Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முள்ளிவாய்க்கால் பகுதியில் நிரந்தர படை முகாம்கள் அமைக்க இராணுவம் திட்டம்..! 2ம் தடவையாகவும் நிராகரித்த மக்கள். முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் 4 இடங் களில் உள்ள இராணுவ முகாம்களை நிரந்தரமாக்க 96 ஏக்கர் நிலத்தை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் , வலைஞர்மடம் உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே உள்ள படை முகாம்கள் அமைந்துள்ள 96 ஏக்கர் நிலத்தையும் படையினருக்கு வழங்குமாறு கடந்த ஆட்சியில் கோரப்பட்ட சமயம் அதற்கான அனுமதி அப்போது மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அரசின் காலத்தில் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் பிரதேச செயலக மண்டபத்தில் மாவட்ட அபிவிருத்தி தலைவர்…

  2. மிருசுவிலில் 8 பொதுமக்களைப் படுகொலை செய்த இராணுவ அதிகாரிக்கு உயர் நீதிமன்றால் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டநிலையில் அவர் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனக் கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களின் உறவுகள் இந்த முறைப்பாட்டை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இன்று வழங்கினர். 2000ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி, மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்கள், இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு, கழிப்பறைக் குழிக்குள் போடப்பட்டனர். அவர்களுடன் சென்ற மற்றொருவர் தப்பிச் சென்று வெளியிட்ட தகவல்களின் அ…

    • 2 replies
    • 1.3k views
  3. விசேட தீர்வு திட்டங்களுடன் ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் (எம்.மனோ­சித்ரா) ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ விசேட தீர்வு திட்­டங்கள் மற்றும் சலு­கை­க­ளுடன் இம்­மாத இறு­திக்குள் வடக்­கிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­லக ஊட­கப் ­ப­ணிப்­பாளர் மொஹான் சம­ர­நா­யக்க தெரி­வித்தார். வடக்­கிற்கு விஜயம் செய்­வ­தற்கு உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள போதிலும் இன்னும் தினம் குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் தெரி­வித்தார். வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மின்றி இளை­ஞர்கள், புத்­தி­ஜீ­விகள் உள்ளிட்ட பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போத…

    • 3 replies
    • 987 views
  4. கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் முன்னெடுக்ககப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வித பிரச்சினைகளும் இன்றி நடைமுறைப்படுத்த வேண்டுமானால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்றுக் கொள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதனூடாக நாட்டில் பல்வேறு மாற்றங்களை முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news…

    • 2 replies
    • 924 views
  5. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் மாற்றம் என்பது கட்டாயமானது-சிவசக்தி ஆனந்தன்.! எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் பொதுத் தேர்தல் ஒன்று வரவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்? கடந்த நான்கரை வருடமாக தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு தேவை. வடக்கு-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் முன்னெடுத்து செல்லப்படவேண்டும் என்பது ஒரு வி…

  6. பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைத்து சந்தேகநபரை மிக மோசமாகக் தாக்கிய உப பொலிஸ் பரிசோதகர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நபரொருவருடன் முரண்பட்டார் எனும் சந்தேகத்தில் சந்தேகநபர் ஒருவரை குறித்த உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரை பொலிஸ் நிலையத் தடுப்புக் காவலில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் மிக மோசமாகத் தாக்கியுள்ளார். அதில் கையில் வெடிப…

    • 2 replies
    • 1.1k views
  7. புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களை கையளிப்பு இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நால்வரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். இன்று (20) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கட்டார், துருக்கி, லக்ஸம்பேர்க் மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் உயர்ஸ்தானிகர் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையுடனான தமது நாடுகளின் நீண்டகால தொடர்புகளை புதிய துறைகளின் ஊடாக மென்மேலும் விருத்தி செய்வதற்கு தாம் அர்ப…

    • 0 replies
    • 364 views
  8. ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க CCD யிற்கு ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி ரணவக்க வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவில் ஆஜராகியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது. இதேவேளை, சர்ச்சைக்குரிய தொலைப்பேசி உரையாடல்கள் தொடர்பில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீதிபதி தம்மிகா ஹேமபால ஆகியோரிடமும் கொழும்பு குற்றவியல் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துக் கொள்ளவுள்ளது. சர்ச்சைக்குரிய குரல் பதிவுகள் குறித்து மேற்குறிப்பிட்ட நீதிபதிகளிடம் வாக்குமூலங்களை பதிவு செ…

    • 0 replies
    • 477 views
  9. பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்படவுள்ளது அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்ட குழுக்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்களிப்புடனான பாராளுமன்ற தெரிவுக்குழு நாளை (21) சபையில் அறிவிக்கப்படவுள்ளது. இந்தத் தெரிவுக்குழுவானது பாராளுமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 17 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டதாக அமையும். சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த சமரசிங்க, காமினி லொக்குகே, மஹிந்த யாப்பா அபேவர்த்தன, ரோஹித்த அபேகுணவர்த்தன, லஷ்மன் கிரியல்ல, ஜோன் அமரதுங்க, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன்…

