Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு தமிழ் காங்கிரஸ் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் மயூரன் ஆகிய இருவரது உறுப்புரிமையை நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் உதவித் தேர்தல் ஆணையாளருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.இந்தக் கடிதம் கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டுள்ளது. அன்றைய தினமே யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்கக் கோரும் எழுத்தாணை மனு, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளப்பெறப்பட்டிருந்தது.இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு தெரிவாகிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையிலிருந்…

  2. 20’ஐ எதிர்க்கும் மதத் தலைவர்கள் புதிய அரசமைப்புக்காகவும் குரல் கொடுக்க வேண்டும்- கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்து.! “இலங்கையில் மீண்டும் சர்வாதிகாரத்துக்கு வழி செய்யும் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள பௌத்த பீடங்களும், கத்தோலிக்க ஆயர் பேரவையும் நாட்டில் புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்படுவதற்கும் பாடுபட வேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். அரசமைப்பின் 20ஆவது திருத்த முயற்சிகளைத் தோற்கடிக்குமாறு பெளத்தத்தின் நான்கு பிரதான மத பீடங்களில் இரண்டான அமரபுர பீடமும், ராமன்ய பீடமும் கூட்டறிக்கை ஊடாக அரசியல் தலைவர்களையும் பொதுமக்களைய…

  3. ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் -மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் Rajeevan Arasaratnam October 16, 2020 ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளாக்குவதை நிறுத்துங்கள் -மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள்2020-10-16T12:12:09+05:30அரசியல் களம் FacebookTwitterMore ஆடை தொழிற்சாலை ஊழியர்களை குற்றவாளிகளை போல நடத்துவதை நிறுத்துமாறு சுதந்திர வர்த்தக வலயத்தின் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள்வேண்டுகோள் விடுத்துள்ளன. ஆடைதொழிற்சாலை ஊழியர்கள் தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்லப்பட்ட விதம் குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ளன. ஊடகங்கள் அவர்களை குற்றவாளிகளா…

  4. அரியாலை கிழக்கு பிரதேசம் கடல் நீரால் அழியும் அபாயம்.! நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அரியாலை கிழக்கு பிரதேசத்தில் சட்டத்திற்கு உட்பட்டும், சட்ட விரோதமாகவும் மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் இந்த மணல் அகழ்வு இடம்பெறுகின்றது. இரவு வேளைகளில் களவாக தனியார் காணிகளில் இவ்வாறு மணல் அகழ்வு இடம்பெறுவதோடு, பொய்யான காணி உறுதிகளையும், முறையற்ற காணிமாற்று முறைகளையும் பயன்படுத்தி கனியவள திணைக்களத்தில் அனுமதிபெற்று பெறப்பட்ட அனுமதிக்கு மேலாகவும் மணல் அள்ளப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினராலும் முடியாதுள்ளது. காவல்துறையினர் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்களும், மணல் கொள்ளையர்மீது துப்பாக்கிப் பிரயோகங்கள் நடைபெற்ற சம்பவ…

  5. சிறை கைதிகள் தொலைபேசி ஊடாக குடும்பத்தினருடன் உரையாட நடவடிக்கை சிறை கைதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசி ஊடாக உரையாட முடியும் என்று சிறைச்சாலைத்துறை தெரிவித்துள்ளது. கைதிகளுக்கு உளவியல் ரீதியான தாக்கத்தை குறைப்பதற்காக இத்தகைய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறை ஆணையாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய கைதிகள் 3 நிமிட காலத்திற்குள் குடும்ப உறுப்பினர்களுடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையும் இவ்வாறு சிறை கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சந்தன ஏகநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்…

  6. நட்டத்தில் இயங்கிய கடற்றொழில் கூட்டுதாபனத்தின் 19 கிளைகளில் 13 கிளைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலாபமீட்டும் நிலைக்கு வந்துவிட்டது..! நட்டத்தில் இயங்கி வந்த கடற்றொழில் கூட்டுதாபனத்தின் 19 பிரதான விற்பனை நிலைய கிளைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகளால் 13 விற்பனை நிலையங்கள் இலாபம் ஈட்டும் நிலைக்கு சென்றுள்ளதாக அமைச்சு தொிவித்துள்ளது. இது குறித்து மேலும் தொியவருவதாவது, சுமார் 13 பிரதான விற்பனை நிலையங்கள் இலாபமீட்டும் நிலைக்கு மாறியுள்ளதுடன் 01 கிளையில் ஏற்படுகின்ற நட்டம் குறைக்கப்பட்டுள்ளதுடன் 5 விற்பனை நிலையங்கள் மாத்திரமே தற்போது நட்டத்தில் இயங்கி வருவதாகவும் அவற்றையும் இலாபமீட்டும் நிலையங்களாக மாற்றவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள…

