Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது: கனடா ஜஞாயிற்றுக்கிழமைஇ 5 ஓகஸ்ட் 2007இ 20:21 ஈழம்ஸ ஜப.தயாளினிஸ இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித்தீர்வு காண முடியாது என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கனடிய தூதரகம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் ஹொலண்ட் கடிதம் ஒன்றை கடந்த ஜூலை 9 ஆம் நாள் அனுப்பியிருந்தார். அக்கடிதத்துக்கு பதில் தெரிவித்து கனடிய வெளிவிவகார அமைச்சர் பீற்றர் ஜி.மக்கே அனுப்பியுள்ள பதில் கடிதம்: இலங்கையில் இன மோதல் மீண்டும் தொடங்கியுள்ளமை குறித்து கனடிய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொள்கிறது. இத்தகைய நிலைமையால் பொதுமக்களின்…

  2. சம்பூரில் சுமந்திரன்! -மீளக்குடியேறும் மக்களை சந்திப்பு [sunday 2015-05-24 08:00] திருகோணமலை சம்பூர் பகுதிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் திடீர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். நேற்று மாலை 5.30 மணியளவில் கிழக்குமாகாண கல்வியமைச்சரும், மீள்குடியேற்ற அமைச்சருமான தண்டாயுதபாணி அவர்களுடன் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் சம்பூர் மக்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=132635&category=TamilNe…

    • 26 replies
    • 3k views
  3. பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை – விசாரணையின்றி விலக்கியது லண்டன் நீதிமன்றம் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிரான கைது உத்தரவை, பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட, சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக – புலம்பெயர் தமிழர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பொது ஒழுங்குகளை சட்டத்தை மீறி குற்றமிழைத்துள்ளார் எனக் கண்டறிந்த, வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப…

    • 0 replies
    • 165 views
  4. சவேந்திரா சில்வா மீது வழக்கு தொடுத்த எலியாஸ் உடன் சந்திப்பு காணொளி

    • 0 replies
    • 949 views
  5. பேலியகொடயில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது பேலியகொட பகுதியில் 400 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியின் போதை ஒழிப்பு திட்டத்திற்கு அமைய நாட்டின் பல பாகங்களிலும் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களும், செயலமர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு பொலிஸாரின் தீவிர நடவடிக்கையினால் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/பேலியகொடயில்-கேரள-கஞ்சாவ/

  6. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் - மாவட்ட அரசாங்க அதிபர் 12 FEB, 2024 | 05:55 PM (எம்.நியூட்டன்) கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இம்மாதம் 23 ஆம், 24ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பின்வரும் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தியுள்ளார். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது இந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேச செயலகம், மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினதும் முழுமையான ஒத்துழைப்புடன் பெப்ரவரி 23 மற்றும் 24 ம் திகதிகளில் நடைபெறவுள்ளது…

  7. வவுணதீவில் குண்டுகளுடன் தமிழ் இளைஞன் கைது வீரகேசரி நாளேடு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் வைத்து குண்டுகளுடன் தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு நாவற்காடு, ஈச்சன்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை ஜயசீலன் (24 வயது) என்றழைக்கப்படும் இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். இவரிடமிருந்து இரண்டு கைக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை மட்டக்களப்பு கதிரவெளி, பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துப் பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர்.

  8. ஜனநாயக போராளிகளுடன் கலந்துரையாடிய ஸ்செலப்: பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைக்கும் நுண் நிதி பற்றியும் ஆலோசனை! சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கைக்கான முன்மைச் செயலாளர் கிசெல ஸ்செலப், போருக்கு பின்னரான முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு,சமூக, பொருளாதார செயற்பாடுகள் சமூகநிலை, அரசியல் களத்தில் அவர்களது வகிபாகம் தொடர்பாக நேற்று ஜனநாயக போராளிகள் கட்சியினரிடம் கலந்துரையாடியுள்ளார். மேலும், இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புதிய முறையிலான நில ஆக்கிரமிப்பு, வலிந்து காணாமல் செய்யப்பட்டோருக்கான பொறுப்பு கூறலில் காணப்படுகின்ற அசமந்தப்போக்கு, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளின்வழி செயற்படாமை தொடர்பாகவும் இந்த சந்திப்பில் கவனம் செலுத…

