ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143302 topics in this forum
-
இலங்கை தமிழரசுக் கட்சியில் உயர் பதவியில் இருந்து கொண்டு எல்லைமீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மிரட்டல் விடுத்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கூறுகையில். இல்லாத பொல்லாத பொய்களையெல்லாம் ஒருவர் இருவர் அல்ல பலர். கட்சிக்குள்ளே இருந்தே செயற்படுகிற போது அதை காணாமல் இருந்து விட்டு போய் விட முடியாது. ஆனபடியால் அந்த அம்மணிக்கு எதிராக நேற்றைய தினம் நான் வக்கில் நோட்டீஸ் ஒன்று அனுப்பியிருக்கிறேன். மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்படும். 1000 கோடி ரூபாய்க்கு வழக்கு தாக்கல் செய்வதாக அவருக்கு ஏற்கனவே அறிவித்தல…
-
- 6 replies
- 1k views
-
-
நாம் பின்னடைவானதும் பலவீனமானதுமான நிலையில் உள்ளோம் – சித்தார்த்தன்! தமிழ் மக்களான நாம் பின்னடைவானதும் பலவீனமானதுமான நிலையில் உள்ளோம் என புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான த. சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். புளொட் அமைப்பின் 31வது வீரமக்கள் தினம் நேற்று(வியாழக்கிழமை) வவுனியா கோவில்குளத்தில் உள்ள உமாமகேஸ்வரன் நினைவு தூபி வளாகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமது இன்னுயிரையீன்ற தலைவர்களையும் பொதுமக்களையும் தோழர்களையும் நினைவுபடுத்துகின்றோம் என்றால் அவர்களது கனவுகள் நனவாகும் வரை அவர்களுடைய பாதையில் சென்று அக்கனவுகளை நிறைவேற்றவேண்டும் என்ற நோக்கத்த…
-
- 0 replies
- 275 views
-
-
கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு அமைய வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டு வர முடியாத நிலைமை காணப்படுகிறது. இதன் காரணமாக இறுதிச்சட ங்குகளை அந்த அந்த நாடுகளில…
-
- 0 replies
- 323 views
-
-
பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனால், வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பெரும்பாலும் வருகைத்தரமாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும், முதலாவது அணி இன்று வருகை…
-
- 0 replies
- 372 views
-
-
தாஜுதீன் கொலை; முக்கிய சந்தேக நபர் மரணம்! ஆப்பதான கட்டத்தில் இன்னொருவர் ரக்பி வீரர் வசிம் தாஜுதீன் கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான கொழும்பின் முன்னாள் பிரதம சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர உயிரிழந்துவிட்டார். மற்றைய சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார் என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரால் டிலான் ரத்நாயக்கவினால் இன்று (16) கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய மேலதிக நீதிவான், வழக்கை நவம்பர் மாதம் 19ம் திகதி வரை ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் மரணமடைந்த மற்றும் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் தொட…
-
- 2 replies
- 654 views
-
-
தனது பிரதேசத்தில் எவராவது கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவரின் சடலத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு எடுத்துச் செல்லவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும் இந்த நேரத்தில் அரசாங்கத்தின் நற்பெயரைப் பாதுகாக்க உள்ளூர் மற்றும் சர்வதேச சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும் என அவர் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ருவான்வெலிசயா அருகே ஜனாதிபதி பதவியேற்றதால், மன்னர் துட்டகைமுனு மற்றும் அனாகரிக தர்மபாலா ஆகியோரின் கொள்கையைப் பின்பற்றி மாட்டிறைச்சி கடைகள், விபச்சார விடு…
-
- 2 replies
- 684 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு சிலை வைக்க போகிறேன்..! -- ஆனந்தசங்கரி பகிரங்க அறிவிப்பு.. 2004ம் ஆண்டு நடந்த ஜனநாயக மீறலை அப்படியே சுட்டிக்காட்டியதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு சிலை வைப்பேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட வீ.ஆனந்தசங்கரியிடம் ஊடகவியலாளர்கள், தான் 75 கள்ள வாக்குகள் போட்டேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் அவர் மேலும் தெ…
-
- 3 replies
- 775 views
-
-
யாழில் சுயவிபரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும் – விஜயகலா! இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிபரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச வேலைவாய்ப்பு வழங்குவதற்கு சுய விபரக்கோவை சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இணுவிலில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மக்களின் வரிப்பணத்தில் அரசால் மேற்…
-
- 2 replies
- 726 views
-
-
நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 10 வருடங்கள் ஆகும்; ரணில் கொரோனா வைரஸ் தொற்றினை இலங்கை சரியான முறையில் முகாமைத்துவம் செய்து கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்வரும் 10 வருடங்களுக்கு இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத நிலைமை ஏற்படும் என, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/video/நரககடயல-இரநத-மள-இலஙககக-10-வரடஙகள-ஆகம-ரணல/52-253246
