Jump to content

"இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக பயணத்தடையை அறிவித்தது அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது பழைய காணொளி என்றாலும்.. இதில் கூறப்பட்ட விடயங்கள் குறித்து நம்மவர்கள்.. இதுவரை எந்தக் காத்திரமான அழுத்தங்களையும் சர்வதேசத்துக்கு தாயகத்தில் இருந்து வழங்கவில்லை. குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகள்.

இப்போது அமெரிக்காவின் தற்சார்ப்பு நடவடிக்கை ஒன்றின் பின் தான்... சிலர் சிலதைப் பேசுகின்றனர். சம் சும் மாவை சாவை கும்பல் வழமை போல் மூச். 

இவர்களா தமிழ் மக்களுக்கு நீதியும் உரிமையும் பெற்றுக்கொடுப்பார்கள்..???! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த அமெரிக்கா கிந்தி பிரதமர் மோடிக்கு போடாத தடையா?
இப்ப பாக்கேல்லையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள் :cool:

Bildergebnis für modi obama

Bildergebnis für modi donald trump

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உந்த அமெரிக்கா கிந்தி பிரதமர் மோடிக்கு போடாத தடையா?
இப்ப பாக்கேல்லையே கட்டிப்பிடிச்சுக்கொண்டு திரியுதுகள் :cool:

Bildergebnis für modi obama

Bildergebnis für modi donald trump

மோடி பிச்சை எடுப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

Link to comment
Share on other sites

இரா­ணு­வத்­ த­ள­ப­திக்கு எதி­ரான அமெ­ரிக்கப் பய­ணத்­த­டைக்குத் தமிழ்­ மக்கள் வர­வேற்பு - விக்­கி­னேஸ்­வரன்

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவிற்கு எதிராகக் கடந்த வாரம் விதிக்கப்பட்ட அமெரிக்கத் தடையை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று விக்கினேஸ்வரனிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் பேசுவதாகக் கூறிய அவர், 10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இலங்கையில் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 அரசாங்கங்களின் பிடிவாதப்போக்கைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது இப்போது சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் நேரம் வந்துவிட்டது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

அவர் பதிலின் முழுவிபரம் வருமாறு:

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்த பயணத்தடையை வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள். சில்வா கட்டளைப் பொறுப்பின் ஊடாக பாரதூரமான மனித உரிமை மீறல்களில் சம்பந்தப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின் காரணமாக அவரை அமெரிக்காவில் வேண்டத்தகாதவர் என்று பிரகடனம் செய்வதற்கு முடிவெடுத்தமைக்காக அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவை முழு மனதுடன் நாம் பாராட்டுகிறோம்.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டங்களில் சட்டவிரோதமான கொலைகளுக்கு சில்வா உத்தரவிட்டார் என்ற நம்பகமான குற்றச்சாட்டுக்களை பி.பி.சியின் சனல் - 4 ஆவணப்படுத்தியிருக்கிறது. 'என்னவானாலும் செய்யுங்கள். அது செய்யப்படவே வேண்டும். ஆனால் முடித்துக்கட்டப்பட வேண்டி முறையில் அதை முடித்துவிடுங்கள்' என்று அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிடமிருந்து கிடைக்கப்பெற்ற கட்டளையொன்றை சில்வா இலங்கை இராணுவத்தின் 58 ஆவது படைப்பிரிவில் தனக்குக் கீழ் பணியாற்றியவர்களுக்குத் தெரியப்படுத்தியதற்கான சான்று சனல் - 4 ஒளிபரப்பிய காணொளி அறிக்கைகளில் உள்ளடங்கியிருக்கிறது. அந்தக் கட்டளை குடிமக்களும், சரணடைந்த போராளிகளும் உட்பட (அபகீர்த்தி மிக்க வெள்ளைக்கொடி சம்பவம் உட்பட) பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்ததாகக் கூறப்பட்டது. எனவே அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாதவாறு சில்வா மீது விதிக்கப்பட்ட தடை ஏனைய நாடுகளும் பின்பற்றுவதற்கான ஒரு உதாரணமாக அமைகிறது.

போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையாக அமையக்கூடிய செயற்பாடுகளுக்காக இலங்கை அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் சர்வதேச சமூகத்திற்கு இருக்கும் கடமையையும், அமெரிக்காவின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்துகிறது. அத்தகைய குற்றவாளிகள் என்று கூறப்படுபவர்களை விசாரிப்பதற்குக் கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைக்குமாறு பணித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பல தீர்மானங்களுக்கு இணங்கமுடியாது என்று இலங்கை தொடர்ச்சியாகக் கூறிவந்திருக்கிறது. அப்பாவி குடிமக்களை வேண்டுமென்றே பயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு கொலை செய்வது எந்த வகையிலுமே வீரசாகசத்துக்கு ஒப்பாகிவிடாது என்பதை லெப்டினன்ட் ஜெனரல் சில்வாவை ஒரு ஹீரோவாகக் காண்பிக்க முயற்சிப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

குற்றவியல் பொறுப்புத் தொடர்பான அத்த்கைய தெளிவான குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகும் சகல அதிகாரிகளினதும் வழக்குகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது தகுதி வாய்ந்த எந்தவொரு சர்வதேச மன்றினால் விசாரணை செய்யப்பட வேண்டும். அத்தகைய குற்றங்கள் தொடர்பில் வழக்குத் தொடுப்பதற்கு சர்வதேச சமூகத்திற்கு இருக்கக்கூடிய அதிகாரம் (ஐக்கிய நாடுகள் சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தில் உள்ளவாறான) சர்வதேச நியாயாதிக்கக் கோட்பாட்டிலும், ரோம் சட்டத்தில் கைச்சாத்திடாத நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு எதிராக அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட நடைமுறையிலும் குறித்துரைக்கப்பட்டிருக்கிறது.

10 வருடங்களுக்கும் அதிகமான காலமாக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த 3 இலங்கை அரசாங்கங்களின் பிடிவாதத்தைக் கருத்திற்கொண்டு நோக்கும் போது இப்போது சட்டத்தின் ஆட்சி கட்டாயம் நிலைநிறுத்தப்பட வேண்டும். நீதிக்கான தமிழ் மக்களின் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/75879

Link to comment
Share on other sites

அமெரிக்காவின் தடையை விட அதன் பதிலே பலமானது

இலங்கையின் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை இலங்கை அரசுக்கான முதலாவது எச்சரிக்கை எனலாம்.
 
ஏலவே சவேந்திர சில்வாவை இராணுவத் தளபதியாக நியமித்தமை தொடர்பில் சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருந்தது. போர்க்குற்றம் புரிந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிப்பது நியாயமாகாதென்ற அடிப்படையில், சவேந்திர சில்வாவுக்கான எதிர்ப்பு சர்வதேச மட்டத்தில் வலுப் பெற்றிருந்தது. எனினும் இதனைப் பொருட்படுத்தாமல் இராணுவத் தளபதியாக அவர் நியமிக்கப் பட்டார்.
 
இவ்வாறு நியமிப்பதன் மூலம், சர்வதேசத் தின் எதிர்ப்பைத் தாம் பொருட்படுத்தவில்லை என்பதை உலகுக்குக் கூறுவது இலங்கை ஆட்சி யாளர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது. இதுதவிர, சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு சிறிது காலம் மட்டுமே நின்று நிலைக்கும். பின்னர் அது மறக்கப்பட்ட விடயமாகிப் போய் விடும் என்ற நினைப்பிலும் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
 
நிலைமை இதுவாக இருக்கையில், இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்தது.
 