  9. அந்த வங்கியின் நிiறைவேற்று அதிகாரியிடம் ரணில் கேள்வி முழு நாட்டையும் யுத்தத்தில் சிக்கவைத்துக் கொண்டு, ஸ்தீரமற்ற பொருளாதாரத்தில் சிக்கிக் கிடக்கும் இலங்கை அரசிற்கு கடன் வழங்கலாமா? என்பது குறித்துத் தீர்மக்கமாகச் சிந்தித்து முடிவு எடுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் எச்.எஸ்.பி.ஸி. வங்கியின் பிரதமநிறைவேற்று அதிகாரி ஸ்டீபன் கே.கிறீனிடம் கேட்டுள்ளார். இது தொடர்பாக - இலங்கையின் யுத்த நிலைமை மற்றும் பொருளாதாரத் தன்மை போன்றவற்றை விளக்கி ரணில், ஸ்டீபனுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தள்ளார். அக்கடிதத்திலே மேற்கண்டவாறு கேட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் மேலும குறிப்பிட்டள்ள விடயங்கள் வருமாறு :- இலங்கை அரசிற்கு 5 ஆயிரத்து 600 கோடி ரூபா கடன் வழங்கும…

    • 0 replies
    • 1.1k views
  10. சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் ஒரு கட்டத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகளைப் பராமரிக்கும் விடுதி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலின் போது அதனைச் சுற்றி பல நிறங்களைக் கொண்ட பாதணிகள் சிதறுப்பட்டுக் காணப்பட்டதையும், காலையிழந்த பதின்ம வயதுப் பெண்ணொருவர் தனது பதுங்குகுழியை விட்டு வெளியே வர முடியாமல் தவித்ததுடன், அவரிற்கருகில் தேங்கியிருந்த மிக அழுக்கான நீரைத் தனக்குத் தருமாறு அந்தப் பெண் இரந்து கேட்டதையும் மீனா கிருஸ்ணமூர்த்தி தற்போதும் நினைவுகூருகிறார். சிறிலங்காப் படைகள் முன்னேறிக் கொண்டு வந்த நிலையில் இறந்து பிறந்திருந்த தனது சொந்தப்பிள்ளையைக் கூட அவர் புதைத்து விட்டு வரவேண்டியிருந்தது. அத்துடன் அங்கே எண்ணுக்கணக்கற்றவர்களின் உடலங்கள் சிதறிக…

  11. நான்கு முதலமைச்சர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சுதந்திரக் கட்சிக்கு விண்ணப்பம்! [sunday 2015-06-14 07:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களாகக் களமிறங்குவதற்காக நான்கு முன்னாள் மாகாண முதலமைச்சர்கள் அக்கட்சியின் தலைமைப்பீடத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். மத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டீ சில்வா, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் வடமத்திய மாகாண முதலமைச்சர் பேல ஜயரத்ன ஆகிய நால்வருமே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாகக் களமிறங்க விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களு…

  12. அம்பாறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்: தந்தை அளித்த வாக்குமூலம் தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவியின் இழப்பு தன்னை வெகுவாக பாதித்து இருந்தமையால்தான் இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றதாக தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பகுதியில் இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்றுவிட்டு தானும் தவறான முடிவெடுக்க முயற்சி செய்த தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாக்குமூலத்தை அளித்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதி மேலும், தனது இரு விசேட தேவையுடைய பிள்ளைகளையும் பராமரித்து வந்த மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோய் காரணம…

  13. எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்தைக் கண்டுபிடித்த மாணவனுக்கு ஜனாதிபதி பாராட்டு! [Friday 2015-06-19 07:00] எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து கொழும்பு நாலந்தா கல்லூரி மாணவன் ரகித்த தில்ஷான் மாலேவன சர்வதேச பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த மாணவனை நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அம்மாணவனுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிகூறிய ஜனாதிபதி, அதற்காக எந்த நேரத்திலும…

