Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இராணுவ முகாம்முன் வெடிப் பொம்மையை வீசியதாக ஒருவர் கைது – ரிஐடியிடம் ஒப்படைப்பு! வல்லை இராணுவ முகாமுக்கு முன்பாக வெடிபொருள் நிரப்பிய பொம்மை ஒன்றை வீசிச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் நீர்வேலியைச் சேர்ந்த ஒருவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸார் ஊடாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் (ரிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லைவெளி இராணுவ முகாமுக்கு முன்பாக நபர் ஒருவர் விழுத்திவிட்டு சென்ற மர்ம பொதியை இராணுவத்தினர் சோதித்த போது அது வெடித்ததில் படைச் சிப்பாய்கள் இருவர் காயமடைந்தனர். அவர்கள் பலாலி படைத்தள வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றனர். வல்லை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக நெல்லியடி …

  2. த்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடுமையாக எச்சரித்துள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி மற்றும் இலங்கை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய வங்கி அதிகாரிகளை ஜனாதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார். பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. எனினும் இது தொடர்பில் இன்னமும் மத்திய வங்கி பதிலளிக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். தற்போது நிதி நிறுவனங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகின்றன. அந்த நிதி நிறுவனங்களை பாதுகாப்பதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன? நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்வதென்…

    • 1 reply
    • 645 views
  3. எச்சில் இலையிலுள்ள எலும்புகளை ஏற்கோம் நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்காவிட்டாலும், தமிழர்கள் மதிப்புடனும் மாண்புடனும் வாழ வழி வகுக்கப்படும். சூரியன் அஸ்தமிக்கும் போது, இனி எல்லா நாள்களும் இருளே தொடர்ந்திருக்கும் என்று நாம் எண்ணுவதில்லை. அடுத்தநாள் மீண்டும் ஆதவன் உதிப்பான் என்ற நம்பிக்கை எம்முள் இருக்கும். அதேபோலத்தான் இதுவும் என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கான தீர்வை, தன்னால் மட்டும்தான் தரமுடியும் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அண்மையில் தெரிவித்திருந்தார். அப்படி அவரால் கூறமுடியாதெனக் கூறிய சி.வி, காரணம், தமிழர்களின் பிரச்சினை என்னவென்றே பிரதமருக்குத் தெரியாதென்றார். வேண்டுமானால், இவ்வளவுதான் த…

    • 8 replies
    • 1.4k views
  4. 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா? – உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி வடகிழக்கில் யுத்தம் நிறைவடைந்ததுக்கு பின்னர் 87 ஆயிரம் பேர் விதவைகளாக இருக்கின்றார்கள் என இன்னும் 25 வருடங்களுக்கு பிறகும் பேசிக்கொண்டு இருக்க போகின்றோமா என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த உமாச்சந்திரா பிரகாசிடம் வடகிழக்கில் இருக்கும் விதவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தம் முடிவடைந்து இவ்வளவு நாள்கள் கடந்துவ…

  5. அரசியல் கைதிகள் எவரும் கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்படவில்லை – சுரேஸ் by : Vithushagan தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்த்து கருத்து தெரிவிக்கையில், ”ஓரிரு நாட்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாத…

  6. மஹிந்தவின் குடும்ப நிறுவனத்தின் ஊழல்களை வெளியில் கொண்டுவந்த ஊடகவியலாளர் உயிரிழந்தது எப்படி? கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கக்திற்கு அருகில் கொழும்பு ரெலிகிராப் என்ற ஊடகத்தின் ஊடகவியலாளர் ரஜீவ ஜெயவர்த்தனா (63) சடலாகமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டார் ராஜகிரிய பகுதியில் வசித்துவரும் இவர் முன்னாள் அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் குடும்ப விமான நிறுவனமாக மிகின் லங்கா என்ற விமான நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றியிருந்தார்.என்பதுடன் அப்போது அந்த நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஊடகங்களில் இவர் எழுதி வந்துள்ளார். இவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படும்போதும், இவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலம் சுதந்திர சது…