ஒரு நாட்டின் இராணுவத் தளபதியாக இருக்கக்கூடிய ஒருவரைத் தனது நாட்டுக்குள் நுழைய விட முடியாது என இன்னொரு நாடு அறிவிக்குமாக இருந்தால், சம்பந்தப்பட்ட இராணுவத் தளபதிக்கு அதைவிட்ட அவ மானம் வேறு எதுவுமாக இருக்க முடியாது.
 
இந்நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் களை அழைத்து சவேந்திர சில்வா மீது அமெ ரிக்கா விதித்த தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுள்ளது. இவ்வாறு கேட்கப்பட்டதற்கு, சவேந்திர சில்வா போர்க்குற்றம் புரிந்ததற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாக அமெரிக்காவின் பதில் அமைந்தது.
 
இவ்வாறு அமெரிக்கா தெரிவித்த பதிலா னது அந்த நாடு சவேந்திர சில்வாவுக்கு விதித்த தடையை விட, காத்திரமும் கனதியு மானது என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
 
அதாவது, இலங்கையின் இராணுவத் தளபதியாக இருக்கக்கூடியவர் போர்க்குற்றம் புரிந்தவர் என அமெரிக்கா கூறுகிறது  என்றால், இலங்கை ஆட்சியாளர்கள் எவ்வாறாக தங்கள் அதிகாரத்தை சிறுபான்மைத் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மோடி பிச்சை எடுப்பது அப்பட்டமாய் தெரிகிறது.

மோடியைத் தேடிப் போனது டிரம்...அவர் தான் பிச்சை எடுத்து திரியிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மோடியைத் தேடிப் போனது டிரம்...அவர் தான் பிச்சை எடுத்து திரியிறார் 

உங்கள் முசுப்பாத்திக்கு அளவேயில்ல. இரதிக்கு எந்த நேரமும் பகிடிதான். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎2‎/‎18‎/‎2020 at 10:38 PM, Kapithan said:

உங்கள் முசுப்பாத்திக்கு அளவேயில்ல. இரதிக்கு எந்த நேரமும் பகிடிதான். 😜

 

மோடியைத் தேடிப் போனது யாரு ?...நிழலி ஏற்கனவே எழுதியது தான் ...டிரம்ப் முதலில் ஒரு வியாபாரி🤣 ...பிறகு தான் ஜனாதிபதி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, ரதி said:

 

மோடியைத் தேடிப் போனது யாரு ?...நிழலி ஏற்கனவே எழுதியது தான் ...டிரம்ப் முதலில் ஒரு வியாபாரி🤣 ...பிறகு தான் ஜனாதிபதி
 

இரதிக்கு பகிடி கூடிப்போச்சு. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/16/2020 at 9:39 PM, ampanai said:

எதிர்காலத்தில் இதே நிலைமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் ஏற்படாலம் என்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அங்க நிக்குது சிங்களத்தின் நாடித்துடிப்பு. நடுங்குதில்ல?... ஆயத்தமாகுவது நல்லது. எவ்வளவு வீறவாப்பு பேசினாலும், ஒருநாள் எல்லாம் கலையும். எதுக்கும் தமிழன் வாக்கு முக்கியம். பாத்து நடவுங்காே.....ம்.

Link to comment
Share on other sites

அமேரிக்கா : தனக்கு இன்று சிங்களம் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க எண்ணி இந்த முடிவை எடுத்துள்ளது. 

என்ன அழுத்தம் : சோபா மற்றும் எம்.சி.சி. போன்ற உடன்படிக்கைகளை முன்னெடுத்தல் 

சிங்களம் : இறுதியில் இந்தியாவின் ஊடாக ஒரு விட்டுக்கொடுப்பை எடுக்கும் 

சீனா: இன்றும் சிங்களத்திற்கும் உதவ எண்ணுகின்றது, ஆனால், கொரோனா வைரஸால் பலவீனமாக்கப்பட்டுள்ளது. 

தமிழர் தரப்பு : போர்க்குற்றம் என்பதை இன்று ஏற்றுக்கொண்ட நிலையில் இருந்து இனப்படுகொலை என்பதை ஏற்க வைத்தல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.