வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
படத்தின் காப்புரிமை SK PRODUCTIONS திரைப்படம் கனா நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன், ரமா, இளவரசு, முனீஸ்காந்த் இசை …
-
- 1 reply
- 1.1k views
-
-
இரசிகர்களை அதிசயிக்க வைக்கும் “2.O“ – நாளை மிக பிரம்மாண்ட வெளியீட்டுக்கு தயார்! லைகா புரொடக்ஷனின் பிரம்மாண்டத் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O திரைப்படம் நாளை உலகலாவிய ரீதியாக வெளியாகவுள்ளது. நேரடியாக 3D தொழில்நுட்பத்தில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட இந்தத் திரைப்படம், 3D மற்றும் 2D தொழில்நுட்பத்தில் 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அக்ஷய் குமார், எமி ஜக்ஷன், சுதன்ஷு பாண்டே, ஆதில் உசைன், கலாபவன் சஜோன், ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், நிரவ் ஷா ஒளிப்பதிவையும், என்டனி படத்தொகுப்பையும், ரசுல் பூக்குட்டி ஒலியமைப்பையும் கைய…
-
- 14 replies
- 2.3k views
-
-
கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்தின் அடுக்குகள் ஏறி மிதிக்க நினைக்கும். `உனக்கெல்லாம் இது ஒரு கேடா?' என ஆயிரமாயிரம் கண்கள் கேள்விகளோடு துளைக்கும். தலைமுறைகளாகத் தொடரும் வறட்டு ஆணவம் தாமிரபரணியின் தண்ணீரில் துரத்தி மூழ்கடிக்கத் துடிக்கும். இவை அனைத்தையும் எதிர்த்துக் கேள்வி கேட்டு நிமிர்ந்து நின்றால்... அவன்தான் `பரியேறும் பெருமாள்.' வழக்கமாக இங்கே கதை சொல்வதுதான் வழக்கம். ஆனால், இங்கே பரியன் வழியே மாரி செல்வராஜ் சொல்லியிருப்பது பல தலைமுறைகளின் வலிநிறைந்த வாழ்க்கையை... அதை எப்படி அவரால் யதார்த்தமாக இரண்டரை மணிநேர சினிமாவில் சொல்ல முடிந்தது என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. ரத்தமும் புழுதியும் கூத்தும் வேட்டையுமான அவ்வளவு அடர்த்தியான வாழ்க்கையை ஒரு சின்னப் பத்திக்குள் அடைக்க…
-
- 6 replies
- 2.7k views
- 1 follower
-
-
முதல் பார்வை: ஜானி உதிரன்சென்னை ரெண்டரை கோடிக்கான பண வேட்டையில் சாகசம் செய்யும் எதிர் நாயகனின் கதையே 'ஜானி'. பிரபு, ஆனந்த்ராஜ், அஷுதோஷ் ராணா, பிரசாந்த், ஆத்மா பேட்ரிக் ஆகிய ஐவரும் பிசினஸ் பார்ட்னர்கள். சீட்டு ஆடும் கிளப், மதுபானக்கூடம் என பல தொழில்களைச் செய்து வரும் இவர்கள் பணத்துக்காக சில சட்டவிரோதச் செயல்களையும் செய்கின்றனர். ரெண்டரை கோடி ரூபாய் பணம் தயார் செய்தால் கையில் விலை உயர்ந்த போதைப்பொருள் கிடைக்கும் என்று பிரபுவின் நண்பர் சாயாஜி ஷிண்டே கூறுகிறார். இதற்காக ஐவரும் இணைந்து ஆளுக்கு ரூ.50 லட்சம் ஏற்பாடு செய்கிறார்கள். பணத்தை சாயாஜி ஷிண்டேவிடம் யார் கொடுப்பது, பொருள் வாங்குவது எப்படி? பயணமுறை, பிக் அப் செய்வது என எல்லாம் பக்காவாக திட்டமிடப்ப…
-
- 0 replies
- 597 views
-
-
'96 திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் அண்மையில் தான் கிட்டியது. அக்டோபர் 04ல் இத்திரைப்படம் வெளியானதில் இருந்து முகநூல் மற்றும் நண்பர்கள் வாயிலாக இத்திரைப்படத்தின் கதை ஏற்கெனவே ஓரளவு தெரிந்திருந்தாலும், படம் பார்க்கும் போது கிடைத்த அனுபவம் புதுவிதம். கடந்த ஓரிரு வருடங்களாக காதல் / நட்பு சார்ந்த, ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான திரைப்படங்கள் தற்போது வெளிவருவதில்லையே என்றெல்லாம் சலித்துக்கொண்டு, விறுவிறுப்பான, மர்மக் கதையம்சம் (Thriller / Crime / Mystery) அல்லது அவ்வப்போது வெளியாகும் வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட தமிழ் சினிமாவைத் தேடித் தேடிப் பார்த்த எனக்கு '96 திரைப்படம் ஓர் புத்துணர்வையும், நம்பிக்கையையும் கொடுத்தது. 2000ஆம் ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்…