  7. மாணவர்களுக்கான விசேட வரைதல் செயற்திட்டம்! கொரோனா தொற்று அச்சம் காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டும், ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததனாலும் மாணவர்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்து கல்வி நடவடிக்கையில் ஆர்வம் காட்டாமல் காணப்படுகின்றனர். இவர்களது உளவியல் ரீதியான இம்மாற்றத்தினை திருத்தி கல்வி நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதற்கான விளையாட்டுடன் கூடிய விசேட வரைதல் திட்டம் ஒன்றை மட்டக்களப்பு வன்னத்துப் பூச்சி சமாதானப் பூங்கா அமைப்பு தயார்படுத்தியுள்ளது. இவ்விசேட செயற்றிட்டம் மட்டக்களப்பு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 120 மாணவர்களிடத்தில் செயற்படுத்தியபோது அவை வெற்றியளித்துள்ளதாகவும், இதனை இம்மவட்டத்திலுள்ள அனைத்து மாணவர்களிடமும் செயற்படுத்துவதன் மூலம் அவர்களி…

  8. தொல்பொருள் செயலணி குறித்து அமெரிக்கத் தூதுவர் கேள்வி… இலங்கையில் குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டுள்ள செயலணிகள் குறித்து நேற்று (15) கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயம் தொடர்பாக கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் இலங்கையர்கள் சிலர் எழுப்பும் கேள்விகள் தன்னிடமும் உள்ளன என தெரிவித்துள்ள தூதுவர், குறிப்பிட்ட பகுதிக்கு என உருவாக்கப்படும் தொல்பொருள் செயலணி அந்த பகுதி சனத்தொகையை பிரதிபலிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்டு…

    • 3 replies
    • 699 views
  9. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கல்விப் பிரிவுக்கு பொறுப்பாக இலங்கையரான இசாக் என்பவர் செயற்படுவதாக, பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சாட்சியமளித்தார். உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் நேற்று இரண்டாவது நாளாகவும் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்துடன், கடந்த 5 வருடத்தில் 88,000 முஸ்லிம் அல்லாதவர்கள், மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தள்ளார். இலங்கையில் தப்லீக், தெளஹீத், ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வான் ஆகிய சிந்தனைகள் ஊடாகவே அடிப்படைவாதம் விதைக்கப்படுவதாகவும், உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களும் அவ்வாறான சிந்தனைகள் உர…

    • 1 reply
    • 452 views
  10. சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார். அம்பாறை மாவட்ட தேர்தல் நிலைமை தொடர்பில் கட்சி வேட்பாளர்களை திங்கட்கிழமை (15) முற்பகல் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் கல்முனை கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறினார். நேற்ற அம்பாறையில் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, கருணா போன்ற கண்டகண்டவர்களிற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றார். இந்த நிலையில் இன்று கருணா செய்தியாளர்களை சந்தித்போது, சுமந்திரன் பற்றி நான் பெரிதாக எடுத்துக்…

    • 2 replies
    • 593 views
  11. இன்றைய கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் இரகசிய கும்பல்களினால் நடத்தப்படும் வசையும், பொய்யும் மட்டும் பாடும் இணையத்தளங்களில், "மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி செல்கிறார்" என்ற ஒரு பொய் செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது. இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை இது காட்டுகிறது. திடீர் திடீர் என "அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே" பாயும் தவளை அரசியலை நான் ஒருபோதும் செய்ததில்லை என்பதை மக்கள் அறிவார்கள். நான் எங்கே இருந்தாலும், எனது கட்சியிலேயே இருக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீது, நம்பிக்கை வைத்து, நான் பயணிக்கிறேன். என்னுடன், எனது கட்சியும், எமது கூட்டணியு…

    • 1 reply
    • 501 views
  12. 156 இந்திய பிரஜைகள் இந்தியா பயணம் இலங்கையில் சிக்கியிருந்த 156 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 1202) மூலமாக 2020 ஜூன் 15 ஆம் திகதி கொழும்பிலிருந்து கொச்சி மற்றும் பெங்களூருக்கு பயணமானார்கள் கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்காக இந்திய அரசின் மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜைகளை சந்தித்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அப்பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்காக வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்புவதையிட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படு…

    • 1 reply
    • 437 views
  13. -என்.ராஜ் யாழ்ப்பாணம் - தீவகப் பகுதியில், புகையிலை செய்கைக்குப் பதிலாக விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிவருவதாக, வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ். சிவகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாணம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு, இன்று (16) கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், புகையிலைச் செய்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பமெனவும் இதற்கமைய, மாற்று பயிர்ச்செய்கைகளில் மக்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்கிலேயே, நாங்கள் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறினார். இதற்கமைய, மிளகாய்…