  14. 28 MAR, 2024 | 09:56 AM வட மாகாணத்துக்கு தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 50 ஆயிரம் சூரிய மின் உற்பத்தி இலவச வீட்டுத் திட்டம் ஜனாதிபதியின் இணக்கத்தோடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கிணங்க, வட மாகாணத்தில் முன்னர் வழங்குவதாக தீர்மானிக்கப்பட்ட 25 ஆயிரம் வீடுகளுக்குப் பதிலாக 50 ஆயிரம் வீடுகள் வழங்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீடுகள் வழங்கப்பட்டு, அவற…

  15. நிபுணத்துவ ஆலோசகருக்கு விண்ணப்பம் கோரியுள்ளது நோர்வே தூதரகம் _ வீரகேசரி இணையம் 11/7/2011 12:11:28 PM இலங்கைப் பத்திரிகை நிறுவனம் மற்றும் ஊடக வளங்கள் பயிற்சி மையம் ஆகியவற்றின் செயற்பாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு நோர்வே தூதரகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கென இலங்கையில் உள்ள நிபுணத்துவ ஆலோசகர் ஒருவரின் தேவையைப் பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான விண்ணப்பத்தையும் தூதரகம் கோரியுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களுடைய பரிந்துரைகளையும் அதற்கான செலவினத்தையும் குறிப்பிட்டு இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேற்படி மீள்பரிசீலனை டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் 2012 பெப்ரவரி முதலாம் திகதி வ…

  16. மிருசுவில் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். 2000ம் ஆண்டு மிருசுவில்லில் இடம்பெற்ற 8 தமிழர்களின் படுகொலை தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. சிறிலங்காவின் சட்டத்தில் மரண தண்டனை இருக்கின்ற போதும், அது நிறைவேற்றப்படுவதில்லை. இந்த நிலையில் குறித்த சிப்பாயும் மரண தண்டனை பெற்றுள்ள போதும், அவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து ஒரு காலத்தில் விடுவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அவருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதன் மூலமே இந்த படுகொலை சம்பவத்துக்கு நியாயத்தை வழங்க முடியும் என்று அரியநேத்திரன் தெரிவித…

    • 17 replies
    • 881 views
  17. கால அட்டவணையுடன்கூடிய தீர்மானமே அவசியம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படவுள்ள புதிய தீர்மானமானது, கால அட்டவணையுடன் இருந்தால் அதனை பரிசீலிக்க முடியுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கால அட்டவனையுடன் தீர்மானம் வந்தாலும் இலங்கை அரசாங்கம் அதனை எந்தளவுக்கு சாத்தியமாக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர் இவ்விடயங்களைக் கூறியுள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையில் கண்காணிப்பு என்ற பெயரில் கால அவகாசம் வழங்கப்படவு…

  18. ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்று புதிய சாதனை 190 புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி மாணவன் [23 - September - 2007] [Font Size - A - A - A] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார். களுத்துறை- ஹொரண தக்சிலா கல்லூரி மாணவன் சாகி பசுரு வீரக்கோன் என்ற மாணவனே 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இதேநேரம் கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழவரன் தமிழ் மொழி மூலத்தில் பரீட்சைக்குத் தோற்றி அகில இலங்கை ரீதியாக 190 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார். சிங்கள மொழி மூலத்தில் பரீட்சை…

    • 8 replies
    • 3.9k views
  19. சட்டவிரோதமாக கடல் மார்க்கம் ஊடாகப் போதைப் பொருள் கடத்தல்,கடற்கொள்ளைகளில் ஈடுபடுதல் ஆகியனவற்றைத் தடுக்கும் வகையில் இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய மூன்று நாடுகளும் இந்து சமுத்திரத்தில் கடற்படைக் கண்காணிப்பு நடவடிக்கைகளை கூட்டிணைந்து மேற்கொள்ளவதென தீர்மானித்துள்ளன. இவ்வாறான கடல் ரீதியிலான குற்றங்களைத் தடுக்கும் வகையில் புலனாய்வுத் தகவல்களை இலங்கை, இந்திய நாடுகளுக்கு வழங்கவும் மாலைதீவு அரசு இணக்கம் தெரிவித்துள்ளன. http://www.seithy.co...&language=tamil

