ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142955 topics in this forum
-
வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் அடைந்துள்ளன. பலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளனர். நல்லூரில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று செய்வாய்க்கிழமையும் மன்னார் , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரமுகர்கள் விரிவான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். ஒரே கொள்கையின் கீழ் பயணிக்கக்கூடிய தமிழ் கட்சிகளையும் அதேவேள…
-
- 0 replies
- 289 views
-
-
இலங்கையின் வங்கிகளில் இருந்து பாரிய அளவில் கடன்களைப் பெற்று முதலீடுகளை மேற்கொண்டு, சில நாள்களில் நாட்டை விட்டு ஓடிவிடும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, இனிமேல் இடமளிக்கப் போவதில்லை என, முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பேராதனையிலுள்ள ரெஸ்ட்ஹவுஸில், நேற்று (01) நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி வந்தால், வெளிநாடுகளில் இருந்து பாரிய அளவில் இந்நாட்டுக்கு முதலீடு வரும் என்று மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது என்றும் ஆனால். கடந்த காலங்களை எடுத்துப் பார்க்கும் போதே, அது அப்பட்டமான பொய் என்பது மத்திய வங்கியின் அறிக்கையூட…
-
- 3 replies
- 861 views
-
-
மத்திய வங்கி திறைசேரிமுறி விவகார தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்த முடியாது Published by J Anojan on 2019-12-03 16:28:19 மத்திய வங்கி திறைசேரி முறி விவகாரம் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்தாமலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தடயவியல் கணக்காய்வு பற்றிய ஐந்து அறிக்கைகள் கோப் குழுவின் உறுப்பினர்கள் மாத்திரமே பார்வையிட முடியும் எனவும் கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார். சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு மாத்திரம் இந்த அறிக்கைகளைப் பயன்படுத்த முடியும் என சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருப்பதால் இவற்றை இரகசிய ஆவணங்களாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாவும் அவர் கூறினார். …
-
- 0 replies
- 258 views
-
-
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தகவல்களை மறைக்க ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக சந்தேகம் 13 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மறைப்பதற்கான முயற்சிகளை சில அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
பாராளுமன்றத்தை அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். அதன்கடி பாராளுமன்றத்தை 2020 ஜனவரி மாதம் 3 ஆம் திகதி காலை 10 மணி வரை ஒத்திவைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது. .இதையடுத்து 2020 ஜனவரி 3 ஆம் திகதி காலை புதிய ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் அமர்வு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/70253
-
- 4 replies
- 774 views
-
-
தேர்தலில் வெளிப்பட்ட ஈழநாடு வரைபடத்தை மூடிமறைக்க முடியாது – கெஹலிய நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்ததை விஸ்தரிக்கும் இலங்கை விளக்கப்படத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழநாட்டு வரைபடத்திற்கும் தொடர்பிருப்பதாக ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிங்களத் தலைவருக்கே தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருந்தாலும், அந்த சிங்களத் தலைவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிங்கள பௌத்த மக்களின் மனங்களில் ஆழமாக இருந்த சந்தேகத்திற்கிடமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததே பிரதான பிரச்சினையாக இருந்ததாகவும் அவர் கூறினார். ராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவரது பிரதேசமான கண்டியில…
-
- 1 reply
- 628 views
-
-
தேர்தல் என்றாலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, யாழ்ப்பாணத்தின் – சாவகச்சேரித் தொகுதி எப்போதும் சிக்கல்தான். இந்தச் சிக்கல் ரவிராஜ் எம்.பியின் அகால மரணத்துக்குப் பின்னர்தான் தொடங்கியது. விகிதாசாரத் தேர்தலுக்கும் தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். நடப்பது விகிதாசாரத் தேர்தலாக இருந்தாலும், தேர்தல் நடவடிக்கைகள் மட்டுமல்ல, கட்சி நடவடிக்கைகள்கூட முன்னர் வகுத்த தொகுதி அடிப்படையிலேயே பின்பற்றப்படுகின்றது. கட்சிக்குள் வேட்பாளர் பட்டியலாகட்டும் வேலைத்திட்டங்களாகட்டும் அனைத்தும் தொகுதி அடிப்படையிலேயே இருக்கும். தொகுதி வாரியை விட விகிதாசாரத் தேர்தல் முறைமையில் யாழ். மாவட்டத்துக்கான எம்.பிக்கள் எண்ணிக்கை குறைவு என்பதால் சில எம்.பிக்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுத…
-
- 0 replies
- 513 views
-
-
அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராகும் ரணில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக விரைவில் அது தொடர்பான அறிவித்தலை அவர் வெளியிடவுள்ளதாக கூறப்படுகின்றது. கட்சியின் தலைமைப் பதவியை கருஜயசூரியவிடம் ஒப்படைத்துவிட்டு அவர் ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகள் தனக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கையெடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்க தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும் இதனூடாக அவரின் ஓய்வு உறுதியாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3) http://www.samakalam.com/செய்திகள்/அரசியலில்-இருந்து-ஓய்வு/
