ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
இலங்கையில் சில்லறை நாணயங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டிலிருக்கும் தமது நாணயங்களை மீண்டும் நாட்டுக் கொண்டுவர இலங்கை முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் இந்தியாவிலுள்ள பல ஆலயங்களிலுள்ள சுமார் இருபது டன்கள் அளவுக்கான நாணயங்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர மத்திய வங்கி முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்தியா மற்றும் நேபாளத்துக்கு இலங்கையிலிருந்து புனித யாத்திரை செய்யும் பௌத்தர்கள் அங்குள்ள உண்டியல்களில் தமது காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் புத்தகயாவில் மட்டும் பத்து டன்கள் அளவுக்கு இலங்கை நாணயங்கள் உள்ளன என்று தங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் மத்திய வங்கியின் பேச்சாளர் தமாரா விஜேசூரிய பிபிசியிடம் தெரிவித்துள்ளார்…
-
- 1 reply
- 844 views
-
-
"இந்து ஆலயங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்" கொழும்பு உட்பட நாட்டிலுள்ள இந்து ஆலயங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களையடுத்து நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இதேபோன்று முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்து ஆலயங்களில் தொடர்ச்சியான பூசை வழிபாடுகள் இடம்பெறுவதனால் அங்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் ஆலய தர்மகர்த்…
-
- 0 replies
- 985 views
-
-
சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மக்களை காப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 574 views
-
-
"இன முறுகல்களுக்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை" இன முறுகல்களுக்கு இனி ஒரு போதும் சந்தர்ப்பம் அளிக்கப் போதில்லை. வடக்கு மற்றும் கிழக்கின் பொது மக்களின் அமைதியான வாழ்விற்கு தேவையான அனைத்து விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொண்டு செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊள்ளுராட்சி மன்றங்களின் அனைத்து நிர்வாகப் பொறுப்புக்களும் மாகாண முதலமைச்சரின் கண்காணிப்பில் கீழ் இடம்பெற வேண்டும். 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் மாகாணங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்தம் இதன் போது ஜனாதிபதியின் கவனத்திற்பு முதலமைச்சர்கள் கொண்டு வந்ததுடன் அதற்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி…
-
- 0 replies
- 166 views
-
-
"இனப் பிரச்சினை தொடர்பில் உரியவர்களுடன் பேசியுள்ளோம்":- தமிழோசைக்கு அளித்த செவ்வியில் சம்பந்தன் தெரிவிப்பு! [Friday, 2010-09-24 03:14:57] இலங்கை அரசோடு தற்போதைக்கு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசை எவ்வாறாவது ஒரு வழிக்கு கொண்டுவந்து தமிழர் நலன் குறித்த விடயங்களை நிறைவேற்றவே தாங்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகவும் சம்பந்தன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்தார். இலங்கை அரசு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்த விடயங்கள் குறித்து அரசுடன் இணைந்து இயங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கோரியிருப்பதாகவும் , இது குறித்து அர…
-
- 4 replies
- 802 views
-
-
"பல தாசாப்த காலப் பிரச்சினையை ஒரு மனிதப் படுகொலையின் மூலமாகவோ அல்லது பொதுமக்களின் இரத்தக்களரி மூலமாகவோ 48 மணித்தியாலத்துக்குள் முடிவுக்கு கொண்டுவந்துவிட முடியாது" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். "மாறாக இது பிரச்சினையை மேலும் தீவிரமான நிலைக்கு இட்டுச் செல்வதற்கே உதவுவதாக அமையும்" எனவும் தெரிவித்திருக்கும் அவர், "சிங்கள மக்கள் இதனைத் தங்களுடைய நலன்களுக்காக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களுக்காக அல்ல" எனவும் தெரிவித்திருக்கின்றார். வன்னியில் இருந்து தனக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின்படி எண்ணிக்கணக்கிட முடியாதளவு மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், மேலும் பெரும் தொகையானவர்கள் மருத்துவ உதவிகள் இ…
-
- 0 replies
- 604 views
-
-
"இனப்படுகொலைக் குண்டைப்" பரீட்சித்து சரித்திரம் படைக்கும் சர்வதேச சமூகம் தற்கொலைப் போராளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதாக இதுவரை காலமும் புலிகளைக் குற்றம் சொல்லி வந்த சர்வதேச சமூகம் இன்று தான் ஏற்கனவே முடிவுசெய்ததற்கேற்ப "இனப்படுகொலைக் குண்டை" தமிழர்கள் மேல் பரீட்சித்துப் பார்ப்பதோடு, புதிய உலக ஒழுங்கிற்கான விதிமுறைகளையும் நியமித்திருப்பதாக அரசியல் விமர்சகர் ஒருவர் தமிழ்நெட்டிற்கு தெரிவித்திருக்கிறார். இந்த இனப்படுகொலைக் குண்டு முயற்சியில் பங்குகொண்டவர் பலர் இருந்தாலும், மனித நாகரீகத்துக்கு எதிரான இந்தப் பரீட்சையின் உருவாக்கத்துக்கும், நடைமுறைப்படுத்தலுக்குமான முற்றுமுழுதான பொறுப்பு ஒபாமாவின் நிர்வாகத்திடமும், ஐ.நா வின் பான் கீ மூன் இடமுமே வந்து சேர்ந்திருக்கிறது எ…
-
- 2 replies
- 894 views
-
-
"இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும்" இனப்பிரச்சினை இதய சுத்தியோடு தீர்க்கப்படவில்லை என்றால் பாரிய சவாலை இந்த நாடு எதிர்கொள்ளும் என்ற யதார்த்தத்தை நாங்கள் உரத்துக் கூறாமலிருக்க முடியாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு-பதுளை வீதி கரடியனாறில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த பின்னர் அதிகாரிகள் பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய கிழக்கு முதலமைச்சர், “இந்த நல்லாட்சிக் காலகட்டத்திலே புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான சிறந்ததொர…
-
- 0 replies
- 396 views
-
-
(ஊடகப்பிரிவு) வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள் கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ…
-
- 9 replies
- 1.7k views
-
-
"இனவாதமும் பாகுபாடும் இனி செல்லாது!" - அடம்பனில் பிரதமர் அதிரடி 15 February 2026 இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ்வாறான அநீதிகளால் அதிகளவில் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மன்னார், அடம்பன் பகுதியில் இன்று (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு, பலமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பெண் தலைமைத்துவம் அவசியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை வடிவமைப்பதில் பெண…
-
- 1 reply
- 187 views
- 1 follower
-
-
எதிர்வரும் காலத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப்போரட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை என நான் தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளில் உண்மையில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இணைப்பாளர் திரு வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இனிமேல் ஆயுதப்போராட்டம் என்பது எமது அகராதில் இருக்காது என திரு உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளதாக இந்திய சஞ்சிகையான ஜுனியர் விகடனில் வெளிவந்த நேர்காணல் தொடர்பில் அதிர்வு இணையம் உருத்திரகுமாரனுடன் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 1.6k views
-
-
"இரண்டு வேளை... சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்", எனக் கூற... ஒரு பிரதமர் தேவையா? – அனுர கேள்வி. மக்களிடம் இரண்டுவேளை மட்டும் சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த நெருக்கடியை உருவாக்கியவர் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த மாட்டார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். நெருக்கடியை உருவாக்கியவர்களை ரணில் விக்ரமசிங்க மறைத்து வருவதாகவும் இரண்டு வேளை சாப்பிட பழகிக்கொள்ளுங்கள் எனக் கூற ஒரு பிரதமர் தேவையா என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். அநுர திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், ‘இளைஞர்கள் ராஜபக்ஷக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். மஹிந…
-
- 1 reply
- 221 views
-
-
"இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம்" ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிபாரிசுகளை முழுமையாக இலங்கை அரசாங்கம் ஏற்றுகொண்டதன் விளைவாகவே இலங்கையில் இராணுவ வெற்றி தினம் நிறுத்தப்பட்டுள்ளது. இனியொருபோதும் இலங்கையில் இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் வாக்குறுதி வழங்கியுள்ளது என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். இலங்கையில் இராணுவ வெற்றி விழாக்கள் இடம்பெறக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள நிபந்தனைகள் வெளிவந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கையின் பிரதிநிதியாக மனித உரி…
-
- 2 replies
- 696 views
-
-
செய்தியாளர் சத்தியன் 01/09/2009, 14:39 "இராசபக்சேவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயல்படுவது படுபயங்கரமானது" அமெரிக்கப் பேராசிரியர் பாய்ல் (நேர்காணல்) பேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 2000-ல் இதழில் பாய்ல் எழுதிய கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது. உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான "அம்னஸ்டி இன்டர் நே…
-
- 0 replies
- 865 views
-
-
"இராஜதந்திர உறவுகளில் தோல்வியைக் கண்டுள்ள அரசாங்கம்" : கோத்தபாய ராஜபக்ஷ மத வழிபாட்டுத் தளங்களின் ஊடாக வலுவான இராஜதந்திர உறவுகளை கட்டியெழுப்ப முடிந்துள்ள போதிலும் அரசாங்கம் இதில் தோல்வி கண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியினர் ஜப்பானில் வாழும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ள நிலையில் இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மெற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான உதய கம்மன்பில மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்டவர்களே இவ்வாறு ஜப்பானில் சந்திப்புகளில் கலந்துக் கொண்டுள்ளனர். வெளிநாடுக…
-
- 0 replies
- 350 views
-
-
"இராஜதந்திர விடயத்தை தாண்டி மக்கள் நலனே முக்கியம்" (ஆர்.ராம்) வடக்கு, கிழக்கு பகுதிகளில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடடம்பெயர்ந்த இலங்கை மக்களுக்கு 40 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தமையானது இராஜதந்திர விவகாரங்களை தாண்டி மக்கள் நலனையே மையப்படுத்தியதாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், வடகிழக்கில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்தினூடாக இருவருட காலத்துக்குள் அப் பகுதி மக்களுக்கு 15 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவுள்ளன. அத்துடன் வேலையாள் ஒருவருக்கு சாதாரணமாக 4…