  20. பொதுத் தேர்தல் - 2015 நடந்து முடியும் வரை பொதுமக்களுக்குப் பெரும் குழப்பமாகவே இருக்கப் போகிறது. யாரை நம்புவது? எது உண்மை? என்று எதுவும் தெரியாத சூழ்நிலைக்குள் பொதுமக்கள் அகப்பட்டு அல்லலுறுவது தவிர்க்க முடியாத தொன்றாகிவிட்டது. வட புலத்தில் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது கடினமான காரியமாகி உள்ளது. ஒரு சீற் தாருங்கள் என்று கேட்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆசனம் கிடைக்காதவர்கள் குறித்த கட்சிக்கு எதிராகச் செயற்படுவர் என்பதும் உண்மை. எதுவாயினும் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேவையான எண்ணிக்கை கொண்ட வேட்பாளர்களைத் தெரிவு செய்து களமிறங்குவது கட்டாயம். அதேநேரம் அரசியல் தலைமையில் உள்ளவர்கள் தங்களின் வெற்றியை உறுதிப்டுத்தும் வகையிலேயே வேட்பாளர்களை…

  21. இலங்கையில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் - அதிர்ச்சியில் மக்கள் 13 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைNURPHOTO Image captionசித்தரிப்புப் படம் இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் பல பகுதிகளில…

  22. சிறிலங்கா இராணுவத்தினரது தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல்களினால் நாளாந்த வாழ்வாதாரமின்றி பூநகரி மீனவர்கள் அல்லலுற்று வருகின்றனர். மேலும் வாசிக்க

  23. இனப்பிரச்சினைத் தீர்வை இந்தியா விரும்புகின்றதா? இலங்கை அரசு இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்காணும் என யாரேனும் நம்பினால் அது மிகப்பெரும் தவறாகும்.அரசைப் பொறுத்த வரை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் எண்ணம் அறவேயில்லை எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தை நடத்துவதன் ஊடாக காலத்தைக் கடத்துவதே அரசின் தற்போதைய பணியாக உள்ளது. அதேநேரம் இந்த உண்மை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தெரியாமல் இருக்கமுடியாது. இருந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக தனது இருப்பை காப்பாற்றிக் கொள்ள முற்படுகின்றது. ஆக, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில்லை என்ற நோக்கமுடைய அரசும், இது நடக்கின்ற காரியம் இல்லை என்ற உண்மை தெரிந்த தமிழ்த் தேசிய கூட்ட…

  24. வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தமிழினம் தமது அடையாளங்களையெல்லாம் இழந்து நிற்கின்றது: - சீனித்தம்பி யோகேஸ்வரன் [Friday 2015-07-10 19:00] வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் சரியான தலைமைத்துவத்தின் கீழ் வழிநடத்தப்பட்டதன் காரணமாக நாம் தமிழர்களாகவும் எமது மொழியைப் பின்பற்றபவர்களாக தமிழ் இனத்தைக் காப்பாற்றி வருகிறோம் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாளர் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஏனைய பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்தமைக்கான அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார் மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையிலே இவ…

  25. அடுத்த வருடத்திலிருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை விமானம் மூலம் வருவோரைப்போன்று நடத்த அவுஸ்திரேலியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது இதற்கமைய படகுகள் மூலம் வந்து அடைக்கலம் கோருவோர் அகதிகள் மீள்பார்வை மன்றத்துக்கு விண்ணப்பிக்கமுடியும். முன்பு விமானம் மூலம் வந்து அடைக்கலம் கோருவோருக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டது. மேலும், ஏற்கெனவே படகு மூலம் வந்த 27 புகலிடம் கோருவோர் ‘பிறிட்ஜிங் விஸா’ வழங்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளனரென குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறினார். முன்னர் படகு மூலம் வருவோர் கப்பலிலேயே தடுத்துவைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. ‘பிறிட்ஜிங் விஸா’ கப்பல் மூலம் வந்தவர்களுக்கு வழங்கப்படுவது இதுவே முதல்த் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.