-
- 19 replies
- 2.6k views
- 1 follower
-
-
Published : 14 Dec 2018 11:33 IST Updated : 14 Dec 2018 12:14 IST ஒரு குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்வதற்காக மும்பையிலிருந்து ராமேஸ்வரம் வரும் போலீஸ் அதிகாரி, அதே நபரைக் காப்பாற்றப் போராடினால் அதுவே 'துப்பாக்கி முனை'. ராமேஸ்வரம் தீவில் 15 வயது சிறுமியை ஆசாத் ('மிர்ச்சி' ஷா) என்கிற மாவோயிஸ்ட் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்கிறது. ஆசாத்தை என்கவுன்ட்டர் செய்வதற்காக போலீஸ் அதிகாரி போஸ் (விக்ரம் பிரபு) மும்பையிலிருந்து ராமேஸ்வரம் விரைகிறார். கொலையான சிறுமியின் தந்தை உய்யா (எம்.எஸ்.பாஸ்கர்) விக்ரம் பிரபுவிடம் நடந்தது என்ன? என்பதைச் …
-
- 1 reply
- 934 views
-
-
விவேக் ஆனந்த் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Ratchasan Movie/Dilli Babu …
-
- 0 replies
- 939 views
-
-
சுமார் 550 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட 2.0 திரைப்படம், முதல் நான்கு நாட்களில் 400 கோடி ரூபாயை வசூலித்ததாக லைகா நிறுவனம் தெரிவித்தது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு திரையரங்கிலும் வசூலாகும் தொகை எவ்வளவு என்பதை துல்லியமாக கணக்கிட்டுச் சொல்ல எந்த அமைப்பும் இல்லை என்பதால், தயாரிப்புத் தரப்புத் தெரிவிக்கும் தொகையே அந்தப் படத்தின் வசூலாக குறிப்பிடப்படுகிறது. படத்தின் காப்புரிமை LYCA இந்தப் படம் எந்த மொழியில், எந்தப் பகுதியில் எவ்வளவு வசூலைப் பெற்றது என்ற தகவலை லைகா நிறுவனத்திடம் கேட்டபோது, அவர்கள் தற்போது அந்தத் தகவல் இல்லையெனக் கூறினர். 2019 மே மாதம் சீனாவில்…
-
- 7 replies
- 1.7k views
-
-
ரஜினியிடம் இன்றைய ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது! உதய் பாடகலிங்கம் ரஜினிகாந்த் பிறந்தநாள் (டிசம்பர் 12) கட்டுரை நடிகர் ரஜினிகாந்திடம் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் எவற்றையெல்லாம் இன்றைய நாயகர்கள் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது. இன்றைய நாயகர்கள் பலர் பிளாஸ்டிக் புகழ்ச்சிகளுக்குப் புளகாங்கிதம் அடைந்து, அடுத்தடுத்துக் கிடைக்கும் சில வெற்றிகளுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையைக் குறிவைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இகழ்ச்சியும் ஏளனமும் அவமானமும் மட்டுமல்ல, கடுமையான விமர்சனமும்கூட அவர்களுக்குக் காயத்தையே ஏற்படுத்துகிறது. இதுவே இவர்களைக் குறித்த கிசுகிசுக்களும் வதந்திகளும் அதிகாரபூர்வமற்ற செய்திகளும் வெளியாகக் காரணமாகின…
-
- 0 replies
- 1k views
-
-
கிழியக் கூடாத, இடத்தில்... கிழிந்த ஆடை: சங்கடத்தில் நெளிந்த டிவி நடிகை. நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த டிவி நடிகை கிம் கர்தாஷியனின் உடை கிழிந்து சங்கடமாகிவிட்டது. அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியன் பிராட்வேயில் நடந்த ஷேர் ஷோவுக்கு தனது கணவர் கென்யே வெஸ்டுடன் வந்தார். கிம் வெர்சாச்சி பேக்லெஸ் கவுன் அணிந்து வந்திருந்தார். கிம் தனது கணவருடன் சேர்ந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்தார். அப்பொழுது அவரது கவுன் ஒரு பக்கம் கிழிந்து அவரின் முன்னழகை அளவுக்கு அதிகமாகவே காட்டிவிட்டது. உடனே கிம் அதை சரி செய்தாலும் அந்த சங்கடமான நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகிவிட்டன.பொது நிகழ்ச்சியில் தனக்கு…