  14. கபில நிறத் தத்தி; அவதானம் இல்லையேல் இழப்பு அதிகரிக்கும்’ எம்.ஏ.றமீஸ் அம்பாறை மாவட்ட விவசாய நிலப்பரப்புகளில் பெருக்கமடைந்து வரும் கபில நிறத் தத்திகளின் தாக்கம் தொடர்பில், விவசாயிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் இல்லையேல் பாரிய இழப்புக்களை எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும், அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் எச்சரித்தார். இது தொடர்பில் இன்று (16) அவர் ஊடகங்களுக்கு விவரிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் 2020 சிறுபோக நெற் செய்கை 65 ஆயிரம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவற்றில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் கபில நிறத் தத்திகளின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அக்கரைப்பற்று, ஹிங்குராணை, இறக்காமம், வாங்கா…

  15. தனியார் கல்வி ஆசிரியர்களுக்கு மானியம் வழங்குக – மதிசுதன் தனியார் கல்வி துறையினை மட்டும் நம்பி வாழ்வாதரத்தை நடத்தும் ஆசிரியர்களுக்கு அரச மானியங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கு.மதிசுதன் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு நிலைமையின் போதும் அதன் பின் தற்போது அனைத்து துறைகளும் வழமைக்கு திரும்பிய போதும் இன்னும் தனியார் கல்வி துறை இயங்க முடியாத நிலையே காணப்படுகிறது. எதிர்வரும் ஜூன் 29ம் திகதி தனியார் கல்வி நிலையங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் கடந்த மூன்று மாத காலமாக தனியார் துறை கல்வி கற்பித்தல் நடவடிக்கைகளினை நம்பி உள்ள பல ஆசிரியர்கள் உள்ளார்…

  16. தற்போதைய ஆட்சியில் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்குமென நம்பவில்லை: மாமனிதர் ரவிராஜின் மனைவி by : Dhackshala தற்போதைய ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு எதுவுமே கிடைக்குமென தான் நம்பவில்லை என்றும் நல்லாட்சியென கூறப்பட்ட முன்னைய ஆட்சியிலேயே தனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் மாமனிதர் ரவிராஜின் மனைவியுமான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கிலுள்ள 87ஆயிரம் விதவைகள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்து வருடங்களிலும் மாறி மாறி கதிரைய…

  17. ஊடகவியலாளர் தரிஷாவின் லப்டொப்பை சிஐடி கைப்பற்றியது தனது வீட்டுக்கு இரண்டு தடவைகள் வருகைதந்த சிஐடியினர் ஆணைப்பத்திரம் இன்றி தனது லப்டொப்பை கைப்பற்ற முயன்ற நிலையில், கடந்த 9ம் திகதி ஆணைப்பத்திரத்துடன் வந்த சிஐடியினர் தனது லப்டொப்பை கைப்பற்றி சென்றனர் என்று சன்டே ஒப்சேவர் முன்னாள் ஆசிரியர் தரிஷா பஸ்ரியன் தெரிவித்துள்ளார். 2019 நவம்பரில் சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை தொடர்பான குற்றவியல் விசாரணையுடன் பல மாதங்களாக தரிஷா பஸ்டியனின் பெயர் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை தொடர்பாக, குற்றப் புலனாய்வு பிரிவினர் தனது கூட்டாளிகள் மற்றும் சகாக்களிடம் தனது மின்னணு சாதனங்கள் குறித்து குறிப்பாக கேள்வி எழுப்பியுள்ளதாக தரிஷா கூறினார். மேலும், …

  18. தேர்தலுக்குப் பின்னர் எம்.சி.சி. ஒப்பந்தம் குறித்து முடிவு…! எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த முடிவு எட்டப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார். ஊடகவியாளர்களுடனான இணையவழி கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், குறித்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது என்றும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவினை அமெரிக்கா மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும், தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என்றும் அ…

  19. யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் விபத்து; ஒருவர் பலி! யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் ஒன்று பருத்தித்துறை, மணற்காட்டு பகுதியில் தீயினை அணைப்பதற்காக விரைந்து சென்ற போது இன்று (16) சற்றமுன் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் தீயணைப்பு வாகனத்தின் வலது பக்க முன்ரயர் காற்று போனதன் காரணமாக வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவத்தில் அரியரட்ணம் சகாயராஜா (37-வயது) எனும் தீயணைப்பு வீரர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மேலும் தீயணைப்பு வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அன…