-
- 1 reply
- 457 views
-
-
வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு இந்தியா உதவி! by : Vithushagan வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருந்தோட்ட மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது. கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லெ (Gobal Baglay) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளைப் போன்று அபிவிருத்தி தேவையைக் கொண்ட நா…
-
- 0 replies
- 474 views
-
-
கடலுணவுகளை களஞ்சியப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடலுணவுகளை நவீன தொழில்நுட்ப முறையில் களஞ்சியப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன ஆகியோர் முனனிலையில் இன்று (15) குறித்த கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது. மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கடற்றொழில் திணைக்களம், நாரா எனப்படும் நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், நர்ட் நிறுவனம் ஆகியவற்றின் பிரதானிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். பல நாள் கலங்களின் மூலம் அறுவடை செய்யப்படுகின்ற கடலுணவுகளை நவீன தொழில்…
-
- 0 replies
- 522 views
-
-
தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் – சஜித் தரப்பு! by : Benitlas தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் பிரயோகிப்பதனை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும் என சஜித் தரப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அனைவரும் நன்கு அறிவார்கள். சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கமைய அரசாங்கம் தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் மீண்ட…
-
- 0 replies
- 301 views
-
-
தீர்வுக்காக அரசிடம் அடிபணிய மாட்டோம் என்கிறார் சம்பந்தன்.! "தமிழர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். எனவே, தமிழர்களுக்கான உரிமைகளை, அரசியல் தீர்வை அரசு வழங்கியே ஆகவேண்டும். அது அரசின் கடமையாகும். அதற்காக அரசிடம் நாம் அடிபணியமாட்டோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். "சர்வதேச சமூகம் இன்று தமிழர்களின் பக்கமே நிற்கின்றது. எங்கள் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றபடியால்தான் அது எங்கள் பக்கம் நிற்கின்றது" எனவும் அவர் சுட்டிக்காட்டினார். திருகோணமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவி…
-
- 7 replies
- 771 views
-
-
நல்லூர் திருவிழாவுக்கான காளாஞ்சி கையளிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை, வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி (கலசம்) கையளிக்கும் நிகழ்வு இன்று (16) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன், பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. நல்லூர் ஆலயத்தில் இருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாசார முறைப்படி பெருந் திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், ஆலய கணக்குபிள்ளையும் ஆலய பிரதம சிவச்சாரியரும் துணைக்குருவும் கலந்து…
-
- 0 replies
- 354 views
-
-
யாழ்ப்பாணத்த்தில் போட்டியிடும் இரு வேட்பாளர்கள் ஒரே நாளில் மரணம் July 16, 2020 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்திலேயே இவர்கள் இருவரும் உயிரிழந்ததாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து காரணமாக ஒருவரும் மாரடைப்பால் மற்றவரும் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனர். விடுதலைப் புலிகள் மக்கள் பேரவை சார்பாக சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிடும் வேட்பாளர் அகஸ்தீன் மக்டொனால்ட் என்ற 58 வயதுடைய நபர் மாரடைப்பால் காலமானார். கடந்த 8ஆம் திகதி பூநகரியில் இடம்பெற்ற டிப்பருடனான விபத்தில் சிக்கிச் சிகிக்சை பெற்றுவந்த பிரியதர்சன் என்ற சுயேச்சைச்குழு 3 இல் போட்டியிடும் வேட்பாளர் ச…
-
- 0 replies
- 473 views
-
-
2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா) என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் தொடர்பாக இரகசிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த தகவலுக்கமைய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்து வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் சாராவின் சிறிய தந்தை மற்றும் அம்பாறை உப கராஜின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் ஆகியோரைய…
-
- 1 reply
- 600 views
-
-
சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை நிலைகுலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை மக்களும் கொரோனா பீதியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா தாக்கம் இலங்கையில் ஏற்பட்டதையடுத்து தற்போதுவரை 21 பேர் அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரச விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என்று அரச திணைக்களங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கொரோனாவின் நிலவரம் என்ன? பொது மக்களின் கருத்து தொடர்பில் எமது இணையத்தளம் ஆராய்ந்தது. அதன் முழுமையான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139128?ref=home-imp-parsely
