Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பெருந்தொகையான இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு குவைத் அறிவிப்பு!! இலங்கையர்களை.. குவைத் நாட்டில் விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்தும் நாட்டில் தங்கியிருக்கும் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக பொது மன்னிப்பு காலம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குறித்த பொது மன்னிப்பு காலம் இதுவரையில் இறுதி நாட்களை நெருங்கியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் சட்டரீதியாக அங்கு தங்கியுள்ள நிலையில் 19ஆயிரம் இலங்கையர்களின் விசா செல்லுபடியாகியுள்ள நிலையில் அங்கு தங்கியுள்ளனர். இதன் காரணமாக பொது மன்னிப்பு காலத்தில் அவர்களில் அதிகமானோர் இலங்கை வருவதற்கு எதிர்பார்த்துள்ளனர். அந்த …

    • 3 replies
    • 527 views
  2. மலையக மக்கள் இதுவரை பட்ட கஷ்டங்களை போக்க நஷ்டத்தில் இயங்கும் தனியார் கம்பனிகளை அரசு பெறுப்பேற்று மக்கள் விவசாயம் செய்ய பகிர்ந்தளிக்க வேண்டும், மலையகத்துக்கு விடுதலை வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து நுவரெலியா பூண்டுலோயாவைச் சோந்த இளைஞர் ஒருவர் மட்டக்களப்பு ஔவையார் சிலைக்கு கீழ் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று சனிக்கிழமை (30) ஈடுபட்டுள்ளார். மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இருக்கும் ஔவையார் சிலையின் கீழ் மலையகத்தின் ஒரு குரல் விடுதலை வேண்டும் என்ற சுலோகம் தாங்கிய நிலையில் குறித்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார். நுவரெலியா மாவட்டத்தில் பூண்டுலோயா டன்சன் கீழ் பிரிவை சேர்ந்த சண்முகம் மகேஸ்காந் என்ற 26 வயது இளைஞரின் தந்தையார் உயிரிழ…

    • 0 replies
    • 406 views
  3. இலங்கையில் கொரோனா வைரஸை இறக்குமதி செய்தமை தொடர்பில் ராஜபக்ச அரசே பொறுப்புக்கூற வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று கொரோனா வைரஸின் பரவலால் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். மத்திய கிழக்கு, குவைத், இத்தாலி போன்ற நாடுகளில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையர் பலர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இதன் உண்மைத் தகவலை வெளிவிவகார அமைச்சர் வெள…

    • 1 reply
    • 382 views
  4. இலங்கையின் வடபுலத்தில் கொரோனா அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் இராணுவ மயபப்டுத்தல் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விசனம் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணம் இராணுவ மயப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவது தொடர்பாக நாம் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்திருந்தோம். எனினும் இது தொடர்பில் ராஜபக்ஷ அரசு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலையில் எமது மக்களை சொல்லணா துன்பத்திற்குள்ளாகி வருகின்றது. இலங்கையின் எப்பாகத்திலும் இல்லாத அளவிற்கு இராணுவ சோதனைச் சாவடிகளும் ரோந்து நடவடிக்கைகளும் இராணுவ நடமாட்டமும் வடக்கில் தலைதூக்கியுள்ளத…

    • 1 reply
    • 383 views
  5. >தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைக் குரல்களை நசுக்கி, மீண்டும் ஒரு இராணுவ ஆட்சியை நிலை நாட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ் தேசிய மக்கள் மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். நாகர் கோவில் குண்டுவெடிப்பு சம்பவம், அமைச்சுக்களின் செயலாளர்களாக இராணுவ அதிகாரிகள் நியமனங்கள் தமிழ் மக்களை அச்ச நிலைக்குள் வைத்திப்பதற்கான அரசு எடுத்த நடவடிக்கைகள் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் மீண்டும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் த…

    • 0 replies
    • 331 views
  6. ரணிலுக்கு எதிராக வருகிறது நம்பிக்கையில்லா பிரேரணை! ஐக்கிய தேசிய கட்சி செயற்குழு உறுப்பினர்களில் 40க்கும் மேற்பட்டவர்கள், தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முடிவு செய்துள்ளதாக சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (29) இந்ததீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அதற்கமைய அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கல் டீல்களில் ஈடுப்பட்டுவரும் ஐ.தே.க.வைச் சேர்ந்த குழுவினருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/ரணிலுக்கு-எதிராக-வரு/ இந்த குள்ளநரி இன்னுமா பதவியில இருக்கின்ற…

  7. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னாரின் பூதவுடலுக்கு பௌத்த முறைப்படி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலை நேற்றுக்காலை கொழும்பிலிருந்து எடுத்துச் சென்ற ஹெலிக்கொப்டர் கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வேவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அரசியல் பிரமுகர்கள் மக்கள் அஞ்சலியுடன் அமரர் ஆறுமுகனின் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது, ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் அவரது சொந்த ஊரான ரம்பொடை …