-
- 1 reply
- 736 views
-
-
தென்னிந்தியாவிலேயே விஜய்யின் சர்கார் தான் நம்பர் 1, ரஜினியின் 2.0 லிஸ்டிலேயே இல்லை- ரசிகர்கள் செம ஷாக் Mahalakshmi தமிழ் சினிமாவை இப்போது ராஜ்ஜியம் செய்து வருகிறது ரஜினியின் 2.0. சூப்பர் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்ப அவரது படங்கள் தாறுமாறாக எல்லா இடத்திலும் மாஸ் வசூல் செய்து வருகிறது. இங்கு 5 நாட்களில் ரூ. 450 கோடி வரை வசூலித்துள்ள இப்படம் சீனாவிலும் வெளியாக இருக்கிறது. அங்கும் படத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தென்னிந்தியாவில் டுவிட்டரில் 2018ம் அதிகம் டிரண்ட் செய்யப்பட்ட டாக்குகளில் விவரம் வெளியாகியுள்ளது. அதில் விஜய்யின் சர்கார் படம் முதல் இடத்தை பிடித்து…
-
- 0 replies
- 501 views
-
-
நடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்! னி செய்திகள் தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். சண்டிகரில் நடந்த குத்துசண்டை போட்டியில் பெண் வீராங்கனையிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 வயதாகும் ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்தி டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை மணக்கிறார். வருகிற 30–ந் திகதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இவர்கள் திருமணம் நடக்கிறது. திருமண அழைப்பிதழை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். …
-
- 6 replies
- 1.6k views
-
-
பிரம்மாண்டமான காட்சியமைப்பு, சமூக அநீதிக்கு எதிரான போராட்டம், சமூகத்துக்கு ஒரு செய்தி என வழமையான சங்கர் படங்களின் பாணியில் தான் இருக்கும் என எதிர்பார்த்துச் சென்றது போலவே 2.0ம் இருந்தது. எனினும் இதில் சங்கர் எடுத்துக்கொண்ட களம் புதிது; இலகுவாகப் புறக்கணித்து ஒதுக்கக் கூடிய, ஆனால் ஒதுக்கிவிடக் கூடாத சமூகப் பிரச்சினை. அதை விறுவிறுப்பான திரைக்கதையுடனும், பிரம்மிக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் வழங்கிய விதம் கற்பனைக்கும் மிக மிக அப்பாற்பட்டது. படத்தின் Title cardல் இருந்து ஆரம்பித்து நிறைவுறும் வரையில் தொடர்ந்த 3D அனுபவம் ஒரு Theme park சென்றது போன்ற ஓர் உணர்வு. ஒருபக்கம் stylish, mass hero ரஜினி பல்வேறு ரூபங்களில் அமர்க்களப்படுத்த, மறுபக்கம் அக்க்ஷய் குமாரி…
-
- 0 replies
- 972 views
-
-
கமல்ஹாசன் | கோப்புப் படம்: ஜெ.மனோகரன். Published : 04 Dec 2018 18:49 IST Updated : 04 Dec 2018 18:49 IST 'இந்தியன் 2' திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விடைபெறுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட கமல்ஹாசன் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், ''எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி மேற்கொண்டுள்ள பணிகளுக்கு இடையே ‘இந்தியன் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறேன். இந்தப் படம்தான் என்னுடைய திரையுலகப் பயணத்தில் கடைசிப் படமாக இருக்கு…
-
- 1 reply
- 777 views
-
-