-
- 134 replies
- 11.7k views
-
-
கொழும்பு, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 24ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணிவரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம், பின்னர் திங்கள் மாலை 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு எதிர்வரும் 24ஆம் திகதிவரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி எதிர்வரும் 24ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது. http://athavannews.com/ஊரடங்குச்-சட்டம்-நீடிப்ப/
-
- 111 replies
- 10k views
-
-
கொழும்பு மறைமாவட்ட துணை பிஷப்பாக அருட்தந்தை ரஞ்சித் பிள்ளைநாயகம் போப்பாண்டவரால் தெரிவு கொழும்பு ஜூலை 13, 2020: இலங்கை கத்தோலிக்க சபை, கொழும்பு மறை மாவட்டத்தின் துணை பிஷப்பாக அருட் தந்தை ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களை போப்பாண்டவர் நியமித்துள்ளதாக வத்திக்கன் செய்தி தெரிவித்துள்ளது. 53 வயதையுடைய மறை மாவட்ட அருட் தந்தை பிள்ளைநாயகம், கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் தலைமையின் கீழ் பணிபுரியவிருக்கும் மூன்றாவது துணை பிஷப்பாகுவார். இதற்கு முன்னர் 2011 இல் அருட்தந்தை மக்ஸ்வெல் சில்வாவும், அடுத்ததாக 2018 இல் அருட்தந்தை ஜே.டி. அந்தனி ஜயக்கொடியும் துணை பிஷப்புகளாக நியமிக்கப்பட…
-
- 4 replies
- 780 views
-
-
புளொட்டின் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பு! ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் அக்கழகத்தில் உயர்நீத்த வீரர்களின் வீரமக்கள் தினத்தின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் (15) நாவற்குடாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் செயற்பாட்டாளரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமாகிய மு.ஞானப்பிரரகாசம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் உபதவிசாளரும் டெலோ அமைப்பின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம், புளொட் அமைப்பின் மட்டக்களப்பு செயற்பாட்டாளர்களான மண்மு…
-
- 1 reply
- 741 views
-
-
“ராஜபக்ஷக்களுக்கு அடிபணிந்து போகாமல் தேர்தலை உடனே ஒத்திவையுங்கள்” – சஜித் “கொரோனா வைரஸ் மீண்டும் சமூகத்துக்குள் ஊடுருவி விட்டது என்பதை கொரோனாத் தடுப்புக்கான தேசிய மையத்தின் தலைவரான இராணுவத் தளபதியே ஒப்புக் கொண்டுள்ளார். கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் பணியாற்றுபவர்கள் விடுமுறையில் தங்கள் வீடுகளுக்குச் சென்றமையால் கொரோனா சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது. எனவே, எதிரணியின் கருத்துக்களை புறந்தள்ளியுள்ள அரசு, தேர்தல் ஆணைக்குழு, இராணுவத் தளபதி மற்றும் சுகாதார அமைச்சு கூறிய அறிவுரைகளையாவது கடைப்பிடித்து மக்களைக் காக்க முன்வர வேண்டும். கொரோனாத் தாக்கம் முடியும்வரை தேர்தலை பிற்போட வேண்டும்” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார…
-
- 0 replies
- 833 views
-
-
ஈஸ்டர் பயங்கரவாத எச்சரிக்கை கடிதம் 268 பிரபுக்களுக்கு அனுப்பப்பட்டது உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தகவல் 268 பிரமுகர்களின் பாதுகாப்பு பிரதானிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்கள் குறித்து தாக்குதலின் பின்னர் வெளிக்கொணர வேண்டாம் அறிவிக்கப்பட்டதாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அப்போது பிரதி பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட பிரியலால் தசநாயக்க நேற்றைய (14) தினம் சாட்சி வழங்கிய போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, நீதிமன்ற பாதுகாப்ப பிரிவு, தூதுவர்களுக்கான பாதுகாப்பு பிரிவு, முன்னாள் ஜன…
-
- 0 replies
- 553 views
-
-
ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் by : Yuganthini முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாக உள்ளனர். குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்கவால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அவ்விடயம் தொடர்பான விசாரணைகளுக்காகவே ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். …
-
- 0 replies
- 428 views
-
-
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு! பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும். எமது ஆட்சியில் விகாரை, கோயில், …
-
- 11 replies
- 2k views
-
-
கள்ள வாக்கு விவகாரம் – சிறிதரனுக்கு எதிராக நடவடிக்கை ? வேட்பாளர் ஒருவர் கள்ள வாக்குகள் போட்டார் என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. அவை தொடர்பில் பரிசீலித்து நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேச பிரிய தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட செயலகத்தில் அதிகாரிகளுடன் தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடலை நடாத்திய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வாக்குகள் போட்டது தொடர்பில், பேசியிருக்கிறார். இது தொடர்பில் எமக்கு முறைப்ப…
-
- 1 reply
- 812 views
-