-
- 0 replies
- 458 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் பல குளங்கள் நிரம்பும் நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பல குளங்கள் நிரம்பும் நிலையில் உள்ளன.பிரமந்தனாறு குளம் 6 அங்குலமாகவும், வன்னேரிக்குளம் 3 அங்குலமாகவும், குடமுருட்டி குளம் 3 அங்குலமாகவும் நீர்மட்டம் உள்ள நிலையில் வான் பாய்ந்து கொண்டிருக்கின்றன.கனகாம்பிகை குளம் மற்றும் கல்மடு குளம் வான் பாய உள்ளதால் கலிங்கு நீர் பாய்ந்தோடும் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்கும்படி அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இரணைமடுக்குளம் 24.11 அடியாகவும், அக்கராயன் குளம் 15.11 அடியாகவும், கனகாம்பிகை குளம் 10.2 அடியாகவும், கல்மடு குளம் 23.2 அடியாகவும், நீர்மட…
-
- 0 replies
- 393 views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிக்கையாளர் அமைப்பு எனப்படும் நாடுகடந்த பத்திரிக்கையாளர்களினால் நடத்தப்பட்டுவரும் லங்கா இ நியூஸ் எனும் இணையத்தளத்தின் தகவலின்படி, இலங்கையில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள கோத்தாபய, அண்மையில் இந்தியா வந்துள்ளதானது, வெறுமனே இந்தியாவை ஏமாற்றும் வேலை என்றும், ஆனால் பின்புலத்தில் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவினால் அன்பளிப்பாக இலங்கைக்குக் கொடுக்கப்பட்ட கச்சதீவுகளில் அணு உலை ஒன்றை நிறுவுவதன் மூலம் முழுப் பிராந்தியத்தையுமே அணுவாயுத மோதல் ஒன்றிற்குள் இழுத்துவிடும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருப்பதாக நம்பகமான ஆதாரங்களைக்கொண்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த இணையத்தளம் மேலும் இதுபற்றிக் கூறுகையில், கோத்தாபய சீனாவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்திற…
-
- 31 replies
- 3.4k views
-
-
தையிட்டியில் தனியார் காணிக்குள் விகாரை – நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வலி.வடக்கு தையிட்டியில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவம் புத்த விகாரை கட்டுவதை சட்டரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும் அரசியல்வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வலி.வடக்கு தையிட்டிப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் இரண்டு ஏக்கரை ஆக்கிரமித்து புதிய புத்த விகாரை ஒன்றினை அமைக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக வலி.வடக்கு பிரதேச…
-
- 0 replies
- 324 views
-
-
-க.அகரன் இனிவரும் காலங்களில், வவுனியா - செட்டிகுளம் பகுதியில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் நினைவு நாளை, செட்டிகுளம் பகுதியில் துக்கதினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகத் தெரிவித்த செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் ஆ.அந்தோனி, நினைவு தூபியொன்றையும் அமைக்கவுள்ளதாகக் கூறினார். வவுனியா - செட்டிகுளம் பகுதியில், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டோரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, செட்டிகுளம் விளையாட்டு மைதானத்தில், இன்று (02) காலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். http://www.tamilmirror.lk/வன்னி/நினைவு-நாளை-துக்க-தினமாக-அனுஷ்டிக்க-நடவடிக்கை/72-241852
-
- 1 reply
- 527 views
-
-
செல்வம் அடைக்கலநாதனின் கட்சி இரண்டாக உடைந்தது தமிழீழ விடுதலை இயக்கத்தில் இருந்து இருவர் விலகியுள்ளனர். குறித்த கட்சியின் உறுப்பினர்களான ஸ்ரீ காந்தா, ஜனார்தனன் ஆகியோரே இவ்வாறு விலகியுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் அவர்கள் இரண்டு வாரங்களில் புதிய கட்சி ஒன்றினை ஆரம்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. செல்வம் அடைக்கலநாதன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/srilanka/80/132283
-
- 5 replies
- 1.2k views
-
-
இலங்கையில் பார்த்தெழுத அனுமதிக்காத ஆசிரியர்களை தாக்கிய மாணவர்கள் 43 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMRPLISKIN / GETTY IMAGES Image captionசித்தரிக்கும் படம் பரீட்சையின்போது தாம் மறைத்து வைத்திருந்த சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீ…
-
- 5 replies
- 1.5k views
- 1 follower
-
-
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த நபர் தொடர்பிலும், அந்த ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் கடந்த நவம்பர் மாதம் 10 திகதி முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வ…
-
- 0 replies
- 258 views
-
-
பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் – வெளிவிவகார அமைச்சு முக்கிய தகவல் சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளை தெளிவுப்படுத்துவதற்கான சந்திப்பொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சு…
-
- 16 replies
- 1.7k views
-
-
வர்த்தகமானி அறிவித்தலில் கருத்துருவாக்கத் தவறுகள் இருப்பினும். நிர்வாகம், இந்த செய்தியை தயவு செய்து அகற்றி விடுக.