    • 0 replies
    • 317 views
  10. கெஹலிய மற்றும் ஜயம்பதி ஆகிய இருவரும் வழக்கில் இருந்து விடுதலை பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்த அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் அந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அப்போதைய ஊடக அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு சொந்தமான தனியார் கைப்பேசியின் கட்டணமான இரண்டு இலட்சத்து முப்பதாயிரம் ரூபாவினை அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பணத்தில் செலுத்தியதன் ஊடாக அரசிற்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சு…

    • 0 replies
    • 262 views
  11. முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமருக்கு ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் புலனாய்வு தகவல்கள் கிடைக்கபெற்றிருந்த போதும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தாததன் ஊடாக மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. குறித்த மனுக்கள் இன்று (20) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரியந்த ஜயவர்தன, எல்.ரீ.பி தெஹிதெனிய, முர்த்து பெர்ணான்டோ மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில்…

    • 0 replies
    • 378 views
  12. பிள்ளையானின் முதல் நியமனம்? சிறையில் இருந்து மகிந்தவுக்கு பறந்த செய்தி! மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபாரிசில் முதலாவது நியமனம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்போதைய அரசாங்கத்தை சிறையில் இருந்து இயக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் பிள்ளையானின் முதல் நியமனமாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் நியமனம் அமைந்துள்ளது. வெகு விரைவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் நியமிக்கப்பட உள்ள நிலையில். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர…

  13. யாழில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல் யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் மற்றும் கதவு என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு, அங்கிருந்து தப்பி சென்றனரென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் குறித்த ஊடகவியலாளரது வீட்டின் முன்பாக உள்ள மற்றொரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அதன்போதும் ஊடகவியலாளர் வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததாக தெ…

  14. சீனாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவும் அடையாளம் காணப்படாத வைரஸ் நோயின் காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் உஹான் மாநிலத்தில் பரவியுள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர்களை அவதானமாக செயற்படுமாறு சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. …

  15. தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை தடைகளைத் தகர்த்து போராடுவோம் – சம்பந்தன் தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது இனத்தின் போராட்டம் தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், எத்தனை தடைகள் வந்தாலும் அதைத் தகர்த்தெறிந்து போராடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பொங்கல் விழா, திருகோணமலை நகராட்சி மன்ற நகர மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “எமது போராட்டத்தை தோற்கடிப்பதற்காக பலர் முயற்சி செய்தபோதும் அது இன்னும் பன்மடங்கு பலத்துடன் எமது மக்களின் ஆணையுடன் ம…

    • 2 replies
    • 1.4k views
  16. பிச்சைக்காரன் சோறும், தண்ணீரும்தான் கேட்பான்..! தமிழனை கேட்டுபாா் என்ன வேண்டும் என அவன் சொல்வான். அமைச்சருக்கு சீ.வி.கே செருப்படி.. யாழ்ப்பாணத்தில் அமைச்சா் சந்தித்த பிச்சைக்காரர்களில் ஒருவன் சோறும், தண்ணீரும் கேட்டால் தமிழா்கள் எல்லோரும் சோறும் தண்ணீரும் கேட்கிறாா்கள் என அா்த்தமா ? அமைச்சா் மஹிந்தானந்த அழுத்கமகே மானமுள்ள தமிழனை சந்திக்கவில்லையா ? அவனிடம் என்ன வேண்டும் என கேட்கவில்லையா? என முன்னாள் அவை தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளாா். கடந்த 14ம் திகதி அலாி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ் மக்களுக்கு சோறும் தண்ணீரும்தான் முக்கியம் என கூறியிருக்கின்றாா். இது குறித்து இன்று காலை அவை தலைவா் ஊடகங்களை சந்தித்து கருத்து கூறும்போ…

    • 3 replies
    • 1.2k views
  17. விக்னேஸ்வரன் இணைந்தால் த.தே.கூட்டமைப்பு பலமடையும்: செல்வம்.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாறினால் அதில் இணையத் தயார் என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருப்பது நல்ல விடயமாகப்படுகிறது என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரை உள்வாங்கும் போது பலமான சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரெலோவின் தலைமைக் குழுக் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் கூறுகையில், “எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி எமது கட்சியின் 50ஆவது ஆண்டு விழ…

  18. சிங்கள பௌத்த அமைப்புகளைச் சேர்ந்த பௌத்த மதகுருமார்கள் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் பௌத்த கலாசார மத்திய நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ராவண பலகாய அமைப்பின் தலைவர் இத்தா கந்தே சத்தா திஸ்ஸ தேரோ மற்றும் சிக்கலே அமைப்பைச் சேர்ந்த மடில்லே பஞ்ஞாலோக தேரோ ஆகியோர் அடங்கிய குழுவினர் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு விஜயம் செய்தனர். கொழும்பில் இருக்கும் பௌத்த மதகுருமார்களைவிடவும் வடக்கு, கிழக்கில் வசிக்கும் மதகுரமார்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாகவும் தமிழ் இனவாதிகளால் அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகவும் அந்த நிலைமைகள் குறித்து ஆராயும் நோக்கோடு அவ…

