 நிவாரண நிதிக்கு ஒரு கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். அண்மையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு முதல்வரின் நிவாரண நிதிக்கு முடிந்தவரை பங்களிக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இந் நிலையில் நேற்று சிவகுமார் தனது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தியுடன் ஸ்டாலினை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து இந்த நன்கொடையை வழங்கியுள்ளனர். கொவிட் -19 இலிருந்து மக்களைப் பாதுகாப்பதே காலத்தின் தேவை, நாங்கள் எங்கள் தரப்பிலிருந்து ஒரு சிறிய தொகையை வழங்கியுள்ளோம். எல்லோரும் தங்கள் சொந்த ம…
-
- 0 replies
- 265 views
-
-
மதுரையில் இட்லி கடைகளுக்கு விசிட் செய்து இட்லி செய்ய கற்றுக்கொண்டார் லட்சுமி மேனன்.‘கும்கி, ‘சுந்தரபாண்டியன், ‘குட்டிப் புலி’ என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிப் படங்களில் நடித்து ஹட்ரிக் அடித்தவர் லட்சுமி மேனன். தற்போது ‘ஜிகர்தண்டா என்ற படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார். இதில் இட்லி கடை நடத்தும் பெண்ணாக வேடம் ஏற்கிறார். இதற்காக மதுரை சென்ற அவர், நகரின் பல்வேறு இடங்களில் நடத்தப்படும் இட்லி கடைகளுக்கு நேரில் சென்று அங்கு எந்த முறையில் இட்லி தயாரிக்கிறார்கள். கடை எப்படி நடத்தப்படுகிறது. கஸ்டமர்கள் என்னவெல்லாம் கேட்பார்கள் அதற்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கடையின் ஒரு ஓரமாக அமர்ந்து கவனித்து பயிற்சி பெற்றார். இது பற்றி லட்சுமி மேனனிடம் கேட்ட போது...‘இப்படத்தில் …
-
- 15 replies
- 1.3k views
-
-
தமிழ் சினிமாவின் தரத்தை ஒரு படி உயர்த்தும், ஒரு உன்னதமான படம். - இயக்குநர் சீனுராமசாமி.
-
- 0 replies
- 516 views
-
-
ரஜினிகாந்த்தின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு! ரஜினியைச் சுற்றி ஆயிரம் அரசியல் சர்ச்சைகள் இருந்தாலும், அவர் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்துக்குத் தயாராகி விட்டார். தனுஷ் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில் இந்தப் படம் உருவாகவு உள்ளது. ரஜினியின் 164-வது படமான, இதன் பெயர் இன்று அறிவிக்கப்படும் என்று தனுஷ் கூறியிருந்தார். இந்நிலையில், படத்தின் பெயர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்துக்கு 'காலா' என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், கரிகாலன் என்ற சப் டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. கரிகாலனின் சுருக்கம்தான் காலா என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக, வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், கபாலி பட கெட் அப் சாயிலிலேயே, ரஜினியின் லுக் உள…
-
- 2 replies
- 597 views
-
-
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம் 27-09-2013 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! அண்ணன் இயக்குநர் மிஷ்கினின் கலைத்தாகம் படத்துக்குப் படம் கூடிக் கொண்டே செல்கிறது..! மற்றவர்களெல்லாம் சினிமாவை மக்களுடையதாக நினைக்க.. இவர் மட்டுமே இதனை ஒரு கலை சார்ந்த படைப்பாக நிறுவ பெரும் முயற்சி செய்து வருகிறார்..! 'சித்திரம் பேசுதடி'யில் ஒரு காதல் கதையை சொன்னவிதம் அனைவருக்கும் பிடித்துப் போக.. அதையே 'அஞ்சாதே'யில் போலீஸ்-ரவுடி-சமூகம் சார்ந்த கதையாகவும் மாற்றி திரில்லராகவும் செய்து காண்பித்தார்.. மூன்றாவதாக 'யுத்தம் செய்'யிலும் இதே திரில்லர் டைப்.. 'நந்தலாலா'வில் கலைப்படைப்பின் உச்சத்தைத் தொட்டார்.. 'முகமூடி'யில் ஹீரோவுக்கான கதையாகவும் மாற்றி எடுத்துப் பார்த்தார்.. ஆனாலும…
-
- 1 reply
- 2k views
-
-
'மெர்சல்' புதிய போஸ்டர் வெளியீடு: ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடல் ‘மெர்சல்’ படத்தின் புதிய போஸ்டர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் 'மெர்சல்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 'மெர்சல்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் விஜய் - சமந்தா சம்பந்தப்பட்ட சில காட்சிகளையும் ஒரு பாடலையும் படமாக்கவுள்ளனர். தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்திருப்பதால், ஆகஸ்ட் 20-ம் தேதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் வெளியாகவுள்ளன. அதற்கு முன்னதாகவே ஒரே ஒரு பாடலை மட்ட…
-
- 6 replies
- 1.6k views
-
-
தனுஷ் விவாகரத்து என்பது பலர் எதிர்பார்த்த ஒன்றுதான், ரஜனியின் காலத்தின் பின்னர் அது நடக்கும் என்று பலர் நினைத்தார்கள் முன்னதாகவே பிரிந்துவிட்டார்கள்.