தமிழ் சினிமாவின் வர்த்தகத்தை ஒவ்வொரு முறையும் அடுத்துக்கட்டத்திற்கு எடுத்து செல்பவர்கள் தான் ரஜினியும் ஷங்கரும், அவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் அந்த வளர்ச்சியை சிவாஜி, எந்திரனில் பார்த்து இருப்போம், தற்போது அடுத்தக்கட்டமாக உலகமே வியக்கும் 2.0 ஒரு படைப்பை இருவரும் கொடுக்க, ரசிகர்களுக்கு இப்படம் செம்ம விருந்தானதா? பார்ப்போம். கதைக்களம் படத்தின் ஆரம்பத்திலேயே அக்ஷய் குமார் செல்போன் டவரில் தூக்கு போட்டு இறக்கின்றார். அதை தொடர்ந்து அடுத்த நாளில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து செல்போன்களும் தொலைந்து போகிறது. இந்த மாயம் எப்படி நிகழ்கிறது என்று ஆராய்ச்சிக்குழு அரசாங்கத்தின் கீழ் ஆராய்ச்சி செய்யும் போதே பல செல்போன் உரிமையாளர்களும், டெலிகாம் மினிஷ்டரும்…
-
- 19 replies
- 3.2k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் Image caption லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார். பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பதிலளித்தார். கேள்வி: 2.…
-
- 3 replies
- 867 views
-
-
தன் வாழ்நாள் முழுக்க போர்களின் ரணங்களைப் பதிவு செய்த பத்திரிகையாளர் மேரி கால்வினின் கடைசி வருடங்களைப் பதிவு செய்திருக்கிறது A Private War. உலகை ஆள தற்போது எந்த விதமான போர்களும் நடப்பதில்லை. இப்போது நடப்பதெல்லாம் ஓர் நாட்டின் மீதான சர்வாதிகாரத்தை நிலைநாட்டத்தான். கடந்த 30 ஆண்டுகளில் உலகெங்கிலும் நடைபெற்ற போர்களில் பெரிதும் பேசப்பட்டவர் மேரி கால்வின். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் போர்கள் பற்றியெல்லாம் மக்கள் தெரிந்துகொள்ளக் காரணமாய் இருந்தவர் மேரி கால்வின். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அயல்நாட்டு ஆசிரியரான சீயன் ரியனிடம் (டாம் ஹாலண்டர்) , "நீங்கள் இதெல்லாம் பார்க்கக்கூடாது என்பதற்காகவே, நான் இதையெல்லாம் பார்க்கிறேன் " என்பார் மேரி. ஆம், …
-
- 0 replies
- 430 views
-
-
சாலையில் நடப்பது யார்னு பாருங்க.. இதனால்தான் இவர் ராஜா !! திருவண்ணாமலை: அங்கே வேற யாராவது இருந்தால் எகிறி ஆட்டமே போட்டிருப்பார்கள்!! ஆனால் வந்தது இவராயிற்றே?! திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் ஆறாம் நாள் அது. நகரெங்கும் தெரு தெருவாக போலீஸ் குவிக்கப்பட்டு இருக்கிறது. நேரம் மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. கோயில் பக்கம் இருக்கிற அண்ணாசாலை அருகே ஒரு கார் வந்து நிற்கிறது. உச்சக்கட்ட டென்ஷனில் இருந்த போலீசார், ம்ஹூம்... இதுக்கு மேல போகக்கூடாது. பெர்மிஷன் கிடையாது. அப்படியே வண்டியை நிறுத்துங்க என்று எச்சரிக்கிறார்கள். உடனே ஒருவர் காரிலிருந்து இறங்கி வந்து அந்த போலீசாரின் காதில் உள்ளே இருப்பவரை பற்றி சொல்கிறார். இசைஞானி கொளுத்தும் வெயிலில் ப…
-
- 2 replies
- 737 views
-
-
பள்ளி மாணவிகளைக் கடத்தி கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன், சினிமா இயக்குநர் கனவோடு திரிந்து, குடும்ப சூழலால் போலீஸ் ஆன ஹீரோ... இருவரையும் இணைத்து மிரட்டுகிறான், 'ராட்சசன்'. சினிமா உதவி இயக்குநர் விஷ்ணு விஷால், உலகெங்கும் இருக்கும் சைக்கோக்களைப் படித்து, முதல் படத்திற்கான கதையெழுதி தயாரிப்பாளருக்கான தேடுதலில் அலைந்து திரிகிறார். இன்னொரு பக்கம் அப்பா இழந்த குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் அப்பா விட்டுச் சென்ற காக்கிச் சட்டையை போட வேண்டிய சூழலும் இவருக்கு ஏற்படுகிறது. துணை ஆய்வளராக பொறுப்பேற்றதும் ஊருக்குள் நடக்கும் சில கொடூர கொலைச் சம்பவங்களில் ஆர்வம் காட்டத் தொடங்குகிறார். பள்ளி மாணவிகளை மட்டுமே குறிவைத்து நடக்கும் அக்கோரச் சம்பவத்தின் பின்னணி என்ன...…