  19. கிளிநொச்சியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் கிளிநொச்சி- விநாயகபுரம் பகுதியில் சமூக சீர்கேடு செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். விநாயகபுரம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த பிரதேசத்தில் இயங்கும் பாலியல் விடுதியை தடை செய்யவும் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. குறித்த சட்டவிரோத செயற்பாட்டைக் கட்டுப்படுத்தி தமது பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறும், பிரதேசத்தின் நன்மதிப்பை மீளப் பெற்றுத் தருமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.(15) http://www.samakalam.com/செய்திகள்/கிளிநொச்சியில்-சமூக-சீர…

  20. பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பௌத்த மதகுரு உயிரிழப்பு ஹுங்கம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பௌத்த மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதித் தடுப்பில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது, அவ்வீதியில் பயணித்த வான் ஒன்றில் இருந்த பௌத்த மதகுரு ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மதகுருவின் சடலம் தற்போது அகுனுகொலபெலஸ்ஸ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/பொலிஸார்-மேற்கொண்ட-துப்ப/

  21. இலங்கையில் உள்ள சீதை கோவிலை புனரமைக்க 5 கோடி இந்திய ரூபாய் வழங்கும் இந்திய மத்திய பிரதேச அரசு..! ஜனாதிபதி இணக்கம். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சீதை கோவிலின் புனரமைப்புக்காக இந்தியாவின் மத்திய பிரதேச அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்குவதற்குள்ளது. இந்திய மத்திய பிரதேச மாநில கலாசாரத்துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பின் போது நுவரெலியாவிலுள்ள சீதையம்மன் கோவில் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதையம்மன் கோவிலை புனரமைப்பதற்கு மத்திய பிரதேச அரசின் வரவு செலவுத் திட்டத்தில் 5 கோடி இந்திய ரூபா ஒதுக்கப்பட்டதாக சர்மா இதன்போது தெரிவித்துள்ளார். ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள…

  22. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது கருத்துக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன், இருநாட்டு இராணுவத்தினருக்குமிடையே பலமான ஒத்துழைப்புகள், சமுத்திர பாதுகாப்பு, கரையோர பாதுகாப்பு படைகளுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் செயற்பாடுகளை மேம்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை, மாலைதீவு மற்றும் இந்தியாவுக்கிடையிலான சமுத்திர வலயம் தொடர்பான விடயங்களை மீளாய்வு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய பாதுகாப்பு ஆலோசகர், ஏனைய பிராந்திய நாடுகளையும் கண்காணிப்பாளர்களாக …

  23. யாழ்மாநகர சபையின் இன்றைய அமர்வில் கெளரவ உறுப்பினர்கள் தெருச்சண்டை பிடிக்கும் ரவுடிகள் போல் நடந்து கொண்ட காட்சி. மதுபானச்சாலைகளில் கூட அமைதியாக உரையாட வேண்டும் என்ற பண்பு ஊக்குவிக்கப்படும் உலகில் ஈழத்தமிழரின் பண்பாட்டு தலைநகர் என்று போற்றப்படும யாழ்பாண மாநகர சபை உறுப்பினர்களின் இச்செய்கை ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.

    • 46 replies
    • 7.1k views
  24. (செய்திப்பிரிவு) யுத்த நுட்பம் தொடர்பில் புதிய விடயங்களை விடுதலை புலிகள் அமைப்பே உலகிற்கு அறிமுகம் செய்தது. வான்படையினை தன்வசம் கொண்டிருந்த முதலாவது தீவிரவாத அமைப்பாக விடுதலை புலிகள் அமைப்பு பெயர் பெற்றுள்ளது. இவ்வாறான பலம் கொண்ட பயங்கரவாத அமைப்பினை குறுகிய காலத்திற்குள் நிறைவிற்கு கொண்டு வந்து முப்படையின் பெருமையினையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். திருகோணமலை சீன துறைமுகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விமானப்படை தெரிவிற்கான பயிற்சியை நிறைவு செய்து சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு சின்னம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்…

  25. காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு உதவ நான் தயாா்..! தமிழ் தேசிய கூட்டமைப்பே தடையாம்.. ஜனாதிபதி ஐ.நாவுக்கு கருத்து.. காணாமல் ஆக்கப்பட்டவா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தமிழ் தலைவா்கள் தடையா க உள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கின்றாா். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி இல்லத்தில் வைத்து நேற்று சந்தித்துள்ளார். இதன்போதே குறித்த விடயத்தை ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அபிவிருத்தி திட்டங்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.