    • 1 reply
    • 399 views
  7. தமிழரசுக்கட்சியின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் சி.வி.கே.! இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சீ.வீ.கே. சிவஞானம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரான சீ.வீ.கே. சிவஞானம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்த நிலையில் ஒழுக்காற்றுக் குழுவின் நடவடிக்கையாக கட்சியின் இரு சிரேஷ்ட உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் தொடர்பிலும், கட்சியின் இரு இடைநிலை உறுப்பினர்களான சி.ஹரிகரன், க.குணாளன் தொடர்பிலும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார். இதனடிப்படையில் இரு சிரேஷ்ட உறுப்பினர்களும் எதிர்காலத்தில் கட்சிக்கு முரண்பட்ட விதத்தில் க…

  8. 20 இற்கு எதிராக மக்களின் கடும் எதிர்ப்பைச் சந்திப்பீர்; சுமந்திரன் எம்.பி.! "அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வலுக்கச் செய்வதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறிலின் அலுவலகத்துக்கு சுமந்திரன் எம்.பி. இன்று விஜயம் செய்திருந்தார். அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகப் பல்வேறு பிரசாரங்களைச் செய்து வருக…

  9. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்த சர்ச்சைகள் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் இட்ட பதிவு இது- “கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார். முதலில், இப்பட திரைகதை, அரசியல் அல்ல என நான் அறிந்தேன். அதில் இலங்கை இனப்பிரச்சினை அரசியல் பேசி, கதையோட்டம் அமைய, ஒருபுறம் இந்திய அரசு சென்…

  10. புதிய COVID-19 தடுப்பு விதிமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. புதிய வர்த்தமானி அறிவிப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி இன்று கையெழுத்திட்டார். புதிய கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளுள் தனிநபர்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பேணுதல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வர்த்தமானியின் படி, கொரோனா தொற்று கட்டுபாட்டு விதிமுறைகளை மீறும் நபர்கள் 06 மாதங்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது 10,000 ரூபா அபராதம் விதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வர்த்தக மற்றும் பணி இடங்களுக்குள் பிரவேசித்தல் மற்றும் பேணுதல் போன்ற விடயங்களும் இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம்…

  11. சீன அரசின் முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவு பிரசன்னமாகியுள்ளமை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுதரகம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொமியோ இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அமெரிக்க அரசினால் கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ள பல சீன நிறுவனங்கள் இலங்கையில் முதலீட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பாக அமெரிக்கத் தூதுரகம் இலங்கை அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தைவிட சீனாவிடம் இருந்த…

  12. -விஜயரத்தினம் சரவணன், சுப்பிரமணியம் பாஸ்கரன், செ.கீதாஞ்சன் கடற்றொழில் அமைச்சின் இரண்டு இலட்சம் ரூபய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், முல்லைத்தீவு - நந்திக்கடல் ஆழப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதற்கட்டப்பணிகள், நேற்று (14) ஆரம்பிக்கப்பட்டன. மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் பணிகளில், முதற்கட்டப் பணியாக, நீர் வழிந்தோடுகின்ற பகுதிகளில் தேங்கிக் காணப்படும் கற்கள் மற்றும் பாசி போன்றவற்றை அகற்றுகின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக வட்டுவாகல் பாலத்தின் வலப்பக்கமாக இரண்டு கிலோமீற்றரும் இடப்பக்கம் ஒரு கிலோமீற்றருமாக ஆற்றிலுள்ள சேறு அகற்றப்படவுள்ளது. மூன்றாம் கட்டமாக, மேலும் இரண்டு கிலோமீற்றர் அகழப்படுத்தும் பணி முன்னெட…