-
- 38 replies
- 3.9k views
- 1 follower
-
-
தமிழ்ச்சினிமா : வன்முறைதான் வழிமுறையா? இவள் பாரதி தமிழ்ச் சினிமாவின் போக்கு நிஜ வாழ்க்கையைப் பாதிக்கிறதா என்றால் ஆம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. காட்சி ஊடகம் மிகப்பெரிய ஆயுதமாகிவிட்ட நிலையில் அதன் மூலம் வெளியாகும் வன்முறை இரசிகனின் மனத்தில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தேவர்மகன் ரிலீசான பிறகு தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் வெடித்ததும் அதற்கு உலகநாயகன் வருத்தம் தெரிவித்ததும் யாவரும் அறிந்ததே. தேவர்மகனைப் போல பல உதாரணங்கள் சொல்லலாம். எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களில் மிகக் குறைவாக இருந்த வன்முறைக் காட்சிகளும், அதற்கொத்த கதைகளும் ரஜினி, கமல் வருகைக்குப் பிறகு மெல்ல அதிகரித்து இப்போது வன்முறையே இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணி விடும் அளவுக்கு வன்முறை …
-
- 0 replies
- 1.1k views
-
-
தன் மகனின் உயிரைக் காப்பாற்றத் துடிக்கும் ஒரு தாயின் நீக்கமற போராட்டத்துடன் சூழலியல் சார்ந்த கனமான கருத்தை விதைக்கும் முயற்சிதான் 'ஓ2' படத்தின் ஒன்லைன். படம் வெள்ளிக்கிழமை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நுரையீரல் பாதிப்பால் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியின்றி சுவாசிக்க முடியாமல் தவிக்கும் தன் மகனை அழைத்துக்கொண்டு மேல்சிகிச்சைக்காக கொச்சின் செல்லும் தாய் (நயன்தாரா). தன் காதலியின் தந்தைக்கு தெரியாமல் அவளை அழைத்துச்செல்ல திட்டமிடும் காதலன், போதைப்பொருளை கடத்திச் செல்லும் காவலர், இழந்த செல்வாக்கை மீட்கச் செல்லும் ஒரு அரசியல்வாதி உட்பட பலரையும் ஏற்றிக்கொண்டு, கோவையிலிருந்து கேரளா புறப்படுகிறது அந்த ஆம்னி பேருந்து. வழியில் ஏற்படும் விபத்து…
-
- 0 replies
- 263 views
-
-
கார்த்தி - வருங்கால மக்கள் திலகம் உணர்ச்சிவசப்படுவதில் பெப்சி தலைவர் வி.சி.குகநாதனுக்கு ஈடுஇணையில்லை. தா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது இன்னொருமுறை உறுதியானது. இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கும் ஸ்ரீவிஜெய் ஈழத்தமிழ்ர். இதனால் விழாவில் ஈழம் பற்றிய அனல் அதிகமாகவே அடித்தது. ஆர்.கே.செல்வமணி பேசும் போது ஈழத்தில் ஒலித்த ஒரு குரல் நசுக்கப்பட்டது என்றார். பின்னாலேயே பேச வந்த குகநாதன், அந்தக் குரலை ஒருபோதும் நசுக்க முடியாது என்றார் ஆவேசமாக. இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் சூர்ய பிரபாகர் என அவர் சூசகமாக தமிழீழத் தலைவரை சொன்ன போது அரங்கில் அட்டகாசமான கைத்தட்டல். பாடல்களை வெளியிட வந்த கார்த்தியை அவர் வருங்கால மக்கள் திலகம் என வர்ணித்தது, ஆச்சரியம். …
-
- 0 replies
- 1.8k views
-
-
என் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு நல்லா இருக்காது. அதை கமல்சார்தான் கரெக்ட் பண்ணார் என்கிறார் நடிகை த்ரிஷா. கமலுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்திருக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க, கே எஸ் ரவிக்குமார் இயக்கும் படம் இது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம், கமல்ஹாஸனுடனான அனுபவம் என போகிற இடமெல்லாம் மன்மத அம்பு குறித்து ஒரு செய்தியாவது சொல்லத் தவறுவதில்லை த்ரிஷா. இந்தமுறை, கமல் எப்படி தனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார் என்பதை இப்படிக் கூறுகிறார் த்ரிஷா: “கமல் சாருடன் நடிக்கணும்கிறது எனக்குப் பல வருஷக் கனவு. ‘தசாவதாரம்’ படத்தில் கமல் சார் நடிக்கக் கூப்பிட்டிருந்தார். அப்போ என் கையில் டேட்ஸ் இல்லை. அடுத்து ‘மர்மயோகி’ வாய்ப்பு. எக்கச்சக்க ஹோம் வொர்க் பண்ணி வச்சிரு…
-
- 0 replies
- 704 views
-
-
பார்த்திபன் எழுதி இயக்கியிருக்கும் படம், கதை திரைக்கதை வசனம் இயக்கம். கதையே இல்லாத படம் என்று பார்த்திபன் அறிவித்த நாள் முதல் இந்தப் படத்தின் மீது பலருக்கு ஆவல். தமிழ் சினிமாவில் நடக்கும் கதை விவாதத்தைதான் பார்த்திபன் படமாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. கதை விவாதத்தின் போது, இந்த காட்சியில் இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவார்கள் அல்லவா. அப்போது அந்தக் காட்சியில் குறிப்பிட்ட நடிகரே தோன்றி நடிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆர்யா, விஷால், அமலா பால், தாப்ஸி, பிரகாஷ்ராஜ், விமல் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யாருமே பணம் வாங்காமல் நடித்துள்ளனர். பார்த்திபன் இதில் நடிக்கவில்லை என்பது படத்தின் இன்னொரு பலம். அல்போன்ஸ் ஜோசப், …
-
- 0 replies
- 530 views
-
-
நெதர்லாந்து நாட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 14 லட்சம் பணம் தபால் மூலம் வந்தது குறித்து அவருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பார்சல்களை ஸ்கேன் செய்து பார்ப்பது தபால் துறையின் வாடிக்கையான விஷயம். பாதுகாப்பு கருதி இந்த நிநவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில் ஐஸ்வர்யா ராய்க்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலையும் அதிகாரிகள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதில் ஐரோப்பிய நாணயமான யூரோ பணக் கட்டுக்கள் இருந்தன. பார்சலில் பணம் அனுப்பக் கூடாது என்பது விதியாகும். எனவே ஐஸ்வர்யாவுக்கு வந்திருந்த அந்த பார்சலைப் பிரித்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ. 14 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சி இருந்தது. இதுகுறித்து ஐஸ்வர்யா…
-
- 10 replies
- 2.2k views
-
-
அரவான் படத்தின் நாயகன் ஆதி ஜோடியாக 'ஆடு புலி' என்ற படத்தில் நடித்த 22 வயதே நிரம்பிய மலையாள இளம்பெண் மீராநந்தன். மலையாளியான அவர் கேரள சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவரை தனது மகள் வரலட்சுமியை விட நான்கு வயது இளையவரான மீரா நந்தனை தனக்கு ஜோடியாக்கி அவருடன் டூயட் பாடியிருக்கிறார் சரத்குமார். இதே படத்தில் இன்னொரு இளம் நடிகையான ஓவியாவுடனும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கிறார். சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் "சண்டமாருதம்" என்ற மொக்கைப் படத்தில்தான் இந்தக் கூத்து அரங்கேறியிருக்கிறது. ஏற்கனவே ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த் போன்ற தாத்தா நடிகர்கள் தங்கள் மகளை விட வயதில் குறைந்தவர்களோடு நடித்துவரும் கொடுமை தமிழ் சினிமாவில் தொடர்ந்…