-
- 3 replies
- 1.1k views
-
-
இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான் கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்…
-
- 8 replies
- 885 views
-
-
கெய்ரோ திரைப்படவிழாவில் VR தொழினுட்பம் அறிமுகம், மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதி! எகிப்தின் ஒபேரா இல்லத்தில் இடம்பெற்ற கெய்ரோ திரைப்பட விழாவில் அனைத்து நட்சத்திரங்களுக்கும் சிறப்பு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இந்த முறை வித்தியாசமான சில விருந்தினர்களும் கலந்து கொண்டனர். இந்த வருடம் 40 வது கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்புத் தேவையுடையவர்களுக்காக விசேடமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக பேசும் திறன் அற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக இங்கு கூடிய கவனம் செலுத்தப்பட்டதுடன், ரசிகர்களுக்கு நவீன திரைப்பட தொழினுட்பத்தையும் ஏற்பாட்டாளர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். அவ்விதமானவர்களுக்கு virtual reality எனப்படும் மெய்நிகர் யதார்த்த காணொளிகளை பார்த்து உ…
-
- 0 replies
- 258 views
-
-
'திமிரு புடிச்சவன்' - செல்ஃபி விமர்சனம்
-
- 0 replies
- 508 views
-
-
நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இசை ஏ.ஆர்.ரகுமான் ஓளிப்பதிவு கிரிஷ் கங்காதரன் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்த விஜய், அமெரிக்காவில் பெரிய கார்ப்பேட்டில் சி.இ.ஓ.வாக இருக்கிறார். இவர் மீண்டும் சென்னைக்கு வருகிறார். இதையறிந்த பல கார்ப்ரேட் நிறுவனங்கள் பயப்படுகிறார்கள். ஆனால் விஜய்யோ தான் ஓட்டு போடுவதற்காக வந்தேன் என்று கூறுகிறார். ஓட்டு போட போன இடத்தில் இவரது ஓட்டை கள்ள ஓட்டாக …
-
- 4 replies
- 1.7k views
-
-
முதல் பார்வை: காற்றின் மொழி உதிரன் பரிசுப் பொருளை வாங்குவதற்காக பண்பலை அலுவலகம் செல்லும் பெண், அதே இடத்தில் ஆர்.ஜே. ஆகப் பணிபுரியும் சூழல் வந்தால், அவர் அன்பு வழி நின்று ஆறுதல் மொழி பகிர்ந்தால் அதுவே 'காற்றின் மொழி'. கணவர் விதார்த், மகன் சித்து ஆகியோருடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் ஜோதிகா. குடும்பத் தலைவியாக வீட்டைப் பொறுப்பாக கவனித்துக் கொண்டாலும் உடன் பிறந்த இரட்டைச் சகோதரிகளாலும், அப்பாவாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுகிறார். பிளஸ் 2-வில் மூன்று முறை முயன்றும் தோல்வியைச் சந்தித்ததால் ஜோதிகாவை உடன்பிறந்தவர்களே ஏளனமாகப் பார்ப்பதும், எந்த வேலை செய்தாலும் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் ஒரு நாள் மின் கட்டணம் செலுத்து…
-
- 1 reply
- 547 views
-
-
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு, தொழிலபதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடி உடன் மறுமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SoundaryaRajinikanth #VishaganVanangamudi ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சவுந்தர்யாவுக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறான். சவுந்தர்யா தனது மகனுடன் போயஸ் தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வருகிறார். கணவனை பிரிந்த பிறகு சினிமாவில் கவனம் செலுத்திய சவுந்தர்யா தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி 2 என்ற ப…
-
- 2 replies
- 1.1k views
-