  20. Miau Miau: இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள பிரச்சினை.காவல் துறை ஆயிதம் வைத்து இருப்பதா. இல்லை யா. இதுவா. தமிழ் மக்களின் பிரச்சினை .அது என்ன வடகிழக்கு. வேறு நாடு. தெற்கு மேற்கு. வேறு நாடு. அது உண்மை தமிழ் ஈழம். வடகிழக்கு. ஆனால். ஆயிதத்தை வைத்து. தமிழ் மக்களின். உரிமைகளை. சிங்களவன் செய்யும் அரசியலுக்கு. தமிழ் மக்கள் மிகவும் அவதானமா இருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகள் ஆயிதம் இல்லாத. அரசியல் தீர்வு. வடகிழக்கு எந்த ஒரு காலத்திலும் ஆயிதம் தரித்த ராணுவம் பொலிஸ் நிர்வாகம் இரு க்க. கூடாது. இதை யார் சிபாரிசு செய்தார். ஒரு சிங்கள எம் பி. தமிழ் பேச தெரியும் என்பது வேறு. கோட்டாபாயாவிற்கு இவர் ஆலோசனை.தமிழ் மக்களை இவர்கள் எப்படி நினைத்து இப்படி இவர்கள். பேசுகின்றன. தமிழ…

  21. போலி பொலிஸ் அதிகாரி கைது பொலிஸ் அதிகாரியாக நடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் நாராஹேன்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 ஐ சேர்ந்த இளைஞரே (வயது-23) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தான் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமை புரிவதாகவும் சர்வதேச பொலிஸ் அடையாள அட்டை ஒன்றை தான் பெற வேண்டியுள்ளதாகவும் சந்தேக நபரான குறித்த இளைஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சந்தேகம் கொண்ட பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையக அதிகாரிகள் நாராஹேன்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சந்தேக நபர் கைது செய்ப்பட்டுள்ளார் https://newuthayan.com/போலி-பொலிஸ்-அதிகாரி-கைது/

  22. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எதிர்வரும் தேர்தலின் பின்னர் ஒன்று கூடவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அனைத்து உறுப்பினர்களும் உள்நுழைவதற்கு முன்னர் பெரும்பாலும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரு மீட்டர் இடைவெளியைப் பேணி அனைத்து உறுப்பினர்களையும் ஆசன அடிப்படையில் அமர வைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக முதலாது கூட்டத் தொடரின் போது, 225 உறுப்பினர்க…

    • 1 reply
    • 414 views
  23. விக்னேஸ்வரன் எனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றேன் – ஆனந்த சங்கரி எங்கள் கட்சிக்கு இதுவரை யாரும் நிதி உதவி செய்யவில்லை யாராவது நிதியுதவி தந்திருந்தால் அதை எங்களுக்கு பகிரங்க படுத்துங்கள். எந்த கட்சிக்கும் தற்பொழுது நிதி உதவி தேவைப்படுகின்றது அதைவிட விக்னேஸ்வரன் அவர்கள் தமது கட்சிக்காக நீதிகோரி இருக்கின்றனர். சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.அதைவிடுத்து சி . வி. விக்னேஸ்வரன் அவர்களை நீங்கள் தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியில் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் அவர் க…

    • 2 replies
    • 460 views
  24. தேர்தல் காலத்தில் மட்டும் புலிகளின் புகழ்பாடுவது கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்- ஐங்கரநேசன் விடுதலைப் புலிகள் ஈழத்தமிழ்ச் சமூகத்தின் போராட்ட அடையாளம். அத்தகையவர்களை தேர்தல் காலம் நெருங்கியவுடன் புகழ்பாட சில தமிழ் அரசியல்வாதிகள் ஆரம்பித்துள்ளனரென நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளரான பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணம்- வலிகாமம் பகுதியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர்கள் எந்நாளும் போற்றுதற்குரியவர்கள். ஆனால், யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசியல்வாதிகளும், விடுதலைப்புலிகளும் யுத…

    • 1 reply
    • 346 views
  25. மாமனிதர் கௌரவத்தை நீக்கியதில் உடன்பாடில்லை June 15, 2020 இந்த ஆட்சியின் கீழ் தமிழ் மக்களிற்கு எதுவுமே கிடைக்குமென நான் நம்பவில்லை. நல்லாட்சியென சொல்லப்பட்ட முன்னைய ஆட்சியில் தான் எனது கணவரது படுகொலை வழக்கு மூடி வைக்கப்பட்டதென மாமனிதர் ரவிராஜின் மனைவியான சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கிலுள்ள 87ஆயிரம் கணவனை இழந்த பெண்கள் சார்பில் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். கடந்த பத்துவருடங்களிலும் மாறி மாறி கதிரையிலிருந்த எந்தவொரு அரசும் அவர்கள் தொடர்பில் எதனையும் செய்யவில்லை. நான் மக்கள் பிரதிநிதியாக தெரிவானதும் அரசினது உதவிகளை மட…

    • 1 reply
    • 593 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.