    • 0 replies
    • 340 views
  8. தொண்டமானின் அமைச்சு இனி மஹிந்தவுக்கு மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் வகித்த சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை தேர்தல் முடியும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளனி இதன்படி திங்கட்கிழமை குறித்த அமைச்சை பதவிப்பிரமாணத்துடன் பிரதமர் பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது. https://newuthayan.com/தொண்டமானின்-அமைச்சு-இனி/

    • 1 reply
    • 855 views
  9. சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு Bharati May 29, 2020சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழு கூடி ஆராயும்; சம்பந்தன் அறிவிப்பு2020-05-29T07:54:04+00:00 “விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (தமிழரசுக் …

  10. பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்.. பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் இளைஞருடை தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு …

    • 4 replies
    • 868 views
  11. ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல் Leftin May 28, 2020ஆலையடிவேம்பில் 3 இலட்சம் பெற்ற பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்2020-05-28T23:11:14+00:00 திருக்கோவில் நிருபர் வீதி நிர்மாண ஒப்பந்தகாரரிடமிருந்து 3 இலச்சம் ரூபா லஞ்சம் பெற்றபோது கைது செய்யப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலாளர் உட்பட இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம் ஹம்ஸா இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார். அரசினால் நட…

  12. ஏட்டிக்கு போட்டியாக இன்று கூடும் ரணில் – சஜித் அணிகள் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ள அதேவேளை சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இன்று கூடவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அவர்களை கட்சியிலிருந்து நீக்கும் வகையில் ஐ.தே.க இன்று தீர்மானம் எடுக்கவுள்ளது. இந்நிலையில் அதற்கு எதிராக சஜித் பிரேமதாச குழுவினர் கூடி முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். -(3) http://www.samakalam.com/செய்திகள்/ஏட்டிக்கு-போட்டியாக-இன்ற/

  13. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் சற்று முன்னர் காலமானார் http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அமசசர-ஆறமகன-தணடமன-கலமனர/150-250937 இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் காலமானார். வீட்டிலிருந்து வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார் 29 மே மாதம் 1964 ஆம் ஆண்டு பிறந்த ஆறுமுகம் பல்வேறு அரசுகளில் முக்கிய பதவிகளை வகித்து வந்தவராவார். http://www.palmyrahtamilnews.com/2020/05/26/ஆறுமுகம்-தொண்டமான்-காலமா/

    • 42 replies
    • 4.6k views
  14. யாழ் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய பூசகரை தாக்கி பணம் நகை கொள்ளை! யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் பூசகரைத் தாக்கிய கொள்ளையர்கள் அவருடைய வீட்டிலிருந்து பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. கோவிலுக்கு அண்மையில் தனித்துவாழும் பூசகரே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இன்று அதிகாலை 03 மணியளவில் பூசகரின் வீட்டினுள் நுழைந்த இருவர் அவரை கொட்டன் தடிகளால் சரமாரியாகத் தாக்கி, அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் என்பன உள்ளடங்கலாக ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இ…

  15. தேர்தலை நடத்தவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை – பிரதமர் கருத்து Rajeevan Arasaratnam May 30, 2020தேர்தலை நடத்தவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை – பிரதமர் கருத்து2020-05-30T11:19:54+00:00 தேர்தலை நடத்தவேண்டியது பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவிடமும் தேர்தல் ஆணையாளரிடமும் உள்ளது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் இடம்பெறுவது தவிர்க்க முடியாதது என்பதால் தேர்தல் ஆணைக்குழு அதற்காக தயாராகவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் நீதிமன்றம் தனது முடிவை அறிவித்ததும் தேர்தல் ஆணைக்கு அவசியமா…

  16. இந்தியா, சீனா கோஷ்டியிலேயே இல்லை- அணிசேரா கொள்கையே எங்களது பாதை... 'அடேங்கப்பா' மகிந்த ராஜபக்சே இந்தியாவும் சீனாவும் எங்களுக்கு நட்பு நாடுகள்; அணிசேரா கொள்கைதான் எங்களது பாதை என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திடீர் ஞானோதயம் பெற்றவராக கூறியுள்ளார். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலம் முதலே இலங்கை தீவில் இந்தியாவின் செல்வாக்கு சரிவை சந்தித்தது. அவருக்கு முன்னர் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை கண்டு இலங்கை தேசம் குலைநடுங்கிப் போய் கிடந்தது. இந்திராவின் காலத்தில் அரசியல் தலைவர்கள், வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர்; ராஜீவ் காலத்தில் அதிகாரிகளே வெளியுறவு கொள்கையை தீர்மானித்தனர். இதனால்தான் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் சரிவை சந்தித்தது. ராஜபக்சேவின் சீன…

    • 17 replies
    • 1.7k views
  17. நன்னீர் மீன்களின் விலை அதிகரிப்பு! – மக்கள் விசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறுகள் மற்றும் குளங்களில் குறைந்தளவு மீன்கள் பிடிக்கப்படுவதனால் விலைக அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆறுகள் மற்றும் குளங்களில் சிறு மீன் முதல் பெரிய மீன்கள் அனைத்தும் விலை என்றும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. குறித்த மீன்கள் யாவும் வீச்சு வலைகள் மற்றும் மீன் கூடுகள் மூலம் பிடிக்கப்படுகின்றது. ஆறுகள் மற்றும் குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை உரிய இடத்திலேயே மீனவர்கள் விற்பனை செய்கின்றனர், விலை அதிகரிப்பினால் மீன்களை மக்கள் கொள்வனவு செய்வது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் நஷ்டமடைவதையும் காண முடிகின்றது. இந்நிலையில் …