  13. மட்டக்களப்பு மாவட்டத்துக்கான புதிய அரச அதிபராக இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவரும் தற்போதைய கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றும் கே.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம், பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் நேற்று (14) பிற்பகல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக அரச அதிபர் கடமையாற்றிய திருமதி கலாமதி பத்மராஜா, பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சுக்கு உடனடியாக அமுலாகும் வரையில் இணைக்கப்பட்டுள்ளார்.https://newuthayan.com/மட்டக்களப்பு-புதிய-அரச-அ/

    • 1 reply
    • 538 views
  14. கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க நாடு முழுவதும் உள்ள 12 வைத்தியசாலைகளில் 168 படுக்கைகள் மாத்திரம் எஞ்சியுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் இன்று அதிகாலை 5.00 மணிவரையான தரவுகளை அடிப்படையாக கொண்டு வெளிக்காட்டியுள்ளது. மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலின் விளைவாக வைத்தியசாலைகளில் இவ்வாறு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/92150 https://www.virakesari.lk/article/92150

  15. (இராஜதுரை ஹஷான்) கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நிலையில் நவராத்திரி விரதம் மற்றும் இந்து மத சம்பிரதாயங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நவராத்தி விழாவை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட 40 கோயில்களுக்கு 50000 ஆயிரம் ரூபா நிதியுதவி கோயில் பரிபாலனதரப்பினரடம் இன்று அலரி மாளிகையில் வைத்து பிரமதார் வழங்கி வைத்தார். பிரதமர் மேலும் குறிப்பிடுகையில், நெருக்கடியான நிலையில் நவராத்திரி விழாவையொட்டி தெரிவு செய்யப்பட்ட கோயில்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இது நாட்டுக்கு நன்மை பயக்க வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். மத விவகாரங்ள் என்ற அடிப்படையில…

  16. இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் இலங்கைத் தீவிலும் இந்துமகா சமுத்திர பிராந்தியத்திலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை நியாயமாகவும் தர்மத்தின் அடிப்படையிலும் கையாண்டிருந்தால் நாடு இன்று இந்த நிலைமைக்குச் சென்றிருக்காது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப்பேச்சாளருமான சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விபரம் வருமாறு: இலங்கையின் வெளிவிவகார கொள்கை என்பத…

  17. யாழ். பல்கலை மாணவர்களுக்குக் கடும் தண்டனை அறிவிப்பு! 97 Views யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதுமுக மாணவர்கள் மீது இம்சை வதை புரிந்த சிரேஷ்ட மாணவர்களின் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபை பரிந்துரைத்துள்ளது. புதிய துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்தில் இம்சை வதையில் ஈடுபடுபவர்களுக்கெதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்காக விரைவு பொறிமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குற்றம் இடம்பெற்று ஒரு மாத காலத்தினுள் தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்றுச் சபையின் பர…

  18. எதிரியின் இரு க‌ண்ணும் போக‌ வேண்டும் என்று நினைத்த‌வ‌ர்க‌ள் இன்று முழு உட‌லும் ப‌றி போகும் நிலைக்கு வ‌ந்துள்ள‌ன‌ர் Madawala News October 15, 2020 - நூருல் ஹுதா உமர்- உண்மையில் கிழ‌க்கு மாகாண‌ த‌மிழ் இன‌வாத‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் போன்ற‌ முட்டாள்க‌ள் உல‌கில் இருக்க‌ முடியாது. ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ மாடுக‌ளின் மேய்ச்ச‌ல் நில‌ங்க‌ளை சிங்க‌ள‌வ‌ர்க‌ள் ஆக்கிர‌மிப்ப‌தாக‌வும் இது கிழ‌க்கு மாகாண‌ ஆளுன‌ருக்கு தெரிந்தே ந‌ட‌ப்ப‌தாக‌வும் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின‌ர் ஊட‌க‌ங்க‌ளுக்கு தெரிவித்துள்ள‌ன‌ர். க‌ட‌ந்த‌ மைத்திரி ஆட்சியில் மைத்திரி செய்த‌ ஒரேயொரு ந…

  19. இருபதாவது திருத்தம் ராஜபக்ஷக்களின் அடுத்த தலைமுறைக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்- சஜின்வாஸ் Rajeevan Arasaratnam இருபதாவது திருத்தம்திருத்தம் ராஜபக்ச குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இருபதாவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தால் ஆட்சிமுறையில் அது பாரிய தாக்கத்தை செலுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருபதாவது திருத்தம்ஜனாதிபதியை மாத்திரம் பலப்படுத்தும், யார் ஜனாதிபதியாகயிருந்தாலும் அவரை அதுபலப்படுத்தும் என சஜின்வாஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இருபதாவ…