-
- 0 replies
- 372 views
-
-
"இராணுவ உதவிகளை நிறுத்துங்கள்' இந்தியாவுக்கு கூறும் இலங்கை அரசியல்வாதி இலங்கைப் படையினருக்கான சகல இராணுவ உதவிகளையும் இந்தியா உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உதவ வேண்டும் என்று இலங்கை அரசியல்வாதியான சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை புதுடில்லியில் சிவில் சமூக குழுக்களின் ஏற்பாட்டில் இந்திய பத்திரிகை கழகத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதுங்க ஜயசூரிய, இலங்கை அரசாங்கத்திற்கான தனது சகல இராணுவ உதவிகளையும் நிறுத்துவதன் மூலம் இந்திய அரசு சாதகமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று கூறியதாக "இந்து' பத்திரிகை நேற்று தெரிவித்தது. வடபகுதியில் …
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது. அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இதனை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்கஇராஜாங்க திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையின் இராணுவதளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவருடைய கட்டளை பொறுப்பு காரணமாக பாரியமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என்ற நம்பகதன்மை மிக்க தகவல்கள் காரணமாக, குறிப்பாக 2009 இல் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58 வது படைப்பிரிவு மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் காரணமாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகள் தொடர்புடைய திட்டங்கள் ஒதுக்கீட்டு சட்டத்தின் 7031 பிரிவின் கீழ் கோரப்பட்டிருப்பதன் அடிப்படையில் அமெரிக்க இ…
-
- 35 replies
- 4.2k views
- 1 follower
-
-
"இரு வாரங்களில் ஊடகங்களில் வெளிப்படுவார் ஞானசார தேரர்" பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விரைவில் ஊடகவியலாளர்களை சந்திப்பார். இருவாரங்களில் அவர் ஊடக சந்திப்புகளில் வெளிப்படுவார் என அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலாந்த விதானகே தெரிவித்தார். ராஜகிரிய சத்தர்மாராஜித விஹாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் இரு வாரங்களில் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுவார். தற்காலத்தில் நாட்டில் எழுந்…
-
- 1 reply
- 347 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமடு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம், மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 410 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில் மற்றும் மயில்வாகனம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 3 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 318 views
-
-
வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த இன்னொரு மக்கள் பாதுகாப்பு வலயமான "இருட்டுமட்டு மக்கள் பாதுகாப்பு வலயம்", தேராவில், மயில்வாகனம், வள்ளிபுனம் மற்றும் தேவிபுரம் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 328 views
-
-
"இறுதி வரைபுக்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டும்" தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே வெளிவந்துள்ளது. இதில் மாற்றங்கள் நிகழ்வதற்கு இடமுண்டு. ஆகவே இறுதி வரைபுக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தமிழ் மக்கள் ஏற்காத எந்த விடயத்தினையும் தாமும் ஏற்கப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதிகாரப்பகிர்வு என்பது இனம்சார்ந்த விடயம் அல்ல. அனைத்து தரப்பினருக்கும் அவசியமானது எனக்குறிப்பிட்ட சம்பந்தன் வடகிழக்கு இணைப்பு விடயத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது முஸ்…
-
- 0 replies
- 292 views
-
-
(நா.தனுஜா) கொத்தணிக்குண்டுகள் தொடர்பான உடன்படிக்கைக்குத் தலைமையேற்றிருக்கும் இலங்கை, தமது நாட்டில் அத்தகைய கொத்தணிக்குண்டுகளின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் எவருமில்லை என்று துணிச்சலாக அறிவித்திருக்கின்றமை பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பில் சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உலகலாவிய ரீதியில் கொத்தணிக்குண்டு பாவனையினால் பொதுமக்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்வதற்காக 100 உறுப்பினர்கள் உள்ளடங்கியதாக உருவாக்கப்பட்ட கொத்தணிக்குண்டு தொடர…
-
- 1 reply
- 531 views
-
-
"இறுதிக்கணங்கள் வரை பிரச்சனைகள் இருந்த போதும் கூட்டமைப்பின் ஒற்றுமையை நினைவில் கொண்டு அமைதியான முறையில் தீர்வு கண்டுள்ளோம்." "வன்னி மாவட்டத்தில் வவுனியா நகர சபை மற்றும் துணுக்காய் பிரதேச சபை இரண்டிலும் தமிழீழ விடுதலை கட்சியின் சார்பில் நேரடி வட்டாரத் தேர்தலில் நாம் எந்தவொரு வேட்பாளரையும் நிறுத்தவில்லை. இரண்டு சபைகளிலும் விகிதாசாரப் பட்டியலில் கிடைக்கின்ற முதல் உறுப்பினர் எமது கட்சிக்கு வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது." என அக்கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சில சபைகளில் ரெலோ கட்சி போட்டியிடாமை குறித்து அவரிடம் கேட்ட போதே அவர் அவ…
-
- 0 replies
- 440 views
-