  18. தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 11 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்த கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார கால பகுதியில் மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை மேற்கொண்டமை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து கடந்த 17ஆம் திகதி பொலிஸார் யாழ்.நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர். அதன்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட பதினொரு பேரை எதிர்வரும் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி 14 நாட்களின் பின்னர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஐந்து பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல் அன்றைய தினம…

    • 0 replies
    • 359 views
  19. இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல் Rajeevan Arasaratnam May 29, 2020இலங்கை பிரஜைகளை சில நாடுகள் நடத்திய விதம் குறித்து அனில் ஜசிங்க சீற்றம்- மனிதாபிமானத்தை பின்பற்றவில்லை என சாடல்2020-05-29T08:13:32+00:00 இலங்கை வெளிநாடுகளை சேர்ந்த நோயாளிகளை நடத்தியது போன்று இலங்கையர்கள் பணிபுரியும் நாடுகளும் இலங்கையர்களை நடத்தியிருந்தால் நூற்றுக்கணக்கான நோயாளிகளை நாட்டிற்கு கொண்டுவரவேண்டிய பிரச்சினையை இலங்கை எதிர்கொண்டிராது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்தவர்கள் பணிபுரியும் நாடுகள் மனிதாபிமானத்துடன் சிந்தித்திருந்தால் நாங்கள் வெளி…

    • 1 reply
    • 427 views
  20. மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி by : Yuganthini தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை, மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதற்கு தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்று இருந்தனர். குறித்த வழக்…

    • 0 replies
    • 457 views
  21. அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க தொண்டமான் மறுத்தார் – ஜனாதிபதி! அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கான தனி நாடு என்ற கருத்துக்கு ஆதரவளிக்க அவர் உறுதியாக மறுத்துவிட்டார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினையடுத்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நலிவுற்ற தோட்டத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மறை…

    • 4 replies
    • 561 views
  22. இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை – ஜனாதிபதி ஊடகப்பிரிவு இலங்கை இராணுவத்திற்கு எதிரான யுத்தகுற்றச்சாட்டுகளிற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையொன்று குறித்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.தி இந்து நாளிதழில் வெளியான கட்டுரையில் இலங்கையின் பல படைவீரர்கள் குறிப்பாக சிரேஸ்ட அதிகாரிகள் யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் யுத்தகுற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ஊடகப்பிரிவு, எந்த ஆயுதமோதலின் போதும் தனிநபரின் மனித உரிமையை பேணுவது மழைகா…

    • 1 reply
    • 474 views
  23. வட, கிழக்கு இணைப்புக்கு அரசு அடிக்கும் சாவுமணியே ''ஜனாதிபதி செயலணி'' - சிவசக்தி ஆனந்தன் மீண்டும் ராஜபக்ஷ அரசு ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு சிங்கள பெரும்பான்மை மக்கள் தொகையை மாற்றியமைப்பதற்கு திட்டமிடுகின்றமை புலனாகின்றது. அதன்மூலம் தமிழர்களின் வடக்கு கிழக்கு இணைப்புக் கோரிக்கைக்கு சாவுமணி அடிப்பதற்கே ராஜபக்ஷ அரசு முனைகின்றது. அதன் வெளிப்பாடே கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி விசேட செயலணி என தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் செயலாளரும் வன்னி மாவட்ட முன்னாள் எம்.பி.யுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்கு ஜனா…

  24. வேட்டைக்கு விரித்த வலையில் சிக்கிய கருஞ்சிறுத்தை நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷபான தோட்டத்தில் அழிந்து போனதாகக் கருதப்பட்ட அரிய வகை மிருகங்களில் ஒன்றாக கறுஞ்சிறுத்தையொன்று சிக்கியுள்ளது. வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையிலேயே இந்த கறுஞ்சிறுத்தை இன்று சிக்கியுள்ளது. மஸ்கெலியா பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து இதனை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சுமார் 08 வயதுடைய கறுஞ்சிறுத்தை உயிருடன் மீட்கப்பட்டு அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். http://thinakkural.lk/article/43535

  25. மணல் அகழ்வை தடுத்தோர் மீது தாக்குதல்; அறுவர் காயம்! மட்டக்களப்பு – வாகனேரி பகுதியில் சட்டவிரோதமாக மண் ஏற்றுவதற்கு சென்றவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (28) இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனேரி குளம் பகுதியில் ஓட்டமாவடியை சேர்ந்தவர்களினால் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்களினால் பல்வேறு தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அப்பகுதிகளில் தொடர்ச்சியான மண் அகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று மாலை அப்பகுதிக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.