    • 0 replies
    • 302 views
  20. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: மட்டக்களப்பில் கண்டனப் போராட்டம்! by : Litharsan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Batticalao-Journalist-Protest.jpg முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்கள் இருவர் மீதான தாக்குதலைக் கண்டித்து மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்னால் சமூக இடைவெளியைப் பேணி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று (வியாழக்கிழமை) காலை இந்தப் போராட்டம் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், ஊடக அமையம் மற்றும் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்…

  21. வடமாகாண சுகாதார சேவை சாரதிகளின் இடமாற்றம் நியாயமானதா?… October 15, 2020 Share 2 Views சுகாதார வைத்திய சேவை என்பது காலமாற்றங்களுக்கு அப்பால் எப்போதும் எங்கேயும் எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒரு தேவையாகும். இத்துறையின் முக்கியத்துவம் கருதி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டமாக இருப்பினும் சரி அரசு சாரா அமைப்புகளின் நிதி அணுசரனைகளாக இருப்பினும் சரி, தேசிய பாதுகாப்பிற்கு அடுத்தகட்டமாக இந்தச் சுகாதார வைத்திய துறைக்கே அதிகளவிலான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுகாதார சேவைத்துறையில் வைத்திய நிபுணர்கள் முதற்கொண்டு சுத்திகரிப்புத் தொழிலாளி…

  22. நீதித்துறையில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க 5 குழுக்கள் நீதி நிலைநாட்டும் நடைமுறையை செயற்றிறன் மிக்கதாகவும், துரிதமானதாகவும் மாற்றுவதற்காக செயற்றிட்ட முகாமைத்துவ அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதற்காக நீதியமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. நீதித்துறையில் நிலவும் பிரச்சனைகளை மூன்று வருடங்களுக்குள் தீர்த்து, தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர் ஐந்து குழுக்களை நியமித்துள்ளார். இந்தக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இடம்பெற்றுள்ளது. நீதிமன்றங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், குற்றவியல் சட்டங்களை திருத்தியமைத்தல், நீதிமன்ற வலைப்பின்னலை டிஜிற்றல் மய…

    • 0 replies
    • 214 views
  23. A/L வெட்டுப் புள்ளி தயார் 2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தயாரிக்கப்பட்டுள்ள வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். தற்போது க.பொ.த உயர்தர பரீட்சைகள் இடம்பெற்று வருவதால் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெற்ற நிலையில் வெட்டுப் புள்ளிகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு மாணவர்கள் கடுமையா…

    • 0 replies
    • 274 views
  24. புலிகள் அழைத்ததன் காரணத்தாலேயே சமாதான பணியில் ஈடுபட்டோம்- எரிக் சொல்ஹெய்ம் 33 Views விடுதலைப் புலிகள் விரும்பித் தம்மை அழைத்ததன் காரணத்தாலேயே தமது நாடு இலங்கை அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம் பெற்ற சமாதானப் பேச்சுக்களில் நடுநிலைமை வகித்தது என நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார். அவர் அதில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கான சமாதான அனுசரணைப் பணியில் பிரான்ஸ் பங்கேற்கவேண்டுமென அப்போதைய அரச தலைவர் சந்திரிகா விரும்பினார். இருந்த போதிலும் இந்த அன…

  25. -அப்துல்சலாம் யாசீம் கிண்ணியா - சூரங்கள் பகுதியில், வீட்டொன்றின் கூரையைப் பிரித்து நுழைந்து, 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 53 வயது நருக்கு, 20 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (14) தீர்ப்பளித்தார். சூரங்கள் பகுதியில், 2012ஆம் ஆண்டில், வீடொன்றின் கூரையைப் பிறித்து நுழைந்த குறித்த நபர், அங்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார். சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிறுமிக்கு 13 வயதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, குறித்த சிறுமி கர்ப்பமாகி பெண் குழந்தையப் பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு, சட்டமா அதிபர் தி…

    • 5 replies
    • 815 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.