-
- 0 replies
- 524 views
-
-
இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் 2 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Dec 2019 10:41 இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழிடம் கூறியுள்ளார். இலங்கை பல்லா…
-
- 5 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள விகாரைக்கு புதிதாக பிரதிஷ்டை செய்ய 3.5 அடி உயரமான புதிய புத்தர் சிலை ஒன்று கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. நீதி மன்ற உத்தரவை மீறி ஆட்சி மாற்றம் இடம் பெற்ற சில நாட்களிலேயே இச் சம்பவம் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பௌத்த விகாரையில் எந்தவித கட்டுமான பணிகளும் மாற்றங்களை செய்ய முடியாத அளவுக்கு நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருக்கின்றபோதும் நேற்று புதிதாக 3.5 அடி உயரமான குறித்த மூலஸ்தானத்துக்கான புத்தர் சிலையை கொண்டுவந்து விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இந்நிலையில் குருகந்த ரஜமகாவிகாரை, சூரியபுர சமநலபாலம ரஜமகா விகாரை விகாராதிபதி திருகோணமலை …
-
- 4 replies
- 748 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ ஒரு தமிழின பற்றாளர் -இப்படி கூறுகிறார் கருணா அம்மான் கடந்த பொது தேர்தலில் தமிழ் மக்களை சிங்கள மக்கள் காப்பாற்றி விட்டனர். மேலும் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியின் பின்னர் தமிழ் மக்கள் காப்பாற்றபட்டனர் என்றே சொல்ல வேண்டும். இது தமிழர்களுக்கு கிடைத்த பொற்காலம் ஆகும்.மஹிந்த ராஜபக்ஷ ஒரு தமிழின பற்றாளர். எனவே எதிர்வருகின்ற வாய்ப்புகளை தவறவிட்டு வரலாற்று தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது இது நம்மை பின்னோக்கி நகர்த்துமென கூற விரும்புகின்றேன் என அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி தமிழர்களுக்க…
-
- 3 replies
- 1.3k views
-
-
வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு தகவல்கள் பெறப்பட்ட சுவிற்ர்லாந்து தூதரக பணியாளரை வாக்குமூலம் வழங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அஜித் பிரசன்ன, சுவிற்சர்லாந்து தூதரகத்தின் முன்பாக இன்று (2) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தூதர் தூதரகத்திற்குள் மறைந்திருப்பதாகவும், பொலிஸ் விசாரணைகளுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கூறினார். கடத்தல் தொடர்பாக கூறப்பட்ட கூற்றுக்கள் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிக்கைகள் இலங்கைக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கடத்தி துன்புறுத்தப்பட்டவர் தமிழ் யுவதியென சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http:/…
-
- 3 replies
- 612 views
-
-
ஐரோப்பிய நாடான அல்பேனியாவுக்கு செல்ல முயன்ற, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். குடிவரவு - குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21, 30 வயதுடைய குறித்த இளைஞர்கள் இருவரும் மீன் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/செய்திகள்/அலபனயவகக-சலல-மயனற-யழ-இளஞரகள-கத/175-241890
-
- 1 reply
- 613 views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உச்சபட்ச தீர்வுகளை வழங்குவதாக வாக்குறுதிகளை வழங்கிய அரசாங்கம் இப்போதாவது சர்வதேச குரல் மற்றும் தமிழ் மக்களின் நிலைகளை கருத்தில் கொண்டு 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய அரசாங்கத்தின் சகலவிதமான ஒத்துழைப்புக்களையும் நாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் கூறினார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தின் போது இந்திய…
-
- 4 replies
- 506 views
- 1 follower
-
-
பெரும்பான்மை சமூகம் விரும்பாத எதனையும் இலங்கையில் செய்யமுடியாது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச திரும்பத் திரும்ப கூறிவருகிறார். இலங்கையில் உள்ள எல்லா இன மக்களும் சமனாகக் கருதப்படவில்லை என்பதற்கு இந்தக் கூற்றே சிறந்த உதாரணமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட கிழக்குத் தமிழ் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். சிங்கள மொழி நடைமுறைக்கு வந்தது கி.பி 6ம் அல்லது 7ம் நூற்றாண்டில், அதற்கு முன்னர் சிங்கள மொழி பேசுவோர் இலங்கையில் இருந்ததில்லை. வடகிழக்கில் இன்றும் நாமே பெரும்பான்மையினர். பின் எவ்வாறு சிங்களப் பெரும்பான்மையினர் விரும்பாத எதனையும்…
-
- 0 replies
- 435 views
-