-
- 15 replies
- 5.8k views
-
-
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை. விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்? கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில்…
-
- 19 replies
- 4.3k views
-
-
"சிம்புவை கை காட்டிய விஜய் சேதுபதி, 'யுவன் யார்?' என்ற ரைசா..." - 'பியார் பிரேமா காதல்' நோட்ஸ் 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. ஹார்ட்டின்களும் ஆர்ட்டிஸ்டுகளும் அந்த அரங்கத்தை நிறைக்க, சென்னை ஏவிஎம் ஸ்டுடியோ நான்காவது தளத்தில் நடந்தது, 'பியார் பிரேமா காதல்' படத்தின் இசை வெளியீட்டு விழா. இசை ராஜாவின் இளைய ராஜா, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு தயாரிப்பாளராக இது முதல் படம். நிகழ்வின் நெகிழ்வான மற்றும் சுவாரஸ்ய நிமிடங்கள் இங்கே... * இயக்குநர்கள் அமீர், சீனு ராமசாமி, அகமது, ராம் ஆகிய நான்குபேரும் ஒன்றாக மேடை ஏற, 'படத்தின் டைட்டிலே காதல்.. காதல்.. காதல். அதனால, எல்லோரும் உங்களோட முதல் காத…
-
- 1 reply
- 1.3k views
-
-
எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி-கமல் நீதிமன்றில் புகார் எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி என சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் கமல்ஹாசன். செந்தில்குமார் என்ற அசிஸ்டெண்ட் டைரக்டர் `தசாவதாரம்' கதை என்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கமல் மீது பொலிஸிலும் புகார் கொடுக்கப்பட்டது. கமலை விசாரித்த பொலிஸ் கமலின் விளக்கத்தை ஏற்றுக் கொண்டது. அதேநேரம், செந்தில்குமார் தொடர்ந்த வழக்கில் பதில் மனு அனுப்பும்படி கமலுக்கும், படத்தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி பதில் மனுத் தாக்கல் செய்தார் கமல்ஹாசன். செந்தில்குமாரின் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது. நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக சின…
-
- 4 replies
- 1.7k views
-
-
'நம்பிக்கையூட்டும் முயற்சிகள், அவ நம்பிக்கை ஏற்படுத்தும் வளர்ச்சி விகிதம்.' 2007-ம் ஆண்டின் முதல் ஆறுமாதகால தமிழ் சினிமாவை சுருக்கமாக இப்படி வரையறுக்கலாம். லாப ரீதியாக கணிக்கும்போது, மற்ற எந்த வருடத்தையும் விட 2007 அதிக வருவாயை ஈட்டியுள்ளது. பாலிவுட்டின் கலெக்ஷ்னை கோலிவுட் இந்த ஆறுமாதத்தில் தாண்டி விட்டது எனலாம். இந்த வருடம் ஜனவரி ஒன்று முதல் ஜுன் முப்பதுவரை 50 படங்கள் ரிலீஸாகியுள்ளன. எண்ணிக்கையில் பார்க்கும்போது இது சென்ற வருடத்தைவிட (42) எட்டு படங்கள் அதிகம். வெற்றி பெற்ற படங்களின் விகிதமும் அதிகம் என்பது சந்தோஷமான விஷயம். இந்த வருடத்தின் முதல் ப்ளாக் பஸ்டர் விஜய்யின் 'போக்கிரி.' தெலுங்கு ரீ-மேக்கான இதன் தாளம் போட வைக்கும் பாடல்கள், அசினின் நடிப்பு, விஜய்யி…
-
- 0 replies
- 1k views
-